TNPSC - குரூப் 2 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

 1348902

குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.


தமிழக அரசுத் துறைகளில் குரூப்-2, 2ஏ பதவிகளில் வரும் சார் பதிவாளர், துணை வணிகவரி அலுவலர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் உட்பட பல்வேறு பணிகளில் உள்ள 2,540 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டது. அதற்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியான பட்டதாரிகளுக்கான முதல்நிலைத் தேர்வு 2024 செப்டம்பர் 14-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 5.81 லட்சம் பேர் எழுதினர்.


இவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. அதில் 29,809 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்கள் அடுத்தபடியாக முதன்மைத் தேர்வை எழுத வேண்டும். அந்த தேர்வுகள் பிப்ரவரி 8 மற்றும 23-ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் தேர்வு எழுத தகுதி பெற்றர்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை டிஎன்பிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது. ஹால் டிக்கெட்டுகளை www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

நான் முதல்வன் திட்டத்தில் இணையவழி சான்றிதழ் படிப்புகள்

 

1349008

நான் முதல்வன் திட்டத்தில் கற்றுத்தரப்பட உள்ள இணையவழி சான்றிதழ் படிப்புகளை பள்ளி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.


இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதலுக்காக பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்தொடர்ச்சியாக மாணவர்கள் தங்கள் உயர்கல்வி சார்ந்த திறன்களை வளர்த்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக இணையவழியில் சான்றிதழ் படிப்புகள் வழங்கப்பட உள்ளன.


அதன்படி பள்ளி நேரம் முடிந்த பின் ஆசிரியர்கள், மாணவர்கள் உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகங்களை பயன்படுத்தி இந்த சான்றிதழ் படிப்புகளை கற்றுக் கொள்ளலாம். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வழங்கப்பட்டுள்ளன. அதை பின்பற்றி செயல்படுதல் வேண்டும். மேலும், இந்த சான்றிதழ் படிப்புகளை மாணவர்கள் முறையாக பயன்படுத்தி கொள்வதற்கான பணிகளை அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

முன்னாள் மாணவர்களுடனான கலந்துரையாடல் ( 01.02.2025 ) அனைத்துத் தலைமையாசிரியர்களும் கலந்து கொள்ள பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

 

IMG_20250131_124632

பள்ளிக் கல்வி மாதிரிப் பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்களுடனான கருத்தரங்கு மற்றும் கலந்துரையாடல் 01-02-2025 சனிக்கிழமை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான நிகழ்வு அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களையும் அறிவுறுத்துதல் தொடர்பாக . கலந்து கொள்ள பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

DSE - Conference and Discussion Alumini Proceedings - Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

மணற்கேணி செயலி - காணொலி காட்சிகளை திறன் பலகைகளில் (Smart Board) பயன்படுத்தி அதன் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய ஆசிரியர்களுக்கு உத்தரவு.

 IMG_20250131_184108

 மணற்கேணி செயலி - பாடநூலில் இடம்பெற்று உள்ள பாடங்களின் காணொலி காட்சிகளை திறன் பலகைகளில் (Smart Board) பயன்படுத்துதல் - அறிவுரைகள் வழங்குதல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

மணற்கேணி செயலியை பயன்படுத்தி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை புதிய அறிவியல் நுட்பங்களின் மூலம் பயன்படுத்துவது குறித்து அறிவுறுத்தப்பட்டன. ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையுள்ள பாடங்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கில மொழிவழி காணொலி காட்சிகள் சிறந்த தொழில்நுட்ப தரத்தில் மாணவர்கள் எளிதில் அணுகும் வகையில் வடிவமைக்கப்பட்டு பொது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. என்ற அரசு தொடக்கப் பள்ளிகளில் 20,000க்கும் மேற்பட்ட திறன் பலகைகள் (Smart Board) நிறுவப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த திறன் பலகைகளில் சார்ந்த பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்களும் ஒவ்வொருவராக https://manarkeni.tnschools.gov.in இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள Regster என்ற பகுதியில் தங்களின் பெயர் அல்லது கைபேசி எண்ணை பதிவு செய்து அதன் பின்னர் Logh செய்து உள்நுழைந்து சன்றைய வகுப்பறை குழலுக்கு ஏற்ற பாடங்களை தெரிவு செய்து கற்றல் கற்பித்தல் செயல்பாட்டினை மேற்கொள்வதற்கு ஏற்ற அறிவுரைகளை வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள். 


தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் மணற்கேணி செயலியை தங்களின் வகுப்பறைக் கற்பித்தலுக்கு பயன்படுத்தி வருகின்றனரா என்பதை அனைத்து ஆய்வு அலுவலர்களும் தங்களின் பள்ளிப் பார்வை மற்றும் ஆய்வுகளின் போது கண்காணித்து அனைவரையும் இந்த செயல்பாட்டில் ஈடுபடுத்த உடன் நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஒவ்வொரு ஆசிரியரும் தங்களின் உள்நுழைவு வாயிலாக மணற்கேணி செயலியை திறன் பலகைகள் (Smart Board) மூலம் பயன்படுத்தி வருவதை கைபேசியில் படம்பிடித்து அதனை தங்களது EMIS id மற்றும் பள்ளியின் U-Dise எண்ணுடன் இணைப்பில் கொடுக்கப்பட்டு உள்ள Google Forms - Link ல் 05.02.2025ஆம் தேதிக்குள் பதிவிட சார்ந்த வட்டாரக் கல்வி அலுடியர்களுக்கு அறிவுரைகள் வழங்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Smart Board + Manarkeni App - Within 5.2.2025 - Proceedings - Download here



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

ரூ.42,000/- சம்பளத்தில் Senior Research Fellow வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

ரூ.42,000/- சம்பளத்தில் Senior Research Fellow வேலைவாய்ப்பு  – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனம் தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் (NIFTEM) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Senior Research Fellow, Research Fellow, Junior Research Fellow, Project Assistant பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

NIFTEM காலிப்பணியிடங்கள்:

Senior Research Fellow, Research Fellow, Junior Research Fellow, Project Assistant பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Senior Research Fellow (SRF) – 1 பணியிடம்

Research Fellow – 1 பணியிடம்

Junior Research Fellow (JRF) – 1 பணியிடம்

Project Assistant – 3 பணியிடங்கள்

Research Fellow கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s degree / Master degree / Diploma / PhD தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Senior Research Fellow (SRF) – விண்ணப்பதாரர்கள் master’s degree in M.E or M.Tech or M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Research Fellow – விண்ணப்பதாரர்கள் Master’s degree in M.E or M.Tech or M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Junior Research Fellow (JRF) – விண்ணப்பதாரர்கள் Master’s degree in M.E or M.Tech or M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Project Assistant – விண்ணப்பதாரர்கள் bachelor’s degree in B.E / B.Tech / master’s degree in M.E / M.Tech / M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NIFTEM வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35, 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Research Fellow ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.20,000/- முதல் ரூ.42,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

Senior Research Fellow (SRF) – ரூ.42,000/-

Research Fellow – ரூ.40,000/-

Junior Research Fellow (JRF) – ரூ.37,000/-

Project Assistant – ரூ.20,000/- முதல் ரூ.25,000/- வரை

NIFTEM தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 10.02.2025ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

ECHS ஆணையத்தில் Lab Assistant காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.75,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

 

ECHS ஆணையத்தில் Lab Assistant காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.75,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!
முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் DEO, Lab Assistant, Pharmacist மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 9 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

 ECHS காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Driver, Medical Officer, Lab Technician மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 9 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Medical Specialist – 1 பணியிடம்

Dental Officer – 1 பணியிடம்

Dental Assistant/Hygienist – 1 பணியிடம்

Lab Assistant – 1 பணியிடம்

Pharmacist – 2 பணியிடம்

Data Entry Operator/Clerk – 1 பணியிடம்

Peon – 1 பணியிடம்

Female Attendant – 1 பணியிடம்

Safaiwala – 1 பணியிடம்

Chowkidar – 1 பணியிடம்

Lab Assistant கல்வி தகுதி:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Medical Specialist – விண்ணப்பதாரர்கள் master’s degree in Doctor of Medicine or Master of Science or Diplomate of the National Board தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Dental Officer – விண்ணப்பதாரர்கள் bachelor’s degree in the field of Dental Surgery தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Dental Assistant/Hygienist – விண்ணப்பதாரர்கள் Diploma in the field of Dental Hygienist தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Lab Assistant – விண்ணப்பதாரர்கள் Diploma in the field of Medical Laboratory Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Pharmacist – விண்ணப்பதாரர்கள் bachelor’s degree in the field of Pharmacy or Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Data Entry Operator/Clerk – விண்ணப்பதாரர்கள் Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Peon – விண்ணப்பதாரர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Female Attendant – தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Safaiwala – தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Chowkidar – விண்ணப்பதாரர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ECHS வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 53 மற்றும் 66 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Medical Specialist – அதிகபட்சம் 68 ஆண்டுகள்

Dental Officer – அதிகபட்சம் 63 ஆண்டுகள்

Dental Assistant/Hygienist, Pharmacist, Laboratory Assistant – அதிகபட்சம் 56 ஆண்டுகள்

Female Attendant, Safaiwala, Chowkidar, Peon – அதிகபட்சம் 53 ஆண்டுகள்.

Lab Assistant ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

Medical Specialist – ரூ.1,00,000/-

Dental Officer – ரூ.75,000/-

Dental Assistant/Hygienist – ரூ.28,100/-

Lab Assistant – ரூ.28,100/-

Pharmacist – ரூ.28,100/-

Data Entry Operator/Clerk – ரூ.22,500/-

Peon – ரூ.16,800/-

Female Attendant – ரூ.16,800/-

Safaiwala – ரூ.16,800/-

Chowkidar – ரூ.16,800/-

ECHS தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.02.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

JIPMER ஆணையத்தில் Research Nurse வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.18,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

 

JIPMER ஆணையத்தில் Research Nurse வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.18,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

Research Nurse பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை JIPMER ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Research Nurse பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம்  நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BSc Nursing தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு:

28 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.18,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து neonatologyjipmer@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 07.02.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2025 – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

 

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2025 – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Guest House Manager பணிக்கான 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Guest House Manager  பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

Level 6 அளவிலான ஊதியத்தில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 62 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.30,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 08.02.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group