25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற முறையில் பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் செயல்முறைகள் - இணைப்பு பரிந்துரை படிவம்

 25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற முறையில் பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் செயல்முறைகள்


விழுப்புரம் மாவட்டம் , அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற முறையில் ஒழுங்கு நடவடிக்கையோ , தண்டனையோ இன்றி சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 


ரூ .2000 / -வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு கோரும் ஆசிரியர்கள் / பணியாளர்களில் தகுதியானவர்களின் அசல் பணிப்பதிவேட்டின் பணிக்கால சரிபார்ப்பு ஒருங்கிணைந்த சான்று . பணிப்பதிவேடு முதல் பக்கம் , நியமனம் பக்க விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களை பெற்று பரிசீலித்

தகுதியுடைய ஆசிரியர்கள் / பணியாளர்களுக்கு கீழ்குறிப்பிட்டுள்ள படிவத்தில் 2024 2025 ஆம் நிதி ஆண்டிற்கான திட்ட மதிப்பீடு ( BE ) சார்ந்து தேவைப்படும் நிதி ஒதுக்கீடு விவரத்தினை உரிய கணக்குத் தலைப்புகளின் கீழ் பூர்த்தி செய்து 08.01.2025 - க்குள் இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைத்திட அனைத்து அரச உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


Click Here to Download - 25 Years of Service As Teacher - Special Incentive - இணைப்பு பரிந்துரை படிவம் - Proceedings - Pdf



தகுதியுடைய ஆசிரியர்கள் / பணியாளர்களுக்கு கீழ்குறிப்பிட்டுள்ள படிவத்தில் 2024 2025 ஆம் நிதி ஆண்டிற்கான திட்ட மதிப்பீடு ( BE ) சார்ந்து தேவைப்படும் நிதி ஒதுக்கீடு விவரத்தினை உரிய கணக்குத் தலைப்புகளின் கீழ் பூர்த்தி செய்து 08.01.2025 - க்குள் இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைத்திட அனைத்து அரச உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




அரசு மாதிரிப் பள்ளிகளில் பிப்ரவரியில் மாணவா் சோ்க்கை: வழிகாட்டுதல்கள் வெளியீடு

     

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மாதிரிப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான (2026-2027) மாணவா் சோ்க்கை பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்களின் தரத்தை உயா்த்த, 2021-2022-ஆம் கல்வியாண்டில் மாதிரிப் பள்ளிகள் திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது மாவட்டத்துக்கு ஒரு பள்ளி வீதம் மொத்தம் 38 அரசு மாதிரிப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இத்திட்டம், நவீன உள்கட்டமைப்பு, உறைவிட வசதி, மற்றும் நீட், ஜேஇஇ போன்ற போட்டித் தோ்வுகளுக்கான சிறப்புப் பயிற்சிகளை வழங்கி, உயா்கல்வியில் மாணவா்களின் சோ்க்கையை ஊக்குவிக்கிறது.

கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள மாணவா்களுக்கு உயா்தர கல்வி மற்றும் நவீன வசதிகளை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். ஆண்டுதோறும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களில் தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவா்கள் இந்த மாதிரிப் பள்ளிகளில் சோ்க்கப்படுகின்றனா்.

இந்தநிலையில் இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அரசு மாதிரிப் பள்ளிகளில் 2026-2027-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை 9,10 ஆகிய வகுப்புகளுக்கு பிப்ரவரி மாதமும், பிளஸ் 1 வகுப்புக்கு மே மாதமும் மாணவா் சோ்க்கை நடைபெறும். எனவே அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தலைமையில் தலைமை ஆசிரியா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஆகியோரைக் கொண்டு இதற்கான முன்னோட்டக் கூட்டத்தை நடத்த வேண்டும்.

பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் மாதிரிப் பள்ளிகளில் 9, 10 ஆகிய வகுப்புகளுக்கு தோ்ந்தெடுக்கப்படும் மாணவா் பட்டியல் வெளியிடப்படும். அந்தப் பட்டியல் வெளியிடப்பட்டவுடன் முதன்மைக் கல்வி அலுவலா் உடனடியாக மாவட்ட ஆட்சியரை அணுகி, அவரது ஒப்புதலைப் பெற்று மாவட்ட ஆட்சியா் தலைமையில் தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவா்களின் பெற்றோா்கள், அவா்கள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியா்கள் ஆகியோருக்கு கூட்டங்கள் நடத்த வேண்டும்.

இந்தப் பட்டியல் வெளியிடப்பட்ட ஒரு வாரத்தில் மாணவா்கள் சோ்க்கையை உறுதிப்படுத்த வேண்டும். இந்த அறிவுரைகளைப் பின்பற்றி அரசு நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களில் தோ்ந்தெடுக்கப்பட்டவா்களை மாவட்ட மாதிரிப் பள்ளிகளில் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil https://www.agriexam.in/2026/01/5.html?m=1 Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

முழு ஆண்டுத் தேர்வு வரை திறன் இயக்க பயிற்சி: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

     

முழு ஆண்டுத் தேர்வு வரை திறன் இயக்​கம் பயிற்​சிகள் நீட்​டிக்கப்​படு​வ​தாக பள்​ளிக்​கல்​வித் துறை அறி​வித்​துள்​ளது.

இதுகுறித்து பள்​ளிக்​கல்வி இயக்​குநரகம் மற்​றும் தொடக்​கக்கல்வி இயக்​குநரகம் சார்​பில், அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்​பப்​பட்​டுள்ள சுற்​றறிக்​கை​யில் கூறியிருப்பதாவது:

நடப்பு கல்​வி​யாண்டு (2025-26) பள்​ளிக்​கல்​வித் துறை மானியக் கோரிக்கை அறி​விப்​பின்​படி, அரசுப் பள்​ளி​களில் 6 முதல் 9-ம் வகுப்​புவரை பயிலும் மாணவர்​களின் மொழிப்​பாடத்​திறன் மற்​றும் கணிதத்​திறன் ஆகிய​வற்றை மேம்​படுத்​தும் வகை​யில் திறன் இயக்​கப் பயிற்சி கடந்த ஜூலை மாதம் முதல் அனைத்து பள்​ளி​களி​லும் நடை​முறைப்​படுத்​தப்​பட்​டது.


ஆசிரியர்​களின் தொடர் முயற்​சி​யால் தேர்​வில் 68 சதவீத மாணவர்​கள் அடிப்​படை கற்​றல் விளைவு​களில் தேர்ச்சி பெற்​றுள்​ளனர். இன்​னும் தேர்ச்சி பெறாத மாணவர்​களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்க கூடு​தல் கால அவ​காசம் தேவைப்​படு​வ​தால் முழு ஆண்​டுத் தேர்வு வரை திறன்பயிற்சி நீட்​டிக்​கப்​படு​கிறது. இதற்​கான வழி​காட்​டு​தல்​கள் தற்​போது வழங்​கப்​பட்​டுள்​ளன.

அதன்​படி அனைத்து தேர்ந்​தெடுக்​கப்​பட்ட மாணவர்​களும் திறன் மாதாந்​திர மதிப்​பீட்​டில் பங்​குபெற வேண்​டும். முழு ஆண்​டுத் தேர்​வின்​போது தமிழ், ஆங்​கிலம்,கணித பாடங்​களுக்கு திறன் பயிற்சி புத்​தகம் சார்ந்த தனி வினாத்​தாள்​ வழங்​கப்படும். அதே​போல், அறி​வியல் மற்​றும் சமூக அறி​வியல் பாடத் தேர்​வு​களுக்​கான கேள்வி​கள், முந்தைய வகுப்​பு​களில் இருந்து எளிமை​யான​தாக இருக்​கும்.

மேலும், திறன் பயிற்சி பெற்ற 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்​களுக்கு வகுப்பு நிலை பாடங்​களுக்​குத் தயா​ராகும் வகை​யில்,அடுத்த கல்​வி​யாண்​டின் முதல் மாதம் பிரிட்ஜ் கோர்​ஸ் நடத்​தப்படும். இதைப் பின்​பற்றி அனைத்து பள்ளி தலை​மை​யாசிரியர்​களும் செயல்பட வேண்​டும்​. இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.


இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil https://www.agriexam.in/2026/01/5.html?m=1 Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

ஜன. 28-ல் கரூர் வட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

     

ஜன.28 உள்ளூர் விடுமுறை!

dinamani%2F2026-01-26%2F4yobkeqp%2FKAR-thanthondri-malai-perumal-temple-ed

தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி நன்னீராட்டு விழாவை முன்னிட்டு ஜன.28-ம் தேதி *கரூர் வட்டத்திற்கு* உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக பிப்.7-ம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக செயல்படும் என ஆட்சியர் அறிவிப்பு

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil https://www.agriexam.in/2026/01/5.html?m=1 Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

திறன் - முழு ஆண்டுதேர்வு வரை நடைபெறும் : Monthly Exam Schedule

     திறன் - முழு ஆண்டுதேர்வு வரை நடைபெறும் :


அனைவருக்கும் வணக்கம் 


🟣 ஜனவரி மாதம் தேர்வு


 28-1-26 தமிழ்

 29-1-26 ஆங்கிலம்

 30-1-26 கணக்கு


*அனைத்து திறன் மாணவர்களும் எழுத வேண்டும்


🟢 பிப்ரவரி மாதம் - 25-2-26 தமிழ்

*26-2-26 ஆங்கிலம்

*27-2-26 கணக்கு

அனைத்து திறன் மாணவர்களும் எழுத வேண்டும்


✅ தேர்ந்தெடுக்கப் பட்ட திறன் மாணவர்கள் அனைவருக்கும் தொடர்ந்து திறன் பயிற்சி புத்தகம் - அடிப்படையில் பயிற்சி வழங்க வேண்டும்.


✅ அரையாண்டு தேர்வில் அடிப்படை கற்றல் விளைவு அடைந்த மாணவர்கள், அடுத்த நிலையான வகுப்பு நிலைக்கு செல்லலாம்.


✅ எனினும் மாதாந்திர தேர்வில்*, அனைத்து திறன் மாணவர்களும் தேர்வு எழுத வேண்டும்.


✅  மேற்கண்ட செயல்முறைகளில் உள்ள வழிகாட்டுதல் படி அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி, உயர் நிலை பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளும் 6,7,8,9 வகுப்பு மாணவர்களுக்கு உரிய திறன் சார்ந்த செயல்பாடுகளை திட்டமிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.


✅ தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் மேற்கண்ட தகவல் வழங்கப்படுகிறது.





இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil https://www.agriexam.in/2026/01/5.html?m=1 Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

உயர் கல்வியே எங்கள் இலக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசின், பள்ளி கல்வித் துறையின் நான் முதல்வன் பிரிவு வெளியிட்டுள்ள நாட்காட்டி!

அரசு ஊதிய விகிதத்தில் காலியாக உள்ள கீழ்க்காணும் நிரந்தர பட்டதாரி ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

     

 நாடார் சரசுவதி மேல்நிலைப்பள்ளி

(அரசு உதவி பெறும் பள்ளி)

ஆசிரியர்கள் தேவை


அரசு ஊதிய விகிதத்தில் காலியாக உள்ள கீழ்க்காணும் நிரந்தர பட்டதாரி ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

157957

தகுதியுள்ள நபர்கள் 30-01-2026 க்குள் சுயவிபரத்துடன் உரிய கல்விச்சான்று நகல்களை பள்ளிச் செயலருக்கு அனுப்பவும்

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil https://www.agriexam.in/2026/01/5.html?m=1 Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிக் கட்டணத்தை நிர்ணயிக்க பெற்றோர்களுக்கு உரிமை; சட்டமுன்வடிவு நிறைவேற்றம்

     

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளின் கட்டணத்தை நிர்ணயிக்கும் சட்டம் 2009-ம் ஆண்டு ஏற்றப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், இச்சட்டத்தின் முக்கிய திருத்தத்தை தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ளது. அதற்கான சட்டமுன்வடிவு இன்று (ஜனவரி 24) சட்டமன்ற பேரவையில் நிறைவேறியது.



தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை நிர்ணயிப்பதில் இனி பெற்றோர்களும் முடிவு எடுக்கலாம். தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை தாக்கல் செய்த ”தமிழ்நாடு பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்தல் திருத்தச் சட்டமுன்வடிவு - 2026 நிறைவேற்றப்பட்டது.

விண்ணை தொடும் தனியார் பள்ளிகளின் கட்டணம்
தேசிய அளவில் தனியார் பள்ளிகளுக்கான கட்டணம் என்பது விண்ணை தொடும் அளவில் உள்ளது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் எல்.கே.ஜி முதல் தொடக்கப்பள்ளிகளிலேயே லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை முறைப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்தல் சட்டம் 2009 அமல்படுத்தப்பட்டது.

தனியார் பள்ளிகள் கட்டணத்தை நிர்ணயிக்க குழு
இச்சட்டத்தின் அடிப்படையில் தனியார் பள்ளிகள் கட்டணம் நிர்ண குழு உருவாக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தின் ஓய்வுப் பெற்ற நீதிபதியின் தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளின் கட்டணத்தை 3 ஆண்டுகளுக்கு நிர்ணத்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இக்குழு கட்டணம் நிர்ணயிக்க அதிகாரம் உள்ள நிலையில், வழக்குகளின் காரணத்தினால் சிபிஎஸ்இ மற்றும் இசிஎஸ்இ பள்ளிகளுக்கான கட்டணம் நிர்ணயம் இக்குழுவின் கீழ் வருவதில்லை.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil https://www.agriexam.in/2026/01/5.html?m=1 Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

28.01.2026 - புதன்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

     திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ராஜகோபாலசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு வரும் 28ம் தேதி நடைபெற உள்ளதால், மாவட்டம் முழுவதும் புதன்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

168754


இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil https://www.agriexam.in/2026/01/5.html?m=1 Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

அரசு ஊதிய விகிதத்தில் காலியாக உள்ள கீழ்க்காணும் நிரந்தர பட்டதாரி ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

     நாடார் சரசுவதி மேல்நிலைப்பள்ளி

(அரசு உதவி பெறும் பள்ளி)

ஆசிரியர்கள் தேவை


அரசு ஊதிய விகிதத்தில் காலியாக உள்ள கீழ்க்காணும் நிரந்தர பட்டதாரி ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

157957

தகுதியுள்ள நபர்கள் 30-01-2026 க்குள் சுயவிபரத்துடன் உரிய கல்விச்சான்று நகல்களை பள்ளிச் செயலருக்கு அனுப்பவும்


இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil https://www.agriexam.in/2026/01/5.html?m=1 Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

THIRAN Targeted Help for Improving Remediation & Academic Nurturing) இயக்கத்தைப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்.

     

பள்ளிக் கல்வி 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு எண் 01 அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களின் மொழிப் பாடத்திறன் மற்றும் கணிதத் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் பொருட்டு "திறன்" (THIRAN Targeted Help for Improving Remediation & Academic Nurturing) இயக்கத்தைப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்...

DEE & DSE Proceedings - Download here

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil https://www.agriexam.in/2026/01/5.html?m=1 Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

பொதுத் தேர்வு முகப்பு தாட்கள் (Top Sheets) தைக்கும் பணி தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் வழிகாட்டு நெறிமுறைகள்!

3ஆவது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு

     

1608983ஆவது பிரசவத்திற்கும் விடுப்பு


பெண் ஊழியர்களின் 3ஆவது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவு.


உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் பி.மங்கையர்கரசி என்பவர் தொடர்ந்த வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு.


அனைத்து துறை செயலாளர்களுக்கும் இந்த உத்தரவு நகலை அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil https://www.agriexam.in/2026/01/5.html?m=1 Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

Ennum Ezhuthum - 1 To 5th Std - Term 3 - ( Set - 4 ) Lesson Plan - T/M & E/M

     

Ennum Ezhuthum Lesson Plan | 2025 - 2026


Term III Lesson Plan

January - 2026

SET : 4

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 3 - ( Set - 4 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 3 - ( Set - 4 ) Lesson Plan - E/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 3 - ( Set - 4 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 3 - ( Set - 4 ) Lesson Plan - E/M - Download here

Ennum Ezhuthum Lesson Plan | 2025 - 2026

👇👇👇
Full Lesson Plan - Click here

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil https://www.agriexam.in/2026/01/5.html?m=1 Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

சத்துணவு , அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு! முதல்வரின் அறிவிப்புகள் என்னென்ன?

     

சத்துணவு , அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு! முதல்வரின் அறிவிப்புகள் என்னென்ன?


தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு அளித்த பதிலுரையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.


பேரவையில் அவர் பேசியதாவது:


"கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 2 லட்சம் வீடுகள் உருவாகியுள்ள நிலையில் ரூ. 3,500 கோடியில் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும்.


கிராமப்புற ஊரக சாலைகளை மேம்படுத்தும் பொருட்டு ரூ.1,088 கோடியில் 2,200 கி.மீ. கிராம சாலைகள் மேம்படுத்தப்படும்.


மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கைம்பெண்கள், விவசாயிகள், ஆதரவற்ற பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில் மேலும் 1.80 லட்சம் பேருக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும்.


சத்துணவு அமைப்பாளர்கள் , அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ. 2,000-ல் இருந்து ரூ. 3,400 ஆகவும் பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் தொகை ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.


சத்துணவு அமைப்பாளர்கள் , அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலாளர்கள் இறந்தால் குடும்பத்திற்கு ரூ. 1,200 ஓய்வூதியம் வழங்கப்படும்.



தூய்மைப் பணியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் ரூ. 2,000-ல் இருந்து ரூ. 3,000 ஆகவும் பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் தொகை ரூ. 50,000 -லிருந்து ரூ. 1 லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும். இவர்களில் இறப்பு ஏற்பட்டால் குடும்ப ஓய்வூதியம் ரூ. 1,100 வழங்கப்படும்.


பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு, அவர்கள் கோரிய விடுமுறை கால மே மாத ஊதியம் ஆகியவை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் அடுத்த கோரிக்கையான நிரந்தர பணி நியமனத்தை பொருத்தவரை ஓர் அறிவிப்பை நான் வெளியிடுகிறேன்.


அரசுப் பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்பும்போது பகுதிநேர ஆசிரியர்கள் நிரந்தர ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட ஏதுவாக, இதற்கான தேர்வுகளில் அவர்களின் பணிக் காலத்தை அடிப்டையாகக் கொண்டு அவர்களுக்குசிறப்பு மதிப்பெண் வழங்கப்படும். அதனடிப்படையில் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். இதற்கான ஆணைகள் விரைவில் வெளியிடப்படும்.


இவ்வாறு அவர் பேசினார்.


இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil https://www.agriexam.in/2026/01/5.html?m=1 Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க