நீட் தேர்வில் தேர்ச்சி பெற உதவும் 8 வழிகள் - மாணவர்களுக்கான டிப்ஸ்

   Education News (கல்விச் செய்திகள்)
இளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு வரும் மே 4-ம் தேதி தேசிய அளவில் ஒரே நேரத்தில் நடைபெற உள்ளது. இத்தேர்வை எழுத சுமார் 23 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நீட் தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் துரிதமாக படிக்க கடைபிடிக்க வேண்டிய சில வழிகளை என்னென்ன என்பதை பார்க்கலாம்.

NCERT புத்தகங்கள்

முதலாவதாக, நீட் தேர்வில் NCERT புத்தகங்களை மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. அவற்றை நன்றாக படிப்பது அவசியமாக உள்ளது. ஏனென்றால், NEET தேர்வில் 80-90% கேள்விகள் NCERT புத்தகங்களில் இருந்துதான் கேட்கப்படுகின்றன. குறிப்பாக உயிரியல் பாடத்தை கவனமாக படிக்கவும்.

திட்டமிட்டு படிப்பது

இரண்டாவதாக, திட்டமிட்டு படிக்க வேண்டும். தினமும், வாரம், மாதம் என இலக்குகளை நிர்ணயித்து படிக்கவும். நீட் தேர்விற்கான முழுமையான பாடங்களை பிரித்து காலக்கெடு வைத்து படிப்பது சிறந்த முறையாகும். எந்ததெந்த பாடங்களுக்கு முக்கியதுவம் கொடுக்க வேண்டும் என்பதை தெளிவுப்படுத்த உதவும்.

எந்த பாடத்தில் பலவீனமாக இருக்கிறீர்களோ, அதில் அதிக கவனம் செலுத்துங்கள். திட்டமிட்டு படிப்பது அவசியம் ஆகும்.

உயிரியல் பாடம்

மூன்றாவதாக, உயிரியல் படங்களை வரைந்து பயிற்சி செய்யுங்கள். தினமும் 15 முதல் 30 நிமிடங்கள் வரை படங்களை வரைந்து, பாகங்களை குறிக்க பயிற்சி செய்யுங்கள். இதன் மூலம் கருத்துக்களை நன்றாக புரிந்து கொள்ள முடியும்.

நான்காவதாக, உங்கள் பலவீனமான பகுதியை கண்டுபிடிக்க வேண்டும். உதாரணமாக, இயற்பியலில் கணக்குகள் போடுவதில் அல்லது கனிம வேதியியலில் உங்களுக்கு சிரமம் இருக்கலாம். அந்த பகுதிகளில் அதிக கவனம் செலுத்துங்கள். பலவீனமான பகுதியை கண்டறிந்து, அதை முடிந்தவரை சரிசெய்யவது அவசியமாகும்.

மாதிரி தேர்வுகள் முக்கியம்

ஐந்தாவதாக, மாதிரி தேர்வுகள் எழுத வேண்டும். மாதிரி தேர்வுகளை எழுதி, முந்தைய ஆண்டு நீட் கேள்வித்தாள்களையும் பயிற்சி செய்யுங்கள். இதன் மூலம் நீங்கள் எந்த பாடங்களில் தெளிவாக உள்ளீர்கள், எதனை மீண்டும் படிக்க வேண்டும் என்பவை உறுதிபடுத்திகொள்ள முடியும். மேலும், தேர்வின் நேர மேலாண்மை மற்றும் பதற்றத்தை குறைக்க உதவும்.
நேர மேலாண்மை

ஆறாவதாக, நேரத்தை சரியாக நிர்வகிக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும் எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்று திட்டமிட்டு, கடிகாரத்தை வைத்து பயிற்சி செய்யுங்கள். "நேரத்தை சரியாக நிர்வகிப்பது முக்கியம்".

தினசரி பயிற்சி
ஏழாவதாக, தினமும் படித்ததை நினைவு கூற வேண்டும். பார்முலாஸ், கான்செப்ட் மற்றும் முக்கியமான கோட்பாடுகளை தினமும் நினைவு கூறுங்கள். இதன் மூலம் படித்தது மறக்காமல் இருக்கும்.

ஆரோக்கியமான உணவு


எட்டாவதாக, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். சரியான தூக்கம், சத்தான உணவு மற்றும் உடற்பயிற்சி ஆகியவை அவசியம். இது மன அழுத்தத்தை குறைத்து, கவனத்தை அதிகரிக்க உதவும்
.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) ) 

NEET Topper Tips : நீட் தேர்வில் முதல் இடம் பிடித்தவர் எப்படி படித்தார்? அதிக மதிப்பெண்கள் எடுக்க டாப்பர் அட்வைஸ்

 NEET Exam 2019 Topper Tips to Study : இந்தியாவில் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 24 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வை எழுதி வருகிறார்கள். எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், இந்திய மருத்துவப் படிப்புகள், கால்நடை மருத்துவம் என இளநிலை நீட் தேர்வு அவசியாக உள்ளது. 2019-ம் வருடம் முதல் இளநிலை நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தி வருகிறது. முதல் ஆண்டு என்டிஏ நடத்திய தேர்விற்கு எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்தது. அந்த வகையில், அந்த ஆண்டும் தேசிய அளவில் ராஜஸ்தானை சேர்ந்த மாணவர்கள் ஒரு 720 மதிப்பெண்களுக்கு 701 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார்.


இந்தியா அளவில் ஒட்டுமொத்த பார்வையும் அந்த மாணவர் பக்க திரும்பியது. பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்திய நீட் அந்த ஆண்டு தேசிய தேர்வு முகமையினால் நடத்தப்பட்டது. மிக கடினமான தேர்வு என கருதப்பட்ட நிலையில், முதல் முறையே இந்தியாவிலே முதல் இடம் பிடித்து நளின் கண்டேல்வால் என்ற மாணவர் அசத்தி இருந்தார். இந்நிலையில், நீட் தேர்வை எழுத உள்ள மாணவர்களுக்கு அவர் எப்படி படித்தார் என்பது குறித்து டிப்ஸ் கொடுத்துள்ளார்.

இந்தியாவிலே முதல் இடம்

ராஜஸ்தான் மாநிலத்தில் சிகார் என்ற மாவட்டத்தை சேர்ந்தவர் நளின் கண்டேல்வால். 2019-ம் ஆண்டு நீட் தேர்வில் 701 மதிப்பெண்கள் பெற்ற அவர், தற்போது டெல்லியில் உள்ள தலைசிறந்த மருத்துவ கல்லூரியான மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து 4 வருடத்தில் உள்ளார். மெடிக்கல் இண்டன் ஆக பணியாற்றி வரும் அவர், தான் எப்படி நீட் தேர்விற்கு எப்படி தயாராகினார் என்பதை பற்றி கூறியதை அறிந்துகொள்ளலாம். இது தற்போது நீட் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்.

13 மணி நேரத்திற்கு படிப்பு
நளின் ஒரு நாளுக்கு சுமார் 12 முதல் 13 மணி நேரத்திற்கு படித்துள்ளார். மருத்துவர் ஆக வேண்டும் என விரும்பிய அவர், நீட் தேர்விற்காக ஜெய்பூரியில் உள்ள தனியார் பயிற்சி மையமான அலன் பயிற்சி மையத்தில் சேர்ந்து படிக்க தொடங்கினார். பயிற்சி மையத்தில் 6 மணி நேரம், தனியாக சுமார் 7 மணி நேரம் என ஒரு நாளுக்கு சுமார் 13 மணி நேரம் படித்துள்ளார்.

சோசியல் மீடியா தவிர்ப்பு

அடுத்தக்கட்டமாக அவர் சொல்லுவது, செல்போன் உபயோகம். சொந்தமாக அவருக்கு என்று ஸ்மார்ட்போன் கிடையாதாம். சோசியல் மீடியாவில் நேரம் செலவிடுவதை அறவே தவிர்த்துள்ளார்.

NCERT புத்தகங்கள்

நீட் தேர்வு NCERT பாடத்திட்டத்தின் அடிப்படையில் அமைகிறது. அவரி NCERT புத்தகங்கள் முழுமையாக படித்தாக கூறியுள்ளார். மேலும், மீண்டும் மீண்டும் படித்ததாகவும், முக்கியமான தலைப்புகள், குறிப்புகளை தனியாக எழுதி வைத்து படித்ததாகவும் கூறியுள்ளார்.



பழைய நீட் தேர்வு வினாத்தாள்கள்
அடுத்தக்கட்டமாக, நீட் தேர்வை அவருக்கு எளிமையாக்கியது பழைய வருட நீட் தேர்வு வினாத்தாள்கள். அனைத்து வினாத்தாள்களை முழுமையாக ஆராய்ந்து இதன் மூலம் வினாக்கள் எப்படி அமைப்பப்படுகிறது, அதிக கவனம் செலுத்தப்படும் தலைப்புகள், வினாத்தாள் அமைப்பு ஆகியவற்றை அறிந்துகொண்டதாக கூறியுள்ளார்.

இவை நீட் தேர்வில் வெற்றி பெற அவருக்கு உதவியதாக கூறியுள்ளார். நளின் பொறுத்தவரை, மருத்துவ குடும்பத்தில் இருந்து வந்தவர். அவரின் தந்தை டாக்டர். ராகேஷ் கண்டேல்வால் தனியார் மருத்துவமனையில் குழந்தை மருத்துவராக பணியாற்றி வருகிறார். அவரின் தாயார் டாக்டர் வனிதா கண்டேல்வால் மகப்பேறு மருத்துவர் ஆவார். நளின் சகோதரர் SNMC மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து வருகிறார்.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பில் 92 சதவீதம் மதிப்பெண்களும், 12-ம் வகுப்பில் 95.8 சதவீதம் மதிப்பெண்களும் எடுத்துள்ளார். பள்ளி படிப்பில் இருந்து கல்வியில் சிறந்து விளங்கி உள்ளார். படிப்பில் மட்டுமில்லாமல், விளையாட்டு, நடிப்பு, இசை ஆகியவற்றிலும் பள்ளி பருவத்தில் கலந்துகொண்டுள்ளார்.


MBBS சீட் கிடைக்க நீட் தேர்வில் எத்தனை மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்? கட்-ஆஃப் விவரங்கள் இதோ

   Education News (கல்விச் செய்திகள்)

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய தேர்வு முகமையினால் (NTA)நடத்தப்படும் நீட் தேர்வு (NEET UG 2025) கட்டாயமாகும். 2025-ம் ஆண்டு இளநிலை நீட் தேர்வு வரும் மே 4-ம் தேதி தேசிய அளவில் ஓஎம்ஆர் முறையில் நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு சுமார் 23 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், எம்.பி.பி.எஸ் சீட் பெற நீட் தேர்வில் எத்தனை மதிப்பெண்கள் தேவை, நீட் தேர்வு தேர்ச்சி மதிப்பண்கள் ஆகியவற்றை இந்த பதிவில் அறிந்துகொள்ளலாம்.

இளநிலை நீட் தேர்வு என்றால் என்ன?
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு சுருக்கமாக நீட் (NEET) எனக் குறிப்பிடப்படுகிறது. தேசிய அளவில் மருத்துவப் படிப்புகளில் சேர்க்கைக்கான தகுதித் தேர்வாக இத்தேர்வு நடத்தப்படுகிறது. எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் (NEET UG) கட்டாயமாகும். வெளிநாடுகளில் மருத்துவப் படிக்க விரும்புகிறவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 2019ஆம் ஆண்டு முதல் இளநிலை நீட் தேர்வு தேசிய தேர்வு முகமையினால் நடத்தப்படுகிறது.

என்னென்ன மருத்துவப் படிப்புகளில் சேரலாம்?
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் (MBBS), பி.டி.எஸ் (BDS), சித்தா (BAMS), யுனானி (BUMS), ஆயுர்வேத ( BSMS) மற்றும் ஹோமியோபதி (BHMS) ஆகிய படிப்பிற்கான சேர்க்கைக்கு நீட் அவசியமாகும். மேலும், செவிலியர் (B.Sc. Nursing), கால்நடை மருத்துவம் (BVSc & AH) ஆகிய படிப்புகளுக்கான சேர்க்கைக்கும் நீட் தேர்வு மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளப்படும்.

இளநிலை நீட் தேர்வு 2025
தேசிய தேர்வு முகமையின் https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் நீட் தேர்விற்கான அறிவிப்பு பிப்ரவரி 7-ம் தேதி முதல் வெளியாகி மார்ச் 7-ம் தேதி வரை பெறப்பட்டது. தொடர்ந்து விண்ணப்ப திருத்தம் மார்ச் 9 முதல் தொடங்கி மார்ச் 11-ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்விற்கு சுமார் 23 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

நீட் தேர்வு வினாத்தாள் Section A மற்றும் Section B என அமைக்கப்பட்டு இருக்கும். இந்தாண்டு முதல் Section B என்பது நீக்கப்படுகிறது. எனவே கேட்கப்படும் 180 கேள்விகளுக்கும் கட்டாயம் பதிலளிக்க வேண்டும். இயற்பியலில் 45 கேள்விகள், வேதியியலில் 45 கேள்விகள் மற்றும் உயிரியலில் 90 என மொத்தம் 180 கேள்விகள் இடம்பெறும். மொத்தம் 3 மணி நேரத்திற்கு மட்டுமே தேர்வு நடைபெறும். ஓஎம்ஆர் முறையில் தேசிய அளவில் ஒரே நேரத்தில் மே 4-ம் தேதி தேர்வு நடைபெறும்.


நீட் தேர்வு கட்-ஆஃப் மதிப்பெண்

நீட் தேர்வில் தேர்ச்சி பெறப் பொதுப்பிரிவினருக்கு 50 சதவீதம் (Percentile), எஸ்சி/எஸ்டி மற்றும் ஒபிசி பிரிவினருக்கு 40% மற்றும் பொதுப்பிரிவு/ பொருளாதாரத்தில் பின்தங்கிய மாற்றுத்திறனாளிகளுக்கு 45% தேர்ச்சி விகிதமாக வைக்கப்பட்டுள்ளது. தேர்ச்சி சதவீதத்தை பொறுத்து கட்-ஆஃப் மதிப்பெண்கள் மாறுப்படும்.
கடந்த ஆண்டு தரவுகள்படி, பொதுப் பிரிவு - 720 முதல் 162, ஒபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவு - 161 முதல் 127 ஆக கட்-ஆஃப் மதிப்பெண்கள் இருந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கு பொது பிரிவு - 161 முதல் 144, ஒபிசி, எஸ்சி,எஸ்டி பிரிவு - 143 முதல் 127 வரை இருந்தது. அதன் அடிப்படையில் இந்தாண்டுக்கான தேர்ச்சி அளவை பொறுத்து கட்-ஆஃப் மதிப்பெண்கள் மாறுப்படும்.


எம்.பி.பி.எஸ் கட்-ஆஃப் மதிப்பெண்கள்
அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு பொதுப் பிரிவில் 650 முதல் கட்-ஆஃப் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்டி, எஸ்சி பிரிவினருக்கு 500 அதிகமாகவும், பிசி, எம்பிசி பிரிவினருக்கு 600க்கு மேல் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனியார் கல்லூரிகளில் பொதுப்பிரிவினருக்கு 650 முதல் 700 வரை கட்-ஆஃப் மதிப்பெண்கள் அமையலாம். எஸ்சி, எஸ்டி பிரிவனருக்கு 550 முதல் இருக்கலாம். இதர பிரிவினருக்கு 600 முதல் கட்-ஆஃப் மதிப்பெண்கள் அமையலாம்.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) ) 

ஏப்ரல் -2025 மாத வருமானம் வரி பிடித்தம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமா?

   Education News (கல்விச் செய்திகள்)

.com/

ஏப்ரல் -2025 மாத வருமானம் வரி பிடித்தம் பற்றி தெரிந்து கொள்வதற்கு....

        

 *KALANJIYAM WEBSITE

                       ⬇️

                 *LOGIN

                       ⬇️

             *e service (HR & pin)

                        ⬇️

           *EMPLOYEE SELF SERVICE

                        ⬇️

                   *REPORT

                        ⬇️

*INCOME TAX PROJECTIONS  REPORT SELF SERVICE & CLICK ACTION BUTTON

                        ⬇️

*Write month name (Apr-2025) & *CLICK Continue button

                         ⬇️

               *CLICK  Submit

                          ⬇️

        (new screen)  *OK

                          ⬇️

*CLICK MONITORING REQUEST STATUS

                           ⬇️

        *CLICK VIEW OUTPUT

                           ⬇️

                     *DOWNLOAD

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) ) 

SR Verification form in Tamil

   Education News (கல்விச் செய்திகள்)

 SR Verification form in Tamil

👇👇👇👇

Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) ) 

அரசு ஊழியர்கள் புத்தகங்கள் எழுதி வெளியிட அனுமதி தேவையில்லை - தமிழக அரசு அறிவிப்பு

 Education News (கல்விச் செய்திகள்)

1500x900_43687102-untitled-1

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 1973-ன் கீழ் ஒரு அரசு ஊழியர் புத்தகங்களை வெளியிடுவதற்கு முன் அனுமதி பெறவேண்டும். மேலும், இலக்கியம், சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை மற்றும் கவிதை பற்றிய புத்தகங்களை எழுதும் அரசு ஊழியர்கள், பதிப்பகத்தாரிடமிருந்து ஊதியம் பெறும்போது உடனடியாக நிர்ணயிக்கப்பட்ட அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும் என்ற விதியும் உள்ளது.


தற்போது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இந்த விதியில் தமிழக அரசு சில திருத்தங்களை செய்துள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள், அரசின் செயல்பாடுகள் அல்லது கொள்கைகள் தொடர்பான புத்தகங்களைத் தவிர, இலக்கியம், சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை, கவிதை மற்றும் தொழில்முறை மற்றும் கல்வி சார்ந்த புத்தகங்களை எழுதி வெளியிடுவதற்கு முன்னரே அனுமதி பெற வேண்டியதில்லை. ஆனால் தகுதியான அதிகாரிக்கு முறைப்படி தகவல் தெரிவித்து இனி புத்தகங்களை வெளியிடலாம்.

அந்த புத்தகத்தில் மாநிலத்திற்கு எதிரான எந்தவொரு விமர்சனமோ, தாக்குதலோ இல்லை மற்றும் புத்தகத்தில் மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதிக்கும் எந்தவொரு ஆட்சேபனைக்குரிய உரையோ, உள்ளடக்கமோ இல்லை என்பதை உறுதிப்படுத்தும் ஒரு சுய அறிவிப்பையும் சமர்ப்பிக்க வேண்டும். புத்தகம் மூலம் பதிப்பகத்தாரிடம் இருந்து ஒருமுறை தொகை அல்லது ராயல்டி பெறுவதற்கு முன்னரே அனுமதி பெறவேண்டும்.


அரசு ஊழியர் தனது அலுவல் நேரம் அல்லது பதவி செல்வாக்கை பயன்படுத்தி புத்தக விற்பனையை ஊக்குவிக்கக்கூடாது. இந்த புத்தகம் அரசின் கொள்கை, செயல்பாடுகளை எதிர்க்காமல், சமூக ஒற்றுமையை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். இந்த சட்டத்திருத்தம் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளதால் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) ) 

ஆராய்ச்சி ஊக்குவிப்பு நிதியுதவி திட்டம்; மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம்: அறிவியல் தொழில்நுட்ப மன்றம் அறிவிப்பு

 Education News (கல்விச் செய்திகள்)

1358735

ஆராய்ச்சி ஊக்குவிப்பு நிதியுதவி திட்டத்தின் கீழ் 1,014 கல்லூரி மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றம் அறிவித்துள்ளது.


இது தொடர்பாக தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் உறுப்பினர்-செயலர் எஸ்.வின்சென்ட் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் உயர்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றம், முதுகலையில் கலை மற்றும் அறிவியல் படிப்புகள் மற்றும் இளங்கலையில் தொழில்முறை படிப்புகள் பயிலும் மாணவர்களை ஆராய்ச்சி மேற்கொள்ள ஊக்குவிக்கும் பொருட்டு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வேளாண்மை, உயிரியல், சுற்றுச்சூழல், மருத்துவம், இயற்பியல், சமூகவியல், கால்நடை மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் , வேதியியல், இயந்திரவியல், கணினி அறிவியல், மின்சாரம், மின்னணுவியல் உள்ளிட்ட துறைகளில் நிதியுதவி அளிக்கப்படுகிறது.


இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த மாணவர்களின் 1,014 சாத்தியமான திட்டங்கள் ஐஐடி, சிஎல்ஆர்ஐ, நியாட் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களைச் சேர்ந்த புகழ்பெற்ற பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், இயக்குநர்கள் அடங்கிய நிபுணர் குழுக்கள் வாயிலாக தேர்வுசெய்யப்பட்டுள்ளன. இவ்வாறு தேர்வுசெய்யப்பட்ட திட்டங்களுக்கு அரசின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டத்துக்கு அதன் செயல்பாட்டுக்கு அதிகபட்சம் ரூ.10 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும்.


ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி ஆய்வுத் திட்டம் முடிவடைந்ததும், அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தால் ஏற்பாடு செய்யப்படும் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நிகழ்வில் மறுஆய்வு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்படும். அக்கூட்டத்தில் மாணவர்களால் செய்யப்படும் சாத்தியமான மற்றும் சிறந்த பயனுள்ள திட்டங்களை நிபுணர்கள் அடையாளம் காண்பார்கள். அவ்வாறு அடையாள காணப்படும் திட்டங்கள் அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் காப்புரிமை தகவல் மையம் வாயிலாக தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான காப்புரிமை செய்ய வழிவகுக்கும்.


மாணவர் ஆராய்ச்சி கண்டுபிடிப்பு ஒரு அறிவியல் ஆராய்ச்சி கட்டுரையாக பதிவுசெய்யப்பட்டு, ஐஎஸ்பிஎன் எண்ணுடன் செயல்முறைகளாக வெளியிடப்படும். இது அம்மாணவர்கள் பிற்காலத்தில் முழு அளவிலான விஞ்ஞானியாக உருவாக பேருதவி புரியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) ) 

TN SED App ல் 21.4.25 முதல் மாணவர் மற்றும் ஆசிரியர் வருகை பதிவை எவ்வாறு மேற்கொள்வது ?

   Education News (கல்விச் செய்திகள்)
அனைத்து தொடக்க /நடுநிலைப் பள்ளிகளுக்கான மாணவர்  மற்றும் ஆசிரியர் வருகை பதிவை  21-04-2025 TO 30-04-2025 வரை எவ்வாறு மேற்கொள்வது என்பது விளக்கம் காணொளி


💁‍♂️NEW UPDATE TNSED Attendance APP

TN SED App ல் 21.4.25 முதல்

1-5 வகுப்பு வரை 

Fully not working..& .Reason Others.....

Mark Staff attendance Only Trs🖕


6-8 வகுப்பு 


Partially working... select 

6,7,8 class.....&  Reason Others.... Trs


💁‍♂️மேற்கொள்ளும் வழிமுறை


https://youtu.be/araOX3dznwk


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) ) 

NIT திருச்சி Professor காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

 NIT திருச்சி Professor காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளி ஆனது Associate Professor, Professor மற்றும் பல்வேறு பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென 49 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள்:

Associate Professor, and Professor மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 49 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Assistant Professor (Grade-II) – 35 பணியிடங்கள்
  • Assistant Professor (Grade-I) – 8 பணியிடங்கள்
  • Associate Professor – 2 பணியிடங்கள்
  • Professor – 4 பணியிடங்கள்
கல்வி தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 7th CPC Pay Matrix 10, 12,13A2 & 14A அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 22.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Diploma தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் உங்களுக்கான வேலை!

 Diploma தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் உங்களுக்கான வேலை!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் எனப்படும் TNSTC ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Apprentice பணிக்கென காலியாக உள்ள 527 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

காலிப்பணியிடங்கள்:

Apprentice பணிக்கென காலியாக உள்ள 527 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree & Diploma (Engineering /Technology) / Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.8,000/- முதல் ரூ.9,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் Merit List மற்றும் Certificate Verification மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 22.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Cognizant நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

 


Cognizant நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

Cognizant Technology Solutions ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Process Executive – Voice பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Cognizant பணியிடங்கள்:

Process Executive – Voice பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cognizant வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு Cognizant-ன் நிபந்தனைகளின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

Cognizant தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாள் முடிவதற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது? 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேதி, இணையதள விவரங்கள் இதோ

    Education News (கல்விச் செய்திகள்)

தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில், 2024-25 கல்வி ஆண்டிற்கான 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவடைந்தது. அதனைத்தொடர்ந்து, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 28-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இத்தேர்வுகளுக்கான முடிவுகள் எப்போது வெளியாகிறது என்பதை பற்றி இந்த பதிவில் அறிந்துகொள்ளலாம்.
தமிழ்நாடு பொதுத்தேர்வு முடிவுகள் 2024-25
தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத மொத்தம் 25,57,354 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு தேர்விற்கு 43 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு அறை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவையில்லாமால் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன.

  • இதில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 4-ம் தேதி முதல் தொடங்கி ஏப்ரல் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான முடிவுகள் 09.05.2025 (மே 9) தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

  • 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 30-ம் தேதி முடிவடைந்து, முடிவுகள் 19.05.2025 (மே 19) தேதி வெளியிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
  • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில், தேர்வு முடிவடைந்தவுடன் விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து 19.05.2025 (மே 19) தேதி முடிவுகள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள் தெரிந்துகொள்ளுவது எப்படி?
தமிழ்நாடு பொதுத்தேர்வு மாணவர்கள் அதிகாரப்பூர்வ www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் முடிவுகள் வெளியானதும், மாணவர்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை கொண்டு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். இவையில்லாமல், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயக்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மேலும், மாணவர்கள் தேர்விற்கு கொடுத்த மொபைல் எண்ணிற்கு மதிப்பெண்கள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) ) 

பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட/மாநில அளவிலான விளையாட்டு, பல்திறன் போட்டிகள் - Direct Registration Link

 CULTURAL%20&%20SPORTS%20FEST%202025

The Buddhist Society of India, Tamilnadu Conducts This Mega Summer Sports & Cultural Festival


பள்ளி மாணவர்களுக்கான கோடைகால விளையாட்டு மற்றும் பல்திறன் போட்டிகள் மே 12 முதல் 17ஆம் தேதி வரை மாவட்ட அளவில் பல்வேறு பிரிவுகளில் நடைபெறுகிறது 


மாநில அளவிலான போட்டிகள் மே 24 மற்றும் 25ஆம் தேதி கிருஷ்ணகிரியில் நடைபெறுகின்றன. 



Click Here - Mega Summer Sports & Cultural Festival - Registration Google Form


போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ஐந்தாயிரம் ரூபாயும் இரண்டாம் பரிசாக மூன்றாயிரம் ரூபாயும் மூன்றாம் பரிசாக 2000 ரூபாயும் அளிக்கப்படுகிறது 


இப் போட்டிகளில் கலந்து கொள்ள மற்றும் போட்டிகள் குறித்து மாணவர்களின் சந்தேகங்களை போக்க மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் 


போட்டிகளின் விவரங்கள் மற்றும் பொறுப்பாளர்களின் தொடர்பு எண்கள் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. 


பங்கு பெற விரும்பும் மாணவர்கள் கீழே உள்ள Google Form நிரப்பி பதிவு செய்து கொள்ளவும். சந்தேகங்களுக்கு மாவட்ட வாரியாக தொடர்பு எண்களை அணுகவும். 


0016



Click Here - Mega Summer Sports & Cultural Festival - Registration Google Form