தேர்வு இல்லை.10-ம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே... போஸ்ட் ஆபிஸில் வேலைவாய்ப்பு..!

 இந்திய அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் பணியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


பதவிகள்:

* கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM)

* உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM)

* தபால்காரர் (Dak Sevak)

மொத்த பணியிடங்கள்: சுமார் 30,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேதி: 2026, ஜனவரி 15

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10-ஆம் வகுப்பு (SSLC) தேர்ச்சி. கணிதம் மற்றும் ஆங்கிலம் பாடங்களில் தேர்ச்சி அவசியம்.

மொழித்தகுதி: விண்ணப்பதாரர்கள் அந்தந்த மாநிலத்தின் உள்ளூர் மொழியைப் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

கூடுதல் தகுதி: மிதிவண்டி அல்லது இருசக்கர வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

* குறைந்தபட்ச வயது: 18 ஆண்டுகள்

* அதிகபட்ச வயது: 40 ஆண்டுகள்

வயது தளர்வு:

* SC/ST பிரிவினருக்கு – 5 ஆண்டுகள்

* OBC பிரிவினருக்கு – 3 ஆண்டுகள்

* மாற்றுத்திறனாளிகளுக்கு – 10 ஆண்டுகள்

விண்ணப்ப முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்திய அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.



0 Comments:

Post a Comment