Search

புற்றுநோய் வர காரணமாக இருக்கும் உணவுகள்... சுவைத்து பார்க்கக்கூட தொடாதீங்க..!

 இன்றைய காலத்தில் அனைவருமே துரித உணவுகளையும் பாக்கெடில் அடைத்து விற்கப்படும் பதப்படுத்தப்பட உணவுகளையே அதிகமும் சாப்பிடுகிறார்கள். இது சுவையாக இருந்தாலும் நம் உடல்நலத்திற்கு மிகவும் கேடு விளைவிக்க கூடியது. இதனால் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகரிப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

இந்தியாவில் அதிகரிக்கும் புற்றுநோய் : நாளுக்குநாள் இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு பல காரணங்கள் கூறலாம். மேற்கத்திய வாழ்க்கைமுறையை பின்பற்றுவது, மோசமான உணவுப் பழக்கம், பால் சார்ந்த பொருட்களை அதிகமாக எடுத்துக் கொள்வது, பதப்படுத்தப்பட்ட உணவுகள், தினமும் இறைச்சி உணவுகள் சாப்பிடுவது, ரசாயன மாசுபாடு, மலச்சிக்கல், உடற்பயிற்சி செய்யாமை என புற்றுநோய்க்கான காரணங்களை சொல்லி கொண்டே போகலாம்.

குடல்வால் புற்றுநோய்க்கான காரணம் : பெருங்குடல் வாய்ப்பகுதியில் வால் போன்று உறுப்பு ஒட்டிக் கொண்டு இருப்பதே அப்பெண்டிக்ஸ் எனும் குடல் வால் நோய் ஆகும். இதுதான் புற்றுநோய் வளர்வதற்கு காரணமாக இருக்கும். அப்பெண்டிக்ஸ் உருவாகும் கட்டி ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளையும் நமக்கு தெரியப்படுத்தாது. ஆனால் சில சமயங்களில் குமட்டல், வாந்தி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, இறுகிய மலம், உடல் எடை குறைதல் மற்றும் அடிவயிற்றின் வலது ஓரத்தில் வலி உண்டாகும். புற்றுநோய் பரவத் தொடங்கினால் குடலிறக்கம், மூச்சுவிடுவதில் சிரமம், பசியின்மை, மலம் கழிப்பதில் சிரமம் போன்றவை ஏற்படும்.

ஆரோக்கியமற்ற உணவுகள் : சிவப்பு இறைச்சி, அதிகப்படியான குடிப்பழக்கம், அதிகளவு பதப்படுத்தப்பட உணவுகளை சாப்பிடுவது போன்ற காரணங்களால் புற்றுநோய் வரும் ஆபத்து 45% அதிகரிக்கிறது. ஆகவே நமது வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களை செய்தாலே புற்றுநோய் வரும் ஆபத்தைக் குறைக்கலாம். உதாரணமாக மோசமான உணவுப்பழக்கத்தை கைவிடுங்கள், உடல் எடையை குறையுங்கள், நன்றாக உடற்பயிற்சி செய்யுங்கள்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் : சாசேஜ், ஹாட் டாக், சலாமி, பேகன், ஹாம், பீஃப் ஜெர்கி போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகளை உப்பு மற்றும் புகை சேர்த்தே பத்திரப்படுத்தி வைக்கிறார்கள். இந்த இறைச்சிகளை பதப்படுத்தும் போது நைட்ரேட்டை சேர்க்கிறார்கள். இது கார்சினோஜெனை உருவாக்கும். சில சமயங்களில் ரசாயனம் கலக்காத இறைச்சியே கூட பாலிசைலிக் அரோமெடிக் ஹைட்ரோகார்பன் என்ற கார்சினோஜெனை உருவாக்கும். இந்த கார்சினோஜென் புற்றுநோயை வரவழைக்கும். பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் புற்றுநோயை உருவாக்கக் கூடிய காரணிகள் இருப்பதாக உலக சுகாதார நிறுவனமும் எச்சரிக்கிறது. மேலும் இதை சாப்பிடுவதால் பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கிறார்கள்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் : பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ், நொறுக்கு தீணிகள், க்ரீம் சீஸ், இனிப்புகள், குக்கீஸ், சோடா, சாக்லேட், துரித உணவுகளான பீட்ஸா, பர்கர், வறுத்த சிக்கன் ஆகியவற்றில் நிறத்திற்காகவும், சுவைக்காகவும், நீண்ட நாள் கெட்டுப் போகாமல் இருக்கவும் பல ரசாயன சேர்க்கைப் பொருளை சேர்ப்பார்கள். இதுபோன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சர்கரை, உப்பு, கொழுப்பு, ரசாயனங்கள் ஆகியவை அதிகளவு இருக்கும். மேலும் இந்த உணவுகளில் வைட்டமின், மினரல்கள் மற்றும் நார்ச்சத்து அகியவை குறைவாக இருக்கும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக சாப்பிடும் போது உடல் எடை கூடுவதோடு புற்றுநோய் வருவதற்கான ஆபத்தும் அதிகரிக்கும்.

வாழ்க்கைமுறை மாற்றங்கள் புற்றுநோய் ஆபத்தைக் குறைக்கும் : ஆரோக்கியமான உடல் எடையை பராமரியுங்கள், புகையிலை பழக்கத்தை கைவிடுங்கள், சீரான உடற்பயிற்சி, காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், நட்ஸ் போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். ஆண்டி ஆக்ஸிடெண்ட், நார்ச்சத்து, நிறைவுறா கொழுப்பு நிறைந்த உணவுகள் புற்றுநோய் ஆபத்தைக் குறைக்கும்.

புற்றுநோய் வராமல் தடுக்கக் கூடிய ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் : பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், கொழுப்பு இல்லாத புரதம் ஆகியவற்றை உங்கள் டயட்டில் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். சிவப்பு இறைச்சிகள் மற்றும் பதப்படுத்தபட்ட உணவுகள் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளுங்கள்.

சீரான உடற்பயிற்சி அவசியம் தேவை : தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். இரவு நேரத்தில் குறைந்தது ஏழு மணி நேரமாவது நன்றாக தூங்குங்கள். உடல் எடையை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். மது அருந்துவது, புகைபிடிக்கும் பழக்கம் இருந்தால் இன்றே கைவிடுங்கள்.


0 Comments:

Post a Comment