School Morning Prayer Activities - 24.09.2025

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.09.2025

திருக்குறள் 

குறள் 512: 


வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை 

ஆராய்வான் செய்க வினை. 


விளக்க உரை: 


பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளைஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும்.


பழமொழி :

The more you give, the more you gain. 


நீங்கள் அதிகம் கொடுத்தால், அதிகம் பெறுவீர்கள்.


இரண்டொழுக்க பண்புகள் :


1.இயற்கை வளங்களான நீர், காற்று, நிலத்தை பாதுகாப்பேன்.


2.என்னால் முடிந்த அளவு அவற்றை மாசு படுத்தாமல் இருப்பேன்.


பொன்மொழி :


தன்னை உயர்ந்தவனாகவும் மற்றொரு மனிதனை தாழ்ந்தவனாகவும் கருதுபவன் மனநோயாளி - அண்ணல் அம்பேத்கர்


பொது அறிவு : 


01 பழங்காலத்தில் "சேரன் தீவு" என்று அழைக்கப்பட்ட நாடு எது?


இலங்கை-Sri Lanka


02. உலக தாய்மொழி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?


பிப்ரவரி 21- February 21


English words :


Take down –remove something, write down the spoken words, ஒரு பொருளை அகற்றுதல், சொல்லுவதை எழுதுதல்


Grammar Tips: 


Prepositions


In - should come before 


* Times of the day - e.g : in Morning

* Months - e.g : in January

* Years - e.g : in 2004

* Seasons - e.g : In Summer


அறிவியல் களஞ்சியம் :


 பூமியை விட்டு விலகும் நிலவு


ஆண்டுக்கு 3.8 செ.மீ., என்ற அளவில் நிலவு, பூமியை விட்டு விலகி செல்கிறது. இதனால் பூமி சுற்றும் வேகமும் குறைகிறது. இதனால் ஒரு நாளுக்கான நேரம் 25 மணியாக அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஆண்டுதோறும் நிலவு நகர்வதால் 7 கோடி ஆண்டுக்கு முன் ஒரு நாளுக்கு 23.5 மணி நேரமாக இருந்தது. ஆனால் இதுகுறித்து நாம் கவலைப்பட தேவையில்லை. ஆண்டுக்கு 3.8 செ.மீ., என்பது பூமி - நிலவு இடையிலான 3.84 லட்சம் கி.மீ., துாரத்தில் வெறும் 0.00000001 சதவீதம் தான். எனவே இது நடக்க லட்சக்கணக்கான ஆண்டுகளாகும் என தெரிவித்துள்ளனர்.


செப்டம்பர் 24


2014 – மங்கள்யான் விண்கலம் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் வெற்றிகரமாக செவ்வாய் சுற்றுவட்டத்தில் செலுத்தப்பட்டது.


நீதிக்கதை


 புள்ளிமான்கள்


ஒரு காட்டில் இரண்டு புள்ளி மான்கள் ஒரே மாதிரியாக இருந்தன. இணைப்பிரியாத நண்பர்களாக இருந்தன. எங்கு சென்றாலும் சேர்ந்தேதான் செல்லும். ஒரு நாள் மழை பெய்தது. மான்களால் விளையாட முடியவில்லை. மழை நின்ற பிறகு வெளியே சென்று இன்னும் மழை வருமா என்று இரண்டு மான்களும் மேலே பார்த்தன. அப்போது மேகத்திற்குள்ளிருந்து வெளியே வந்தது சூரியன். மான்கள் இரண்டும் சூரியனிடம், இன்னும் மழை வருமா? என்று கேட்டன. அதற்கு சூரியன், நான் வந்து விட்டேனே, இனி எப்படி மழை வரும்? என்று சொல்லி மான்களைப் பார்த்து சிரித்தது.


எங்களைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய் என்றது ஒரு மான். நீங்கள் இருவரும் ஒரே மாதிரியாக இருக்கிறீர்கள்! அது தான் எனக்குச் சிரிப்பு வந்து விட்டது! தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் யார்? நாங்கள் தான் அழகான இரண்டு புள்ளிமான்கள். நாங்கள் இருவரும் நண்பர்கள் என்றன புள்ளிமான்கள்.


சரி, உங்களில் யார் திறமையானவர்கள்? என்று கேட்டது சூரியன். நாங்கள் இருவருமே திறமையானவர்கள் தான்! என்றது புள்ளிமான்கள். சூரியன் சற்று யோசித்துவிட்டு சரி, அப்படியென்றால் நான் ஒரு போட்டி வைக்கிறேன். அதோ அங்கு ஒரு மரம் இருக்கிறது பாருங்கள். உங்களில் அந்த மரத்தை யார் முதலில் தொடுகிறார்களோ அவர்கள் தான் திறமையானவர்கள். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நான் ஒரு பரிசு தருவேன் என்றது.


சூரியன் பரிசு தருவதாகச் சொன்னதும் இரண்டு மான்களும் ஓடத்தொடங்கின. ஆனால் மரத்தைத் தொடாமல் நின்று கொண்டிருந்தன. சூரியன் ஏன் மரத்தைத் தொடாமல் அப்படியே நின்று கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டது. ஒரு புள்ளி மான் சொன்னது, நான் என் நண்பனுக்கு விட்டுக்கொடுத்து விட்டேன் என்றது. இன்னொரு புள்ளிமானும், நானும் என் நண்பனுக்கு விட்டுக்கொடுத்து விட்டேன் என்று சொன்னது.


இதைக் கேட்டு பெரிதும் மகிழ்ந்த சூரியன் சொன்னது, அழகான இரண்டு புள்ளி மான்களே! உங்கள் ஒற்றுமையைப் பார்த்து நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் இருவரும் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். உங்களுக்கு நான் ஒரு வானவில்லை பரிசாகத் தருகிறேன். நீங்கள் எப்போது விரும்புகிறீர்களோ அப்போதெல்லாம் வானவில்லே வருக என்று சொன்னால் போதும். வானத்தில் அழகான வானவில் தோன்றும். நீங்கள் அதைப்பார்த்து ரசிக்கலாம் என்று சொல்லிவிட்டு சூரியன் விடை பெற்றது. மான்கள் இரண்டும் மகிழ்ந்தன. அவற்றிற்கு விருப்பமான நேரத்தில் வானவில்லை வரச்செய்து பார்த்துப் பார்த்து ரசிக்கும்.


நீதி :

நண்பர்களே விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை வளமாக இருக்கும்.


இன்றைய செய்திகள் - 24.09.2025


⭐பள்ளி மாணவர்களுக்கு 2-ம் பருவம் பாடப்புத்தகம் தயார்: பள்ளிக்கல்வி இயக்குனர்.


⭐தமிழகத்துக்கு உரிய நிதியை விடுவித்து மக்கள் நியாயமாக பயன் அடைய விடுங்கள்-மு.க.ஸ்டாலின்.


⭐ அமெரிக்காவின் வேலை வாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை. எச்-1பி விசாவை அதிகளவில் பெறும் இந்தியர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.


🏀 விளையாட்டுச் செய்திகள்


🏀 இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் இடையிலான கடைசி போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது.


Today's Headlines


⭐Director of our  School Education said the second semester textbook will ready for school students 


⭐M.K. Stalin requested  the central government to release the funds which is due for Tamil Nadu and let the people benefit fairly


⭐ Americans get priority in US job opportunities. This comes as a shock to Indians who are the largest recipients of H-1B visas. 


 SPORTS NEWS

🏀 In the last match between India and Australia women's teams, the Australian team won the 3-match ODI cricket series 2-1 and won the trophy.


Covai women ICT_போதிமரம்


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

32.60 லட்சம் பள்ளி மாணவர்களுக்கான 2-ம் பருவ பாட நூல்கள் தயார்!

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

1377387

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 7-ம் வகுப்பு வரை பயிலும் 32.60 லட்சம் மாணவர்களுக்கு 2-ம் பருவத்துக்கான பாட நூல்கள் முதல் நாளிலேயே வழங்கும் வகையில் தயார் நிலையில் இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.


தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 44,000-க்கும் அதிகமான அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 1 முதல் 12ம் வகுப்பு வரை சுமார் 70 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்களுக்கான பாட நூல்கள் அச்சிடும் பணியை தமிழ்நாடு பாட நூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மேற்கொண்டு வருகிறது. அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு குறைந்த விலையிலும் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.


இதற்கிடையே, பள்ளிக் கல்வியில் 1 முதல் 7ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முப்பருவக் கல்வி முறையும், 8 முதல் 12ம் ஆண்டு வரையான மாணவர்களுக்கு முழு ஆண்டு கல்வியும் நடைமுறையில் உள்ளது. அதன்படி 1 முதல் 7ம் வகுப்பு வரை 3 பருவங்களுக்கும் தனித்தனியாக பாடப் புத்தகங்கள் வழங்கி தேர்வுகள் நடத்தப் படுகின்றன.


தற்போது பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த தேர்வுகள் செப்டம்பர் 26ம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளன. இதையடுத்து அனைத்து வகுப்புகளுக்கும் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 5ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


இந்த விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் அக்டோபர் 6ம் தேதி திறக்கப்படும். அப்போது 1 முதல் 7ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு 2ம் பருவத்துக்கான வகுப்புகள் தொடங்கும். தற்போது மாணவர்களுக்கான 2ம் பருவப் பாட நூல்கள் அனைத்து மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.


சென்னை சிந்தாதிரிப்பேட்டை கல்யாணம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள கிடங்கில் மாணவர்களுக்கு விநியோகிப்பதற்கான வைக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “நடப்பு கல்வியாண்டில் 2ம் பருவம் அக்டோபர் 6ல் தொடங்கவுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே 7ம் வகுப்பு வரை பயிலும் 32 லட்சத்து 60,960 மாணவர்களுக்கு வழங்குவதற்காக விலையில்லா பாடப் புத்தகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பாட நூல்களை விநியோகிப்பதில் எந்த தொய்வும் இருக்கக் கூடாது என்பதற்காக தொடர் ஆய்வுகள் மூலம் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன” என்று கண்ணப்பன் கூறியுள்ளார்.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

மன்றச் செயல்பாடுகள் - மாவட்ட அளவிலான போட்டிகள் - விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்- சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ...

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250923_064129

2025-26- மன்றச் செயல்பாடுகள் இலக்கிய மன்றம் , வினாடிவினா மன்றம் மற்றும் சிறார் திரைப்படம் மன்றங்களுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் - விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்- சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ...

DSE Proceedings - Download here


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

EL surrender பண்ணுனா Tax வருமா? வராதா?

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)


Earned%20Leave%20Surrender%20Processing

EL surrender பண்ணுனா Tax வருமா? வராதா?

_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_


நாம் 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டுதோறும் 15 நாள்கள் அல்லது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை 30 நாள்கள் என்று பணமாக்கிக் கொண்டிருந்த EL Surrender / Surrender Leave Salary என்பது 100% வருமானவரி விதிப்பிற்கு உட்பட்ட வருமானம் தான். நம்மில் பலர் இதற்கும் சேர்த்தே வரி செலுத்தியும் வந்திருப்போம். 4 வருட இடைவெளி, இன்று EL Surrender-ஆல் TAXஐ தவிர்க்க முடியுமா என்பது குறித்த சிந்திக்க வைத்துள்ளது.


பணி ஓய்வின் போது மொத்தமாக (அதிகபட்சம் 240 நாள்கள்)  ELஐ ஒப்படைவு செய்து பணமாக்கிக் கொண்டால் மட்டுமே அதற்கு வருமான வரி இல்லை. எனவே வரியைத் தவிர்க்க வேண்டுமானால் பணி ஓய்வு வரைக் காத்திருந்து பெற்றுக் கொள்ளலாம். ஆனால், அதே நேரம் நமது பணி ஓய்வுக் காலம் வரை நமக்கு ELஐ மொத்தமாக ஒப்படைவு செய்யும் உரிமை இருக்குமா? என்றால், 100% அதற்கு உத்தரவாதமில்லை. இருக்கலாம்! இல்லாமலும் போகலாம்! ஏன்னா நம்ம ஒத்துமயோட எஸ்டீடி அப்புடீ. ஆகையால் ELஐ சேர்த்து வைத்து ஒப்படைவு செய்யலாம் என்பது Subject to our own risk.


சரி, ஆண்டுதோறும் பெற்றுக்கொண்டால் வரி வருமா? வராதா? என்றால், அது 100% வரி விதிப்பிற்கு உட்பட்ட தொகையே. உங்களது மொத்த ஆண்டு வருமானம் & ஆண்டுதோறும் அரசு வெளியிடும் வருமானவரி கணக்கீட்டின் அடிப்படையில்  வரியைத் தவிர்க்க இயலுமா? அல்லது எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? என்பதை முடிவு செய்ய முதலில் நீங்கள் Total Gross Income, Net Taxable Income, Tax Slab, Rebate, Marginal Relief உள்ளிட்டவை பற்றி நாம் தெளிந்திருக்க வேண்டும்.



`Total Gross Income :`


New regimeஐப் பொறுத்தவரை (மாற்றுத்திறனாளி போக்குவரத்துப் படி தவிர) எந்தவிதக் கழிவும் இல்லை என்பதால், ஊதியத்தின் (Pay + DA + All other Allowances) Gross Income முழுமையாக வரிக்கணக்கீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படும்.


இதனுடன் EL Surrender + Any Pay Arrear + ITRல் தானாகவே வருமானவரித்துறையால் சேர்த்துக்கொள்ளப்படும் நமது Savings' / Investments' Interest உள்ளிட்ட அனைத்தும் சேர்ந்த தொகை தான் வருமானவரிக் கணக்கீட்டிற்கான Total Gross Income. (வரி கணக்கீடும் போது ITRல் வரும் வட்டி தொடர்பான தோராய வருமானங்களையும் முன்கூட்டியே கவனத்தில் கொள்வது நல்லது)



`Net Taxable Income :`


இந்த Total Gross Incomeல் இருந்து Standard Deductionஆக Rs.75,000/- கழிக்கப்பட்டு வரும் தொகைதான் வருமான வரி விதிப்பிற்கான இறுதி Net Taxable Income. இந்தத் தொகை 10ன் முழுமையாக்கப்பட்டுத்தான் வரி விதிக்கப்படும். (உதாரணமாக 104 = 100 என்றும் 105 = 110 என்றும் கணக்கில் கொள்ளப்படும்)



`Tax Slab :`


Net Taxable Incomeற்கு 2025-26 நிதியாண்டில் பின்வருமாறு வரி விதிக்கப்படுகிறது.


Rs.4,00,000 வரை                    - வரியில்லை

Rs.4,00,001 to Rs.8,00,000     - 5%

Rs.8,00,001 to Rs.12,00,000   - 10%

Rs.12,00,001 to Rs.16,00,000 - 15%

Rs.16,00,001 to Rs.20,00,000 - 20%

Rs.20,00,001 to Rs.24,00,000 - 25%

Rs.24,00,000க்கு மேல்           - 30%



`Rebate :`


Net Taxable Income  Rs.12,00,000/-க்குள் இருப்பின் அதிகபட்சமாக Rs.60,000/- வரை U/S.87Aன் கீழ் Rebate உண்டு.


அதாவது Net Taxable Income Rs.12,00,000/- எனில்,

Rs.4,00,000 =   0% = 0

Rs.4,00,000 =   5% = 20,000

Rs.4,00,000 = 10% = 40,000

என்று மொத்தமாக Rs.60,000/- வரி வரும். இந்தத் தொகையை Rebate ஆகக் கழிப்பதன் மூலம் வரி சுழியமாக்கப்படும். இந்தத் தளர்வு Net Taxable Income Rs.12,00,000க்குள் இருந்தால் மட்டுமே பொருந்தும்.



`Marginal Relief :`


Net Taxable Income Rs.12,00,010/- என்று வெறும் 10 ரூபாய் கூடினால்கூட Rebate கிடையாது என்பதால் Rs.60,002/-ஐ வரியாகச் செலுத்தியாக வேண்டும். Tax marginல இருந்து வெறும் 10 ரூவா கூடுனது குத்தமா? என்ற எண்ணம் தோன்றுமல்லவா? இந்தக் குறையைப் போக்கத்தான் கடந்த 3 ஆண்டுகளாக Marginal Relief என்ற முறை நடைமுறையில் உள்ளது.


இதன்படி, Tax Marginஆன ரூ.12 இலட்சத்தைவிடக் கூடுதலாக எவ்வளவு வருமானம் ஈட்டியுள்ளோமோ அதற்கு மட்டும் Tax கட்டினால் போதும். உதாரணமாக Net Taxable Income Rs.12,00,010/- என்றால், 12 இலட்சத்தைவிடக் கூடுதலாக உள்ள அந்த 10 ரூபாயை மட்டும் அப்படியே வரியாகக் (+ 4% Cess) கட்டிக் கொள்ளலாம்.


இந்த Marginal Relief முறை என்பது Net Taxable Income Rs.12,70,580/- வரை பயன்படுத்தப்படும்.


அதாவது, Net Taxable Income Rs.12,70,580/- எனில், செலுத்த வேண்டிய வருமானவரி 12 இலட்சத்தைவிடக் கூடுதலாக உள்ள அந்த 70,580 ரூபாய் மட்டுமே (+ 4% Cess). 


இதற்கு மேலான தொகை, அதாவது Net Taxable Income Rs.12,70,590/- எனில் இந்தக் கூடுதல் தொகையும், வழக்கமான கணக்கீட்டிற்கான வரியும் கிட்டத்தட்ட சமமாக வந்துவிடும்.  

Rs.4,00,000 =   0% = 0

Rs.4,00,000 =   5% = 20,000

Rs.4,00,000 = 10% = 40,000

Rs.70,590.   = 15% = 10,589

மொத்த வரி          = 70,589


இதற்கும் மேலான தொகைக்கு அப்படியே வரி கூடத் தொடங்கிவிடும் என்பதால், இதற்கு மேலான தொகைக்கு Marginal Reliefன் தேவை இருக்காது.


அதுசரி. . . 12 இலட்சத்துக்கு மேலே வரும் தொகையைக் கட்டினால் போதுமென்றால் எப்படி? அதற்கென ஒரு கணக்கீடு இருக்க வேண்டுமல்லவா? இருக்கிறது.


*Marginal Relief = Actual Tax - Excess Income*


என்று கணக்கிடப்படும் Marginal Relief தொகையை மொத்த வருமானவரியில் இருந்து கழித்துவிட்டால், நிகர வருமானவரி (Net Tax) கிடைத்துவிடும்.


உதாரணமாக Net Taxable Income Rs.12,10,000/- எனில்,


இதற்கான Actual Tax = 61,500

ரூ.12Lஐ விடக் கூடுதல் வருமானம் = Rs.10,000

ஃ Marginal Relief = 61,500 - 10,000 = Rs.51,500


ஆக, Net Taxable Income Rs.12,10,000/-க்கான நிகர வருமான வரி என்பது,

= Total Tax - Marginal Relief

= 61,500 - 51,500

= Rs.10,000/-


ரைட்டு. . . இப்ப Total Gross Income, Net Taxable Income, Tax Slab, Rebate, Marginal Relief பத்தியெல்லாம் தெரியும்; இந்த வருசம் EL போட்டா எனக்கு வரி வருமா? வராதா? என்றால்,


Standard deduction Rs.75,000/- கழித்தது போக உங்களது வருமானம் Rs.12,00,004/- எனில், இதனை 10ன் முழுமையாக்கினால் Net Taxable Income Rs.12,00,000/-. இதற்கு Tax வராது.


Standard deduction Rs.75,000/- கழித்தது போக உங்களது வருமானம் Rs.12,00,005/- எனில், இதனை 10ன் முழுமையாக்கினால் Net Taxable Income Rs.12,00,010/- இதற்கு ரூ.10ஐ வரியாகக் கட்ட நேரிடும். (+ 4% Cess)


அதாவது Net Taxable Income Rs.12,00,010/- முதல் Rs.12,75,580/- வரை 12 இலட்சத்தைவிடக் கூடுதலான வருமானத்தை மட்டும் வரியாகச் செலுத்தியாக வேண்டும்.


மேலும் HRA, CCA, Hill & Winter Allowances என்று மொத்த ஊதியம் இடத்திற்கு இடம் மாறுபடும் என்பதால், பொத்தாம் பொதுவான எந்தத் தகவலையும் உங்களுக்குமானதே என்று எண்ணாது, உங்களது முழுமையான ஊதியத்தைப் பொறுத்து நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இப்போது வரி வரும் என்பதால் EL Surrender செய்யாது அடுத்த ஆண்டு 15 / 30 என்று செய்வேன் என்றால், உறுதியாக இப்போது இருப்பதைவிட அடுத்த ஆண்டில் Increment உள்ளிட்டவற்றால் தங்களது வருமானம் உயர்ந்து கூடுதலாகத்தான் வரி செலுத்த நேரிடும். எனவே, நிதானமாகக் கணக்கிட்டு முடிவெடுங்கள்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

"கல்வியில் சிறந்த தமிழ்நாடு" - தமிழக அரசின் ஊடகச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் செய்தியாளர்கள் சந்திப்பு

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

தமிழக அரசின் ஊடகச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் செய்தியாளர்கள் சந்திப்பு:


கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற தலைப்பில், தமிழ்நாடு அரசு கல்வியில் செய்த சாதனைகள், சிறப்புகள் குறித்த மாபெரும் கொண்டாட்டம் நடைபெற உள்ளது.


நான் முதல்வன், தமிழ் புதல்வன், புதுமைப்பெண் உள்ளிட்ட 7  திட்டங்களை உள்ளடக்கி இந்த சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.

இதில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.


2.57 லட்சம் குழந்தைகள் இந்த ஆண்டு தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெற உள்ளனர். 


14.60 லட்சம் பேர் நான் முதல்வன் திட்டத்தில் கலந்து கொண்டு அவர்களுக்கு 41 லட்சம் திறன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. 


500க்கும் மேற்பட்ட திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. 


இந்த திட்டங்களால் ஆண்டுக்கு 1 லட்சம் பேருக்கு கூடுதலாக கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது-அமுதா ஐஏஎஸ்.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

தமிழ் இலக்கிய மன்றங்கள் வாயிலாக சமூக நீதி கருத்துக்களை மாணவர்களிடையே வலுப்படுத்த உத்தரவு - DSE Proceedings

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)


தமிழ் இலக்கிய மன்றங்கள் வாயிலாக சமூக நீதி கருத்துக்களை மாணவர்களிடையே வலுப்படுத்த பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள், நாள் : 17-09-2025



Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )