தேசிய பெண் குழந்தைகள் தினம் 24.01.2025 - பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய விழிப்புணர்வு செயல்பாடுகள் குறித்து DSE செயல்முறைகள்!

 IMG_20250122_232415

தேசிய பெண் குழந்தைகள் தினம் 24.01.2025 அன்று அனுசரித்தல் - பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய விழிப்புணர்வு செயல்பாடுகள் குறித்து DSE செயல்முறைகள்!

DSE - National Girl Child's Day.pdf

👇👇👇👇

Download here


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

GPF - Rate of interest for the financial year 2024 - 2025 - with effect from 01.01.2025 to 31.03.2025 - Orders Issued...

 
General Provident Fund - Rate of interest for the financial year 2024 - 2025 - with effect from 01.01.2025 to 31.03.2025 - Orders Issued...

Screenshot_20250123_162527


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

SLAS - Feb 2025 நடத்துவதற்கான அறிவுரைகள் - Director P

 

மாநில அளவிலான அடைவுச் சோதனை (SLAS 2025) நடத்துவதற்கான அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!


Click Here to Download - DSE - Instructions to Conduct SLAS - Director Proceedings - Pdf

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

SLAS - Selection of Students - மாணவர்கள் தேர்வு செய்யப்படும் முறை

 SLAS Exam 2025 – Pattern of Selection of Students


💥 அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 4,5,6 பிப்ரவரி 25 ல் SLAS தேர்வானது 3,5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு நடைபெற உள்ளது. 


💥 3 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கு 20 மாணவர்களும் ( தமிழ் மீடியம் எனில் 20 மாணவர்களும், ஆங்கில வழி இருந்தால் தமிழ் வழி 10 + ஆங்கில வழி 10 மாணவர்களும்) தெரிவு செய்யப்படுவர்.

💥 8ஆம்  வகுப்பில் 30 பேர் தேர்வு எழுதுவர்


💥 மாணவர்கள் தேர்வானது  ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டு EMIS ல் வரும். Absent இருந்தாலும் பதிலி EMISல் வரும்


💥 எனவே தங்கள் வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையும் EMISல் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையும் சமமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.


💥தொடர்ந்து விடுப்பில் இருந்தாலோ, இடைநிற்றல் இருந்தாலோ Common Pool க்கு அனுப்பவும்


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

ஆசிரியர்களுக்கு EMIS பணிகள் குறைக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித் துறை செயல்முறைகள் வெளியீடு!

 கல்வி மேலாண்மைத் தகவல் மையத்தில் ( EMIS ) தற்போதைய தரவு உள்ளீடு செயல்முறைகளை மதிப்பிடுவதற்கும் . தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பதிவு மேற்கொள்ளும் பணியினைக் குறைக்கும் நோக்கில் தீர்வுகளை முன்மொழிவதற்கும் ஒரு குழு அமைக்கப்பட்டது என பார்வை - ( 2 ) இல் காண் உள்ளீட்டு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது . 


இக்குழுவானது . தற்போதுள்ள தரவு உ நடைமுறைகள் மற்றும் பயனர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஆகியவற்றினை முழுமையான சீராய்வுக்குப் பிறகு , EMIS- இல் தரவுகளை உள்ளீடு செய்யும் பணியினை எளிதாக்கும் மற்றும் நெறிப்படுத்தும் ஆலோசனைகள் வழங்கியுள்ளது . 


பள்ளி அளவில் தரவுகளை உள்ளீடு செய்யும் பணியினை கணிசமாகக் குறைத்தும் அதே பேணப்படும் வேளையில் , அத்தியாவசியமான விவரங்கள் மட்டுமே வகையிலும் , தரவு உள்ளீடு செய்யும் பணிகள் குறைக்கப்பட்டுள்ளன.


Click Here to Download - EMIS - குறைக்கப்பட்ட பணிகள் - Data Entry - Director Proceedings - Pdf


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Primary HM Grade Pay 5400 to Middle School HM பதவி உயர்வு பெற்றால் Grade Pay 4700 ஆக நிர்ணயம் - மாநில கணக்காயர் ஆணை

 

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் நிலையில் தர ஊதியம் 5400 பெற்று பின்னர் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்ற நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தர ஊதியம் 5400 பதிலாக தர ஊதியம் 4700 நிர்ணயம் மாநில கணக்காயர் அலுவலகம் ஆணை


Primary%20HM%20Grade%20Pay%205400%20copy

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.01.2025

 

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

திருக்குறள்: 

பால்: பொருட்பால்

 அதிகாரம்: குடிமை 

குறள் எண்:953

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
 வகைஎன்ப வாய்மைக் குடிக்கு.

பொருள்: முகமலர்ச்சி, கொடைத்தன்மை, இனியசொல், பிறரை இகழாமை, இந்நான்கும் நல்குடியின் இயல்புகள்.

பழமொழி :

சிறியோர் எல்லாம் சிறியர் அல்ல. 

All that are little are not inferiors.

இரண்டொழுக்க பண்புகள் :   

*உலகில் தோன்றிய மூத்த மொழிகளில் ஒன்று தமிழ் மொழி என்பதை அறிவேன். எனவே , எனது தாய் மொழியை சிறப்பாக கற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன்.    

*விளையாட்டு உடலுக்கு வலிமை சேர்க்கும் .எனவே, செல்பேசியில் மூழ்காமல் ஏதாவது ஒரு  விளையாட்டிலாவது எனது திறமையை வெளிப்படுத்துவேன்.

பொன்மொழி :

எண்ணத்தைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படும் -நபிகள் நாயகம்

பொது அறிவு : 

1. Vermiculture என்பது

விடை: மண்புழு வளர்த்தல்.          

2.தேநீரில் அடங்கியுள்ள கரிம அமிலம் எது?

விடை :  டானிக் அமிலம்

English words & meanings :

 Poet.    -     கவிஞர்
 
Singer.   -        பாடகர்

வேளாண்மையும் வாழ்வும் : 

 வரலாறு நெடுகிலும், தண்ணீரைச் சேகரித்து, சேமித்து / இருப்புவைத்துக் கொள்ளும் தன்னுடைய திறனை மனிதன் வளர்த்துக்கொண்டுள்ளான்

ஜனவரி 23

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்நாள்



நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897– இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர். காங்கிரஸ் சனநாயகக் கட்சியின் "பார்வர்ட்" எனும் ஆங்கில இதழில், ஆசிரியரான நேதாஜி, உணர்ச்சி ததும்பும் பல கட்டுரைகளை எழுதினார்.  இந்திய தேசிய ராணுவம் நெருக்கடியான நிலையில் இருந்த போது, ஆகத்து 15, 1945ல் அவர் இறுதியாக அறிக்கை வெளியிட்டார்.அதன்படி இந்தியா

நீதிக்கதை

 வல்லவர் யார்?



தரையில் எறும்பு மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பூரான் அதன் அருகே வந்தது.


"நண்பா! நான் வருவதைக் கூடக் கவனிக்காமல் எங்கே சென்று கொண்டிருக்கிறாய்?" என்று எறும்பிடம் கேட்டது.


எறும்பு "பூரான் நண்பா! உன்னைக் கவனித்துக் கொண்டிருந்தால் என் கடமையை நான் சரிவரச் செய்ய முடியாதே" என்று ஊர்ந்து கொண்டே சொன்னது.


"அப்படியென்ன முக்கியமான கடமை?" என்று பூரான் கேட்டது.


எறும்பும் ஊர்வதை நிறுத்தாமல்"மழைக்காலத்திற்குத் தேவையான உணவை வெயில் காலத்திலேயே தேடிச் சேர்த்து வைப்பது என் கடமை. உன்னிடம் பேசிக் கொண்டிருந்தால் என் கடமையைச் செய்ய முடியாது" என்று கூறிச் சென்று விட்டது.


பூரான், எறும்பு தன்னை ஏமாற்றி விட்டதாகக் கருதியது. எறும்பை மட்டம் தட்டியே தீர வேண்டும் என்று நினைத்துக் கொண்டது.


அடுத்த நாள் எறும்பு வரும் வழியில் நின்று அதை வழி மறித்தது. "எறும்பே, கடமையை சரிவரச் செய்வதால் மட்டும் நீ வல்லவனாக முடியாது!. உன்னால் என்னைப் போல வேகமாக ஊர்ந்து வர முடியுமா? அப்படி வந்தால் நீ என்னை விட வல்லவன் என்று ஒத்துக் கொள்கிறேன்" என்று கேட்டது.


அதற்கு எறும்பு "வீண் பேச்சு வேண்டாமே. நான் என் கடமைச் செய்ய விடேன்" என்று பணிவாகக் கேட்டது.


பூரான் "தப்பித்து ஓடப் பார்க்காதே!" என்று கேலி செய்தது.


அதற்கு எறும்பு மிக அமைதியுடன்"பூரானே. உன் அளவுக்கு வேகமாக என்னால் ஊர முடியாது.அந்த தைரியத்தில் நீ பேசுகிறாய்ஆனால், நான் செய்யும் சில காரியங்களை உன்னாலும் செய்ய முடியாது. அதனால் யார் வலியவன் என்ற பரிட்சைஎல்லாம் வேண்டாம்" என்று திரும்பவும் கூறியது.


பூரானோ "அப்படி என்ன சாகசத்தை நீ செய்து விடப்  போகிறாய். சாதூரியமாகப் பேச மட்டும் கற்று  வைத்திருக்கிறாய்" என்று கூறியது.


எறும்பு பூரானை பதில் பேசாமல் ஒரு தண்ணீர் தொட்டியின் அருகில் அழைத்துச் சென்றது. பூரானை வேடிக்கை பார்க்கச் சொல்லி விட்டு கரையின் அருகில் இருந்த ஒரு துரும்பில் தொற்றிக்கொண்டு தண்ணீரில் விழுந்து அந்த துரும்பைப் பற்றிக் கொண்டு தண்ணீரில் மிதந்தது.


பூரானைப் பார்த்து "உன்னால் இப்படிச் செய்து காட்ட முடியுமா?" என்று கேட்டது.


பூரானுக்கு அப்போதுதான் எல்லோருக்கும் சில வல்லமைகளும் சில இயலாமைகளும் இயற்கையிலேயே உண்டுஎன்று புரிந்தது. எறும்பிடம் மன்னிப்புக் கேட்டது.


அன்றிலிருந்து பூரான் எறும்பின் கருத்துகளை மதித்து நடந்து அதற்குச் சிறந்த நண்பனாகத் திகழ்ந்து வந்தது.

இன்றைய செய்திகள்

23.01.2025

* வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் அணிவகுக்கும் அரிய நிகழ்வை வெறும் கண்களால் பார்க்கலாம். இதற்காக சென்னை பிர்லா கோளரங்கத்தில் ஜனவரி 22- முதல் 25-ம் தேதி வரை சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

* ஆன்லைன் வாயிலாக பதிவுக்கு வரும் பத்திரங்களை உரிய காரணம் இல்லாமல் திருப்பியனுப்பக் கூடாது என்று சார்பதிவாளர்களுக்கு பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தியுள்ளார்.

* டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக விமான சேவை பாதிப்பு.

* ரஷ்ய அதிபர் புதின் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால் ரஷ்யா மீது பொருளாதார தடை - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி.


* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்: போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் அரையிறுதிக்கு முன்னேற்றம்.

* ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: சென்னை - மோகன் பகான் ஆட்டம் 'டிரா'.

Today's Headlines

* A rare event where 6 planets line up in the sky at the same time can be seen with the naked eye. Special arrangements have been made at the Birla Planetarium in Chennai from January 22 to 25 for this.

* Dinesh Ponraj Oliver, Head of the Registration Department, has advised the sub-registrars not to return the documents received for registration online without proper reason.

* Air services affected due to heavy fog in Delhi.

* If Russian President Putin does not come for talks, economic sanctions on Russia - US President Trump takes action.

* Australian Open Tennis Series: Polish player Ika Swiatek advances to the semi-finals.

* ISL. Football Series: Chennai - Mohun Bagan match 'draw'.

Covai women ICT_போதிமரம்


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group