Kalanjiyam app-ல் கார்த்திகை தீபம் வரையறுக்கப்பட்ட விடுப்பு டிசம்பர் 3 என்று தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது.
Update Kalanjiyam app..
https://play.google.com/store/apps/details?id=com.ifhrms.kalanjiyam
Education News, Employment News in tamil
Kalanjiyam app-ல் கார்த்திகை தீபம் வரையறுக்கப்பட்ட விடுப்பு டிசம்பர் 3 என்று தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது.
Update Kalanjiyam app..
https://play.google.com/store/apps/details?id=com.ifhrms.kalanjiyam
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.12.2025
திருக்குறள்
குறள் 738:
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து.
விளக்க உரை:
நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்.
பழமொழி :
sweat today, shine tomorrow.
இன்று சிந்தும் வியர்வை, நாளை ஒளியாக மாறும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. உள்ளத்தின் எண்ணங்களே நம்மை உருவாக்கும். எனவே நல்லதே நினைப்பேன்.
2. நம் எண்ணங்களை உருவாக்குவது நல்ல புத்தகங்களும் நல்ல நண்பர்களுமே. எனவே இவற்றை நல்ல விதமாக தேர்ந்தெடுப்பேன்.
பொன்மொழி :
உணர்ச்சிகளுக்கு அடிமையாகும் யாரும் தனக்கு எஜமானனாக முடியாது. எனவே, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள் - பரூச் ஸ்பினோஸா
பொது அறிவு :
01.மிகப் பழமையான கணிதம் பற்றிய தமிழ் நூல் எது?
கணக்கதிகாரம்- Kanakathikaram
02. பரத்பூர் பறவைகள் சரணாலயம் இந்தியாவில் எந்த மாநிலத்தில் உள்ளது?
ராஜஸ்தான்-Rajasthan
English words :
Bill - total amount you need to pay
receipt-the paper that proves you paid
தமிழ் இலக்கணம்:
ஓர், ஒரு எது எங்கே வரும்?
உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்களுக்கு முன்னால் ஓர் பயன்படுத்த வேண்டும்
எ. கா:
1. ஓர் அரசன்
2. ஓர் ஏணி
3. ஓர் ஆடு
4. ஓர் உரல்
5. ஓர் ஒட்டகம்
உயிர்மெய் எழுத்துக்களுக்கு பின்னால் வரும் சொற்களுக்கு முன்னால் ஒரு பயன் படுத்த வேண்டும்
1. ஒரு பறவை
2. ஒரு தாமரை
3. ஒரு மண்டபம்
4. ஒரு வேடன்
5. ஒரு மலர்
அறிவியல் களஞ்சியம் :
மூளையானது முள்ளந்தண்டு வடம் மூலம் உடலுடன் இணைக்கப்பட்டுள்ளது, முள்ளந்தண்டு நரம்புகள் மூளையிலிருந்து தூண்டுதல்கள் மற்றும் செய்திகளை அனுப்புகிறது மற்றும் பெறுகிறது.
இருப்பினும், உடலுடன் நேரடியாக இணைக்கும் பன்னிரண்டு மண்டை நரம்புகள் உள்ளன. இந்த நரம்புகள் தலை மற்றும் கழுத்தின் தசை மற்றும் உணர்திறன் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளன.
இவற்றில் ஒன்று ட்ரைஜெமினல் நரம்பு
டிசம்பர் 03
பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள்
உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையும், உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் ஐ.நா சபை உலகம் முழுவதும் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் (பன்னாட்டு ஊனமுற்றோர் நாள்) என டிசம்பர் 3ஐ அனுசரிக்கின்றது.
1981-ம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதியை பன்னாட்டு மாற்றுத்திறானாளிகள் நாளாக அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள், உலக நாடுகளால் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் என கொண்டாடப்படுகின்றது.
உலகின் பல நாடுகளிலும் பல்வேறு மட்டத்தில் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. பொதுவாக தன்னார்வலர்களினாலேயே இந்நாளில் பல முன்னெடுப்புகள் இடம்பெறுகின்றன. பல நாடுகல் அரசு நிறுவனங்கள், மற்றும் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் ஊனமுற்றோர்களின் நிலையை உயர்த்துவதற்கான செயல் திட்டங்களை தீட்டி, அவர்களின் முயற்சிகளுக்கு உறுதுணை புரிகின்றன. அத்துடன், சமுதாயத்தில் ஊனமுற்றோர்களின் நிலை உயர சிறப்புக் கருத்தரங்கங்கள், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், பிரசாரங்கள், ஊடகங்கள் வழியாக விழிப்புணர்வு விளம்பரங்கள் ஆகியவற்றின் வாயிலாக சமூகத்தில் சம உரிமைகளுடன் ஒவ்வொரு துறையிலும் ஊனமுற்றோர்கள் சிறந்து விளங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன
நீதிக்கதை
மாறுதல் முக்கியம்
ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையாயிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.
ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார் ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!
அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்து கேட்டார். தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?
பையன் சொன்னான் தங்கம் என்று.
அவர் கேட்டார் பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?
பையன் சொன்னான் தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள்.
நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் . உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள். நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன்.
இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். உடனே அறிஞர் திகைத்தார்!
வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு ஆனால் நாம் தோற்பதில்லை. அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!
இன்றைய செய்திகள் - 03.12.2025
⭐வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் தடுப்பணையில் வெள்ளம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை
⭐தமிழகத்தின் தொழில்துறையை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
தண்டையார்பேட்டையில் அரசு அச்சகப் பணியாளர்களுக்கு புதிய குடியிருப்புகள் - முதலமைச்சர் திறந்து வைத்தார்
🏀 விளையாட்டுச் செய்திகள்
🏀ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 4-ஆம் தேதி தொடங்குகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.
Today's Headlines
⭐The District Collector has warned the public that there is a risk of flooding at the check dam due to the increase in water inflow to the Vaigai Dam.
⭐The Tamil Nadu government has signed 158 agreements to improve Tamil Nadu's industry.
⭐ The Chief Minister inaugurates new residences for government printing staff in Thandaiyarpet.
SPORTS NEWS
🏀The 2nd test match between Australia and England begins on the 4th. The Australian team won the first test m
atch.
Covai women ICT_போதிமரம்
கனமழை காரணமாக
மத்திய அரசின் National Highways Authority of India (NHAI) நிரந்தர மத்திய அரசு பணிகளில் சேர விரும்பும் வேட்பாளர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பு வழங்கியுள்ளது. Group A, B, C பிரிவுகளில் மொத்தம் 84 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. அனைத்து மாநிலங்களிலும் பணியிடங்கள் கிடைக்கும் என்பதால், இது நாடு முழுவதும் உள்ள வேட்பாளர்களுக்கு மிகச் சிறந்த வேலைவாய்ப்பு.
| Post Name | Vacancies |
|---|---|
| Deputy Manager (Finance & Accounts) | 09 |
| Library & Information Assistant | 01 |
| Junior Translation Officer | 01 |
| Accountant | 42 |
| Stenographer | 31 |
| Total | 84 |
➡️ தமிழக தேர்வு மையம் – சென்னை
உள்ளூர் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு பெரிய plus!
சென்னையில் செயல்பட்டு வரும் Tata Consultancy Services (TCS) நிறுவனத்தில் Java Springboot Developer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. IT துறையில் பணி மாற விரும்பும் அனுபவம் பெற்ற வேட்பாளர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு.
இந்த வேலை 4 முதல் 6 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களுக்கு மட்டுமே.
👉 அதிகாரப்பூர்வ அறிவிப்பு & Registration Link: Click Here
விண்ணப்பித்தவர்கள் நேரடியாக Walk-In Interview-க்கு பங்கேற்கலாம்.
அரியலூா் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள நாகம்பந்தல் காலனி குழந்தைகள் மையத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் (ICDS) திட்டத்தின் கீழ் ஒரு அங்கன்வாடி உதவியாளா் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணியிடம் மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டின் கீழ் அமிலவீச்சால் பாதிக்கப்பட்டவர்கள், தொழுநோயிலிருந்து குணமடைந்தவர்கள் மற்றும் குள்ளத்தன்மை கொண்டவர்கள் ஆகியோருக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுகிறது.
கடைசி நேர Rush தவிர்க்க முன்கூட்டியே விண்ணப்பிக்கவும்.
இந்த அறிவிப்பு ஏன் முக்கியம்?
மாற்றுத்திறனாளிகள் için ஒதுக்கப்பட்ட சிறப்பு வாய்ப்பு
Direct Recruitment – தேர்வு சிக்கல் குறைவு
பெண்கள் & உள்ளூர் விண்ணப்பதாரர்களுக்கு அதிக வாய்ப்பு
🔗 அதிகாரப்பூர்வ இணைப்புகள்
📄 விண்ணப்பப்படிவம் & முழு விவரங்கள்:
Download
👉 அரியலூர் மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும்
தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு 2025 - தேர்வு முடிவுகள் தெரிவுப்பட்டியல்
2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான “தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு” 11:10.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெற்றது. இத்தேர்வில் மொத்தம் 2,70,508 மாணாக்கர்கள் பங்குபெற்றனர். இத்தேர்வில் 1500 மாணாக்கர்கள் (750 அரசுப்பள்ளி,அரசு நிதி உதவிப்பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணாக்கர்கள் . 750 அரசுப்பள்ளி மாணாக்கர்கள்) தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்ககம் வழியாக மாதம் ரூ.1500/- வீதம் இரண்டு வருடங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
Click Here to Download - DGE - TTSE 2025 - Selected Students List - Pdf
அரசின் சஞ்சார் சாத்தி(Sanchar Saathi) செயலியை பயனர்கள் நீக்க, அழிக்க முடியாத வகையில் புதிய ஸ்மார்ட் போன்களில் நிறுவ வேண்டும் என தயாரிப்பு நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு அமைச்சகம் உத்தரவு.
இதற்காக 90 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டு உள்ளது.
ஏற்கெனவே விநியோகத்தில் உள்ள மொபைல்களுக்கு அப்டேட்டுகள் மூலமாக செயலியை நிறுவுவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தல் எனத் தகவல்.