உடலில் அதிக வேலைப்பளுவைச் சுமக்கும் உறுப்புகளில் ஒன்று பல். பற்களின் ஆரோக்கியம் என்பது எல்லோருக்கும் பொதுவானது என்றாலும், ‘சர்க்கரை நோயாளிகள் பற்களின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’ என்கிறார்கள் பல் மருத்துவர்கள்.
சர்க்கரை நோயாளிகளுக்கான பல் பராமரிப்பு - 10 கட்டளைகள்
மாதம் 50,000 ரூபாய்... வீட்டுத்தோட்டத்திலேயே மண்புழு உரம், பஞ்சகவ்யா விற்கலாம்!
வீட்டுத்தோட்டம்
அவர் இங்கேயே வேலை பார்க்க ஆரம்பிக்க, நான் நாட்டு விதைகளைத் தேடித் தேடி சேகரிக்க ஆரம்பிச்சேன். இயற்கை இடுபொருள் தயாரிப்பு முறைகளைக் கத்துகிட்டேன். பல ஊர்களுக்குப் போய் இயற்கை வழியில் விவசாயம் செய்ற விவசாயிகளைச் சந்திச்சு பேசுனேன். நம்மாழ்வார் ஐயா கருத்துகள், இயற்கை தொடர்பான புத்தகங் களையும் படிக்க ஆரம்பிச்சேன். ஓரளவு இயற்கை விவசாயம் தொடர்பா தெரிஞ்சுகிட்ட பிறகு, 2016-ம் வருஷம் என்னோட வீட்டு மொட்டை மாடியில மாடித்தோட்டம் அமைக்க ஆரம்பிச்சேன். நாட்டுக் காய்கறி, கீரை விதை களைத்தான் பயன்படுத்துனேன். விதை முளைச்சு, செழிப்பா வளர்றதைப் பார்க்கப் பார்க்கச் சந்தோஷமா இருந்தது. முதல் காய்களை அறுவடை செய்யும்போது ஆர்வமும் மகிழ்ச்சியும் அதிகமாச்சு’’ என்றவர் தனது மாடித்தோட்டத்துக்கு நம்மை அழைத்துச் சென்றார்.
பைக்கை முறையாகப் பராமரிப்பது எப்படி?
மழைக் காலமோ, வெயில் காலமோ - நம்முடைய பைக்கை முறையாகப் பராமரிக்க வேண்டியது அவசியம். வெயில் காலம் என்றால் அதிகம் வெயில் படாத இடத்தில் நிறுத்தி வைப்பது, பைக் அதிகம் சூடாகாமல் பார்த்துக் கொள்வது என பராமரிப்பு முறைகள் இருக்கும். இதுவே, மழைக்காலம் என்றால் மழை நீரில் அதிகம் நனையாமல் வைத்துக் கொள்வது, தண்ணீர் அதிகம் இல்லாத இடங்களில் நிறுத்தி வைப்பது என அதற்கென சில வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால், முறையான வழிமுறைகள் எல்லோருக்கும் தெரியுமா என்றால் கேள்விக்குறி தான். இப்படிப் பல கேள்விகளுக்கு டிவிஎஸ் நிறுவனத்தின் சிவசங்கர் பதில் கூறினார்.
மழைக் காலத்தில் எந்தெந்த விதங்களில் பைக் பாதிக்கப்பட வாய்ப்புகள் இருக்கின்றன, அதனை எப்படித் தடுப்பது?
மழைக் காலங்களில் நமது பைக்கில் தண்ணீர் புகுவதுதான் மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கும். நாம் சரியாகப் பார்க்கவில்லை; அல்லது சரியாக ஓட்டவில்லை என்றால் இன்ஜினில்கூட தண்ணீர் புகுந்து விடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இரண்டு வகைகளில் நம்முடைய பைக்கில் தண்ணீர் இறங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. முதலில் நாம் நிறுத்தி வைத்திருக்கும்போது மழை பெய்து நம்முடைய பைக்கில் தண்ணீர் புகுவது, இரண்டாவது மழையின்போது தேங்கியிருக்கும் நீரில் நாம் பைக்கை ஓட்டி, அதன் மூலம் தண்ணீர் பைக்கின் உள்ளே செல்வது.
அதிக மழைக்காலம் என்றால், நம்முடைய பைக்கைச் சமதளத்தில் அல்லது கொஞ்சம் மேடான பகுதியில் நிறுத்தி வைப்பது மிகவும் சிறந்தது. பள்ளமான இடத்தில் நிறுத்தி வைக்கும்போது தண்ணீரின் மட்டம் உயர்ந்தால் அது சைலன்ஸர் வழியே பைக்கின் உள்ளே செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, சமதளத்தில் நிறுத்துவது நல்லது. அடுத்து, மழைநீரில் நனையாமல் பைக் கவர் கொண்டு பைக்கை மூடி வைப்பது சிறந்தது. இதன் மூலமும் ஏதாவது ஒரு வழியில் மழை நீர் பைக்கில் புகுவதைத் தடுக்க முடியும்.
இரண்டாவது நாம் பைக்கை ஓட்டும்போது, தண்ணீர் நிறைந்திருக்கும் பகுதியைத் தவிர்த்து விடுவது நல்லது. ஒருவேளை அந்தப் பாதையில் சென்றே ஆக வேண்டும் என்றாலும், ஃபுட்ரெஸ்ட் மற்றும் சைலன்ஸரின் கீழே தண்ணீர் இருக்கிறது, பைக்கின் டயர் மட்டும் கொஞ்சம் மூழ்கும் அளவுதான் தண்ணீர் இருக்கிறது என்றால் மட்டும், குறைவான வேகத்தில் அந்தப் பாதையைக் கடக்கலாம். சைலன்ஸர் அல்லது ஃபுட்ரெஸ்ட் அளவு தண்ணீர் இருக்கிறதென்றால் கண்டிப்பாக அந்தப் பாதையில் செல்ல முயற்சி செய்ய வேண்டாம்.
சரி, நாம் பாதுகாப்பாக இருந்தும் பைக்கில் தண்ணீர் சென்றதற்கான அறிகுறி இருக்கிறதென்றால், அதாவது சைலன்ஸரின் உள்ளே தண்ணீர் சென்று விட்டதென்று தெரிந்தால், பைக்கை ஸ்டார்ட் செய்ய முயற்சி கூடச் செய்ய வேண்டாம். ஸ்டார்ட் மட்டுமல்ல, பைக்கின் சாவியைக்கூட திருப்ப முயற்சி செய்ய வேண்டாம். நாம் சாவியைத் திருப்ப முயற்சி செய்தால் பைக்கின் பேட்டரியில் இருந்து கரன்ட் பாஸாகி ஷார்ட் சர்க்யூட் ஆகி பைக்கின் எலெக்ட்ரிக்கல் பாகங்கள் செயலிழப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. கிக் அடிக்கவே அடிக்காதீர்கள். தண்ணீரில் மூழ்கிய பைக்கை கிக் அடிக்க அல்லது ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்தால் இன்ஜினுக்குள் தண்ணீர் செல்வதற்கான வாய்ப்பை நீங்களே உருவாக்கிக் கொடுத்தது போல் ஆகிவிடும். பின்னர், மொத்த இன்ஜினையும் பிரித்துத்தான் பழுது பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும்.
பைக்கை சென்டர் ஸ்டாண்டு போட்டு நிறுத்தியிருந்தால், சைடு ஸ்டாண்டு போட்டு நிறுத்தலாம். தண்ணீர் கொஞ்சம் வடிவதற்கான வழியாக அது இருக்கும். அதன் பிறகு அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்புக்கு போன் செய்து கூறினால், நம்முடைய பைக்கை டோ செய்து கொண்டு சென்று முறையாக சர்வீஸ் செய்து விடுவார்கள். அதிக செலவில்லாமல் முடிந்துவிடும்.
பைக் ஓட்டும்போது, என்னவிதமான பாதுகாப்பு அணுகுமுறைகளைக் கடைப்பிடிப்பது?
பாதுகாப்பு என்று வரும்போது ஹெல்மெட் அல்லது சீட் பெல்ட் என்று துவங்கி, சாலை விதிகளைக் கடைப்பிடிப்பது கட்டாயம். அருகில்தானே செல்கிறோம் என்று அலட்சியமாக ஹெல்மெட் அணியாமல் பைக்கில் பயணம் செய்யாதீர்கள். 20 கிமீ வேகத்தில் சென்று தலையில் பலத்த காயம் அடைந்தவர்கள் கூட இருக்கிறார்கள். எனவே, பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்.
எந்தக் காலமாக இருந்தாலும், பைக்கை குறிப்பிட்ட இடைவெளியில் சர்வீஸ் செய்வது அவசியம். காரணம், அப்போதுதான் பிரேக், ஆக்ஸிலரேட்டர், க்ளட்ச் மற்றும் செயின் ஆகியவற்றுக்குத் தேவையான லூப்ரிகேஷன் கிடைக்கும்.
நம் பைக்குக்கும் ரோடுக்கும் இடையே பாலமாக இருப்பது டயர் மட்டும்தான். ரோடு கிரிப் இருந்தால்தான் நாம் பிரேக் பிடித்தால்கூட சரியான இடைவெளியில் வண்டி நிற்கும். பிரேக் பிடிக்கும்போது ஸ்கிட் ஆகாமல் இருப்போம். ரோடு கிரிப்புக்கு டயர் நல்ல கண்டிஷனில் இருக்க வேண்டியது அவசியம். நாம் அதிகம் பயணம் செய்யச் செய்ய டயர்கள் தேய்மானம் ஆகிக் கொண்டே வரும். நமது டயரில் டயர் வியர் இன்டிகேட்டர் என்று ஒன்று இருக்கும். அதற்குக் கீழே டயர் தேய்ந்துவிட்டது என்றால், நாம் டயரை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம்.
நாம் பைக்கை சர்வீஸ் விடும்போது, நம்முடைய பைக்கின் டயர் கண்டிஷன் பார்த்து, மாற்ற வேண்டுமா வேண்டாமா என்று அவர்களே கூறி விடுவார்கள். . மூன்று மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது 3,000 கிமீ ஒரு முறையோ பைக்கை சர்வீஸ் செய்வது நல்லது.
மழைக்காலங்களில் பிரேக்கிங் குறித்த டிப்ஸ்?
பிரேக் பிடிப்பதைப் பொறுத்தவரை, முன்பக்கம் மற்றும் பின்பக்கம் இரண்டு பிரேக்குகளையும் ஒருசேரப் பிடிப்பதே சிறந்தது. நாம் சில நேரங்களில் டிஸ்க் பிரேக் இருக்கிறது என்று முன்பக்க அல்லது பின்பக்க பிரேக்கை மட்டும் பிடிப்போம். அது ஒரு தவறான அணுகுமுறை. இரு பிரேக்குகளையும் ஒன்றாகப் பிடிக்கும் போது, குறைந்த தூரத்திலேயே பைக் நின்றுவிடும். மேலும், இரு பிரேக்கையும் பிடிக்கும்போது நமது பைக் ஸ்கிட் ஆவதற்கான வாய்ப்புகள் குறைவு. நாம் ஒரு பக்க பிரேக்கை மட்டும் பிடிக்கும்போது, மறுபக்கச் சக்கரம் சுழன்று கொண்டுதான் இருக்கும். அது நம் பைக் ஸ்கிட் ஆக வழிவகுக்கும்.
மழை நேரத்தில் தண்ணீர் இருக்கும் ரோட்டில் செல்லும்போது ஸ்கிட் ஆவதற்கான வாய்ப்பு இன்னும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். எனவே, பிரேக் பிடிக்கும்போது ஆக்ஸிலரேட்டரில் நம் கவனம் இருக்கக்கூடாது. உடனடியாக பிரேக் பிடிக்க வேண்டும். மேலும், பிரேக் பிடிப்பதற்கு முன்னால் க்ளட்ச்சைப் பிடிக்காமல் இருப்பது சிறந்தது. பிரேக்கை முதலில் பிடித்து வேகம் குறைந்தவுடன் க்ளட்ச்சைப் பிடிப்பதுதான் சரியான வழிமுறை. மேலும், மழைக்காலங்களில் குறைவான வேகத்தில் சென்றால்தான், பிரேக் பிடிக்கும்போது பைக் ஸ்கிட் ஆகாமல் இருக்கும்.
அதிக மைலேஜ் கிடைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
முதலில் பைக்கைத் தேவையில்லாத நேரங்களில் ஆன்/ஆஃப் செய்வது, அல்லது ஆன் செய்து ஐடிலிங்கில் வைத்திருப்பது போன்றவற்றைத் தவிர்க்கலாம். சிக்னலில் நின்றிருக்கும்போதுகூட பைக்கை ஆஃப் செய்து வைத்திருக்கலாம். முக்கியமான ஒரு விஷயம், பைக்கை முறையாக சர்வீஸ் செய்தால் கொஞ்சம் அதிக மைலேஜ் கிடைக்கும். பைக்கின் சக்கரங்கள் எந்த ஒரு தடங்களும் இன்றி ஃப்ரீயாக ரொட்டேட் ஆக வேண்டும். செயின் ப்ளே சரியாக இருக்க வேண்டும். லூஸாக இருந்தாலும் மைலேஜ் குறையும். ஏர் ஃபில்டர் சுத்தமாக இருக்க வேண்டும். ஸ்பார்க் ப்ளக் சரியாக இயங்க வேண்டும். இவற்றையெல்லாம் நம்மால் நேரம் ஒதுக்கிப் பார்க்க முடியாது. மேலும், இதையெல்லாம் சரிபார்க்க நாமும் பழகியிருக்க மாட்டோம். எனவேதான் சர்வீஸ் சென்டரில் அவ்வப்போது சர்வீஸ் செய்ய வேண்டும். அவர்கள் இதனையெல்லாம் சரிபார்த்து விடுவார்கள். இதன் மூலம் 4 அல்லது 5 கிமீ மைலேஜ் நாம் வைத்திருக்கும் பைக்குக்கு ஏற்ப நமக்குக் கூடுதலாகக் கிடைக்கும்.
ஃபிளாட் வாங்கப் போகிறீர்களா? இதை எல்லாம் கொஞ்சம் கவனிங்க!
ரியல் எஸ்டேட்
கடந்த எட்டு வருடங்களாக கோமாவில் கிடந்த ரியல் எஸ்டேட் துறை தற்போது எழுந்து சோம்பல் முறிக்கிறது. முக்கியமாக, கோவிட் கட்டுமானத் தொழிலாளர்களைப் பாதித்ததில் கட்டுமான வேலைகள் ஸ்தம்பித்து சப்ளை பாதிக்கப்பட்டது. வேலை இழப்பு, சம்பளக் குறைப்பு, ஆள்குறைப்பு போன்ற நடவடிக்கைகளால் வீடு மற்றும் மனை வாங்குவோர் எண்ணிக்கை குறைந்து டிமாண்டும் பாதிப்படைந்தது.
மூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்
நம்முடைய விருப்பங்களில் நாம் தேர்ச்சி பெற வேண்டும் என்றால் மனதை நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் அல்லது ஒரு முகப்படுத்த வேண்டும். அதற்கு ஒவ்வொருவரும் நம் மனதை நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க சில பயிற்சிகள் எடுத்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாக உள்ளது. அப்போதுதான் நாம் மனதை ஆளுகை செய்ய நல்ல திட்டங்களை தீட்ட முடியும். இதுபோன்ற எளிய பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் மூளையின் திறன் நன்கு மேம்படும் என்கிறார்கள் அறிவியல் ஆய்வாளர்கள்.
மனதைக் கட்டுப்படுத்த முதல் பயிற்சியாக மூச்சை உள்வாங்கிக் கொண்டு ரிலாக்ஸாக உணர்ந்து, அதன்பிறகு வெளியிட வேண்டும். அதேபோன்று உங்கள் தசைகளை ரிலாக்ஸ் செய்துகொள்ள வேண்டும். மேலும் உங்கள் தலை முதல் பாதம் வரை உங்களையே ரிலாக்ஸ் செய்துகொள்ள வேண்டும். இதுவே உங்கள் மனதை ஒரு முகப்படுத்தும் முதல் உடற்பயிற்சியாகும்.
Brain Foods: ஞாபக சக்தி அதிகரிக்க இந்த ‘5’ உணவுகள் அவசியம்
உங்கள் நினைவாற்றல் நன்றாக இருந்தால் தான், உங்கள் மூளையும் மனமும் சிறப்பபாக வேலை செய்யும். இந்த கட்டுரையில் உங்கள் நினைவாற்றலை அதிகரிக்க உணவு நிபுணர் ரஞ்சனா சிங் பரிந்துரைக்கும் உணவுகளை பார்க்கலாம்.
உங்கள் நினைவாற்றல் நன்றாக இருந்தால், உங்கள் மூளையும் மனமும் சிறப்பபாக வேலை செய்யும். இந்த கட்டுரையில் உங்கள் நினைவாற்றலை அதிகரிக்க உணவு நிபுணர் ரஞ்சனா சிங் பரிந்துரைக்கும் உணவுகளை பார்க்கலாம்
ஞாபக சக்தியை அதிகரிக்க இந்த 5 சூப்பர் உணவுகளை உண்ணுங்கள்:
மூளையில் அசிடைல்கொலின் (acetylcholine) அளவை அதிகரிக்க பாதாம் உதவுகிறது. வைட்டமின் பி 6, ஈ, துத்தநாகம் மற்றும் அதில் காணப்படும் புரதங்கள் நரம்பியக்கடத்தி இரசாயனத்தை உருவாக்குகின்றன. இது மூளை சுறுப்பாக இயங்கவும், நினைவாற்றலை பெருக்கவும் உதவுகிறது.
ஆளிவிதை மற்றும் பூசணி விதைகள் (Flaxseed and Pumpkin Seeds):
மூளை ஆரோக்கியத்திற்கு பூசணி மற்றும் ஆளிவிதை சிறந்தவை. இந்த விதைகளில் உள்ள துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் பி ஆகியவை சிந்திக்கும் திறனை வளர்க்கின்றன, இதனால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
முந்திரி (Cashew) :
முந்திரி ஒரு நல்ல மெமரி பூஸ்டர். இதில் பாலி-சாசுரேடட் மற்றும் மோனோ-சாசுரேடட் (poly-saturated and mono-saturated) கொழுப்புகள் உள்ளன. அவை மூளை செல்கள் உற்பத்திக்கு மிகவும் முக்கியம். இதனால் மூளை ஆற்றல் அதிகரிக்கும்.
கொட்டை வகைகள்:
உணவு நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங் இது குறித்து கூறுகையில், கொட்டைகள் உட்கொள்வது நினைவாற்றலை மேம்படுத்துதோடு, மூளையின் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது என்கிறார். இதனுடன் கவனச்சிதறலை போக்கி, மனதை ஒருமுகபடுத்துகிறது. கொட்டைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இதில் வைட்டமின் கே, ஏ, சி, பி 6, ஈ, கால்சியம், மாங்கனீசு, இரும்பு, துத்தநாகம் ஆகியவை அடங்கியுள்ளன. அவை உங்கள் ஞாபக சக்தியை மேம்படுத்த உதவும்.
உங்கள் தினசரி உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய 11 வகையான ஊட்டச்சத்துக்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..
நீங்கள் நன்றாக சுவாசிக்க உதவும் 10 உணவுகள் !!! | ஆரோக்கியமான நுரையீரலுக்கான உணவு
உங்கள் ஆரோக்கியமான சிறுநீரகத்திற்கு இந்த 7 உணவுகளை சாப்பிடுங்கள் !!
ரூ. 25,000-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் டாப் லேப்டாப்கள்: முழு பட்டியல் இதோ
ஆன்லைன் வகுப்புகள் அல்லது வீட்டிலிருந்து வேலை செய்ய மடிக்கணினி தேவைப்படும் அனைவருக்கும் இவை சிறந்த தேர்வாக இருக்கும்.
Laptops under Rs 25,000: பட்ஜெட் லேப்டாப்பைத் தேடுபவர்களுக்கு Chromebook ஒரு நல்ல தேர்வாக இருக்கும். அவை Google இன் Chrome OS இல் இயங்குகின்றன, பெரும்பாலான Android பயன்பாடுகளை ஆதரிக்கின்றன. ஆன்லைன் வகுப்புகள் அல்லது வீட்டிலிருந்து வேலை செய்ய மடிக்கணினி தேவைப்படும் அனைவருக்கும் இவை சிறந்த தேர்வாக இருக்கும். பெரும்பாலான Chromebooks உயர்நிலை கேமிங் மற்றும் கிராபிக்ஸ் பணிகளுக்கு ஏற்றதாக இல்லை. எனினும், இவை மற்ற வழக்கமான விஷயங்களுக்கு சிறந்த தேர்வாக அமைகின்றன. நீங்கள் ரூ.30,000க்குள் வாங்கக்கூடிய HP, Lenovo மற்றும் Asus உள்ளிட்ட பிராண்டுகளின் 5 Chromebooks பற்றி இந்த பதிவில் காணலாம்.
Lenovo Chromebook 14e
Lenovo இன் Chromebook மிலிடரி கிரேட் சான்றிதழுடன் வருகிறது. நீர்-எதிர்ப்பு கீபோர்டைக் கொண்டுள்ளது. Lenovo Chromebook 14e ஆனது 14-இன்ச் FHD டிஸ்ப்ளே மற்றும் 4GB ரேம் மற்றும் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜை வழங்குகிறது. சாதனம் G-Suite ஒருங்கிணைப்புடன் வருகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 10 மணிநேர பேட்டரி காப்புப்பிரதியை உறுதியளிக்கிறது. Lenovo Chromebook 14e இன் விலை ரூ.24,990 ஆகும்.
Asus Chromebook Flip
Chromebook Flip ஆனது 360-டிகிரி கன்வெர்ட்டிபிள் டச்-ஸ்கிரீன் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த லேப்டாப் (Laptop) மிலிடரி கிரேட் சான்றிதழுடன் வருகிறது. இது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்ட இன்டெல் செலரான் செயலி மூலம் இயக்கப்படுகிறது. சாதனம் Chrome OS ஐ இயக்குகிறது மற்றும் 10 மணிநேர பேட்டரி காப்புப்பிரதியை உறுதியளிக்கிறது. Asus Chromebook Flip விலை ரூ.24,999 ஆகும்.
HP Chromebook MediaTek MT8183
HP இன் Chromebook MediaTek செயலி மூலம் இயக்கப்படுகிறது, Chrome OS ஐ இயக்குகிறது. மடிக்கணினி 11.6 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. நேர்த்தியான மற்றும் மெலிதான இந்த லேப்டாப், ஒருமுறை சார்ஜ் செய்தால் 12 மணிநேர பேட்டரி பேக்கப்பை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது Google Assistant ஆதரவுடன் வருகிறது. HP Chromebook MediaTek MT8183 இன் விலை ₹23,490 ஆகும்.
Asus Chromebook C223
Chromebook C223 என்பது ஒரு இலகுரக லேப்டாப் ஆகும். இது 1 கிலோவிற்கும் குறைவான எடை கொண்டது. இது 11.6 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட மிக மெல்லிய லேப்டாப் என்று ஆசஸ் கூறுகிறது. சாதனம் Chrome OS ஐ இயக்குகிறது மற்றும் 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பிடத்தைக் கொண்டுள்ளது. மடிக்கணினி Intel dual-core Celeron N3350 செயலி மூலம் இயக்கப்படுகிறது. Asus Chromebook C223 இன் விலை ரூ.23,966 ஆகும்.
Acer Chromebook 311 C733-C5A
மலிவு விலை கொண்ட இந்த மடிக்கணினியில் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள் சேமிப்பு உள்ளது. இது 11.6-இன்ச் டிஸ்ப்ளே மற்றும் கிராபிக்ஸ் இன்டெல் UHD கிராபிக்ஸ் 600 மூலம் கையாளப்படுகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 12.5 மணி நேரம் பேட்டரி ஆயுள் கிடைக்கும் என்று நிறுவனம் உறுதியளிக்கிறது. Acer Chromebook 311 C733-C5A விலை ரூ.23,990 ஆகும்.
பொங்கல் அன்று சமைக்கும் உணவுகளின் பயன்கள்.!
எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரும் கொண்டாடுவது பொங்கல் விழா. இயற்கைக்கு நன்றி கூறும் இந்த விழாவில், புதிதாக அறுவடை செய்த அரிசி, காய்கறி, பழங்கள், கிழங்குகள் போன்றவற்றை சூரியனுக்கு படைத்து வழிபடுவார்கள். பண்டிகை என்றால் பலவிதமான உணவுகள் முக்கிய இடம் பிடிக்கும். அந்த வகையில் பொங்கல் பண்டிகை அன்று சமைக்கும் ஒவ்வொரு உணவும், சுவை மட்டுமில்லாமல் ஆரோக்கியத்தையும் தரக்கூடியவை. அதைப்பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.
பொங்கல் விழாவின்போது சிறு கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, பிடி கிழங்கு, கருணைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், வாழைக்காய், அவரைக்காய், கத்தரிக்காய், புடலங்காய், சுரைக்காய், பீர்க்கங்காய், முருங்கைக்காய், வெள்ளை பூசணி, பூசணிக்காய், சவ் சவ், தக்காளி போன்ற காய்கறிகளைக் கட்டாயம் சமையலில் சேர்ப்பார்கள். இவை அனைத்திலும் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான புரதச்சத்து, நார்ச்சத்து, மாவுச்சத்து, நீர்ச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புக்கள், ஆன்டி ஆக்சிடென்டுகள் போன்றவை நிறைந்துள்ளன.
வெல்லத்தில் போலேட், கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், இரும்பு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் பெண்களின் ஆரோக்கியத்துக்கு முக்கியமானவை. இந்த சத்துக்கள் மாதவிடாயின்போது ஏற்படும் வலியை நீக்கும் தன்மை கொண்டவை. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியவை. உடல் எடை குறைப்புக்கு உதவுபவை ஆகும்.
நெய் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டது. இதில் உள்ள சத்துக்கள் பார்வைத்திறனை மேம்படுத்தும். தசைகளின் வலிமை மற்றும் சருமப் பொலிவை அதிகரிக்கும். உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கும். திராட்சை, முந்திரி போன்றவற்றில் இரும்பு, கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளன.
பொங்கல் திருநாளன்று பனங்கிழங்கை சுட்டும், வேகவைத்தும் சாப்பிடுவார்கள். அதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சினை தீரும்.
பணத்தை விரைவாக சேமிக்க - ‘30 நாள் விதி’ இதைப் பின்பற்றவும்
எதைப் பார்த்தாலும் உடனே வாங்கி விடும் பழக்கம் உள்ளவர்களுக்கும், சம்பாத்தியத்தை சரியான இடங்களில் ஒதுக்க முடியாமல் திணறுபவர்களுக்கும் ‘30 நாள் விதி’ ஏற்றதாக இருக்கும்.
Hypertension: உயர் ரத்த அழுத்தத்திற்கு தீர்வாகும் ‘5’ சூப்பர் உணவுகள்!
உயர் இரத்த அழுத்தம் அமைதியான கொலையாளி (silent killer ) நோய் என்று அழைக்கப்படுகிறது. இரத்த அழுத்தம் மிக அதிக அளவை எட்டும் போது, ஒரு நபருக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
வாழ்க்கை முறை காரணமாக ஒதுவாக பலருக்கு உள்ள நோய்களில் ஒன்று உயர் இரத்த அழுத்தம். உயர் இரத்த அழுத்தம் அமைதியான கொலையாளி (silent killer ) நோய் என்று அழைக்கப்படுகிறது. இரத்த அழுத்தம் மிக அதிக அளவை எட்டும் போது, ஒரு நபருக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது.துரிதமான வாழ்க்கை முறை காரணமாக பெரும்பாலானோர் மன அழுத்தத்தில் உள்ளனர். மன அழுத்தத்தை தொற்றுநோய் பரவல் பீதி மேலும் அதிகரித்துள்ளது. இதன்ன் காரணமாக பதற்றம், கோபம், மன சோர்வு ஆகிஒயவை ஏற்படுகிறது.
உயர் ரத்த அழுத்தத்தில், இரத்தக் குழாய்களின் மூலமாகச் செயல்படும் இரத்த ஓட்டத்தின் போது, இதயம் வழக்கத்தைவிட கடினமாக வேலை செய்ய தேவைப்படுகிறது. இது காலப்போக்கில் பல நோய்களுக்கு வழிவகுக்கும் என்று பெங்களூரு அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனையின் உணவியல் நிபுணர் ஷரண்யா எஸ் சாஸ்திரி குறிப்பிடுகிறார்.
வழக்கமான தலைவலி, மூக்கடைப்பு மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை உயர் இரத்த அழுத்தத்தின் சில அறிகுறிகளாகும் என்று நிபுணர் கூறுகிறார்.
தினசரி உணவில் சில உணவுகளை சேர்த்துக்கொள்வது உயர் இரத்த அழுத்தத்தை திறமையாக கட்டுபடுத்த உதவும். ஏனெனில் இந்த உணவுகளில் மருத்துவ குணங்களால், உயர் இரத்த அழுத்தத்திற்கான சூப்பர் உணவுகள் என இவற்றை கூறலாம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சூப்பர் உணவுகள்:
1. மாதுளை
இந்த சுவையான பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பயோஆக்டிவ் பாலிபினால்கள் உள்ளன. இதனால் உயர் இரத்த அழுத்தத்திற்கு நன்மை பயக்கும் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன. காலை சிற்றுண்டியின் ஒரு கிண்ணம் மாதுளை நல்ல பலனைத் தரும்.
2. நாவல் பழம்
உயர் இரத்த அழுத்தம் இரத்த நாளங்கள் சுருங்கும் நிலையை ஏற்படுத்தும். இந்த பழத்தில் பொட்டாசியம் உள்ளதால் இது மிகவும் தசைகளுக்கு நல்லது. உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் அதிசய பழம் என்பதாடு, இந்த நாவல் பழம் அதிக கொழுப்பு மற்றும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதிலும் மிகச் சிறந்தது.
3. பீட்ரூட்
பீட்ரூட்டில், இயற்கை நைட்ரேட்டுகள் இருப்பதால், ஒலிம்பியன்களுக்கு இது ஒரு சிறந்த உணவாக இருந்து வருகிறது. ஒரு கிளாஸ் பீட்ரூட் சாறு அல்லது சமைத்த சைவ உணவான பீட்ரூட் உண்ணும் போது, அதனால், 2-3 மணிநேரத்தில் உயர் இரத்த அழுத்த அளவு கணிசமாக குறையும் என்கின்றனர் வல்லுநர்கள்.
4. பூண்டு
பூண்டு அல்லிசின் என்ற இயற்கை கலவையை உற்பத்தி செய்வதால் பூண்டு பல ஆண்டுகளாக மருத்துவ குணங்களைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. இது இரத்த அழுத்தத்தை உடனடியாகக் குறைக்கும் என்பதால், உயர் இரத்த அழுத்த நோயாளிகளின் அன்றாட உணவில் சேர்க்கப்படும் ஒரு அத்தியாவசிய பொருள் எனலாம்.
5. வெந்தயம்
வெந்தயம் மற்றும் வெந்தய கீரை இரண்டிலும் நார்ச்சத்து, கால்சியம் நிறைந்துள்ளன, மேலும் அவை உடலில் LDL/TG அளவைக் குறைக்கின்றன, இதன் விளைவாக இரத்த அழுத்தம் குறைகிறது. எனவே உங்கள் உணவில் வெந்தயம் அல்லது வெந்தய கீரையை நிச்சயம் சேர்த்துக்கொள்ளுங்கள்.
மேலே குறிப்பிட்ட உணவுகளை சேர்த்துக் கொள்வதாலும், தினசரி மிதமான உடற்பயிற்சியினாலும் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். அதோடு நல்ல தூக்கமும் அவசியம்
இந்த தொற்றுநோய் கடந்து போகும் வரை நாம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வைரஸின் விளைவுகளை எதிர்த்துப் போராடவும் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம்.