உங்க குழந்தை அடிக்கடி வயிறு வலிக்குதுனு சொல்றாங்களா..? இதுதான் காரணம்.. உடனே செக் பண்ணுங்க.!

 உணவு மூலம் பரவும் வைரஸ்கள் மற்றும் கணிக்க முடியாத பருவமழை காரணமாக பெங்களூரில் உள்ள குழந்தைகளிடத்தில் குடல் சார்ந்த பிரச்சனைகள் அதிகரித்துள்ளன. பாதிக்கப்பட்ட குழந்தைகளிடத்தில் வாந்தி, வயிற்றுப்போக்கு, பசியின்மை, நீரிழப்பு, உடல் வலி, சோர்வு, வயிற்று வலி போன்ற அறிகுறிகள் தென்படும்.

குடல் பாதையில் ஏற்படும் தொற்று காரணமாகவே வயிற்றுப்போக்கு உண்டாகிறது. இதற்கு பல வகையான பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணிகள் காரணமாக இருக்கின்றன. குறிப்பாக பருவமழையின் போது உணவு மூலம் பரவும் நோய்கள் காரணமாக இரைப்பை குடல் பிரச்சனைகள் அதிகரிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மழைக்காலங்களில் ஈரப்பதமும், மாய்ஸ்சரைசரும் அதிகரிப்பதால் உணவு மற்றும் தண்ணீரில் ஒட்டுண்ணிகள், பாக்டீரியா போன்றவை பல்கி பெருகுகின்றன. மாசடைந்த தெரு உணவுகள், மிச்சமான உணவுகளை ஒழுங்காக ஸ்டோர் செய்யாமல் இருப்பது, தூய்மையற்ற தண்ணீர் காரணமாக காலரா, டைபாய்டு, இரைப்பை குடல் அழற்சி போன்ற நோய்கள் வருவது அதிகரிக்கின்றன.

குழந்தைகளிட்த்தில் இரைப்பை குடல் சார்ந்த பிரச்சனைகள் அதிகரிக்க என்ன காரணம்?

  • முதற் காரணம் டயட். சர்க்கரை, கொழுப்பு அதிகமுள்ள மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை குழந்தைகள் அதிகமாக உட்கொள்கிறார்கள். இதனால் மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். நார்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் ஆகியவற்றை போதுமான அளவு எடுத்துக்கொள்ளாததன் காரணமாக மலச்சிக்கல் பிரச்சனை குழந்தைகளுக்கு வருகிறது.

  • ரோடோவைரஸ் மற்றும் நோரோவைரஸ் போன்றவையும் இரைப்பை குழல் அழற்சியை உண்டாக்கி வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலியை வரவழைக்கின்றன. அதேப்போல் கெட்டுப்போன உணவு அல்லது மாசடைந்த தண்ணீர் மூலம் பரவும் சால்மோனெல்லா அல்லது ஈ-கோலி பாக்டீரியாவாலும் இதேப்போன்ற அறிகுறிகள் குழந்தைகளிடத்தில் காணப்படுகின்றன. சில சமயங்களில் வேர்க்கடலை, முட்டை, ஷெல்ஃபிஷ் போன்ற உணவுகள் அலர்ஜியை உண்டாக்குவதாலும் குடல் சார்ந்த பிரச்சனைகள் வருகின்றன.

  • மன அழுத்தம், படபடப்பு போன்ற உளவியல் காரணிகளும் குழந்தைகளின் செரிமான ஆரோகியத்தில் குறிப்பிடத்குந்த தாக்கத்தை செலுத்துகின்றன. குழந்தைகள் தங்களது மனரீதியான பிரச்சனைகளை வயிற்று வலி, மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற உடலியல் அறிகுறிகள் மூலமே வெளிப்படுத்துகிறார்கள். குறிப்பிட்ட சில மருந்துகளை தவறுதலாக கொடுக்கும் போது கூட இதுபோன்ற பிரச்சனைகள் வருகிறது.

  • எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (IBS) மற்றும் அடிவயிற்று வலி ஆகியவை குழந்தைகளிடத்தில் பரவலாக காணப்படுகின்றன. நீரிழப்பு மற்றும் போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதால் மலச்சிக்கல் மற்றும் குடல் சார்ந்த பிரச்சனைகள் அதிகரிக்கின்றன. செரிமான ஆரோக்கியத்தை பராமரிப்பதில் நீர்ச்சத்து எவ்வுளவு முக்கியமானது என்பதை இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.

    • அல்சர், க்ரோன் போன்ற குடல் அழற்சி நோய்கள் தீவிர இரைப்பை குடல் அறிகுறிகள் வருவதற்கு காரணமாக இருக்கின்றன. தைராய்டு கோளாறுகள் அல்லது டயாபடீஸ் போன்ற நாள்பட்ட பிரச்சனைகளும் செரிமான செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குழந்தைகளின் இரைப்பை குடல் பிரச்சனைகளுக்கு மூலக் காரணம் என்ன என்பதை கண்டறிந்தால் மட்டுமே அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள முடிவதோடு இதுபோன்ற பிரச்சனைகள் இனி வராமல் தடுக்க முடியும்.


    • 🔻 🔻 🔻 

பெண்களை அதிகமாக தாக்கும் 5 புற்றுநோய்கள்.. தடுக்கும் வழிகள் என்ன..?

 

கேன்சர் என்பது உலக அளவில் மில்லியன் கணக்கான நபர்களை பாதிக்கும் ஒரு மோசமான உயிர்கொல்லி நிலை ஆகும். இது ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. பல வகை புற்றுநோய்கள் உள்ளதால் இதன் அறிகுறிகள் மற்றும் விளைவுகள் பல உள்ளன.

பெண்களைக் காட்டிலும் ஆண்கள் பொதுவாக அவர்களுடைய மரபணு காரணமாக புற்று நோய்க்கு அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்று அறிவியல் ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. எனினும் இந்தியாவில் இந்த நிலை நேர்மாறாக இருக்கிறது. இங்கு பெண்கள் அதிக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் போன்ற மகப்பேறு சம்பந்தப்பட்ட புற்று நோய்களால் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு மரபணு, சுற்றுச்சூழல் காரணிகள் மற்றும் வாழ்க்கை முறை தேர்வுகள் போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளது.

இந்த புற்று நோய்களுக்கான அறிகுறிகளை அறிந்து வைத்திருப்பது நோயை ஆரம்ப கட்டத்தில் கண்டறிவதற்கும், அதற்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதற்கும், நோயிலிருந்து மீண்டு வருவதற்கும் மிக மிக முக்கியம். ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு இந்த புற்றுநோய்க்கான அறிகுறிகள் பற்றி தெரிவதில்லை. எனவே இந்த பதிவில் பெண்களை அதிக அளவில் தாக்கக்கூடிய புற்றுநோய்கள் மற்றும் அதன் அறிகுறிகள் என்னென்ன என்பது பற்றி விளக்கமாக தெரிந்து கொள்ளலாம்.

  • கருப்பை புற்றுநோயானது அண்டகங்களில் துவங்குகிறது. இது குடும்ப வரலாறு, வயது மற்றும் BRCA1 மற்றும் BRCA2 போன்ற மரபணு மாற்றங்களால் ஏற்படுகிறது. வயிற்று உப்புசம், இடுப்பு குறி பகுதியில் வலி மற்றும் மலம் கழிக்கும் வழக்கத்தில் மாற்றங்கள் போன்றவை இந்த புற்றுநோயின் சில அறிகுறிகள்.

  • கருப்பை வாய் புற்றுநோய் என்பது கருப்பை வாயில் இருந்து தொடங்குகிறது. இது பொதுவாக பாலியல் உறவின் போது பரவும் ஹியூமன் பாபிலோமா வைரஸ் (human papillomavirus - HPV) காரணமாக ஏற்படும் தொற்றின் விளைவாக உண்டாகும் புற்றுநோய். பிறப்புறுப்பு பகுதியில் இருந்து அசாதாரணமான ரத்தக்கசிவு, உடலுறவின் பொழுது வலி மற்றும் பிறப்புறுப்பில் இருந்து வழக்கத்திற்கு மாறாக திரவங்கள் வெளியேறுதல் போன்றவை இந்த புற்றுநோயின் அறிகுறிகள்.

  • வுல்வார் (Vulvar) புற்றுநோய் என்பது பெண்களின் பிறப்புறுப்பு பகுதி மற்றும் சிறுநீர் கழிக்கும் பகுதிக்கு இடையே உள்ள ஒரு தோலில் ஏற்படும் புற்றுநோய் வகையாகும். இது HPV தொற்று, புகைப்பிடித்தல் மற்றும் புற்றுநோய்க்கு முந்தைய நிலைமைகள் காரணமாக ஏற்படுகிறது. வுல்வா பகுதியில் தொடர்ச்சியான அரிப்பு, எரிச்சல் மற்றும் அசாதாரணமான வளர்ச்சிகள் இந்த புற்றுநோய்க்கான அறிகுறிகள்.

  • எண்டோமெட்ரியம் எனப்படும் கருப்பையின் ஓரங்களில் துவங்கும் புற்றுநோய். இது யூட்டரின் அல்லது எண்டோமெட்ரியல் புற்றுநோய் (Uterine/Endometrial Cancer) என்று அழைக்கப்படுகிறது. உடற்பருமன், வயது, ஹார்மோன் சிகிச்சை மற்றும் குழந்தையின்மை போன்றவை இந்த புற்றுநோய்க்கான சில அபாய காரணிகளாக அமைகின்றன. பிறப்பு உறுப்பில் அசாதாரணமான ரத்த கசிவு, வழக்கத்திற்கு மாறான உடல் எடை குறைவு, இடுப்பு குழி பகுதியில் வலி போன்றவை இந்த புற்றுநோயின் அறிகுறிகள்.

  • யோனி புற்றுநோய் என்பது HPV தொற்றுஃ புகைப்பிடித்தல் மற்றும் கருவறையில் இருக்கும் பொழுது diethylstilbestrol (DES) -க்கு வெளிப்படுத்துதல் காரணமாக ஏற்படுகிறது. பிறப்புறுப்பு பகுதியில் இருந்து அசாதாரணமான ரத்த கசிவு, பிறப்பு உறுப்பில் வழக்கத்திற்கு மாறான திரவ வெளியேற்றம், உடலுறவின்பொழுது வலி போன்றவை யோனி புற்றுநோயின் அறிகுறிகள்.

புற்றுநோயை ஆரம்ப கட்டத்தில் கண்டறிவதற்கு பெண்கள் வருடத்திற்கு ஒருமுறை Pap சோதனை மற்றும் HPV சோதனை போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

இப்போது இந்த புற்று நோய்களிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பதற்கான ஒரு சில குறிப்புகளை தெரிந்து கொள்வோம்…

  • கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைப்பதற்கு மறக்காமல் HPV தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்.

  • ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது புற்றுநோயை தடுப்பதற்கு மட்டுமல்லாமல் உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை கொண்டுள்ளது. சரிவிகித உணவை சாப்பிடுவது, ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பது, தினமும் உடற்பயிற்சி செய்வது, புகையிலையை தவிர்ப்பது மற்றும் மது அருந்துவதை குறைத்துக் கொள்வது போன்றவை ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் அடங்கும்.

  • உங்களுடைய வயது மற்றும் அபாய காரணிகளின் அடிப்படையில் அடிக்கடி புற்றுநோய் சோதனைகளை மேற்கொள்வது உதவக் கூடும்.

  • உங்கள் குடும்பத்தில் இதற்கு முன்பு யாருக்காவது மகப்பேறு சம்பந்தப்பட்ட புற்றுநோய்கள் ஏற்பட்டு இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஈடுபடுவது அவசியம்.


🔻 🔻 🔻 

தினமும் பால் கலந்த டீ குடிப்பதால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் தெரியுமா..?

 பாலைக் கொண்டு தயாரிக்கப்படும் டீ, இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள பல கலாச்சாரங்களில் ஒரு முக்கியப் பொருளாக மாறியுள்ள சுவையான மற்றும் நறுமணமுள்ள பானமாகும். காபியை விட டீயை விரும்பி குடிப்போர் எண்ணிக்கை ஏராளம்.

அதுவும் இந்தியர்கள் சரியான டீ பிரியர்கள். காலையில் எழுந்ததும் பெரும்பாலானோர் ஒரு கப் டீ குடிக்காமல் அவர்களுக்கு நாள் நகரவே நகரத்து. ஆனால் நீங்கள் பால் டீயை தினசரி குடிக்கும்போது உங்கள் உடலுக்கு என்ன நடக்கும் என்பதை பற்றி பார்ப்போம். ஹங்கிரி கோலாவின் மூத்த ஊட்டச்சத்து நிபுணர் இப்சிதா சக்ரபர்த்தி கூறுகையில், பாலில் உள்ள கால்சியம், உங்கள் எலும்புகளை கொஞ்சம் வலுவடைய செய்யும். தேநீரில் உள்ள காஃபின் உங்களை அதிக விழிப்புடனும், கவனத்துடனும் உணர வைக்கும்.

தேயிலையில் ஆன்டிஆக்ஸிடென்ட்களால் நிறைந்துள்ளது, அவை உங்கள் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கும் சிறிய கவசங்கள் போன்றவை. இருப்பினும், சிலருக்கு பால் மற்றும் தேநீர் குடலில் நன்றாக கலக்காது. இதனால் வயிற்று உப்புசம், வாயு மற்றும் அஜீரணத்திற்கு வழிவகுக்கும். பால் டீ-க்களில் சர்க்கரை மற்றும் கலோரிகள் நிரம்பியுள்ளன. இந்த அதிகப்படியான இனிப்பு உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும் மற்றும் டைப் 2 நீரிழிவு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.

News18

டீ-யில் காஃபைன் மட்டுமின்றி, தியோஃபில்லைனும் உள்ளது. அளவுக்கு அதிகமாக டீயை ஒருவர் வெறும் வயிற்றில் குடிக்கும் போது, அது உடலில் வறட்சியை ஏற்படுத்தி, தீவிரமான மலச்சிக்கல் பிரச்சனையை உண்டாக்கும். டீ அல்லது கஃபி குடிப்பதாக இருந்தால், அதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பே ஒரு க்ளாஸ் தண்ணீர் பருகுங்கள். இது ஆசிட் அளவை குறைத்து செரிமானத் தொல்லையை போக்கும்.

பால் டீயில் உள்ள காஃபின் உடலை எவ்வாறு பாதிக்கிறது, குறிப்பாக தினமும் குடிக்கும்போது?

தினமும் குடிக்கும்போது, ​​அது உங்களுக்கு விரைவான பிக்-மீ-அப்பை வழங்குவதோடு, சிறப்பாக கவனம் செலுத்தவும் உதவுகிறது. ஆனால் அதிகப்படியான காஃபின் கவலை, அமைதியின்மை மற்றும் தூக்குமின்மைக்கு வழிவகுக்கும் என்று சக்ரபர்த்தி கூறியுள்ளார்.

  • பால் டீயில் உள்ள பொருட்கள் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கலாம்: பால் டீயில் உள்ள பொருட்கள் உங்கள் செரிமானத்தை பாதிக்கலாம்.

  • கால்சியம் மற்றும் வைட்டமின் டி: இந்த பால் ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியமான எலும்புகளுக்கு அவசியம் மற்றும் உங்கள் வளர்சிதை மாற்றம் சீராக இயங்க உதவுகிறது.

  • ஆன்டிஆக்ஸிடென்ட்: இவை உங்கள் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன.

தினசரி பால் டீ குடிக்கும்போது எடை அதிகரிப்பு அல்லது பிற சிக்கல்களுக்கு பங்களிக்குமா?

தினசரி பால் டீ குடிப்பது என்பது ஆரோக்கியமான எடை பராமரிப்பை கடினமாக்கும் என்று சக்ரபர்த்தி ஒப்பு கொள்கிறார்.

கூடுதலாக, அதிகப்படியான காஃபின் அதிகமாக கழிப்பறைக்குச் செல்ல தூண்டுகிறது. பால் டீயில் உள்ள குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்கள் அல்லது கலவைகள் செரிமானம் அல்லது வளர்சிதை மாற்றத்தை பாதிக்கலாம். பால் டீயில் இருந்து வெளியேறும் சர்க்கரை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீர்குலைத்து, அவற்றை விரைவாக மேலும் கீழும் செல்லச் செய்யும். காலப்போக்கில், இது இன்சுலின் எதிர்ப்பு மற்றும் நீரிழிவு நோய்க்கு பங்களிக்கும், என்று நிபுணர் பரிந்துரைக்கிறார். பால் டீயில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் கலவையானது உங்கள் உடலில் குறிப்பாக வயிற்றைச் சுற்றி கொழுப்பைச் சேமிக்க ஊக்குவிக்கும்.

தினமும் பால் டீ குடிப்பவர்கள் மனதில் கொள்ள வேண்டியது என்ன?

பால் டீ ஒரு சுவையான மற்றும் மகிழ்ச்சியான பானமாக இருக்கலாம், ஆனால் நீங்கள் அதை எவ்வளவு அடிக்கடி குடிக்கிறீர்கள் மற்றும் எந்த வகையைத் தேர்வு செய்கிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

உடல்களை ஆரோக்கியமாக வைத்திருக்க, சக்ரபர்த்தி பின்வருவனவற்றைப் பரிந்துரைக்கிறார்:

  • டீயை அதிகமாக குடிக்காதீர்கள்.

  • முடிந்தவரை குறைவான சர்க்கரை மற்றும் கிரீமி இல்லாத பால்களை தேர்ந்தெடுக்கவும்.

  • உங்களை ஹைட்ரேட்டாக வைத்திருங்கள்: இதற்கு தினசரி நீங்கள் நிறைய தண்ணீர் அருந்துவதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

  • உங்களுக்கு ஏதேனும் செரிமான கோளாறுகள் இருந்தால் பால் டீ குடிப்பதை குறைக்கவும் அல்லது வேறு வகையை முயற்சிக்கவும்.


🔻 🔻 🔻 

வாந்தி.. தொண்டை புண்.. வயிற்றில் புற்றுநோய் இருப்பதை வெளிப்படுத்தும் 5 அறிகுறிகள்.!

 

நாம் சொல்கிறபடி உடல் இயங்காது. திடீரென பல வித்தியாசமான வழிகளில் நடந்து கொள்ளும். ஆனால் எல்லா அடிவயிற்று அறிகுறிகளும் புற்றுநோயின் ஆபத்தை குறிக்குமா..? இது இரைப்பை புற்றுநோய் என்றும் அழைக்கப்படுகிறது. வயிற்றுடைய செல் பிரிவு கட்டுப்படுத்த முடியாமல் போகும்போது நாம் சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணமாகாமல் போகலாம்.

வயிற்றுப் புற்றுநோய் எங்கு வேண்டுமானாலும் வரலாம் என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும். சில சமயங்களில் தும்மல் மற்றும் இருமலின் போது கூட ரத்தம் வெளியேறும். இதுபோன்ற சமயங்களில் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டியது அவசியமாகும்.

இரைப்பை உணவுக்குழாய் இணையும் பகுதியில் தான் வயிற்றுப் புற்றுநோய் ஆரம்பமாகிறது. இது எளிமையாக உணவுக்குழாய் என அழைக்கப்படுகிறது. குழல் வடிவத்தில் இருக்கும் இதன் வழியாகவே நாம் சாப்பிடும் உணவுகள் செல்கிறது. இந்த குழாய் வழியாக உணவுகள் இரைப்பையை சென்றடைகின்றன. இது உணவுக்குழாய் என்று அழைக்கப்படுகிறது. வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறிகள் சில நேரங்களில் வெளிப்படையாக தெரிவதில்லை.

குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே புற்றுநோயின் அறிகுறிகளை உடல் வெளிப்படுத்த தொடங்குகிறது. ஆனால் நாம்தான் அதை கண்டுகொள்வதில்லை. இதுகுறித்த விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே நம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்.

வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறிகள் என்னவென்று இப்போது பார்ப்போம் வாருங்கள்.

  • வாந்தி எடுக்கும் போது ரத்தம் கலந்து வந்தால், எக்காரணம் கொண்டும் அதை புறக்கணிக்காதீர்கள். சில சமயங்களில் தும்மல் மற்றும் இருமலின் போது கூட இரத்தம் வெளியேறும். இதுபோன்ற சமயங்களில் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டியது அவசியமாகும்.

  • வயிற்றுப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் சாப்பிடும் உணவு ஒழுங்காக செரிமானமாகவில்லை என்று தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும். அப்போதுதான் கடினமான சூழ்நிலை ஏற்பட்டாலும் கூட ​​அதை எளிதாக சமாளிக்க முடியும்.

  • தொண்டை புண்ணும் வயிற்று புற்றுநோயின் அறிகுறியாக இருக்க வாய்ப்புள்ளது. ஆகையால் எந்தச் சூழ்நிலையிலும் இதை புறக்கணிக்காதீர்கள். நிலைமை மோசமாகும் முன் உடனே மருத்துவரின் ஆலோசனையை பெறவும்.

  • வயிற்றில் புற்றுநோய் இருந்தால், மலம் கருப்பு நிறத்தில் வெளியேறும். ஆகையால் மலத்தின் நிறத்தில் எப்போதாவது மாற்றம் ஏற்பட்டால், காலம் தாழ்த்தாமல் உடனடியாக அதை சரிசெய்யும் முயற்சியை எடுங்கள்.

  • வயிற்றுப் புற்றுநோய் அல்லது வேறு இடங்களில் புற்றுநோய் இருந்தாலோ முதலில் உடல் எடை குறையத் தொடங்கும். தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகி உங்கள் சந்தேங்கங்களை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.
    உங்கள் உடலை முழுமையாக பரிசோதித்து பார்த்த பிறகே சரியான நிலவரத்தை கண்டறிய முடியும். புற்றுநோய் தொடர்பாக ஏதாவது அறிகுறிகள் இருந்தால் நீங்களாக எதையும் முடிவு செய்யாமல் தகுந்த மருத்துவரிடம் கலந்தாலோசித்த பின்னரே முடிவெடுக்க வேண்டும்.

🔻 🔻 🔻 

TNPSC குரூப் 2, 2A மெயின்களுக்கு எங்கே, எதைப் படிக்க வேண்டும்?

 
TNPSC குரூப் 2, 2A மெயின்களுக்கு எங்கே, எதைப் படிக்க வேண்டும்?

அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Download PDF File Below 👇👇👇

Click here to download pdf file



🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

Tnpsc Group 2 Prelims Syllabus General Tamil PDF

 Tnpsc Group 2 Prelims Syllabus General Tamil PDF

அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Download PDF File Below 👇👇👇

Click here to download pdf file



🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

TNPSC Group 4 வினாக்கள் புத்தகத்தில் எங்கு இருந்து கேட்கப்பட்டது! விரிவான PDF

 TNPSC Group 4 வினாக்கள் புத்தகத்தில் எங்கு இருந்து கேட்கப்பட்டது! விரிவான PDF

அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Download PDF File Below 👇👇👇

Click here to download pdf file



🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

TNPSC Group 4 தேர்வில் நடப்பு நிகழ்வுகள் எங்கெங்கு இருந்து கேட்கப்பட்டது?

 TNPSC Group 4 தேர்வில் நடப்பு நிகழ்வுகள் எங்கெங்கு இருந்து கேட்கப்பட்டது?

அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Download PDF File Below 👇👇👇

Click here to download pdf file



🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

6th to 12th Tamil Short Notes PDF

 
6th to 12th Tamil Short Notes PDF

அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Download PDF File Below 👇👇👇

STDDownload Link
6thDownload PDF
7thUpdate Soon
8thDownload PDF
9thDownload PDF
10thDownload PDF
11thDownload PDF
12thDownload PDF

6th to 12th Tamil Short Notes PDF


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

TNPSC GROUP II / IIA – 80 DAYS WHERE TO STUDY PLAN

TNPSC GROUP II / IIA – 80 DAYS WHERE TO STUDY PLAN

 அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Download PDF File Below 👇👇👇

Click here to download pdf file



🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

பெண்கள் முன்னேற்றம் சுதந்திரத்திற்கு பிறகு – Handwritten PDF

 

பெண்கள் முன்னேற்றம் சுதந்திரத்திற்கு பிறகு – Handwritten PDF

அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Download PDF File Below 👇👇👇

Click here to download pdf file



🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

தமிழக அரசு திட்டங்கள் 2021 – 2024 (Tamilnadu Welfare Schemes)

 
தமிழக அரசு திட்டங்கள் 2021 – 2024 (Tamilnadu Welfare Schemes)

அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Download PDF File Below 👇👇👇

Click here to download pdf file



🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

NIFTEM நிறுவனத்தில் Consultant காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

 NIFTEM நிறுவனத்தில் Consultant காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனம் தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் (NIFTEM) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Administrative Officer, Consultant பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

NIFTEM காலிப்பணியிடங்கள்:

Administrative Officer, Consultant பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Consultants கல்வி தகுதி:

மத்திய அல்லது மாநில அரசு அதிகாரியாக பணிபுரிந்தவர்கள், பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

NIFTEM வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Consultants ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் Pay Matrix Level 10 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

NIFTEM தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 21 மற்றும் 45 நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF



🔻🔻🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


BEL நிறுவனத்தில் Project Engineer வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.40,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

 BEL நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Project Engineer-I பணிக்கென காலியாக உள்ள 21 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

BEL காலிப்பணியிடங்கள்:

BEL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Project Engineer-I பணிக்கென மொத்தம் 21 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Project Engineer கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அனுமதி பெற்று இயங்கும் பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு தகுதியானவர்கள்.

BEL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Project Engineer ஊதிய விவரம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 1st Year – Rs. 40,000/-
  • 2nd Year – Rs. 45,000/-
  • 3rd Year – Rs. 50,000/-
  • 4th Year – Rs. 55,000/-

BEL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 28.06.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


🔻🔻🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


VIT வேலூர் பல்கலைக்கழகத்தில் JRF வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.37,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

VIT வேலூர் பல்கலைக்கழகத்தில் JRF வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.37,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

வேலூர் தொழில்நுட்ப நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

VIT காலிப்பணியிடங்கள்:


தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Junior Research Fellow கல்வி தகுதி:


விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc / ME / M.Tech / MS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIT வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Junior Research Fellow ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.37,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIT தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.06.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔻🔻🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group