SSC CGL 2024 அறிவிப்பு வெளியீடு – 17000+ காலிப்பணியிடங்கள் || ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

 SSC CGL 2024 அறிவிப்பு வெளியீடு – 17000+ காலிப்பணியிடங்கள் || ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

Staff Selection Commission எனப்படும் பணியாளர் தேர்வு ஆணையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Combined Graduate Level (CGL) பணிக்கான 17,727 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Combined Graduate Level-ன் கீழ் Assistant Section Officer, Inspector of Income Tax, Inspector மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 17,727 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வெய்யதானது 18 என்றும் அதிகபட்ச வயது 32 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் Level 4, 5,6,7,8 அளவில் ரூ.25,500/- முதல் ரூ.1,51,100/- வரையிலான ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

General /OBC Pay: Rs.100/-

SC/ST/ Ex-Serviceman /Females : விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Computer Based Examination (Tier-I), Tier-II, Tier-III (Descriptive Paper), Tier-IV (Skill Test) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 24.07.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF


🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் Assistant Professor வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.45,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

 

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் Assistant Professor வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.45,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் ஆனது Assistant Professor பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

TNJFU காலிப்பணியிடங்கள்:

TNJFU வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Assistant Professor பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளது.

Assistant Professor கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Tech in Food Technology / Ph.D தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.


TNJFU வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


Assistant Professor ஊதிய விவரம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.35,000/- முதல் ரூ.45,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.


TNJFU தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து deancfnft@tnfu.ac.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 23.07.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

ரூ.37,000/- ஊதியத்தில் NIT திருச்சி வேலைவாய்ப்பு – தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!

 ரூ.37,000/- ஊதியத்தில் NIT திருச்சி வேலைவாய்ப்பு – தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!

தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளி ஆனது Junior Research Fellow (JRF) பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

NIT காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Junior Research Fellow (JRF) பணிக்கென மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தொழில்நுட்ப நிறுவன கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.E/M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NIT வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேசிய தொழில்நுட்ப நிறுவன ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.37,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NIT தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.07.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF




🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

அண்ணா பல்கலைக்கழகத்தில் Field Officer வேலை – ரூ.60,000/- சம்பளம் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

 

அண்ணா பல்கலைக்கழகத்தில் Field Officer வேலை – ரூ.60,000/- சம்பளம் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

அண்ணா பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Technical Coordinator, Project Associate-II, Field Officer பணிக்கான 17 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

Technical Coordinator, Project Associate-II, Field Officer பணிக்கென மொத்தம் 17 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Associate கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc / BE / B.Tech / M.Sc / MBA / ME / M.Tech / PhD தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


அண்ணா பல்கலைக்கழக வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


Project Associate ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.15,000/- முதல் ரூ.60,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

அண்ணா பல்கலைக்கழக தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் dircwr@annauniv.edu என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 05.07.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

UDISE + Data Capture Format 2024-25

TRB - Assistant Professor - Business Administration ( unit - 7 ) Production And Operations Management Study Materials

 
TRB Lectures Post - Syllabus 

TRB - Asst.professor Exam Syllabus - 2024 - Download here


TRB - Assistant Lecturers Post Study Materials 

TRB - Assistant Professor - Business Administration ( unit - 7 ) Production And Operations Management Study Materials - Srimaan Coaching Centre - Download here

🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

EE training Power point Class-1 to 3

 

IMG_20240625_055926

EE training Power point Class-1 to 3

Tamil,

English,

Maths,

General session,

Digital Corner

Ict facilitator guideliness


All in one Drive

👇👇👇👇👇👇


Click here to download pdf


🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

EE training Power point Class-4 & 5

 
EE training Power point Class-4 & 5


Tamil,

English,

Maths,

science

social science

FA(a)

Digital Corner

Technical support


All in one Drive

👇👇👇👇👇👇

Click here to download pdf


🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

பள்ளிகளில் “அகல் விளக்கு” திட்டம்.. AI பாடம்.. அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் !

 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் எந்தவித இடர்பாடும் இன்றி தொடர்ந்து பள்ளிக்கு வந்து செல்வதை உறுதி செய்ய'அகல் விளக்கு திட்டம்' செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.


தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. துறைவாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பல்வேறு துறைகளின் கீழ் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.


இந்நிலையில், இன்று நடைபெற்ற பள்ளிக் கல்வித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் 25 புதிய அறிவிப்புகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.


பள்ளிக்கல்வித்துறையின் 25 புதிய அறிவிப்புகள் வருமாறு:


1. அரசுப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.58 கோடி மதிப்பில் தரம் உயர்த்தப்படும்,


2. பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழா. தேசிய அளவிலான முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு வைர விழா ரூ.10 கோடி மதிப்பீட்டில் நடத்தப்படும்.


3. காலநிலை மாற்றம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கல்வி, ரூ.2.32 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.


4. ஆளுமைத் திறன் மேம்பாட்டுச் செயல்பாடுகள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.


5. ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படை கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு திறன் கற்றுக் கொடுக்கப்படும்.


6. அரசு உதவி பெறும் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.42 கோடி செலவில் அமைக்கப்படும்.


7. ரோபோடிக் (ROBOTICS) ஆய்வகங்கள் மாவட்டத்திற்கு ஒரு பள்ளி என்ற அளவில் 38 பள்ளிகளில் ரூ.15.43 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.


8. பல்வகை திறன் பூங்கா, ஒரு மாவட்டத்திற்கு ஒரு பல்வகை திறன் பூங்கா என ரூ.3.80 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.


9. 9 முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் எந்தவித இடர்பாடும் இன்றி தொடர்ந்து பள்ளிக்கு வரும்பொருட்டு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஏற்படும் இடையூறுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும், இணையதள பயன்பாடுகளைப் பாதுகாப்பாகக் கையாள்வது குறித்து வழிகாட்டுதல் வழங்க, 'அகல் விளக்கு' என்ற பெயரில் ஆசிரியைகளைக் கொண்ட குழுக்கள் அமைக்கப்படும். இந்த திட்டம் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.


6 புதிய பட்டய படிப்புகள் அறிமுகம்.. சட்டசபையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் பொன்முடி!

10. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் தொடக்கப் பள்ளிகளுக்கும் கலைத் திருவிழா விரிவாக்கம் செய்யப்படும்.


11. உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விச் செலவினை ஏற்றல், இதற்கு 6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.


12. தமிழ்நாடு தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.


13. மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தைத் தகை சால் நிறுவனமாகத் தரம் உயர்த்துதல், 41.63 கோடி மதிப்பில் உயர்த்தப்படும்.


14. ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப் பயிற்சி, 3.15 கோடி செலவில் அளிக்கப்படும்.


15. முதற்கட்டமாக ஆயிரம் ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு இரண்டாம் கட்டமாக, ஆயிரம் ஆசிரியர்களுக்கு மூன்று கோடி மதிப்பில் தொல்லியல் பயிற்சி வழங்கப்படும்.


16. உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க மாணவர்களுக்கான நன்னெறி செயல்பாடுகள், 2 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்.


17. தூத்துக்குடியில் மாவட்ட மைய நூலகத்திற்கு புதிய கட்டிடம் ரூ.6 கோடி செலவில் கட்டப்படும்.


18. பார்வைத் திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கான கணினி எழுத்துணறி மென்பொருள், மாவட்ட மைய நூலகங்களில் ரூ.1.75 கோடி செலவில் உருவாக்கப்படும்.


19. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறார் அறிவியல் பூங்கா, ரூ.80.24 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்படும்.

20. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் நூலகங்களுக்கான புதிய சேவைகள், 5 லட்சம் மதிப்பில் வழங்கப்படும்.


21. ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடுதோறும் நூலகங்கள் அமைத்துச் சிறப்பாகப் பயன்படுத்திவரும் தீவிர வாசகர்களைக் கண்டறிந்து ஊக்குவிக்கச் சொந்த நூலகங்களுக்கு ரூ.1.14 லட்சம் மதிப்பில் விருது வழங்கப்படும்.


22. தமிழ் இலக்கியம் தமிழ்நாட்டின் வரலாறு மற்றும் பண்பாட்டைப் பிற இந்திய மொழிகள் மற்றும் வெளிநாட்டு மொழிகளுக்கு விரிவுபடுத்த இரண்டு கோடி மதிப்பில் 'திசைதோறும் திராவிடம்' திட்டம் விரிவாக்கப்படும்.


23. மிளிரும் தமிழ்நாடு என்ற பெயரில் தமிழ்நாட்டுப் பண்பாடு, கட்டடக்கலை, சிற்பக்கலை, நாட்டுப்புறக் கலைகள், தனித்துவமான உணவு வகைகள், புவிசார் குறியீடுகள் உள்ளிட்டவை அடங்கிய புகைப்பட ஓவிய நூல்கள் 50 லட்சம் மதிப்பீட்டில் பரிசு பதிப்புகளாக வெளியிடப்படும்.


24. பட்டய கணக்காளர் ( CA) தேர்வு நூல்கள், 30 லட்சம் மதிப்பில் வெளியிடப்படும்.


25. பாடநூல் கழக நூல்களின் விற்பனையை இணையவழியில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் 20 லட்சம் மதிப்பில் விரிவுபடுத்தப்படும் என்பன உள்ளிட்ட பள்ளிக்கல்வித் துறையின் புதிய அறிவிப்புகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியாகியிட்டார்.


🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

மன அழுத்தமின்றி குழந்தை வளர்ப்பில் அமைதியாக ஈடுபட உதவும் குறிப்புகள்

 
பிள்ளைகளை வளர்ப்பது என்பது ஒரு அற்புதமான, அதே நேரத்தில் சவால்கள் நிறைந்த ஒரு பயணம் ஆகும். துக்கம் இல்லாத இரவுகளில் துவங்கி குழந்தையோடு ஓடி ஆடி, அவர்கள் பின்னே ஓடுவது மற்றும் அவர்கள் பெரியவர்கள் ஆனதும் அவர்களுடைய உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு நடந்து கொள்வது நிச்சயமாக எல்லோராலும் சாதாரணமாக செய்து விட முடியாது.

பிள்ளைகளை வளர்ப்பதால் ஒரு சில பெற்றோர்கள் மன அழுத்தத்திற்கு கூட ஆளாவது உண்டு. எனினும் அமைதியான குழந்தை வளர்ப்பு பயணத்தை மேற்கொள்வதற்கு நீங்கள் சிறு சிறு விஷயங்களை பின்பற்றினாலே போதுமானது. அந்த வகையில் குழந்தை வளர்ப்பில் பெற்றோருக்கு உதவக்கூடிய ஒரு சில குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம்.


தியானம் என்ற கலையை ஏற்றுக் கொள்ளுதல் : நம்மைச் சுற்றி எவ்வளவு குழப்பங்கள் நீடித்து வந்தாலும் அமைதியாக ஒரு சூழ்நிலையை கையாளுவதற்கு தியானம் ஒரு வலிமையான கருவியாக செயல்படுகிறது. தியானத்தை பயிற்சி செய்வது குழந்தை வளர்ப்பு காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தை குறைத்து, பெற்றோர் மற்றும் குழந்தை உறவை மேம்படுத்த உதவும் என்று ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உங்களுடைய அன்றாட வழக்கத்தில் ஆழ்ந்த மூச்சு பயிற்சி அல்லது பாடி ஸ்கேன் போன்ற எளிமையான தியான பயிற்சிகளை சேர்ப்பதன் மூலமாக சவாலான சூழ்நிலைகளை கூட நீங்கள் மிக பொறுமையாக கையாளலாம்.

சுய பராமரிப்பின் முக்கியத்துவத்தை கற்றுக் கொள்ளவும் : காலியான ஒரு குடுவையிலிருந்து எதையும் பிறருக்கு நீங்கள் கொடுக்க முடியாது என்ற பழமொழிக்கு ஏற்ப நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே உங்கள் பிள்ளைகளை சிறப்பாக உங்களால் வளர்க்க முடியும். எனவே அவ்வப்போது உங்களை ரீசார்ஜ் செய்து கொண்டு, உங்கள் ஆற்றலை மீண்டும் நிரப்புவதற்கு உதவும் வகையில் சுய பராமரிப்புக்கு நீங்கள் முன்னுரிமை வழங்க வேண்டும். உங்கள் மன அழுத்தத்தை குறைத்து ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்த உதவும் சுய பராமரிப்பு செயல்பாடுகளில் தினமும் ஈடுபடுங்கள். ஒரு குறுகிய தூர நடைபயணம், உங்களுக்கு பிடித்தமான ஹாபி அல்லது தனிமை போன்ற எதுவாக வேண்டுமானாலும் அது இருக்கலாம். இவ்வாறு நீங்கள் செய்யும் பொழுது உணர்வுகளை எப்படி சமநிலைப்படுத்துவது என்பதை எளிதாக புரிந்து கொண்டு, சவால்களை சந்திக்க தயாராகி விடுவீர்கள்.

உண்மையான சூழ்நிலையை புரிந்து கொள்ளுதல் : எதார்த்தமற்ற எதிர்பார்ப்புகள் காரணமாகவே பெரும்பாலான பெற்றோர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. இது சமூகம் மூலமாகவோ அல்லது நீங்கள் வகுத்து வைத்துள்ள ஒரு சில தரநிலைகள் காரணமாகவோ ஏற்படலாம். எனவே எப்பொழுதும் உங்கள் மீதும் பிள்ளைகள் மீதும் எதார்த்தமான எதிர்பார்ப்புகளை அமைத்துக் கொள்வது நல்லது. எல்லா விஷயத்திலும் பெர்ஃபெக்டாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது முற்றிலும் தவறு. அடையக்கூடிய இலக்குகளை அமைத்து, சிறு சிறு வெற்றிகளை கொண்டாடுங்கள். பெர்ஃபெக்டாக இருந்தால் மட்டுமே நான் ஒரு நல்ல பெற்றோர் என்ற எண்ணத்தை கைவிடுங்கள்.

நீங்கள் உணர்வதையும், உங்களுக்கு என்ன தேவை என்பதையும் வெளிப்படையாக பேசவும் : உங்கள் பிள்ளைகளோடு நல்ல ஒரு உறவை வளர்ப்பதற்கு அவர்களுடன் நீங்கள் வெளிப்படையாக மனதில் இருப்பதை தெளிவாக பேச வேண்டும். அதேபோல உங்கள் பிள்ளை பேசும் பொழுது அவர்களது கண்களைப் பார்த்து அதனை காது கொடுத்து நீங்கள் கேட்க வேண்டும். மேலும் அவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக ஃபீட்பேக்குகளை வழங்குங்கள். எந்த ஒரு முடிவுக்கு வராமல் உங்கள் பிள்ளைகளின் யோசனைகள் மற்றும் உணர்வுகளை பொறுமையாக கேளுங்கள். உங்களுடைய தேவைகள் மற்றும் எல்லைகளை தெளிவாக அவர்களுக்கு புரிய வையுங்கள். இதன் மூலமாக அமைதியான மற்றும் ஆதரவு நிறைந்த ஒரு வீட்டு சூழலை உங்களால் அமைக்க முடியும்.

உதவி கேட்க கூச்சப்பட வேண்டாம் : குழந்தை வளர்ப்பு என்பது உங்களை மட்டுமே சார்ந்த ஒரு விஷயமாக நீங்கள் பார்க்கக் கூடாது. நண்பர்கள், குடும்பத்தார் அல்லது நிபுணர்களின் உதவியை நாடுவது தவறில்லை. பிறரின் உதவிகளை நீங்கள் நாடும் பொழுது உங்களுக்கு உள்ள மன அழுத்தம் குறைந்து பிள்ளைகளை எப்படி சரியான முறையில் வளர்ப்பது என்பது சம்பந்தப்பட்ட பல்வேறு விதமான யோசனைகள் உங்களுக்கு கிடைக்கும். அந்த யோசனைகளில் இருந்து உங்கள் பிள்ளைக்கு எது சரியாக இருக்கும் என்பதை நீங்கள் சிந்தித்து முடிவு எடுக்கலாம். வலுவிழந்தவர்கள் மட்டுமே உதவி கேட்பார்கள் என்று நினைத்து விடாதீர்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நல்லது நினைக்கும் நபர்களிடம் உதவி கேட்பதால் நிச்சயமாக நாம் குறைந்து போக போவது இல்லை.

பிரெட்டை ஃப்ரிட்ஜில் வைக்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கா… நீங்க இதை கட்டாயம் வாசிக்கணும்!!!

 பிரெட் என்பது பெரும்பாலானவர்களின் வீடுகளில் காணப்படும் ஒரு தின்பண்டம் ஆகும். பசி எடுக்கும் சமயத்தில் வீட்டில் உணவு இல்லாத பொழுது அவசரத்திற்கு பிரெட் உதவும் என்பதற்காகவே பலர் வீட்டில் பிரெட் வாங்கி வைப்பதுண்டு.

ஆனால் பிரெட்டை நம்மால் நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்க முடியாது. நாம் பிரெட்டை சேமித்து வைக்கும் முறையானது அதன் தரம் மற்றும் அது கெட்டுப் போகாமல் இருப்பதில் குறிப்பிடத்தக்க பங்கு கொண்டுள்ளது. பலர் பிரெட்டை ஃப்ரிட்ஜில் வைப்பதால் அது எப்பொழுதும் ஃபிரஷாக இருக்கும் என்று கருதுகின்றனர். ஆனால் உண்மையில் ஃப்ரிட்ஜில் பிரெட்டை சேமித்து வைப்பதால் அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். அது விரைவில் கெட்டுப் போகும், அதோடு அதனுடைய அமைப்பு மற்றும் சுவையும் மாறுபடுகிறது. பிரெட்டை ஏன் ஃப்ரிட்ஜில் சேமித்து வைக்க கூடாது என்பதற்கான ஒரு சில காரணங்களை இப்பொழுது தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக பிரெட்டை தயாரிக்கும் பொழுது அதில் உள்ள ஸ்டார்ச் மூலக்கூறுகள் தண்ணீரை உறிஞ்சி கெட்டியாகிறது. இதன் காரணமாகவே பிரெட் மென்மையாகவும், புசுபுசுவென்ற அமைப்பையும் பெறுகிறது. எனினும் பிரெட்டை நாம் குளிர் சூழலில் வைக்கும் பொழுது அந்த ஸ்டார்ச் மூலக்கூறுகள் மீண்டும் கிரிஸ்டலாக மாறத் தொடங்கி அதிலிருந்து தண்ணீரை வெளியேற்றுகிறது. இதனால் பிரெட் உறுதியாக மாறி, வறண்ட அமைப்பையும் பெறுகிறது.

ஸ்டார்ச் கெட்டியாகும் விகிதத்தில் வெப்பநிலை ஒரு முக்கிய பங்கு கொண்டுள்ளது. குளிர்சாதன பெட்டியில் உள்ள வழக்கமான வெப்ப நிலையில் ஸ்டார்ச் விரைவாக மீண்டும் படிகமாகிறது. ஆகவே பிரெட்டை பிரிட்ஜில் சேமித்து வைப்பதற்கு பதிலாக சாதாரண அறை வெப்ப நிலையில் சேமித்து வைப்பது நல்லது.

பிரெட்டை பிரிட்ஜில் வைப்பதால் அது விரைவில் கெட்டுப் போவது மட்டுமல்லாமல், அதன் அமைப்பு மற்றும் சுவையிலும் மாற்றம் ஏற்படுகிறது. பெரும்பாலும் ஃப்ரிட்ஜில் சேமித்து வைக்கப்பட்ட பிரெட்டை சாப்பிடும் பொழுது அது விழுங்குவதற்கு கடினமாக இருப்பதை நீங்கள் கட்டாயமாக உணர்ந்து இருப்பீர்கள். ஸ்டார்ச் மூலக்கூறுகளில் உள்ள ஈரப்பதமானது வெளியேற்றப்பட்டதே இதற்கு காரணம்.

அதே நேரத்தில் சுவையைப் பற்றி பேசுகையில் இந்த குளிர்ச்சியூட்டம் செயல்முறையின் பொழுது பிரெட்டானது பிரிட்ஜில் சேமித்து வைக்கப்பட்ட பிற உணவுகளில் இருந்து வரக்கூடிய வாசனைகளை உறிஞ்சி கொள்கிறது. இதனால் அது மோசமான சுவை கொண்டதாக மாறுகிறது. பலர் பிரெட்டில் பூஞ்சை வளராமல் இருப்பதற்காக அதனை குளிர்சாதன பெட்டியில் சேமிக்கலாம் என்று கருதுவர். குளிர்சாதன பெட்டியில் வைப்பதால் பூஞ்சை வளர்ச்சி தாமதப்படுத்தப்பட்டாலும், அது கெட்டுப் போகும் செயல்முறை விரைவுப்படுத்தப்படுகிறது. எனவே பிரெட்டை அறை வெப்ப நிலையில் ஈரப்பதம் இல்லாத காற்று உள்ளே செல்ல இயலாத ஒரு டப்பாவில் சேமித்து வைப்பதன் மூலமாக அதில் பூஞ்சை வளர்ச்சி ஏற்படுவதை தவிர்க்கலாம். மேலும் அதன் அமைப்பு மற்றும் சுவையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாது.

அதே நேரத்தில் அறை வெப்ப நிலையில் நீங்கள் பிரெட்டை சேமிக்கும் பொழுது அதனை பிளாஸ்டிக் பைகளில் சேமித்து வைக்க வேண்டாம். ஏனெனில் பிளாஸ்டிக் பைகள் ஈரப்பதம் நிறைந்த சூழலை உருவாக்கி, அதனால் பூஞ்சை வளர்ச்சி ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஒருவேளை நீங்கள் பிளாஸ்டிக் பைகளில் பிரெட்டை சேமித்து வைக்கிறீர்கள் என்றால் அந்த பிரெட்டை விரைவாக சாப்பிட்டு விட முயற்சி செய்யுங்கள். ஆனால் ஒருபோதும் பிரெட்டை இனி ஃப்ரிட்ஜில் சேமித்து வைக்கும் செயல்முறையில் ஈடுபட வேண்டாம். அது கட்டாயமாக அதன் தரத்தையும், சுவையையும் மாற்றிவிடும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.



வெயில் ஏன் நம்மை சோர்வடைய வைக்கிறது தெரியுமா..? இதுதான் காரணம்..!

 ஜூன் மாதம் கிட்டத்தட்ட முடிய போகும் கட்டத்தை அடைந்திருந்தாலும் வெப்பநிலை இன்னும் குறைந்த பாடில்லை. வெளியே சென்று விட்டு வீடு திரும்புவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. வெப்பமானது நம்மை சோர்வடையச் செய்வது மட்டும் அல்லாமல், ஒரு சிலரை நோய் வாய்பட வைக்கிறது.

இரவு நேரத்தில் கூட வெப்பம் நிறைந்த காற்று வீசுவதால் வீட்டை விட்டு வெளியே செல்வதற்கே பயமாக இருக்கிறது. எந்நேரமும் வியர்வை மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் தடிப்புகள், வியர்க்குரு, போன்றவை நம்மை வாட்டி வதைத்து வருகிறது. கோடை காலத்தில் நம்மில் பெரும்பாலானவர்கள் விரைவாக சோர்வடைந்து விடுகிறோம்.

சூரிய கதிர்கள் மனநிலையை மேம்படுத்துவது மற்றும் அத்தியாவசியமான வைட்டமின் D வழங்குவது போன்ற பல்வேறு நன்மைகளை அளித்தாலும், அது கட்டாயமாக நம்மை சோர்வடையச் செய்து விடும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால் இதற்கான காரணத்தை என்றைக்காவது நீங்கள் யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? சூரிய கதிர்கள் நம்மை ஏன் சோர்வடைய செய்கிறது என்பதற்கான ஒரு சில காரணங்களை இப்பொழுது பார்க்கலாம்.

நீர்ச்சத்து இழப்பு : 

சூரியன் நம்மை சோர்வடைய செய்வதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று டிஹைட்ரேஷன். நாம் சூரிய கதிர்களுக்கு கீழ் அதிகப்படியான நேரத்தை செலவிடும் பொழுது, நமது உடலானது தன்னை குளிர்விக்கும் செயல்முறையில் ஈடுபடுவதற்கு அதிகம் போராட வேண்டி உள்ளது. அதிகப்படியான வியர்வை நமது உடலில் இருந்து குறிப்பிடத்தக்க அளவு திரவ இழப்பை ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு சோர்வு மற்றும் ஒரு வித சோம்பேறித்தனம் உண்டாகிறது.

வெப்பத்திற்கு உடலின் பதில் விளைவு : 

நம்மை அதிகப்படியான வெப்பநிலைக்கு நாம் வெளிப்படுத்தும் பொழுது உட்புற வெப்பநிலையை பராமரிப்பதற்கு நமது உடல் அதிகம் வேலை செய்ய வேண்டி இருப்பதாக ஒரு ஆய்வு மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது வியர்வை மற்றும் அதிகப்படியான ரத்த ஓட்டம் மூலமாக செய்யப்படுகிறது. இந்த கூடுதல் முயற்சிக்கு அதிக ஆற்றல் தேவைப்படுவதால் நாம் விரைவில் சோர்வாகி விடுகிறோம்.

நோய் எதிர்ப்பு பதில் விளைவு : 

ஓரளவு சூரிய கதிர்களுக்கு நம்மை வெளிப்படுத்துவதால் நமது மனநிலை மேம்படுத்தப்பட்டு, செரடோனின் அளவுகள் அதிகமாகி வைட்டமின் D கிடைக்கிறது. எனினும் அதிகப்படியாக சூரிய கதிர்களுக்கு கீழ் நேரத்தை செலவிடும் பொழுது UV கதிர்கள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். இது வீக்கத்தை ஏற்படுத்தி, நமது உடலின் நோய் எதிர்ப்பு விளைவை தூண்டி சரும செல்களுக்கு சேதத்தை ஏற்படுத்துகிறது. இந்த நோய் எதிர்ப்பு பதில் விளைவு நம் ஆற்றலை உறிஞ்சி நம்மை சோர்வாக்குகிறது.

எலக்ட்ரோலைட் சமநிலையின்மை : 

வியர்வை என்பது திரவ இழப்பை மட்டும் ஏற்படுத்தாமல் சோடியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய எலக்ட்ரோலைட்டுகளின் அளவுகளை குறைக்கிறது. தசை செயல்பாடு மற்றும் ஆற்றல் அளவுகளை பராமரிப்பதில் இந்த தாதுக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. அவற்றில் சமநிலையின்மை ஏற்படும் பொழுது தசை வலி மற்றும் சோர்வு ஏற்படுகிறது.

சன்பர்ன் மற்றும் சரும சேதம் : 

சூரிய கதிர்களுக்கு நம்மை அதிகப்படியாக வெளிப்படுத்திக் கொள்வதற்கான மிகத் தெளிவான ஒரு அறிகுறி என்றால் அது சன்பெர்னாக இருக்கும். நமது சருமம் சூரிய கதிர்களால் எரிச்சல் அடையும் பொழுது வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. இது சன்பெர்ன் எனப்படும். இந்த சேதமடைந்த சரும செல்களை ஆற்றுவதற்கு ஆற்றல் தேவைப்படுகிறது. இதனால் நாம் வழக்கத்தை விட அதிக சோர்வாக உணர்கிறோம்.

உடல் செயல்பாடு : 

நீச்சல், விளையாட்டு போன்ற வீட்டிற்கு வெளியே சூரியனின் கீழ் செய்யக்கூடிய ஒரு சில செயல்பாடுகள் நமக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் அதனால் நமக்கு அதிகப்படியான சோர்வு உண்டாகிறது. இந்த செயல்பாடுகளின் பொழுது ஏற்படும் சுவாரசியத்தில் நாம் இடையே இடைவெளி எடுத்துக் கொள்வதற்கும், போதுமான அளவு தண்ணீர் பருகுவதற்கும் மறந்து விடுகிறோம்.

தூக்க சீர்குலைவு : 

பளிச்சென்ற சூரிய வெளிச்சமானது நமது தூக்க அட்டவணையில் குறிக்கிடலாம். இதனால் இரவு நேரத்தில் தூங்குவதற்கு நீங்கள் சிரமத்தை அனுபவிக்க நேரிடுகிறது. மோசமான தூக்க தரம் காரணமாக அடுத்த நாள் சோர்வாக உணருவீர்கள்.
சூரிய கதிர்கள் காரணமாக ஏற்படும் சோர்வை தவிர்ப்பது எப்படி?

  • முடிந்த அளவு வெயிலில் அதிகப்படியான நேரம் செலவிடுவதை தவிர்க்கவும்.

  • ஒருவேளை வேறு வழி இல்லாத பட்சத்தில் நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் பருக மறக்க வேண்டாம்.

  • அவ்வப்போது பிரேக் எடுத்துக்கொண்டு நிழலில் அமர்ந்து, உடலை குளிர்ச்சிப்படுத்தி உடலுக்கு ஓய்வு கொடுங்கள்.

  • லேசான, காற்று உள்ளே எளிதாக செல்லக்கூடிய வகையில் ஆடைகளை அணியவும். தொப்பி அணிவது உதவக்கூடும்.

  • சன்பர்னை தவிர்ப்பதற்கு சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள்.

  • எலக்ட்ரோலைட் நிறைந்த உணவுகள் அல்லது பானங்களை சாப்பிடவும்.