TNPSC - குரூப்-2 தேர்வுக்கு செப்.23-ல் 3-வது கட்ட கலந்தாய்வு

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)


குரூப்-2 தேர்​வுக்​கான 3-வது கட்ட சான்​றிதழ் சரி​பார்ப்பு மற்​றும் கலந்​தாய்​வு, வரும் 23-ம் தேதி நடை​பெறும் என டிஎன்​பிஎஸ்சி அறி​வித்​துள்​ளது.


இதுதொடர்​பாக, டிஎன்​பிஎஸ்சி செய​லா​ளர் எஸ்​.கோ​பால சுந்​தர​ராஜ் வெளி​யிட்​டுள்ள செய்​திக் குறிப்​பு: கடந்த 2024-ம் ஆண்டு நடத்​தப்​பட்டஒருங்​கிணைந்த குரூப்-2 மற்​றும் குரூப்-2 ஏ தேர்​வில் உள்ள காலிப் பணி​யிடங்​களை நிரப்​புவதற்​கான 3-வது கட்ட சான்​றிதழ் சரி​பார்ப்பு மற்​றும் கலந்​தாய்வு வரும் 23-ந் தேதி அன்று நடை​பெற உள்​ளது. இதற்கு அழைக்​கப்​பட்​டுள்ள தேர்​வர்​களின் பட்​டியல் தேர்​வாணை​யத்​தின் இணை​யதளத்​தில் (www.tnpsc.gov.in) வெளி​யிடப்​பட்​டுள்​ளது.


அழைப்​பாணையை இணை​யதளத்​தில் பதி​விறக்​கம் செய்து கொள்ளவேண்​டும். இதுதொடர்​பாக, சம்​பந்​தப்​பட்ட தேர்​வர்​களுக்கு குறுஞ்​செய்தி மற்​றும் மின்​னஞ்​சல் வாயி​லாக தகவல் தெரிவிக்​கப்​படும். அழைப்​பாணை தனியே அஞ்​சல் மூலம் அனுப்பப்படமாட்​டாது. சான்​றிதழ் சரி​பார்ப்​புக்கு அழைக்​கப்​படும் அனை​வரும் கலந்​தாய்​வுக்கு அனு​ம​திக்​கப்​பட்டு தெரிவுசெய்​யப்​படு​வர் என்​ப​தற்கு உறுதி அளிக்க இயலாது. குறிப்​பிட்ட நாள் மற்​றும் நேரத்​தில் பங்​கேற்க தவறி​னால், மறு​வாய்ப்பு அளிக்​கப்பட மாட்​டாது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

0 Comments:

Post a Comment