தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தரநிலை அறிக்கை: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

அரசு தொடக்​கப் பள்​ளி​களில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களுக்கு வழங்​கப்​படும் தரநிலை அறிக்​கையை பயன்​படுத்த வழி​காட்​டு​தல்​கள் வெளி​யிடப்​பட்​டுள்​ளன.


இதுதொடர்​பாக மாவட்​டக் கல்வி அலு​வலர்​களுக்கு தொடக்​கக் கல்​வித் துறை இயக்​குநர் நரேஷ் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்கை விவரம்: எண்​ணும் எழுத்​தும் திட்​டத்​தின்​கீழ் நடப்பு கல்வி ஆண்​டில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்​களுக்​கும் தரநிலை அறிக்கை அச்​சிட்டு அனைத்து மாவட்​டங்​களுக்​கும் வழங்​கப்​பட்​டுள்​ளது. இதை மாணவர் எண்​ணிக்​கைக்கு ஏற்ப அரசுப் பள்​ளி​களுக்கு பிரித்து வழங்க வேண்​டும். இந்த அறிக்​கையை எவ்​வாறு பயன்​படுத்த வேண்​டும் என்​பது குறித்து வழி​காட்​டு​தல் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. அதை பின்​பற்றி செயல்​படு​மாறு தலைமை ஆசிரியர்​களை அறி​வுறுத்த வேண்​டும்.


இதுத​விர, தரநிலை அறிக்​கை​யில் மாணவர்​களின் அடிப்​படை விவரங்​களை நிரப்​பி, அவரது பாஸ்​போர்ட் அளவு புகைப்​படத்தை ஒட்ட வேண்​டும். ஒவ்​வொரு பரு​வத்​தி​லும் மொத்த வேலை நாட்​கள், மாணவர் பள்​ளிக்கு வந்த நாட்​களின் எண்​ணிக்​கையை நிரப்ப வேண்​டும். திறன் அடிப்​படையி​லான பகு​தி​கள், மொழித் திறன்​கள், கணிதம், அறி​வியல், சமூக அறி​வியல் திறன்​களில் குழந்​தை​யின் தரநிலையை (ஏ, பி, சி) பதிவு செய்ய வேண்​டும்.


இதே​போல, கல்வி இணைச் செயல்​பாடு​கள், விளை​யாட்டு பங்​கேற்​பு, குழுப்​பணி, படைப்​பாற்​றல் போன்ற பகு​தி​களில் குழந்​தை​யின் ஈடு​பாட்டை கருத்​தில் கொண்​டு, அதற்​கான தரநிலையை பதிவுசெய்ய வேண்​டும். மேலும், அதில் ஆசிரியர் குறிப்​பு, பெற்​றோரின் கருத்​துப் பதிவு, கையொப்​பம் போன்ற பகு​தி​களும் இடம்​பெற்​றுள்​ளன. மதிப்​பெண் அட்​டையை பெற்​றதும் பெற்​றோர் தங்​கள் கருத்​துகளை எழுத ஊக்​கமளிக்க வேண்​டும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

அக்டோபர் 5, சர்வதேச ஆசிரியர் தினம் இன்று.

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5 ஆம் தேதி சர்வதேச ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.


யுனெஸ்கோ அமைப்பால் 1994ஆம் கொண்டு வரப்பட்ட முன்னெடுப்பைத் தொடர்ந்து  அக்டோபர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதை ஒட்டி ஆசிரியர் தினத்தை உலகில் பெரும்பாலான நாடுகள் கொண்டாடுகின்றன.


ஆசிரியர் தினம் சில நாடுகளில் விடுமுறை நாளாகவும், சில நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது. ஆசிரியர்களின் மேன்மையை வருங்கால சந்ததியினரும் உணரும் விதமாகவும், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.


இந்தியா, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதியை ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறது.


ஆசிரியர் தினம் என்பது பயிற்றுவிக்கும் ஆசான்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் ஒரு நாளாகும். அவர்களை நன்றியுடன் நினைவு கூறவும், அவர்களின் பணி தொடர வாழ்த்துவதுமே ஆசிரியர் தினம் கொண்டாட்டங்களின் பிரதான எதிர்பார்ப்பாகும்.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 % டிஏ உயர்வு வழங்க கோரிக்கை

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)


தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 % டிஏ உயர்வு வழங்க கோரிக்கை

IMG-20251005-WA0001

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

அனைத்து ஆசிரியர்களும் Viksit Bharat Buildathon (VBB) இணையதளத்தில் உடனடியாக பதிவு செய்ய CEO உத்தரவு

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)


அனைத்து ஆசிரியர்களும் Viksit Bharat Buildathon (VBB)   இணையதளத்தில் உடனடியாக பதிவு செய்ய CEO உத்தரவு

அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் வணக்கம்.

இணை இயக்குநர் (நாட்டு நலப்பணித் திட்டம்) அவர்களின் வழிகாட்டலில்படி பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் Viksit Bharat Buildathon (VBB)   இணையதளத்தில் உடனடியாக பதிவு செய்ய வேண்டும்.

நாளை (03.10.2025) மதியம் 2.00 மணிக்குள் அனைத்து ஆசிரியர்களும் பதிவு செய்யும்படி தலைமை ஆசிரியர்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு வழிகாட்டி இந்த பணியினை உடனடியாக முடிக்க உத்தரவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மதியம் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்கள், உதவி திட்ட அலுவலர் மற்றும் பள்ளித்துணை ஆய்வாளர்கள் ஆகியோர்களுக்கு மீளாய்வு கூட்டம் நடைபெற உள்ளது.

ஆகவே இதில் தனிக்கவனம் செலுத்தி அனைத்து ஆசிரியர்களுக்கும் நாளை தகவல் தெரிவித்து இப்பணி முழுமையாக முடிக்க உரிய வழியில் உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

முதன்மைக் கல்வி அலுவலர் (பொ),

திருப்பூர்.

Link for registration 

https://vbb.mic.gov.in/

>>> Viksit Bharat Buildathon Registration Process Video...

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

எண்ணும் எழுத்தும் பயிற்சி ; ஆசிரியர்கள் பங்கேற்க கல்வித் துறை அறிவுறுத்தல்

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

எண்ணும் எழுத்தும் பயிற்சி ; ஆசிரியர்கள் பங்கேற்க கல்வித் துறை அறிவுறுத்தல்

அக்டோபர் 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்; தொடக்க பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்க கல்வித்துறை அறிவுறுத்தல்

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் அக்டோபர் 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) சார்பில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது; 

தமிழகத்தில் கடந்த 2022-23 ஆம் கல்வியாண்டு முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசாணையின்படி இந்தத் திட்டம் 2025 முதல் 2027 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. நடப்பு கல்வியாண்டில் (2025-26) 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பாடப்பொருள் சார்ந்து 2 ஆம் பருவத்துக்கான ஒன்றிய அளவிலான பயிற்சி அக்டோபர் 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பயிற்சிக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை ஏற்றவாறு குழுக்களாகப் பிரிந்து கருத்தாளர்கள், குழுக்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு பயிற்சி நாள்களை முடிவு செய்து, மேற்குறிப்பிட்ட தேதிக்குள் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்க வேண்டும். பயிற்சி நடைபெறும் நாளில் தொடக்க வகுப்புகளில் கல்வி சார்ந்த பணிகள் பாதிக்கப்படக் கூடாது. பயிற்சி நடைபெறும் நாளில் ஆசிரியர் இல்லாத நிலையில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் மாற்றுப் பணியில் ஆசிரியரை நியமனம் செய்ய வேண்டும். ஒன்றிய அளவிலான இந்த பயிற்சியில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொள்வதற்கு ஏதுவாக அவர்களை பணிவிடுப்பு செய்ய வேண்டும்.. இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பள்ளிக்கல்வி - பொதுப்பணி /அமைச்சுப்பணி - Mutual Transfer / Promotion - Director Proceedings

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

பள்ளிக்கல்வி - தமிழ்நாடு பொதுப்பணி /அமைச்சுப்பணி - இணை இயக்குநர் / மாவட்டக் கல்வி அலுவ்லரின் நேர்முக உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் உதவியாளர்கள் - விருப்ப மாறுதல் / மனமொத்த மாறுதல் (Service completed one year in Present Post / Present Station) மற்றும் பதவி உயர்வு வழங்குதல் - சார்ந்து பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!


Click Here to Download - Non Teaching Willing Transfer and Promotion Counselling - Director Proceedings - Pdf


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

NHIS - பயன்களைப் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல்களுக்கான தீர்வுகள் - தமிழ்நாடு அரசின் கடிதம்!

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பயன்களைப் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல்களுக்கான தீர்வுகள் தொடர்பாக தமிழ்நாடு அரசின் கடிதம்!


Click Here to Download - Letter No.5259-9 - NHIS Claim Clarification - Govt Letter - Pdf



Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பள்ளிக் கல்வித் துறையில் உதவியாளா் பணியிடங்கள்: அக்.6-இல் கலந்தாய்வு

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தெரிவு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன கலந்தாய்வு வரும் திங்கள்கிழமை அந்தந்த மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இணைய வழியில் நடைபெறவுள்ளது.


பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தெரிவு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன கலந்தாய்வு வரும் திங்கள்கிழமை அந்தந்த மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இணைய வழியில் நடைபெறவுள்ளது.


இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி சாா்பில் 2024-ஆம் ஆண்டு நடத்திய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு 2ஏ (நோ்முகத் தோ்வு அல்லாத பணியிடங்கள்) தோ்வுகள் மூலம் தோ்ச்சி பெற்று பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடத்துக்கு தெரிவு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன கலந்தாய்வு அக்.6-ஆம் தேதி (திங்கள்கிழமை) அந்தந்த மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இணைய வழியில் நடைபெறவுள்ளது.


எனவே, மேற்கண்ட உதவியாளா் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவா்கள் தங்களுடைய தெரிவுக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்தில் அக்.6-ஆம் தேதி கலந்து கொள்ள வேண்டும்.



இந்தக் கலந்தாய்வில் கலந்து கொள்வோா் டிஎன்பிஎஸ்சி தெரிவுக் கடிதம் மற்றும் அனைத்துக் கல்விச் சான்றுகளின் அசல் மற்றும் சான்றொப்பமிட்ட நகலை சரிபாா்ப்புக்கு எடுத்து வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கல்வித் துறையில் உதவியாளா் பணியிடத்துக்கு மொத்தம் 160 போ் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளின் சிரமத்தை ஆய்வு செய்ய மத்திய அரசு திட்டம்?

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

1. நீட் மற்றும் ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளின் சிரம நிலை 12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்திற்கு இணையாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2. பயிற்சி மையங்கள் தொடர்பான பிரச்சினைகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் கூற்றுப்படி, தேர்வுகளின் சிரமம் குறித்து ஆய்வு செய்யப்படும்.

3. இது தொடர்பாக, அந்த வட்டாரங்கள் கூறியதாவது: "12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையில் நுழைவுத் தேர்வுகளில் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இருப்பினும், சில பெற்றோர்கள் மற்றும் பயிற்சி மையங்களின் ஆசிரியர்கள் இரண்டிற்கும் இடையே வேறுபாடுகள் இருப்பதாகக் கூறியுள்ளனர். இதனால் மாணவர்கள் பயிற்சி மையங்களையே முழுமையாகச் சார்ந்திருக்கும் நிலை ஏற்படுகிறது."


4. பயிற்சி மையங்கள் தொடர்பான குழுவின் கருத்தின் அடிப்படையில், நுழைவுத் தேர்வுகளின் சிரமம் குறித்து ஆய்வு செய்யப்படும்.


5. பள்ளிக் கல்வி முறையில் உள்ள தற்போதைய குறைபாடுகளை இந்தக் குழு ஆய்வு செய்து வருவதாகவும், இதனால் மாணவர்கள் பயிற்சி மையங்களைத் தேடத் தொடங்குவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


6. மாணவர் தற்கொலைகளின் அதிகரிப்பு, பயிற்சி மையங்களில் அதிக கட்டணம், தீ விபத்துகள் மற்றும் பிற அடிப்படை வசதி பிரச்சினைகள் நாட்டில் ஒரு முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளன.


இந்த நிலையில், உயர்கல்வி செயலாளர் வினீத் ஜோஷி தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை மத்திய கல்வி அமைச்சகம் அமைத்துள்ளது. உயர்கல்வி சேர்க்கைக்காக மாணவர்கள் பயிற்சி மையங்களை நம்பியிருப்பதைக் குறைப்பதற்கான பரிந்துரைகளை இந்தக் குழு வழங்கப் போகிறது.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

வேளாண் இளங்கலை படிப்புகளுக்கு மத்திய அரசு புதிய நுழைவுத் தேர்வு அறிவிப்பு!

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

1. மத்திய அரசின் அறிவிப்பின்படி, இந்தியாவில் உள்ள அனைத்து வேளாண் பல்கலைக்கழகங்களிலும் இளங்கலைப் படிப்புகளுக்கான 20% இடங்கள் இப்போது நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்படும்.

2. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை தொடர்பான இளங்கலைப் படிப்புகள் உள்ளன.

3. இந்த இரண்டு பல்கலைக்கழகங்களிலும் விவசாயம் தொடர்பான படிப்புகளுக்கு மொத்தம் 6,921 இடங்கள் உள்ளன. இவை ஆலோசனை மூலம் நிரப்பப்படுகின்றன.

4. இந்நிலையில், இந்தியாவில் உள்ள அனைத்து வேளாண் பல்கலைக்கழகங்களிலும் இளங்கலைப் படிப்புகளுக்கான 20% இடங்கள் நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

5. சேர, 12 ஆம் வகுப்பில் உயிரியல், வேதியியல், இயற்பியல், கணிதம் அல்லது வேளாண்மை போன்ற அறிவியல் தொடர்பான பாடங்களைப் படித்திருக்க வேண்டும்.

6. ஒருவர் விரும்பும் பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியின் நுழைவுத் தேர்வுகளை அடையாளம் கண்டு பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

7. விண்ணப்பத்தை உரிய தேதிக்குள் சமர்ப்பித்த பிறகு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் உட்பட இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்த பல்கலைக்கழகங்களில் வேளாண்மை மற்றும் தொடர்புடைய அறிவியல் துறைகளில் பல்வேறு இளங்கலைப் படிப்புகளில் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு பயன்படுத்தப்படுகிறது.


8. மற்ற பல்கலைக்கழகங்கள் வழங்கும் பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வுக்குத் தயாராக வேண்டும். நுழைவுத் தேர்வு மற்றும் கல்வித் திறனை அடிப்படையாகக் கொண்டு சேர்க்கைக்கான தேர்வு செயல்முறை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

குழந்தைகளுக்கான ஆதார் கட்டணம் ரத்து.

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

குழந்தைகளுக்கான ஆதார் கட்டணம் ரத்து.


7–15 வயதுடைய குழந்தைகளுக்கான ஆதார் கட்டணம் ரத்து; 6 கோடி குழந்தைகளுக்கு பயனளிக்கும் - ஆதார் அமைப்பு.


கட்டணங்களுக்கான தள்ளுபடி கடந்த அக்-1 முதல் அமல்; இந்த நடைமுறை ஒரு வருடம் அமலில் இருக்கும்.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

மாணவர்களை வெற்றியாளர்களாக்கும் ‘நான் முதல்வன்' திட்டம்

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)


1378551

 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் தேதியன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டம், தமிழ்நாட்டில் உயர்கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும் ஒரு மாபெரும் முயற்சியாகும். இத்திட்டமானது ஆண்டுதோறும் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களைத் திறன் சார்ந்த பயிற்சிகள் மூலம் தொழில்துறைக்குத் தயாரான திறன்மிகு சமுதாயத்தை உருவாக்கும் இலட்சிய நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.


முதலாம் ஆண்டிலேயே 13 லட்சம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளித்து, தற்போது வரை சுமார் 42 லட்சம் திறன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டம் பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் மற்றும் ITI மாணவர்களுக்கு எவ்வித நிதிச்சுமையும் இன்றி கல்வியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், வழிகாட்டிகள் மற்றும் நிர்வாகிகள் மூலம்திறன்களை வளர்க்கும் வகையில் ஒருங்கிணைந்த கல்வி வாய்ப்புகளை வழங்குகிறது.


இந்தத் திட்டம் நகர்ப்புற மாணவர்களுக்கு இணையாக ஊரகப்பகுதியைச் சேர்ந்த மாணவர்களின் திறன்களையும் உயர்த்துவதற்கு Microsoft, IBM, ORACLE, GOOGLE, CISCO, HCL, Infosys, AWS, Siemens, FANUC,Dassault, L&T போன்ற உலகளாவிய நிறுவனங்களுடன் இணைந்து தொழில்துறை சார்ந்த திறன் பயிற்சிகளை வழங்குகிறது.


இந்தப் பயிற்சிகள் Big Data, Internet of Things, Robotics, Artificial Intelligence, Machine Learning, Industry 4.0, Robotics, Building Information Modelling போன்ற துறைகளில் தொழில்நுட்ப நிபுணர்களால் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்திற்கான முழு செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்கிறது. திறன் வகுப்புகளை மாணவர்கள் எளிதில் பெறுவதற்கு ஏற்றவாறு பிரத்தியேக இணையதளம் ஒன்று (www.naanmudhalvan.tn.gov.in) இயக்கப்படுகிறது.


நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக, அரசுக் கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கான “Placement Readiness Trainingthrough Corporate Volunteering” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முயற்சியின் மூலம் தொழில் துறை நிபுணர்கள் நேரடியாக மாணவர்களுக்கு வழிகாட்டி, வேலைவாய்ப்பிற்குத் தேவையான அத்தியாவசிய திறன்கள் குறித்து பயிற்சி வழங்குகின்றனர். இதில் 28 முன்னணி நிறுவனங்கள் இணைந்துள்ளன. இதுவரை 131 தன்னார்வலர்கள் 22 அரசு கல்லூரிகளில் பங்கேற்று, மொத்தம் 393 மணி நேர தன்னார்வ பங்களிப்பின் மூலம் 3,899 மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கியுள்ளனர்.




நான் முதல்வன் நிரல் திருவிழா: இளைஞர்களின் படைப்பாற்றல் மற்றும் புதுமை திறனை வளர்க்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் அரசுத் துறைகள் மற்றும் தொழில் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டநுட்பவியல் சவால்கள் (problem statements) இறுதி ஆண்டுப் பொறியியல் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.



நான் முதல்வன் SCOUT திட்டமானது, தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு உலகளாவியதொழில்முறை பயிற்சியினை வெளிநாடுகளில் உள்ள முன்னணி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து வழங்கும் திட்டம் ஆகும். Data Science, AI, Bio Technology போன்ற துறைகளில் மாணவர்களை உலகத்தரம் கொண்ட வல்லுநர்களாக மேம்படுத்த இந்தத் திட்டம் உதவுகிறது.



இத்திட்டத்தின் முதற்கட்டமாக பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் தர்ஹம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து 100 மாணவர்களுக்கு இணையதளம் மூலமாக AI மற்றும் Data Science துறையில் பயிற்சி வழங்கப்பட்டது. இவர்களில் சிறந்த 25 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தர்ஹம் பல்கலைக்கழகத்தில் நேரடிபயிற்சி வழங்கப்பட்டது.


இப்பயிற்சி பெற்ற25 மாணவர்களில், 13 மாணவர்கள் முன்னணி நிறுவனங்களான பேங்க் ஆப் நியூயார்க்,சிட்டிகார்ப், Zoho, HCL டெக் போன்ற பெருநிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுள்ளனர். இவர்கள் ஆண்டு வருமானமாக 10 லட்சம் முதல் 31 லட்சம் வரை பெறுகின்றனர். இதர 12 மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர்கின்றனர்.



மேலும், 4 மாணவிகள் ஜப்பானில் உள்ள கியோட்டோ பல்கலைக்கழகத்தில் Bio-Technology சார்ந்த ஆராய்ச்சி பயிற்சி பெற்றனர். இவர்கள் அனைவரும் ஆராய்ச்சி சார்ந்த பயிற்சியினை தொடர இந்தியாவில் உள்ள ஐஐடி ரூர்க்கியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த 4 மாணவிகளும் கியோட்டோ பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்பு படிப்பதற்கான வாய்ப்பையும் பெற்றுள்ளனர் என்பது மேலும் சிறப்பு வாய்ந்ததாகும்.



தமிழ்நாடு திறன் போட்டி (TNSkills Competition) மூலம், இந்திய திறன் போட்டியில்தமிழ்நாடு தனது சாதனையை குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தியுள்ளது. 2021 ஆம் ஆண்டில் 23 பதக்கங்களுடன் 10ஆம் இடத்தில் இருந்த தமிழ்நாடு, 2024 ஆம் ஆண்டில் 40 பதக்கங்களை வென்று 3ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. வரும் இந்திய திறன் போட்டி 2026-ஐமுன்னிட்டு, தமிழ்நாட்டிலிருந்து இதுவரை 28,000-த்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பதிவு செய்துள்ளனர். இது, திறன் மேம்பாட்டில் தமிழ்நாடு எட்டியுள்ள வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது.




அடுத்த கட்டமாக இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டைச் சார்ந்த 10 மாணவிகள் ஜப்பான் நாட்டில் Internship பயிற்சி மேற்கொண்டனர். இவர்களுள், 6 மாணவிகள் நெக்ஸ்ட் ஜென் கார்ப் என்ற நிறுவனத்தில் கணினி துறையில் தொழில் பயிற்சி பெற்று, 5 மாணவிகள் அதே நிறுவனத்தில் முழு நேர பணி நியமனம் பெற்று ஆண்டு வருமானமாக 21 லட்சம் பெறுகின்றனர்.


நான் முதல்வன் - கல்லூரிக் கனவு திட்டம் மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள், தொழில் துறை விருப்பங்கள் மற்றும் எதிர்கால தொழில் வாய்ப்புகள் குறித்து விரிவான தகவலை வழங்குகிறது. மேலும், கல்விக் கடன் மற்றும் உதவித்தொகை பெறுவதற்கான வழிமுறைகள் மாணவர்களுக்கு எளிதாக்கப்பட்டுள்ளன. கடந்த 2024 கல்வியாண்டில் மொத்தம் 1,87,000 மாணவர்களும், 2025 ஆம் ஆண்டில் மட்டும் 81,149 மாணவர்களும் பயனடைந்துள்ளனர். இதனால் இதுவரை மொத்தம் 2,68,149மாணவர்கள் இத்திட்டத்தின் வாயிலாக நேரடியாக பயனடைந்துள்ளனர்.


அரசுப் பணி ஒன்றையே கனவாக கொண்டுள்ள ஆயிரமாயிரம் இளைஞர்களின் கனவை மெய்ப்படுத்தவும் குறிப்பாக ஒன்றிய அரசு நடத்தும் U.P.S.C, எஸ். எஸ். சி, இரயில்வே, மற்றும் வங்கித் துறை, போன்ற அரசுப்பணிக்கான போட்டித் தேர்வுகளுக்கு சிறப்பான பயிற்சி அளித்து இத்தேர்வுகளில் தேர்ச்சி பெறும் தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் “நான் முதல்வன்” – போட்டித் தேர்வுகள் எனும் தனிப்பிரிவு 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினால் துவக்கி வைக்கப்பட்டது.


UPSC முதல்நிலைத்தேர்வு ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ், மதிப்பீட்டு தேர்வின் மூலம் ஆண்டுதோறும் 1000மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பத்து மாதங்களுக்கு மாதம் ரூ.7,500ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. UPSC முதன்மை தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ.50,000 ஊக்கத்தொகையும், UPSC தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உறைவிடப் பயிற்சியும் வழங்கப்படுகிறது. சென்னை அண்ணா நகரில் போட்டித்தேர்வுக்கு தயார் ஆகும்மாணவர்களுக்கு படிப்பகம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.





நான் முதல்வன் UPSC முதன்மைத்தேர்வு ஊக்கத்தொகைத் திட்டம் - 2024 மூலம் மொத்தம் 559 மாணவர்கள் பயனடைந்தனர்; அதேபோல், UPSC முதல்நிலைத்தேர்வு ஊக்கத்தொகைத் திட்டம் (2024–25) மூலம் 1000 மாணவர்கள் பயனடைந்து, 316 பேர் முதல்நிலைத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.




இதேபோல், மத்திய அரசின் SSC, Railways மற்றும் Banking தேர்வுகளுக்குத் தயாராகும் 1000 மாணவர்களுக்கு சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய பகுதிகளில் 6 மாத கால உண்டு உறைவிடப் பயிற்சி வழங்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட SSC cum Railways மற்றும் Banking உண்டு உறைவிடப் பயிற்சி மூலம் 510 மாணவர்கள் பயிற்சி பெற்று, 40 பேர் வங்கிப்பணித்தேர்வுகளிளும், 19 பேர் SSC தேர்வுகளிலும் மற்றும் 2 பேர் ரயில்வே துறை சார்ந்த பணித்தேர்வுகளிளும் வெற்றி பெற்றுள்ளனர்.




2025 ஆம் ஆண்டு, UPSC முதல்நிலைத் தேர்வு ஊக்கத்தொகை திட்டத்திற்கான மதிப்பீட்டு தேர்வு நடத்தப்பட்டு, 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்; சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்ததும் மாதாந்திர ஊக்கத்தொகை வழங்கப்படும். இதற்கிடையில், சென்னையில் All India CivilService Coaching Centre-இல் 225 மாணவர்களுக்கும், மதுரை மற்றும் கோயம்புத்தூரில் தலா 100 மாணவர்களுக்கும் உறைவிடப் பயிற்சி தொடங்கவுள்ளது.


அதேபோன்று, SSC cum Railways மற்றும் Banking Residential Coaching Programme க்கான நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு, 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்; இவர்களுக்கு சென்னை, கோயம்புத்தூர், மதுரை பகுதிகளில் உறைவிடப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.


இதுதான் தமிழ்நாட்டின் மாணவர்களின் எதிர்காலத்துக்கு ஒளி வீசும் “நான் முதல்வன்” திட்டத்தின் வெற்றிப் பயணம். இந்த மாபெரும் திட்டம், கல்வி மற்றும் தொழில்துறையை இணைக்கும் பாலமாக இருந்து, இளைஞர்களை அவரவர் துறையில் உலகத்திறன் வாய்ந்த முதல்வராக உருவாக்குகிறது.



‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியி

ல்...

பட்டதாரி பிரேமா, தென்காசி: எதற்காக பெண் பிள்ளைகளை படிக்க வைக்கிறார் என்று பலர் என் தந்தையை கேள்வி கேட்பர். இதனால் அவர் மிகவும் கஷ்டப்பட்டார். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஐசிசிப் டிசைனிங் அண்ட் வெரிபிகேஷன் என்ற படிப்பை பயின்று செமிகண்டெக்டர் நிறுவனத்தில் நான் உட்பட 9 பேர் தற்போது பணியாற்றிவருகிறோம். இன்றைக்கு என் தந்தை பெருமையாக உணர்வார் என்று நினைக்கிறேன்.( பிரேமா தனது முதல் மாத ஊதியத்தை தந்தையிடம் கொடுத்தபோது அரங்கமே உணர்ச்சிவயப்பட்டது)


மாணவி ஜாலிஜா ஜோன்ஸ், கன்னியாகுமரி: நான் முதல்வன் திட்டத்தில் தற்போதைய டெக் யுகத்துக்கு தேவையான படிப்புகளை சொல்லி கொடுக்கின்றனர். கடைசி ஆண்டின்போது ஜப்பானில் நெக்ஸ்டன் என்ற நிறுவனத்தில் இண்டர்ன்ஷிப் செய்யும் வாய்ப்பு வந்தது. அதன்மூலமாக நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டோம். அந்த இண்டர்ஷிப்பின் கடைசி நாளில் எங்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது.



அதில் எங்களுக்கு ஆண்டுக்கு ரூ.21 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்தது. தற்போது ஜப்பானிய மொழியையும் கற்று வருகிறேன். இன்னும் ஓராண்டில் ஜப்பானில் பணியாற்ற உள்ளோம். இதற்கு உதவியாக அமைந்தது நான் முதல்வன் திட்டம்தான். அதற்காக முதல்வருக்கும், இந்த திட்டத்துக்கும் நன்றி(ஜப்பானிய மொழியில் நன்றி கூறினார்).



மாணவர் விஷ்ணு, வேலூர்: நான் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆங்கிலத்தில் ஒருவரிடம் எப்படி உரையாட வேண்டும் என நான் முதல்வன் திட்டத்தில் தான் கற்றுக் கொண்டேன். இதன்மூலமாக ஒருவர் என்னிடம் ஆங்கிலத்தில் பேசினால், புரிந்து கொண்டு பதிலளிக்க முடிகிறது. இதுதவிர்த்து சிசிடிவி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கற்றுத் தருகிறார்கள். இவற்றை நான் தனியார் மூலம் கற்றுக் கொண்டால் ரூ.40 ஆயிரம் வரை செலவாகும்.



பத்தாம் வகுப்பு முடித்த பிறகு கல்வியை தொடர வேண்டாம் என எண்ணினேன். ஆனால், நான் முதல்வன் திட்டம் மூலம் டிப்ளமோ படிப்புக்கு வழிகாட்டி, கூடுதலாக ஏராளமான திறன்சார் பயிற்சிகளும் வழங்கி வருகின்றனர். எனக்கு இஸ்ரோவில் பணிபுரிய விருப்பம். இதற்கும் இந்த திட்டத்தின் மூலம் போட்டித் தேர்வில் பங்கேற்பதற்கான வழிகாட்டலும் வழங்கப்படுகிறது.


மாணவி தீபஸ்ரீ, சென்னை: எனது தந்தை மீன்பிடி தொழில் செய்து வருகிறார். குடும்ப சூழ்நிலையால், என்னால் கல்லூரியில் சேர்ந்து இளநிலை படிப்பு படிக்க முடியாததால், டிப்ளமோ படிப்பில் சேர்ந்தேன். டிப்ளமோவில் முதலாமாண்டில் இருந்து, ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் பெற்றேன்.



2 புத்தொழில் நிறுவனங்கள் எனது திறன்களை அறிந்து, வீட்டில் இருந்து பணிபுரியும் வகையில், எனக்கு பகுதிநேர வேலைவாய்ப்பை கொடுத்தார்கள். நான் படித்து கொண்டே வேலை செய்துவருகிறேன். எனது வருமானத்தில் தங்கையை கல்லூரியில் படிக்க வைத்து குடும்பத்தின் முதல் பட்டதாரியாக உருவாக்கி இருக்கிறேன். விரைவில் நானும் இளநிலை படிப்பை தொடங்கிவிடுவேன்.


மாணவர் சுனித்குமார், திருவண்ணாமலை: அரசு கலை கல்லூரியில் படித்து வருகிறேன், 2-ம் ஆண்டு படிக்கும் போது சர்வதேச இண்டர்ஷிப் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எங்கள் கிராமம் மிகவும் சிறியது. விமானத்தில் சென்ற முதல் நபர் நான்தான். சியோல் நகரில் கஜான் பல்கலைக்கழகத்தில் பையொ-நேனோ அப்ளிகேசன் ஆய்வு மையத்தில் 15 நாட்கள் இண்டர்ன்ஷிப்பில் இருந்தோம். மேலும் சில பல்கலை.களுக்கு அழைத்து சென்று நேரடியாக உபகரணங்களில் பயிற்சி கொடுத்தனர்.




இண்டர்ன்ஷிப் முடித்து வந்த 6 பேருக்கும் மாதம் ரூ.60,000 உதவித்தொகையுடன் கொரியாவில் படிக்க வாய்ப்பு வழங்கியுள்ளனர். சிறிய கிரமத்தில் இருந்த எனக்கு வெளிநாட்டு சென்று படிக்கும் வாய்ப்பை நான் முதல்வன் திட்டம் வாயிலாகதான் கிடைத்தது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பள்ளிக்கல்வி இயக்ககம் - செய்திக் குறிப்பு ( 03.10.2025 )

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG-20251004-WA0002

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC ) 2024 ம் ஆண்டு நடத்திய ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு II A ( நேர்முகத்தேர்வு அல்லாத பணியிடங்கள் ) தேர்வுகள் மூலம் தேர்ச்சி பெற்று பள்ளிக்கல்வித்துறையில் காலியாகவுள்ள உதவியாளர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு பணிநியமன கலந்தாய்வு 06.10.2025 ( திங்கள்கிழமை ) அன்று அந்தந்த மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இணைய வழியாக ( google meet ) நடைபெறவுள்ளது. 


எனவே . மேற்படி உதவியாளர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்கள் தங்களுடைய தெரிவு கடிதத்தில் ( Selection Letter ) குறிப்பிட்டுள்ள முகவரியில் குறிப்பிடப்பட்ட மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்தில் 06.10.2025 அன்று காலை 10.00 மணியளவில் கலந்து கொள்ள தெரிவிக்கலாகிறது . மேற்காண் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் பணிநாடுநர்கள் TNPSC Selection Letter மற்றும் அனைத்து கல்விச்சான்றுகளின் அசல் மற்றும் ஒரு நகலினை ( மேலொப்பம் Attested copy ) சரிபார்ப்புக்கு எடுத்து வரவேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது . 

நாள் : 03.10.2025 பள்ளிக் கல்வி இயக்குநர்

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )