எதிர்கால சவால்களுக்கு மாணவர்களை ஆயத்தப்படுத்தும் வழிகாட்டியே மாநிலக் கல்விக் கொள்கை: பள்ளிக் கல்வி செயலர் நேர்காணல்

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

1372989

மாநிலக் கல்விக் கொள்கையானது 21-ம் நூற்​றாண்​டின் சவால்​களை கையாள்​வதற்​கேற்ப திறனுள்ள மாணவர்​களை ஆயத்​தப்​படுத்​தும் வழி​காட்​டி​யாகும் என்று பள்​ளிக்​கல்​வித் துறை செயலர் பி.சந்​திரமோகன் தெரி​வித்​தார். இதுதொடர்​பாக அவர் ‘இந்து தமிழ் திசை' நாளிதழுக்கு அளித்த பிரத்​யேக நேர்​காணல்:


மாநில கல்விக் கொள்​கை​யின் தற்​போதைய தேவை மற்​றும் நோக்​கம் என்ன? - முதல்​முறை​யாக மாநிலத்​துக்​கென தனி கல்விக் கொள்​கையை கொண்டு வந்​துள்​ளோம். தற்​போதைய நவீன கால​கட்​டத்​தில் பல்​வேறு மாற்​றங்​களை காண​முடிகிறது. அறி​வியல் உட்பட அனைத்து துறை​களி​லும் புதிய அம்​சங்​கள் வந்து கொண்​டிருக்​கின்​றன.


அதே​போல், உலகள​விலும் தொழில்​நுட்​பம் சார்ந்த விஷ​யங்​கள் மாறிவரு​கின்​றன. தற்​போது செயற்கை நுண்​ணறிவு (ஏஐ), ரோபோட்​டிக்ஸ் போன்​றவை அனைத்து துறை​களி​லும் பெரும் தாக்​கத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளன. நாம் இவ்​வளவு காலம் செய்​து​வந்த விஷ​யங்​களை மிக விரை​வாக​வும், திறம்​பட​வும் செய்து சவாலாக திகழ்​கின்​றன. அதற்​கேற்ப பள்​ளி​களில் வழங்​கப்​படும் கல்​வி​யானது அடுத்த 20 ஆண்​டு​களுக்கு பின்​னரும் மாணவர்​களுக்கு பயனுள்​ள​தாக இருக்க வேண்​டும்.


வளரும் தொழில்​நுட்​பங்​கள், மாறிவரும் சமூக பொருளா​தார மாற்​றங்​கள், புதிய திறன் தேவை​கள், சமூக நீதியை நிலை நாட்டுதல் உள்​ளிட்ட அம்​சங்​களுக்கு ஏற்ப நமது மாணவர்​களை எப்​படி தயார் செய்ய வேண்​டும் என்​ப​தற்​கான தெளி​வான வழிகாட்டுதல் தேவை.


.


அதை எப்​படி செயல்​படுத்​தப் போகிறோம் என்​ப​தற்​காக​தான் ஒரு கல்விக்​கொள்​கையை கொண்டு வந்​துள்​ளாம். இது 3 ஆண்டுகளுக்கு ஒரு​முறை மறு​பரிசீலனை செய்​யப்​பட்டு புதுப்​பிக்​கப்​படும் வகை​யில் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது.


மாநிலக் கல்விக் கொள்​கை​யின் சிறப்பு அம்​சங்​கள் என்ன? - முதலில் மாணவர்​களின் கற்​றல் திறனை மேம்​படுத்த வேண்​டும். இதற்கு மாணவர்​களிடம் நடத்​தப்​பட்ட ஸ்லாஸ் தேர்வு முடிவு​கள் உதவி​கர​மாக இருக்​கின்​றன. அதன் அடிப்​படை​யில் மாணவர்​கள் கற்​றல் திறனை வலுப்​படுத்​துதல், பொறி​யியல், மருத்​து​வம் என அவர்​கள் விரும்​பும் துறை​களுக்கு செல்ல வழி​காட்​டு​தல் வழங்​குதல் மற்​றும் போட்டி நிறைந்த உலகத்தை எதிர்​கொள்ள தயார்​படுத்​துதல் ஆகியவை பிர​தான​மாக கையாளப்​பட்​டுள்​ளன.


இதுத​விர உடற்​கல்​வியை கட்​டாய​மாக்​கியதுடன், அனைத்து வகுப்​பு​களுக்கு பிரத்​யேக பாடத்​திட்​டம் கொண்டு வரப்​பட்​டுள்​ளது. மாணவர்​கள் உடல்​நிலை, மனநிலையை சீராக வைத்து கொள்​வதற்​கான அம்​சங்​கள் இதில் கூறப்​பட்​டுள்​ளன. தொழில்​நுட்​பம் எந்​தளவுக்கு முன்​னேறி​னாலும் மொழியறிவு மிக​வும் அவசி​ய​மாகும்.


நமது இரு​மொழி கொள்​கை​யின்​படி தமிழ், ஆங்​கிலம் ஆகிய மொழிகளின் கற்​பித்​தல் முறை​களை மாற்​றங்​கள் செய்​துள்​ளோம். மேலும், மாணவர்​களின் படைப்​பாற்​றலை மேம்​படுத்​து​வதற்​காக கலைத் திறன்​களை பள்​ளி​களில் கொண்டு வந்​துள்​ளோம். மாணவர்​களுக்கு கல்​வியை மட்​டும் வழங்​காமல் வாழ்​வியல் திறன்​களை​யும் கற்​றுதர இருக்​கிறோம்.


நல்ல, தீய பழக்​கங்​கள், குட் டச், பேட் டச், வெற்​றி-தோல்​வியை சமமாக அணுகும் முறை, பிறருக்கு உதவுதல், இளம் பரு​வத்​தில் உடலில் ஏற்​படும் மாற்​றங்​கள், சிக்​கல்​களை கையாளும் விதம், இணைய பாது​காப்​பு என மாணவர்​களின் ஒவ்​வொரு காலக்கட்டத்​துக்கு பாது​காப்​பாக வாழ்​வதற்​கான திறன்​கள் பயிற்​று​விக்​கப்​படும். இந்த திட்​டத்​ததுக்​கான பாடத்​திட்​டம் தயாராகிவிட்டது. இந்த கல்​வி​யாண்​டிலேயே அமலுக்கு வரும். அதே​போல், மாணவர்​களை தொழில்​நுட்​பங்​களை கற்று தரு​வதற்​காக டிஎன் ஸ்பார்க் திட்​டம் அமல்​படுத்​தப்​பட்​டுள்​ளது.


கல்விக் கொள்​கை​யில் கூறியபடி பாடத்​திட்​டம் எப்​போது மாற்​றப்​படும்? - தற்​போதைய பாடத்​திட்​டம் அமலுக்கு வந்து 9 ஆண்​டு​களாகி​விட்​டன. மாநில கல்விக் கொள்கை அடிப்​படை​யில் பாடத்​திட்​டம் மாற்​றப்​படும். அதற்​கான பிரத்​யேக குழுக்​கள் அமைக்​கப்​பட்டு விரை​வில் பணி​கள் தொடங்​கப்பட உள்​ளன.


10, 12-ம் வகுப்​பு​களை தவிர மற்ற வகுப்​பு​களுக்கு மதிப்​பீட்டு முறை​களில் எத்​தகைய சீர்த்​திருத்​தங்​களை எதிர்​பார்க்​கலாம்? - ஓராண்டு முழு​வதும் படிக்​கும் மாணவர்​களை ஆண்டு இறு​தித் தேர்​வின் அடிப்​படை​யில் மதிப்​பீடு செய்​வது முழு​மை​யாக இருக்காது. எனவே, ஒவ்​வொரு பரு​வத்​தி​லும் மாணவர்​கள் கற்​றல் நிலை, திட்​ட​மிட்ட கற்​றலை பெறா​விட்​டால் அதை எவ்​வாறு மேம்​படுத்​து​வது என்ற அடிப்​படை​யில் மதிப்​பீட்டு முறை​கள் மாற்றி அமைக்​கப்படும்.


தற்​போது 1 முதல் 8-ம் வகுப்​பு​களில் தொடர்ச்சி மற்​றும் முழு​மை​யான மதிப்​பீட்டு முறை (CCE) நடை​முறை​யில் உள்​ளது. 9, 11-ம் வகுப்​பு​களி​லும் தொடர்ச்​சி​யான மதிப்​பீட்டை கொண்டு வந்து தேர்வு முடிவு​கள் சார்ந்த மன அழுத்​தத்தை குறைத்து ஆழமான கற்​றல் ஊக்​குவிக்​கப்​படும்.


ஏஐ, ரோபோட்​டிக்ஸ் போன்ற 21-ம் நூற்​றாண்டு திறன்​கள் கிராமப்​புற, மலை​வாழ் பகுதி பள்​ளி​களுக்​கும் எப்​போது சென்று சேரும்? - டிஎன் ஸ்பார்க் திட்​டம் அதை சரிசெய்​யும். அதற்​கான பாடத்​திட்​டம் தயாரித்து பள்​ளிக்கு வழங்​கப்​பட்​டுள்​ளன. இதை வல்​லுநர்​களின் கருத்​துகளை பெற்று எஸ்​சிஇஆர்டி தயாரித்​துள்​ளது. நடமாடும் தொழில்​நுட்ப ஆய்​வகங்​கள், கல்வி தொலைக்காட்​சி, மணற்​கேணி செயலி மற்​றும் டிஜிட்​டல் வகுப்​பறை​கள் மூலம் நகர்ப்​புற - கி​ராமப்​புற இடைவெளி குறைக்கப்படு​கிறது.


தமிழகத்​தில் 80 சதவீத அரசு பள்​ளி​கள் கிராமப்​புறத்​தில்​தான் உள்​ளன. எனவே அவர்​களுக்​கான தரமான கல்​வியை வழங்க நடவடிக்கை எடுத்​து​விட்​டோம். ஆசிரியர்​களுக்​கான பயிற்​சி, மாணவர் கற்​பித்​தல் முறை​யில்​தான் தற்​போது கவனம் செலுத்தி வரு​கிறோம்.


மாநிலக் கல்விக் கொள்​கை​யின் முன்​னேற்​றத்தை பொது​மக்​கள் எவ்​வாறு கண்​காணிக்க முடி​யும், அதற்​கான வெளிப்படை செயல்​முறை உள்​ள​தா? - கொள்கை என்​பது ஒரு வடிவ​மைப்​பு​தான். இதைச் செயல்​படுத்​து​வதற்​கான செயல்​திட்டத்தை உரு​வாக்​கு​கிறோம். எப்​போது திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​படும் என்​ப​தற்​கான பணி​களைத் தொடங்​கி​யுள்​ளோம்.


இவை எமிஸ், பள்ளி பார்வை ஆகிய செயலிகள் வழி​யாக தொடர்ந்து கண்​காணிக்​கப்​படும். ஆண்​டு​தோறும் பொது​மக்​களுக்கு கொள்கை நடை​முறைப்​படுத்​துதல் சார்ந்து அறிக்​கைகள் வெளி​யிடப்​படும். பள்ளி மேலாண்மை குழுக்​கள் நேரடி​யாக கொள்கை நடை​முறைப்​படுத்​துதலின் முன்​னேற்​றத்தை பள்​ளி​களில் கண்​காணிக்க முடி​யும்.


பள்ளி மாணவர்​களிடம் இடையே​யான சாதிய மோதல்​கள், போதைப் பழக்​கங்​களை தடுப்​ப​தற்​கான நடவடிக்​கைகள் என்ன? - கல்விக் கொள்​கை​யில் இதற்​கான தனி பிரிவு உரு​வாக்​கினோம். இதில் மாணவர்​களை எப்​படி ஒற்​றுமை​யாக இருக்​கச் செய்ய வேண்​டும் என்​பதை உறுதி செய்​திருக்​கிறோம்.


இதுத​விர மகிழ் முற்​றம், மனநல ஆலோ​சனை உதவி எண்​கள், வாழ்க்​கைத் திறன் கல்வி மூலம் சமூக ஒற்​றுமை மற்​றும் ஆரோக்​கிய​மான வாழ்க்கை முறை​கள் மேம்​படுத்​தப்​படு​கின்​றன. ஆசிரியர்​களுக்கு முரண்​பாடு​களை களைதல் மற்​றும் குழந்தை பாது​காப்பு ஆகிய​வற்​றில் பயிற்​சிகள் வழங்​கப்​பட்​டு, பாது​காப்​பான பள்ளி சூழல் உறுதி செய்​யப்​படு​கிறது


மாநிலக் கல்விக் கொள்​கையை செயல்​படுத்​து​வதற்கு தேவை​யான நிதி இருக்​கிற​தா? - பள்​ளிக்​கல்விக்கு நடப்​பாண்டு ரூ.46,767 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்ளது. தேவைப்​பட்​டால் கூடு​தல் தொகை​யை​யும் ஒதுக்க அரசு தயா​ராக இருக்​கிறது.


21-ம் நூற்​றாண்​டுக்கு மாணவர்​களை எவ்​வாறு தயார்​படுத்​து​வீர்​கள்? - 21-ம் நூற்​றாண்​டுக்கு மனப்​பாட கல்வி மட்​டும் உதவாது. கருப்​பொருள் அறிதல்​,சிக்​கல்​களை தீர்க்​கும் திறன், செயல்​முறை கல்​வி, குழு முயற்சி போன்ற திறன்​களை மாணவர்களிடம் வளர்த்​தால் மட்​டுமே வருங்​காலத்​தில் சாதனை​யாளர்​களாக அவர்​களை உரு​வாக்க முடி​யும்.

அந்​தவகை​யில் எதிர்​காலச் சவால்​களுக்கு மாணவர்​களை ஆயத்​தப்​படுத்​து​வதற்​கான வழி​காட்​டி​யாக இந்த கொள்கை விளங்கும்.


மாநிலக் கல்விக் கொள்கை தொடர்​பாக பொது​வெளி​யில் கருத்​துகள் கேட்​கப்​ப​டாதது ஏன்? - இந்த கொள்​கையை உரு​வாக்​கும் பணி​யில், ஆசிரியர்​கள், பெற்​றோர்​, சமூக நல அமைப்​பு​கள், உள்​ளாட்சி அமைப்​பு​கள் உள்​ளிட்ட 10,000-க்​கும் மேற்​பட்​டோரின் கருத்​துகள் பெறப்​பட்​டன. தனித்​தனி​யான பொதுகருத்​துக் கேட்​புக்​ கூட்​டம்​ நடத்​தப்​பட​வில்​லை. எனினும்​, இந்​த செயல்​முறை விரி​வான​தாக​வும்​ அனைத்​து தரப்​பினரும்​ பிர​தி​நி​தித்​து​வம்​ பெரும்​ வகை​யிலும்​ அமைந்​துள்​ளது. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.



Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு 3-வது முறையாக நீட்டிப்பு

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

1373026

தமிழகத்​தில் அரசு மற்​றும் தனி​யார் கல்​லூரி நிர்​வாக ஒதுக்​கீட்டு எம்​பிபிஎஸ், பிடிஎஸ் இடங்​களுக்​கான முதல் சுற்று பொது கலந்​தாய்வு https://tnmedicalselection.net என்ற சுகா​தா​ரத்​துறை இணை​யதளத்​தில் கடந்த ஜூலை 30-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்​கியது.


கடந்த 4-ம் தேதி வரை இணை​யதளத்​தில் பதிவு செய்து கல்​லூரி​களை தேர்வு செய்ய அவகாசம் வழங்​கப்​பட்​டிருந்த நிலை​யில், அது கடந்த 6-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்​டது. இதனை தொடர்ந்து கடந்த 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது 16-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்​கப்​பட்​டுள்​ளது.


நெல்லை மாணவருக்கு... இதற்கிடையே, அகில இந்திய முதல் சுற்று கலந்தாய்வில் இடஒதுக்கீடு பெற்றவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. நீட் தேர்வில் 720-க்கு 665 மதிப்பெண்கள் பெற்று தமிழக தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருந்த திருநெல்வேலி மாணவர் எஸ்.சூர்ய நாராயணன், அகில இந்திய அளவில் 27-வது இடம் பெற்றிருந்தார். அகில இந்திய கலந்தாய்வில் பங்கேற்ற அவருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது.




Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

சாதனை படைத்த முன்னாள் மாணவர்களை அரசு பள்ளியின் தூதர்களாக நியமிக்க கல்வித்துறை திட்டம்

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

44468727-untitled-1

சாதனை படைத்த முன்னாள் மாணவர்களை பள்ளியின் தூதர்களாக நியமிக்க வழிகாட்டு நெறிமுறைகளை கல்வித்துறை வெளியிட்டுள்ளது.


பள்ளிகளின் தரமும், செயல்பாடுகளும் அப்பள்ளியில் படித்த மாணவர்களின் தற்போதைய நிலையை கொண்டே முடிவு செய்யப்படுகிறது. ஆகவே சமூகத்தில் உயரிய நிலையில் உள்ள முன்னாள் மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் படித்த பள்ளியின் தூதர்களாக நியமிக்கப்படுவர் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.


அதன்படி, ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ இணையதளம் வாயிலாக 8 லட்சத்து 50 ஆயிரம் முன்னாள் மாணவர்கள் இணைந்துள்ளனர். முன்னாள் மாணவர்களை தூதுவர்களாக நியமிக்கும்போது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முடியும் என பள்ளிக் கல்வித்துறை நம்புகிறது. அப்படி தூதர்களாக முன்னாள் மாணவர்களை நியமிக்க சில வழிகாட்டு நெறிமுறைகளை கல்வித்துறை வெளியிட்டுள்ளது.


தூதராக நியமிக்கப்படும் முன்னாள் மாணவர்கள் அவருடைய பள்ளியின் செயல்பாடுகள், தேவைகள், கருத்துகளை அனைவருக்கும் பகிரும் முக்கிய பிரதிநிதியாக செயல்படுவார்கள். பள்ளிகளின் உள்கட்டமைப்பு மற்றும் பிற தேவைக்காக பெருநிறுவன சமூக பொறுப்பு நன்கொடைகள், முன்னாள் மாணவர்கள் நன்கொடைகள் போன்றவற்றை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் ஈடுபடுவார்கள். கல்வி சார்ந்த செயல்பாடுகளில் உறுதுணையாகவும் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நூற்றாண்டு பள்ளிகள் உள்பட 8,048 பள்ளிகளில் முதற்கட்டமாக சாதனை புரிந்த முன்னாள் மாணவர்களை தூதர்களாக தேர்ந்தெடுக்க வேண்டும். பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் பெற்றோர், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் இணைந்து தேர்வு செய்ய வேண்டும். எந்தவித சமூக, பொருளாதார, கலாசார, அரசியல் வேறுபாடின்றி நடப்பவராக இருப்பவரை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.




Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பள்ளி அளவிலான சிறார் திரைப்பட மன்றப் போட்டிகள் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250813_184957

பள்ளி அளவிலான சிறார் திரைப்பட மன்றப் போட்டிகள் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

DSE - Movie - Competitions.pdf

Download here




Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TET தேர்ச்சி பெற்ற அமைச்சுப் பணியாளர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு - List & Director Proceedings

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250813_191602

பதவி உயர்வு கலந்தாய்வு மூலம் தாங்கள் தேர்ந்தெடுத்த பள்ளியில் உடனடியாக சேர உத்தரவு..!


ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2-ல் தேர்ச்சி பெற்ற 151 அமைச்சுப் பணியாளர்களுக்கு இன்று பதவி உயர்வு  வழங்கப்பட்ட நிலையில் நாளை 14-08-2025 வியாழன் முற்பகல் பணியில் சேர்ந்து தொடர்ந்து பணியாற்ற உத்தரவு..!

List & Director Proceedings - Download here




Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Current Affairs June 2025

 Current Affairs June 2025

Click here to download in Tamil

Click here to download in English

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  



Current Affairs July 2025

 Current Affairs July 2025

Click here to download Tamil 

click here to download in English

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TNPSC Group 2/2A English Class - 8 | AIM TN




Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )   

TNPSC Group 2/2A English Class - 7 | AIM TN

 




Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TNPSC Group 2/2A English Class - 6 | AIM TN

 


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

மாநிலக் கல்விக் கொள்கை-2025 தொடர்பான விமர்சனங்களுக்கு பள்ளிக்கல்வித் துறை விளக்கம்

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250808_125349

மாநிலக் கல்விக் கொள்கை தொடர்​பான பல்​வேறு விமர்​சனங்​களுக்கு பள்​ளிக்​கல்​வித் துறை விளக்​கம் அளித்துள்ளது. மாநிலக் கல்விக் கொள்கை வடிவ​மைப்பு குழு​வில் இடம் பெற்​றிருந்த பேராசிரியர் ஜவகர் நேசன், பின்பு கருத்து வேறு​பாடு​களால் அதிலிருந்து வில​கி​னார். தற்​போது வெளி​யாகி​யுள்ள மாநிலக் கல்விக் கொள்கை தொடர்​பாக பல்​வேறு குற்றச்சாட்​டு​களை முன்​வைத்து அறிக்கை வெளி​யிட்​டிருந்​தார்.


அதற்கு விளக்​கம் அளித்து பள்​ளிக்​கல்​வித் துறை வெளி​யிட்ட செய்​திக் குறிப்பு விவரம்: மாநிலக் கல்விக் கொள்​கை- 2025 கல்வியாளர்​கள், பாடத்​திட்ட நிபுணர்​கள், பள்ளி நிர்​வாகி​கள் மற்​றும் கல்​வித்​துறை அதி​காரி​கள் ஆகியோர் கொண்ட நிபுணர் குழு​வால் தயாரிக்​கப்​பட்​டது. இதில் ஆசிரியர்​கள், கல்​வி​யாளர்​கள், குழந்​தைகள் நல அமைப்​பு​கள், பெற்​றோர் உட்பட பல்வேறு தரப்​பிடம் இருந்து ஆலோ​சனை​களும் பெறப்​பட்​டன. இது அவ்​வப்​போது மதிப்​பாய்வு செய்​யப்​பட்டு தேவைக்​கேற்ப மாறுதல்களை மேற்​கொள்​ள​வும் அனு​ம​திக்​கிறது.


இந்த கொள்கை தமிழகத்​தில் இரு​மொழிக் கொள்​கை​யைத் தொடர்ந்து செயல்​படுத்​து​வதை வலி​யுறுத்​துகிறது. உயர்​கல்வி சேர்க்கைக்​கான நுழைவுத் தேர்​வு​களை எதிர்க்​கிறது. தமிழ் கலாச்​சா​ரத்தை பாது​காப்​ப​தை​யும், தமிழ் மொழியை மேம்படுத்துவதை​யும், அதே​நேரத்​தில் உலகளா​விய ஈடு​பாட்​டுக்கு மாணவர்​களை தயார்​படுத்​து​வதை​யும் நோக்​க​மாகக் கொண்டு உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.


மாநிலக் கல்விக் கொள்கை பள்ளி மேலாண்​மைக் குழுக்​கள் மற்​றும் உள்​ளூர் முடி​வெடுத்​தலை வலுப்​படுத்​துகிறது. தேசிய கல்விக் கொள்​கை​யின் மும்​மொழிக் கொள்​கை, நுழைவுத் தேர்​வு​கள் ஆகிய​வற்றை மாநிலக் கல்விக் கொள்கை வெளிப்​படையாக மறுக்​கிறது. 10+2 அமைப்​பை​யும் தொடர்ந்து தக்க வைத்​துள்​ளது. கல்வி மீண்​டும் மாநிலப் பட்​டியலுக்கு மாற்​றப்பட வேண்​டுமென அறை​கூவல் விடுக்​கிறது. தனி​யார்​மய​மாதலுக்கு எதி​ரானது.


அதே​போல், மாநில கல்விக் கொள்​கை​யில் எந்த ஒரு பகு​தி​யும் சிறு​பான்​மை​யினர் பாது​காப்பை குறைக்​க​வில்​லை. அனைத்து வாய்ப்பு மறுக்​கப்​பட்ட குழு​வினர்​களிடம் உள்ள கற்​றல் இடைவெளி​களை கண்​டறிந்​து, அவர்​களுக்கு கல்வி உதவி மற்​றும் குறைதீர் கற்​றலை வழங்க கொள்கை உறுதி செய்​கிறது.


இது தமிழகத்​தின் கல்​வித் தனித்​து​வத்​தைப் பாது​காத்து உலகளா​விய சவால்​களுக்கு கற்​போரைத் தயார் செய்​கிறது. அதனுடன் மாநில சுயாட்​சியை நிலைநிறுத்​தி, சமூக நீதியை வலுப்​படுத்​தி, நலத்​திட்​டங்​களை மேம்​படுத்​துகிறது. இவ்​வாறு அ​தில்​ கூறப்பட்டுள்​ளது.




Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

ஒரே வகுப்பில் தமிழ் - ஆங்கில வழி மாணவர்கள் கல்வி திட்டங்கள் செயல்படுத்துவதில் சிக்கல்

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Tamil_News_lrg_4005582

கோவை அரசு பள்ளிகளில் உள்ள பெரும்பாலான காலிப்பணியிடங்கள் பள்ளி மேலாண்மை குழு மூலம் நிரப்பப்பட்டுள்ளன. ஆனால், கூடுதல் தேவை பணியிடங்கள் (நீடு போஸ்ட்) நிரப்பப்படாமல் உள்ளன. 

இதனால், தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வியில் பயிலும் மாணவர்கள் ஒரே வகுப்பில் இணைக்கப்பட்டு, கணிதம் போன்ற பாடங்கள் இரு மொழிகளிலும் ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வில், 212 காலிப்பணியிடங்கள் பட்டியலிடப்பட்டன. 30 ஆசிரியர்கள் பங்கேற்ற இந்த கலந்தாய்வில், பெரும்பாலானோர் ஏற்கனவே இருந்த காலிப்பணியிடங்களைத் தேர்வு செய்தனர். கூடுதல் தேவை பணியிடங்களை, காலிப்பணியிடங்களாக அறிவிக்காததால்பல அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்கிறது. இதனால், மாணவர்களின் கற்றல் மேம்பாட்டிற்காக அறிவிக்கப்படும் திட்டங்களை நடைமுறையில் செயல்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. டாக்குமெண்ட் ரெக்கார்டு பதிவிற்காக திட்டங்களை செயல்படுத்தும் சூழலுக்கு மாணவர்களும், ஆசிரியர்களும் தள்ளப்படுகின்றனர். 


தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் சரவணகுமார் கூறுகையில், “தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் அதிகமான கூடுதல் தேவைபணியிடங்கள் உள்ளன. கோவையில் மட்டும் 200க்கும் மேற்பட்டபணியிடங்கள் உள்ளன. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். பள்ளிகளில் ஏற்கனவே உள்ள காலிப்பணியிடங்களுடன், கூடுதல் தேவைபணியிடங்களுக்கும் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். 

ஆனால், கூடுதல் தேவைபணியிடங்களை அரசு அளவுப் பட்டியலில் சேர்க்காமல் இருப்பதால், அவை நிரப்பப்படுவதில்லை. பல பள்ளிகளில், 5 பேர் செய்ய வேண்டிய பணியை ஆசிரியர்கள் பகிர்ந்து செய்து வருகின்றனர்” என்றார்.




Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TNPSC உள்ளிட்ட பல்வேறு தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்க முன் அனுமதி - CEO அளவிலேயே NOC வழங்கிட பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் , தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் இதர தேர்வாணையங்கள் நடத்தும் பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள உரிய கால அவகாசத்திற்குள் அனுமதி வழங்குவதற்கு ஏதுவாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அளவிலேயே உரிய முன் அனுமதி வழங்கிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

IMG_20250813_135507




Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

அகல் விளக்கு - மாணவிகளுக்கான இணையப் பாதுகாப்பு வழிகாட்டி சிற்றேடு - பள்ளிக் கல்வித் துறை வெளியீடு!

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250813_142711

அகல் விளக்கு - மாணவிகளுக்கான இணையப் பாதுகாப்பு வழிகாட்டி சிற்றேடு - பள்ளிக் கல்வித் துறை வெளியீடு!

Akal vilakku Guide - Download here




Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )