இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் 226 செவிலியர் பணியிடங்கள் – பி.எஸ்சி நர்சிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

  Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

அரசு மருத்துவ கல்லூரியில் 226 செவிலியர் பணியிடங்கள் – நவம்பர் 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (IGMCRI) சார்பில் 226 Nursing Officer (Group B) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி

பணியிடம்: கதிர்காமம், புதுச்சேரி


📢 மொத்த காலியிடங்கள்: 226

பிரிவின்படி இடஒதுக்கீடு:

  • பொது: 90
  • EWS: 22
  • MBC: 40
  • OBC: 26
  • EBC: 4
  • BCM: 5
  • SC: 35
  • ST: 2
  • PwD: 2
    (இதில் 10 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான உள் ஒதுக்கீடாக ஒதுக்கப்பட்டுள்ளது)

🎓 கல்வித் தகுதி:

  • B.Sc Nursing அல்லது
  • Diploma in GNM (General Nursing & Midwifery) முடித்திருக்க வேண்டும்.
  • மேலும், ஏதேனும் ஒரு மாநில Nursing Council-இல் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு (as on 06.11.2025):

  • பொதுப்பிரிவினர்: 18 முதல் 35 வயது வரை
  • MBC/OBC/EBC/BCM/BT பிரிவினர்: +3 ஆண்டு தளர்வு
  • SC/ST பிரிவினர்: +5 ஆண்டு தளர்வு

 விண்ணப்பக் கட்டணம்:

  • SC/ST: ₹125
  • மற்ற பிரிவினர்: ₹250
    (Demand Draft “Director, Indira Gandhi Medical College, Puducherry” என்ற பெயரில் எடுக்க வேண்டும்)

⚙️ தேர்வு முறை (Selection Process):

மொத்த மதிப்பெண்கள் – 120 Marks

  • மேல் நிலைப் படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் 50%
  • Nursing படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் 50%
  • வேலைவாய்ப்பு அலுவலக மூப்பு அடிப்படையில் ஆண்டுக்கு 1.5 மதிப்பெண் (அதிகபட்சம் 10 ஆண்டிற்கு 15 மதிப்பெண்)
  • COVID-19 பணியாளர்களுக்கு ஊக்க மதிப்பெண்:
    • 100 நாட்கள்–1 ஆண்டு பணி: 2 மதிப்பெண்
    • 1.5 ஆண்டு: 3 மதிப்பெண்
    • 2 ஆண்டு: 4 மதிப்பெண்
    • 2 ஆண்டுக்கும் மேல்: 5 மதிப்பெண்
    • முக்கிய தேதிகள்:
  • விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: தற்போது தொடங்கியுள்ளது
  • கடைசி நாள்: 🗓️ 06 நவம்பர் 2025 மாலை 5.00 மணி வரை

 விண்ணப்பிக்கும் முறை:

1️⃣ https://igmcri.edu.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யவும்.
2️⃣ பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
3️⃣ விண்ணப்பத்தை நேரிலோ அல்லது பதிவு தபால் மூலமோ அனுப்பவும்:

முகவரி:
இயக்குநர்,
இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்,
வழுதாவூர் சாலை,
கதிர்காமம்,
புதுச்சேரி – 605 009.

 அதிகாரப்பூர்வ இணையதளம்:

👉 https://igmcri.edu.in

முக்கிய குறிப்பு:

  • விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள்: 06.11.2025 மாலை 5 மணி வரை.
  • விண்ணப்பங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
  • தவறான அல்லது முழுமையற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

ஈரோடு & நாகை மாவட்டங்களில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் – 10ம் தேதி நடைபெறுகிறது! அனைத்து தகுதிகளும் விண்ணப்பிக்கலாம்

  Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)


ஈரோடு மற்றும் நாகை மாவட்டங்களில் அக்டோபர் 10ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையங்கள் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அக்டோபர் 10, 2025 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது.
இந்த முகாமில் பல்வேறு துறைகளில் பணியாற்ற தனியார் நிறுவனங்கள் நேரடியாக வேட்பாளர்களை தேர்வு செய்யவுள்ளன.

முகாம் நடைபெறும் இடம்:
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம்

நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை

📢 தகுதி:
எழுதப் படிக்க தெரிந்தவர்கள் முதல் பட்டப்படிப்பு பெற்றவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்.

தொடர்பு எண்: 86754-12356

தனியார் நிறுவனங்கள் பல்வேறு பிரிவுகளில் ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளன. அதனால், தகுதியுள்ள அனைவரும் நேரடியாக கலந்துகொள்ளலாம்.

நாகை மாவட்டம்:

முகாம் நடைபெறும் இடம்:
நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம்


நேரம்: காலை 9.00 மணி முதல் மதியம் வரை

📢 நாகை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் அவர்கள் வெளியிட்ட தகவலின்படி, இந்த முகாமில் நாகை மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து 25-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
மொத்தம் 500-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன.

தகுதிகள்:

  • 5ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை
  • டிப்ளமோ / ஐடிஐ / பி.இ / பட்டதாரிகள்
  • வயது வரம்பு: 18 முதல் 35 வயது வரை

💼 முகாமில் வழங்கப்படும் வாய்ப்புகள்:

  • திறன் மேம்பாட்டு பயிற்சி (Skill Training)
  • சுயதொழில் தொடங்க வங்கிக் கடன் வழிகாட்டுதல்
  • அயல் நாட்டில் வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்கள்
  • காவலர் தேர்வு வழிகாட்டுதல்

    அணிய வேண்டிய ஆவணங்கள்:

    • சுயவிவர அறிக்கை (Resume)
    • கல்விச்சான்றுகள் நகல்
    • ஆதார் அட்டை
    • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
    • அனுபவச் சான்றிதழ் (இருப்பின்)

    📞 மேலும் தகவலுக்கு:
    நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மையம் – 04365-252701



    🔔 முக்கிய குறிப்பு:

     அதிகாரப்பூர்வ இணையதளங்கள்:

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

ஆதிதிராவிடர் பள்ளிகளில் 2,075 பணியிடங்கள் காலி

  Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

தமிழகத்தில் ஆதிதிராவிடர் பள்ளிகளில் 2,075 பணியிடங்கள் காலி மாணவர்களின் கல்வித்தரம் , எதிர்காலம் பாதிக்கும் அபாயம்


தமிழகம் முழுவதும் உள்ள 1,138 ஆதிதிராவிடர் பள்ளிகளில் கடந்த பல ஆண்டாக 360 தலைமை ஆசிரியர்கள் உள்பட 2,075 பணியிடங்கள் காலியாக உள்ளன. நிரந்தர ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக தொகுப்பூதிய ஆசிரியர்களை கொண்டு சமாளிப்பதால், ஆதிதிராவிடர் மாணவர்களின் கல்வி தரமும், அவர்கள் எதிர்காலமும் பாதிக்கும் அபாயம் உள்ளது.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கடந்த 1988-ம் ஆண்டு சமூக நலத் துறையிலிருந்து பிரிந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் கல்வியறிவு, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டையும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இத்துறையின் கீழ் 833 தொடக்கப்பள்ளிகள், 99 நடுநிலைப் பள்ளிகள், 108 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 98 மேல்நிலைப் பள்ளிகள் உள்பட மொத்தம் 1,138 எண்ணிக்கையிலான பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த 2024-25 கல்வியாண்டின் நிலவரப்படி மொத்தம் 98,124 மாணவர்கள், இப்பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர்.

இதே 2023-24 கல்வியாண்டில் 1.01 லட்சமும், 2022-23 கல்வியாண்டில் 1.06 லட்சமும், 2021-22 கல்வியாண்டில் 1.23 லட்சமாக மாணவர்களின் எண்ணிக்கை இருந்து வந்ததது. கடந்த காலங்களை ஒப்பிடும்போது மூன்றே ஆண்டுகளில் சுமார் மாணவர்களின் எண்ணிக்கை 2.5 லட்சம் குறைந்துள்ள தகவல், மதுரை கே.கே.நகரை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் கார்த்திக் சேகரித்த ஆர்டிஐ தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இது குறித்து கார்த்திக் கூறுகையில், ‘‘மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்ததற்கு நிரந்தர ஆசிரியர்கள் பற்றாகுறை, தகுதியுமில்லாத தற்காலிக தொகுப்பூதிய ஆசிரியர்களைக் கொண்டு பள்ளி செயல்படுவதே முக்கிய காரணம். இதுதொடர்பாக ஆதிதிராவிடர் நல ஆணையராகத்தின் ஆர்.டி.ஐ மூலமாக பல்வேறு புள்ளி விவரங்கள் கிடைத்துள்ளன. இப்பள்ளிகளில் 360 தலைமை ஆசிரியர்கள், 483 பட்டதாரி ஆசிரியர்கள், 1060 இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிட்ட மொத்தம் 2075 பணியிடங்கள் காலியாக உள்ளன. உண்மைநிலை இப்படியிருக்க, 875 பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளதாக அரசு மழுப்பல் தகவல்களை கொடுக்கின்றனர்.

.

ஆதிதிராவிடர் நலத்துறைக்கு வழங்கப்படும் நிதியை முறையாகவும், முழுமையாகவும் கல்விக்கென்று செலவு செய்வதை அரசு தவிர்த்து வருகிறது. இதன் எதிரொலியாக நிரந்தர ஆசிரியர்களை பணியமர்த்த முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்கள் நியமித்தால் செலவு ஏற்படும் என்று, குறைந்த சம்பளத்தில் பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலமாக திறமையும், தகுதியுமில்லாத 829 பேரை தற்காலிக தொகுப்பூதிய சம்பளத்தின் அடிப்படையில் வெறும் ரூ.8,73,00,000 (எட்டு கோடியே எழுபத்தி மூன்று லட்சம்) மட்டுமே ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டு தேர்தெடுத்துள்ளனர்.

தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.18,000-ம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.15,000-ம், இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.12,000-ம் ஊதியம் வழங்குகின்றனர். சிறந்த அடிப்படைக் கல்வி கிடைக்காமல் ஆதிதிராவிடர் மாணவர்கள் கடும் சிரமத்தையும் சவால்களையும் சந்தித்து வருகின்றனர்.

இப்பள்ளிகளில் பணியாற்றுவதற்காக தலைமை ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், கணினி பயிற்றுனர்கள் என்று மொத்தம் 5,995 நிரந்தர பணியாளர்கள் பணியிடங்கள் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், நிர்ணயிக்கப்பட்ட 5,995 நிரந்தர பணியாளர்கள் பணியிடங்களில் இதுவரை 2,075 பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பபடாமல் உள்ளது’’ என்றார்.

IMG-20251008-WA0008


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

நடப்பு கல்வியாண்டு பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுவிட்டன. மீதமுள்ள பணிகளும் டிசம்பருக்குள் முடிக்கப்படும் - அமைச்சர்

  Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)


கல்விக்கான நிதியை ஒதுக்குவதில் பல்வேறு விதிமுறைகள் வகுத்து குழந்தைகளின் நலனில் மத்திய அரசு விளையாட வேண்டாம் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.


நடப்பு கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்த 179 தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார். அதேபோல் இந்த நிகழ்ச்சியில் டிஎன்பிஎஸ்சி மூலமாக பள்ளிக் கல்வித் துறைக்கு தேர்வு செய்யப்பட்ட 167 உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளன.


இந்த விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேசுகையில், “அரசுப் பள்ளிகளில் கடந்த ஜூலை 30ம் தேதி வரை 4.03 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அடுத்த கல்வியாண்டில் இது இரு மடங்காக மாற வேண்டும்” என்றார். இந்த நிகழ்வின் போது பள்ளிக் கல்வித் துறை செயலர் பி.சந்தர மோகன், இயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.நரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மகேஸ் கூறியது: “நடப்பு கல்வியாண்டு பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுவிட்டன. மீதமுள்ள பணிகளும் டிசம்பருக்குள் முடிக்கப்படும். 2021, 2022, 2023ம் ஆண்டுகளுக்கான நிதியை தான் தற்போது மத்திய அரசு வழங்கியுள்ளது. பொதுவாகவே மத்திய அரசு நிதியை தாமதமாகவே வழங்கும். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாகவே பல்வேறு காரணங்களை கூறி நிதியை வழங்காமல் இருக்கின்றனர்.


அதையும் கடந்து துறைசார்ந்த பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அதேநேரம் இந்த ஆண்டு வரவேண்டிய நிதி இன்னும் வராமல் இருப்பதால் ஒரு குழப்பமான நிலையை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வழக்கு நீதிமன்றத்துக்கு சென்றால் அவர்களுக்கு ஏற்ற தீர்ப்பு வராது என்று தெரிந்துகொண்டு தற்போது நிதியை விடுவித்துள்ளனர்.


நிதியை ஒதுக்குவதில் பல்வேறு விதிமுறைகள் வகுத்து குழந்தைகளின் எதிர்காலத்தில் மத்திய அரசு விளையாட வேண்டாம். ஆர்டிஇ மூலம் கடந்த கல்வியாண்டில் இணைந்த மாணவர்களிடம் பெற்ற கல்விக் கட்டணத்தை மீண்டும் பெற்றோர்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என தனியார் பள்ளிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று அன்பில் மகேஸ் கூறினார்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

AA கணக்குத் தலைப்பில் மட்டுமே செலவினம் மேற்கொள்ள பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!

  Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
IMG_20251008_130611

இணைப்பு (Merge) செய்யப்பட்ட கணக்குத் தலைப்புகளில் மீளவும் செலவினம் மேற்கொள்ளப்பட்டு வருதல் - AA கணக்குத் தலைப்பில் மட்டுமே செலவினம் மேற்கொள்ள  பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!

DSE - Merging of Certain Heads - Proceedings - Download here


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பள்ளிக் கல்வித் துறையில் உள்ள தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றம் செய்த அரசாணையில் திருத்தங்கள் மேற்கொண்டு புதிய அரசாணை வெளியீடு!

  Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)


IMG_20251008_173633


பள்ளிக் கல்வித் துறையில் உள்ள தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றம் செய்த அரசாணையில் திருத்தங்கள் மேற்கொண்டு புதிய அரசாணை வெளியீடு!

G.O.Ms.No.215 - Post Permanent - Amendment.pdf

👇👇👇👇

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

துணைத் தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் 13.10.2025 முதல் பெற்றுக் கொள்ளலாம் - DGE செய்திக் குறிப்பு!

  Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

துணைத் தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் 13.10.2025 முதல் பெற்றுக் கொள்ளலாம் - DGE செய்திக் குறிப்பு!


நடைபெற்ற ஜூன் / ஜூலை 2025 , இடைநிலை / மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை / மதிப்பெண் பட்டியல்களை : 10.2025 ( திங்கட்கிழமை ) முதல் , அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம் . மேலும் , கூடுதல் விவரங்களை தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

10, 11 & 12 Supplementary Examination - Certificate

IMG_20251008_175834


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamilKalvi (கல்வி) )  

STEM - மாணவர்களுக்கான அறிவியல் சார்ந்த கல்விச் சுற்றுலா - வழிகாட்டுதல்கள் - SPD Proceedings

  Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)


மாணவர்களுக்கான அறிவியல் சார்ந்த கல்விச் சுற்றுலா செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் நிதி விடுவித்தல் சார்ந்து SPD செயல்முறைகள்!


Click Here to Download - SPD - RAA-STEM Exposure Visit - Proceedings - Pdf

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்!

       Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)


தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை அறிவித்துள்ளார்

அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:


”இந்தியத் திருநாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமிக்க மாநிலமாக தமிழ்நாட்டை நிலைநிறுத்துவதில் தொழிலாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். இவர்களின் உழைப்பின் பலனாக தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியை மட்டுமல்லாது. அந்நிய முதலீடுகளையும் ஈர்த்துவருகிறது.


2024-25ஆம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதமான 9.69 சதவீதம் என்பது நாட்டின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மிக உயர்ந்ததாகும் என்பதோடு கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாடு பெற்றிருக்கும் மிக உயர்ந்த வளர்ச்சியுமாகும். இவ்வளர்ச்சியை எட்டுவதில் அரசுத் துறை, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்கள் மற்றும் அலுவர்கள் அனைவரின் அயராத உழைப்பும் அர்ப்பணிப்பும் முக்கிய பங்களிப்பாக அமைந்துள்ளது.





பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மாநிலத்தின் முன்னேற்றத்திற்குத் தூண்களாக திகழ்கிறார்கள். மேலும், நாட்டில் பெண்கள் அதிக அளவில் பணியாற்றும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகமும் திகழ்கிறது பெண்கள் அதிகாரமடையவும். சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை அடையவும் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டமான “விடியல் பயணம்" திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதுடன் எளிதில் ஏற்கக்கூடிய குறைந்த வாடகையில் பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள் பல இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. மேலும், மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகளின் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் சக்தியே ஒரு நாட்டை உயர்த்தும் என்பதையும், உற்பத்தியைப் பெருக்கி பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் இவர்களின் பங்கு முக்கியமானது என்பதையும் கருத்தில் கொண்டு, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் வகையில் 2024-25 ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையை வழங்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


திருத்தப்பட்ட போனஸ் சட்டம், 2015 படி மிகை ஊதியம் பெறத் தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ. 21,000 எனவும், இதன்படி மிகை ஊதியம் கணக்கிட மாதாந்திர சம்பள உச்சவரம்பு ரூ. 7,000 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி உச்சவரம்பை தளர்த்தி அனைத்து சி மற்றும் டி பிரிவு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் 2024-25 ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை கீழ்வருமாறு வழங்கப்படும்

1. லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களின் ஒதுக்கப்படக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.


2. தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுரியும் தகுதியுடைய சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்


3. ஒதுக்கக்கூடிய உபரி தொகை இல்லாத பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு குறைந்தபட்ச மிகை ஊதியம் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 10 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.



4. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் ஆகியவற்றில் பணிபுரியும் தகுதியுடைய சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை வழங்கப்படும்.


5. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் தகுதியுடைய சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் வழங்கப்படும்.


6. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ. 3,000 கருணைத் தொகையாக வழங்கப்படும்.


இதனால், மிகை ஊதியம் பெறத் தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ. 8,400 மற்றும் அதிகபட்சம் ரூ. 16,800 வரை பெறுவர்.


மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2,69,439 தொழிலாளர்களுக்கு மொத்தம் ரூ. 376.01 கோடி மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்படும்.


இது தவிர, பல்வேறு கூட்டுறவு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான ஆணைகள் தனியே வெளியிடப்படும்.


அரசின் இந்த நடவடிக்கை. பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மேலும் ஊக்கத்துடன் செயல்படவும். எதிர்வரும் விழாக்காலங்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடவும் வழிவகை செய்யும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.



Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Ennum Ezhuthum - 4 To 5th - Term 2 - Teachers Hand Book ( 2025 - 2026 ) - All Subject Pdf

       Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)


எண்ணும் எழுத்தும் - ஆசிரியர்களுக்கான இரண்டாம் பருவ கையேடு

Ennum Ezhuthum - 4 To 5th - Term 2 - Teachers Hand Book ( 2025 - 2026 ) - All Subject Pdf 

👇👇👇

Tamil THB - Download here

English THB - Download here

Maths THB - Download here

Science THB - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )