SSC GD Constable Recruitment 2025 – 25,487 மத்திய அரசு பணியிடங்கள்! 10th Pass போதும் 🚓| சம்பளம் ₹69,100 வரை

 மத்திய அரசு பாதுகாப்புப் படைகளில் சேரவேண்டும் என்று கனவு காணும் இளைஞர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பு! Staff Selection Commission (SSC) 2026-ஆம் ஆண்டிற்கான Constable (General Duty) – GD தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் BSF, CISF, CRPF, ITBP, SSB, Assam Rifles, SSF போன்ற மத்திய பாதுகாப்புப் படைகளில் மொத்தம் 25,487 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.


மொத்த காலியிடங்கள் – 25,487

  • ஆண்கள்: 23,467
  • பெண்கள்: 2,020

படைவாரியான காலியிடங்கள்:

  • CISF: 14,595
  • CRPF: 5,490
  • BSF: 2,616
  • SSB: 1,764
  • Assam Rifles: 1,706
  • ITBP: 1,293
  • SSF: 23

🎓 கல்வித் தகுதி (Eligibility)

  • அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் 10th Pass (Matriculation)
  • தகுதி தேதி: 01.01.2026 அடிப்படையில் 10th Pass அவசியம்.

🎯 வயது வரம்பு

  • 18 முதல் 23 வயது
  • பிறந்த தேதி வரம்பு:
    02-01-2003 முதல் 01-01-2008 வரை

Age Relaxation (Govt Rules):

  • SC/ST → +5 years
  • OBC → +3 years
  • PwBD / Ex-Servicemen → as per rules

தேர்வு முறை (Selection Process)

1️⃣ Computer Based Exam (CBE)
2️⃣ Physical Efficiency Test (PET) & Physical Standard Test (PST)
3️⃣ Medical Examination
4️⃣ Document Verification

விண்ணப்பிக்கும் முறை

👉 அதிகாரப்பூர்வ இணையதளம்: https://ssc.gov.in

சம்பளம் (Salary)

Pay Level-3 (₹21,700 – ₹69,100)
இத்துடன் மத்திய அரசு Allowances அனைத்தும் வழங்கப்படும்.

IMPORTANT:

  • புதிய SSC portal-ல் One Time Registration (OTR) கட்டாயம்
  • பழைய SSC account செல்லாது

📅 முக்கிய தேதிகள்

  • Last Date to Apply: 31.12.2025 (11 PM)
  • Fee Payment Last Date: 01.01.2026
  • Exam Date: Feb – Apr 2026 (Expected)




Chennai Southern Railway Recruitment 2025 – Senior Resident பணிக்கான அறிவிப்பு! ₹71,800 வரை சம்பளம்

 சென்னையில் செயல்பட்டு வரும் தெற்கு ரயில்வே (Southern Railway) நிர்வாகம், 2025ஆம் ஆண்டிற்கான Senior Resident பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 5 காலியிடங்கள் உள்ளன. தகுதியும், அனுபவமும் உள்ள மருத்துவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.


📌 முக்கிய தகவல்கள்

விவரம்தகவல்
நிறுவனம்தெற்கு ரயில்வே – சென்னை
பதவிSenior Resident
தகுதிMD / MS / PG Diploma / DNB
காலியிடங்கள்5
சம்பளம்₹67,700 – ₹71,800
வேலை இடம்சென்னை, தமிழ்நாடு
விண்ணப்பம்Online
தொடக்கம்01.12.2025
கடைசி நாள்08.12.2025
தேர்வு முறைInterview
விண்ணப்பக் கட்டணம்இல்லை
கல்வித் தகுதி (Eligibility)
Senior Resident பதவிக்கு விண்ணப்பிக்க:

காலியிட விவரம்
பதவி காலியிடம்
Senior Resident 5
மொத்தம் 5
💰 சம்பள விவரம் (Salary Details)
Senior Resident – ₹67,700 முதல் ₹71,800 வரை மாதசம்பளம்
→ 7th CPC Pay Matrix அடிப்படையில்.

வயது வரம்பு
இந்த அறிவிப்பில் வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை.

📝 தேர்வு முறை (Selection Process)
நேர்முகத் தேர்வு (Interview)
→ செயல்திறன், அனுபவம், கல்வித் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு.


💻 விண்ணப்பிக்கும் முறை (How to Apply)
“ஆன்லைனில் விண்ணப்பிக்க” இணைப்பை கிளிக் செய்யவும் தேவையான விவரங்களைப் பதிவு செய்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்
விண்ணப்பக் கட்டணம் இல்லை

  Online Apply Link: இணைப்பு

👉 
Official Website 
https://sr.indianrailways.gov.in/

பாரதிய பாஷா சமிதி ' திட்டத்தின் கீழ் மாணவர்களும் , ஆசிரியர்களும் கூடுதலாக ஒரு இந்திய மொழியை கற்க வேண்டும் ; யு.ஜி.சி. வலியுறுத்தல் !

 IMG_20251203_173500

' பாரதிய பாஷா சமிதி ' திட்டத்தின் கீழ் மாணவர்களும் , ஆசிரியர்களும் கூடுதலாக ஒரு இந்திய மொழியை கற்க வேண்டும் ; அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் அமல்படுத்த வேண்டும் என யு.ஜி.சி. வலியுறுத்தல் !

Video News👇👇👇

https://youtu.be/T8h16UvZgG8?si=Fsg7ZwUN5OFjMgkn

RTE மூலம் சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களுக்கான கல்விக் கட்டணத் தொகை விடுவித்து அரசாணை வெளியீடு!

 IMG_20251203_200920


2024-2025 ஆம் கல்வியாண்டில் RTE மூலம் சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களுக்கான கல்விக் கட்டணத் தொகை விடுவித்து அரசாணை வெளியீடு!

 G.O.(MS) No.283 - RTE Amount Released - Download here

EL/ ML லீவு நாட்களில் சம்பளம் பிடிக்கப்பட்டதா? தீர்வு என்ன

 Human Resource...

Employee profile...
Regularisation & probation...
Regularisation details....
Employee ID type... Go...
Click action
ஏற்கனவே regularisation order entry இருந்தால் எதுவும் செய்ய வேண்டாம்
இல்லை எனில்

Create...
Regularisation date ( பணியில் சேர்ந்த நாள்/ 01-Jun-2006) 
Reference number ( JD/ CEO ந.க.எண்) 
Date
Probation commencement date ( default date of joining / 01-Jun-2006)

Review
Attachment இல் regularisation order copy *கட்டாயம் upload* செய்யவும்...
Submit...
Approve in next level.

Probation order entry steps..
Initiator login
e Services
Human Resource
Employee Profile
Regularisation & probation
Probation Declaration Details...
Employee ID...
Go..
Action...

Actual probation completion date...
Reference number...
Reference date...
Review...
Probation order *கட்டாயம்* attachment செய்யுங்கள்
Submit...
Approve in next level

அந்த பணியாளர்
Approved Probationer ஆக மாறி விடுவார்கள்....

இனி இவருக்கு
 EL/ML/ UEL on PA என எல்லாம் 
ஊதிய பிடித்தம் இல்லாமல் pay+ Leave salary சரியாக வரும்...

அதே போல் 
Education advance
Marriage Advance 
பட்டி தயாரிக்க முடியும்

TNPSC தொகுதி IV பணிகளில் 645 காலிப்பணியிடங்கள் கூடுதலாக அறிவிப்பு 03.12.25.

 TNPSC தொகுதி IV பணிகளில் 645 காலிப்பணியிடங்கள் கூடுதலாக அறிவிப்பு 03.12.25.

IMG-20251203-WA0033_wm

3935 கிராம நிர்வாக அலுவலர் , இளநிலை உதவியாளர் , தட்டச்சர் , சுருக்கெழுத்து தட்டச்சர் . வனக்காப்பாளர் , மற்றும் வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - தொகுதி IV பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் அன்று வெளியிடப்பட்டது . கூடுதலாக 727 காலிப்பணியிடங்களுக்கான பிற்சேர்க்கை ( 26.09.2025 ) அன்று வெளியிடப்பட்டது . தற்போது மேலும் 645 காலிப்பணியிடங்களுக்கான பிற்சேர்க்கை இன்று ( 03.12.2025 ) வெளியிடப்பட்டுள்ளது . அறிவிக்கப்பட்ட மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 5307 ஆகும்.


2025 - ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் - தேர்வு IV ( தொகுதி IV பணிகள் ) மூலம் கிராம நிர்வாக அலுவலர் , இளநிலை உதவியாளர் , தட்டச்சர் , மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளில் ( வனக்காப்பாளர் , மற்றும் வனக்காவலர் பதவிகள் நீங்கலாக ) , ஒரு நிதியாண்டிற்கு ( 2025 26 ) 5101 காலிப் நிரப்புவதற்கு அறிவிக்கை மற்றும் பிற்சேர்க்கை வெளியிடப்பட்டுள்ளன . 2022 மற்றும் 2024 ஆண்டிற்கான அறிவிக்கைகளில் வனக்காப்பாளர் , மற்றும் வனக்காவலர் பதவிகள் நீங்கலாக சராசரியாக ஒரு நிதியாண்டிற்கு நிரப்பப்பட்ட ( 3560 ) ஒப்பிடும்போது , 2025 - ம்ஆண்டில் கூடுதலாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.


TNPSC Annual Planner 2026 - Published

 Click Here to Download - TNPSC Annual Planner 2026

Note :


This planner is tentative so as to enable the candidates to prepare themselves for the examination


There may be addition or deletion to examinations mentioned in the planner.


The vacancies will be announced in the notification.


The syllabus and the scheme of examination are available on the Commission’s website www.tnpsc.gov.in, which are also subject to modification till the date of publication of notification.


Please visit the Commission's website for updates regarding notification.

Kalanjiyam app-ல் கார்த்திகை தீபம் வரையறுக்கப்பட்ட விடுப்பு தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது - Update Now

 IMG_20251203_095605_wm


Kalanjiyam app-ல் கார்த்திகை தீபம் வரையறுக்கப்பட்ட விடுப்பு டிசம்பர் 3 என்று தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது.

Update Kalanjiyam app..

https://play.google.com/store/apps/details?id=com.ifhrms.kalanjiyam

PM YASASVI - 15.12.2025 வரை நீட்டிப்பு!

 IMG_20251203_120047

PM YASASVI - 15.12.2025 வரை நீட்டிப்பு!

PM YASASVI Date Extended Proceedings - Download here

TTSE - District wise rank list - 2025.

 TTSE - District wise rank list - 2025.

IMG-20251203-WA0030_wm

School Morning Prayer Activities - 03.12.2025

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.12.2025

திருக்குறள் 

குறள் 738: 


பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் 

அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து. 


விளக்க உரை: 


நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்.


பழமொழி :

sweat today, shine tomorrow. 


இன்று சிந்தும் வியர்வை, நாளை ஒளியாக மாறும்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. உள்ளத்தின் எண்ணங்களே நம்மை உருவாக்கும். எனவே நல்லதே நினைப்பேன்.


2. நம் எண்ணங்களை உருவாக்குவது நல்ல புத்தகங்களும் நல்ல நண்பர்களுமே. எனவே இவற்றை நல்ல விதமாக தேர்ந்தெடுப்பேன்.


பொன்மொழி :


உணர்ச்சிகளுக்கு அடிமையாகும் யாரும் தனக்கு எஜமானனாக முடியாது. எனவே, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள் - பரூச் ஸ்பினோஸா


பொது அறிவு : 


01.மிகப் பழமையான கணிதம் பற்றிய தமிழ் நூல் எது?


கணக்கதிகாரம்- Kanakathikaram


02. பரத்பூர் பறவைகள் சரணாலயம் இந்தியாவில் எந்த மாநிலத்தில் உள்ளது?


ராஜஸ்தான்-Rajasthan


English words :


Bill  -  total amount you need to pay


receipt-the paper that proves you paid


தமிழ் இலக்கணம்: 


 ஓர், ஒரு எது எங்கே வரும்?

உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்களுக்கு முன்னால் ஓர் பயன்படுத்த வேண்டும் 

எ. கா: 

1. ஓர் அரசன்

2. ஓர் ஏணி

3. ஓர் ஆடு

4. ஓர் உரல்

5. ஓர் ஒட்டகம்

உயிர்மெய் எழுத்துக்களுக்கு பின்னால் வரும் சொற்களுக்கு முன்னால் ஒரு பயன் படுத்த வேண்டும் 

1. ஒரு பறவை

2. ஒரு தாமரை

3. ஒரு மண்டபம்

4. ஒரு வேடன்

5. ஒரு மலர்


அறிவியல் களஞ்சியம் :




 மூளையானது முள்ளந்தண்டு வடம் மூலம் உடலுடன் இணைக்கப்பட்டுள்ளது, முள்ளந்தண்டு நரம்புகள் மூளையிலிருந்து தூண்டுதல்கள் மற்றும் செய்திகளை அனுப்புகிறது மற்றும் பெறுகிறது.




இருப்பினும், உடலுடன் நேரடியாக இணைக்கும் பன்னிரண்டு மண்டை நரம்புகள் உள்ளன. இந்த நரம்புகள் தலை மற்றும் கழுத்தின் தசை மற்றும் உணர்திறன் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளன.




இவற்றில் ஒன்று ட்ரைஜெமினல் நரம்பு



டிசம்பர் 03



பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள்



உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையும், உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் ஐ.நா சபை உலகம் முழுவதும் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் (பன்னாட்டு ஊனமுற்றோர் நாள்) என டிசம்பர் 3ஐ அனுசரிக்கின்றது.




1981-ம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதியை பன்னாட்டு மாற்றுத்திறானாளிகள் நாளாக அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள், உலக நாடுகளால் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் என கொண்டாடப்படுகின்றது.


உலகின் பல நாடுகளிலும் பல்வேறு மட்டத்தில் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. பொதுவாக தன்னார்வலர்களினாலேயே இந்நாளில் பல முன்னெடுப்புகள் இடம்பெறுகின்றன. பல நாடுகல் அரசு நிறுவனங்கள், மற்றும் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் ஊனமுற்றோர்களின் நிலையை உயர்த்துவதற்கான செயல் திட்டங்களை தீட்டி, அவர்களின் முயற்சிகளுக்கு உறுதுணை புரிகின்றன. அத்துடன், சமுதாயத்தில் ஊனமுற்றோர்களின் நிலை உயர சிறப்புக் கருத்தரங்கங்கள், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், பிரசாரங்கள், ஊடகங்கள் வழியாக விழிப்புணர்வு விளம்பரங்கள் ஆகியவற்றின் வாயிலாக சமூகத்தில் சம உரிமைகளுடன் ஒவ்வொரு துறையிலும் ஊனமுற்றோர்கள் சிறந்து விளங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன




நீதிக்கதை



 மாறுதல் முக்கியம்



ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையாயிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர். 



ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார் ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!


அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்து கேட்டார். தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?




பையன் சொன்னான் தங்கம் என்று.



அவர் கேட்டார் பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?



பையன் சொன்னான் தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள். 




நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் . உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள். நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன். 



இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். உடனே அறிஞர் திகைத்தார்!




வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு ஆனால் நாம் தோற்பதில்லை. அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!




இன்றைய செய்திகள் - 03.12.2025



⭐வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் தடுப்பணையில் வெள்ளம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை



⭐தமிழகத்தின் தொழில்துறையை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.


தண்டையார்பேட்டையில் அரசு அச்சகப் பணியாளர்களுக்கு புதிய குடியிருப்புகள் - முதலமைச்சர் திறந்து வைத்தார்



🏀 விளையாட்டுச் செய்திகள்



🏀ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 4-ஆம் தேதி தொடங்குகிறது.


முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.




Today's Headlines



⭐The District Collector has warned the public that there is a risk of flooding at the check dam due to the increase in water inflow to the Vaigai Dam.




⭐The Tamil Nadu government has signed 158 agreements to improve Tamil Nadu's industry.



⭐ The Chief Minister inaugurates new residences for government printing staff in Thandaiyarpet.



 SPORTS NEWS 



🏀The 2nd test match between Australia and England begins on the 4th. The Australian team won the first test m

atch.




Covai women ICT_போதிமரம்





கனமழை - 7 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை இன்று ( 03.12.2025 ) அறிவிப்பு.

 கனமழை காரணமாக

 💦💦💦💦💦💦💦

* கடலூர்  ( பள்ளிகள் மட்டும் )

* கள்ளக்குறிச்சி  ( பள்ளிகள் மட்டும் )

* விழுப்புரம் ( பள்ளிகள் மட்டும் )

* காஞ்சிபுரம் 

* செங்கல்பட்டு ( பள்ளிகள் மட்டும் )

*;திருவள்ளூர்

*;சென்னை 

* புதுச்சேரி ( பள்ளிகள் மட்டும் )

ஆகிய 7 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று ( 03.12.2025 ) விடுமுறை