ஆசிரியர் தேர்வு வாரியம் நவம்பரில் நடத்த உள்ள ‘டெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

 1375645

மத்​திய அரசின் கட்​டாயக் கல்வி உரிமை சட்​டத்​தின்​படி, இடைநிலை ஆசிரியர்​கள், பட்​ட​தாரி ஆசிரியர்​கள் ஆகியோர் ஆசிரியர் தகுதி தேர்​வில் (டெட்) தேர்ச்சி பெறு​வது கட்​டாய​மாகும். தேசிய ஆசிரியர் கல்வி கவுன்​சில் (என்​சிடிஇ) விதி​முறை​யின்​படி, ஆண்​டுக்கு 2 முறை டெட் தேர்வு நடத்​தப்பட வேண்​டும். தமிழகத்​தில் கடைசி​யாக, கடந்த 2022-ம் ஆண்​டுக்​கான டெட் தேர்வு 2023 பிப்​ர​வரி​யில் நடத்​தப்​பட்​டது. 2023, 2024-ம் ஆண்​டு​களுக்​கான டெட் தேர்வு நடத்​தப்​பட​வில்​லை.


இந்​நிலை​யில், 2025-ம் ஆண்டு டெட் தேர்​வுக்​கான அறி​விப்பை ஆசிரியர் தேர்வு வாரி​யம் கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி வெளி​யிட்​டது. இதற்​கான ஆன்​லைன் விண்​ணப்ப பதிவு அன்​றைய தினமே தொடங்​கியது. இடைநிலை ஆசிரியர்​கள் டெட் முதல் தாள் தேர்​வுக்​கும் பட்​ட​தாரி ஆசிரியர்​கள் 2-ம் தாள் தேர்​வுக்​கும் விண்​ணப்​பித்து வரு​கின்​றனர். நவம்​பர் 15, 16-ம் தேதி​களில் தேர்​வு​கள் நடை​பெற உள்​ளன.


டெட் தேர்​வுக்கு விண்​ணப்​பிக்​கும் அவகாசம் நாளை (செப்​.8) நிறைவடைகிறது. தேர்​வுக்கு விண்​ணப்​பிக்க விரும்​பும் இடைநிலை ஆசிரியர்​களும், பி.எட். முடித்த பட்​ட​தாரி ஆசிரியர்​களும் https://trb.tn.gov.in என்ற இணை​யதளம் வாயி​லாக ஆன்​லைனில் நாளை மாலை 5 மணிக்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும். இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெறும் இறுதி ஆண்டு மாணவர்​கள், பி.எட். இறுதி ஆண்டு படிப்​பவர்​களும் டெட் தேர்​வுக்கு விண்​ணப்​பிக்​கலாம்.


அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரியவும், பதவி உயர்வு பெறவும் டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது. எனவே, ஆசிரியர்கள் டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வசதியாக கால அவகாசம் நீட்டிக்கப்படலாம் என்று தெரிகிறது.

0 Comments:

Post a Comment