பள்ளிக் கல்வித்துறை நடத்தும் குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டம்

கலை நிகழ்ச்சிகள் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறுகிறது.

பயிற்சி வகுப்பு மே 1- 25ம் தேதி சதுரங்கம் (மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை).

பள்ளிக்கல்வித்துறை, பொது நூலக இயக்கம், அண்ணா நூற்றாண்டு நூலகம் சார்பில் கோடை கொண்டாட்டம் 2025 நடைபெறுகிறது.


அதன்படி, அண்ணா நூற்றாண்டு நூலக குழந்தைகள் பிரிவில் விடுமுறைக்கால திருவிழா நடைபெறுகிறது. நாளை முதல் தொடங்கும் இத்திருவிழாவில் 4 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.


அதன்படி, மே-1 நாளை சென்னை ஸ்டோரி டெல்லர்ஸ் மற்றும் சக்திவேல் சார்பில் பாரம்பரிய விளையாட்டுகள், கதை செல்லுதல் மற்றும் மாயாஜாலக் காட்சி நடைபெறுகிறது.


மே 2- இந்திரதானு வால்டோர்ஃப் பள்ளியில் கலையின் மூலம் கதை செல்லுதல் நடைபெறுகிறது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) ) 

பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிக்கப்படுமா? பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேட்டி

   Education News (கல்விச் செய்திகள்)

.com/


பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிக்கப்படுமா? பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேட்டி

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) ) 

கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது - Proceedings

   Education News (கல்விச் செய்திகள்)

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி , மெட்ரிக் பள்ளிகள் ( உயர்நிலை , மேல்நிலை ) சுயநிதி ( உயர்நிலை , மேல்நிலை ) பள்ளிகளுக்கு மே 1 முதல் ஜீன் 1 வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது . கோடை விடுமுறை நாட்களில் எந்த பள்ளிகளும் சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்தக்கூடாது என அனைத்து பள்ளி முதல்வர்கள் / தாளாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது மேலும் கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தி மாணவர்கள் பாதிக்கப்பட்டால் நடவடிக்கைக்காக தனியார் பள்ளிகள் இயக்குநருக்கு பரிந்துரைக்கப்படும் என முதல்வர்கள் / தாளாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

IMG-20250501-WA0011

அரசுப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு: பள்ளிக்கல்வித் துறை வழிமுறைகள் வெளியீடு

   Education News (கல்விச் செய்திகள்)

1360138

அரசுப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியானவர்களின் பட்டியலை தயாரித்து அனுப்ப வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு, தகுதியான முதுநிலை ஆசிரியர்கள் பட்டியல் தயாரிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி பதவி உயர்வில் செல்ல விரும்பும் உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களின் கருத்துருக்களை மட்டும் முதன்மைக் கல்வி அலுவலரின் பரிந்துரையுடன் அனுப்ப வேண்டும்.


அதேபோல், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களில் மாவட்டக் கல்வி அலுவலராக பதவி உயர்வில் செல்ல விருப்பமுடையவர்கள் சார்பான கருத்துருகளை இயக்குநருக்கு பரிந்துரை செய்ய வேண்டியதில்லை. மேலும், 17-பி விதியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள மற்றும் தண்டனை காலம் முடிவடையாத முதுநிலை ஆசிரியர்களை பதவி உயர்வுக்கு பரிந்துரை செய்யக்கூடாது. இதில் தவறுகள் நடைபெற்றால் பரிந்துரைக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியான ஆசிரியர்களின் விவரங்களை கவனத்துடன் ஆய்வு செய்து அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) ) 

அரசு ஊழியர்களின் தனிப்பட்ட விவரத்தை ஆர்.டி.ஐ-யின் கீழ் கோர முடியாது: மாநில தகவல் ஆணையர் உத்தரவு

   Education News (கல்விச் செய்திகள்)

.com/

கிருஷ்ணகிரி மாவட்ட நீர் தேக்க உபகோட்ட உதவிப் பொறியாள ராக பணியாற்றிய காளிப்பிரியன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்து, கடன் மற்றும்வருமான வரி விவரங்களை தரும்படி காவேரிபட்டிணத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் கோரியிருந்தார்.


இந்த மனு மீதான விசாரணை மாநில தகவல் ஆணையர் ஆர். பிரியக்குமார் முன்பாக நடந்தது. அப்போது நேரில் ஆஜரான உதவிப் பொறியாளர் காளிப்பிரியன், அரசு புறம்போக்கு நிலத்தை சீனிவாசன் ஆக்கிரமித்து இருந்தார். அந்த ஆக்கிரமிப்பை அகற்றியதால் பழிவாங்கும் நோக்குடன் தனக்கு எதிராக இந்த விவரங் களைக் கோரியுள்ளார், என்றார்.


ஆனால் மனுதாரரான சீனிவாசன் தரப்பில், அதிகாரி காளிப்பிரி யன் ஊழலில் ஈடுபட்டதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே அவரது வருமானம் தொடர்பாகவும், சொத்து்கள் தொடர்பாகவும் விவரங்களை கோரியதாக தெரிவிக்கப்பட்டது.


பொதுநலன் இல்லை: அதையடுத்து மாநில தகவல் ஆணையர் ஆர்.பிரியக்குமார் பிறப்பித்த உத்தரவில், “அரசு ஊழியருக்கு எதிராக மட்டுமின்றி அவரது குடும்ப உறுப்பினர்களின் தனிப்பட்ட விவரங்களையும் மனுதாரர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கோரியுள்ளார்.


மனுதாரரின் நோக்கத்தில் பொதுநலம் இருப்பதாக தெரியவில்லை. காளிப்பிரியன் ஊழல் செய்திருப்பதாக மனுதாரர் கருதினால் உரிய அமைப்புகளிடம் புகார் அளிக்கலாம். அவர் கோரியுள்ள விவரங்களை அதுபோன்ற விசாரணை அமைப்புகள் எளிதாக பெற்றுவிடும்.


ஆனால் அதேநேரம் அரசு ஊழியர்களை துன்புறுத்தும் நோக்கில் அவர்களின் தனிப்பட்ட விவரங்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கோர முடியாது. பொதுநலன் இல்லாமல் அந்தரங்க உரிமைகள் பாதிக்கப்படும் வகையில் விவரங்களைக் கோரியுள்ளதால் மனுதாரரின் கோரிக்கை நிராகரிக் கப்படுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) ) 

மார்க் குறைந்தால் 5, 8ம் வகுப்பில் 'பெயில்': சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் அமலுக்கு வந்தது

   Education News (கல்விச் செய்திகள்)

gallerye_061325714_3920423
ஐந்து மற்றும் 8ம் வகுப்புகளில், குறைவான மதிப்பெண் பெறும் மாணவர்களை பெயிலாக்கும் முறை, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் அமலுக்கு வந்துள்ளது. 'எங்கள் குழந்தை குறைவான மதிப்பெண் எடுத்தால் பெயில் ஆக்க சம்மதிக்கிறேன்' என, பெற்றோரிடம் பள்ளிகள் ஒப்புதல் கடிதம் பெற்று வருகின்றன.


கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை, 'பெயில்' ஆக்கக்கூடாது என்ற நடைமுறை, இதுவரை அமலில் இருந்தது.


தேசிய கல்விக் கொள்கை 2020ல், அந்த விதி திருத்தப்பட்டது. அதன்படி, மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்புகளில், தேர்ச்சி சதவீதத்தை விட குறைவான மதிப்பெண் பெறும் மாணவர்களை, 'பெயில்' ஆக்கலாம். இந்த நடைமுறை, 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு அமலுக்கு வந்துள்ளது. இவ்விபரத்தை, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோரிடம் தெரிவித்து, அவர்களின் சம்மத கடிதம் பெறப்படுகிறது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) ) 

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு

   Education News (கல்விச் செய்திகள்)

.com/


மே 8ஆம் தேதிக்குள் சிபிஎஸ்இ 10,12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்று 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதியிருக்கும் மாணவ, மாணவிகள் தேர்வு முடிவுகளை ஆவலோடு எதிர்பார்த்து வருகிறார்கள்.

இது தொடர்பாக நாள்தோறும் ஒரு தகவல் வெளியாகிக் கொண்டேதான் இருக்கிறது. பெற்றோரும் இதனால் அதிகக் குழப்பத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

முதலில் மே மாதம் இரண்டாம் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரு சில நாள்களுக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்று சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக உறுதி செய்யப்படாதத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் சொன்ன தகவலின்படி, மே 8ஆம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகிவிடும் என்றும், ஓரிரு நாள்களில் வெளியாக வாய்ப்பில்லை என்றும் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பு, சிபிஎஸ்இ வாரியம் ஒரு கூட்டத்தைக் கூட்டி, தேர்வு கட்டுப்பாட்டாளர் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை முடிவு செய்வார் என்றும், அதற்கான கூட்டம் இன்னும் நடைபெறவில்லை என்பதால், நாளை தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பில்லை என்றும் தகவல்கள் தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது.

பொதுவாகவே சிபிஎஸ்இ, தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை முன்கூட்டியே அறிவிக்கும் வழக்கம் இல்லாததால், மாணவர்களும் பெற்றோர்களும் சிபிஎஸ்இ இணையப் பக்கத்தை அவ்வப்போது பார்த்துக்கொள்ளவும், ஊடகங்களில் முக்கியச் செய்திகளை அவ்வப்போது பார்க்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக 44 லட்சம் பேர் தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கிறார்கள். 10ஆம் வகுப்புத் தேர்வை 24.12 லட்சம் பேரும், 12ஆம் வகுப்புத் தேர்வை 17.88 லட்சம் பேரும் எழுதியிருக்கிறார்கள்.

தேர்வு முடிவுகள் வெளியாகும் இணையதளங்கள்





🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )