AMIL NADU PHYSICAL EDUCATION AND SPORTS UNIVERSITY - Admission Notification - Regular 2024 - 2025
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம்

🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
Education News, Employment News in tamil
AMIL NADU PHYSICAL EDUCATION AND SPORTS UNIVERSITY - Admission Notification - Regular 2024 - 2025
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம்
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
வெளிநாடுகளில் உயர்கல்வி பெறத் தகுதித்தேர்வு :
இளநிலை, முதுநிலைப் படிப்புகள் இரண்டிற்குமே மதிப்பெண் விகிதம் ஒரு அடிப்படைத் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலப் புலமைத் தேர்வான TOEFL (Test of English as a Foreign Language) சான்றிதழை 119 நாடுகளில் உள்ள 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் மொழித் தகுதியாக ஏற்றுக்கொள்கின்றன. TOEFL தேர்வு உங்களோட அட்மிஷனுக்கு ரெண்டுல இருந்து மூணு முன்னாடி எழுதி clear பண்ணா போதும்.
பொதுவாக, வெளிநாடுகளில் முதுநிலைப் படிப்புகளை இரண்டு வழிகளில் உதவித்தொகையுடன்
1. வெளிநாடுகளில் உள்ள உதவித்தொகைத் திட்டத்திற்கு (Scholarship) விண்ணப்பித்து அதன் வாயிலாகச் செல்வது.
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
12 ஆம் வகுப்பு மாணவர்களால் பொதுவாக கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று, படிப்பை முடித்த பிறகு அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதுதான். உயர்கல்வி குறித்து மாணவர்களுக்கு பல்வேறு விருப்பங்கள் உள்ளது. அதில் ஒன்று, விரைவாக முடிக்கக்கூடிய டிப்ளமோ படிப்பைத் தொடரலாம். இது மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை கிக்ஸ்டார்ட் செய்ய அனுமதிக்கிறது.
மாற்றாக, மாணவர்கள் இளங்கலை பொறியியல், மருத்துவம், டிசைனிங், மேலாண்மை மற்றும் பல இளங்கலை படிப்புகளை தேர்வு செய்யலாம். இந்தத் துறைகள் மாணவர்கள் தேர்வு செய்ய ஏராளமான படிப்புகளை வழங்குகின்றன. முதலில் மாணவர்களுக்கு பிடித்தமான படிப்பு என்ன என்பதை தேர்வு செய்ய வேண்டும், அதன் பிறகு எந்த கல்லூரியில் சேரலாம் என தேர்வு செய்ய வேண்டும் என மாணவர்களுக்கு பல ஆலோசனைகளை வழங்கியுள்ளார் கல்வியாளர் காங்கேயன்..
பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் முதலில் தீர்மானம் செய்வது என்னவென்றால், நாம் எந்த கல்லூரியில் சேர வேண்டும். அதன் பிறகு அது அரசு கல்லூரியா? தனியார் கல்லூரியா? என தேர்வு செய்ய வேண்டும். தற்போது மாணவர்களுக்கு அரசு கல்லூரியில் 7.5% கோட்டா உள்ளது. நீட் தேர்வு போன்ற தேர்வுகளுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதுவே பொறியியல் கல்லூரி என்றால் சென்ற ஆண்டு 77.5% தரத்தில் மாணவர்கள் சேர்க்கப்பட்டது.
அதுபோன்று மாணவர்கள் இன்ஜினியரிங் முடித்து கலெக்டர் ஆவதற்கான யுபிஎஸ்சி (UPSC) தேர்வுக்கு படிக்கலாம், வழக்கறிஞர் படிப்புக்கு படிக்கலாம், ஃபேஷன் டெக்னாலஜி, ஹோட்டல் மேனேஜ்மென்ட், ஃபிஷரிங்,போன்ற எண்ணற்ற படிப்புகள் உள்ளது.
குறிப்பாக அதிக அளவில் கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட படிப்புகளுக்கு அதாவது (Bsc.Computer science, IT, B.tech ) அதிக வரவேற்பு உள்ளது என சர்வே தெரிவித்துள்ளது. அதுபோல இன்ஜினியரிங் எடுத்துக்கொண்டால் ECE, EECE, MECH போன்ற படிப்புகளை தேர்வு செய்து கொள்ளலாம்.
இதேபோல், பன்னிரண்டாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தால், நர்சிங் போன்ற படிப்புகளில் பல துணை பாடப்பிரிவுகள் அமைந்துள்ளது. அதனை தேர்வு செய்து படிக்கலாம். தொழில் சார்ந்த படிப்புகளை தேர்வு செய்தால் நிச்சயமாக அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும் என கல்வியாளர் காங்கேயன் தெரிவித்தார்.
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
நாட்டின் பொருளாதாரம் மட்டுமின்றி, வீட்டின் பொருளாதாரம் மேம்படவும் கல்வி மிகவும் அவசியம். உயர்கல்வியைத் தொடர குறிப்பாகப் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்குக் கல்விக் கட்டணம் ஒவ்வொரு நடுத்தர குடும்பத்தினருக்கும் பெரும் பிரச்சினையாக உள்ளது. நிதிச் சூழலைக் காரணம் காட்டி உயர்கல்வி தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காக வங்கிகள் கடன் வழங்குகின்றன. மத்திய அரசின் நிதி அமைச்சக சேவைப் பிரிவு, உயர்கல்வி அமைச்சகம், இந்திய வங்கிகள் சங்கம் (IBA) ஆகியன ஒன்றிணைந்து வித்யா லக்ஷ்மி எனும் இணையதளத்தை உருவாக்கிச் செயல்படுத்துகின்றன.
இந்த இணையதளத்தில் மாணவர்கள் எங்கிருந்தும் விண்ணப்பிக்க முடியும். உரிய வழிமுறைகளோடு செயல்படுத்துவதற்கான விதிகள் உருவாக்கப்பட்டு அனைத்து வங்கிகளுக்கும் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் கிராமப்பகுதியில் உள்ள மாணவர்களும் வங்கிகளில் கடன் பெறுவது எளிதாகியுள்ளது. https://www.vidyalakshmi.co.in இந்த இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள மூன்று வங்கிகளைத் தேர்வு செய்யலாம். பள்ளிக் கல்வியில் தேர்ச்சி பெறுவோரில் 100-க்கு 15 பேர் மட்டுமே உயர்கல்வியைத் தொடர்வதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற நோக்கில்தான் உயர்கல்விக்குக் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் உள்ள முன்னணிப் பல்கலைக்கழகங்கள். ஐஐடி மற்றும் ஐஐஎம்களில் உயர்கல்வி பயில வங்கிகளில் கடன் பெற முடியும். வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி பயில நினைக்கும் மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டவும் வங்கிகள் முன்வந்துள்ளன. கலை, வணிகம், அறிவியல், பொறியியல், மருத்துவம். பல் மருத்துவம். கணினி அறிவியல், நிர்வாகவியல், பட்டயக் கணக்காளர், விமானி, கப்பல் பொறியாளர், செவிலியர் பணி உள்ளிட்ட வேலைவாய்ப்பு உறுதிப் படிப்புகளுக்கு வங்கிகள் கடன் வழங்குகின்றன. இத்துடன் ஐஐடி, ஐஐஎம் மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் உயர்கல்வி பயில்வதற்கான கடனுதவியை இந்த வங்கிகளிலிருந்து பெற முடியும் என்கிறார்கள் அதிகாரிகள்.
இந்தியாவிலோ, வெளிநாட்டிலோ உயர்கல்வி பயில எந்தவித உச்சவரம்புமின்றி தேவைக்கேற்ப வங்கிகளில் கடன் பெறலாம் என கூறப்படுகிறது. 4 லட்ச ரூபாய் வரையான கடனுக்கு மார்ஜின் தொகை செலுத்த வேண்டியதில்லை. அதற்கு மேலான தொகைக்கு 15% முதல் 20% வரை முன் தொகை செலுத்த வேண்டும். வெளிநாட்டில் பயிலச் செல்லும் மாணவர்கள் பெறும் கடன் தொகையில் 15 சதவீதத்தை முன் தொகையாக செலுத்த வேண்டும்.
கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம், புத்தகம் வாங்குவதற்கும் விடுதிக் கட்டணம், போக்குவரத்து செலவு, படிப்புக்குத் தேவையான கருவிகள் வாங்குவது உள்ளிட்ட அனைத்திற்கும் வங்கியிலிருந்து கடன் பெற முடியும். அவசியமான படிப்புகளுக்குக் கணினி வாங்குவதற்கும் கடன் பெற முடியும். சிறப்புத் தகுதி மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை கிடைக்கும்பட்சத்தில் மொத்தக் கல்வி கட்டணத் தொகையில் உதவித்தொகை போக மீதமுள்ள தொகையை வங்கியில் கடனாகப் பெற முடியும்.
தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை கிடைத்திருப்பின், அரசுக் கல்லூரிகளில் அந்தப் படிப்புக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டண விகிதத்தை வங்கிகள் கடனாக வழங்கும். ரூ. 4 லட்சத்துக்கு மேல் ரூ. 7.5 லட்சம் வரையான கடன் தொகை பெற வேண்டுமெனில் அதற்கு ஒருவரின் உத்தரவாதம் (Security) அளிக்க வேண்டும். ரூ. 7.5 லட்சத்துக்கு மேலான தொகை கடனாகத் தேவைப்படின் அதற்குரிய சொத்துகளைப் பிணையாக வங்கிகளில் தாக்கல் செய்ய வேண்டும். வீடு, நிலம் மற்றும் பொதுத்துறை நிறுவனப் பத்திரங்கள், தேசிய சேமிப்புப் பத்திரங்கள், பரஸ்பர முதலீட்டுத் திட்டங்கள், நிறுவனக் கடன் பத்திரங்கள். வங்கி வைப்புத்தொகை போன்றவை பிணையாக ஏற்கப்படும்.
படிப்புக் காலம் முடிந்த பிறகு ஓராண்டு வரை கடனைத் திரும்பச் செலுத்த அவகாசம் அளிக்கப்படுகிறது. ரூ. 7.50 வட்சம் வரை கடன் பெற்றவர்கள் அதைத் திரும்பச் செலுத்த 10 ஆண்டு கால அவகாசம் அளிக்கப்படுகிறது. ரூ. 7.5 லட்சத்திற்கு மேல் பெற்றவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது.
உயர்கல்வி பெற வங்கிக்கடன் பெறும் போது அதில் சில விதிமுறைகளும் வைக்கப்பட்டுள்ளது. பெறப்படும் கடன் தொகைக்கு ஈடான மதிப்பில் காப்பீட்டு பாலிசி மாணவர் பெயரில் எடுக்கப்பட வேண்டும். படிப்புக் காலம், கடனைத் திரும்பச் செலுத்த எடுத்துக்கொள்ளும் காலம் வரை இந்தக் காப்பீடு எடுக்கப்பட்டிருக்க வேண்டும். கல்விக் கடனுக்குப் பரிசீலனைக் கட்டணம் கிடையாது. ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களும் கல்விக் கடன் பெறலாம். பெற்றோர்களுக்கு வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் போன்றவை இருந்தாலும், கல்விக் கடன் வழங்கலாம் என்ற விதிமுறையும் உள்ளது. சமீபகாலமாக ஐடிஐ, பாலிடெக்னிக் பயிலும் மாணவர்களுக்கும் கல்விக் கடன் வழங்கப்படுகிறது. குறுகிய காலத் தொழில்பயிற்சி மையங்களில் பயிலும் மாணவர்களுக்கு ரூ. 20,000 முதல் ரூ. 1.5 லட்சம் வரை கல்விக் கடன் படிப்பின் கால அளவிற்கேற்ப அளிக்கப்படுகிறது. இந்தக் கடன் தொகைக்குப் பிணைத் தொகை செலுத்த வேண்டியதில்லை. இந்தக் கடனுக்குச் செலுத்தும் வட்டித் தொகைக்கு வருமான வரி விலக்கும் அளிக்கப்படுகிறது.
இவ்வளவு விவரங்களை பார்த்த நாம், கல்விக்கடனை பெற தேவையான ஆவணங்கள் என்ன என்பதையும் பார்க்கலாம் . பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம். இணைய வழியில் விண்ணப்பித்திருந்தால் படிவத்தை நகல் எடுத்து இணைக்கலாம். மேற்படிப்புக்கான பல்கலைக்கழகம், கல்லூரி அளித்துள்ள சேர்க்கைக் கடிதம். கடனுக்கு விண்ணப்பிக்கும் மாணவர். இணை விண்ணப்பதாரரான பெற்றோர் ஆகியோரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் தலா இரண்டு இணைக்கப்பட வேண்டும். இருவரது புகைப்படத்துக்கான அடையாளச் சான்று அளிக்கப்பட வேண்டும்.இதற்கு நிரந்தரக் கணக்கு எண் (PAN card), பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம். ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலைப் புகைப்பட ஆதாரமாக அளிக்கலாம். இருப்பிட சான்று அளிக்கப்பட வேண்டும். கல்வி சார்ந்த ஆவணங்களின் நகல்கள் இணைக்கப்பட வேண்டும். வெளிநாட்டில் பயில்வதாயிருப்பின் GRE, GMAT, TOEFL, IELTS தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் சான்றின் நகலையும் இணைக்க வேண்டும். வங்கிக் கணக்கு தொடர்பான 3 மாத அறிக்கையும் அத்துடன் இணைக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் கணக்கு இருப்பின் அனைத்து வங்கிகளின் விவரங்களையும் அளிக்க வேண்டும். பெற்றோரின் சம்பளக் கணக்கு. தொழில்முறை கணக்கு, வருமான வரி தாக்கல் செய்பவராயிருப்பின் மூன்று ஆண்டு விவரங்கள் உள்ளிட்டவற்றையும் வருமான வரிச் சான்றையும் அளிக்க வேண்டும். கடனை உரிய காலத்தில் திரும்பச் செலுத்துவதற்கான நிதி வசதியை உறுதி செய்ய வேண்டும். மாணவர்கள் கடன் பெற விரும்பும் வங்கியில் சேமிப்புக் கணக்கு இருந்தாக வேண்டும் என்ற அவசியமில்லை. பிறகுகூடக் கணக்கைத் தொடங்கிக்கொள்ளலாம். இத்தனை சலுகைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் இனி உயர்கல்வி பயில பெற்றோர் கவலை கொள்ள தேவையில்லை .
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
This is to inform that Application For Transfer Counselling 2024 for DSE is released. Teachers can Apply through their Respective Teacher Login in EMIS Portal.
மே-13 முதல் மே-17 மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
🪷 ஆசிரியர்கள் தங்களது *8 இலக்க EMIS ID பயன்படுத்தி* பொது மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறை
APPROVAL FLOW:
1. For Teachers : HM ----> CEO
2. For High School : DEO ----> CEO
3. For Higher Secondary HM : CEO
Please Refer the above document for Reference pdf file
Click Here to Download - How to Apply for Transfer Counselling ? Guidelines to HM/Teacher - Pdf
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
ஓய்வூதியர்கள் 15.05.2024க்குள் தங்களது வருமான வரி பிடித்தம் தொடர்பாக (New Regime / Old Regime) கடிதம் அளிக்க வேண்டும் என்று எவ்வித கால அவகாசமும் நிர்ணயிக்கப்படவில்லை - கருவூல கணக்கு ஆணையர் விளக்கம்!
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை எண் : மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் அரசு நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில் நுட்பக் கணினி ஆய்வகங்கள் ( Hi Tech Labs ) மற்றும் அரசு தொடக்கப் பள்ளிகளில் திறன் வகுப்பறைகள் ( Smart Class Rooms ) ஏற்படுத்துதல் - பள்ளிகளில் BALA Painting செய்யப்பட்ட விவரங்களை TNSED App யில் உள்ளீடு செய்தல் - அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
DEE Proceedings - Download here
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
BaLA Painting Work Inspection - User Manual👇
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
BaLA PAINTING WORK INSPECTION | UPDATE SMART CLASSROOM BaLA PAINTING WORK STATUS IN TNSED ADMINISTRATORS APP
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் SMART CLASSROOM BUILDING AS LEARNING AID PAINTING பணியினை மேற்பார்வை செய்து WORK STATUS - TNSED ADMINISTRATORS APP(HM LOGIN)-ல் UPDATE செய்வதற்கான வழிமுறை👇
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_
15.05.2024 ISD 09:00AM நிலவரம்
EMIS websiteல் SGT / BT / PHM / MHM தங்களது விண்ணப்பங்களை Submit செய்தபின், அது நேரடியாக BEO Approvalக்குச் செல்லும்.
Transferக்கு என்று தனியாகவுள்ள websiteல் விண்ணப்பங்களை Approval செய்ய தனித்த User Name & Password ஒவ்வொரு BEOவிற்கும் வழங்கப்பட்டுள்ளது.
Onlineல் வரப்பட்ட விண்ணப்பங்களை EDIT / REJECT / APPROVAL செய்யும் வசதி BEOவிற்கு தரப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தைச் சரிபார்த்து திருத்தம் இருப்பின் அவரே EDIT செய்து APPROVAL கொடுக்க இயலும்.
அல்லது அவர் REJECT செய்துவிட்டால், சார்ந்த ஆசிரியர் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
ஆசிரியர்கள் தவறாக விண்ணப்பித்து இருப்பின், EDIT / REJECT செய்ய BEOவிடம் தெரிவிக்கலாம்.
விண்ணப்பம் என்ன நிலையில் உள்ளது என்பதை ஆசிரியர்கள் தாங்கள் விண்ணப்பித்த பக்கத்தின் இடது கீழ் மூலையில் காணலாம்.
விண்ணப்பங்களை APPROVAL செய்தபின்னர் அதனை PRINT செய்துதரும் வசதி BEOவிற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
APPROVAL செய்யப்பட்ட விண்ணப்பங்களை 3 Set (Teacher, OC & DEO) PRINT செய்து ஒரு பிரதியை கையொப்பமிட்டு சார்ந்த ஆசிரியருக்கு BEO வழங்குவார்.
*குறிப்பு :
இது மேலே குறிப்பிட்டுள்ள நேரத்தின் நிலவரம் மட்டுமே.
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய பேரிடர் மீட்பு படையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Hostel Warden, Sub-Instructor, LDC மற்றும் பல்வேறு பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
மத்திய அரசு வேலைவாய்ப்பு:
தேசிய பேரிடர் மீட்பு படையில் Hostel Warden, Sub-Instructor, LDC & Others பணிகளுக்கு என 14 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
NDRF கல்வித்தகுதி
NDRF ஊதிய விவரம் :
பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பதிவாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25,500/- முதல் அதிகபட்சம் ரூ.81,100/- வரை சம்பளம் வழங்கப்படும்.
LDC தேர்வு செயல்முறை:
பதிவு செய்பவர்கள் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு அல்லாமல் Deputation மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் உள்ளவர்கள் 15.06.2024 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்னப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபாலில் அனுப்பிட வேண்டும்.
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
Project Research Scientist- I பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.85,090/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
NIMHANS காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Project Research Scientist- I பணிக்கென ஒரே ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவன கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
NIMHANS வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவன ஊதிய விவரம்:
இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.85,090/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
NIMHANS தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Lab Technician,Pharmacist, Dental Hygienist, Nursing Assistant, Female Attendant பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 5 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.
ECHS காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Lab Technician, Pharmacist, Dental Hygienist, Nursing Assistant, Female Attendant பணிக்கென காலியாக உள்ள 5 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Pharm, B.Sc, D.Pharm, Diploma, DMLT, Literate, Nursing என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
ECHS வயது வரம்பு:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 55 மற்றும் 58 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.16,800/- முதல் ரூ.28,100/- வரை ஊதியமாக வழங்கப்படும்.
ECHS தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 29.05.2024ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணாணங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் ஆனது Senior Research Fellow பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
TANUVAS காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Senior Research Fellow-க்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Senior Research Fellow கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TANUVAS வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Senior Research Fellow ஊதிய விவரம்:
இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.43,400/- உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TANUVAS தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 10.06.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் நேரில் சென்று கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group