அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
Download PDF File Below
Click here to download pdf file
🔻🔻🔻
Education News, Employment News in tamil
அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
Download PDF File Below
Click here to download pdf file
🔻🔻🔻
GRI பல்கலைக்கழகத்தில் ரூ.20,250/- சம்பளத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
Gandhigram Rural Institute எனப்படும் GRI ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Lower Division Clerk & Multi Tasking Staff பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 06.04.2024 ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
🔻🔻🔻
இந்தியாவில் உள்ள ஐடி நிறுவனத்தில் எப்படியாவது பணிபுரிய வேண்டும் என்பதை தனது கனவாக கொண்டவர்களுக்கான சூப்பர் சான்ஸை Accenture நிறுவனமானது தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.
ஐடி துறை வேலைவாய்ப்பு:
ஐடி நிறுவனத்தில் இணைந்து பணிபுரிய வேண்டும் என்பதை தனது கனவாக லட்சியமாக கொண்ட நபர்களுக்கான சூப்பர் அறிவிப்பை பிரபல ஐடி நிறுவனமான Accenture ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது அப்ளிகேஷன் டெக் சப்போர்ட் பிராக்ட்டிசனர் (Application Tech Support Practitioner) பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்களுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறியுள்ளது. இப்பணிக்கான பல்வேறு காலியிடங்களுக்கு இளங்கலை பட்டம் பெற்ற ITIL Technical சான்றிதழ் வைத்து இருப்பவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மைக்ரோசாப்ட் வின்டோஸ் டெஸ்க்டாப் மேனேஜ்மென்ட்,எஸ்சிசிஎம், பவர் ஷெல் ஸ்கிரிப்டிங்கில் போன்றவற்றில் 0 முதல் 2 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு பணியின் போது மாதம் 50,000 ரூபாய் வீதம் ரூ.6 லட்சம் ஆண்டு ஊதியமாக தரப்படவுள்ளது. இந்த பணியில் சேர விரும்பும் நபர்கள் Accenture நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இப்பணிக்கான விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஏதும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
🔻🔻🔻
விழுப்புரம் டூ மாம்பழப்பட்டு சாலையில் உள்ளது இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் (RSETI- Rural Self Employment Training Institute ). இந்த நிறுவன மூலம் 60க்கும் சிறு தொழில்கள் செய்வது எப்படி என இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார்கள்.
மேலும் கிராம மக்களுக்கு பல்வேறு, சுய வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிறுவனம் பல மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது. இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் ஷாலினியிடம் கேட்டபோது, விழுப்புரம் மாவட்டத்தில் சுயவேலைவாய்ப்புக்காக இந்தியன் வங்கி உதவியுடன் 2012 ஆம் ஆண்டு முதல் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு, சுய வேலைவாய்ப்பு குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவகிறது. இதில்,4,000நபர்கள், 25,000 ரூபாய் வரை மாத வருமானமாகசம்பாதிக்கின்றனர்.
மேலும், 61 வகையான சுய தொழில்கள் செய்வதற்கான, பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.ஆடு ,கோழி, மாடு வளர்ப்பு, மலர் வளர்ப்பு, ஃபாஸ்ட் ஃபுட் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. அதேபோன்று, சேவை சார்ந்த பயிற்சிகளாக செல்போன் சர்வீஸ்,கணினி மற்றும் சி.சி.டி.வி கேமராக்கள் பழுது சரிப்பார்ப்பது உள்ளிட்ட பயிற்சிகள் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் அளிக்கப்பட்டு வருகிறது. உற்பத்தி சார்ந்த பொருட்கள் தயாரிக்கும் பணி கற்றுத் தரப்படுகிறது.
மேலும், இந்த பயிற்சிகள் அனைத்தும் இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு, பயிற்சிக்கு வரும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் காலை, மதிய உணவு மட்டுமின்றி இடையில் டீ, ஸ்னாக்ஸ் ஆகியவைகளும் வழஙகப்படுகிறது. பயிற்சியின்போது தொழில் செய்யக்கூடிய குழுக்களுக்கு அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் தையல் மெஷின், மற்ற உபகரணங்கள் உள்ளிட்டவை இலவசமாக கொடுக்கப்படுகிறது. தற்போது, இந்தப் பயிற்சி மையத்தில், அழகு கலை பயிற்சி மற்றும் எம்பிராய்டரி பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இப்பயிற்சி யாருக்கெல்லாம் தரப்படுகிறது?
மாவட்டத்திலுள்ள கிராமப் பகுதிகள் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.இல்லையெனில்,100 நாள் திட்ட வேலை செய்யக்கூடியவர்களாக இருக்கலாம்.ஆதரவற்ற விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. 18 முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.எட்டாம் வகுப்பு வரை படித்த ஆண்கள், பெண்கள் என இருபாலர் மற்றும் திருநங்கைகளுக்கும் இந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது” என ஷாலினி தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் பயிற்சி முடிவில், மத்திய அரசின் சான்றிதழ், இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்ற சான்றிதழும் வழங்கப்படும். மேலும் சுயத்தொழில் தொடங்க விருப்பமுள்ள நபர்களுக்கு வங்கிக்கடன் பெற தகுந்த ஆலோசனைகளும் வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் அடுத்த மாதத்திற்கான பயிற்சி வகுப்புகளான கம்ப்யூட்டர் டேலி மற்றும் பாஸ் புட் உணவு தயாரிக்கும் பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகளில் சேர்வதற்கு ஆர்வம் உள்ள நபர்கள்இந்த நிறுவனத்திற்கு நேரடியாக வருகை புரிந்து, அதற்குரிய விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்யலாம் என தெரிவித்தார்.
மேலும் கம்ப்யூட்டர் டேலிக்குஏப்ரல் 22ஆம் தேதியும் நேர்காணல் தேர்வு நடைபெற உள்ளது. நேர்காணல் வரும் நபர்கள் கட்டாயமாக ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், மாற்று சான்றிதழ்,மதிப்பெண் சான்றிதழ் 100 நாள் வேலை செய்பவராக இருந்தால் அந்த அட்டை போன்ற ஆவணங்களை எடுத்து வர வேண்டும். இந்த நிறுவனம் மற்றும் பயிற்சி வகுப்புகள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு அலுவலகத்திற்கு நேரடியாக வருகை புரிந்தும், அல்லது 04146294115,7598466681 என்று எண்ணிற்கு தொடர்பு கொண்டு முழு விவரங்களை பெற்றுக் கொள்ளலாம் என ஷாலினி தெரிவித்தார்.
🔻🔻🔻
நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில் காலியாக உள்ள 490 இளநிலை நிர்வாகி (Junior Executive) காலிப்பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிக்கையை இந்திய விமான நிலைய ஆணையம் (Airports Authority of India) வெளியிட்டுள்ளது. இதற்கான, விண்ணப்ப செயல்முறை வரும் மே மாதம் 1ம் தேதியுடன் முடிவடைய இருப்பதால், விண்ணப்பதாரர்கள் கடைசி நேரம் வரை காலம் தாழ்த்தாமல் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காலிப்பணியிட விவரங்கள்:
Junior Executive (Architecture) - 03
Junior Executive (Engineering - civil ) - 90
Junior Executive (Engineering - Electrical) - 106
Junior Executive (Electronics) - 278
Junior Executive (Information Technology) - 13
கல்வித் தகுதிகள்:
தேர்வு முறை(Selection Procedure) : தொடர்புடைய பாடங்களில், 2024ம் வருட கேட் தேர்வு மதிப்பெண் (GATE SCORE 2024) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
அனைத்து பதவிகளுக்கும், இந்திய அரசால் பின்பற்றப்படும் இடஒதுக்கீடு முறை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பள விவரம், கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை அறிவிப்பில் ( ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ் ) தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
சம்பளம்: ரூ. 40,000 - ரூ. 1,40,000
விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 300 ஆகும். பட்டியல்/ பழங்குடியினர், பெண்கள், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் வயது வரம்பு 01/05/2024 அன்று 27 வயதுக்குள் இருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள் ஆவர். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டு வரை சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் செய்வது எப்படி? இதற்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன. www.aai.aero என்ற இணையதளம் மூலமாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இந்த இணையதளம் தவிர விண்ணப்பப் பதிவுக்கு வேறு எந்த இணையதளமோ அல்லது செயலியோ கிடையாது.
எனவே, விண்ணப்பதாரர்கள் இந்த இணையதளத்தில் தங்களது பயனாளர் கணக்கை தொடங்கி, அதன் பிறகு மின்னஞ்சலில் வரக்கூடிய தகவலின் அடிப்படையில், விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் பதிவு செய்ய வேண்டும். இணையதளத்தில் பதிவு செய்த பிறகு, விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விவரங்கள், கல்வித்தகுதி மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் தாங்கள் பதிவு செய்யும் விவரங்களுக்கு ஆதாரமாக உரிய ஆவணங்களையும் தங்களது கணக்குகளில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இணையதளத்தில் முன்கூட்டியே பதிவு செய்து வைத்த விண்ணப்பதாரர்கள், இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கும்போது ஏற்படும் நெரிசலில் சிக்காமல் விரைவாக விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்படுகிறது. ஆட்சேர்க்கை அறிவிக்கையை இங்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
🔻🔻🔻
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் ஆனது SPA, JRF, Project Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 43 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.CSIR-CLRI காலிப்பணியிடங்கள்:
என மொத்தம் 43 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானதுஅதிகபட்சம் 28 முதல் 50 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
மத்திய அரசு பணிக்கான கல்வி தகுதி:
தேர்வு செயல்முறை:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 22.04.2024 வரை நடைபெற உள்ளது.
CSIR-CLRI சம்பளம்:
Project Assistant – ரூ.20,000 per month
Project Associate-I – ரூ.25,000 per month
Junior Research Fellow – ரூ.31,000 per month
Project Associate-II – ரூ.28,000 per month
Senior Project Associate – ரூ.42,000 per month
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். நேர்முக தேர்வானது 22.04.2024 வரை CSIR-Central Leather Research Institute, Sardar Patel Road, Adyar, Chennai – 600020 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.
🔻🔻🔻
Click here to join Group4 whatsapp group
Click here to join WhatsApp group for Daily employment news
பேங்க் ஆஃப் இந்தியா வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Credit Officer, Chief Manager, Law Officers, Data Scientist மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 143 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 10.04.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
🔻🔻🔻
சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐ.ஐ.டி – IIT Madras) நிர்வாக உதவியாளர் பணியிடத்தை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 10.04.2024
Administrative
Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ 20,000 - 25,000
தேர்வு செய்யப்படும் முறை :
இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://icandsr.iitm.ac.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
10.04.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://icandsr.iitm.ac.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
🔻 🔻 🔻
குடல் வாயிலிருந்து தொடங்கி ஆசனவாயில் முடிவடையும் உடலில் உள்ள முக்கியமான அமைப்பு ஆகும். செரிமான அமைப்பின் ஒரு முக்கிய பகுதியாக செயல்படும் இந்த குடல் உணவு செரிமானம் மற்றும் உறிஞ்சுதலில் ஈடுபட்டுள்ள பல்வேறு உறுப்புகளை கொண்டுள்ளது. உணவை சிறிய மூலக்கூறுகளாக பிரிப்பதற்கு, கார்போஹைட்ரேட், புரதங்கள், கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கும் குடல் முக்கிய பங்குவகிக்கிறது. மேலும் உடலில் உள்ள கழிவு பொருட்களை வெளியேற்ற குடல் உதவுகிறது. குடல் நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. குடல் ஆரோக்கியத்தையும் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் பராமரிக்க உதவும் பலதரப்பட்ட நன்மை பயக்கும் பாக்டீரியாக்களைக் கொண்டுள்ளது.
குடல் ஆரோக்கியத்திற்கு தவிர்க்க வேண்டிய உணவுகள்
- அதிக சர்க்கரை ஆரோக்கியமான குடல் பாக்டீரியாவை நீக்குகிறது, மேலும் இது உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும். அதிக அளவில் சர்க்கரை மற்றும் அதிக சர்க்கரை கொண்ட உணவுகளை சாப்பிடுவதை குடலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரிக்கும். இது சில பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு தடுக்கும் மற்றும் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் குறைவு, குடல் நுண்ணுயிரிகளின் சமநிலையை சீர்குலைக்கும்.
- நமது உடல்கள் செயற்கையான செய்யப்பட்ட உணவு பொருட்களை ஜீரணிக்க வடிவமைக்கப்படவில்லை. இதனால் செயற்கை இனிப்புகள் உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டும். அஸ்பார்டேம் மற்றும் சுக்ரோலோஸ் போன்ற சில செயற்கை இனிப்புகள் குடல் ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிக்கும். இது குடல் மைக்ரோபயோட்டாவில் ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுக்கும் மற்றும் ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். இவை உணவுகளை உடல் ஜீரணிக்க கடினமாக்குகிறது. ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகம் உள்ள உணவுகள் குடல் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளுடன் தொடர்புடையவை. இந்த கொழுப்புகள் குடலில் வீக்கத்திற்கு பங்களிக்கலாம் மற்றும் குடல் நுண்ணுயிரிகளின் கலவையை மாற்றலாம்.
- அதிக அளவு உப்பு, கொழுப்பு, சர்க்கரை மற்றும் பல்வேறு உணவு சேர்க்கைகளின் இருப்பு ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகின்றன. தீவிர பதப்படுத்தப்பட்ட உணவை அதிக அளவில் உட்கொள்வது குடல் நுண்ணுயிரிகளை மாற்றி வீக்கத்திற்கு வழிவகுக்கும். பதப்படுத்தப்பட்ட உணவுகள் பெரும்பாலும் செயற்கை சர்க்கரைகளை கொண்டிருக்கும். அவை பொதுவாக நார்ச்சத்து குறைவாகவும், ஆரோக்கியமற்ற கொழுப்புகள், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் உப்பு அதிகமாகவும் இருக்கும். இந்த உணவுகள் வீக்கத்தை ஊக்குவிப்பதன் மூலமும், இரைப்பை குடல் கோளாறுகள் போன்ற நிலைமைகளுக்கு பங்களிப்பதன் மூலமும் குடல் ஆரோக்கியத்தை சீர்குலைக்கும்.
- அதிகப்படியான ஆல்கஹால் குடலை சேதப்படுத்தும் மற்றும் எண்டோடாக்சின் உற்பத்தியை அதிகரிக்கும். மது அருந்துவதால் குடல் ஊடுருவல் ஏற்படுகிறது. இது நிகழும்போது, குடலின் புறணி அதிக ஊடுருவக்கூடியதாகிறது, நச்சுகள், பாக்டீரியாக்கள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இரத்த ஓட்டத்தில் கசிந்து, நாள்பட்ட அழற்சிக்கு வழிவகுக்கும். மது அதிகமாக உட்கொள்ளும் போது குடல் ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிக்கும். இந்த நிலை நோய்கள், புற்றுநோய் மற்றும் இருதய நோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது குடலின் புறணியை சேதப்படுத்தும், ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை பாதிக்கலாம். போதுமான நார்ச்சத்து இல்லாமல், இந்த பாக்டீரியாக்கள் குறையக்கூடும், இது குடல் மைக்ரோபயோட்டாவில் ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுக்கும்.
🔻 🔻 🔻
Diseases Caused By Insomnia: இரவில் சரியாக தூங்காமல் அல்லது தாமதமாக தூங்கும் போதும், போதுமான தூக்கம் வராமல் இரவில் அடிக்கடி எழுந்திருக்கும் நிலை ஏற்படும் போதும், மிகவும் சோம்பலாக இருப்பதை நாம் அடிக்கடி உணர்ந்திருப்போம். கூடுதலாக, தலைவலி மற்றும் சோர்வும் அதிக அளவில் இருக்கும். இவை தூக்கமின்மையினால் ஏற்படும் சிறிய பிரச்சனைகள். ஆனால் தொடர்ந்து போதுமான தூக்கம் இல்லாமல், தூக்கமின்மை பிரச்சனை நீடித்தால், அது கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
கடும் நோய்களுக்கு வழிவகுக்கும் தூக்கமின்மை
இரவில் 7-8 மணி நேரம் நன்றாக தூங்குவது மிகவும் அவசியம். இல்லை என்றால், உடல் பல நோய்களின் இருப்பிடமாகி விடும். எனவே, உங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதிலும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிப்பதிலும், ஆழ்ந்த தூக்கம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் பலருக்கு இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுவார்கள். தூக்கமின்மையால் சரியாக தூங்க முடியாமல், அமைதியின்மையை உணரலாம். இந்நிலையில், தூக்கமின்மையால் என்னென்ன நோய்கள் நம்மை தாக்கக் கூடும், தூக்கமின்மை பிரச்சனையிலிருந்து விடுபடுவது எப்படி என்பது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
தூக்கமின்மையால் ஏற்படும் நோய்கள்
தூக்கமின்மை பல நாள்பட்ட உடல் நல பாதிப்புக்கு வழிவகுக்கும். இதனால் நமது மனநலனும் மிகவும் பாதிக்கப்படுகிறது. இது தவிர, போதுமான தூக்கம் இல்லாதவர்கள் உடல் பருமன், நீரிழிவு, கொழுப்பு, இரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சினைகள், இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். மேலே கூறப்பட்டுள்ள நோய்களுக்கான முக்கிய காரணியாக தூக்கமின்மை உள்ளதை ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.
இரவில் ஆழ்ந்த தூக்கம் வர செய்ய வேண்டியவை
1. நல்ல தூக்கத்திற்கு நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம், தினமும் ஒரே நேரத்தில் சீக்கிரம் தூங்குவதை வழக்கமாக்குவது.
2. தூங்குவதற்கு 3-4 மணி நேரத்திற்கு முன் இரவு உணவு சாப்பிடுங்கள்.
3. உறங்குவதற்கு முன் மது, டீ-காபி மற்றும் பிற காஃபின் போன்ற சில பொருட்களை உட்கொள்ள வேண்டாம்.
4. தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள், இது இரவில் நல்ல தூக்கத்தைப் பெற உதவுகிறது.
5. தூங்கும் அறையில், மனதிற்கு இதமான சூழலை உருவாக்கவும். தூங்கும் சமயத்தில் விளக்குகளை அணைக்கவும் அல்லது வெளிச்சத்தை மிகவும் மங்கலாக வைக்கவும்.
6. அறையின் வெப்பநிலையை மிக அதிகமாகவோ அல்லது மிகக் குறைவாகவோ இருக்கக் கூடாது. சீரான வெப்ப நிலை இருக்க வேண்டும்.
7. இரவில் தாமதமாக மொபைல், டிவி அல்லது லேப்டாப் ஆகியவற்றை பயன்படுத்துவதிலிருந்து விலகி இருங்கள்.
8. நல்ல மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.
இங்கே குறிப்பிட்டுள்ள விஷயங்களை கடைபிடிப்பதன் மூலம், தூக்கமின்மை தொடர்பான பிரச்சனைகளில் இருந்து எளிதாக விடுபடலாம். அவர்களின் உதவியுடன் நீங்கள் இரவில் நன்றாக தூங்கலாம்.
🔻 🔻 🔻