2025-ம் ஆண்டு நீட் நுழைவு தேர்வு முறையில் மாற்றம் வருமா?- நிபுணர் குழு முடிவுக்காக மாணவர்கள் காத்திருப்பு

 1500x900_5637939-neet

கடந்த ஆண்டு நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்ததையடுத்து தேர்வு முறையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.


தேர்வு முறை நேர்மையாக நடைபெறுகிறதா என்பதை ஆய்வு செய்ய நிபுணர் குழுவை மத்திய அரசு ஜூன் 22-ந் தேதி அமைத்தது. சுப்ரீம் கோர்ட் குழுவிற்கு சில வழிகாட்டுதல்களை வழங்கியது. செப்டம்பர் 30-ந் தேதிக்குள் அதன் அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கேட்டு கொண்டது.


இதற்கிடையே என்ஜினீயரிங் படிப்புக்கான நுழைவு தேர்வு முறையை அரசு மாற்றியமைத்தது. இதனால் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு முறையில் மாற்றம் வருமா என்பதை அறிய மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர்.


இந்த நிலையில் உயர் அதிகாரம் கொண்ட நிபுணர் குழுவின் அறிக்கைக்காக காத்திருப்பதாக தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) தெரிவித்துள்ளது.


இந்த நிலையில் நீட் தேர்வு முறையில் மாற்றங்களை பற்றி விவாதிப்பதற்கு நடத்தப்பட்ட கூட்டத்தின் தகவல்களை சுகாதார ஆர்வலர் விவேக் பாண்டே தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டிருந்தார்.


அவருக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் அளித்த பதிலில் தேடப்பட்ட தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. நீங்கள் விரும்பியபடி, இந்த தகவலை உங்களுக்கு வழங்க முடியாது என்று கூறியிருந்தது.


இதை தொடர்ந்து பாண்டே மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.


அதில் நீட் 2024 மற்றும் 2025 தேர்வுகள் தொடர்பாக ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நடைபெற்ற கூட்டங்களின் விபரங்களை கேட்டிருந்தார்.


இந்த கேள்விக்கு பதில் அளித்த அரசு இந்திய உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்பேரில் அரசு உயர் அதிகாரம் கொண்ட நிபுணர் குழுவை அமைத்துள்ளது.


அதன் அறிக்கை கிடைக்க இன்னும் காத்திருக்க வேண்டும் என்று பதில் அளித்துள்ளது.


இது தொடர்பாக டாக்டர் பாண்டே கூறியிருப்பதாவது:-


நீட் நுழைவு தேர்வில் மாணவர்களால் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியுமா என்பதை புரிந்து கொள்ளவும், தெளிவுப்படுத்தவும் ஆகஸ்டு மாதம் முதல் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் சரியான பதில் கிடைக்கவில்லை.


கடைசி நிமிட மாற்றங்கள் மாணவர்களுக்கு தேவையற்ற அழுத்தத்தை கொடுக்கும் என்றார்



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

JEE முதன்மைத் தேர்வு: மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகைகள் அறிவிப்பு

 1331424

பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வு எழுதவுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான நேர சலுகைகளை என்டிஏ வெளியிட்டுள்ளது.


ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரு பிரிவாக நடைபெறும். இதில் முதன்மைத் தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.


அதன்படி 2025-26-ம் கல்வியாண்டுக்கான முதன்மைத் தேர்வு ஜனவரி, ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளன. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் ஜேஇஇ தேர்வு எழுதவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான திருத்தப்பட்ட சலுகை விவரங்களை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: ஜேஇஇ தேர்வு எழுதவுள்ள மாற்றுத்திறனாளிகள் உதவியாளர்களை சுயமாக தேர்வு செய்து கொள்ளலாம் அல்லது அதற்கான தேர்வுக் குழுவை அணுக வேண்டும்.


எனினும், தேர்வுக்கு 2 நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட தேர்வர்கள், உதவியாளரை சந்திக்க அனுமதிக்க வேண்டும். இதன்மூலம் அந்த உதவியாளர் தகுதியானவரா, இல்லையா என்பதை தேர்வர்கள் சரிபார்த்துக் கொள்ளலாம். இதேபோல், மாற்றுத்திறன் தேர்வர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வரும் கூடுதல் நேரம் என்ற வார்த்தை இனி இழப்பீட்டு நேரம் என மாற்றப்பட வேண்டும். உதவியாளர்களை கொண்டு தேர்வை எதிர்கொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மணி நேரத்துக்கு இழப்பீட்டு நேரமானது 20 நிமிடங்களுக்கு குறைவாக இருக்கக்கூடாது.


மேலும், கண் தெரியாதவர்கள், இரு கைகளும் பாதிக்கப்பட்டவர்கள், பெரு மூளைவாதம் ஆகியவற்றில் குறைபாடுள்ளவர்களுக்கு 3 மணி நேர தேர்வுக்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் இழப்பீட்டு நேரம் அனுமதிக்கலாம். தேர்வின் காலம் ஒரு மணி நேரத்துக்கு குறைவாக இருந்தால், அதற்கேற்ற விகித அடிப்படையில் இழப்பீட்டு நேரத்தை அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Ennum Ezhuthum -Term 2 For classes 1-3 and 4 & 5 - Training Materials

 Screenshot_2024-10-27-08-34-27-314_com.android.chrome-edit

எண்ணும் எழுத்தும் - பருவம் 2 - 1-3 மற்றும் 4 & 5 வகுப்புகளுக்கு - பயிற்சிக் காணொளிகள் தொகுப்பு - அனைத்துப் பாடங்கள்


Ennum Ezhuthum -Term 2 For classes 1-3 and 4 & 5 - Training Materials Collection - All Subjects 

👇👇👇
Download Here



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

நவ. 7-ல் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 Local%20holiday

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவினை முன்னிட்டு நவ. 7 ஆம் தேதி விடுமுறை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

 திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா வருகிற நவ. 2-ஆம் தேதி தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவ. 7-ஆம் தேதியும், திருக்கல்யாணம் நவ. 8-ஆம் தேதி பெற உள்ளது. விழாவில் கலந்து கொள்ளும் பக்தா்களுக்காக திருக்கோயில் சாா்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சூரசம்ஹாரம் நடைபெறும் வரும் நவ. 7-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு மேற்குறிப்பிட்டுள்ள நாளில் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

இளம்சாதனையாளர்களுக்கான பிரதமர் கல்வி உதவித்தொகை!

 



இளம்சாதனையாளர்களுக்கான பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தில் உதவி பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:


பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது. 2024 - 25ம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் வெளியிட்டுள்ள பள்ளிகளில் பயிலும் தமிழக மாணவர்களுக்கு இவ்வுதவித் தொகை வழங்கப்படும்.

மாணவரின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி அக்.31. கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தை சரிபார்க்க கடைசி நவ.15. மாணவர்கள் நேஷனல் ஸ்காலர்ஷிப் போர்டலில் ரினிவல் அப்ளிகேஷன் என்ற இணைப்பில் சென்று, ஓ.டி.பி., பதிவு செய்து விண்ணப்பத்தை புதுப்பிக்கலாம்.

புதிதாக விண்ணப்பிக்க விரும்புவோர், 9, 11ம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பயனாளியாக தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை வழங்கப்படும். 60 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள், பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் அலைபேசி எண், ஆதார் விவரங்களை உள்ளீடு செய்தால் ஓ.டி.ஆர்., நம்பர், பாஸ்வேர்ட் பதிவு செய்த அலைபேசிக்கு வரும். அதைப் பயன்படுத்தி உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இத்திட்டம் குறித்து அறிய நேஷனல் ஸ்காலர்ஷிப் போர்டலில் (scholarships.gov.in, http://socialjustice.gov.in) அணுகலாம் என தெரிவித்துஉள்ளார்.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

PG-TRB English - Unit 1 - Important Questions And Answers

Youth Skill Development -"PM Intern' எனும் புதிய திட்டத்தை மத்திய அரசு துவக்கியுள்ளது.

 


இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு மற்றும் நிதி உதவி வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, 'பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப்' எனும் புதிய திட்டத்தை மத்திய அரசு துவக்கியுள்ளது.

முக்கியத்துவம்

நாட்டின் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 742 மாவட்டங்களில் ரூ. 800 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 25 துறைகளை சேர்ந்த, நாட்டின் சிறந்த 500 தொழில் நிறுவனங்களில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 'இன்டர்ன்ஷிப்' வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.

பயிற்சி துறைகள்

தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் மேம்பாடு, வங்கி மற்றும் நிதி சேவைகள், எண்ணெய், எரிவாயு மற்றும் ஆற்றல், உலோகங்கள் மற்றும் சுரங்கம், எப்.எம்.சி.ஜி., தொலைத்தொடர்பு, உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானம், சில்லறை விற்பனை மற்றும் நுகர்வோர் பொருட்கள், சிமெண்ட் மற்றும் கட்டிட பொருட்கள், வாகனம், மருந்து, விமானம் மற்றும் பாதுகாப்பு, சுகாதாரம், உற்பத்தி மற்றும் தொழில்துறை, ரசாயனம், ஊடகம், பொழுதுபோக்கு மற்றும் கல்வி, விவசாயம், ஆலோசனை சேவைகள், ஜவுளி உற்பத்தி, கற்கள் மற்றும் நகைகள், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் உட்பட பல்வேறு துறைகளில் இன்டர்ன்ஷிப் பயிற்சி வழங்கப்படுகிறது.

பயிற்சி காலம்:

ஓர் ஆண்டு

நிதி உதவி:

பயிற்சியாளருக்கு நிதி உதவியாக மாதம் ரூ.5,000 வீதம் 12 மாதங்களுக்கு வழங்கப்படுவதோடு, ஒருமுறை மானியமாக ரூ.6,000 வழங்கப்படுகிறது. காப்பீடு வசதியும் உண்டு.

தகுதிகள்:


* இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
* 21-24 வயதுக்குள் இருக்க வேண்டும்.
* தற்போது முழுநேர பணி அல்லது முழுநேர கல்வி பெறுபவராக இருத்தல் கூடாது.
* ஆன்லைன் அல்லது தொலைநிலைக் கல்வி திட்டங்களில் பதிவுசெய்யப்பட்ட மாணவர்கள் தகுதியுடையவர்கள்.
* குறைந்தது மேல்நிலை கல்வி, நிறைவு செய்திருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமான ஐ.டி.ஐ., படிப்பை முடித்திருக்க வேண்டும். டிப்ளமோ அல்லது பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.சி.ஏ., பி.பி.ஏ., பி.பார்மா போன்ற பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விபரங்களுக்கு:
https://pminternship.mca.gov.in/


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு!

 

அரசு பள்ளி மாணவர்களுக்கு, விளையாட்டு குறித்து பயிற்சி அளிக்க, கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அரசு பள்ளிகளின் உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு, பல்வேறு விளையாட்டுகள் குறித்து, இங்கிலீஷ் பிரிமியர் லீக் ஸ்போர்ட்ஸ் மூலம் பயிற்சி அளிக்க, ஏற்பாடுகள் நடக்கின்றன.

அரசு பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறனை அதிகரிக்கவும், வருங்காலத்தில் அவர்களை சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்கவும், கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில், கல்வித்துறை கமிஷனர் திரிலோக சந்திரா, பிரிட்டிஷ் கவுன்சிலின், தென்னிந்திய இயக்குனர் ஜனக புஷ்பநாதன் கையெழுத்திட்டுள்ளனர்.

பள்ளிக்கல்வி அமைச்சர் மது பங்காரப்பா, நேற்று அளித்த பேட்டி:


அரசு பள்ளி மாணவர்களிடம் மறைந்துள்ள விளையாட்டு திறனை அடையாளம் கண்டு, அந்த திறனை அதிகரிக்க வேண்டும். இதனால் அவர்கள் வருங்காலத்தில் நல்ல விளையாட்டு வீரர்களாக உருவாகலாம்.

இதை மனதில் கொண்டு, அரசு பள்ளி மாணவர்களுக்கு, விளையாட்டு குறித்து பயிற்சியளிக்க, கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அரசு பள்ளிகளின் உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு, பல்வேறு விளையாட்டுகள் குறித்து, இங்கிலீஷ் பிரீமியர் லீக் ஸ்போர்ட்ஸ் மூலம் பயிற்சி அளிக்கப்படும்.

முதற்கட்டமாக தொடக்க பள்ளிகளின் உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு விளையாட்டு மற்றும் திறன் பயிற்சி அளிக்கப்படும். அதன்பின் மற்ற பள்ளிகளில் பயிற்சி துவங்கும்.

மாணவர்களின் விளையாட்டு திறனை அதிகரிக்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, கமிஷனர் திரிலோக சந்திரா, பிரிட்டிஷ் கவுன்சிலின், தென்னிந்திய இயக்குனர் ஜனக புஷ்பநாதன் நேற்று (முன் தினம்) கையெழுத்திட்டனர்.

கபடி, கோகோ உட்பட மற்ற பாரம்பரிய விளையாட்டுகளை, கால்பந்து விளையாட்டு போன்று வளர்க்க வேண்டும். 6 வயதில் இருந்தே, பள்ளி சிறார்களுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்போது ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்க திட்டமிட்டு உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Nvidia AI summit in india

 


இந்தியா மிகப்பெரிய அறிவுச் சந்தைகளில் ஒன்றாக இருக்கும், என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன சேர்மன் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

மும்பையில், என்விடியா ஏ.ஐ., மாநாடு-2024 இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி மற்றும்என்விடியா தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் பங்கேற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி கூறுகையில், ஏ.ஐ., தொழில்நுட்பத்தில், இந்தியா மிகப்பெரிய அறிவுச் சந்தைகளில் ஒன்றாக இருக்கும். நமது பிரதமர் கூறியது போல் இது புதிய லட்சிய இந்தியாவில், 140 கோடி இந்தியர்கள் இருக்கிறார்கள். சராசரி வயது 35க்குக் கீழே உள்ளவர்கள் இங்கு அதிகமாக இருக்கிறார்கள்.

இந்தியாவை முதன்மையான டிஜிட்டல் சமூகமாக மாற்றியதில் பிரதமர் தலைமை முக்கியமானது.

இந்தியாவின் வலுவான டிஜிட்டல் உள்கட்டமைப்பு, நம்மிடம் இருப்பது நமக்கு பெரிய அதிர்ஷ்டம் . அமெரிக்கா மற்றும் சீனாவைத் தவிர, இந்தியா சிறந்த டிஜிட்டல் இணைப்பு உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளது.

இவ்வாறு அம்பானி கூறினார்.

என்விடியா தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் கூறியதாவது:

இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) திறன்களை வலுப்படுத்தவும் நாட்டில் அதிநவீன ஏ.ஐ., உள்கட்டமைப்பை அமைக்கவும் ரிலையன்ஸ் மற்றும் என்விடியா இடையே ஒப்பந்தம் செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

தொடக்கப் பள்ளியில் ஸ்கோப் பயிற்சி முகாம்!

 


கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஊராட்சி, வெள்ளியணை அரசு தொடக்கப் பள்ளியில், சர்.சி.வி. ராமன் அறிவியல் கழகம் சார்பில், ஸ்கோப் பயிற்சி முகாம் நடந்தது.

தலைமை ஆசிரியர் தர்மலிங்கம் தலைமை வகித்தார். மக்களிடையே அடிப்படை அறிவியல் விளக்கங்களை புரிய வைக்கும் வகையில், தமிழகத்தில், 200 இடங்களில் ஸ்கோப் திருவிழா என்ற அறிவியல் திருவிழாவை தமிழ்நாடு அஸ்ட்ரானமி மற்றும் சயின்ஸ் சொசைட்டி, ராமன் ரிசேர்ச் பவுண்டேசன் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன.

அதன் ஒரு பகுதியாக, வே டூ சக்சஸ் ஆதவுடன் பள்ளி மாணவர்களுக்கு ஸ்கோப் கார்டுகள் வழங்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. ஸ்கோப் தயாரிப்பது மற்றும் அதன் பயன்பாடு குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது. ஆசிரியர்கள் மனோகர், வாசுகி, வெங்கடேசன் ஆகியோர் பயிற்சியளித்தனர். பெரிஸ்கோப், கலைடாஸ்கோப், மடிப்பு நுண்ணோக்கி ஆகியவற்றை செய்து காண்பித்து பயிற்சியளித்தனர்.

மைக்ரோஸ்கோப் மற்றும் ஸ்டெதஸ்கோப்பை பயன்படுத்தி காண்பித்தனர். டெலஸ்கோப், ஸ்டீரியோஸ் கோப், கைரோஸ்கோப் ஆகியவற்றை ஸ்மார்ட் போர்டு மூலம் இணைய வழியில் காண்பித்தனர். ஸ்டெதஸ்கோப், மைக்ரோஸ்கோப், பெரிஸ்கோப், கலைடாஸ்கோப், மடிப்பு நுண்ணோக்கி போன்றவற்றை மாணவர்கள் பயன்படுத்தி மகிழ்ந்தனர்.



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

IIT Chenai-ல் விமான பாதுகாப்பு தொழில்நுட்ப படிப்பு

 

சென்னை ஐ.ஐ.டி., பிரவர்தக், பிரெஞ்சு பல்கலையுடன் இணைந்து, ஏவியேஷன் சேப்டி மேனேஜ்மென்ட் என்ற, விமான பாதுகாப்பு தொடர்பான படிப்பை அறிமுகம் செய்துள்ளது.

இரண்டாண்டு கால படிப்பான இதில், மாதம் ஐந்து நாட்கள் நேர்முக விளக்கங்களுடனும், மற்ற நாட்கள் இணைய வழியிலும் கற்பிக்கப்படும். இதில், அரசு, தனியார் விமான நிறுவனங்களில் பணியாற்றும் வல்லுனர்கள் பங்கேற்கலாம்.

இதுவரை, விமான துறை நிபுனர்கள், பிரான்ஸ் சென்று, 12 லட்சம் ரூபாய்க்கு மேல் கல்விக் கட்டணம் செலுத்தி, இந்த படிப்பை படித்த நிலையில், தற்போது, சென்னை ஐ.ஐ.டி.,யின் முயற்சியால், டில்லியிலேயே படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

மேலும், கட்டணம் பாதியாவதுடன், நேர்முக வகுப்புகள் தவிர, மற்ற வகுப்புகளை பணியில் இருந்தபடியே அணுக முடியும்.

அடுத்தாண்டு ஜனவரியில், 30 நபர்களுடன் துவங்கும் இந்த படிப்புக்கு, டிசம்பர், 15க்குள், https://digitalskills. iitmpravartak.org.in/course_details.php?courseID=285&cart என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, dsa@iitmpravartak.net என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

இதுகுறித்து, சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி கூறுகையில், 70 ஆண்டு அனுபவம் உள்ள பிரெஞ்சு பல்கலையின் இ.என்.ஏ.சி.,யுடன் இணைந்து, பயணியர் விமான பாதுகாப்பில், தொழில்நுட்ப சவால்களை கையாளும் புதிய கல்வியை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம், என்றார்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

12 th MATHS Solution Booklet For All Units ( VOLUME I & II )

 IMG_20241025_220604

 12 th MATHS Solution Booklet For All Units ( VOLUME I & II )

12 th MATHS Solution Booklet For All Units - VOLUME I - Download here

12 th MATHS Solution Booklet For All Units - VOLUME II - Download here



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்

 

1331368

தமிழக பள்ளிக்கல்வித் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் மற்றும் இதர பணிகளை கண்காணிப்பதற்காக மாதந்தோறும் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பு மாதந்திர அலுவல் ஆய்வுக் கூட்டம் துறையின் செயலர் சோ.மதுமதி தலைமையில் காணொலிக் காட்சி வழியாக நேற்று நடைபெற்றது. இதில் துறைசார்ந்த இயக்குநர்கள், முதன்மைக் கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


இந்தக் கூட்டத்தில் தமிழக அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள நலத்திட்டங்களின் தற்போதைய நிலை, பழுதான நிலையில் உள்ள கட்டிடங்களை அகற்றும் பணிகளின் நிலை, நீதிமன்ற வழக்குகள் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முன்னேற்பாடுகள், மாணவர்களை தேர்வுக்கு தயார்ப்படுத்துதல் ஆகிய செயல்பாடுகளை தீவிரமாக மேற்கொள்ளவும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு செயலர் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. இத்தகவலை கல்வித் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

அடிக்கடி உங்களுக்கு யூரின் இன்ஃபெக்ஷன் வருமா… அப்படின்னா முதல்ல நீங்க செக் பண்ண வேண்டியது உங்க ஃபிரிட்ஜை தான்!!!

 சிறுநீர் பாதை தொற்று அல்லது யூரினரி ட்ராக்ட் இன்பெக்‌ஷன் என்பது சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை, சிறுநீர் பாதை போன்ற சிறுநீரக அமைப்பின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் ஏற்படலாம். ஆண்களுடன் ஒப்பிடும் பொழுது பெண்களுக்கு அடிக்கடி சிறுநீரக நோய் தொற்று ஏற்படுகிறது.

சிறுநீரக நோய் தொற்று என்பது ஒருவருக்கு அசௌகரியத்தையும், வலியையும் ஏற்படுத்தும். ஆனால் அது சிறுநீரகங்களுக்கு பரவி விட்டால் அதனால் மோசமான உடல்நல பிரச்சனைகள் ஏற்படலாம். ஒருவேளை உங்களுக்கு அடிக்கடி சிறுநீரக நோய் தொற்று ஏற்படுகிறது என்றால் அதற்கு உங்கள் ஃபிரிட்ஜில் உள்ள ஒரு பொருள் காரணமாக இருக்கலாம். கேட்கவே விசித்திரமாக இருக்கிறதா? ஆம், உண்மைதான். அது என்ன பொருள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள காரணம் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

அடிக்கடி இறைச்சிகளில் காணப்படும் எஸ்சீரிசியா கோலை (ஈ. கோலை) என்ற பாக்டீரியா அடிக்கடி ஏற்படும் சிறுநீரக நோய் தொற்றுகளுடன் தொடர்பு கொண்டு உள்ளதாக ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1990 மற்றும் 2019க்கு இடைப்பட்ட வருடங்களில் மட்டும் சிறுநீரக நோய் தொற்றுகள் பரவுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 1990 இல் 25.2 கோடியாக இருந்த இந்த தொற்றுகளின் எண்ணிக்கை 2019ல் 40 கோடியாக அதிகரித்துள்ளது.

சிறுநீர் பாதை நோய் தொற்று ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?:
சிறுநீர் பாதை நோய்த்தொற்று ஏற்படுவதற்கான பொதுவான காரணம் சிறுநீர் பாதை வழியாக சிறுநீர் பைக்குள் நுழைந்து அங்கு வளரும் பாக்டீரியாக்கள் ஆகும். இந்த தொற்றுகளுக்கு முக்கியமான காரணமாக இருப்பது ஈ. கோலை என்ற பாக்டீரியா. இது பெரும்பாலும் விலங்குகளின் குடல் பகுதிகளில் வாழ்கின்றது. இது தவிர உடல் உறவு, மோசமான சுகாதாரம் மற்றும் குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகள் காரணமாகவும் சிறுநீரக நோய் தொற்றுகள் ஏற்படலாம்.

சிறுநீர் பாதை நோய் தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் என்ன ஆகும்?:

சிறுநீர் பாதை நோய் தொற்றுகளுக்கு கட்டாயமாக சிகிச்சை பெற்றுக் கொள்வது அவசியம். இல்லையெனில் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் வலியுடன் கூடிய சிறுநீர் வெளியேற்றம் ஆகியவை மிதமான சிறுநீரக நோய் தொற்றுக்கான அறிகுறிகள். மறுபுறம் இதற்கு சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக விட்டு விட்டால் இந்த தொற்றுகள் சிறுநீரகங்களுக்கு பரவி அதனால் மோசமான பிரச்சனைகள் உண்டாகும்.

சிறுநீரக தொற்றுகள் மற்றும் கெட்டுப்போன இறைச்சிகள்:

2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கெட்டுப்போன இறைச்சிகளில் காணப்படும் ஈ. கோலை என்ற பாக்டீரியா சிறுநீர் பாதை நோய் தொற்றுகள் அதிகரிப்பதற்கான முக்கிய காரணியாக அமைவதாக கண்டுபிடித்துள்ளது. மேலும் அதிர்ச்சியூட்டும் விதமாக கடைகளில் விற்கப்படும் 30% முதல் 70% இறைச்சிகளில் ஈ. கோலை இருப்பதாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

எனவே, சிறுநீர் பாதை நோய் தொற்று ஏற்படுவதை தவிர்க்க நினைப்பவர்கள் போதுமான அளவு நீர்ச்சத்து எடுத்துக் கொள்வது அவசியம். மேலும் ஒருவர் சாப்பிடும் உணவு பாதுகாப்பானதாக இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். சுகாதாரமற்ற முறையில் சமைக்கப்பட்ட உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.