TNTET: எப்படி படிப்பது? எங்கு துவங்குவது?

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

 ஆசிரியர் தகுதி தேர்வு :
எப்படி படிப்பது? எங்கு துவங்குவது?

TET தேர்வு அறிவிப்பு வெளியாக உள்ள இக்கால கட்டத்தில் அனைவரின் கேள்வியும் அதுவே.

அதற்கான பதிவு பதில் இங்கே...
ஆசிரியர் தகுதி தேர்வு தயாராகும் முன் தெளிவாக பாட திட்டம் அறிதல் அவசியம்
பாட திட்டம் :
தாள் 1:
வகுப்பு 1 முதல் 8 வரை அனைத்து சமச்சீர் புத்தக பாடம் + உளவியல் = 120 + 30
தாள் 2 :
வகுப்பு 6 முதல் 10 வரை (தமிழ், அறிவியல் 12 வரை படிக்கலாம்)
தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் பட்டதாரிகள்
தமிழ் : 30
ஆங்கிலம் : 30
ச.அறிவியல்: 60
உளவியல் : 30
அறிவியல், கணித பட்டதாரிகள் :
தமிழ்: 30
ஆங்கிலம் : 30
கணிதம் : 30
அறிவியல் : 30
உளவியல் : 30
இதற்கான தயாரிப்பு எங்கு எப்படி துவங்குவது?
முதலில் நீங்கள் செய்ய வேண்டியது பாட வாரியான தோராய கால அட்டவணை
உதாரணமாக
தமிழ் வகுப்பு 6 : அரை நாள்
7 : அரை நாள்
8 : ஒரு நாள்
9 : ஒரு நாள்
10: ஒரு நாள்
மொத்தமாக 4 அல்லது 5 நாட்கள். அனைத்து பாடத்திற்கும் மொத்த கால அளவு தோராயமாக 25 முதல் 30 நாட்கள்.
இந்த 30 நாட்களும் தங்களது பங்களிப்பு உழைப்பு பொறுத்தே வெற்றி அமையும்.
மீதமுள்ள 30 நாட்களில் 2 திருப்புதலும் சில சுய தேர்வுகளும் நமக்கு நாமே செய்து கடின பகுதியை மீள்பார்வை செய்யலாம்
தமிழில் இலக்கண, செய்யுள் பகுதிகள்
கணிதம் நடைமுறை கணக்குகள்
அறிவியல் உயிரியியல் பகுதிகள்
சஅறிவியல் வரலாற்று பகுதிகள் கடினமானவை. இவற்றில் கூடுதல் பயிற்சி தேவை.
புத்தக வாசிப்பே சால சிறந்தது. சுய குறிப்புகளும் திருப்புதலில் உதவும். கூடுமான வரை மொபைல், கணினி வழி படிப்பதை தவிர்க்கவும். அவை உடல் சோர்வை உண்டாக்கும்.
மேலும் படிக்கும் போது மொபைல் பயன்பாட்டை குறைக்கவும். நேரத்தை அது உண்டுவிடும். வேண்டுமெனில் காலை மாலை அரை மணி நேரம் இணைய பகிர்வுகளை காணலாம்.
முக்கியமாக ஒரு பாடம் பாதியில் விட்டு விட்டு அடுத்த பாடம் செல்ல வேண்டாம். தொடர்ச்சியாக பாடங்களை தொடர்பு படுத்தி படியுங்கள்.
தேர்விற்கான கால இடைவெளி குறைவு . எனவே மற்ற அலுவல்களை தவிர்த்து முழு நேர பயிற்சியில் ஈடுபடுங்கள்.
கோச்சிங் செல்ல வேண்டுமா?
அது அவரவர் தனிப்பட்ட திறன் சார்ந்தது.
கோச்சிங் செல்வது அவசியமில்லை. எனினும் மற்றவரை காணும் போது தன்முனைப்பும் உத்வேகமும் உண்டாகும்.
எதிர் நிற்பது இறுதி வாய்ப்பு என நினைத்து முயலுங்கள் ....
முயலும் எந்த ஆமையும் இங்கு தோற்பதில்லை
வாழ்த்துக்களுடன் - பிரதீப் பட்டதாரி ஆசிரியர்


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

கால்நடை பல்கலை. உடன் இணைந்து தேசிய திறந்தநிலை பள்ளி 4 தொழிற்கல்வி படிப்புகள் அறிமுகம்

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

1374817

தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து 4 புதிய தொழிற்கல்வி படிப்புகளை அறிமுகம் செய்துள்ளன.


மத்திய கல்வி அமைச்சகத்தின்கீழ் இயங்கும் தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் (NIOS- National Institute of Open Schooling) பள்ளிக்கல்வியை தொலைநிலை வழியில் பயிற்றுவித்து வருகிறது. அதனுடன், திறன் மேம்பாட்டுக்கான தொழிற் படிப்புகளையும் வழங்குகிறது.


அந்தவகையில் நாடு முழுவதும் சுமார் 24 லட்சம் மாணவர்கள் இதன் வாயிலாக பலன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனம் – தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சேர்ந்து 4 தொழிற்கல்வி படிப்புகளை அறிமுகம் செய்துள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் என்ஐஒஎஸ் தலைவர் அகிலேஷ் மிஷ்ரா, பல்கலை. பொறுப்பு துணைவேந்தர் நரேந்திரபாபு சென்னையில் கையெழுத்திட்டனர்.


இதுகுறித்து என்ஐஒஎஸ் தலைவர் அகிலேஷ் மிஷ்ரா கூறியதாவது: தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனத்தில் 10-ம் வகுப்புக்கு 39 பாடங்கள் வழங்கப்படுகின்றன. இவற்றை தமிழ் உட்பட 19 மொழிகளில் மாணவர்கள் படிக்கலாம். பிளஸ் 2 வகுப்புக்கு 44 பாடங்கள் வழங்கப்படுகின்றன. இந்த பாடங்கள் இந்தி, ஆங்கிலம் உட்பட 7 மொழிகளில் வழங்கப்படுகின்றன. இந்தாண்டு இறுதிக்குள் தமிழ் மொழி கல்வி 12-ம் வகுப்பிலும் கொண்டு வரப்படும். இந்த கல்வி நிறுவனத்தின் 10 மற்றும் 12-ம் வகுப்பு சான்றிதழ்கள் அரசுப்பணி, உயர்கல்விக்கு தகுதியானவைகளாகும்.


ஆண்டுதோறும் ஏப்ரல்–மே மற்றும் அக்டோபர்–நவம்பர் என இருமுறை பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதனுடன், மாணவர்கள் விரும்பினால் இடைப்பட்ட காலத்திலும் பொதுத் தேர்வுகளை எழுதலாம். விருப்பமான பாடங்களை மாணவர்களே தேர்வு செய்ய வாய்ப்பு அளிக்கப்படுவதுடன், தாய்மொழிகளிலும் தேர்வை எழுதவும் அனுமதி வழங்கப்படுகிறது. நீட், ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு இது மிகச்சிறந்த வாய்ப்பாக அமையும். சாமானிய, எளிய பின்னணயை கொண்ட மாணவர்களும் இவற்றை பயன்படுத்தி கொள்ள வேண்டும்


தற்போது தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலை,யுடன் இணைந்து கோழி வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு தொடர்பான 2 சான்றிதழ் படிப்புகளும், உணவு மற்றும் பானம் தயாரிப்பு, பேக்கரி மற்றும் மிட்டாய் தயாரிப்பு ஆகியவை தொடர்பான டிப்ளமோ படிப்புகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்கப்படும்.


இதுதவிர உடற்கல்வி, இசை போன்ற துறைகளில் ஆர்வமுடன் இருக்கும் மாணவர்களுக்காக அவர்கள் துறைசார்ந்த பிரத்யேக படிப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அடுத்த கல்வி ஆண்டில் இவை அமலுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்வின்போது தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனத்தின் இயக்குநர் (தொழிற் கல்வி) டி.என்.கிரி, சென்னை மண்டல இயக்குநர் வி.சந்தானம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

கலை திருவிழா - வட்டார அளவிலான போட்டிகள் - தலைப்புகள் மற்றும் மதிப்பெண் முறை வெளியீடு

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)





அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் நடைபெற்று வரும் கலைத்திருவிழா வட்டார அளவிலான போட்டிகளுக்கு எட்டியுள்ளது. 


அதன் பொருட்டு வட்டார அளவிலான போட்டிகளுக்கு வகுப்பு மற்றும் போட்டிகள் வாரியாக தலைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 


மேலும் மதிப்பெண் ஒதுக்கீடு பற்றியும் கொடுக்கப்பட்டுள்ளது.

 

Click Here to Download - Kalai Thiruvizha - Topics & Mark Allotment Instructions For Block Level Competitions 2025-26 - Pdf


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கை 1 கோடி - அரசு தகவல்

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

ஒன்றிய கல்வி அமைச்சகம் வௌியிட்டுள்ள 2024-25ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறை அறிக்கையில், “ எந்தவொரு கல்வியாண்டிலும் இல்லாத அளவுக்கு 2024-25ம் ஆண்டில் நாடு முழுவதுமுள்ள மொத்த பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கை 1 கோடியை கடந்துள்ளது. 

இது கடந்த 2022-23ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 6.7 சதவீதம் அதிகரித்துள்ளது. 2023-24ல் கணினி வசதி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 57.2 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 2024-25ல் 64.7 சதவீதம் அதிகரித்துள்ளது. 


இதேபோல், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் 2023-24ல் 48.1 சதவீதமாக இருந்தது. தற்போது 2024-25ம் ஆண்டில் 48.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2024-25ல் தொடக்க பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 2.3 சதவீதமாக குறைந்துள்ளது. 


2023-24ல் நடுநிலை பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றல் விகிதம் 5.2 சதவீதம் இருந்த நிலையில், 2024-25ம் ஆண்டில் நடுநிலை பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றல் 3.5 சதவீதமாக குறைந்துள்ளது. உயர்நிலை பள்ளிகளில் 2023-24ல் 10.9 சதவீதமாக இருந்த மாணவர்கள் இடைநிற்றல் 2024-25ல் 8.2 சதவீதமாக குறைந்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TET Paper 2 - Tamil New Question Bank With Keys

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)


TNTET - Study Materials - New Collections

What's New

TET Paper 2 - Tamil New Question Bank With Keys - The Way To Success - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

செப்.10 முதல் காலாண்டுத் தேர்வு: பள்ளிக் கல்வித் துறை அட்டவணை வெளியீடு

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

1374619

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.


இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட் டுள்ள அறிவிப்பு வருமாறு: தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து விதமான பள்ளிகளிலும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 10 முதல் 26-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.


இதில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.10-ல் தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெறும். மேலும், 6 முதல் 10-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் செப்டம்பர் 15-ல் தொடங்கி 26-ம் தேதி வரை நடத்தப்படும். இதற்குரிய கால அட்டவணை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 10, 12-ம் வகுப்புக்கு காலையிலும், 11-ம் வகுப்புக்கு மதியமும் தேர்வுகள் நடைபெறும்.


6, 8-ம் வகுப்புக்கு காலையிலும், 7, 9-ம் வகுப்புக்கு மதியமும் தேர்வு நடத்தப்படும். இதைத் தொடர்ந்து 6 முதல் 12-ம் வகுப்புக்கு செப். 27 முதல் அக்.5 வரை விடுமுறை வழங்கப்படும். இந்த விடுப்பு முடிந்து பள்ளிகள் மீண்டும் அக்டோபர் 6-ம் தேதி திறக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

செப்.3 முதல் 10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

பத்தாம் வகுப்பு மாணவர் களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் செப்டம்பர் 3-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.


தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் கடந்த கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு மே 16-ம் தேதி வெளி யிடப்பட்டது. தொடர்ந்து மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் மே 19-ம் தேதி முதல் வழங் கப்பட்டன. எனினும், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டது.


இந்நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் செப்டம்பர் 3-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதையடுத்து பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும், தனித்தேர்வர்கள் தங்கள் தேர்வு மையங்களிலும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தேர்வுத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பொறியியல் படிப்புகளில் புதிய தொழில்நுட்ப பாடங்கள்: ஜப்பான், ஜெர்மன், கொரிய மொழிகள் கற்கவும் வாய்ப்பு

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

பொறி​யியல் பட்​டப் படிப்​பில் புதிய தொழில்​நுட்ப பாடங்​கள் அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்​ள​தாக​வும், மாணவர்​கள் ஜப்​பான், ஜெர்​மன், கொரிய மொழிகள் கற்​க​வும் வாய்ப்பு ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ள​தாக​வும் அண்ணா பல்​கலைக்​கழகம் அறி​வித்​துள்ளது.


இது தொடர்​பாக அண்ணா பல்​கலைக்​கழக பதி​வாளர் ஜெ.பிர​காஷ் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: அண்ணா பல்​கலைக்​கழகம், தனது இணைப்​புக் கல்​லூரி​களில் பொறி​யியல் பட்​டப்​படிப்​பில் (பிஇ, பிடெக்) புதிய தொழில்​நுட்ப பாடங்​களை அறி​முகப்​படுத்​தி​யுள்​ளது. இந்த பாடங்​கள், வளர்ந்து வரும் தேவை​கள் மற்​றும் உலகளா​விய கல்வி மாற்​றங்​களுக்கு ஏற்ப வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளன. இது, மாணவர்​களின் கல்வி மற்​றும் தொழில்​முறை வளர்ச்​சியை மேம்​படுத்​தும்.


புதிய பாடத் திட்​டத்​தின் முக்​கிய அம்​ச​மாக பொருள் மேம்​பாடு (Product development) என்​பதை குறிக்​கோளாகக் கொண்டு 5-வது செமஸ்​டரில் இருந்து டிசைன் புராஜெக்ட் என்ற பாடம் அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இதன்​மூலம் பெறப்​படும் மதிப்​பெண்​களை​யும் சேர்த்து 8.5 மற்​றும் அதற்கு மேல்சிஜிபிஏ பெற்​றவர்​களுக்கு பொறி​யியல் பட்​டத்​துடன் கூடு​தலாக சிறப்பு பட்​டம் (ஆனர்ஸ் டிகிரி) மற்​றும் பாராட்​டுச் சான்​றிதழ் வழங்​கப்​படும். இது, உலகளா​விய சவால்​களை எதிர்​கொள்ள உதவும்.


உலகளாவிய வேலைவாய்ப்பு: மேலும், மாணவர்​களின் ஆங்​கில மொழித்​திறனை மேம்​படுத்​துவதுடன், வெளி​நாட்டு மொழிப் பாட​மும் அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இதன்​படி, மாணவர்​கள் ஜப்​பான், ஜெர்​மனி, கொரிய மொழிகளில் ஏதேனும் ஒன்றை தேர்​வுசெய்து கற்​கலாம். உலகளா​விய வேலை​வாய்ப்​பு​களை மேம்​படுத்த இது துணைபுரி​யும்.


புதிய பாடத் திட்​டத்​தின்​கீழ் மாணவர்​கள் நடை​முறை பயன்​பாடு​கள் மற்​றும் தொழில்​துறை நடை​முறை​களை நன்கு அறிந்​து​கொள்​ளும் வகை​யில் இரண்டு செமஸ்​டர்​களில் தொழில்​துறை சார்ந்த பாடங்​கள் இடம்​பெறும். தற்​போது மாறி வரும் தொழில்​துறை தேவை​களுக்கு ஏற்ப, வளர்ந்து வரும் தொழில்​நுட்​பங்​கள் குறித்த பாடங்​கள் புதிய பாடத்​திட்​டத்​தில் இடம்​பெறுகின்​றன. இதன்​மூலம், மாணவர்​கள் ஏஐ எனப்​படும் செயற்கை நுண்​ணறி​வு, மெஷின் லேர்​னிங், டேட்டா சயின்ஸ்போன்ற முன்​னணி தொழில்​நுட்​பங்​களில் அறி​வு​பெறு​வர். மேலும்,உலகளா​விய சவால்​களை எதிர்​கொள்​ளும் வகை​யில் காலநிலை மாற்​றம் மற்​றும் நிலைத்​தன்மை குறித்த பாட​மும் அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது.


தொழில்​நுட்ப அறிவு மற்​றும் தொழில்​முறை நிபுணத்​து​வத்​துடன், மாணவர்​கள் வேக​மாக மாறிவரும் உலகச் சூழலுக்கு ஏற்ப தங்​களை தகவ​மைத்​துக்​கொள்​ளும் நோக்​கில் முதல் 2 செமஸ்​டர்​களில்வாழ்​வியல் திறன்​கள் குறித்த பாடங்​கள் அறி​முகப்​படுத்​தப்​படு​கின்​றன. இதன்​மூலம் மாணவர்​கள்உணர்ச்சி நுண்​ணறிவு , நேர்​மறைஎண்​ணங்​கள் போன்​றவற்​றின் முக்​கி​யத்​து​வத்தை புரிந்​து​கொள்ளமுடி​யும். மேலும், முதல்​முறை​யாக விளை​யாட்​டுத்​திறனை வளர்க்​க​ உடற்​கல்வி படிப்​பு​களும் பாடத்​திட்​டத்​தில் சேர்க்​கப்​பட்​டுள்​ளன.


மேற்​குறிப்​பிட்ட புதிய பாடங்​கள் பொறி​யியல் பட்​ட​தா​ரி​களின் வேலை​வாய்ப்பு மற்​றும் மேற்​படிப்பு வாய்ப்​பு​களை அதி​கரிப்​பதுடன் மட்​டுமின்​றி, அவர்​கள் எதிர்​கால சவால்​களை ஆற்​றலோடு எதிர்​கொள்​ள​வும்​ பெரிதும்​ உதவும்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )