பிரெட் என்பது பெரும்பாலானவர்களின் வீடுகளில் காணப்படும் ஒரு தின்பண்டம் ஆகும். பசி எடுக்கும் சமயத்தில் வீட்டில் உணவு இல்லாத பொழுது அவசரத்திற்கு பிரெட் உதவும் என்பதற்காகவே பலர் வீட்டில் பிரெட் வாங்கி வைப்பதுண்டு.
ஆனால் பிரெட்டை நம்மால் நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்க முடியாது. நாம் பிரெட்டை சேமித்து வைக்கும் முறையானது அதன் தரம் மற்றும் அது கெட்டுப் போகாமல் இருப்பதில் குறிப்பிடத்தக்க பங்கு கொண்டுள்ளது. பலர் பிரெட்டை ஃப்ரிட்ஜில் வைப்பதால் அது எப்பொழுதும் ஃபிரஷாக இருக்கும் என்று கருதுகின்றனர். ஆனால் உண்மையில் ஃப்ரிட்ஜில் பிரெட்டை சேமித்து வைப்பதால் அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். அது விரைவில் கெட்டுப் போகும், அதோடு அதனுடைய அமைப்பு மற்றும் சுவையும் மாறுபடுகிறது. பிரெட்டை ஏன் ஃப்ரிட்ஜில் சேமித்து வைக்க கூடாது என்பதற்கான ஒரு சில காரணங்களை இப்பொழுது தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக பிரெட்டை தயாரிக்கும் பொழுது அதில் உள்ள ஸ்டார்ச் மூலக்கூறுகள் தண்ணீரை உறிஞ்சி கெட்டியாகிறது. இதன் காரணமாகவே பிரெட் மென்மையாகவும், புசுபுசுவென்ற அமைப்பையும் பெறுகிறது. எனினும் பிரெட்டை நாம் குளிர் சூழலில் வைக்கும் பொழுது அந்த ஸ்டார்ச் மூலக்கூறுகள் மீண்டும் கிரிஸ்டலாக மாறத் தொடங்கி அதிலிருந்து தண்ணீரை வெளியேற்றுகிறது. இதனால் பிரெட் உறுதியாக மாறி, வறண்ட அமைப்பையும் பெறுகிறது.
ஸ்டார்ச் கெட்டியாகும் விகிதத்தில் வெப்பநிலை ஒரு முக்கிய பங்கு கொண்டுள்ளது. குளிர்சாதன பெட்டியில் உள்ள வழக்கமான வெப்ப நிலையில் ஸ்டார்ச் விரைவாக மீண்டும் படிகமாகிறது. ஆகவே பிரெட்டை பிரிட்ஜில் சேமித்து வைப்பதற்கு பதிலாக சாதாரண அறை வெப்ப நிலையில் சேமித்து வைப்பது நல்லது.
பிரெட்டை பிரிட்ஜில் வைப்பதால் அது விரைவில் கெட்டுப் போவது மட்டுமல்லாமல், அதன் அமைப்பு மற்றும் சுவையிலும் மாற்றம் ஏற்படுகிறது. பெரும்பாலும் ஃப்ரிட்ஜில் சேமித்து வைக்கப்பட்ட பிரெட்டை சாப்பிடும் பொழுது அது விழுங்குவதற்கு கடினமாக இருப்பதை நீங்கள் கட்டாயமாக உணர்ந்து இருப்பீர்கள். ஸ்டார்ச் மூலக்கூறுகளில் உள்ள ஈரப்பதமானது வெளியேற்றப்பட்டதே இதற்கு காரணம்.
அதே நேரத்தில் சுவையைப் பற்றி பேசுகையில் இந்த குளிர்ச்சியூட்டம் செயல்முறையின் பொழுது பிரெட்டானது பிரிட்ஜில் சேமித்து வைக்கப்பட்ட பிற உணவுகளில் இருந்து வரக்கூடிய வாசனைகளை உறிஞ்சி கொள்கிறது. இதனால் அது மோசமான சுவை கொண்டதாக மாறுகிறது. பலர் பிரெட்டில் பூஞ்சை வளராமல் இருப்பதற்காக அதனை குளிர்சாதன பெட்டியில் சேமிக்கலாம் என்று கருதுவர். குளிர்சாதன பெட்டியில் வைப்பதால் பூஞ்சை வளர்ச்சி தாமதப்படுத்தப்பட்டாலும், அது கெட்டுப் போகும் செயல்முறை விரைவுப்படுத்தப்படுகிறது. எனவே பிரெட்டை அறை வெப்ப நிலையில் ஈரப்பதம் இல்லாத காற்று உள்ளே செல்ல இயலாத ஒரு டப்பாவில் சேமித்து வைப்பதன் மூலமாக அதில் பூஞ்சை வளர்ச்சி ஏற்படுவதை தவிர்க்கலாம். மேலும் அதன் அமைப்பு மற்றும் சுவையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாது.
அதே நேரத்தில் அறை வெப்ப நிலையில் நீங்கள் பிரெட்டை சேமிக்கும் பொழுது அதனை பிளாஸ்டிக் பைகளில் சேமித்து வைக்க வேண்டாம். ஏனெனில் பிளாஸ்டிக் பைகள் ஈரப்பதம் நிறைந்த சூழலை உருவாக்கி, அதனால் பூஞ்சை வளர்ச்சி ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஒருவேளை நீங்கள் பிளாஸ்டிக் பைகளில் பிரெட்டை சேமித்து வைக்கிறீர்கள் என்றால் அந்த பிரெட்டை விரைவாக சாப்பிட்டு விட முயற்சி செய்யுங்கள். ஆனால் ஒருபோதும் பிரெட்டை இனி ஃப்ரிட்ஜில் சேமித்து வைக்கும் செயல்முறையில் ஈடுபட வேண்டாம். அது கட்டாயமாக அதன் தரத்தையும், சுவையையும் மாற்றிவிடும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
பிரெட்டை ஃப்ரிட்ஜில் வைக்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கா… நீங்க இதை கட்டாயம் வாசிக்கணும்!!!
வெயில் ஏன் நம்மை சோர்வடைய வைக்கிறது தெரியுமா..? இதுதான் காரணம்..!
ஜூன் மாதம் கிட்டத்தட்ட முடிய போகும் கட்டத்தை அடைந்திருந்தாலும் வெப்பநிலை இன்னும் குறைந்த பாடில்லை. வெளியே சென்று விட்டு வீடு திரும்புவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. வெப்பமானது நம்மை சோர்வடையச் செய்வது மட்டும் அல்லாமல், ஒரு சிலரை நோய் வாய்பட வைக்கிறது.
இரவு நேரத்தில் கூட வெப்பம் நிறைந்த காற்று வீசுவதால் வீட்டை விட்டு வெளியே செல்வதற்கே பயமாக இருக்கிறது. எந்நேரமும் வியர்வை மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் தடிப்புகள், வியர்க்குரு, போன்றவை நம்மை வாட்டி வதைத்து வருகிறது. கோடை காலத்தில் நம்மில் பெரும்பாலானவர்கள் விரைவாக சோர்வடைந்து விடுகிறோம்.
சூரிய கதிர்கள் மனநிலையை மேம்படுத்துவது மற்றும் அத்தியாவசியமான வைட்டமின் D வழங்குவது போன்ற பல்வேறு நன்மைகளை அளித்தாலும், அது கட்டாயமாக நம்மை சோர்வடையச் செய்து விடும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால் இதற்கான காரணத்தை என்றைக்காவது நீங்கள் யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? சூரிய கதிர்கள் நம்மை ஏன் சோர்வடைய செய்கிறது என்பதற்கான ஒரு சில காரணங்களை இப்பொழுது பார்க்கலாம்.
நீர்ச்சத்து இழப்பு :
சூரியன் நம்மை சோர்வடைய செய்வதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று டிஹைட்ரேஷன். நாம் சூரிய கதிர்களுக்கு கீழ் அதிகப்படியான நேரத்தை செலவிடும் பொழுது, நமது உடலானது தன்னை குளிர்விக்கும் செயல்முறையில் ஈடுபடுவதற்கு அதிகம் போராட வேண்டி உள்ளது. அதிகப்படியான வியர்வை நமது உடலில் இருந்து குறிப்பிடத்தக்க அளவு திரவ இழப்பை ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு சோர்வு மற்றும் ஒரு வித சோம்பேறித்தனம் உண்டாகிறது.
வெப்பத்திற்கு உடலின் பதில் விளைவு :
நம்மை அதிகப்படியான வெப்பநிலைக்கு நாம் வெளிப்படுத்தும் பொழுது உட்புற வெப்பநிலையை பராமரிப்பதற்கு நமது உடல் அதிகம் வேலை செய்ய வேண்டி இருப்பதாக ஒரு ஆய்வு மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது வியர்வை மற்றும் அதிகப்படியான ரத்த ஓட்டம் மூலமாக செய்யப்படுகிறது. இந்த கூடுதல் முயற்சிக்கு அதிக ஆற்றல் தேவைப்படுவதால் நாம் விரைவில் சோர்வாகி விடுகிறோம்.
நோய் எதிர்ப்பு பதில் விளைவு :
ஓரளவு சூரிய கதிர்களுக்கு நம்மை வெளிப்படுத்துவதால் நமது மனநிலை மேம்படுத்தப்பட்டு, செரடோனின் அளவுகள் அதிகமாகி வைட்டமின் D கிடைக்கிறது. எனினும் அதிகப்படியாக சூரிய கதிர்களுக்கு கீழ் நேரத்தை செலவிடும் பொழுது UV கதிர்கள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். இது வீக்கத்தை ஏற்படுத்தி, நமது உடலின் நோய் எதிர்ப்பு விளைவை தூண்டி சரும செல்களுக்கு சேதத்தை ஏற்படுத்துகிறது. இந்த நோய் எதிர்ப்பு பதில் விளைவு நம் ஆற்றலை உறிஞ்சி நம்மை சோர்வாக்குகிறது.
எலக்ட்ரோலைட் சமநிலையின்மை :
வியர்வை என்பது திரவ இழப்பை மட்டும் ஏற்படுத்தாமல் சோடியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய எலக்ட்ரோலைட்டுகளின் அளவுகளை குறைக்கிறது. தசை செயல்பாடு மற்றும் ஆற்றல் அளவுகளை பராமரிப்பதில் இந்த தாதுக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. அவற்றில் சமநிலையின்மை ஏற்படும் பொழுது தசை வலி மற்றும் சோர்வு ஏற்படுகிறது.
சன்பர்ன் மற்றும் சரும சேதம் :
சூரிய கதிர்களுக்கு நம்மை அதிகப்படியாக வெளிப்படுத்திக் கொள்வதற்கான மிகத் தெளிவான ஒரு அறிகுறி என்றால் அது சன்பெர்னாக இருக்கும். நமது சருமம் சூரிய கதிர்களால் எரிச்சல் அடையும் பொழுது வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. இது சன்பெர்ன் எனப்படும். இந்த சேதமடைந்த சரும செல்களை ஆற்றுவதற்கு ஆற்றல் தேவைப்படுகிறது. இதனால் நாம் வழக்கத்தை விட அதிக சோர்வாக உணர்கிறோம்.
உடல் செயல்பாடு :
நீச்சல், விளையாட்டு போன்ற வீட்டிற்கு வெளியே சூரியனின் கீழ் செய்யக்கூடிய ஒரு சில செயல்பாடுகள் நமக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் அதனால் நமக்கு அதிகப்படியான சோர்வு உண்டாகிறது. இந்த செயல்பாடுகளின் பொழுது ஏற்படும் சுவாரசியத்தில் நாம் இடையே இடைவெளி எடுத்துக் கொள்வதற்கும், போதுமான அளவு தண்ணீர் பருகுவதற்கும் மறந்து விடுகிறோம்.
தூக்க சீர்குலைவு :
பளிச்சென்ற சூரிய வெளிச்சமானது நமது தூக்க அட்டவணையில் குறிக்கிடலாம். இதனால் இரவு நேரத்தில் தூங்குவதற்கு நீங்கள் சிரமத்தை அனுபவிக்க நேரிடுகிறது. மோசமான தூக்க தரம் காரணமாக அடுத்த நாள் சோர்வாக உணருவீர்கள்.
சூரிய கதிர்கள் காரணமாக ஏற்படும் சோர்வை தவிர்ப்பது எப்படி?
முடிந்த அளவு வெயிலில் அதிகப்படியான நேரம் செலவிடுவதை தவிர்க்கவும்.
ஒருவேளை வேறு வழி இல்லாத பட்சத்தில் நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் பருக மறக்க வேண்டாம்.
அவ்வப்போது பிரேக் எடுத்துக்கொண்டு நிழலில் அமர்ந்து, உடலை குளிர்ச்சிப்படுத்தி உடலுக்கு ஓய்வு கொடுங்கள்.
லேசான, காற்று உள்ளே எளிதாக செல்லக்கூடிய வகையில் ஆடைகளை அணியவும். தொப்பி அணிவது உதவக்கூடும்.
சன்பர்னை தவிர்ப்பதற்கு சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள்.
எலக்ட்ரோலைட் நிறைந்த உணவுகள் அல்லது பானங்களை சாப்பிடவும்.
கல்வி விகடன் – TNPSC Group I MOCK TEST 2024
அரசுப்பணி கனவோடு இரவு பகல் பாராமல் படித்துவரும் உங்களுக்கு விகடனின் மனமார்ந்த வாழ்த்துகள். Deputy Collector, Deputy Superintendent of Police உள்ளிட்ட குரூப் 1 பதவிகளுக்கான TNPSC முதல்நிலைத் தேர்வு வரும் ஜூலை 13-ம் தேதி நடக்கவுள்ளது. இந்தத் தேர்வை லட்சக்கணக்கானோர் எழுதவுள்ளார்கள். இந்தக் கடும் போட்டிக்கு மத்தியில் நம்பிக்கையோடு உழைத்துவரும் உங்களுக்குக் கைகொடுக்க கைகொடுக்க கல்வி விகடனும், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வில் தென்னிந்தியாவின் பிரபலமான பயிற்சி மையமான KingMakers IAS Academy-யும் இணைந்து எடுத்திருக்கும் முன்முயற்சி இந்த மாதிரித் தேர்வு. ஜூன் 16 அன்று தொடங்கி, ஜூலை 12-ம் தேதி வரை இந்த மாதிரித் தேர்வு நடத்தப்படும். உங்கள் அரசுப்பணி லட்சியத்துக்கு இந்த மாதிரித் தேர்வு நிச்சயம் துணையாக இருக்கும் என்று நம்புகிறோம். கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்து Register செய்த பின்பு மாதிரி தேர்வை தொடங்குங்கள். நீங்களும் துணை கலெக்டர் மற்றும் டி.எஸ்.பி பதவிகளுக்குத் தேர்வுபெற்று அரசுப்பணியில் அமர விகடன் உங்களை மீண்டும் மனப்பூர்வமாக வாழ்த்துகிறது!
விதிமுறைகள் மற்றும் வழிகாட்டல்கள்:
1. இந்த மாதிரித் தேர்வுக்காக கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. மேலே உள்ள படிவத்தில் உங்களின் பெயர், மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண் கொடுத்து பதிவு செய்ய வேண்டியது அவசியம்.
2. நீங்கள் பதிவு செய்த மொபைல் எண் மூலமாக தினந்தோறும் Login செய்து மாதிரி தேர்வுகளில் பங்கேற்கலாம்.
3. தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் வினா-விடை தரப்படும்.
4. தினமும் 200 கேள்விகளுக்கு இந்த மாதிரித் தேர்வு நடத்தப்படும். இவற்றிற்கு 180 நிமிடங்களில் பதிலளிக்க வேண்டும்.
5. தினந்தோறும் காலை 9 மணிக்கு அன்றைய தினத்திற்கான கேள்விகள் வெளியாகும். மொபைல் எண் மூலமாக Login செய்ததும் நேரடியாக கேள்விகளுக்குச் செல்வீர்கள்.
6. மொத்த மதிப்பெண்கள் 300. ஒரு சரியான விடைக்கு 1.5 மதிப்பெண் வழங்கப்படும். தவறான விடைக்கு நெகட்டிவ் மதிப்பெண் இல்லை.
7. ஒரு கேள்விக்கு ஒருமுறை மட்டுமே விடையை தேர்வு செய்ய முடியும். விடையைத் தேர்வு செய்து முடித்தபிறகு அடுத்த கேள்வி திரையில் தானாகவே தோன்றும்.
8. இப்படி 200 கேள்விகளுக்கும் விடையைத் தேர்வு செய்த பிறகு, நீங்கள் பெற்றுள்ள மதிப்பெண் திரையில் தோன்றும். நீங்கள் சரியாக விடையளித்த கேள்வியின் எண் பச்சை நிறத்திலும் தவறாக விடையளித்த கேள்வியின் எண் சிவப்பு நிறத்திலும் தோன்றும். சிவப்பு நிறத்தில் இருக்கும் எண்ணை க்ளிக் செய்தால், அந்தக் கேள்விக்குச் செல்வீர்கள். அங்கு அதற்கு சரியான விடை பச்சை நிறத்தில் சுட்டிக்காட்டப்படும். கூடவே, நீங்கள் எழுதிய வினா விடைத் தாளையும் காணலாம்.
9. ஒருவேளை தவறவிட்ட முந்தைய நாள் தேர்வுகளில் பங்கேற்க வேண்டுமெனில், முதலில் அந்த நாளுக்கான தேர்வை முடிக்கவேண்டும். அதன்பிறகே முந்தைய தேர்வுகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பு, தேர்வின் இறுதியில் மதிப்பெண் பகுதிக்கு கீழே காட்டப்படும்.
10. தேர்வு குறித்த சந்தேகங்கள் மற்றும் உதவிகளுக்கு webmaster@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் மொபைல் எண்ணை குறிப்பிட்டு தொடர்புகொள்ளுங்கள். விகடனிலிருந்து உங்களை தொடர்புகொள்வார்கள்.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
பேக்கரி பொருட்கள் தயாரிப்புக்கான சான்றிதழுடன் 3 நாள் இலவச பயிற்சி: சென்னையில் அரசு அறிவிப்பு
சென்னையில் தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் ஆண், பெண்களுக்கு பேக்கரி பொருட்கள் தயாரிப்பதற்கான 3 நாட்கள் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இதில் பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் நிலையில் எப்படி விண்ணப்பித்து பயிற்சியில் இணைவது என்பது பற்றி இங்கு பார்ப்போம்.
மத்திய, மாநில அரசு சார்பில் ஆண், பெண் என்று இருதரப்பினரையும் தொழில் முனைவோராக்கும் நோக்கில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் மாநில அரசு சார்பில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் பல்வேறு தொழில் சார்ந்த வழிக்காட்டுதல்கள், பயிற்சிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தான் ஆண், பெண்கள் என இருவருக்கும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பதற்கான 3 நாள் பயிற்சி தற்போது அளிக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது: தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் 3 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வழங்க உள்ளது. இந்த பயிற்சி என்பது 26.06.2024 முதல் 28.06.2024 வரை 3 நாட்கள் தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் பேக்கரி பொருட்களின் மூலப்பொருள், பிராண்ட் போன்றவற்றால் கிடைக்கும் தன்மை, கருவிகள் மற்றும் உபகரணங்கள், இயந்திரங்கள் பற்றி விளக்கம் அளிக்கப்படும். மேலும் ஹைதராபாத் கராச்சி பிஸ்கட், ஜெர்ரா உப்பு பிஸ்கட், இனிப்பு குக்கீகள், ஈஸ்ட் புளிக்க வைக்கப்பட்ட பாம்பே பன், இனிப்பு ரொட்டி, கிரீம் பன், பழ ரஸ்க், பப்ஸ் வகைகள், கேக் வகைகள் எப்படி தயாரிப்பது பற்றி இப்பயிற்சியில் விளக்குவார்கள்.
மேலும் தயாரிப்பு சந்தைப்படுத்துதலின் அம்சங்கள் பேக்கிங் லேபிளிங் மற்றும் அதற்கான விலை வழிமுறைகள் ஆகியன கற்றுத்தரப்படும். அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் பற்றியும் விளக்கப்படும். இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதியான 10ம் வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.
இப்பயிற்சி பற்றி கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600 032 என்ற முகவரியை அணுகலாம். இல்லாவிட்டால் 86681 02600, 70101 43022 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு இல்லம் தேடி கல்வி திட்ட சிறப்பு அலுவலரின் சுற்றறிக்கை
மாவட்ட கல்வி அலுவலர்களின் கவனத்திற்கு ,
இல்லம் தேடி கல்வி திட்ட சிறப்பு அலுவலர் அவர்கள் திட்டத்தினுடைய பணிகள் முடித்து, வட்டார அளவில் பணியாற்றிய ஒருங்கிணைப்பாளர்களை மீண்டும் ஜுலை ஒன்றாம் தேதி முதல் பள்ளிக்கு திரும்ப அனுப்பி உள்ளார்கள். அவ்வாறு அனுப்பியுள்ள ஆசிரியர்களில் சில இடங்கள் உபரி பணியிடமாக உள்ளது என தெரிவித்துள்ளார்கள். அந்த ஆசிரியர்களை தற்போது நடைபெற உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளினுடைய உபரி ஆசிரியர்களாக இருப்பின் வருகின்ற 27 28 ஆம் தேதிகளில் அரசு பள்ளிகளுக்கு மாற்றுப் பணியில் நியமனம் செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் அரசு பள்ளி ஆசிரியர்களாக இருப்பின் அந்தப் பள்ளியில் உபரி பணியிடம் இல்லாமல் இருந்தால் அவர்களை தொடர்ந்து பணிபுரியவும் உபரி பணியிடமாக இருந்தால் உடனடியாக மாணவர்களின் தேவை அடிப்படையில் ஒன்றியத்திற்குள் உள்ள அரசு பள்ளிக்கு உடனடியாக நியமனம் செய்கின்ற வகையில் அவர்களுக்கு உரிய கலந்தாய்வு நடத்தி பணி மாறுதல் ஆணை வழங்கப்பட வேண்டும்.
இல்லம் தேடிக் கல்வி திட்ட சிறப்பு அலுவலர் அவர்கள் வழங்குகின்ற பட்டியல் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் அதனை சரி பார்த்து உறுதி செய்து இப்பணிகளை எவ்வித சுணக்கும் இன்றி நன்முறையில் நடத்திட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
பள்ளிக் கல்வித் துறை - கொள்கை விளக்கக் குறிப்பு 2024-2025
பள்ளிக் கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2024-2025
மானியக் கோரிக்கை எண் 43
அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
School Education Policy Note -Tamil-Date 24.06.2024 👇👇👇
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
பள்ளிக் கல்வித் துறை - மானியக் கோரிக்கை எண் - 43 அறிவிப்புகள் 2024-2025
பள்ளிக் கல்வித் துறை - மானியக் கோரிக்கை எண் - 43 அறிவிப்புகள் 2024-2025
SE-Arivippukal 2024-25 - Download here
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
தேனி மாவட்ட விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு: குரூப் 1 தேர்வுக்கான மாதிரி தேர்வு
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் டி.என்.பி.எஸ்.ஸி குரூப் 1 முதல்நிலைத் எழுத்துத் தேர்வு 13.07.2024. அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் 11.06.2024 முதல் துவங்கப்பட்டு, நடத்தப்பட்டு வருகின்றது.
இத்தேர்வுக்கு விண்ணப்பித்த தேனி மாவட்ட விண்ணப்பதாரர்கள் பயன்பெறும் நோக்கில் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளகத்தில் டி.என்.பி.எஸ்.ஸி குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கான முழுமாதிரி தேர்வுகள் 24.06.2024, 27.06.2024, 02.07.2024 மற்றும் 05.07.2024 ஆகிய தேதிகளில் சிறந்த வல்லுனர்கள் மூலம் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு டி.என்.பி.எஸ்.சி தரத்தில் நடத்தப்படவுள்ளது.
தேர்வர்கள் இத்தேர்வுக்கு வரும்போது டி.என்.பி.எஸ்.ஸி குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்த விண்ணப்ப நகல் மற்றும் போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இம்முழுமாதிரி தேர்வில் பங்குபெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களின் பெயரை 63792 68661, என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து, பயன்பெறுமாறு தெரிவித்துக் கொள்கிறேன்.
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
EMIS New Update - Schemes Delivered Photo Upload
அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே TNSED App - ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா பொருட்கள் விவரத்தினை ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியாக புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது இதற்கான ஆப்ஷன்ஸ் தற்போது TNSED App - ல் கொடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே Yes என்று பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தாலும் தற்போது புதிதாக ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியாக ஒவ்வொரு விலையில்லா பொருட்களுக்கும் புகைப்படம் எடுத்து அதனை அப்லோட் செய்யும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group