EE - 4 & 5th - lesson plan - June - 1st Week - pdf

 lesson plan is a teacher’s guide for facilitating a lesson. It typically includes the goal (what students need to learn), how the goal will be achieved (the method of delivery and procedure) and a way to measure how well the goal was reached (usually via homework assignments or testing). This plan is a teacher’s objectives for what students should accomplish and how they will learn the material. Here, a teacher must plan what they want to teach students, why a topic is being covered and decide how to deliver a lecture. Learning objectives, learning activities and assessments are all included in a lesson plan. No two lesson plans are the same. 


What does a lesson plan entail? The most effective lesson plans include the following components.

Lesson objectives (what should students be able to do after a lesson?)

Materials (what resources do students need to support their learning?)

Learning activities (what activities must students complete to achieve the learning objectives?)

Time requirements (how much time do students need to engage in a learning activity?)

Related requirements (how does a lesson support national education standards?)

Assessment (how will learning be measured?)

Evaluation and reflection (how will you create a more successful lesson plan in the future?)

Where can I find lesson plan resources? There are several resources available to assist educators in building their lesson plans. Educators such as Jennifer Gonzalez—the innovator behind Cult of Pedagogy—have countless instructional resources that help design and deliver effective lessons. Institutions like Algonquin College in Ottawa also offer lesson plan templates and guidelines for writing a results-driven plan. Educational technology platforms including Top Hat provide free lesson plan templates to assist with organizing lectures around a set of learning outcomes. The platform also offers a backward design template that can help educators prepare lessons around an end goal or desired learning objective.

11111111111111111111

Lesson Materials

The third section on your lesson plan is the list of materials that you need to teach the lesson and measure student outcomes.

This section prepares you to deliver your lessons every day. Without this list, you may accidentally forget to print an important document or sign out the shared laptop cart!

Common types of lesson materials include:

Student handouts

Textbooks

Visual aids

Grading rubrics

Activity packets

Computers / Tablets

The list of materials for each lesson depends on what you plan to teach, how you’ll teach it, and how you’ll measure lesson objectives.



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

பள்ளிகள் திறக்கும் முன்... பள்ளிக்கல்வி துறையின் உத்தரவு

 




தமிழகத்தில் ஜூன் 6ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிகள் திறப்புக்கு முன்னரும், திறந்த பிறகும் செய்ய வேண்டிய கல்வி செயல்பாடுகள், கல்வி சாரா செயல்பாடுகள், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் போன்றவற்றை, பள்ளிக்கல்வி துறை வெளியிட்டுள்ளது.


இது தொடர்பாக, பள்ளிக் கல்வி இயக்குனர் அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் விபரம்:



பள்ளிகள் திறக்கும் முன்...



பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகளை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்


மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை சீரமைத்து, பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்


குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து, பாதுகாப்பான குடிநீர் கிடைக்க செய்ய வேண்டும்


பாதுகாப்புக்காக

பள்ளி வளாகத்தில் மாணவர்களின் முழு பாதுகாப்பிற்கு, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முழு பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்


பழுதடைந்த கட்டடங்கள், உடைந்து விழும் நிலையில் சுற்றுச்சுவர் இருந்தால், அப்பகுதிகளுக்கு மாணவர்கள் செல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்


வளாகத்தில் கட்டடங்களுக்கு இடையூறாக உள்ள கிளைகளை அகற்றி, மரங்கள் விழாத வகையில், இருப்பதை உறுதி செய்ய வேண்டும்



மாணவர் சேர்க்கை


ஜூன் 6ம் தேதியன்று, அனைத்து பள்ளிகளிலும், மாணவர் சேர்க்கையை கொண்டாட வேண்டும்


தொடக்கப் பள்ளிகளில் முதல் வகுப்பு சேர்க்கை; பள்ளி செல்லும் வயதுடைய அனைத்து குழந்தைகளையும், பள்ளியில் சேர்ப்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்


பள்ளிகள் தங்கள் சூழலுக்கு ஏற்ப வாரத்தின் ஏதாவது ஒரு நாளில், கடைசி இரு பாட வேளைகளில், கல்வி இணை செயல்பாடுகளை திட்டமிடலாம்


வாரத்திற்கு இரண்டு பாடவேளை உடற்கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த நேரத்தில், உடற்பயிற்சி ஆசிரியர்கள், அனைத்து மாணவர்களையும் விளையாட வைக்க வேண்டும்


வாரத்திற்கு ஒரு நாள் அனுபவ பகிர்வு அல்லது நீதி போதனை பாட வேளையாக ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பாட வேளைக்கு சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர் பொறுப்பேற்று, மாணவர்களின் மனநலன் சார்ந்து, தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும்.


இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

"பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாஸை காட்டி பயணிக்கலாம்" - போக்குவரத்து துறை அறிவிப்பு.

 



 "புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாஸை  காட்டி பயணிக்கலாம்" என போக்குவரத்து துறை அறிவிப்பு.


*மாணவ, மாணவியருக்கு விரைந்து பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது


*மாணவர்களின் விவரங்கள் முழுமையாக கிடைத்தவுடன் புதிய இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்


*கோடைவிடுமுறை முடிந்து, ஜூன் 6ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் போக்குவரத்து துறை அறிவிப்பு



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

நம்ம ஸ்கூல் நம்ம ஊர் பள்ளி (NSNOP) இணையதளம் வழியாக பெறுதல் - வழிகாட்டு நெறிமுறைகள் - Director Proceedings

 பள்ளிகளுக்கு வழங்கப்படும் தனிநபர் பங்களிப்புகளை நம்ம ஸ்கூல் நம்ம ஊர் பள்ளி (NSNOP) இணையதளம் வழியாக பெறுதல் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு


Click Here to Download - Namma School - Namma Ooru Palli - Director Proceedings - Pdf


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

குரூப்-1 முதல்நிலை தேர்வுக்கு இலவச பயிற்சி

  

 1256774

சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 முதல்நிலை தேர்வுக்கு 90 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 28-ம் தேதி வெளியிடப்பட்டது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி இளநிலை பட்டப் படிப்பு ஆகும்.


முதல்நிலை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் கடந்த மே 22-ம் தேதி தொடங்கப்பட்டது. இப்பயிற்சி திங்கள் முதல் வெள்ளி வரை நடத்தப்பட்டு வருகின்றன.


பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் தேர்வுக்கு விண்ணப்பம் செய்ததற்கான விண்ணப்ப நகல், தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் சென்னை-32, கிண்டி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக அலுவலக வேலை நாட்களில் அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


மேலும் விவரங்களுக்கு, decgc.chennai24@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

இசை பள்ளிகள், கவின் கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்: கலை பண்பாட்டு துறை இயக்குநர் அறிவிப்பு

 

1256772

கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் இசைப் பள்ளிகள்,கவின் கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது என கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.


இதுகுறித்து கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் சே.ரா.காந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை (சீர்காழி), திருவாரூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 17 மாவட்டங்களில் இசைப் பள்ளிகள் செயல்படுகின்றன.


இதேபோல், சென்னை, கோவை, திருவையாறு, மதுரைஆகிய இடங்களில் அரசு இசைக்கல்லூரிகள் செயல்படுகின்றன. இக்கல்லூரிகளில் இசை, நாட்டியம் ஆகிய பிரிவுகளில் பட்டப்படிப்புகளும் மேற்காண் கலைகளோடு கிராமியக் கலைகளில் பட்டயப் படிப்புகளும் உள்ளன.


சென்னை மற்றும் கும்பகோணம் ஆகிய இடங்களில் செயல்படும் அரசு கவின் கலைக் கல்லூரிகளில் ஓவியக்கலை சார்ந்த பிரிவுகளில் இளங்கலைப் பட்டம் மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளும், மாமல்லபுரத்தில் செயல்படும் அரசினர் கட்டிடக் கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரியில் சிற்பக் கலையில் இளங்கலைப் பட்டம் மற்றும் கோயில் கட்டிடக் கலையில் பி.டெக் படிப்புகளும் உள்ளன.


இந்நிலையில், இக்கல்வியகங்களில் 2024-25-ம் கல்வி ஆண்டுக்கான சேர்க்கை தற்போது தொடங்கியுள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள படிப்புகள் விவரம், வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதி விவரங்களை www.artandculture.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். மேற்காணும் 7 கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்த இணையதளத்தின் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

பயிலும் பள்ளியிலேயே ஆதார் எனும் சிறப்புத் திட்டத்தை பள்ளி தொடங்கும் முதல் நாளிலேயே தொடங்க பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உத்தரவு!

 IMG_20240530_101138


பயிலும் பள்ளியிலேயே ஆதார் எனும் சிறப்புத் திட்டத்தை பள்ளி தொடங்கும் முதல் நாளிலேயே தொடங்க பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உத்தரவு!

D.O. Letter for Aadhaar Registration and Renewal at schools👇

Download here



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

ADW - பள்ளி ஆசிரியர்களுக்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு.

 

IMG_20240530_211421

2024 - 2025 ஆம் கல்வி ஆண்டிற்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நல நல மேல்நிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் , முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் , கணினி பயிற்றுநர் , உடற்கல்வி இயக்குநர் / உடற்கல்வி ஆசிரியர் ஆகிய பணியிடங்களுக்கு ( மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் ) நடுநிலைப்பள்ளி / ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு ( மாவட்டத்திற்குள் மட்டும் ) 10.06.2024 அன்று காலை 10.00 மணி அளவில் அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பணியிட மாறுதல் கோரி இணையவழியில் விண்ணப்பித்தவர்கள் மட்டும் இணையவழி பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

2024-2025 Counseling Letter 

Download here


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

எண்ணும் எழுத்தும் | முதல் பருவ பயிற்சி கால அட்டவணை & DEE, SCERT Proceedings

 IMG_20240530_194838

எண்ணும் எழுத்தும் பயிற்சி -2024- 2025 ஆம் முதல் பருவத்திற்கான மாநில , கல்வியாண்டு - - DIET மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான பயிற்சி கல்வியாளர்கள் , ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்களை பணி விடுவிப்பு தொடக்கப்பள்ளி செய்தல் DEE,  SCERT Proceedings...

 E.E. TERM - I TRAINING  & DIR PROCEEDING 👇

Download here


Training Schedule 

* முதல் பருவத்திற்கான மாவட்ட அளவிலான எண்ணும் எழுத்தும் சார்ந்த கருத்தாளர் பயிற்சி 1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு 18.06.2024 மற்றும் 19.06.2024 ஆகிய இரு நாட்களிலும் 


* 4 & 5 ஆம் மற்றும் 21.06.2024 ஆகிய இரு நாட்களிலும் வகுப்பிற்கு 20.06.2024 


* வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் சார்ந்த பயிற்சி 1 முதல் 5 ஆம் வகுப்பிற்கு 24.06.2024 முதல் 29.06.2024 - க்குள் 


* மாவட்ட அளவிலான பயிற்சிக்கு திட்டமிடுவதற்கு 1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு 14.06.2024 மற்றும் 15.06.2024 அன்றும் , 4 & 5 ஆம் வகுப்பிற்கு 18.06.2024 . மற்றும் 19.06.2024 அன்றும் திட்டமிடல் கூட்டத்தை நடத்திடுமாறும் , 


* ஒன்றிய அளவிலான பயிற்சிக்கு திட்டமிடுவதற்கு 1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு 20.06.2024 மற்றும் 21.06.2024 அன்றும் , 4 & 5 ஆம் வகுப்பிற்கு 22.06.2024 மற்றும் கூட்டத்தை திட்டமிடல் 24.06.2024 அன்றும் நடத்திடுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

தமிழகம் முழுவதும் 900 தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்?

 தமிழகம் முழுவதும் பள்ளிகளில் தற்போது கோடைவிடுமுறை விடப்பட்டுள்ளது. ஜுன் 2 வது வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 900 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரியவந்துள்ளது. 


பதவி உயர்வுக்கு தகுதியான ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு காரணமாக இந்த பணியிடங்களை நிரப்ப முடியவில்லை என பள்ளிக்கல்வித்துறை விளக்கம் தெரிவித்துள்ள. 2024-25ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது அனைத்து பள்ளிகளிலும் நடத்தப்பட்டு வருவதால் தலைமை ஆசிரியர் இல்லாமல் இந்தப் பணிகள் வெகுவாக பாதிக்கப்படுகிறது. இதனால் விரைந்து தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என  மற்ற ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

IMG-20240527-WA0006


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

புதுச்சேரி அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் முழுமையாக அமல்: சீருடையில் மாற்றமில்லை!

சிபிஎஸ்இ பாடத்திட்டம் புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் முழுமையாக அமலாகிறது. சீருடையில் மாற்றமில்லை. ஜூன் 6-ல் பாடப்புத்தகம், நோட்டு விநியோகிக்க கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்கள் உள்ளன. தனி கல்வி வாரியம் இல்லாததால் புதுச்சேரி, காரைக்காலில் தமிழக பாடத்திட்டமும், மாஹேயில் கேரள பாடத்திட்டமும், ஏனாமில் ஆந்திர பாடத்திட்டமும் அமலில் இருந்தது. தற்போது புதுவையில் நான்கு பிராந்தியங்களிலும் நடப்பு கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 1-ம் தேதி வகுப்புகள் தொடங்கி 29-ம் தேதி வரை நடந்தது. ஆனால், அப்போது மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கவில்லை. கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. பள்ளி திறந்தவுடன் மாணவர்களுக்கு பாடப் புத்தகம், சீருடை வழங்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

புதுச்சேரி அரசு பள்ளிகளில் மொத்தம் 77 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்காக ரூ.3.18 கோடி செலவில் 7 லட்சத்து 50 ஆயிரம் சிபிஎஸ்இ பாடநூல்கள் வாங்கப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 12 ஆயிரம் மாணவர்களுக்காக தமிழ்நாடு பாடநூல் கழகத்திடம் புத்தகம் வாங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் ரூ.3.53 கோடியில் மாணவர்களுக்கு தலா 2 செட் சீருடை வாங்கவும், ரூ.2.92 கோடி தையல் கூலி வழங்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கல்வித் துறை மூலமாக அரசுப் பள்ளிகளுக்கு பாடப் புத்தகம், சீருடை அனுப்பி வைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பிரியதர்ஷினி நம்மிடம் கூறுகையில், ''ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறந்தவுடன் பாடப் புத்தகம், சீருடை, நோட்டுகள் வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். சீருடையில் இந்த ஆண்டு எந்த மாற்றமும் செய்யவில்லை'' என்றார்.

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

பிளஸ் 2 பொது தேர்வு விடைத்தாள் நகலை இன்றுமுதல் பதிவிறக்கம் செய்யலாம்: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.



இதுதொடர்பாக அரசு தேர்வுகள்இயக்குநர் எஸ்.சேதுராம வர்மாநேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதி,விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள், 28-ம் தேதி (இன்று) பிற்பகல் 2 மணி முதல்அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) அவற்றை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், மேற்கண்ட இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பூர்த்திசெய்த விண்ணப்பத்தின் 2 நகல்கள் எடுத்து, அவற்றை உரிய கட்டணத்துடன் மே 29 முதல் ஜூன் 1-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை பணமாக செலுத்த வேண்டும்.

புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களான தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, மயிலாடுதுறை மாவட்டங்களில், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் உரிய கட்டணத்தை செலுத்தி சமர்ப்பிக்க வேண்டும் .

மறுமதிப்பீடு கட்டணம் ஒரு பாடத்துக்கு ரூ.505. மறுகூட்டல் கட்டணம் ஒரு பாடத்துக்கு ரூ.205. உயிரியல் பாடத்துக்கு மட்டும் ரூ.305. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

TRB - BT/BRTE Certificate Verification List & Venue Published -

 






Candidates short-listed as above shall bring all the original and attested copies of all Certificates /Documents as stated in the Call Letter for Certificate Verification. The candidate should bring the filled-up Bio-data Form (Annexure – I) and Identification Certificate (Annexure – II) which is made available in the TRB website.


* Candidates who are not personally present for the Certificate Verification on the prescribed date shall not be considered for further selection process even if they have secured the qualifying marks for selection.


* The candidates are being called for Certificate Verification in the ratio of 1:1.25, calling for Certificate Verification and Verifying their Certificates / Documents is not a Guarantee for final selection.


The Venue and date for the Certificate Verification intimated in the call letter of C.V. Short listed candidates/


Utmost care has been taken in preparing the list and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in at any stage. Incorrect list would not confer any right of enforcement. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in




Mathematics - Certification Verification List - Click Here

Botany - Certification Verification List - Click Here


Zoology - Certification Verification List - Click Here

Geography - Certification Verification List - Click Here

பெற்றோர்கள் 'Smart Phone' வைத்திருப்பது அவசியம் - பள்ளிக்கல்வித்துறை

 பள்ளிக்கல்வித்துறை மாணவ-மாணவிகளின் கல்வி செயல்பாடுகளில் அதிக அக்கறைக் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் வாட்ஸ்-அப் செயலி வாயிலாக புதிய தளம் ஒன்றை உருவாக்கி இருக்கிறது. 


இந்த தளத்துடன் மாணவ-மாணவிகளின் பெற்றோரை இணைத்து அதில் கல்வித் துறை மற்றும் மாணவ-மாணவிகளின் கல்வி சார்ந்த செயல்பாடுகள் குறித்த தகவல்கள் உடனுக்குடன் தெரிவிக்கப்பட உள்ளது. இதற்காக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் கல்வி மேலாண்மை தகவல் முகமையில் (எமிஸ்) பதிவாகியிருக்கும் பெற்றோர், மாணவ-மாணவிகளின் செல்போன் எண்களை சரிபார்க்கும் பணிகளை கல்வித்துறை முடுக்கியுள்ளது.

கிட்டத்தட்ட 1 கோடியே 25 லட்சம் செல்போன் எண்கள் எமிஸ் தளத்தில் இருப்பதாகவும், அதில் இதுவரை சுமார் 82 லட்சம் செல்போன் எண்கள் சரிபார்க்கப்பட்டு இருப்பதாகவும் பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவ்வாறு சரிபார்க்கப்பட்ட எண்கள் பள்ளிக்கல்வித்துறை கொண்டுவர உள்ள வாட்ஸ்-அப் செயலி வாயிலான புதிய தளத்தில் இணைக்கப்பட உள்ளன. இணைக்கப்பட்ட எண்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும்பட்சத்தில் அதில் இந்த புதிய தளம் செயல்பட தொடங்குகிறது.

அதன்படி, பெரும்பாலானோரின் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்-அப் எண்ணில் ''டிபார்ட்மென்ட் ஆப் ஸ்கூல் எஜூகேஷன்'' என்ற பெயரில் புதிய தளம் உருவாக்கப்பட்டு, கல்வித் துறை மற்றும் மாணவ-மாணவிகளின் கல்வி சார்ந்த செயல்பாடுகள் பதிவிடப்பட்டு வருகின்றன. ஸ்மார்ட்போன் இல்லாத பெற்றோர், குறைந்த விலையில் அதனை வாங்கி, கல்வி சார்ந்த செயல்பாடுகளை தெரிந்துகொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.