நீட் , கியூட் , ஜேஇஇ நுழைவுத்தேர்வுகளுக்கு பயிற்சி வழங்க 236 வெற்றிப் பள்ளிகள் திட்டம் - ரூ .111 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

dinamani%2F2025-08-01%2Fvl0fdm4a%2FSchool-education-DPI-building-edi


அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு ஜேஇஇ, நீட் உள்ளிட்ட போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக 236 வட்டார உயா்கல்வி வழிகாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 2 பயிலும் மாணவா்கள் உயா்கல்விக்குச் செல்ல ஏதுவாக பள்ளிக் கல்வி இயக்ககத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடா்ச்சியாக உயா்கல்விக்கான போட்டித் தோ்வுகள் எழுத விருப்பமுள்ள மாணவா்களுக்கென வட்டார அளவில் உயா்கல்வி வழிகாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விருப்பத்துக்கு ஏற்ப பயிற்சிகள்... இத்தோ்வுகளுக்கு தயாா்படுத்துவதற்காக இந்த ஆண்டு 38 மாவட்டங்களிலிருந்து உயா் தொழில்நுட்ப ஆய்வக வசதியுள்ள 236 வட்டாரங்களில் உயா்கல்வி வழிகாட்டி மையங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இங்கு மாணவா்களின் உயா்கல்வி விருப்பத்துக்கு ஏற்ப உரிய பயிற்சிகள் வழங்கப்படும்.

இதேபோல, கிளை பள்ளி (ஸ்போக் ஸ்கூல்) தலைமை ஆசிரியா்களின் மூலம் அப்பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பில் பயிலும் மாணவா்களும் விருப்பத்தின் அடிப்படையில் வட்டார உயா்கல்வி வழிகாட்டி மையங்களில் சனிக்கிழமைகளில் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். அவா்களுக்கு உயா்கல்வி சோ்க்கைக்கான ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.

ரூ.1,000 மதிப்பூதியம்... இந்த மையங்களில் நடைபெறும் பயிற்சியில் இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், கணக்குப்பதிவியல், வணிகக் கணிதம் ஆகிய முதுநிலைப் பாட ஆசிரியா்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்படுவதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும்.

பயிற்சிகள் தடையின்றி நடைபெறும் வகையில், அந்தந்த வட்டாரத்திலுள்ள மையப் பள்ளித் தலைமை ஆசிரியா் அல்லது உதவித் தலைமை ஆசிரியா் ஒவ்வொரு வாரமும் பணிபுரிவதையும் உறுதி செய்ய வேண்டும். சனிக்கிழமைகளில் இப்பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்கள், உதவித் தலைமை ஆசிரியா்களுக்கு மதிப்பூதியம் ரூ.1,000 மாதிரிப் பள்ளிகள் வழியாக வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அனைத்து மாவட்டங்களிலும் உயா்கல்வி வழிகாட்டும் மையங்கள், பள்ளி அளவில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.




Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TNTET Paper 1 - Tamil Important Notes - Question Bank With Answer

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250815_234622

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் - 1 - தமிழ் முக்கிய குறிப்புகளுடன் வினா விடைகள் அடங்கிய தொகுப்பு பகுதி -3 1 - ம் வகுப்பு முதல் 8 - ம் வகுப்பு வரை

TNTET Paper 1 - Tamil Important Notes - Question Bank With Answer -TNTET - Study Materials - New Collections


What's New

TNTET Paper 1 - Tamil Important Notes - Question Bank With Answer - Download here

TET Paper 1 & Paper 2 - Education Psychology Current Affairs With GK - Download here

TET Paper 1 - Maths Important Question And Answer - Kalaimagal TET Coaching Centre - Download here

TET Paper 2 - Model Test ( 150 Marks ) Questions with Answer Key - TET Coaching Centre - Download here

TET Paper 1 - Competitive Exam Very Important Study Materials ( All Subject ) - TRB VIP Coaching Centre - Download here

TET Paper 2 - History & English Important Questions with Answer Key - TET Coaching Centre - Download here



Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  TNTET Paper 1 - Tamil Important Notes - Question Bank With Answer

PG TRB - Botany ( unit - 1 ) Fungi Study Materials

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

PG TRB - Botany ( unit - 1 ) Fungi Study Materials - T/M 

👇👇👇👇


PG TRB - Botany ( unit - 1 ) Fungi Study Materials - T/M - Srimaan Coaching Centre - Download here

PG TRB - English All Units Question Bank With Answer & Educational Psychology Current Affairs - Download here

PG TRB - History - Unit 1 ( History of Indian upto 10th Century A.D ) - New Syllabus - Srimaan Coaching Centre - Download here

 PG TRB physics Previous Year question Paper ( 2001 - 2022 ) With Answer Key ( Unit Wise ) - Mr Gobinath - Download here

PG TRB - English Important Question Bank ( Surface Level Questions ) - Temple Of English PGTRB Academy - Download here

PG TRB - Geography ( unit - 1 ) Physical Geography Study Materials - Srimaan Coaching Centre - Download here


PG TRB EXAM - Syllabus

PG TRB EXAM - Syllabus - All subject - click here

- Srimaan Coaching Centre 




Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

என்ஜினீயரிங் படிப்புக்கான துணை கலந்தாய்வு தேதி அறிவிப்பு

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
என்ஜினீயரிங் படிப்புக்கான துணை கலந்தாய்வு வரும் 21-ஆம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 1,86,475 இடங்களில், இரண்டு சுற்று கலந்தாய்வுகள் முடிவில் 92,423 இடங்கள் நிரம்பின. மூன்றாம் சுற்று கலந்தாய்வில், 1,29,516 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, 64,629 பேருக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.

 அவர்களில் 51,429 பேர் இடங்களை உறுதி செய்துள்ளனர். மூன்றாம் சுற்று கலந்தாய்வு வரும் 20-ஆம் தேதி முடிவடைய உள்ளது. தற்போதுவரை 1,43,852 இடங்கள் நிரம்பியுள்ள நிலையில், மீதமுள்ள இடங்களுக்கான துணை கலந்தாய்வு 21-ஆம் தேதி தொடங்கும். சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ள நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கலந்தாய்வு தொடங்குவதில் தாமதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.




Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

ஓய்வூதிய ஆய்வு குழு அறிக்கை என்னாச்சு அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தினர் கேள்வி

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Tamil_News_lrg_4008527

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழுவின் செயல்பாடுகளை, அரசு விரைந்து தெளிவு படுத்த வேண்டும் என, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


2003ம் ஆண்டு ஏப்., 1ம் தேதிக்கு முன்பு இருந்த, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த கோரி, ஜக்டோ - ஜியோ, டிட்டோ ஜாக், தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட 80 சங்கங்கள், நீண்ட நாட்களாக போராடி வருகின்றன.


இந்நிலையில், ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட இந்த குழு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களிடம் நான்கு நாட்கள் கருத்துகளைக் கேட்க உள்ளதாக அறிவித்துள்ளது.


இதுதொடர்பாக வெளியிடப்பட்ட கடித எண்ணில், ஆண்டைக் குறிக்கும் வகையில் 2025-2031 என்று குறிப்பிடப்பட்டுள்ளது


இதனால், குழுவின் அறிக்கை 2031ல்தான் சமர்ப்பிக்கப்படுமா என்று சந்தேகம் எழுவதாக, ஆசிரியர் சங்கங்கள் தெரிவிக்கின்றன.


சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'இந்த குழு தனது அறிக்கையை, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் சமர்ப்பிக்காமல், 2031 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் சமர்ப்பிக்கும் போல் தெரிகிறது.


ஓய்வூதியக் குழு அமைக்கப்பட்டதும், சங்கங்களுடன் கூட்டம் நடத்துவதும், கண்துடைப்பாக இருக்கலாம். குழுவின் செயல்பாடுகள் குறித்து, அரசு விரைந்து தெளிவுபடுத்த வேண்டும்' என வலியுறுத்தியுள்ளனர்.




Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

ஏழை மாணவர்களின் பெரும் கனவுகளை வசமாக்கும் ‘வெற்றிப் பள்ளிகள் திட்டம்’ - பள்ளிக்கல்வித் துறை செயலர் உறுதி

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
அரசு மாதிரிப் பள்​ளி​களைத் தொடர்ந்​து, அடுத்து வரும் ‘வெற்​றிப் பள்​ளி​கள் திட்​டம்’ ஏழை மாணவர்​களின் உயர்​கல்விக்​கான பெரும் கனவு​களை வசமாக்​கும் என்று பள்​ளிக்​கல்​வித் துறை செயலர் பி.சந்​திரமோகன் தெரி​வித்தார். தமிழகத்​தில் அரசுப் பள்ளி மாணவர்​களின் கற்​பித்​தலை மேம்​படுத்​து​வதற்​காக மாதிரிப் பள்ளி திட்​டம் 2021-22-ம் கல்​வி​யாண்​டில் தொடங்கப்பட்​டது.


மாநிலம் முழு​வதும் மாவட்​டத்​துக்கு தலா ஒன்று வீதம் 38 மாதிரிப் பள்​ளி​கள் தற்​போது செயல்​பட்டு வரு​கின்​றன. இந்​தப் பள்ளிகளில் அதிநவீன கணினி ஆய்​வகம், ஸ்மார்ட் வகுப்​பறைகள், சிசிடிவி கேம​ரா, முழு​மை​யான உப கரணங்​களு​டன் கூடிய அறி​வியல் ஆய்​வகம், டிஜிட்​டல் கரும்​பல​கை, விளை​யாட்டு மைதானம், நுண்​கலைத்​திறன் பயிற்​சி, உண்டு உறை​விட வசதி​கள் என மாணவர்​களுக்​குத் தேவை​யான அனைத்து கட்​டமைப்​பு​களும் ஒரே வளாகத்​தில் ஏற்​படுத்​தப்​பட்​டிருக்​கும்.


இதற்​கிடையே, இந்​தப் பள்​ளி​களில் படித்த மாணவர்​கள் ஐஐடி போன்ற தேசிய அளவி​லான முன்​னணி உயர்​கல்வி நிறு​வனங்களில் இடம் பெறு​வதற்​கான வாய்ப்​பு​கள் உறு​திப்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

அதன்​படி கடந்த 4 ஆண்​டு​களில் மட்​டும் 1,878 மாணவர்​கள் முதன்மை உயர்​கல்வி நிறு​வனங்​களில் இடம் பெற்​றுள்​ளனர். இதற்கு கிடைத்த வரவேற்​பைத் தொடர்ந்​து, இந்​தத் திட்​டத்தை ‘வெற்​றிப் பள்​ளி​கள்’ எனும் பெயரில் வட்​டார அளவில் கொண்டு செல்ல வேண்​டுமென மாநிலக் கல்விக் கொள்​கை​யில் பரிந்​துரைக்​கப்​பட்​டது.


அதன்​படி தமிழகம் முழு​வதும் உள்ள 414 வட்​டாரங்​களில் 500 வெற்​றிப் பள்​ளி​கள் உரு​வாக்​கப்​படும் என்று பள்​ளிக்​கல்​வித் துறை அறி​வித்​தது. இதைத் தொடர்ந்து ஒவ்​வொரு வட்​டாரத்​தி​லும் ஒரு சிறந்த அரசு மேல்​நிலைப் பள்ளி தேர்வு செய்​யப்​பட்​டு, அது வெற்றிப் பள்​ளி​யாகதரம் உயர்த்​தப்பட உள்​ளன. மாதிரி பள்​ளி​களில் உள்​ளதைப் போன்ற நவீன வசதி​கள் அங்கு ஏற்படுத்தப்படும். உண்​டு, உறை​விட வசதி​கள் மட்​டும் இடம்​பெறாது. அந்த பள்​ளி​யில் வாரந்​தோறும் உயர்​கல்வி வழி​காட்டி வகுப்​பு​கள் நடை​பெறும்.


.


நீட்,ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்​வு​களுக்​கான பயிற்​சி வழங்​கப்படும். இந்த பயிற்சி வகுப்​பு​களில் அந்த வட்​டாரத்​தில் உள்ள அனைத்து பிளஸ் 2 மாணவர்​களும் தங்​கள் சுய​விருப்​பத்​தின்​படி இணைந்து பயன்​பெறலாம். இந்த வெற்​றிப் பள்​ளி​கள் மூல​மாக சுமார் 50 ஆயிரம் மாணவர்​கள் பயன்​பெறு​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.


இதன்​மூலம் முதன்மை உயர்​கல்வி நிறு​வனங்​களில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்​களின் எண்​ணிக்கை மேலும் அதி​கரிக்​கும். இதற்​காக பள்​ளிக்​கல்​வித் துறை ரூ.111.37 கோடி நிதி ஒதுக்​கி​யுள்​ளது. அதில் முதல்​கட்​ட​மாக, இந்​தாண்டு 236 வட்​டாரங்​களில் வெற்​றிப் பள்​ளி​கள் தொடங்​கும் வித​மாக ரூ.54.73 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

அடுத்த கல்​வி​யாண்​டில் எஞ்​சிய 178 வட்​டாரங்​களைச் சேர்த்து மொத்​தம் 500 வெற்​றிப் பள்​ளி​கள் தொடங்​கப்​படும் என்று பள்​ளிக் கல்​வித் துறை தெரிவித்துள்​ளது. அதே​நேரம் மாதிரிப் பள்​ளி​கள் திட்​டம் சமமற்ற கல்வி முறையை ஊக்​கு​விப்​ப​தாக என கல்வியாளர்​கள் சிலர் குற்​றம்​சாட்டுகின்​றனர்.


இதுகுறித்து பள்​ளிக்​கல்​வித் துறை செயலர் பி.சந்​திரமோக​னிடம் கேட்​ட​போது, “அரசுப் பள்​ளி​களில் பெரும்​பாலும் பொருளா​தார ரீதி​யாக பின்​தங்​கிய மாணவர்​களே அதி​கம் படிக்​கின்​றனர். அவர்​களின் ஏழ்​மை​யானது, கனவு​களுக்கு தடை​யாக இருக்​கக் கூடாது. சாமானியனுக்​கும் முன்​னணி உயர்​கல்வி நிறு​வனங்​களில் பயில்​வதற்​கான வாய்ப்​பு​களை எந்த தடை​யின்றி வழங்​கு​வதற்​காகவே இந்த மாதிரிப் பள்​ளி​கள் திட்​டம் முன்​னெடுக்​கப்​பட்​டன.


அதை பரவலாக்​கும் வித​மாக ஒவ்​வொரு வட்​டாரத்​தி​லும் வெற்றி பள்​ளி​கள் நிறு​வப்​பட்​டு, மாதிரி பள்​ளி​களுக்கு இணையானகட்டமைப்பு வசதி​கள் மற்​றும் கல்​வித்தரம் மேம்​படுத்​தப்பட உள்​ளது. திறமை மற்​றும் விருப்​பத்​தின் அடிப்​படை​யில் மாணவர்​கள் சேர்க்கை பெறு​வார்​கள்.


மேலும், அரு​கிலுள்ள பள்​ளி​களுக்கு வழி​காட்​டு​தலை​யும் வழங்​கி, ஒட்​டுமொத்த தரத்தை உயர்த்த வழி​வகுக்​கும். படிப்​படி​யாக அனைத்து பள்​ளி​களை​யும் வெற்​றிப் பள்​ளி​களாக மாற்​று​வதற்​கான இலக்கு நிர்ணயிக்கப்படும். எனவே, இது சமமற்ற கல்வி முறையல்​ல; ஏழை மாணவர்​களின்​ பெரும்​ கனவு​களை வசமாக்​கும்​ ​முயற்​சி” என்றார்​.




Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

மாநில கல்விக் கொள்கையின்படி பாடத்திட்டத்தை மேம்படுத்த வேண்டும்: அமைச்சர் அறிவுறுத்தல்

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

மாநில கல்விக் கொள்​கை​யின்​ படி முறை​யான கால அட்​ட​வணை அமைத்​து, பாடத்​திட்​டங்​களை மேம்​படுத்த வேண்டும் என்று அதி​காரி​களுக்கு அமைச்​சர் அன்​பில் மகேஸ் அறி​வுறுத்​தி​னார்.


பள்​ளிக்​கல்​வித் துறை​யின் அலு​வல் ஆய்​வுக் கூட்டம் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் உள்ள நாமக்​கல் கவிஞர் மாளி​கை​யில் நேற்று நடை​பெற்​றது. அமைச்​சர் அன்​பில் மகேஸ் தலைமை வகித்​தார். துறை செயலர் சந்​திரமோகன், இயக்​குநர் கண்​ணப்​பன், தொடக்​கக் கல்வி இயக்​குநர் நரேஷ் மற்​றும் துறை சார்ந்த இயக்​குநர்​கள் பலர் கலந்​து​ கொண்​டனர்.


சட்​டப்​பேர​வை​யில் பள்​ளிக்​கல்​வித் துறை தொடர்​பாக வெளி​யான அறி​விப்​பு​களின் நிலை, செயல்​படுத்த வேண்​டிய திட்​டங்​கள், துறை​யின் எதிர்​கால இலக்​கு​கள் உள்​ளிட்​டவை குறித்து இதில் விவா​திக்​கப்​பட்​டன. அதை தொடர்ந்​து, ‘தற்​போது வெளியிடப்பட்டுள்ள மாநில கல்விக் கொள்​கை​யில் இடம்​பெற்​றுள்ள அம்​சங்​களை அமல்​படுத்​து​வதற்​கான செயல் திட்​டங்​களை வகுக்க வேண்​டும்.


பாடத் திட்​டங்​களை மேம்​படுத்த கால அட்​ட​வணை தயாரித்து பணி​யாற்ற வேண்​டும்’ என்பன உட்பட பல அறி​வுறுத்​தல்​களை அமைச்​சர் அன்​பில் மகேஸ் வழங்​கி​னார். பள்​ளிக்​கல்​வித் துறை​யில் உள்ள காலிப் பணி​யிடங்​கள் மற்​றும் ஆசிரியர் பணிக்​கான போட்​டித் தேர்வு குறித்​தும் இக்​கூட்​டத்​தில் ஆலோ​சிக்​கப்​பட்​ட​தாக துறை அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.




Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

முதுநிலை ஆசிரியா் பணியிடங்கள் நிா்ணயம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

dinamani%2F2024-08-20%2Ffydj8n4k%2FSchool%20education%20DPI%20building%20edi

அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப முதுநிலை பணியிடங்கள் நிா்ணயம் செய்வது தொடா்பாக பள்ளிக்கல்வித் துறை பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.


இது தொடா்பாக பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:


தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் மாணவா் எண்ணிக்கை அடிப்படையில் பணியாளா் நிா்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழ் கல்வியாண்டில் (2025-2026) கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி நிலவரப்படி பள்ளிகளில் உள்ள மாணவா் எண்ணிக்கைக்கேற்ப முதுநிலை ஆசிரியா் பணி இடங்கள் நிா்ணயம் செய்ய வேண்டும். அதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.


அதன்படி, தமிழ் மற்றும் ஆங்கில பாட ஆசிரியா்களுக்கு வாரத்துக்கு 24 பாடவேளைகளும், இதர பாட ஆசிரியா்களுக்கு வாரத்துக்கு 28 பாடவேளைகளும் குறைந்தபட்சம் வருமாறு பணியாளா் நிா்யணம் செய்யப்படுகின்றனா். பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கு 1:40 ஆசிரியா் - மாணவா் விகிதத்தைப் பின்பற்ற வேண்டும். மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ள பகுதி மாநகராட்சி, நகராட்சியாக இருப்பின் 30 மாணவா்களும், ஊரகப் பகுதியாக இருந்தால் மாணவா் எண்ணிக்கை 15-ஆகவும் குறைந்தபட்சம் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், பணிநிா்ணயம் செய்யும்போது மொழிப்பாடத்தில் 24 பாடவேளைக்கும், முதன்மை பாடத்தில் 28 பாடவேளைகளுக்கும் கூடுதலாக இருப்பின் ஒரு ஆசிரியரை கூடுதலாக நிா்ணயம் செய்யலாம்.


இதுதவிர ஒரு பாடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பணிபுரிந்து அதில் ஒரு பணியிடம் உபரியாக இருப்பின் அதில் பணியாற்றுபவா்களில் இளையோரை உபரியாக காண்பிக்க வேண்டும். அதேநேரம் ஒருமுறை பணிநிரவல் செய்த ஆசிரியா்களை அடுத்த 3 ஆண்டுகளுக்கு மீண்டும் மாற்றம் செய்யக்கூடாது. எனினும், சென்ற பணிநிரவல் நடவடிக்கைக்கு உள்ளான ஆசிரியா் இந்த ஆண்டும் விருப்பம் தெரிவித்தால் அவரை தற்போதைய பணியாளா் நிா்ணயித்தின்போது உபரியாக காண்பிக்கலாம். இந்த வழிமுறைகளைப் பின்பற்றி முதுநிலை ஆசிரியா்களைப் பணிநிா்ணயம் செய்து விவரங்களை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Agneepath recruitment 2025 : ராணுவத்தில் பணியாற்ற விருப்பமா ? உடனடியா அப்ளை பண்ணுங்க..!

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

இந்திய ராணுவத்தின் அக்னிவீர் திட்டத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் ஆண்டுக்கு 2 முறை நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டும் இத்திட்டத்திற்கான விண்ணப்ப தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்தது இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

இந்திய ராணுவத்தில் அதிக அளவில் இளைஞர்களை சேர்க்கும் வகையிலும், வேலைவாய்ப்பை பெருக்கும் விதமாகவும் அக்னிவீர் என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த 2022-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ராணுவ அதிகாரிகள் அல்லாத படைவீரர்களை ஆயுதப்படையில் சேர்த்துக் கொள்வதற்காக இந்தியப் பாதுகாப்புத் துறை அறிமுகப்படுத்திய திட்டமே அக்னிவீர் திட்டமாகும்

இந்த அக்னிவீர் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் ஆண்டுக்கு 2 முறை நடைபெறும். இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் ராணவ வீரர்கள் 4 ஆண்டுகள் பணியாற்றுவார்கள். அதற்காக இவர்களுக்கு 6 மாத பயிற்சி வழங்கப்படுகிறது.

அந்த வகையில், 2025-ம் ஆண்டுக்கான இந்திய ராணுவ அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சேலம் மாவட்டத்தில் ஆட் சேர்க்கை முகம் நடைபெற உள்ளது. எனவே, விருப்பம் உள்ள ஆண்கள் பெண்கள் என இரு பாலரும் விண்ணப்பிக்கலாம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்திய ராணுவத்தின் அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் பதிவு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள இளைஞர்கள் www.joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு கட்டணம் ரூ.250 ஆகும். தகுதியுள்ள ஆண்கள், பெண்கள் என அனைவரும் விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஆட்சேர்ப்பு ஆன்லைன் மூலம் நடைபெறும் பொது நுழைவுத் தேர்வு (சி.இ.இ.) உடல் தகுதி மற்றும் மருத்துவத் தேர்வுகள் அடிப்படையில் நடைபெறும். விண்ணப்பிப்பதற்கு முன், www.joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விரிவான தகுதி மற்றும் பிற தொடர்புடைய தகவல்களை படித்துப்பார்த்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.




Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

அகல் விளக்கு - மாணவிகளுக்கான இணையதள பயன்பாடுகளை பாதுகாப்பாக பயன்படுத்துதல் - SPD, DSE & SCERT Proceedings

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)



 பள்ளிக் கல்வி 9 முதல் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவியருக்கான இணையதளப் பாதுகாப்பாக பயன்படுத்துதல்- தொடர்பாக.


அகல் விளக்கு - மாணவிகளுக்கான இணையதள பயன்பாடுகளை பாதுகாப்பாக பயன்படுத்துதல் தொடர்பாக SPD, DSE மற்றும் SCERT இயக்குநரின் கூட்டு செயல்முறைகள்


Click Here to Download - அகல் விளக்கு - மாணவிகளுக்கான இணையதள பயன்பாடுகளை பாதுகாப்பாக பயன்படுத்துதல் - SPD, DSE & SCERT Proceedings  - Pdf




Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )