மும்மொழிக் கொள்கையை 7 நாளில் அமல்படுத்த வேண்டும்: பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ அறிவுறுத்தல்

 தேசிய கல்விக் கொள்​கை​யின்​படி 6-ம் வகுப்பு முதல் மும்​மொழிக் கொள்​கையை 7 நாட்​களில் செயல்​படுத்த வேண்​டுமென சிபிஎஸ்இ தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து சிபிஎஸ்இ இயக்​குநர் பிரக்யா எம்​.சிங், அனைத்து வித​மான பள்​ளி​களுக்கு அனுப்​பிய சுற்​றறிக்​கை: 2026-27-ம் கல்​வி​யாண்டு முதல் 6-ம் வகுப்​பில் இருந்து மும்​மொழி திட்​டம் அறி​முகம் செய்​யப்​படு​கிறது.

இது​வரை அமல்​படுத்​தாத மற்ற பள்​ளி​களும், இந்த அறி​விப்பு வெளி​யான 7 நாட்​களுக்​குள் திட்​டத்தை செயல்​படுத்​து​வதை உறு​தி​செய்ய வேண்​டும். 3-வது மொழிகளுக்​கான பாடப்​புத்​தகங்​கள் விரை​வில் கிடைக்​கப்​பெறும்.

அதேநேரம் உள்ளூரில் கிடைக்கும் புத்தகங்கள், கற்பித்தல் வளங்களை பயன்படுத்தி 6-ம் வகுப்பில் இருந்து மும்மொழியை பள்ளிகள் கற்பிக்க வேண்டும்.

இதுதவிர பள்ளிகள் தாங்கள் தேர்ந்தெடுத்த மும்மொழி விவரங்களை இறுதிசெய்து, தகவல் தெரிவிக்க வேண்டும்.

ஒரு பள்ளி 6-ம் வகுப்பில் எந்த 3-ம் மொழியை அறிமுகம் செய்கிறதோ, அதே மொழிதான் அந்த பள்ளிக்கான 9, 10-ம் வகுப்புகளில் விருப்பப் பாடமாக இருக்கும். எனவே, அனைத்துப் பள்ளிகளும் மும்மொழி அமல் செய்வதை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



0 Comments:

Post a Comment