அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மணற்கேணி செயலியை பயன்படுத்த உத்தரவு

 1347114

அரசுப் பள்ளிகளில் மணற்கேணி செயலியை பதிவிறக்கம் செய்து ஆசிரியர்கள் பயன்படுத்த வேண்டுமென தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


இது தொடர்பாக தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:


தமிழகத்தில் கணினி சார்ந்த புதிய அறிவியல் தொழில்நுட்பங்களுடன் கற்றல் செயல்பாட்டுக்கு பெரிதும் உதவும் வகையில் மணற்கேணி என்ற செயலி வடிவமைக்கப்பட்டு ஆசிரியர்கள், மாணவர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், மணற்கேணி செயலியை பதிவிறக்கம் செய்துள்ளவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.


இதையடுத்து ஒவ்வொரு ஒன்றியத்திலும் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் செல்போன், மடிக்கணினி, டேப்லெட், ஸ்மார்ட்போர்டு, கணினி ஆய்வகத்தில் மணற்கேணி செயலி அல்லது https://manarkeni.tnschools.gov.in என்ற இணையதளத்தில் காணொலிக் காட்சிகளை பதிவிறக்கம் செய்து வகுப்பறை கற்றல் செயல்பாட்டில் பயன்படுத்துவதை மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மேலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் இந்த செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.


இதுதவிர அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் கணினியுடன் கூடிய கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் பிப்ரவரி முதல் நடைபெற வேண்டும். மணற்கேணி செயலி மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உருவாக்கியுள்ள காணொலிகள் வகுப்பறை செயல்பாட்டில் தொடர்புடைய பாடங்களுக்காக பயன்படுத்தப்படுவதை முதல்நிலை கண்காணிப்பு அதிகாரிகளாக உள்ள வட்டாரக் கல்வி அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

ஜனவரி -2025 மாத வருமானம் வரி பிடித்தம் பற்றி தெரிந்து கொள்வதற்கு.

 

.com/

ஜனவரி -2025 மாத வருமானம் வரி பிடித்தம் பற்றி தெரிந்து கொள்வதற்கு....


        KALANJIYAM WEBSITE


                       ⬇️


                 LOGINl


                       ⬇️


             e service (HR & pin)


                        ⬇️


          EMPLOYEE SELF SERVICE


                        ⬇️


                   REPORT


                        ⬇️


INCOME TAX PROJECTIONS REPORT SELF SERVICE & CLICK ACTION BUTTON


                        ⬇️


Write month name (Jan-2025) & CLICK Continue button


                         ⬇️


               CLICK Submit


                          ⬇️


        (new screen) OK


                          ⬇️


CLICK MONITORING REQUEST STATUS


                           ⬇️


        CLICK VIEW OUTPUT


                           ⬇️


                     DOWNLOAD🙏


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

பள்ளிகளில் சினிமா ஒளிபரப்பு; சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க உத்தரவு

 Tamil_News_lrg_3830525

தமிழக அரசு பள்ளிகளில், மன்ற செயல்பாடுகளாக, மாதத்துக்கு ஒரு சிறார் சினிமா திரையிடப்படுகிறது. அதிகபட்சம், 40 நிமிடங்கள் வரை ஓடக்கூடிய படங்களை, தலைமை ஆசிரியர்கள், மாலை வேளையில் திரையிடுகின்றனர்.


இந்நிலையில் ஜனவரியில், பள்ளிகளில் சினிமா திரையிடப்படும் விதம் குறித்து வழிமுறைகள் வெளியிடப்பட்டன. அதன்படி, 'டீரிம் ஆப் ட்ரீ' எனும், 33 நிமிடம் ஓடக்கூடிய சிறார் சினிமா, 'எமிஸ்' இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


அதில் திரையிடும்போது, சிறப்பு அழைப்பாளர் வரவழைக்கப்பட்டு, ஒளிபரப்பு முடிந்த பின், சினிமா குறித்த விமர்சனம், கருத்து, மாணவ, மாணவியரின் விமர்சனம் என, 2:30 மணி நேரத்துக்கு கூட்டம் நடத்த, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


இதனால் தகுதியான சிறப்பு அழைப்பாளர்களை தேடி பிடிக்கும் பணி, தற்போது கூடுதலாக சேர்ந்துள்ளதாக, தலைமை ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

கோவிட்- காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 18- மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்க மத்திய அரசு ஒப்புதல்

 மத்திய அரசின் அனைத்து ஊழியர்களுக்கும் 8வது மத்திய ஊதியக் குழுவை அமைக்க.. மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.


1947 முதல் 7 ஊதியக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடைசியாக 2016 இல் 7வது ஊதியக்குழு செயல்படுத்தப்பட்டது.


7வது ஊதியக் குழுவின் பதவிக்காலம்.01.01. 2026 இல் முடிவடைவதால், 8-வது ஊதியக் குழுவுக்கான செயல்முறை 2025 இல் தொடங்குவதன் மூலம் அது குறித்த பரிந்துரைகளைப் பெறவும் மதிப்பாய்வு செய்யவும் முடியும்.


கோவிட்- காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 18- மாத அகவிலைப்படி  நிலுவைத் தொகை வழங்க ஒப்புதல்.

-மத்திய அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ்.

The Staff Side of the National Council ( JCM ) , representing the Central Governmem Employees ' in the country submits the undernoted significant issues / demands of the Central Government for your for kind consideration and including same in the Union Budget 2025-2026

8TH PAY COMMISSION, COVID -ARRIER.pdf 

Download here


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

எட்டாவது ஊதியக்குழு அடிப்படையில் , ஊதியம் எவ்வளவு உயரும் என்பது பற்றிய கணக்கீடு :

 IMG_20250116_232503

எட்டாவது ஊதியக்குழு , ஊதிய நிர்ணய பெருக்குக் காரணி ( Fitment Factor ) 1.86 , 1.91 . , 2.28 என பலவித கருத்துகள் இருந்தாலும் , ஊதிய நிர்ணய பெருக்குக் காரணி ( Fitment Factor ) 1.86 க்கு குறையாது என பல்வேறு மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளன . இதன் அடிப்படையில் ஊதியம் எப்படி நிர்ணயம் செய்யப்படும் மற்றும் ஊதியம் எவ்வளவு உயரும் என்பதை கீழ்க்கண்ட மாதிரி கணக்கீடு மூலம் அறியலாம்.

👇👇👇👇

8th Pay Commission Calculation - Download here


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

OMR ஷீட் முறையில்தான் இந்த ஆண்டும் நீட் தேர்வு நடக்கும்: தேசிய தேர்வு முகமை விளக்கம்

 

1347220

வழக்கம்போல் இந்த ஆண்டும் ஒஎம்ஆர் ஷீட் முறையில்தான் நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.


நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள், கால்நடை மருத்துவப் படிப்பின் (பிவிஎஸ்சி) அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் நீட் நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. நீட் நுழைவுத்தேர்வை என்டிஏ எனப்படும் தேசிய தேர்வு முகமை ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.


அந்த வகையில் 2025-26-ம் கல்வியாண்டுக்கான நீட் நுழைவுத்தேர்வு மே மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு நீட் தேர்வு இணையவழியில் நடத்தப்படலாம் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதைத்தொடர்ந்து என்டிஏ நேற்று வெளியிட்ட ஓர் அறிவிப்பில் "இந்த ஆண்டும் நீட் தேர்வு பேனா, காகிதம் மூலமாக ஓஎம்ஆர் எனப்படும் விடைத் தெரிவு குறிப்பு முறையில்தான் நடத்தப்படும். கூடுதல் விவரங்களுக்கு என்டிஏ இணையதளத்தை (https://www.nta.ac.in/) பார்க்கலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

SSLC, PUC தேர்வு அட்டவைணை வெளியீடு

 



எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பி.யூ.சி., இரண்டாம் ஆண்டு தேர்வுக்கான இறுதி அட்டவணையை கர்நாடக பள்ளி தேர்வு மற்றும் மதிப்பீட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு -மார்ச் 21 முதல் ஏப்ரல் 4ம் தேதி வரையும்; பி.யூ.சி., இரண்டாம் ஆண்டுத் தேர்வு, மார்ச் 1ம் தேதி முதல், மார்ச் 20ம் தேதி வரையும் நடக்கிறது. ஏற்கனவே, கடந்த டிசம்பரில் உத்தேச தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. இதற்கு ஆட்சேபனை தெரிவிக்க, டிசம்பர் 16ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று, எஸ்.எஸ்.எல்.சி., பி.யூ.சி., இரண்டாம் ஆண்டுத் தேர்வுக்கான இறுதி அட்டவணையை கர்நாடக பள்ளி தேர்வு மற்றும் மதிப்பீட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுக்கான அட்டவணை:

மார்ச் 21- முதல் மொழி; மார்ச் 24- கணிதம்; மார்ச் 26- இரண்டாம் மொழி; மார்ச் 29- சமூக அறிவியல்; ஏப்ரல் 2- அறிவியல் ஏப்ரல் 4- மூன்றாம் மொழி

பி.யூ.சி., இரண்டாம் ஆண்டு தேர்வுக்கான அட்டவணை:

மார்ச் 1 கன்னடம், அரபு; மார்ச் 3- கணிதம், கல்வியியல், லாஜிக், வணிக ஆய்வுகள்; மார்ச் 4- தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, உருது, சமஸ்கிருதம், பிரெஞ்ச்; மார்ச் 5- அரசியல் அறிவியல், எண் கணிதம்; மார்ச் 7- வரலாறு, இயற்பியல்; மார்ச் 10- விருப்ப கன்னடம், கணக்கியல், புவியியல், வீட்டு அறிவியல்; மார்ச் 12- உளவியல், வேதியியல், அடிப்படைக் கணிதம்; மார்ச் 13- பொருளாதாரம்; மார்ச் 15- ஆங்கிலம்; மார்ச் 17- புவியியல்; மார்ச் 18- உயிரியல், சமூகவியல், மின்னணுவியல், கணினி அறிவியல்; மார்ச் 19- இந்துஸ்தானி இசை, தகவல் தொழில்நுட்பம், சில்லறை விற்பனை, ஆட்டோமொபைல், உடல்நலம், அழகு மற்றும் ஆரோக்கியம்; மார்ச் 20- ஹிந்தி.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

SLAS Exam பிப்., 4ல் துவக்கம்

 



அரசு பள்ளி மாணவர்களுக்கான கற்றல் திறனறி தேர்வான, ஸ்லாஸ் தேர்வு, பிப்., 4, 5, 6ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

அரசு பள்ளிகளில் படிக்கும் 3, 5, 8ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அளவிடும் வகையில் நடத்தப்படும் ஸ்லாஸ் தேர்வுகள், அடுத்த மாதம், 4, 5, 6 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற உள்ளன.

அதாவது, கொள்குறி வினா முறையில், மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு, 35 வினாக்கள், ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 45 வினாக்கள், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 50 வினாக்களுக்கு பதில் அளிக்கும் வகையில், இந்த தேர்வுகள் நடக்க உள்ளன.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

JEE தேர்வு வரும் 22ல் துவக்கம்

 



ஐ.ஐ.டி., என்.ஐ.டி., உள்ளிட்ட மத்திய உயர் கல்வி நிறுவனங்களில், பொறியியல், தொழில்நுட்ப படிப்பில் சேருவதற்கான, ஜே.இ.இ., எனப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட நுழைவுத்தேர்வு, வரும் 22 முதல், 30ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து, தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:

நாட்டில் உள்ள பல்வேறு தேர்வு மையங்களிலும், இந்தியாவுக்கு வெளியில், 15 தேர்வு மையங்களிலும், வரும் 22, 23, 24, 28, 29ம் தேதிகளில், பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கான முதல் தாள் தேர்வுகள் நடக்க உள்ளன.

அதேபோல, பி.ஆர்க்., - பி.பிளானிங், உள்ளிட்ட படிப்புகளுக்கான, 2ஏ, 2பி, 2ஏ,பி., ஆகிய தாள்களுக்கான தேர்வுகள், வரும் 30ம் தேதி நடக்கும். விண்ணப்பதாரர்கள் தங்களின் தேர்வு மையம் அமைந்துள்ள நகரம் பற்றிய விபரங்களை, https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

தேர்வாளர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள், பின்னர் வழங்கப்படும். மேலும் விபரங்களை, www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

TNSED App - Term 3 Books Update Now!

 




தற்பொழுது மூன்றாம் பருவத்திற்கான பாடநூல் மற்றும் நோட்டு புத்தகங்களை TNSED SCHOOLS செயலியில் பதிவேற்றம் செய்யும் வகையில் உள்ளது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

25ம் தேதி திருப்புதல் தேர்வு

 சேலம் :
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு, அதன் உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு கடந்த, 6ல் தொடங்கிய முதல் திருப்புதல் தேர்வு வரும், 24 வரை நடக்கிறது.

10ம் வகுப்புக்கு, முதல்கட்ட திருப்புதல் தேர்வு கடந்த, 6ல் தொடங்கி வரும், 21 வரை நடக்கிறது. ஆனால் வரும், 13ல் போகி பண்டிகையன்று, மாணவ - மாணவியருக்கு திருப்புதல் தேர்வு நடக்க உள்ளது. அத்தேர்வை, வேறு நாளுக்கு மாற்ற, ஆசிரியர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் கூறுகையில், வரும், 13ல் நடக்கவிருந்த தேர்வு, 25க்கு மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது என்றார்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தில் Assistant வேலை – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

 

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தில் Assistant வேலை – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Supervisor, Nurse, Assistant, Watchman பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
காலிப்பணியிடங்கள்:

Supervisor, Nurse, Assistant, Watchman பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு / 10ம் வகுப்பு / Diploma / Nursing தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.7,500/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.01.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

BEL நிறுவனத்தில் ரூ.50,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

 

BEL நிறுவனத்தில் ரூ.50,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Project Engineer-I பணிக்கென காலியாக உள்ள 4 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Engineer-I பணிக்கென காலியாக உள்ள 4 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Engineer கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


Project Engineer ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ஆண்டின் அடிப்படையில் ரூ.40,000/- முதல் ரூ.50,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல்  மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.01.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் Project Assistant காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.25,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

 மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் Project Assistant காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.25,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Project Assistant பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
University of Madras காலிப்பணியிடங்கள்:

Project Assistant பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Assistant கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master Degree in M.Sc / Ph.D தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

University of Madras வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


Project Assistant ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.25,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

University of Madras தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் bm.raaman@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 25.01.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

ரூ.2,72,350/- சம்பளத்தில் General Manager வேலை – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

 ரூ.2,72,350/- சம்பளத்தில் General Manager வேலை – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

TNPL ஆனது GM, Management Trainee, Executive Director பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள்:

TNPL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி GM, Management Trainee, Executive Director பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc / BE / B.Tech / CA / CMA / M.Sc / MA / MBA / MSW / PG Diploma தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 27 என்றும் அதிகபட்ச வயது 57 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.33,500/- முதல் ரூ.2,72,350/- வரை ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 18.12.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group