TET தேர்வெழுதும் ஆசிரியர்களுக்கு தாமதமின்றி பணிச்சான்று வழங்க வேண்டும் - விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்களே உள்ளதால் பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு!
EMIS - Students TC Generation Regarding
EMIS - Students TC Generation Regarding
2025-26 கல்வியாண்டு இறுதி வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு TC சார்ந்த அனைத்து தகவல்களையும் பதிவு செய்து Save மட்டுமே செய்து கொள்ளலாம். *மாநில/ மாவட்ட திட்ட அலுவலகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கும் வரை எக்காரணம் கொண்டும் common pool ற்கு அனுப்புதல் கூடாது. அனைத்து வகுப்புகளுக்குமான TC Generation பணியினை தற்காலிகமாக செய்துகொள்ளலாம். அதன்படி…
1. TC எடுப்பதற்கு முன்னர் Annual mark entry, EE mark entry, 7.5% Verification(school & medium) , Career Guidance work மற்றும் EMIS சார்ந்த பிற பணிகள் முடிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளவும். மேற்கண்ட பணிகளை முடிக்காமல் TC GENERATION செய்ய வேண்டாம்.
2. TC எடுப்பதற்கு முன் student profile ல் உள்ள அனைத்து தகவல்களும் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளவும்.
3. *தங்கள் பள்ளியில் மாணவன் படித்த வகுப்புகளுக்குரிய Medium த்தை TC ல் குறிப்பிடும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது* .மற்றப்படி சென்ற வருடம் உள்ள அதே வழிமுறைகளைப் பின்பற்றி TC எடுத்துக் கொள்ளலாம்.
4. 2025-26 ஆம் கல்வி ஆண்டில் தங்கள் பள்ளியில் இறுதி வகுப்பு பள்ளியிலும்
(Primary - வகுப்பு 5
Middle - வகுப்பு 8
High scl -வகுப்பு 10
HR sec - 10 & 12
*முடித்த மாணவர்களுக்கு TC generation செய்து Common pool ற்க்கு அனுப்பும் போது Terminal Class என்பதனை கட்டாயமாக தேர்வு* செய்ய வேண்டும்.
Terminal வகுப்பு தவிர இதர வகுப்புகளில் மாற்றுச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்து இருந்தால் requested by parents என்பதினை தேர்வு செய்ய வேண்டும்.
5. அனைத்து மாணவர்களுக்கும் online TC மட்டுமே வழங்க வேண்டும். இறுதி வகுப்பு பயிலும் (Classes - Primary -5,Middle -8 ,High -10, Hr sec -12)மாணவர்களை *எக்காரணம் கொண்டும் மற்ற பள்ளிகள் Raise request மூலம் Admission செய்தல் கூடாது.*
6. ஒரு மாணவருக்கு TC எடுக்கும் பொழுது மூன்று முறை Edit option வழங்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் Edit செய்ய இயலாது எனவே மிகுந்த கவனத்துடன் சரிபார்த்தல் வேண்டும்.
மேற்கண்ட பணியை மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ள அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Recommanded News
தேர்தல் பயிற்சி வகுப்பு (Election class) - 11.04.2026 அன்று நடைபெறம் - DEO Circular
மாவட்டக் கல்வி அலுவலகம் (தொடக்கக் கல்வி) திண்டுக்கல் சுற்றறிக்கை
2-வது தேர்தல் பயிற்சி வகுப்பு 12.04.2026 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது - தஞ்சாவூர், தென்காசி மாவட்டம் - ஒரு தகவலுக்காக!
2-வது தேர்தல் பயிற்சி வகுப்பு 12.04.2026 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது - தஞ்சாவூர், தென்காசி மாவட்டம் - ஒரு தகவலுக்காக!
ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியம் 'கட்'
ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியம் 'கட்'
நடைமுறைப்படுத்த 3 ஆண்டு தாமதம்
தமிழகத்தில் அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு, மே மாதம் ஊதியம் வழங்கும் நடைமுறையை (மறுநியமனக் காலத்தில்) 'கட்' செய்வதற்கு, அதாவது நிறுத்துவதற்கு அரசு 3 ஆண்டு கால அவகாசம் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.. இதனால் ஏப்ரல் 30-க்கு பின் மே மாத சம்பளம் கிடைக்காது.முக்கியத் தகவல்கள்:
புதிய நடைமுறை: கல்வியாண்டின் இடையில் (ஏப்ரல் 30-க்கு முன்) ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு, அந்த கல்வியாண்டின் இறுதி வேலை நாளான ஏப்ரல் 30 வரை மட்டுமே பணி நீட்டிப்பு (Re-appointment) வழங்க அனுமதிக்கப்படுகிறது. மே மாதம் வரை பணி நீட்டிப்பு வழங்கப்படாது.
மறுநியமனக் காலம்: மறுநியமனக் காலத்தில் (ஏப்ரல் 30 வரை) ஆசிரியர்கள் பணியில் இருந்தால் மட்டுமே, அந்த மாதங்களுக்கான முழு ஊதியம் வழங்கப்படும். மே மாதம் பணி நீட்டிப்பு இல்லாததால், மே மாத ஊதியம் 'கட்' (Cut) செய்யப்படும்.
தாமதத்திற்கான காரணம்: இந்த நடைமுறை உடனடியாக அமல்படுத்தப்படாமல், 3 ஆண்டு கால அவகாசத்துடன், அடுத்த கல்வியாண்டுகளில் முழுமையாக நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளப் பிடித்தம்: இந்த விதிமீறல்கள் அல்லது தணிக்கைத் தடையின் காரணமாக, ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் நிறுத்தி வைக்கும் சூழலும் ஏற்படுவதாகப் புகார்கள் உள்ளன.
இன்று வெளியான செய்திகள் | Latest Education News in Tamil Today
இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification
📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்
TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்
TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests
Miss பண்ணாதீங்க
TET தேர்வுக்கு விண்ணப்பிக்க சமூக நீதி விடுதிகளில் பணிபுரியும் இடைநிலை/பட்டதாரி காப்பாளர்கள் EMIS ID பதிவேற்றம் செய்யக்கோரியது - சார்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப்பணி அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) Paper -1 மற்றும் Paper-II 2026 தேர்வு எழுத விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல இயக்கக கட்டுப்பாட்டில் உள்ள சமூக நீதி விடுதிகளில் பணிபுரியும் இடைநிலை/பட்டதாரி காப்பாளர்கள் EMIS ID பதிவேற்றம் செய்யக்கோரியது - சார்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
BC & MBC - BT , SGT Warden- Emis number creation- Instructions.pdf
👇👇👇👇
இன்று வெளியான செய்திகள் | Latest Education News in Tamil Today
இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification
📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்
TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்
TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests
Miss பண்ணாதீங்க
திறன் (THIRAN) செயல்பாடுகள் சார்ந்த முன்னேற்ற அறிக்கையினை நேரில் சமர்ப்பிக்க பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
திறன் (THIRAN) செயல்பாடுகள் சார்ந்த முன்னேற்ற அறிக்கையினை நேரில் சமர்ப்பிக்க பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
DSE - Thiran Proceedings - Download here
திறன் - முழுஆண்டுத்தேர்வு (Endline தேர்வு) சார்ந்த தகவல்கள் :
திறன் - முழுஆண்டுத்தேர்வு (Endline தேர்வு) சார்ந்த தகவல்கள் :
- திறன் மாணவர்களுக்கான முழுஆண்டுத்தேர்வு (Endline தேர்வு), ஏப்ரல் 1 முதல் 16 வரை முழுஆண்டுத்தேர்வு கால அட்டவணையின் படி நடத்தப்பட வேண்டும்.
- திறன் மாணவர்களுக்கு அனைத்து பாடங்களுக்கும் தனி வினாத்தாள் வழங்கப்படும். இந்த வினாத்தாளை மட்டும் கொண்டு திறன் மாணவர்களுக்கு தேர்வு நடத்திட வேண்டும்.
அதற்கான வினாத்தாள், exam.tnschools.gov.in என்ற இணையத்தளத்தில் தேர்விற்கு ஒருநாள் முன்பதாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கும்.
Baseline -இல் கண்டறியப்பட்ட அனைத்து திறன் மாணவர்களும் இந்தத்தேர்வில் பங்குபெற வேண்டும்.
- அதிகமான கேள்விகள் BLO பிரிவில், பாடம் 01 முதல் 15 வரையில் இருந்து கேட்கப்பட வாய்ப்புள்ளது.
*மதிப்பெண் உள்ளீடு சார்ந்த விவரங்கள்*:
6 மற்றும் 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மொத்த மதிப்பெண் 60.
- 8 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மொத்த மதிப்பெண் 100.
Emis-ல் உள்ளீடு செய்யும் போது மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களை நிரப்ப வேண்டும். மதிப்பெண்களை Convert செய்ய வேண்டாம்.
குறிப்பு: Submit செய்வதற்கு முன் ஒரு முறை உறுதி செய்த பின்னரே click செய்யவும்.
- மதிப்பெண் உள்ளீடு செய்யும் பணியை 01.04.2026 முதல் 20.04.2026 வரை மேற்கொள்ளலாம்.
நன்றி.
தேர்தல் பணியாற்றும் பெண்களுக்கு அந்த தொகுதியிலேயே பணி - கோரிக்கை
தேர்தல் பணியில் ஈடுபடும் பெண் ஆசிரியர்களுக்கு அந்தந்த தொகுதியிலேயே பணி வழங்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச்செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அஞ்சல் வாக்குகளை உரிய நேரத்தில் அளிக்கும் வகையில் முன்கூட்டியே வழங்கிட வேண்டும். தேர்தல் பணியாற்றும் பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், உணவு, மின்விசிறி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை வழங்கிட வேண்டும்.
இன்று வெளியான செய்திகள் | Latest Education News in Tamil Today
இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification
📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்
TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்
TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests
Miss பண்ணாதீங்க
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு: மே 20 முடிவுகள் வெளியீடு
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 11-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில், பிரதான பாடங்களுக்கான தேர்வுகள் ஏப்.2-ம் தேதியுடன் முடிந்த நிலையில், நேற்று மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 9 விருப்ப மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். தேர்வு எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
பொதுத் தேர்வு முடிவடைந்ததை அடுத்து, விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.10 முதல் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பணிகளில் சுமார் 50 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தொடர்ந்து, மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து, திட்டமிட்டபடி மே 20-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று வெளியான செய்திகள் | Latest Education News in Tamil Today
இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification
📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்
TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்
TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests
Miss பண்ணாதீங்க
இதுவரை இல்லாத வகையில் ‘நீட்’ தேர்வுக்கு 26 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு நடப்பு ஆண்டில் 26 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் நீட் தேர்வில் தகுதி பெறுபவர்களைக் கொண்டு நிரப்பப்படுகின்றன. அதேபோல, ராணுவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கும் நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இத்தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்துகிறது.
அதன்படி, 2026-27-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் மே 3-ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, மதுரை, கோவை என 30 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 552 நகரங்களில் தேர்வு நடக்கிறது. துபாய், அபுதாபி, தோகா, மஸ்கட், ரியாத், சிங்கப்பூர் என வெளிநாடுகளில் 16 இடங்களில் தேர்வு நடைபெறுகிறது.
ஆன்லைனில் (https://neet.nta.nic.in) இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பது கடந்த பிப்.8-ம் தேதி தொடங்கி மார்ச் 11-ம் தேதி முடிவடைந்தது. விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. சில நாட்களில் ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தேசிய தேர்வுகள் முகமை திட்டமிட்டுள்ளது.
நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதன்படி, 2017-ல் 11.38 லட்சம் பேர், 2018-ல் 13.26 லட்சம், 2019-ல் 15.19 லட்சம், 2020-ல் 15.97 லட்சம், 2021-ல் 16.14 லட்சம், 2022-ல் 18.72 லட்சம், 2023-ல் 20.87 லட்சம், 2024-ல் 24.06 லட்சம், 2025-ல் 22.76 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இதுவரை இல்லாத அளவுக்கு தற்போது 26 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறும். இத்தேர்வில் 180 கேள்விகள் கேட்கப்படும். ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் (நெகட்டிவ்) குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று வெளியான செய்திகள் | Latest Education News in Tamil Today
இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification
📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்
TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்
TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests
Miss பண்ணாதீங்க
தொடக்கக் கல்வித் துறையில் ஊதியக் கணக்குத் தலைப்புகள் ஒருங்கிணைப்பு - DEE Proceedings
தொடக்கக் கல்வி 2028-2027-ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்ட்டில் தொடக்கக் கல்வி இயக்ககத்தின்கீழ் உள்ள கணக்குத் தலைப்புகள் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டது தகவல் தெரிவித்தல் தொடர்பாக
SSLC மைய மதிப்பீட்டுப் பணி - விடைத்தாள் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு!
ஓட்டுச்சாவடி பெண் பணியாளர் தேர்வு : தலைமை தேர்தல் அதிகாரி புது உத்தரவு
ஓட்டுச்சாவடி பெண் பணியாளர் தேர்வு : தலைமை தேர்தல் அதிகாரி புது உத்தரவு.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சட் டசபை சுற்றறிக்கை: தொகுதி தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பிய சட்டசபை பொதுத்தேர்தலுக்கு ஒட்டுச்சாவடிகளில் பணிபுரியும் தலைமை அலுவலர்கள், ஓட்டுப்பதிவு நிலை அலுவலர்களுக்கு கம்ப்யூட்டர் குலுக்கல் முறையில் பணியிடம் ஒதுக்கப்படுகிறது. ஓட்டுப்பதிவு நாளில் ஓட்டுச்சா வடிகளில் பணிபுரிய வேண்டிய பெண் பணியாளர்களை கம்ப்யூட்டர் மூலம் தேர்வு செய்யக் கூடாது. அதற்கு பதிலாக, அவர்கள் தேர்தல் பார்வையாளர்களின் வழிகாட்டுதலின்படி அருகிலுள்ள ஓட்டுச் சாவடிகளுக்கு 'மேனுவல்' அடிப்படையில் பணியமர்த்த வேண்டும்.
இதன்மூலம் ஓட்டுப்பதிவு நாளில் பெண்கள் காலையில் ஓட்டுப்பதிவு துவங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே ஓட்டுச்சாவடிகளுக்கு சென்று உரிய நேரத்தில் கடமையை செய்ய முடியும். தொலைதூரங்களில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் பெண் பணியாளர்கள் யாரையும் பணியமர்த்த கூடாது. ஓட்டுப்பதிவு பணியில் ஈடுபடும் பெண் பணியாளர்களுக்கு போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் செய்து தர வேண்டும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது




