100 நாள் வாசிப்புத் திறனில் பங்கேற்ற 4552 பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

   Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250630_220807

பள்ளி மாணவர்களின் தமிழ் & ஆங்கிலம் வாசித்தல் திறன் மற்றும் கணக்கு பாடத்தில் கூட்டல் , கழித்தல் , பெருக்கல் , வகுத்தல் ஆகிய திறன் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வாயிலாக தயாரித்து வழங்கப்பட்ட மதிப்பீட்டு வினாத்தாட்களைக் கொண்டு 04.04.2025 மற்றும் 16.04.2025 ஆகிய நாட்களில் முதல் சுற்றில் 4,552 பள்ளிகளில் வட்டார வள மைய ஆசிரியப் பயிற்றுநர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களைக் கொண்டு அளவீடு செய்யப்பட்டது . அந்த அளவீட்டின் விவரங்கள் பின்வருமாறு.

100 நாள் வாசிப்புத் திறனில் பங்கேற்ற  4552 பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

DEE - 100 Days Reading Challenge Award Proceedings - Download here


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பள்ளிக்கல்வியில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு விருப்பப் பணி மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு.

   Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250701_080350

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு விருப்பப் பணி மாறுதல் கலந்தாய்வு.

தொகுப்பூதிய பணியாளர்களுக்கு மனமொத்த மாறுதல் வழங்க அனுமதி வழங்கப்பட்டு 08.05.2025 அன்று சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் வாயிலாக ஆணை வழங்கப்பட்டுள்ளது . இதனைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , மாவட்ட திட்ட அலுவலகம் மற்றும் வட்டாரவளமையங்களில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு காலியாக உள்ள பணியிடங்களுக்கு கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் மாவட்டத்திற்குள் விருப்ப மாறுதல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது

Consolidated staff transfer Proceedings - Download here



Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

மாறுதல் கலந்தாய்வில் ஆசிரியர் முன்னுரிமை பட்டியலில் திருத்தம் செய்யும் வழிமுறைகள்

   Education News (கல்விச் செய்திகள்)

IMG-20250701-WA0002

மாறுதல் கலந்தாய்வில் ஆசிரியர் முன்னுரிமை பட்டியலில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டி இருப்பின் மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி திருத்தம் செய்து கொள்ளலாம் மேற்கண்ட பதிவினை ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்திட  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்...

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

School Calendar - July 2025

   Education News (கல்விச் செய்திகள்)

ஜுலை-2025 பள்ளி வேலை நாட்கள் விவரம்

IMG-20250630-WA0012_wm_wm

School Calendar - July 2025


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Teacher Recruitment: சென்னை மாநகராட்சியில் 506 ஆசிரியர் காலியிடங்கள்... வெளியான குட் நியூஸ்!!

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Teacher Recruitment| மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் நோக்குடன், 300 பட்டதாரி ஆசிரியர்களும் 206 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களும் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.

சென்னை மாநகராட்சியின் கல்வித்துறையில் சிறப்பு முன்னேற்றத்துக்காக, மாநகராட்சி பள்ளிகளில் 506 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும் என மன்றக் கூட்டத்தில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேயர் பிரியா தலைமையில், துணைமேயர் மகேஷ்குமார் மற்றும் ஆணையாளர் குமரகுருபரன் முன்னிலையில் இந்த கூட்டமானது நடைபெற்றது.
மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் நோக்குடன், 300 பட்டதாரி ஆசிரியர்களும் 206 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களும் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வரும் சூழலில், இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மன்றக் கூட்டத்தில் சென்னை நகரத்தின் வளர்ச்சி மற்றும் பாரம்பரிய மரியாதையை பிரதிபலிக்கும் விதமாக தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. டிமான்டி சாலைக்கு இசைத் துறையின் மாபெரும் சாதனையாளர் எம். எஸ். விஸ்வநாதனின் பெயர் சூட்டப்படுவதற்கும், கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனின் சிலையை புதிய இடத்திற்கு மாற்றுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.

மேலும், எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் உள்ள கன்னிமாரா நூலக நுழைவாயிலில் கார்ல் மார்க்ஸ் சிலையை வைக்கவும், திருவான்மியூரில் உள்ள பூங்காவில் இந்திரா காந்தி சிலையை நிறுவவும் அனுமதி வழங்கப்பட்டது.

தமிழ் வளர்ச்சி இயக்க வளாகத்தில் தேவநேய பாவாணர் சிலை அமைப்பதற்கும், சில முக்கிய சாலைகளின் பெயர் மாற்றங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த மாமன்றக் கூட்டத்தில் மொத்தம் 110 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ரூ.12 கோடி செலவில் மணலி மண்டலத்தில் பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண மையம் அமைக்கும் திட்டமும் இடம்பெற்றது.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

RRB-ல் Technician வேலைவாய்ப்பு 2025 – 6230+ காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

 RRB-ல் Technician வேலைவாய்ப்பு 2025 – 6230+ காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!

RRB எனப்படும் Railway Recruitment Board ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Technician பணிக்கென காலியாக உள்ள 6238 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

காலிப்பணியிடங்கள்:

Technician பணிக்கென காலியாக உள்ள 6238 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Technician Grade – I (Signal Dept) – 183 பணியிடங்கள்

Technician Grade – III – 6055 பணியிடங்கள்

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / ITI / டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

பணியி ன் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Technician Grade – I (Signal) – குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயது 33 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Technician Grade – III – குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

Technician Grade – I (Signal) – Level 5 Rs.29200/-

Technician Grade – III – Level 2 Rs.19900/-

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் Computer Based Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 28.07.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

தமிழக ரயில்வேயில்(CMRL) Supervisor வேலை 2025 – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

 Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

தமிழக ரயில்வேயில்(CMRL) Supervisor வேலை 2025 – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Supervisor பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

CMRL காலிப்பணியிடங்கள்:

Supervisor பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Supervisor கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Diploma Engineering தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

CMRL வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 33 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Supervisor ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.26,660/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

CMRL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் (Merit List) தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 02.06.2025, 03.06.2025, 04.06.2025, 07.06.2025, 08.06.2025, 09.06.2025ம் தேதி நடைபெறும் Screening Test-ல் நேரில் சென்று கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF



Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

தமிழக அரசில் ரூ.18,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

தமிழக அரசில் ரூ.18,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

தமிழ்நாட்டில் கரூர் மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கு ஆதரவு தரும்‌ (One Stop Centre) மையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Case Worker பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Case Worker பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc / MA / MSW தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.18,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 07.07.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

புதுமைப்பெண் உதவித்தொகையுடன் இலவச தொழில்பயிற்சி - பைசா செலவில்லாம கையில் வேலை உறுதி..

   Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

தொழில்திறனை மேம்படுத்தும் நோக்குடன் செயல்படுகிறது. 8 அல்லது 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்களும், தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஆதார் நகலுடன் நேரில் விண்ணப்பிக்கலாம். பொறியியல் சார்ந்த மற்றும் சாராத துறைகளிலும் பயிற்சி வழங்கப்படும்.

தொழில்முனை திறன்களை வளர்க்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சித் துறையின் கீழ் செயல்படும் வடசென்னை மற்றும் கிண்டி அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில், தொழில்நுட்பக் கல்வியில் பயிற்சி பெற விரும்பும் இளைஞர்களுக்கும், மகளிருக்கும் புதிய சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வடசென்னை தொழிற்பயிற்சி நிலையத்தில், இரண்டாண்டு, ஓராண்டு மற்றும் ஆறு மாதத் தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பிளம்பர், வெல்டர், வயர்மேன் போன்ற தொழில்களில் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அதே சமயம், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, டிப்ளமோ படித்தவர்களும் தங்களின் கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் வந்து சேர முடியும். மேலும், டாடா டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்து தொழில் 4.0 தொழில்நுட்பத்தில் சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

கிண்டி அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையம் மகளிரின் தொழில்திறனை மேம்படுத்தும் நோக்குடன் செயல்படுகிறது. 8 அல்லது 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்களும், தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஆதார் நகலுடன் நேரில் விண்ணப்பிக்கலாம். பொறியியல் சார்ந்த மற்றும் சாராத துறைகளிலும் பயிற்சி வழங்கப்படும்.

இந்த பயிற்சிகள் மாணவிகளுக்கு பல்வேறு அரசுச் சலுகைகளுடன் வழங்கப்படுகின்றன. கட்டணமில்லாப் பயிற்சி, இலவசப் பாடப்புத்தகங்கள், சீருடை, வரைபடக் கருவிகள், இலவசப் பேருந்து மற்றும் ரயில் பயண அட்டைகள், மாத உதவித்தொகை ரூ.750 மற்றும் தகுதியுள்ள மகளிருக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ரூ.1,000 வழங்கப்படும். மேலும் விடுதி வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க விரும்புவோர், வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்று துணை இயக்குநர் அல்லது முதல்வரைத் தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு: 94990 55653 / 81446 22567. கிண்டி மகளிர் தொழிற்பயிற்சி நிலையம் தொடர்பாக 044-22510001 அல்லது 94990 55651 எனும் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

CBSE அல்லது ICSE? உங்கள் குழந்தைக்கு எது சிறந்தது? வேறுபாடுகள் என்ன? அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

  Education News (கல்விச் செய்திகள்)

CBSE vs ICSE: ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தை சிறந்த பள்ளிகளில் படிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்தியாவில், ஸ்டேட் போர்டு, CBSE மற்றும் ICSE உள்ளது. இதனிடையே எந்த வாரியம் சிறந்தது என்பதை பற்றி தற்போது பார்ப்போம்.

பொதுவாகவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவார்கள். என்ன படிக்க வைப்பது என்று. இதை யாராலும் இல்லை என்று மறுக்க முடியாது. அதிலும், குறிப்பாக பள்ளி சேர்க்கை குறித்த கேள்வி எழும்போது, அந்தக் கவலை பெற்றோர்களுக்கு சற்று அதிகமாகவே உள்ளது. ஏனென்றால், காலம் தற்போது நிறைய மாறிவிட்டது. அரசு அல்லது அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் தயங்குகின்றனர்.

இது வருத்தத்திற்குரிய விஷயம். மேலும், பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை தமிழ் வழியில் படிப்பதற்கு சேர்ப்பதை விட, ஆங்கில வழியில் படிப்பதையே அதிகம் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், பல பெற்றோருக்கு CBSE மற்றும் ICSE இடையே எந்த வாரியம் சிறந்தது, தங்கள் குழந்தைகளை எங்கு சேர்க்க வேண்டும் என்பது தெளிவாக புரியவில்லை.

CBSE மற்றும் ICSE இடையே எந்த வாரியம் சிறந்தது என்பதை பற்றி தற்போது பார்ப்போம். ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தை சிறந்த பள்ளிகளில் படிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்தியாவில், ஸ்டேட் போர்டு, CBSE மற்றும் ICSE உள்ளது.

ஸ்டேட் போர்டு: இந்த வாரியத்தில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பயில்கின்றனர். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு குறிப்பிட்ட வாரியம் உள்ளது. அந்த வாரியத்தில், மாநிலத்தின் சொந்த மொழியுடன் கூடுதலாக ஆங்கிலம் உள்ளிட்ட கல்வி வழங்கப்படுகிறது.

CBSE: இந்த வாரியம் நாடு முழுவதும் பரவலாக உள்ளது. இது ஒரு ஆங்கில வழி பள்ளி வாரியம். இந்த வாரியத்தில் படிக்கும் மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் அதிக வெற்றியைப் பெறுகிறார்கள் என்று நம்பப்படுகிறது.

ICSE: இந்த வாரியம் ஆங்கில மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த வாரியத்தில் படிக்கும் மாணவர்களிடையே ஆங்கில அறிவு மிக அதிகமாக உள்ளது. ஆனால், உங்கள் குழந்தைகளின் ஆர்வத்திற்கு ஏற்ப வாரியத்தைத் தேர்ந்தெடுப்பது அவசியம்

எந்தவொரு போட்டித் தேர்விற்கும் செல்லும் மாணவர்கள் CBSE வாரிய புத்தகங்களின் உதவியைப் பெற வேண்டும். எதிர்காலத்தில் எந்தவொரு குழந்தையும் வெளிநாட்டில் படிக்க விரும்பினால், ICSE வாரியம் அவர்களுக்கு சிறந்த தேர்வாகும். எனவே குழந்தைகளின் எதிர்காலத் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப வாரியத்தைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

வெளியான முக்கிய அறிவிப்பு: ஜூலை மாதத்தில் இத்தனை நாட்கள் பள்ளி விடுமுறையா?

  Education News (கல்விச் செய்திகள்)

இரண்டு நாட்களில் ஜூன் மாதம் முடிந்துவிட்டு ஜூலை மாதம் தொடங்க உள்ளது. ஜூன் மாதத்தில் சனி, ஞாயிறு கிழமைகளை தவிர ஒருநாள் கூட விடுமுறை இல்லாமல் பள்ளிக்கு செல்ல நேரிட்டது, அதுபோல் ஜூலை மாதம் இருக்குமா, எத்தனை நாட்கள் விடுமுறை வருகிறது என பார்க்கலாம்.

 ஜூலை மாதத்தில் அரசு பண்டிகை விடுமுறை என்று பார்த்தால் மொஹரம் பண்டிகை மட்டுமே உள்ளது. இப்பண்டிகையும் ஜூலை 6-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால் விடுமுறை இல்லாமல் பள்ளிக்கு செல்வதால் மாணவர்களை கவலையில் உள்ளனர்.

ஹிஜ்ரி 1446 துல்ஹஜ் பிறை 29 ஜூன் 26 (வியாழக்கிழமை) அன்று மாலை தென்பட்டதால் ஜூன் 27., (வெள்ளிக்கிழமை) நேற்று மொகரம் மாத முதல் பிறை என்றும் நிச்சயிக்க பட்டிருக்கிறது. ஜூலை 6 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆஷுரா தினம் எனப்படும் மொகரம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது என்றார்
கோடை விடுமுறை முடிந்து ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் சனி, ஞாயிறு தவிர்த்து கூடுதல் நாட்கள் விடுமுறை இல்லாதது பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர் என அனைவரையும் சோகம் அடையச் செய்தது.
இதற்கிடைய, பள்ளிக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல், மாணவர்கள் விடுப்பு எடுத்தால், பெற்றோர் மறுநாள் அழைத்து வந்து காரணத்தை தெரிவிக்க வேண்டும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.



Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

School Education - Encouraging students to drink water in school- Promoting water consumption- Benefits of Drinking Water During School Hours- Instructions Published

  Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250628_113158

School Education - Encouraging students to drink water in school- Promoting water consumption- Benefits of Drinking Water During School Hours- Instructions - Regarding

பள்ளிகளில் குடிநீர் குடிப்பதற்கு மாணவர்களை ஊக்குவித்தல் மற்றும் பள்ளி வேலை நேரங்களில் குடிநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு!!!

கோடை வெப்பநிலை அதிகரித்து வரும் கோடை வெப்பநிலை மத்தியில் தண்ணீர் குடிக்க மாணவர்களுக்கு 5 நிமிட இடைவெளி வழங்க மாணவர்களுக்கு நினைவூட்டுவதற்காக பள்ளி நேரங்களில் பள்ளி நேரங்களில் ஒரு "நீர் - பெல்" முறையைத் தொடங்க மாண்புமிகு பள்ளி கல்வி அமைச்சர் விரும்புகிறார்.  நீரிழப்பு மாணவர்களின் அறிவாற்றல் செயல்பாடு, கவனம் மற்றும் கல்வி செயல்திறனை கணிசமாக பாதிக்கும்.  பள்ளிகளில் நீர் நுகர்வுக்கு மாணவர்களை ஊக்குவிப்பது பல நன்மைகளைத் தரும்.  


மேற்கூறிய உண்மைகளின் பார்வையில், எங்கள் மாண்புமிகு பள்ளி கல்வி அமைச்சரின் விருப்பப்படி, மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஒரு படியாக வாட்டர் பெல் என்ற பெயரில் உடனடியாக பின்வரும் நடவடிக்கைத் திட்டத்தை நிறைவேற்றுமாறு அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து தலைமை கல்வி அதிகாரிகளும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

DSE - Students Drinking of Water in School - Instructions - Download here


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

கணினி பயிற்றுநர் நிலை 1 பணியிடங்களை தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி சிறப்பு விதிகளில் Category 3ல் சேர்த்து அரசாணை வெளியீடு - DSE செயல்முறைகள்!

  Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250628_184248

கணினி பயிற்றுநர் நிலை 1 பணியிடங்களை தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி சிறப்பு விதிகளில் Category 3ல் சேர்த்து அரசாணை வெளியீடு - DSE செயல்முறைகள்!

👇👇👇

DSE Proceedings - Download here



Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )