26.08.25 அன்று இயக்குனர் தலைமையில் நடைபெற்ற இணைய வழி கூட்டத்தில் கூறப்பட்ட தகவல்கள்- 26.08.25 அன்று இயக்

 

26.08.25%20%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA_20250827_121354_0000


26.08.25 அன்று இணை இயக்குனர் தலைமையில் நடைபெற்ற இணைய வழி கூட்டத்தில் கூறப்பட்ட தகவல்கள்- 

1.  THIRAN செயல்பாடுகள் அனைத்தையும் HM மேற்பார்வை செய்ய வேண்டும்.

2. THIRAN வகுப்பில் ஆசிரியர் - THB பயன்பாட்டை HM உறுதி செய்ய வேண்டும்.

3. THIRAN test முறையாக நடைபெற வேண்டும். தேர்வு முடிந்ததும் செப்டம்பர் முதல் வாரம் EMIS-ல் entry  போட வேண்டும். 

4. வகுப்புகளை கடத்துவது அல்ல. மாணவர்களை அந்தந்த வகுப்பிற்கான  அடிப்படை திறன்களை அடைய வைத்து அனுப்ப வேண்டும் என்பதே நமது ultimate goal.

5. Knowledge based questions மட்டுமல்லாமல் application based, understanding based⁠, MOT, HOT questions கேட்கப்படுவதால் அது சார்ந்த  வினாக்கள் தொடர் பயிற்சி மாணவர்களுக்கு வழங்க வேண்டும். SLAS, NAS, NMMS  தேர்வுகளில் இம்மாதிரியான வினாக்களே கேட்கப்படுகின்றன.

6.SLAS low performance பள்ளிகள் காரணம் சொல்வதை விடுத்து விட்டு அதை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

7. 6 முதல் 8 வகுப்பு வரையிலான focused learners அனைவரின் விவரங்களும் HM கையில் வைத்திருக்க வேண்டும். இம்மாணவர்கள் எத்தனை LO அடைந்துள்ளனர், reading & writing skill performance improvements  பற்றி weekly once ஆசிரியர்களிடம் HM review செய்ய வேண்டும்.

8. காலாண்டு தேர்விற்கு THIRAN மாணவர்களுக்கு Tam, Eng, Maths பாடங்களுக்கு வினாத்தாள் 

அனுப்பப்படும். 

9. THIRAN வகுப்பு பற்றி பெற்றோர்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.

10. ⁠ மாணவர்களின் ஒவ்வொரு செயல்பாடுகளுக்கும் star போன்ற reward வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும். 

11. ⁠ மாணவர்கள் முன் slow learners, வாசிக்க தெரியாது போன்ற negative words பயன்படுத்தக் கூடாது. Positive approach, appreciation வழங்க வேண்டும்.

12. ⁠Manarkeni app videos,

Kalvi TV videos வகுப்பறையில் பயன்படுத்த வேண்டும். 

13. வாசிப்பு இயக்கம் புத்தகம் வாசித்தல், 6-8 தேன் சிட்டு போன்றவற்றை மாணவர்களை கட்டாயம் படிக்க வைக்க வேண்டும்.

14. ⁠ English 7 பாடவேளையில் 1 பாடவேளை language lab பயன்படுத்த வேண்டும். Focused learners முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

15. ⁠ கனவு ஆசிரியர் புத்தகத்தை அனைத்து ஆசிரியர்களும் வாசிக்க வேண்டும்.

16. ⁠ Children's Day special- மாணவர்களின் படைப்புகளை thenchittu@magzine.com website-ல்  share செய்யலாம்.


   Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

THIRAN - கூடுதல் காலமும் தொடர் முயற்சிகளும் செயல்பாடுகளும் தேவை!

   THIRAN%20-%201



6 - 9 வகுப்புகளில் அடிப்படைக் கற்றல் அடைவு பெறாத மாணவர்களுக்கு திறன் என்ற பெயரிலான தனிக்கவனப் பயிற்சி வரவேற்கத்தக்கது. ஆனால், பள்ளிகளில் இருக்கின்ற நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக கண்டறியப்பட்ட அனைத்துப் பிள்ளைகளையும் அடிப்படைக் கற்றல் அடைவு பெற வைத்தல் என்ற இலக்கை ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அனைத்துப் பள்ளிகளிலும் அடைந்திருக்கிறோம் என்று சொல்ல முடியவில்லை.


காரணங்களை ஆய்வு செய்ய வேண்டியது அவசியமானது.


1. அனைத்துப் பள்ளிகளிலும் (குறிப்பாக நடுநிலைப் பள்ளிகளில்) அடிப்படைக் கற்றல் அடைவு பெறாத பிள்ளைகளுக்குத் தனி வகுப்புக் கற்பித்தலை முறையாக செயல்படுத்துவதற்கு போதுமான ஆசிரியர்கள் இல்லாத நிலை, வகுப்பறை இல்லாத நிலை உள்ளன.



2. பல நடுநிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லாத நிலையும் தற்காலிக ஆசிரியர்கள் கற்பிக்கும் நிலையும் உள்ளன. 


3. பெரும்பாலான நடுநிலைப் பள்ளிகளில் 6 - 8 வகுப்புகளுக்கு தலைமை ஆசிரியர் மற்றும் இரண்டு பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுவதால்  அடிப்பட்டைக் கற்றலுக்கென்று தனி வகுப்புகளை நடத்துவதில் தடைகள் உள்ளன. 


4. அடிப்படைக் கற்றல் அடைவு பெறாத மாணவர்கள் பலர் பள்ளி வருகை என்பதும் முழுமையாக இருப்பதில்லை. இந்த மாதமும் விதிவிலக்கல்ல. அடிக்கடி பள்ளிக்கு வராத பிள்ளைகளே  கற்றல் அடைவு பெறாதவர்களாக உள்ளனர். 


5. சிறப்பு கவனத்திற்குரிய குழந்தைகளுக்கு (CWSN) அடிப்படைக் கற்றல் அடைவுக்கென்று தனியான கற்பித்தல் செயல்பாடுகளை மேற்கொள்வது அவசியமானது.


6. ஆகஸ்ட் மாதத்தில் கலைத் திருவிழா மற்றும் இன்ன பிற கல்வி சாரா செயல்பாடுகளையும் வழக்கம் போல நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆசிரியர்கள் எப்போதும் போல பயிற்சிக்கும் அழைக்கப்பட்டார்கள். சீருடைகள் எடுத்து வருதல்,  வங்கிக்குச் செல்லுதல் போன்ற பணிகளுக்கு ஆசிரியர்கள்  செல்ல வேண்டியதையும் தவிர்க்க முடியவில்லை


7. மற்ற பிள்ளைகளுக்கான வழக்கமான கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளையும் இருக்கின்ற ஆசிரியர்களே கவனித்துக் கொண்டு ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளில் சவாரி செய்ய வேண்டியது போன்ற கட்டாயம் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. 

8. வழக்கமான கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் முழுமையாக நடைபெறாததால் பெற்றோர்கள் 


கேள்வி கேட்பதையும் ஆசிரியர்கள் சந்திக்க வேண்டியுள்ளது.


பல தடைகளையும் கடந்து குழந்தைகளுக்கு அடிப்படைக் கற்றல் அடைவை எப்படியாவது சாத்தியமாக வேண்டும் என்ற நோக்கத்தில் ஆசிரியர்களின் கற்பித்தல் செயல்பாடுகள் மூன்று வாரங்களாக பள்ளிகளில் நடந்துள்ளன. ஒரு சில குழந்தைகள் கற்றல் அடைவில் முன்னேற்றம் பெற்றுள்ளனர். ஆனால் ஆகஸ்ட் மாதத்திற்குள் திறன் செயல்பாட்டின் இலக்கை முழுமையாக எல்லாப் பிள்ளைகளையும் அடையச் செய்துவிட்டோம் என்று சொல்வது நம்மை மட்டுமல்ல குழந்தைகளையும் ஏமாற்றுவதாக அமைந்துவிடும்.


அடிப்படைக் கற்றல் அடைவுப் பயிற்சி கூடுதல் காலம் தேவைப்படும் தொடர் பயிற்சியாக அமைய வேண்டும் என்றே தோன்றுகிறது. பிற பிள்ளைகளுக்கான வழக்கமான கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளும் பாதிக்கப்படாத வகையில் அடிப்படைக் கற்றல் அடைவுக்கான சிறப்பு பயிற்சி அமைய வேண்டும். 

மேலும், தொடக்கக் கல்வியில் சரிபாதிக் குழந்தைகள் கற்றல் பின்னடைவுக்கு ஆளாவது இனிமேலும் தொடராமல் தடுப்பதற்கு உரிய முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். தொடக்கக் கல்வியே ஒரு குழந்தையின் அறிவாற்றல் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைகிறது. எனவே 

அனைத்துத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும்  தலைமை ஆசிரியர் மற்றும் நிரந்தர ஆசிரியர்கள் என்ற நிலையை விரைவில் உருவாக்குவதும்  அவசியமானது. 


கல்வி உரிமைச் சட்டம் 2009, அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச பள்ளி முன் பருவக் கல்வியை உறுதி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளது. ஆனால் 15 ஆண்டுகள் கடந்த பிறகும் சட்டத்தின் முதன்மையான விதிமுறை செயல்படுத்தப்படவில்லை.

பள்ளி முன் பருவக் கல்வி வழங்கப்படாத ஏழைக் குழந்தைகளே தொடக்கக் கல்வியில் கற்றல் அடைவில் பின்னடைவுக்கு ஆளாகின்றனர். வசதியான குழந்தைகளுக்கும் ஏழைக் குழந்தைகளுக்கும் இடையிலான கல்வி வாய்ப்பை பெறுவதில் சமமான வாய்ப்பு இல்லாத நிலை தொடக்கக் கல்வி நிலையிலேயே உருவாகியுள்ளது.


1997 வரை நடைமுறையில் இருந்த 20 குழந்தைகளுக்கு ஓர் ஆசிரியர் நியமனம் என்பதை மீண்டும் பின்பற்ற வேண்டும். 


100 குழந்தைகள் மேல் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் முழு நேரத் தலைமை ஆசிரியர் நியமிக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் இல்லாமல் தொடக்க கல்வியில் ஏற்பட்டு வரும் பின்னடைவை சரி செய்ய முடியாது.


- சு.மூர்த்தி கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு



 Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

ICT Nodal Teacher - பள்ளிக்கு ஒரு ஆசிரியரை நியமனம் செய்தல் - EMIS Upload - Step by Step Procedure

    ICT Nodal Teacher ஐ மேற்கண்ட pdfல் உள்ள வழிமுறைகளை பின்பற்றி உடனடியாக EMISல் சார்ந்த பள்ளியின் ஆசிரியர் பயிற்றுநர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்து உடனடியாக update செய்ய தகவல் தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


Click Here to Download - ICT Nodal Teacher - EMIS Upload - Step by Step Procedure  - Pdf



Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

6-8 வகுப்புகளுக்கான முதல் பருவ வினாத்தாள் அச்சிடுதல் தொடர்பாக - DEE Proceedings

 

தொடக்கக்கல்வி இயக்ககத்தின்கீழ் செயல்படும் அரசு / அரசு நிதியுதவிபெறும் நடுநிலைப் பள்ளிகளில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான பருவம் – 1 (TERM – I} தேர்வுகள் ஆகஸ்ட் மாதத்தில் வருகின்றது. காலாண்டுத் தேர்வுகளுக்கு சரியான நேரத்தில் தயாராக, வினாத்தாள்களை அச்சிடுவதற்கு தேவையான காகிதம் மற்றும் டோனர் / மை வாங்குவதற்கு பள்ளிகளுக்கு நிதி விடுவிக்கப்படுகிறது. 


Click Here to Download - DEE - 6,7,8 1st Term Question Paper Fund - Director Proceedings - Pdf


   Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்களுக்கு கூடுதலான தற்செயல் விடுப்பு - Teachers List - Director Proceedings

    தமிழக ஆசிரியர் கூட்டணி - மாநில பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆசிரியர்களின் பிரச்சினைக்காக அலுவலகம் செல்லுவதற்கு கூடுதலான தற்செயல் விடுப்பு 


வட்டாரப் பொறுப்பாளர்கள் மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் இயக்கம் சார்ந்து செல்வதற்கு காலை மாலை ஒரு மணி நேரம் அல்லது 2 மணி நேரம் முன் அனுமதி வழங்குதல் சார்ந்து தொடக்க கல்வி இயக்குனரின் செயல்முறைகள்


Click Here to Download - DEE - Special CL Association Members  - Director Proceedings - Pdf




Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Quartely Exam 2025 - Time Table Published - Director Proceedings

 பள்ளிக் கல்வி -2025-2026 ஆம் கல்வியாண்டு -6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு கால அட்டவணை அனுப்புதல் - சார்ந்து.


அரசு/அரசு உதவி பெறும்/ தனியார் பள்ளிகளுக்கு 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான காலாண்டுத் தேர்வு கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. அனைத்து வகை உயர்நிலை /மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு இத்தேர்வு கால அட்டவணை குறித்த விவரத்தினை தெரிவிக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



Click Here to Download - DSE - Quartely Exam 2025 - Time Table - Director Proceedings - Pdf


Income Tax - ஆகஸ்ட் 2025 மாத வருமானவரி பிடித்தம் அறிய - Step by Step Procedure

 ஆகஸ்ட் 2025 மாத வருமானவரி பிடித்தம் பற்றி தெரிந்து கொள்வதற்கு


Click Here - Kalanjiyam Website - Direct Link


                    *KALANJIYAM WEBSITE*

                      ⬇️

                 *LOGIN*

                       ⬇️

             *e service (HR & pin)*

                       ⬇️

           *EMPLOYEE SELF SERVICE*

                        ⬇️

                   *REPORT*

                        ⬇️

*INCOME TAX PROJECTIONS  REPORT SELF SERVICE 

& CLICK ACTION BUTTON* 

                        ⬇️

*Write month name* (Aug-2025) & 

*CLICK Continue button*

                         ⬇️

               *CLICK  Submit*

                         ⬇️

        (new screen)  *OK* 

                          ⬇️

*CLICK MONITORING REQUEST STATUS*

                          ⬇️

        *CLICK VIEW OUTPUT* 

                          ⬇️

                    *DOWNLOAD*

SMC உறுப்பினர்களுக்கு பள்ளிக்கல்வித் துறையின் செய்தி

 வணக்கம்!


SMC உறுப்பினர்களுக்கு பள்ளிக்கல்வித் துறையின் வாழ்த்துகள். 


SMC-யின் அடுத்த கூட்டம் வரும் 29.08.2025 வெள்ளிக்கிழமை, மாலை 3.00 - 4.30 மணி வரை நடக்கவிருக்கிறது. உங்கள் பள்ளியின் தலைமையாசிரியரை தொடர்புகொண்டு பேசி, இந்தக் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுங்கள். 


குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு, ஆரோக்கியம் போன்றவற்றை உறுதிசெய்வது SMC குழுவில் உள்ள நம் அனைவரின் பொறுப்பு. 


இந்தக் கூட்டத்தில், மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும்  திறன் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான விசயங்களில் விழிப்புணர்வு  வழங்கப்படவுள்ளது. 


இந்தக் கூட்டத்தில் இயற்றப்படும் புதிய தீர்மானங்களையும், கடந்த ஆண்டுகளில்  போட்டு இன்னும் பூர்த்தியாகாத தேவைகளையும் , மீண்டும் புதிய தீர்மானமாகவே இப்போது வந்திருக்கும் SMC புதிய பெற்றோர் செயலியில் பதிவிட வேண்டும்.


SMC கூட்டத்தில் கலந்துகொள்ள அனைவரும் வருக!


📌கூட்டத்திற்கான வழிகாட்டுதல்கள் & காணொளிகள்:

https://bit.ly/SMCSupportvideos


📌 ஊக்கமூட்டும் காணொளி:

https://youtu.be/qsB-DSC57j4


📌செயலி லிங்க் : 

https://bit.ly/TNSEDParentsApp


தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை (TNSED)


TTSE - தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வுக்கான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

 IMG_20250827_000804

தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வுக்கான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

DGE - TTSE Instructions.pdf

Download here

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்

 IMG_20250826_090642

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் . 3.05 லட்சம் மாணவர்கள் இதனால் பயன் பெறவுள்ளனர்

காலாண்டுத் தேர்வு 2025 அட்டவணை - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறை

 IMG_20250827_000216

காலாண்டுத் தேர்வு 2025 அட்டவணை - தமிழ்நாடு பள்ளிக்கல்வி மற்றும் தனியார் பள்ளி இயக்குநர்களின் செயல்முறைகள் 

Quartely Exam- 2025- Time Table.pdf

Download here

ஆற்றல் மிகு ஆசிரியர் விருதுகள் 2025 " - தேர்வாகியுள்ள ஆசிரியர்களுக்கு இன்று விருது வழங்கும் விழா...

 ஆற்றல் மிகு ஆசிரியர் விருதுகள் 2025 " - இன்று விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெறுகிறது.


 NEWS 7 தொலைக்காட்சி மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் இணைந்து வழங்கும் " ஆற்றல் மிகு ஆசிரியர் விருதுகள் 2025 " விருதுக்கு தமிழகம் முழுவதும் இருந்து தேர்வாகியுள்ள 250 ஆசிரியர்களுக்கு இன்று ( 26.8.2025 ) விருதுகள் வழங்கி கௌரவிக்கும் விழா சென்னையில் உள்ள MCC பள்ளியில் மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. 


விருதுகளை வழங்க சிறப்பு விருந்தினராக மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார். 


விருது பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும் கல்விச்செய்தியின் வாழ்த்துகள் 💐


Selected Teachers List - Download here



 ✨ஆசிரியர்கள் பட்டியல் வெளியீடு.⭐



ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இலவச பாடநூல் தொகுப்பை வெளியிட்டது ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி

 தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், 2025-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (தாள்-1 மற்றும் தாள்-2) வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.


இந்நிலையில், இத்தேர்வுக்கான இலவச பாடநூல் தொகுப்பை ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி வெளியிட்டுள்ளது. இந்தப் பாடநூல் தொகுப்புகளை வாட்ஸ்அப் வழியாக முன்பதிவு செய்து, இலவசமாக பெறலாம் எனவும் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி


சென்னையில் இயங்கி வரும் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி, கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய- மாநில அரசுகள் நடத்தும் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் சிறப்பான முறையில் பயிற்சியளித்து வரும் முன்னணி பயிற்சி நிறுவனம் ஆகும்


இந்த அகாடமியில் கடந்த ஆண்டுகளில் படித்தவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் வெற்றிபெற்று பல ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.



ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பாடநூல்



ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 2025-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் (தாள்-1 மற்றும் தாள்-2) தேர்வுகள் 15.11.2025 அன்று தாள்-1 மற்றும் 16.11.2025 அன்று தாள்-2 ம் நடைபெற உள்ளது.


இந்த தேர்வுகளை எழுதும் ஆசிரியர்களின் வெற்றிக்கு உதவும் வகையில், புதிய பாடத்திட்டத்தின்படி சமச்சீர் பாடப்புத்தகங்களை 'ஆசிரியர் தகுதித் தேர்வு நோக்கில்' தொகுத்து, இந்த 'ஆசிரியர் தகுதித் தேர்வு பாடநூல்' தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பாட நூல்கள் அனைத்தும் இ-புத்தகங் களாக வாட்ஸ்அப் வழியாக அனுப்பி வைக்கப்படும். இந்த பாடநூல்களை படித்தாலே, ஆசிரியர் தகுதித் தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம்.


முன்பதிவுக்கு... இந்த ஆசிரியர் தகுதித் தேர்வு (தாள்-1 மற்றும் தாள்-2) ஆகிய இரண்டு தாள்களுக்கான பாட நூல்களை இலவசமாக பெற 'TNTET PAPER-I,II FREE TEXT BOOKS' என்று டைப் செய்து, தங்களது முழு முகவரியுடன் 9176055542 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளவேண்டும்


மேலும், ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நேரடி மற்றும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளில் சேர விரும்புபவர்கள் 9176055576, 9176055578 ஆகிய கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி அறிவித்துள்ளது.

இலக்​கி​யத் திறனறி தேர்வு: செப்​டம்பர் 4 வரை விண்ணப்பிக்கலாம்

 தேர்​வுத்​துறை இயக்​குநரகம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: தமிழ் மொழி இலக்​கி​யத் திறனை மேம்​படுத்​திக் கொள்ளும் வகையில் அரசு அங்கீ​காரம்


பெற்ற அனைத்து வித​மான பள்​ளி​களி​லும் (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உட்​பட) பிளஸ் 1 பயிலும் மாணவர்​களுக்கு தமிழ் மொழி இலக்​கிய திறனறித் தேர்வு நடத்​தப்​படு​கிறது. இந்த தேர்​வில் 1,500 மாணவர்​கள் தேர்வு செய்​யப்​பட்டு மாதந்​தோறும் ரூ.1,500 வீதம் 2 ஆண்​டு​களுக்கு ஊக்​கத் தொகை வழங்​கப்​படும்.


நடப்​பாண்​டுக்​கான திற​னறித் தேர்வு அக்​டோபர் 11-ல் நடை​பெறவுள்​ளது. இதற்கான விண்​ணப்​பங்​களை www.dge.tn.gov.in என்ற வலைத்​தளத்தில் பதி​விறக்​கம் செய்து கொள்​ளலாம். பூர்த்தி செய்த விண்​ணப்​பங்​களை தேர்​வுக் கட்​ட​ணம் ரூ.50 சேர்த்து சம்​பந்​தப்​பட்ட பள்​ளித் தலைமை ஆசிரியரிடம் செப்​டம்​பர் 4-ம் தேதிக்​குள் ஒப்​படைக்க வேண்​டும்.

10-ம் வகுப்பு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு

 அரசு தேர்​வு​கள் இயக்​குநர் சசிகலா நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: கடந்த ஜூலை மாதம் நடந்த 10-ம் வகுப்பு துணைத் தேர்வை எழுதி மறுகூட்​டல் மற்​றும் மறும​திப்​பீடு கோரி மாணவர்​கள் விண்​ணப்​பித்​திருந்​தனர். அவர்​களில் மதிப்​பெண் மாற்​றம் உள்​ளவர்​களின் பதிவெண்​கள் அடங்​கிய பட்​டியல் www.dge.tn.gov.in என்ற இணை​யளத்​தில் 26-ம் தேதி (இன்​று) பிற்​பகல் வெளியிடப்​படு​கிறது.


பட்​டியலில் இடம் ​பெறாத பதிவெண்​களுக்​கான விடைத்​தாள்​களில் எவ்​வித மதிப்​பெண் மாற்​ற​மும் இல்​லை. மறுகூட்​டல் அல்​லது மறுப்​பீட்​டில் மதிப்​பெண் மாற்​றம் உள்ள தேர்​வர்​கள் மட்​டும் இன்று பிற்​பகல் முதல் மேற்​குறிப்​பிட்ட இணை​யதளத்​தில் தற்​காலிக மதிப்​பெண் சான்​றிதழை பதி​விறக்​கம் செய்யலாம்.