Education News (கல்விச் செய்திகள்
வாசிப்பு இயக்க புத்தகங்களுக்கான மாணவர்களின் படைப்புகளை ஜூலை 16-ம் தேதிக்குள் அனுப்புமாறு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக வாசிப்பு இயக்கம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் குழந்தைகளின் வாசிப்பு நிலைக்கு ஏற்ப நுழை, நட, ஓடு, பற என்ற 4 பிரிவுகளில் புத்தகங்கள் தயாரிக்கப்படுகின்றன. முதல்கட்டமாக 53 புத்தகங்களும், 2-ம் கட்டமாக 70 புத்தகங்களும் அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும் 3-ம் கட்டமாக 81 புத்தகங்கள் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இதையடுத்து, 4-ம் கட்ட புத்தகங்கள் உருவாக்கப்படவுள்ளன. இந்த புத்தகங்கள் முழுவதும் மாணவர்களின் படைப்புகளுடன் கொண்டு வரப்பட இருக்கிறது. இதைத் தொடர்ந்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் படைப்புகளை, ஆசிரியர்கள் எமிஸ் தளம் மூலமாக கடந்த ஜூன் 16-ம் தேதிமுதல் அனுப்பி வருகின்றனர்.
வாசிப்பு இயக்கத்தின் 4-ம் கட்ட புத்தகங்களுக்கு படைப்புகளை அனுப்புவதற்கான கால அவகாசம் ஜூலை 16-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. எனவே, மாணவர்களிடமிருந்து படைப்புகளை விரைவாகப் பெற்று அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )
0 Comments:
Post a Comment