CTET பிப்ரவரி 2026: அனுமதி அட்டை வெளியீடு - தேர்வு வழிமுறைகள் – CBSE முக்கிய அறிவிப்பு

  

215919

மத்திய கல்வி வாரியம் (CBSE), பிப்ரவரி 2026ல் நடைபெறவுள்ள மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு (CTET) தொடர்பான அனுமதி அட்டை மற்றும் தேர்வு நாள் வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. 


தேர்வர்கள் தங்களது விவரங்களை கவனமாக சரிபார்த்து, விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனுமதி அட்டையில் தெளிவான புகைப்படமும் கையொப்பமும் இல்லையெனில் தேர்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்படாது. பெயர், பிறந்த தேதி, பாலினம், பிரிவு போன்ற விவரங்கள் இறுதி உறுதிப்படுத்தல் பக்கத்துடன் பொருந்துகிறதா என்பதை தேர்வர்கள் சரிபார்க்க வேண்டும். ஏதேனும் பிழைகள் இருந்தால் உடனடியாக CBSE-க்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக வர வேண்டும். காலை அமர்விற்கு காலை 9.30 மணிக்குப் பிறகும், பிற்பகல் அமர்விற்கு மதியம் 2.30 மணிக்குப் பிறகும் நுழைவு அனுமதி வழங்கப்படாது. தேர்வர்கள் அச்சிடப்பட்ட அனுமதி அட்டை, அசல் புகைப்பட அடையாள அட்டை, நீலம் அல்லது கருப்பு நிற பால் பாயின்ட் பேனா மற்றும் 500 மில்லி அளவிலான வெளிப்படையான தண்ணீர் பாட்டிலை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.

செல்லுபடியாகும் அனுமதி அட்டை மற்றும் அடையாள அட்டை இல்லாமல் தேர்வு மையத்திற்குள் நுழைய அனுமதி இல்லை என்று CBSE தெளிவுபடுத்தியுள்ளது. தேர்வர்கள் வருகைப் பதிவில் கையொப்பமிட்டு, தேர்வு முடியும் முன் வெளியேறக்கூடாது.
தடைசெய்யப்பட்ட பொருட்கள் குறித்து கடுமையான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

உலோகப் பொருட்கள், புத்தகங்கள், குறிப்புகள், பென்சில் பெட்டி, நகைகள், மின்னணு சாதனங்கள், கடிகாரம், பணப்பை, கைப்பை, மொபைல் போன், கணக்குப்பொறி உள்ளிட்ட எந்தவொரு சாதனமும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படாது. 

உணவு மற்றும் பானங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால் நீரிழிவு நோயாளிகள் தேவையான உணவுப் பொருட்களை வெளிப்படையான பையில் கொண்டு வந்து கண்காணிப்பாளர் வசம் ஒப்படைக்கலாம்.
தேர்வின்போது முறைகேடு, வேடமாற்றம் அல்லது ஒழுங்கு குலைவு நடந்தால், தேர்வரின் தேர்ச்சி ரத்து செய்யப்படுவதுடன் எதிர்காலத் தேர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

பதில்கள் ஒற்றுமையைக் கண்டறியும் வகையில் ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அரசு மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பித்தால் எழுத்தர் (scribe) வசதி வழங்கப்படும். தகுதியுள்ளவர்களுக்கு அரசு விதிகளின்படி கூடுதல் நேரமும் வழங்கப்படும்.
பயோமெட்ரிக் வருகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே தேர்வர்கள் முன்கூட்டியே மையத்தை அடைய வேண்டும்; தாமதம் ஏற்பட்டால் தேர்வு நேரம் குறையக்கூடும்.

Hall ticket download link:

Central Teacher Eligibility Test | CTET | India https://share.google/mgWqnihHouGfeolXC

மேலும், அனுமதி அட்டை தற்காலிகமானது மட்டுமே; CTET தேர்ச்சி பெற்றாலும் வேலை உறுதி கிடைக்காது. இறுதி தகுதி சரிபார்ப்பு நியமன அமைப்புகளால் மேற்கொள்ளப்படும். தேர்வர்கள் தேர்வு மையத்தின் இடம் மற்றும் போக்குவரத்து வசதிகளை முன்கூட்டியே சரிபார்க்குமாறு CBSE அறிவுறுத்தியுள்ளது.





இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

SMC - இன்று நடைபெறவுள்ள பள்ளி மேலாண்மைக் குழு கூட்ட அறிக்கை ( 06.02.26 வெள்ளி ) - கையால் எழுதப்பட்ட நகல் ( Pdf )

  

 65992471bddeb_wm

SMC - இன்று நடைபெறவுள்ள பள்ளி மேலாண்மைக் குழு கூட்ட அறிக்கை ( 06.02.26 வெள்ளி ) - கையால் எழுதப்பட்ட நகல் ( Pdf )

👇👇👇👇

Download here


நன்றி

திரு க.நாகராஜன்

தலைமையாசிரியர்

ஊ.ஒ.தொ.பள்ளி - குப்பதேவன்

தஞ்சாவூர் மாவட்டம்.





இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

பிப்.8-ல் நடைபெற உள்ள நிப்ட் நுழைவுத் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு

  

hindutamil-prod%2F2026-02-06%2F3jhya6bu%2F10

நாடு முழு​வதும் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்​நுட்ப நிறு​வனங்​களில் (நிப்ட்) இளநிலை, முது​நிலை, பிஎச்டி படிப்​பு​களில் சேர நுழைவுத் தேர்வு கட்டாயம். அந்த வகை​யில் 2026-ம் ஆண்டு மாணவர் சேர்க்​கைக்​கான தேசிய அளவிலான நிப்ட் நுழைவுத் தேர்வு வரும் 8-ம் தேதி நடை​பெற உள்​ளது.

இந்​நிலை​யில், தேர்​வுக்கான ஹால் டிக்​கெட்​களை என்​டிஏ தற்​போது வெளி​யிட்​டுள்​ளது. மாணவர்​கள் தங்​கள் ஹால் டிக்​கெட்டை https://exams.nta.nic.in/niftee என்ற இணை​யதளத்​தில் பதி​விறக்​கம் செய்​து​கொள்ள வேண்​டும். கூடு​தல் விவரங்​களை http://www.nta.ac.in எனும் தளத்​தில் அறிய​லாம்.

இதில் ஏதேனும் சந்​தேகம் இருந்​தால், 011-40759000/ 69227700 என்ற தொலைபேசி எண் அல்​லது nift@nta.ac.in எனும் மின்​னஞ்​சலை மாணவர்​கள் தொடர்பு கொண்டு விளக்​கம் பெறலாம் என்று என்​டிஏ வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ளது.





இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

CTET : ஆசிரியர் பணி தகுதிக்கான ‘சிடெட்’ தேர்வு இன்று தொடக்கம்

  


hindutamil-prod%2F2026-02-06%2Fra4ep42l%2F15451212
தமிழ், ஆங்​கிலம் உள்​ளிட்ட 20 மொழிகளில் ஆசிரியர் பணிக்​கான ‘சிடெட்’ தேர்வு நாடு முழு​வதும் இன்று தொடங்​கு​கிறது.

மத்​திய அரசின் இலவச கட்​டாயக் கல்வி உரிமைச் சட்​டத்​தின்​படி, ஆசிரியர் பணி​யில் சேரு​வதற்​கு, மத்​திய ஆசிரியர் தகு​தித் தேர்​வில் (சிடெட்) கட்​டா​யம் தேர்ச்சி பெற வேண்​டும். 2 தாள்​கள் கொண்ட இந்தத்தேர்வை மத்​திய இடைநிலைக்கல்வி வாரி​யம் (சிபிஎஸ்இ) சார்பில் ஆண்​டுதோறும் ஜூலை,டிசம்​பர் என 2 முறை தேர்வு நடத்தி வரு​கிறது.

இடைநிலை ஆசிரியர் பணிக்கு முதல் தாள் தேர்​வும், பட்​ட​தாரி ஆசிரியர் பணிக்கு 2-ம் தாள் தேர்​வும் நடத்​தப்​படு​கிறது. இந்தத் தேர்​வில் ஒரு​முறை தேர்ச்சி பெற்​றால், அதன்சான்​றிதழ் வாழ்​நாள் முழு​வதும்செல்​லத்​தக்​கதாகும்.

இந்​நிலை​யில், நடப்பு ஆண்​டுக்​கான சிடெட் தேர்வு இன்​றும், நாளை​யும் (பிப்​.7, 8) நடை​பெறுகிறது. மொத்​தம் 150 மதிப்​பெண்​கள். தமிழ், இந்​தி, ஆங்​கிலம் உள்​ளிட்ட 20 மொழிகளில் தேர்வு நடைபெறும்.

தேர்​வர்​களுக்​கான ஹால் டிக்​கெட் கடந்த 5-ம் தேதி வெளி​யிடப்​பட்​டது. அதன் விவரங்​களை https://ctet.nic.in/ என்ற இணை​யதளத்​தில் அறிய​லாம். தேர்வு மையத்​துக்கு காலை அமர்​வுக்கு 9.30 மணிக்​கும், பிற்பகல் 2.30 மணிக்​கும் முன்​பாக தேர்வர்கள் வந்​து​விட வேண்​டும்.

ஹால் டிக்​கெட்​டில் கூறப்​பட்​டுள்ள விதி​களை முறையாக பின்​பற்றி தேர்​வறை​யில் செயல்பட வேண்​டும். முறை​கேடு​களில் ஈடு​பட்​டால், தேர்ச்சி ரத்து செய்​யப்​படு​வதுடன், எதிர்​காலத் தேர்​வு​களில் பங்​கேற்க தடை​யும்​ விதிக்கப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.





இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ள 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்களுக்குக் கூடுதல் வாய்ப்பு

  

 > மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ள 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்களுக்குக் கூடுதல் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

1. சிறப்பு தட்கல் (Tatkal) முறையில் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

2. விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள்: வரும் 10 மற்றும் 11-ம் தேதிகள்.

3. விண்ணப்பிக்கும் முறை: அந்தந்த மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

4. கட்டண விவரம்: தேர்வு கட்டணத்துடன் சேர்த்து, மேனிலைப் பள்ளிக்கு ரூ.1000-ம், பத்தாம் வகுப்புக்கு ரூ.500-ம் கூடுதலாகச் செலுத்த வேண்டும்.

5. தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

6. இந்த விவரங்கள் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.





இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

அரசு ஊழியர்கள் ராஜினாமா செய்தால் ஓய்வூதியம் பெற முடியாது: ஐகோர்ட்

  

Tamil_News_lrg_4145002

'அரசு ஊழியர், மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்தால், ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்கள் பெற தகுதியில்லை' என, சென்னை உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தெளிவுபடுத்தி உள்ளது. 


மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்த அரசு ஊழியர்கள் இருவர், தங்களை விருப்ப ஓய்வு பெற்றவர்களாகக் கருதி, ஓய்வூதியம் வழங்க, அரசுக்கு உத்தரவிட கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். பணியை ராஜினாமா செய்த அரசு ஊழியர், ஓய்வூதியம் பெற தகுதி உள்ளதா, இல்லையா என்பது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம், இரு வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளது. இந்நிலையில், இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், டி.பரத சக்கரவர்த்தி மற்றும் சி.குமரப்பன் அடங்கிய, மூன்று நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு: பணி விதிகளில் ஓய்வு, விருப்ப ஓய்வு, கட்டாய ஓய்வு, ராஜினாமா ஆகிய சொற்றொடர்கள், வெவ்வேறு பொருளை உணர்த்துகின்றன. 

தமிழக ஓய்வூதிய விதிகள், உடல் அல்லது மன அளவில் பலவீனம் போன்ற மருத்துவ காரணங்கள் அடிப்படையில், ராஜினாமா செய்வோருக்கு மட்டுமே, ஓய்வூதியம் வழங்க வகை செய்கிறது. மற்ற மருத்துவ காரணங்களை கூறி ராஜினாமா செய்தவர், முந்தைய பணிக் காலத்தை இழந்து விடுவதால், ஓய்வூதியப் பலன்களைக் கோர முடியாது. இவ்வாறு நீதிபதிகள், தங்கள் உத்தரவில் தெளிவுப்படுத்தி உள்ளனர்.



இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

கல்வி விழிப்புணா்வு பணி: இந்திய ஆசிரியைக்கு 10 லட்சம் டாலா் பரிசு

  

நூற்றுக்கணக்கான கல்விப் பயிற்சி மையங்களை உருவாக்கியதற்கும், குடிசைப் பகுதிகளில் உள்ள சுவா்களில் கல்விச் சித்திரம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தியதற்காகவும் இந்தியாவைச் சோ்ந்த ஆசிரியை ரூபிள் நாகிக்கு 10 லட்சம் டாலா் (சுமாா் ரூ. 9 கோடி) உலக ஆசிரியா் பரிசுத் தொகை அளிக்கப்பட்டுள்ளது.

ரூபிள் நாகியின் தொண்டு நிறுவனம் சாா்பில் இந்தியா முழுவதும் 800-க்கும் மேற்பட்ட பயிற்சி கல்வி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கல்வி கற்க பள்ளிக்குச் செல்லாத சிறாா்களுக்கு இந்த மையங்கள் வழியே கல்வி கற்றுத் தரப்படுகிறது. இதேபோல், குடிசைப் பகுதிகளில் உள்ள சுவா்களில் கல்வியறிவு, அறிவியல், கணிதம், வரலாறு உள்ளிட்டவை குறித்து ரூபிள் நாகி சித்திரம் வரைந்துள்ளாா்.

இந்தச் சேவையை கெளரவிக்கும் வகையில், துபையில் நடைபெற்ற உலக அரசுகளின் மாநாட்டில் ரூபிள் நாகிக்கு 10 லட்சம் டாலா் உலக ஆசிரியா் பரிசு அளிக்கப்பட்டது. துபை துணைப் பிரதமா் ஷேக் ஹம்தான்பின் முகமது இப்பரிசை வழங்கினாா். விருதுடன் கிடைத்த பரிசுத் தொகையை இலவசப் பயிற்சி மையம் அமைக்கப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக ரூபிள் தெரிவித்தாா்.

இந்த விருதைப் பெறும் 10-ஆவது ஆசிரியை இவா் ஆவாா். இதற்கு முன்பு கென்யா, பாலஸ்தீனம், கனடா, சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த ஆசிரியைகள் பெற்றனா்.





இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

பிப்ரவரி 17-ம் தேதி தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல்..

  

221995


தமிழ்நாடு 2026-ஆம் ஆண்டு, பிப்ரவரி திங்கள் 17-ஆம் நாள், செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு, சென்னை-600 009, தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் கூட்டியுள்ளார்கள்.


மேலும், 2026-ஆம் ஆண்டு, பிப்ரவரி திங்கள் 17-ஆம் நாள், செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.30 एल, 2026-2027-ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும்.


2026-2027-ஆம் ஆண்டிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள் மற்றும் 2025-2026-ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் (இறுதி) ஆகியன 2026-ஆம் ஆண்டு, பிப்ரவரி திங்கள் 20-ஆம் நாள், வெள்ளிக்கிழமை அன்று பேரவைக்கு அளிக்கப்பெறும்.





இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

இன்றைய (07.02.2026) முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வில் காண்பிக்கப்பட்ட காலிப் பணியிடங்கள் பட்டியல்!!!

 

 

222049

இன்றைய (07.02.2026) முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் பொருளியல் பாடங்களுக்கு காண்பிக்கப்பட்ட காலிப் பணியிடங்கள்!

PG Vacancies 07.02.2026 - Download here





இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க