TNPSC Group 4 Exam; குரூப் 4 தேர்வு கட் ஆஃப் குறைய வாய்ப்பு? காரணம் இதுதான்!

 டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை ஜூன் 6 ஆம் தேதி நடத்தியது. மொத்தம் 6244 பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக் காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 15.8 லட்சம் பேர் குரூப் 4 தேர்வை எழுதியுள்ளனர்.

இந்தநிலையில், ஜூன் 19 ஆம் தேதி குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது

குரூப் 4 தேர்வை பொறுத்தவரை தமிழ் பகுதியில் 100 கேள்விகளும், பொது அறிவு மற்றும் திறனறி பகுதியில் 100 கேள்விகளும் என 200 கேள்விகள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இந்த ஆண்டு தமிழ் பகுதி சற்று எளிதாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவிக்கின்றனர்

அதேநேரம் பொது அறிவு பகுதி சற்று கடினமாக இருந்ததாக கருதுகின்றனர். சில கேள்விகள் குரூப் 2, குரூப் 1 தேர்வுகளின் தரத்தில் இருந்ததாக கூறுகின்றனர். மேலும், திறனறி பகுதியில் வழக்கமாக 25 கேள்விகள் கேட்கப்படும் நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 2 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. எனவே இந்த ஆண்டு கட் ஆஃப் சற்று குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அந்தவகையில், பொதுப் பிரிவினருக்கு 165 – 168, பி.சி பிரிவினருக்கு 164 – 167, எம்.பி.சி பிரிவினருக்கு 164 – 167 ஆக இருக்க வாய்ப்புள்ளது. பி.சி முஸ்லீம் பிரிவினருக்கு 157 – 160, எஸ்.சி பிரிவினருக்கு 161 – 164, எஸ்.சி. பிரிவினருக்கு 159 – 162, எஸ்.டி பிரிவினருக்கு 156 – 160 என்ற அளவில் எதிர்ப்பார்க்கப்படுகிறது. தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு இதிலிருந்து ஒரு மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது. மேலும் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதால், கட் ஆஃப் இன்னும் குறைய வாய்ப்புள்ளது.

இருப்பினும் சில நிபுணர்கள் இதைவிட கட் ஆஃப் குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர். சிலர் கடந்த ஆண்டை ஒட்டியே கட் ஆஃப் இருக்கும் என்று கூறுகின்றனர்

இங்கு கட் ஆஃப் எனக் குறிப்பிடப்படுவது 300 மதிப்பெண்களுக்கு அல்லாமல், 200 கேள்விகளுக்கு எத்தனை சரியான கேள்விகள் என்பதே ஆகும்.



🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க!

 சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர்/ தட்டச்சர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 01.07.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். 

JUNIOR ASSISTANT CUM TYPIST


காலியிடங்களின் எண்ணிக்கை : 1


கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தேவையான ஆவணங்களுடன் சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். 


விண்ணப்பிக்க கடைசி தேதி : 01.07.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://sivaganga.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.



🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

ஜோஹோ நிறுவனத்தில் புதிய வேலை வாய்ப்பு; இன்ஜினியரிங் தகுதி; உடனே விண்ணப்பிங்க!

 பிரபல ஐ.டி நிறுவனமான ஜோஹோ (ZOHO) நிறுவனத்தில் சாஃப்ட்வேர் டெவலப்பர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


தமிழ்நாட்டில் உள்ள முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றாக ஜோஹோ உள்ளது. ஜோஹோ நிறுவனம் தமிழகத்தை மையமாகக் கொண்டு சென்னை, மதுரை, நெல்லை, சேலம், கோவை உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது. நல்ல வேலை வாய்ப்பு சூழல் உள்ள இந்த நிறுவனத்தில் பணிபுரிய மென்பொறியாளர்கள் பலரும் விரும்புவர்.

இந்தநிலையில், ஜோஹோ நிறுவனத்தில் சாஃப்ட்வேர் டெவலப்பர் (Software Developer) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் சென்னையில் உள்ள ஜோஹோ நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவர். சென்னையில் இந்த பணிகளுக்கான நேர்முகத் தேர்வு நடைபெறும்.

இந்த பணிக்கு சி++ (C++), ஜாவா (Java) தெரிந்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கு 0 முதல் 4 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். புதியவர்களும் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளதால் பணிக்கு தேவையான திறமை பெற்று, அனுபவம் இல்லாமல் இருப்பவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.

புதிய சாப்ட்வேர் ப்ரோகிராமை டெவலப் செய்தல், டெஸ்ட் செய்தல் உள்ளிட்ட வேலைகளை செய்ய வேண்டும். மேலும் பிழையின்றி கோடிங் (Code) எழுத வேண்டும். சாப்ட்வேர் ப்ரோகிராமில் ஏற்படும் டீபக் (Debug), டிரப்ள்ஷூட் (Troubleshoot) பிரச்சனைகளை தீர்க்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் புதிய தொழில்நுட்பத்தை கற்பதில் ஆர்வமாக இருக்க வேண்டும்.

இந்தப் பணியிடங்களுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படும் வரை தேர்வு செயல்முறை இருக்கும். எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இந்தப் பணியிடங்களுக்கான சம்பள விபரங்கள் கொடுக்கப்படவில்லை. ஆனால், கல்வித் தகுதி, முந்தைய பணி அனுபவம் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்படும் எனத் தெரிகிறது.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://careers.zohocorp.com/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

zoho நிறுவன வேலை வாய்ப்பு; இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிங்க!

 பிரபல .டி நிறுவனமான ஜோஹோ (ZOHO) நிறுவனத்தில் டெக்னிக்கல் சப்போர்ட் இன்ஜினியர் வேலைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டில் உள்ள முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றாக ஜோஹோ உள்ளது. ஜோஹோ நிறுவனம் தமிழகத்தை மையமாகக் கொண்டு சென்னை, மதுரை, நெல்லை, சேலம், கோவை உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது. நல்ல வேலை வாய்ப்பு சூழல் உள்ள இந்த நிறுவனத்தில் பணிபுரிய மென்பொறியாளர்கள் பலரும் விரும்புவர்.

இந்தநிலையில், ஜோஹோ நிறுவனத்தில் டெக்னிக்கல் சப்போர்ட் இன்ஜினியர் (Technical Support Engineer) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் சென்னையில் உள்ள ஜோஹோ நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவர்.

இந்தப் பணியிடங்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், நன்றாக எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். எளிதில் கற்றுக் கொள்பவராக இருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். மின்னஞ்சல், சாட் மற்றும் அழைப்புகள் உள்ளிட்ட அனைத்து தளங்கள் பற்றிய புரிதல் வேண்டும். மின்னஞ்சல் சேவை வழங்குநர் அல்லது மின்னஞ்சல் பாதுகாப்பு மென்பொருள் விற்பனையாளர் அல்லது டொமைன் ஹோஸ்டிங் வழங்குனருடன் தொழில்நுட்ப ஆதரவு பொறியாளர் / வாடிக்கையாளர் சேவை நிபுணர் அனுபவம் பெற்றிருப்பது கூடுதல் நன்மையாக இருக்கும். நெட்வொர்க்கிங் மற்றும் ஆக்டிவ் டைரக்டரி பற்றிய அடிப்படை அறிவு இருக்க வேண்டும்.

இந்தப் பணியிடங்களுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படும் வரை தேர்வு செயல்முறை இருக்கும். எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இந்தப் பணியிடங்களுக்கான சம்பள விபரங்கள் கொடுக்கப்படவில்லை. ஆனால், கல்வித் தகுதி, முந்தைய பணி அனுபவம் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்படும் எனத் தெரிகிறது.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://careers.zohocorp.com/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news


🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

இந்த வாய்ப்பு உங்களுக்கு தான்... குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் வேலை வாய்ப்பு..

 ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் (மிஷன் வத்சல்யா) பணியாளர் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள், புறக்கணித்தல் மற்றும் சுரண்டல்கள் ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடிய துன்புறும் சூழல்களைத் திறம்பட குறைந்து குழந்தைகளுக்கு விசாலமான, வலிமைமிக்க பாதுகாப்பான சூழ்நிலையை உறுதி செய்யும் நோக்கத்துடன் இத்திட்டம் ஏற்படுத்தப்பட்டது.

அந்த வகையில் ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் (மிஷன் வத்சல்யா) கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற கீழ்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: உதவியாளர்(1 பணியிடம்) ,இதற்கு தொகுப்பூதியமாக ஒரு மாதம் ரூ.11,916/ என்று வழங்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு தேர்வில் மேல்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்குவதில் தேர்ச்சி மற்றும் ஆற்றல் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது.


இந்த பதவிக்கான விண்ணப்படிவத்தினை https://tiruchirappalli.nic.in/ இணையதளத்தில் இருத்து பதிவிறக்கம் செய்து கொண்டு அதனை பூர்த்தி செய்து அதனை 06.07.2024 அன்று மாலை 5.30 மணிக்குள் கீழ்காணும் முகவரிக்கு வந்து சேரும் வகையில் (நேரிலோ/தபால் மூலமாகவோ) அனுப்பப்பட வேண்டும்.


குறிப்பிட்ட காலத்திற்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, N.E.1, முதல் தளம், மெக்டொனால்டு ரோடு, கலையரங்கம் வளாகம், திருச்சிராப்பள்ளி - 620 001. தொலைபேசி எண்: 0431-2413055.

அத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்: 1) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் 2) சுயசான்றொப்பமிட்ட கல்விச்சான்றுகளின் நகல். 3) சுயசான்றொப்பமிட்ட பணி அனுபவ சான்றுகளின் நகல் மேலும் விபரங்களுக்கு 0431-2413055 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்: 1) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் 2) சுயசான்றொப்பமிட்ட கல்விச்சான்றுகளின் நகல். 3) சுயசான்றொப்பமிட்ட பணி அனுபவ சான்றுகளின் நகல் மேலும் விபரங்களுக்கு 0431-2413055 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

கம்ப்யூட்டர் knowledge மட்டும் போதும் - மாதம் ₹18000 சம்பளத்தில் அரசு வேலை..

 குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சிறப்பு சேவையின் கீழ் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு செயல்பட்டு வருகிறது.இந்த அலகில் தரவு பகுப்பாளர் data analyst பணியிடம் தற்போது நிரப்பப்பட உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த பணியிடமானது முற்றிலும் தற்காலிகமானது என்றும், மாதம் ஊதியமாக 18536 ரூபாய் வழங்கப்படும்

மொத்தமாக ஒரேயொரு காலிப்பணியிடம் உள்ள நிலையில், தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. BCA, கணிதவியல், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறைகளில் பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.ஏற்கனவே கணினி சார்ந்த வேலைகளில் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பதாரர் 42 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பந்தை www.virudhunagar.nic.in என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து, அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் புகைப்படத்தை இனைத்து அதை‌ கீழ்க்கண்ட முகவரிக்கு வரும் ஜுன் 28 2024 மாலை 5.30 க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.


முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2/830-5 - வ.உ.சி நகர்,சூலக்கரை மேடு, விருதுநகர் - 626003 , தொலைபேசி எண்:04562-293946



🔻🔻🔻


Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news