Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்புகள் என்று மட்டுமில்லாமல், தனியார் நிறுவனங்களில் இருக்கும் வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்கு தகுதிக்கேற்று ஏற்படுத்தி தரும் வகையில் தமிழக அரசு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வருகிறது. அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தில் வரும் மே 16-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வேலையில்லாத இளைஞர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
தமிழ்நாடு அரசின் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் மே 16-ம் தேதி (வெள்ளிக்கிழமை) விருதுநகர் மாவட்ட சாத்தூரில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதன் மூலம் வேலையில்லா இளைஞர்களுக்கு பலருக்கு வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த முகாமில் கலந்துகொள்ளலாம்.
தமிழக அரசு நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்
யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, டிஎன்பிஎஸ்சி, வங்கி, ரயில்வே பணி தேர்வுகளுக்கு தமிழக அரசு பயிற்சி அளித்து வருகிறது. இவைமட்டுமில்லாமல் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு தகுதிக்கேற்று தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் வகையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகள் பெற்று தரப்படுகிறது. இதன் மூலம் இளைஞர்கள் அதிக அளவில் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர்.
யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, டிஎன்பிஎஸ்சி, வங்கி, ரயில்வே பணி தேர்வுகளுக்கு தமிழக அரசு பயிற்சி அளித்து வருகிறது. இவைமட்டுமில்லாமல் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு தகுதிக்கேற்று தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் வகையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகள் பெற்று தரப்படுகிறது. இதன் மூலம் இளைஞர்கள் அதிக அளவில் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர்.
விருதுநகர் சாத்தூரில் வேலைவாய்ப்பு முகாம்
இந்நிலையில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் சாத்தூரில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் Adyar Anandha Bavan, Way2News, RK Motors, Anaamalais Toyota, IOB Resti போன்ற 20-க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்துக் கொண்டு தகுதியானவர்களை வேலைக்கு எடுக்க உள்ளனர்.
தமிழ்நாடு அரசு மூலம் சாத்தூரில் நடைபெறும் இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை கலந்துகொள்ளலாம். மேலும், ஐ.டி.ஐ முடித்தவர்கள், டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் பொறியியல் படிப்பு முடித்த பட்டதாரிகளும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.,
விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூரில் S.H.N எட்வர்ட் மேல்நிலைப்பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.
வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற தனியார்துறை வேலைவாய்ப்பிற்கான அரசின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும், பல்வேறு தனியார் துறை வேலைவாய்ப்புகளை குறித்த தகவலை இந்த இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம்
முகாமில் கலந்துகொள்ள விரும்பும் தனியார்துறை நிறுவனங்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்டிற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை நேரிலோ அல்லது vnjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்)
இந்நிலையில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் சாத்தூரில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் Adyar Anandha Bavan, Way2News, RK Motors, Anaamalais Toyota, IOB Resti போன்ற 20-க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்துக் கொண்டு தகுதியானவர்களை வேலைக்கு எடுக்க உள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூரில் S.H.N எட்வர்ட் மேல்நிலைப்பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.
வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற தனியார்துறை வேலைவாய்ப்பிற்கான அரசின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும், பல்வேறு தனியார் துறை வேலைவாய்ப்புகளை குறித்த தகவலை இந்த இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம்
முகாமில் கலந்துகொள்ள விரும்பும் தனியார்துறை நிறுவனங்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்டிற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை நேரிலோ அல்லது vnjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்)
0 Comments:
Post a Comment