BT Asst Deployment Counselling - CEO circular

 தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி அரசு மற்றும் நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2023 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது- உபரி பட்டதாரி ஆசிரியர்களுக்கு 11.06.2024 அன்று பணிநிரவல் கலந்தாய்வு நடைபெறுதல்- தொடர்பாக புதுக்கோட்டை CEO சுற்றறிக்கை 


Click Here to Download - BT Asst Deployment counselling - CEO circular - Pdf


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news 

பொறியியல் பாட பிரிவுகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

 மருத்துவப் படிப்புக்கும் பொறியியல் கல்விக்கும் உள்ள முக்கிய வேறுபாடுகளில் ஒன்று, MBBS-ல் படிப்புப்பிரிவுகள் (branches) இல்லை; BE/BTech படிப்புகளில் முப்பதுக்கும் அதிகமான படிப்புப் பிரிவுகள் உண்டு. ஒரே படிப்புப் பிரிவிலும், தன்னாட்சி (autonomous) கல்லூரிகளில் வழங்கப்படுவதற்குத் தனிப் பாடதிட்டம் இருக்கும் என்பதால் அதைத்  தனியாகக் கணக்கிடவேண்டும். இதைத் தவிர, 'SS' (Self Supporting) என்றும்,   'மதிப்பளிக்கப்பட்டது' (accredited) என்றும், 'Sandwich' என்றும் உள்பகுப்புகளும் உண்டு. நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் வழங்கப்படும், அண்ணா பல்கலைக் கழகக் கல்லூரிகளில் இல்லாத, பிரிவுகளும்  உண்டு. இக்காரணங்களால் பொறியியலில் எந்தப் படிப்புப் பிரிவைத் தேர்ந்தெடுப்பது என்பது பலருக்கும் எழக்கூடிய ஒரு முக்கியமான கேள்வி.


சில குறிப்பிட்ட பொறியியல் துறைகளில் சில மாணவர்களுக்கு இளமையிலிருந்து நாட்டம் (Aptitude) ஏற்பட்டிருக்கும். அது வெறும் கவர்ச்சியாலும்,('ஏரோநாட்டிகல் படித்தால் விமானி ஆகலாம்' என்பது போன்ற) தவறான தகவலாலும் அல்ல என்று உறுதி படுத்திக்கொண்டு, அதன்அடிப்படையில் பிரிவுகளைத் தேர்ந்தெடுக்கலாம். அடுத்து, அப்படித்தேர்ந்தெடுத்த பிரிவுகளில் தமக்கு எட்டாக்கனியாக இருப்பவற்றை நீக்கிவிட வேண்டும். ('+2 தேர்வில் 50% சராசரி மதிப்பெண் பெறாதவர்கள் ஆர்கிடெக்சர் சேர முடியாது'; 'மரைன் இஞ்ஜினீரிங் சேரக் கட்டணம் அதிகம்' போன்றவை). மீதமுள்ளவற்றில், வேலை வாய்ப்பு, ஊதியம், முன்னேற்ற வாய்ப்பு ஆகியவற்றில் திருப்தியளிப்பனவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.


பல மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் மேற்சொன்னவற்றில் முதல்கட்டத் தேர்வே எளிதாக இருக்காது. உள்ள பல வகையான பாடப் பிரிவுகளை ஒரே நேரத்தில் எடுத்துக் கொண்டு அலசுவதால் குழப்பம்தான் மிஞ்சும். மாறாக, அத்தனை பாடப்பிரிவுகளையும் பின்வரும் ஏழு பாடத் துறைகளில்/தொகுப்புகளில் அடக்கலாம் என்பது கவனிக்கப்பட வேண்டியது.

ஆங்கில அகர வரிசையில் அத்துறைகள்/தொகுப்புகள்:


1. உயிரித்தொழில்நுட்பம் (Biotechnology)

2. வேதிப்பொறியியல் / தொழில்நுட்பவியல் (Chemical Engineering/Technology)

3. குடிமைப் பொறியியல் (Civil Engineering)

4. கணினிப் பொறியியல் (Computer Engineering)

5. மின் மற்றும் மின்னணுப் பொறியியல் (Electrical and Electronics Engineering)

6. மின்னணு மற்றும் தொடர்புப் பொறியியல் (Electronics and Communication Engineering)

7. எந்திரப் பொறியியல் (Mechanical Engineering)


குழப்பத்தைத் தவிர்க்க, முதலில் இந்த ஏழு துறைகளில் தமக்கு நாட்டமுள்ள ஓரிரு துறைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும். பிறகு அத்துறை/ துறைகளுக்குள்ளேயே கவனம்செலுத்திப் பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுப்பதும் வரிசைப்படுத்தி முயற்சி செய்வதும் எளிதாக இருக்கும்.


இனி, இத்துறைகளில் ஒவ்வொன்றிலும் அடங்கும் பாடப் பிரிவுகளைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.


*உயிரித் தொழில்நுட்பம்*


உயிரியலில் தீராத மோகமும், அதே நேரத்தில் பொறியியலில் ஆர்வமும் கொண்டவர்களுக்கு இப்பிரிவுகள் ஏற்றவை. தாவர, விலங்கு செல்களையும் நுண்ணுயிரிகளையும் மனிதர் நலத்திற்குப் பயன்படுத்தும் பயோடெக்னாலஜி, உயிரியலும் வேதிப் பொறியியலும் இணைந்தது. வேளாண்மை, உணவியல், மருத்துவம், மருந்தியல் உள்ளிட்ட பல துறைகளின் அடிப்படையில் இயங்குவது. பயோகெமிஸ்ட்ரி, செல்திசு வளர்ப்பு முதலிய துறைகளைப் பயன்படுத்தும் அறிவியல் என இதை The Euopean Federation of Biotechnology வரையறை செய்கிறது. கிண்டி பொறியியல் கல்லூரி உள்ளிட்ட சில கல்லூரிகளில் Industrial Biotechnology என்ற பாடப்பிரிவு வழங்கப்படுகிறது. மருந்தியல், உணவியல், வேதியியல், பிளாஸ்டிக்ஸ், பாலிமர்ஸ், வாசனைப் திரவியங்கள், அழகுசாதனத் தொழிற்சாலைகள் முதலியவற்றில் இத்துறை வல்லுனர்கள் பணியில் இருப்பதைக் காணலாம். தவிர, எம்.டெக்., பிஎச்.டி. படிப்புகளுக்கு உள்நாட்டிலும், உதவித்தொகையுடன் வெளிநாட்டிலும் வாய்ப்புகள் மிகுதி.

பயோமெடிகல் பொறியாளர்கள், மருந்துகளின் தரத்தை உயர்த்துவதிலும், சக்கரநாற்காலி உள்ளிட்ட, விபத்து, பிணி, மூப்பு ஆகியவற்றின் தாக்கத்தைத் தணிக்கும் கருவிகளைக் கண்டும் கையாண்டும் மனித வாழ்க்கையைச் செழுமைப் படுத்த உதவுகிறார்கள். பயோஇன்பர்மேடிக்ஸ் பிரிவு, கணினி அறிவியல், புள்ளியியல் உள்ளிட்ட கணிதம், பொறியியல் ஆகியவற்றைப் பயன்படுத்தி உயிரியல் தகவல்களைப் புரியவைக்கிறது. பயோமெடிகல் இன்ஸ்ட்ருமெண்ட்டேஷன் பாடப்பிரிவில் நோயாளிகளின் உடல்நிலை குறித்த தகவல்களை அளந்து பெறவும் சீர்படுத்தவும் உதவும் மின், மின்னணுக் கருவிகளைப் பேணுதல், இயக்குதல், வடிவமைத்தல் முதலிய பணிகள் அடங்கும். பயோமெடிகல் ஃபீல்டு பயன்பாட்டுப் பொறியாளர், எக்யுப்மென்ட் சப்போர்ட் ஸ்பெஷலிஸ்ட், இமேஜிங் பொறியாளர், மெடிகல் கோடர் ஆகிய பணிகளில் இவர்களுக்கு மிகுந்த வாய்ப்பு உண்டு.

வேதிப்பொறியியல் / தொழில்நுட்பவியல் என்பதை அடிப்படையாக (core subject) கொண்ட பிற பாடப் பிரிவுகள்*


பாலிமர் பொறியியல், பிளாஸ்டிக்/ரப்பர் தொழில்நுட்பவியல், வேதியியல் மற்றும் மின்வேதிப் பொறியியல், பெட்ரோலியப் பொறியியல், பெட்ரோகெமிகல் பொறியியல், செராமிக் பொறியியல், டெக்ஸ்டைல் தொழில்நுட்பவியல், டெக்ஸ்டைல் ஃபேஷன் தொழில்நுட்பவியல், டெக்ஸ்டைல் வேதியியல், கார்பெட் மற்றும் டெக்ஸ்டைல் தொழில்நுட்பவியல், மெட்டலர்ஜிகல் பொறியியல், மெட்டலர்ஜி மற்றும் மெட்டீரியல்ஸ் பொறியியல், மரக்கூழ் மற்றும் காகிதத் தொழில் நுட்பம், பயோகெமிகல் பொறியியல், மருத்துவத் தொழில்நுட்பவியல், உணவுத் தொழில்நுட்பம், தோல் தொழில்நுட்பம் ஆகியவை.



தமிழ்நாட்டில் சிதம்பரத்தில் தோன்றிய வேங்கடராமன் ராமகிருஷ்ணன் 2009ல் நோபல் பரிசு பெற்றது வேதியியலில்தான் என்பது கவனிக்கத் தக்கது. வேதிப்பொறியாளர்களுக்கு, ஆராய்ச்சி, கிரிஸ்டலாகிராஃபி, சாயங்கள், தொழிற்கூட/ஆய்வுக்கூட மேலாண்மை, வேதிய மனிதநலம், தர உறுதி, டாக்சிகாலஜி, தகவல் பரிமாற்றம், ப்ராசஸ் கெமிஸ்ட்ரி ஆகிய துறைகளில் பணிகள் காத்திருக்கின்றன. பாலிமர்கள் சமையல் பாத்திரங்கள் முதல் விண்வெளி ஓடங்கள், தானூர்திகள், மின்தளவாடங்கள் எனப் பலவற்றில் பயன்படுவது. பாலிமர் படிப்பு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்ல வேலை வாய்ப்பைத் தரவல்லது. வேதியியல் மற்றும் மின்வேதிப்பொறியியலில் வேதிப்பொருட்களின் தொகுப்பு, உலோகங்களைத் தூய்மைப்படுத்துதல், எரிசெல்கள், உணர்பொறிகள், மின்படிவு, துரு முதலிய மின்வேதி வினைகளின் தொழில்நுட்பப் பயன்பாடுகள் முதலியவை கற்பிக்கப்படும். இப்படிப்பை முடித்தவர்கள், உயிரி-மின் மருத்துவம், பாட்டரி ஆய்வு மற்றும் விரிவாக்கப் பொறியாளர், ஆற்றல் சேமிப்பு அறிவியலாளர், நீர் சுத்திகரிப்புப் பொறியாளர் முதலிய பணிகளை ஏற்கலாம். பெட்ரோலியப் பொறியியலை மேலொழுக்கப் பகுதி, கீழொழுக்கப் பகுதி என இரண்டாகப் பிரிக்கலாம். இப்பொறியாளர்களுக்கு, பெட்ரோலியச் சுத்திகரிப்பு ஆலைகள், R & D நிறுவனங்கள், பெட்ரோலியம் ஜியாலஜிஸ்ட்டுகள், உற்பத்தி நீர்த்தேக்கப் பொறியாளர்கள் எனப் பல பணிகளில் உலக அளவில் வாய்ப்பு உண்டு


.உணவுத் தொழில்நுட்பத்தில் உணவு நுண்ணியரியல், உணவுச் செப்பமும் பயன்படுத்தலும், மரபணு மாற்றம் முதலியன கற்பிக்கப்படும். இதில் பயின்றவர்கள் உணவுத் தரக்கட்டுப்பாடு, வினியோகம், நுண்ணுயிரி ஆய்வு, டயடடிக்ஸ் முதலிய துறைகளில் பணியாற்றலாம். டெக்ஸ்டைல் டெக்னாலஜி, மற்றும் அத்துடன் இயைந்த ஃபாஷன் டெக்னாலஜி, டெக்ஸ்டைல் கெமிஸ்ட்ரி படித்தவர்களுக்கு தர/தயாரிப்பு மேலாளர், மருத்துவ/கட்டுமானத் துகில் பொறியாளர், தரக்கட்டுப்பாடுகள்/விற்பனை மேலாளர், பாணி வடிவமைப்பாளர் முதலிய வேலைகள் பொருந்தும். மரக்கூழ் மற்றும் காகித த் தொழில்நுட்பம் பயின்றவர்களுக்கு மத்திய மரக்கூழ் மற்றும் காகித ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் துறைகளில் ஆராய்ச்சி அறிவியலாளர், ப்ராசஸ் பொறியாளர் மதலிய பணிகள் உண்டு. தோல் தொழில்நுட்பம் நம் நாட்டுக்கு அதிக அந்நியச் செலாவணி பெற்றுத்தரும் துறைகளில் ஒன்று. தோல் தயாரிப்பு, ஏற்றுமதி, ஃபாஷன் துறை, பாதுகாப்புப் பொருட்கள் தயாரிப்பு சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் உள்நாட்டிலும் சீனா, இந்தோனேசியா, ஜெர்மனி, இதாலி முதலிய வெளிநாடுகளிலும் நல்ல பணி வாய்ப்பு உண்டு.



*குடிமைப் (சிவில்) பொறியியல்*



இது மற்ற எல்லாப் பொறியியல் பிரிவுகளுக்கும் முந்தையது மட்டுமல்ல; ஆரம்பத்தில் எல்லாப் பிரிவுகளையும் உள்ளடக்கியதும்கூட. 18ஆம் நூற்றாண்டில் ராணுவப்பொறியியலிலிருந்து பிரித்தறியப்பட்டது என்பதுதான் இதன் பெயருக்குக் காரணம். புவித்தகவலியல், சுற்றுச்சூழல் பொறியியல், வேளாண்பொறியியல், ஆரகிடெக்சர், நகர் மற்றும் நகர்ப்புறத் திட்டமிடல், மண்ணியல், கடல் மற்றும் கடற்கரைப் பொறியியல் முதலியவை இந்த அடிப்படைப் பிரிவைச் சார்ந்தவை எனக்கொள்ளலாம். சிவில் பொறியாளர்களுக்குக் கட்டடக்கலை கட்டுமானத்துறை உள்பட்ட பல துறைகளில் தளப் பொறியாளர், மேலாளர், தரக்கட்டுப்பாட்டாளர், திட்டப் பொறியாளர், விற்பனை அதிகாரி, QS/QA/QC பொறியாளர், Networking IT Field Engineer முதலிய பணிகள் காத்திருக்கின்றன. புவித்தகவலியல் (Geoinformatics) என்ற பாடப்பிரிவில், புவியியல், நிலப்படவியல் (Cartography) முதலிய நில அறிவியல் துறைப் பிரச்சினைகளுக்குத் தகவல் அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி விடை காணப்படும். நேஷனல் ரிமோட் சென்சிங் ஏஜன்சி, ISRO, DRDO, Forest Survey of India, சுற்றுலாத்துறை முதலியவற்றில் பல்வகைப் பணிகள் இவர்களுக்கு ஏற்றவை. சுற்றுச்சூழல் பொறியாளர்கள் பொதுத்துறை மற்றும் தனியார்நிறுவனங்களில் போக்குவரத்து மாசு ஆய்வாளர், நீர்வளப் பொறியாளர், சுகாதார வடிவமைப்பாளர், பாதுகாப்பு அலுவலர், R&D பொறியாளர் முதலிய பணிகளைப்பெறலாம்.


வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனப் பொறியியலில் நில அளவியல், மண்/நீர் வளம், உணவுத் தொழில்நுட்பம், பண்ணைக் கருவிகள், பால்பண்ணை முதலியன கற்பிக்கப்படும். இதைப் படித்தவர்கள் வேளாண்எந்திர விற்பனை, தரக்கட்டுப்பாடு, வங்கி வேளாண்கடன் மேலாளர், வேளாண் அலுவலர் உள்படப் பல பணிகள் ஆற்றலாம். ஆர்கிடெக்சர் பிரிவில் ஆர்கிடெக்சர் வரைகலை, கட்டுமான இயல், நகர்ப்புறத் திட்டமிடல், நில இயற்கை வனப்பு, பேரிடர் மேலாண்மைமுதலியன இடம் பெறும்.



*கணினிப் பொறியியல்*



கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பொறியியல்  (CSE) என்ற அடிப்படைப் பிரிவில் கம்ப்யூட்டர் ஆர்கிடெக்சரில் துவங்கி, Theory of Computation,..,Parallel programming முதலியன கற்பிக்கப்படும். இப்படிப்பை முடித்தவர்கள் பல தனியார் நிறுவனங்களில் மட்டுமின்றி, அரசுத் துறைகளான CDAC, NIC, ERNET, STPI முதலியவற்றில் Software/Web development, Data base/IT Infrastructure Management, Information Scientist, System Analyst/Administrator எனப் பல பணிகள் புரியலாம். வெளிநாடுகளிலும் நல்ல வாய்ப்பு உண்டு என்பது பலரும் அறிந்ததே. அடுத்து, தகவல்தொழில்நுட்பவியல் (IT) பாடப்பிரிவும் வேலை வாய்ப்பிலும், ஊதியத்திலும், வெளிநாட்டு வாய்ப்பிலும் கவர்ச்சி மிகுந்ததே. CSE யிலிருந்து கிளைத்த மற்ற பிரிவுகளாக Communication and Computer Engg., Computer Science and Information Tech., Computer Software Engg., Information and Communication Tech., Information Tech. and Management முதலிய படிப்புகளைச் சொல்லலாம்.



*மின் மற்றும் மின்னணுப் பொறியியல்*


ரேடியோ, ஆம்ப்ளிஃபையர், கணினி, டிரான்சிஸ்டர், பவர் அண்ட் கன்ட்ரோல், எலக்ட்ரானிக்ஸ், மைக்ரோ/நேனோ எலக்ட்ரானிக்ஸ், அரைக்கடத்திகள், தொலைத்தொடர்பு, கருவிப்பொறியியல் எனப் பலவற்றிற்கும் அடிப்படையாக இத்துறை விளங்குகிறது. மெக்கட்ரானிக்ஸ், தன்னியக்கம், குளிர்பதனம், பயோமருத்துவப் பொறியியலில் வென்டிலேட்டர், MRI Scanner, ECG கருவிகள், செயற்கை இதயம், ரோபோடிக்ஸ், விண்வெளிப் பயணம் ஆகிய பலவும் மின்னியலின் பல்வேறு பயன்பாடுகள்தான். EEE முடித்தவர்கள் மோட்டார், ரேடார், கடல்பயண/தொலைத்தொடர்பு மின்பொறிகள் வடிவமைத்தல், உயிரி மருத்துவம், கணினி வன்/மென்பொருள், காப்புரிமை, தரக்கட்டுப்பாடு, மின்பகிர்மானம் மதலிய பணிகளை ஏற்கலாம். சிங்கப்பூர்,ஆஸ்திரேலியா, வளைகுடா நாடுகளிலும், HMT, ISRO, DRDL, DRDOவிலும் ஆராய்ச்சிப்பணிகளும் உண்டு. பணிப்பயிற்சியும் இணைந்த EEE (Sandwich) படிப்பு (5 ஆண்டுகள்), வேலைக்கு 100 சதவீதம் உத்தரவாதமே அளிக்கிறது.



கருவியியல் மற்றும் கட்டுப்பாட்டுப் பொறியியல் (ICE), ஆற்றல் பொறியியல் (Energy Engineering) ஆகியவற்றை EEE-ன் கிளைப்பிரிவுகள் எனலாம். சில NIT, IIT களில் Electrical Engineering, Electrical Engineering - Power என்ற பிரிவுகளும் வழங்கப்படுகின்றன.



*மின்னணு மற்றும் தொடர்புப் பொறியியல்*



ECE எனப்படும் இதன் கிளைப்பிரிவுகளாக Electronics and Instrumentation, Applied Electronics and Instrumentation, Electronics, Electronics and Telecommunication, Electronics and Electrical Communication முதலியவற்றைச் சொல்லலாம். சென்னை IIT உள்ளிட்ட சிலவற்றில் இது Electrical Engineering  துறையின் பகுதியாகவே கருதப்படுகிறது. ECE பாடதிட்டத்தில் Signals and Systems, Communication Theory, Control Systems, Transmission Lines, Digital VLSI, Optical/Wireless Communication ஆகியவை அடங்கும். இப்படிப்பை முடித்தவர்களுக்கு பயன்பாட்டு மின்னணுவியல், விமானப் போக்குவரத்து, விண்வெளி, மின்உற்பத்தியும் பகிர்மானமும், தொலைத்தொடர்பு, வானொலி, தொலைக்காட்சி, கணினி, மருத்துவப் பயன்பாட்டுக் கருவிகள், ஆழ்கடல் பணிகள் முதலிய துறைகளில் வரவேற்பு இருக்கும்.


Electronics and Instrumentation என்ற பாடப் பிரிவு, இயக்கங்களை அளத்தல், கட்டுப் படுத்துதல், தானியக்கமாக்குதல் பற்றியது. மெக்கட்ரானிக்ஸ், ரோபோடிக்ஸ் துறைகளுக்கு அடிப்படையானது. இரும்பு, எண்ணெய், பெட்ரோகெமிகல்ஸ், மின் மற்றும் பாதுகாப்பு எனப் பல துறைக் கருவிகளை இவர்கள் இயக்குகிறார்கள். கணினி வன்/மென்பொருள் பணிகளிலும் சிறக்கிறார்கள். CDAC, HAL, BEL, Telecom Authority of India, TANGEDCO முதலிய பல வற்றில் இவர்கள் பணியாற்றலாம்.



*எந்திரப் பொறியியல்*



தானூர்திகள், விமானங்கள், விண்வெளி ஓடங்கள், செயற்கை உடலுறுப்புகள், ரோபோக்கள், ஆட்டோமேஷன் முதலிய பல துறைகளும் எந்திரவியல் பொறியாளர்களின் பங்களிப்போடுதான் இயங்குகின்றன. இந்த அடிப்படைப் பிரிவிலிருந்து கிளைத்தவையாக, Aeronautical, Automobile, Industrial, Manufacturing, Marine, Mechanics and Automation, Mechatronics, Mining, Mining Machinery, Production, Robotics, Mechanical(Sandwich) ஆகியவற்றைச் சொல்லலாம். சுத்திகரிப்பு/எரிவாயு பராமரிப்புப் பொறியாளர், Turbine Technician, Design/QC/Project/Automotive/CNC-VMC பொறியாளர்கள் முதலிய பொறுப்புகளுக்கு ஆஸ்திரேலியா, குவைத், கனடா போன்ற வெளிநாடுகளிலும், புனே, சென்னை, ஐதராபாத் போன்ற நகரங்களிலும் எந்திரப் பொறியாளர்கள் பெருமளவில் தேவைப் படுகிறார்கள். இப்படிப்புடன் AutoCAD, Solid works, Ansys, Unigraphics, Catia முதலிய பயிற்சியும் இருந்தால் பணி வாய்ப்பு அதிகமாகும்.



இதன் ஒரு கிளைப்பிரிவான Aeronautical Engineering, விமானங்களையும் அதன் பகுதிகளையும் வடிவமைத்தல், பழுது பார்த்தல் பற்றியது. விமான இஞ்சின்கள், ஏவுகணை அமைப்புகள், ராணுவ விமானங்கள், பயண விமானங்கள் என்ற நான்கு பிரிவுகளில் இவர்கள் பணி அடங்கும். விமானப் பராமரிப்புப் பொறியாளர், தொழில்நுட்பப் பதிவுப் பொறியாளர், வானூர்தி வடிவமைப்புப் பொறியாளர், விமானப் பாதுகாப்பு அலுவலர், Short Service Commission (Technical) in Army/Navy, R&D போன்ற பணிகள் இப்படிப்பை முடித்தவர்களுக்குக் காத்திருக்கின்றன. NASA விலும் நம் பொறியாளர்கள் பணியாற்றுகிறார்கள்.


Automobile Engineering துறையின் நிலையைக் கொண்டு ஒரு நாட்டின் பொருளாதார நிலையையே அளந்துவிடலாம் என்பார்கள். ஆடி, ரெனால்ட், ஃபோக்ஸ்வாகன் முதலிய பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடும் இருப்பது நம் நாட்டில் இத்துறை சிறக்க வழிவகுத்திருக்கிறது. Marine Engineering என்ற கிளைப்பிரிவில் படிக்கக் கூடுதல் படிப்பு/உடல் தகுதிகளை மத்திய அரசின் கப்பல் துறை விதித்திருக்கிறது. கட்டணமும் சற்றுக் கூடுதல். ஆயினும், நிறைவான ஊதியமும் உலகம் சுற்றும் வாய்ப்பும் இருப்பதால் இப்படிப்பு மாணவர்களை ஈர்க்கிறது. Mining Engineering பிரிவு, நிலத்தடிக் கனிமவளங்களைப் பற்றியது. சில ஆண்டுகளாகத்தான் பெண்கள் இப்படிப்பில் சேர்க்கப்படுகிறார்கள். தரை மட்டத்திற்கு மேலுள்ள சுரங்கப்பகுதியில் மட்டுமே, அதிலும் காலை 6 மணியிலிருந்து மாலை 7 மணி வரை மட்டுமே வேலை பார்க்கலாம் என்ற நிபந்தனை பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.



Mechatronics பிரிவு, மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிகல், டெலிகம்யூனிகேஷன், கண்ட்ரோல், கம்ப்யூட்டர் ஆகிய பொறியியல்களைச் சார்ந்தது. இத்துறைப் பொறியாளர்களுக்கு Product Engineer, Robotic Control Engineer, Design and Development, SCADA, Industrial Automation முதலிய  பணிகள் பொருந்தும். Industrial / Manufacturing / Production Engineering படிப்புகள் சில கல்லூரிகளில் மட்டுமே வழங்கப்படுகின்றன. இப்பொறியாளர்களுக்கு ரோபோடிக்ஸ், தானியக்கம்,7 ஆலைக்கருவிகள், தளவாடங்களின் தயாரிப்பு, மூலப்பொருட்கள், தொழிலாளர் மேலாண்மை முதலிய பல துறைகளில் பணி வாய்ப்பு உண்டு. புரொடக்‌ஷன் பிரிவில் சில கல்லூரிகளில் 5 ஆண்டு சாண்ட்விச் படிப்பம் உண்டு...



தகவல்


R. மகேந்திரன், M.SC, M.Phil,B.Ed.


PG TEACHER IN MATHS 


    ( கல்வி ஆலோசகர் )


Carrier Guidance Expert & Analyst


MNMC GIRLS HIGHER SECONDARY SCHOOL


         TIRUPPUR 


📱9943412346, 9751233445




TABLET TRACKING | EMIS NEW UPDATE

TABLET TRACKING | EMIS NEW UPDATE


https://youtu.be/uogdnh0N8jM

தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்ட TABLET எண்ணிக்கை மற்றும் எந்த ஆசிரியர்களுக்கு எந்த TABLET ஒதுக்கீடு செய்யப்பட்டது என்ற விவரத்தை EMIS வலைதளத்தில் UPDATE செய்ய


https://youtu.be/C_7UEXTsWcg

எண்ணும் எழுத்தும் கற்பிக்கும் ஆசிரியர்கள் TABLET பெற்றுக் கொண்ட பிறகு அதன் விவரத்தை EMIS வலைதளத்தில் அப்டேட் செய்ய


தமிழகத்தில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பப் பதிவு தொடக்கம்

 தமிழகத்தில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கியது. பிள்ஸ்2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீராபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) 660 இடங்கள் இருக்கின்றன.

இதில், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு இடங்கள் 63 இடங்கள் (15 சதவீதம்) ஒதுக்கப்படுகின்றன. மீதம் தமிழகத்துக்கு 597 இடங்கள் உள்ளன.


திருவள்ளூர் மாவட்டம் கோடுவேளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 20 இடங்கள் இருக்கின்றன. இதில், உணவுத் தொழில்நுட்ப படிப்பில் 6 இடங்கள் மற்றும் பால்வளத் தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள் அகிய இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது.

இதேபோல், ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பட்டப்படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டது. இந்நிலையில், பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2024 - 25-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிப்பது இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது



10ம் வகுப்பு விடைத்தாள் நகல், மறு கூட்டல், பதிவிறக்கம் செய்தல் சார்ந்து - DGE Letter

 பத்தாம் வகுப்பு விடைத்தாள் நகல், மறு கூட்டல், பதிவிறக்கம் செய்தல் சார்ந்து - அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் செய்திக்குறிப்பு.

ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள் நகலினை 04.06.2024 என்ற ( செவ்வாய்க்கிழமை ) பிற்பகல் 3 மணி முதல் www.dge.tn.gov.in இணையதளத்திற்குச் சென்று Notification பகுதியில் " SSLC , April 2024 . Scripts Download " என்ற வாசகத்தினை Click செய்தால் தோன்றும் பக்கத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் , இதே இணையதள முகவரியில் " Application for Retotalling / Revaluation " என்ற தலைப்பினை Click செய்து வெற்று விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் . தேர்வர்கள் இவ்விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து , இரு நகல்கள் எடுத்து 05,06,2024 ( புதன்கிழமை ) பிற்பகல் 3 மணி முதல் 10.06.2024 ( திங்கட்கிழமை ) மாலை 5.00 மணிவரை ( ஞாயிற்றுகிழமை நீங்கலாக ) சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் . மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.

 தென்காசி , இராணிப்பேட்டை , திருப்பத்தூர் , கள்ளக்குறிச்சி , செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்களை ஒப்படைத்து , அதற்குரிய கட்டணத் தொகையை பணமாக செலுத்த வேண்டும்






பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு அட்டவணை வெளியீடு

 பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான துணைத் தோ்வு கால அட்டவணையை அரசுத் தோ்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 2023-2024-ஆம் ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகள் மே 6-ஆம் தேதியும், பிளஸ் 1 தோ்வு முடிவுகள் மே 14-ஆம் தேதியும் வெளியாகின. இந்தத் தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவா்கள் துணைத் தோ்வுக்கு விண்ணப்பிக்க, மே 16 முதல் ஜூன் 1 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

தற்போது துணைத் தோ்வுக்கான கால அட்டவணையை அரசுத் தோ்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பிளஸ் 2 துணைத் தோ்வுகள் ஜூன் 24-ஆம் தேதி தொடங்கி ஜூலை 1-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதேபோல், பிளஸ் 2 துணைத் தோ்வுகள் ஜூலை 2-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.


பிளஸ் 2 துணைத்தோ்வு: ஜூன் 24- மொழிப்பாடம், ஜூன் 25- ஆங்கிலம், ஜூன் 26- கணினி அறிவியல், அரசியல் அறிவியல், ஜூன் 27- வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல், ஜூன் 28- கணினி அறிவியல், புள்ளிவிவரங்கள், உயிா் வேதியியல், ஜூன் 28- இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம், ஜூன் 29- உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம் ஜூலை-1 கணிதம், விலங்கியல், வணிகவியல் உள்ளிட்ட தோ்வுகள் நடைபெறவுள்ளன.


பிளஸ் 1 வகுப்பு தோ்வுகள்: ஜூலை 2- மொழிப்பாடம், ஜூலை 3- ஆங்கிலம், ஜூலை 4- இயற்பியல், பொருளியல், ஜூலை 5- கணினி அறிவியல், தொடா்பியல் ஆங்கிலம், உயிரி வேதியியல், அரசியல் அறிவியல் ஜூலை 6- தாவரவியல், வரலாறு, ஜூலை 8- கணிதம், வணிகவியல், நுண்ணுயிரியல், ஜூலை 9- வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் தோ்வுகள் நடைபெறவுள்ளன.




2024 - 2025 கல்வியாண்டு - பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் என்னென்ன? - பள்ளிக்கல்வித்துறை வெளியீடு

 பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் என்னென்ன பள்ளிக்கல்வித்துறை வெளியீடு


Click Here to Download - Instructions For School HMs - Pdf

G.O 692 - அரசு விடுமுறை நாட்கள் 2024 - Government Holidays List 2024 - தமிழக அரசு வெளியீடு

 ஆண்டுதோறும் தமிழகத்தில் பொது விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன; அந்த வகையில் 2024ம் ஆண்டு 24 நாட்கள் பொதுவிடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதன்படி

01. ஆங்கில புத்தாண்டு( ஜன.,01)- திங்கள்

02. தைப்பொங்கல் (ஜன.,15) -திங்கள்

03. மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம்(ஜன.16) - செவ்வாய்

04. உழவர் திருநாள்(ஜன.,17) - புதன்

05. தைப்பூசம்(ஜன.,25) - வியாழன்

06. குடியரசு தினம் (ஜன.,26)- வெள்ளி

07. புனிதவெள்ளி(மார்ச் 29)- வெள்ளி

08. வங்கி கணக்கு முடிவு(ஏப்.,01)- திங்கள்

09. தெலுங்கு வருட பிறப்பு( ஏப்.,09)- செவ்வாய்

10. ரம்ஜான் பண்டிகை(ஏப்., 11)- வியாழன்

11. தமிழ் வருட பிறப்பு (ஏப்.,14) - ஞாயிறு

12. மகாவீர் ஜெயந்தி(ஏப்.,21)- ஞாயிறு

13. தொழிலாளர் தினம்( மே1) -புதன்

14. பக்ரீத் பண்டிகை(ஜூன் 17) -திங்கள்

15. மொஹரம் பண்டிகை( ஜூலை 17) -புதன்

16. சுதந்திர தினம்( ஆக.,15)- வியாழன்

17. கோகிலாஷ்டமி( ஆக.,26) - திங்கள்

18. விநாயகர் சதுர்த்தி( செப்.,07) -சனி

19. மீலாடி நபி( செப்.,16) - திங்கள்

20. காந்தி ஜெயந்தி( அக்.,02) - புதன்

21. சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை( அக்.,11)- வெள்ளி

22. விஜயதசமி( அக்.,12) - சனி

23. தீபாவளி ( அக்.,31) - வியாழன்

24. கிறிஸ்துமஸ் பண்டிகை(டிச.,25) - புதன்

24 நாட்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 4 விடுமுறை நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அமைந்துள்ளது.

இந்த உத்தரவு மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

G.O-692- 2024 ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை  அரசாணையை டவுன்லோட் செய்ய கீழே உள்ள link - ஐ கிளிக் செய்யவும்

Click Here to Download - G.O 692 - Tamilnadu Public Holidays List  2024 - Full G.O - Pdf









Restricted Leave Days ( RL / RH List 2024) - வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் 2024

 Restricted Leave Days ( RL / RH List 2024) - வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் 2024

அடிக்கடி வயிறு என்னமோ பண்ணுதா..? குடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை இருக்கலாம்.. இதை செஞ்சு பாருங்க.!

 

மலச்சிக்கல் காரணமாக தொடர்ந்து குடல் வலி இருந்தால், அது உங்கள் தினசரி வாழ்க்கையையும் ஒட்டுமொத்த உடல்நலத்தையும் கடுமையாக பாதிக்கும். மலம் கழிக்கும் போது நீங்கள் வலியை அணுபவித்தால் அதற்கு இறுகிப்போன மலமே காரணமாகும். இது எதனால் ஏற்படுகிறது, இதற்கான மருத்துவ சிகிச்சை என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

மலச்சிக்கலின் அறிகுறிகளை புரிந்துகொள்தல் :

வாரத்திற்கு மூன்று முறைக்கும் குறைவாக மலம் கழித்தாலோ அல்லது மலம் கழிக்கும் போது மிகவும் சிரமப்பட்டாலோ, அது மலச்சிக்கலின் அறிகுறியாகும். தசைபிடிப்பு, வயிற்று வலி, குறைவாக சாப்பிட்டும் வயிறு நிறைவடைந்தது போல் உணர்வது போன்றவையும் மலச்சிக்கலின் அறிகுறிகளே. அடிவயிற்றில் தொடர்ந்து வலி ஏற்பட்டால், அது எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறியின் (IBS) அறிகுறியாகும். சில சமயங்களில் இந்த வலி மலம் கழிக்கும்போது ஏற்படும் நீரிழப்பு காரணமாகவும் வரலாம்.

News18

நாள்பட்ட மலச்சிக்கலால் வரக்கூடிய பிரச்சனைகள் : 


தொடர்ந்து மலச்சிக்கல் இருந்து வந்தால் பல உடல்நலப் பிரச்சனைகள் வருவதற்கு காரணமாக அமையும். ஆகையால் இதற்கு உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். நாள்பட்ட மலச்சிக்கல் பெருங்குடலின் சுவற்றில் சுளுக்கை ஏற்படுத்தி வடுக்களை உண்டாக்கி பெருங்குடல் அழற்சிக்கு காரணமாக இருக்கிறது. அதற்கடுத்ததாக பெருங்குடல் முழுதும் அடைத்துக்கொண்டால், வாய்வு அல்லது மலத்தை வெளியேற்ற முடியாது. இது நாளடைவில் தீவிர மலச்சிக்கலை உண்டாக்கும்.

குடல் வலிக்கான சிகிச்சை : 

நிறைய தண்ணீர் அருந்த வேண்டும். இது மலம் கழிப்பதை இலகுவாக்கும்.

சீரான உடற்பயிற்சி செய்வதன் மூலம் குடல் இயக்கம் மேம்பட்டு மலம் கழிப்பது எளிதாகும்.

கழிவறைக்கு செல்வதை ஒருபோதும் தாமதப்படுத்தாதீர்கள்.

பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக டயட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

தினமும் இத்தனை மணிக்கு கழிவறைக்கு செல்ல வேண்டும் என்ற அட்டவணையை தயார் செய்து கொள்ளுங்கள். இதன் மூலம் குடல் இயக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.h

குடல் இயக்கத்தை வேகப்படுத்தவும் நாள்பட்ட மலச்சிக்கலை குணப்படுத்தவும் மருந்தகத்தில் உள்ள சில மலமிளக்கி மாத்திரைகள் பயனுள்ளதாக இருக்கும்.
எப்போது மருத்துவமணை செல்ல வேண்டும்?
வீட்டு வைத்திய முறைகள் செய்து பார்த்த பிறகும் அல்லது வாழ்க்கைமுறையை மாற்றிய பிறகும் மலச்சிக்கல் அறிகுறிகள் போகவில்லை என்றால் உடனடியாக மருத்துவரின் உதவியை நாட வேண்டும். காய்ச்சல், வாந்தி அல்லது குமட்டல், வாயுக்களை வெளியேற்ற முடியாமை, கடுமையான அல்லது தொடர்ச்சியான கீழ்முதுகு வலி மற்றும் வயிற்று வலி இருந்தாலோ, காரணமின்றி உடல் எடை குறைதல் அல்லது மலத்தில் ரத்தம் வெளியேறுவது போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்து அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொண்டால் பல உடல்நலப் பிரச்சனைகளை தவிர்த்து நிம்மதியாக நோயின்றி வாழலாம்.


🔻 🔻 🔻 

பெண்கள் இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும்.. ICMR தயார் செய்த டயட் சாட்..!

 இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) சமீபத்தில் இந்தியர்களுக்கான சரிவிகித உணவு பற்றிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அனைத்து சத்துகளையும் சரியான விகிதத்தில் உள்ளடக்கியதாக உங்கள் உணவு இருக்க வேண்டும் என்றும், தவறான உணவு பழக்க வழக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் முக்கிய வழிகாட்டுதல்களுடன் 17 வகையான அறிவுறுத்தல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

அதேபோல், ஒரே நாளில் பல வேலைககளைச் செய்யும் பணிபுரியும் பெண்கள் மற்றும் தாய்மார்களின் ஆரோக்கியம் மற்றும் உணவு குறித்தும் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. இந்த அறிக்கை, பணிபுரியும் பெண்களுக்கான பிரத்யேக உணவு விளக்கத்தையும், பெண்கள் ஆரோக்கியமான உணவு விருப்பங்களை எவ்வாறு தேர்வு செய்யலாம் என்பதற்கான முக்கிய சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது. பெண்களுக்கான உணவு அட்டவணை விவரங்கள் மற்றும் முக்கிய சிறப்பம்சங்களைப் கீழே பாருங்கள்…

காலை உணவு (470 கிலோகலோரி)

ஊறவைத்து, வேக வைத்த முழு தானியங்கள் - 60 கிராம்

வேகவைத்த சிவப்பு / கருப்பு பீன்ஸ், லோபியா, / கொண்டைக்கடலை - 30 கிராம்,

பச்சை இலை காய்கறிகள் - 50 கிராம்

நட்ஸ் - 20 கிராம்

மதிய உணவு (740 கிலோகலோரி)

தானியங்கள் - 80 கிராம்

பருப்பு வகைகள் - 20 கிராம்

காய்கறிகள் - 150 கிராம்

பச்சை இலை காய்கறிகள் - 50 கிராம்

நட்ஸ் / எண்ணெய் வித்துக்கள் - சமையல் எண்ணெயுடன் கறிகளில் 10கிராம் (15கிராம்)

தயிர் - 150 மிலி/பன்னீர்

பழங்கள் - 50 கிராம்

மாலை சிற்றுண்டி (35 கிலோகலோரி)

பால் 50 மி.லி.

இரவு உணவு (415 கிலோகலோரி)

தானியங்கள் - 60 கிராம்

பருப்பு வகைகள் - 15 கிராம்

காய்கறிகள் - 50 கிராம்

எண்ணெய் - 5 கிராம்

தயிர் - 100 மில்லி

பழங்கள் - 50 கிராம்

ஆரோக்கியமான விருப்பங்களை எவ்வாறு தேர்வு செய்வது?

அதிக அளவு சேர்க்கப்பட்ட சர்க்கரை மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்களைக் கொண்ட ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்த்து சுத்திகரிக்கப்பட்ட ஆரோக்கியமான உணவு விருப்பங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

போதுமான காய்கறிகளுடன் சீரான உணவைத் திட்டமிடுங்கள் : 

முழு தானியங்கள், முழு கோதுமை ரொட்டி, சிறுதானியங்கள், அரிசி, மூங்கில் அரிசி மற்றும் பீன்ஸ் மற்றும் பயறு போன்ற பருப்பு வகைகளை (3: 1 அல்லது 5: 1) விகிதத்தில் சேர்க்கவும். இதில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை நீடித்த ஆற்றலை வழங்குகின்றன, மேலும் கூடுதல் கலோரிகளின் தேவையை குறைக்கின்றன.

சிறப்பான சிற்றுண்டி : 

சிற்றுண்டி செய்யும் போது, நட்ஸ், வெற்று தயிர் அல்லது சில மசாலா சேர்க்கப்பட்ட வெட்டப்பட்ட காய்கறிகள் போன்ற ஊட்டச்சத்து அடர்த்தியான விருப்பங்களை செய்யுங்கள்.

காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள் : 

சாலட்களுக்கு கூடுதலாக, பலவிதமான வண்ணமயமான காய்கறிகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அவற்றில் கலோரிகள் குறைவாக உள்ளன, ஆனால் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம். காய்கறிகளில் அதிக சமையல் எண்ணெய் சேர்க்காமல் வறுத்தல், வேகவைத்தல் மூலம் அவற்றின் சுவையை அதிகரிக்கலாம்.

மெலிந்த இறைச்சியைத் தேர்வுசெய்க : 

இறைச்சி என்று வரும்போது, தோல் இல்லாத கோழி, இறைச்சி மற்றும் மீன்களைத் தேர்வுசெய்ய வேண்டும். ஏன்னெனில் இறைச்சியின் கொழுப்புகளை ஒப்பிடும்போது, மீன்களில் கலோரிகள் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் குறைவாக இருக்கும்.

ஆரோக்கியமான சமையல் முறைகளைப் பயன்படுத்துங்கள் : 

வறுக்கப்படுவதற்கு பதிலாக கிரில்லிங், பேக்கிங், ஸ்டீமிங் அல்லது குறைந்த எண்ணெயுடன் வதக்குதல் போன்ற சமையல் முறைகளைத் தேர்வுசெய்ய வேண்டும். இது உங்கள் உணவின் ஆற்றல் அடர்த்தியைக் குறைக்கிறது.

சர்க்கரை பானங்களை கட்டுப்படுத்துங்கள் : 

சோடா, பழச்சாறுகள் மற்றும் எனர்ஜி பானங்கள் போன்ற சர்க்கரை பானங்களை குறைக்கவும். அதற்கு பதிலாக தண்ணீர், மூலிகை தேநீர் அல்லது இனிக்காத பானங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

உணவு லேபிள்களைப் படிக்கவும் ;
 
கலோரிகள், நிறைவுற்ற கொழுப்புகள், சேர்க்கப்பட்ட சர்க்கரைகள் மற்றும் சோடியம் பற்றிய தகவல்களுக்கு உணவு லேபிள்களை சரிபார்க்கவும். இந்த கூறுகளின் குறைந்த அளவு கொண்ட தயாரிப்புகளைத் தேர்வு செய்ய வேண்டும்.


🔻 🔻 🔻 

வாய் திறந்தபடி தூங்குகிறீர்களா? நீங்கள் இதை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்?

 பலரும் தங்கள் வாயை திறந்தபடி தூங்குகிறார்கள். இது ஆரோக்கியமானதல்ல என்றும் இரவு நேரத்தில் முறையற்ற சுவாசம் காரணமாகவே இவ்வாறு ஏற்படுவதாகவும் இதன் காரணமாக பல உடல்நலப் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வாயால் சுவாசிப்பதற்கும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் வருவதற்கும் நெருங்கிய தொடர்புள்ளதாகவும் இதை ஒழுங்காக குணப்படுத்தாவிட்டால் உயர் ரத்த அழுத்தம், டயாபடீஸ், இதய நோய் போன்ற தீவிர நோய்கள் வரவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அறிகுறிகள் :  தூங்கும் போது உள்பட அனைத்து நேரமும் வாயால் சுவாசிப்பதால் பல உடல்நலப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பெரியவர்களாக இருந்தால் இது தொண்டை வறட்சியையும், வாய் துர்நாற்றத்தையும், காலை நேர தலைவலியையும் மூளைச் சோர்வையும் உண்டாக்கும். இந்த அறிகுறிகளை எல்லாம் பார்க்கும் போது நாம் குறைவான நேரம் தூங்கி சோர்வாக இருப்பதை உணர்த்துகிறது. இதுவே குழந்தைகள் என்றால், மோசமான வளர்ச்சி, வளைந்த பற்கள், முகச்சிதைவு போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். இப்படி வாயால் சுவாசிப்பது பல சமயங்களில் ஏற்கனவே இருக்கக்கூடிய மற்ற உடல்நலக் கோளாறுகளையும் அதிகப்படுத்திவிடும்.

காரணங்கள் :  பெரும்பாலான சமயங்களில் வாயால் சுவாசிப்பதற்கு காரணமாக இருப்பது மோசமான நாசித் துவார காற்று வழிப்பாதை. இந்தப் பாதை சில சமயங்களில் அடைத்துக்கொண்டோ அல்லது குறுகியதாகவோ இருக்கலாம். இதனால் ஆக்சிஜன் உள்ளிழுக்கப்படுவது குறைந்து சுவாசிப்பது சிரம்மாகிப் போகும். ஆகவே மூக்கடைப்பு தான் ஒருவர் மூக்கால் சுவாசிப்பதற்கு காரணமாக இருக்கிறது.

சிகிச்சை : 

எதனால் இவ்வாறு வாயால் சுவாசிக்கிறீர்கள் என்பதை பொறுத்து இதன் சிகிச்சை மாறுபடும். பொதுவாக சளி மற்றும் அலர்ஜி காரணமாக வரக்கூடிய மூக்கடைப்பை குணப்படுத்த மருந்துகள் தரப்படும்.

  • CPAP இயந்திரம் : இந்த இயந்திரம் காற்று வழி அழுத்தத்தை பராமரித்து நாக்கு மற்றும் தொண்டையில் பிரச்சனை வராமல் தடுக்கிறது.

  • வாயை மூடுதல் : இந்த முறையில் எதையாவது வைத்து உதடுகளை இறுக்கமாக மூடிக்கொள்ள வேண்டும். இதன்மூலம் வாயால் சுவாசிப்பது தடுக்கப்படும்.

  • பல் சீரமைப்பு : க்ளிப்புகள் மற்றும் கம்பிகள் பயன்படுத்தி தாடை மற்றும் பல் வரிசையை சரிபடுத்துவதன் மூலம் காற்றோட்டத்தை அதிகப்படுத்த முடியும்.

  • முகப்பயிற்சி தெரபி : தொண்டை தசைகளுக்கு நேரடியாக சிகிச்சை கொடுப்பதன் மூலம் காற்று வழிப்பாதையை திறந்தபடி வைக்க முடியும்.

    🔻 🔻 🔻 



உங்கள் சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேற என்ன காரணம்..? ஒரு பெரிய நோயின் அறிகுறியாக இருக்கலாம்

 கோடையில் சிறுநீரின் நிறம் மஞ்சள் நிறமாக மாறுவதை நீங்கள் அடிக்கடி கவனித்திருப்பீர்கள். மஞ்சள் நிற சிறுநீர் பல உடல்நலப் பிரச்சினைகளின் அறிகுறியாக இருக்கலாம். பொதுவாக மக்கள் சிறுநீரின் நிறத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் மற்றும் அதை சாதாரணமாக கருதுகிறார்கள்.

இருப்பினும், மஞ்சள் சிறுநீர் மஞ்சள் காமாலை உட்பட பல பிரச்சனைகளுடன் தொடர்புடையது. வெப்பம் சிறுநீரின் நிறத்தையும் மஞ்சள் நிறமாக மாற்றும். கோடை காலத்தில் சிறுநீர் நிறம் மாறுவது ஏன் தெரியுமா? நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க இதை அறிந்து கொள்வது அவசியம்.

புது தில்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறையின் மூத்த ஆலோசகர் டாக்டர் அமரேந்திர பதக் நியூஸ் 18-க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது.. “கோடையில் வியர்வை அதிகமாக வெளியேறும், இதனால் அவர்களின் உடலில் நீர்ச்சத்து குறைகிறது. நீரிழப்பு காரணமாக, சிறுநீர் குவிந்து அதன் நிறம் அடர் மஞ்சள் நிறமாக மாறும்.


கோடையில் தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்காமல் இருப்பவர்களுக்கு நீரிழப்பு காரணமாக மஞ்சள் நிறமாக மாறக்கூடும். இதிலிருந்து விடுபட, மக்கள் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். மக்கள் அதிகமாக தண்ணீர் குடிக்கும் போது சிறுநீரின் நிறம் படிப்படியாக சாதாரணமாகிவிடும் ”என்றார். மேலும் அவர் “அதிக தண்ணீர் குடிப்பதன் மூலம் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இதைப் போக்க, நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்” என்று கூறினார்.

News18

இது ஏதேனும் நோயின் அறிகுறியா..?

சிறுநீரக மருத்துவர்களின் கூற்றுப்படி.. ஒருவர் நிறைய தண்ணீர் குடிப்பவராக இருந்தால், நல்ல நீரேற்றம் இருந்தும் மஞ்சள் சிறுநீர் தொடர்ந்து வெளியேறினால் அவர் கவனமாக இருக்க வேண்டும். மஞ்சள் காமாலை, தொற்று அல்லது சிறுநீரக பிரச்சனைகளின் அறிகுறியாக நீண்ட நேரம் மஞ்சள் சிறுநீர் இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், உடனடியாக ஒரு மருத்துவரை அணுக வேண்டும். இது தவிர, சில சமயங்களில் மருந்தின் காரணமாக சிறுநீரின் நிறம் மஞ்சள் நிறமாக மாறும், ஆனால் சிறிது நேரம் கழித்து அது சாதாரணமாகிவிடும். மக்கள் தங்கள் சிறுநீரின் நிறத்தில் கவனம் செலுத்த வேண்டும். இது அசாதாரணமாகத் தோன்றினால், சுகாதார நிபுணரை அணுகவும்.
சிறுநீர் எப்போது சிவப்பு நிறமாக மாறும்?
டாக்டர் அமரேந்திர பதக் பேசுகையில் “சிலருக்கு சில நேரங்களில் சிவப்பு நிற சிறுநீர் வெளியேறும். தங்கள் சிறுநீரில் இரத்தத்தைக் காணலாம். உங்கள் சிறுநீர் சிவப்பு நிறமாக இருந்தால், அது சிறுநீரக கற்கள், சிறுநீர்க்குழாய் கற்கள், சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். உங்களுக்கும் இப்படி இருந்தால் விரைவில் சிறுநீரக மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை பெற வேண்டும்.

🔻 🔻 🔻 


🔻 🔻 🔻 

குழந்தைகளை வாட்டர் தீம் பார்க் அழைத்துச் செல்லும்போது இந்த 5 விஷயங்களில் கவனம்..!

 கோடை விடுமுறைகள் தொடங்கியுள்ளதால், வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ள நம்மில் பலர், பல்வேறு இடங்களுக்குச் செல்ல திட்டமிடுவார்கள். அதிலும் குறிப்பாக, இந்த சீசனில் குடும்பங்களுடனும், நண்பர்களுடனும் சேர்ந்து வாட்டர்பார்க்குகளுக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இந்த வாட்டர்பார்க்குகளானது, வாட்டர்ஸ்லைடுகள், சவாரிகள், நீச்சல் குளங்கள் மற்றும் பலவற்றால் நிரப்பப்பட்டுள்ளன. இந்த சீசனில் வாட்டர்பார்க்குகள் தண்ணீரால் நிரம்பியிருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், கவனமில்லாமல் இருந்தால் பல்வேறு விபத்துகள் ஏற்பட வாய்ப்பிருக்கின்றன.

News18

வாட்டர்பார்க்கிற்குச் செல்லும்போது உங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க மனதில் கொள்ள வேண்டிய சில பாதுகாப்பு குறிப்புகளைப் பற்றி பார்ப்போம்.

  • உங்கள் நகரத்திலும், அதைச் சுற்றிலும் பல வாட்டர்பார்க்குகள் இருக்கும். சிலது மிகவும் பெரியதாகவும், கவர்ச்சிகரமானதாகவும் இருக்கும், எனினும் இணையத்தில் முழுமையாக ஆராய்ந்து சரியான வாட்டர்பார்க்குகளை தேர்வு செய்ய வேண்டும்.
  • நீங்கள் குழந்தைகளுடன் வாட்டர்பார்க்கிற்குச் சென்றால், உங்களுடன் உடைகள், டவல்கள், சன்ஸ்கிரீன் லோஷன், பவுடர், தண்ணீர் பாட்டில், முதலுதவி பெட்டி மற்றும் ஸ்னாக்ஸ்களை கூடுதலாக எடுத்துச் செல்ல வேண்டும்.
  • வாட்டர்பார்க்கில் சிறிய காயங்கள் ஏற்படுவது பொதுவானவை, எனவே மருந்துகள் மற்றும் பேண்ட்-எய்ட்களை எடுத்துச் செல்வது முக்கியமானதாகும்.
  • உங்கள் குழந்தைகள் எங்கு சென்றாலும், அவர்களை பின்தொடர வேண்டும். இது அவர்களைக் கண்காணிக்கவும், அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது.
  • சிறு குழந்தைகளை உள்ளே நுழைய விடாமல் தடுக்கும் ஸ்லைடுகளில் இருந்து அவர்களை விலக்கி வைப்பது முக்கியமாகும். மற்றும் எந்த சவாரியிலும் அவர்களை தனியாக செல்ல விடாதீர்கள், அவர்களுடன் துணைக்கு நீங்களும் செல்வது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்.
  • வாட்டர்பார்க்கிற்கு செல்வதற்கு முன் திறந்திருக்கும் நேரத்தையும் உறுதி செய்ய கால் செய்ய வேண்டும். இதன் மூலம் டிக்கெட் விலை பற்றிய விவரங்களையும் நீங்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம். ஒரு சில வாட்டர் பார்க்கில் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் என இருவருக்கும் தனித்தனி நீச்சல் குளங்களைக் கொண்டிருக்கும்.
  • முடிந்தளவுக்கு விரைவாக வாட்டர்பார்க்கிற்கு செல்வதை முயற்சிக்கவும். நீங்கள் எவ்வளவு தாமதமாக செல்கிறீர்களோ, அவ்வளவு கூட்டம் அதிகமாக இருக்கும். இத்தகைய சூழ்நிலைகளில், உங்கள் பிள்ளைகள் சுதந்திரமாக வாட்டர்பார்க்கை பார்த்து ரசிக்க முடியாது, மேலும், உங்களுக்கு பிடித்த சவாரிகளுக்கு செல்ல அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும்.
  • எனவே, வாட்டர்பார்க் திறக்கும் நேரத்திற்கு 10 நிமிடங்களுக்கு முன் வந்து விட்டால், அதிக கூட்டத்தை சந்திக்காமல் வசதியாக உள்ளே செல்லவும் முடியும், சவாரிகளுக்கு செல்ல அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. மேலும், பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சூழலை உறுதி செய்வதற்காக, தண்ணீரின் தரம், தூய்மை மற்றும் சுகாதார நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை தெரிந்திருப்பதும் அவசியமாகும்.


🔻 🔻 🔻