டிசம்பர் 3 , 2025 - உலக மாற்றுத்திறனாளிகள் தினம் - QR கோடு ஸ்கேன் செய்து உறுதி மொழி எடுத்தல் - SPD Proceedings

 IMG_20251201_221120

ஒருங்கிணைந்த கல்வியின் கீழ் அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் உள்ளடக்கிய கல்வி வழங்குதல் சார்ந்து பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . இதன் தொடர்ச்சியாக டிசம்பர் 3 , 2025 - உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் . வாழ்வாதாரம் , கல்வி , வாய்ப்புகள் , உட்புகுத்தல் ஆகியவற்றை வலியுறுத்தியும் , அனைவருக்கும் சமமான வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்பதற்காக இணைந்து செயல்பட வேண்டும் என்பதற்காகவும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும வகையில் பின்வரும் செயல்பாடுகள் அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. 

QR கோடு ஸ்கேன் செய்து உறுதி மொழி எடுத்தல் மேலும் , 👇

IE_world disability Day DEC 3, 2025 - spd Proceedings - Download here

ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

 பள்ளிக் கல்வி - ஆசிரியர் தேர்வு வாரியம் - முதுகலை பட்டதாரி ஆசிரியர் சான்றிதழ் சரிப்பார்ப்பு பணி 05 : 122025 முதல் 09 : 122025 வரை நடைபெறுதல் கண்காணிப்பு அலுவலர்கள் கூட்டம் இணை இயக்குநர்கள் / துணை இயக்குநர்கள் கலந்துக்கொள்ள தெரிவித்தல் மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்பு பணித்தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர் நிலையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் அறிவுரைகள் வழங்குதல் சார்பு .

DSE Proceedings 

IMG_20251201_203620

IMG_20251201_203639

Election, Anti-Defection & Rule of Law Notes PDF – தேர்தல், பதவி விலகல் தடுப்பு & சட்ட ஆட்சி விளக்கம்!

 Election, Anti-Defection & Rule of Law என்பது இந்திய அரசியல் அமைப்பின் முக்கியமான அடித்தளமான topics. TNPSC Group 1, Group 2, Group 4, VAO, TNUSRB PC & SI, SSC, RRB போன்ற அனைத்து போட்டித் தேர்வுகளிலும் Polity பகுதியில் இந்த concepts மீண்டும் மீண்டும் கேட்கப்படுகின்றன.

இந்த PDF short notes + clear explanations + quick revision charts வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
Polity-யில் mark secure பண்ணவேண்டும் என்றால், இந்த மூன்று topics must study chapters தான்.

Click here to download 

19th & 20th Century Socio-Political Movements & Rationalism in TN – Notes PDF 📘✨(தமிழகத்தின் சமூக-அரசியல் இயக்கங்கள் & பகுத்தறிவின் வளர்ச்சி!)

 19ஆம் & 20ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் உருவான சமூக-அரசியல் இயக்கங்கள் மற்றும் Rationalism (பகுத்தறிவு) வளர்ச்சி என்பது TNPSC Group 1, Group 2, Group 4, VAO, TNUSRB, SSC, RRB உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தொடர்ந்து கேட்கப்படும் மிக முக்கியமான History & Social Reform topic.

இந்த PDF simple language-ல, diagram-style notes + quick revision points வடிவில் கொடுக்கப்பட்டிருப்பதால் Social Reform topics மிகவும் சுலபமாகப் புரிந்துகொள்ள முடியும்.

Click here to download 


1 - 8th - SA - Term 2 /Half Yearly Exam Time Table - Dec 2025

 தொடக்கக் கல்வி - இரண்டாம் பருவம் மற்றும் அரையாண்டு தேர்வுக்கான கால அடடவணை


தொடக்கக்கல்வி - ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை டிசம்பர் 2025 இல் நடைபெறும் இரண்டாம் பருவ தேர்வுக்கான கால அட்டவணை ஒரே பக்கத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 



School Calendar - December 2025

 பள்ளிக்கல்வித்துறை டிசம்பர் மாத நாள்காட்டி - 2025



💥06-12-2025 -- சனி  -- ஆசிரியர் குறை தீர் நாள் 


💥03-12-2025 - புதன் - திருக்கார்த்திகை. ( RL )


💥15-12-2025 -- திங்கள் -- இரண்டாம் பருவம் / அரையாண்டுத்  தேர்வு தொடக்கம்.


💥24-12-2025 -- புதன் -- இரண்டாம் பருவம் / அரையாண்டுத்  தேர்வு விடுமுறை தொடக்கம்.


💥05-01-2026 - மூன்றாம் பருவம் தொடக்கம்... பள்ளி திறப்பு.









SIR Forms ஒப்படைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

 SIR படிவங்களை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு 

 
👇👇👇 

PDF Download Here

வாக்குச்சாவடி நிலை அலுவலர் வீடுதோறும் சென்று தற்போதைய வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவத்தினை வழங்கி வருகின்றனர்.

பொதுமக்களின் விண்ணப்பங்களை BLOக்கள் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் (SIR) நடைபெற்று வருகின்றன. கடந்த 4ஆம் தேதி தொடங்கிய கணக்கெடுப்பு பணி டிசம்பர் 4ஆம் தேதியுடன் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

வாக்குச்சாவடி நிலை அலுவலர் வீடுதோறும் சென்று தற்போதைய வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவத்தினை வழங்கி வருகின்றனர். 

இந்நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவத்தை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 11ஆம் தேதி வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்களின் படிவத்தை BLO-க்கள் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 16ஆம் தேதியும் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14ஆம் தேதியும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரில் இருக்கும் செல்போன் எண்ணை வீட்டில் இருந்தே மாற்றலாம் - புதிய செயலியில் வசதி!

 ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை வீட்டில் இருந்தபடியே மொபைல் செயலி மூலம் மாற்றிக்கொள்ளும் வசதி வர உள்ளதாக ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது.

IMG_20251201_094630_wm

இந்தியாவில் முக்கிய ஆவணமாக ஆதார் மாறியுள்ளது. அரசின் திட்டங்கள் முதல் பான் கார்டு வரை ஆதார் இணைக்கப்பட்டுள்ளது. வங்கியில் கணக்கு துவக்கவும், நலத்திட்டங்களின் பலன்களை பெறவும் அவசியமானதாக உள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆதாரில் பெயர், முகவரி, மொபைல் எண் என ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால், தபால் அலுவலகம், வங்கிகள், ஆதார் மையங்களுக்கு உரிய ஆவணங்களுடன் மக்கள் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. அங்கு கூட்டம் அதிகமாக இருப்பதால் மக்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.


தற்போது, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த சிக்கலை தீர்க்க ஆதார் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. முதற்கட்டமாக ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை, மொபைல்போன் செயலி வாயிலாக மாற்றிக் கொள்ளும் வசதியை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக அந்த ஆணையம் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: விரைவில் வருகிறது. ஆதாரில் மொபைல் எண்ணை, வீட்டில் இருந்தபடியே ஓடிபி மற்றும் முக அங்கீகாரம் மூலம் மாற்றிக் கொள்ளலாம்.



ஆதார் மையங்களில் இனியும் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அந்த பதவில் கூறப்பட்டுள்ளது.

மாதந்தோறும் ஆய்வுக் கூட்டம்: பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை

 பள்ளிக்கல்வியின் செயல் திட்டங்கள், மாணவர்களின் கற்றல் நிலை குறித்து ஆராய்வதற்காக மாதந்தோறும் அலுவல் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.


இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கை: துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தை மாதந்தோறும் 5-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டப் பொருள் சார்ந்த விவரங்கள் ஒவ்வொரு மாதமும் 4-வது வார இறுதியில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்படும்.


அதன் விவரங்களை இயக்குநரகத்துக்கு துரிதமாக அனுப்பி வைக்க வேண்டும். அதன் அடிப்படையில் கல்வி சார்ந்த செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வுகள் நடத்தப்படும். அதன்படி, வரும் டிசம்பர் மாதத்துக்கான கல்விசார் அலுவல் ஆய்வுக் கூட்டம் டிசம்பர் 5-ம் தேதி காணொலி மூலமாக நடைபெறுறது..


இதற்கான கூட்டப் பொருள், அதாவது பள்ளி ஆண்டாய்வு, பத்தாம் வகுப்பு காலாண்டுத் தேர்வு, திறன் திட்டம், குறைந்த செயல்திறன் கொண்ட பள்ளிகள் ஆகியவை குறித்த விவரங்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


அந்த விவரங்களைப் பூர்த்தி செய்து துரிதமாக அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, தொடக்கக்கல்வித் துறை சார்பிலும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடப்பு டிசம்பர் மாதம் பிரத்யேகமாக நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடும் நடைபெறுகிறது.

அரையாண்டு தேர்வுக்கான வினாத் தாள்கள் பள்ளிகளுக்கு நேரடியாக வழங்கப்படும்

 அரை​யாண்​டுத் தேர்வு வினாத்​தாள்​கள் பள்​ளி​களுக்கு நேரடியாக வழங்​கப்​படும் என்று தொடக்​கக் கல்​வித் துறை தெரி​வித்​துள்​ளது. தமிழகத்​தில் பள்ளி மாணவர்​களுக்​கான அரை​யாண்​டுத் தேர்​வு​கள், டிச.10 முதல் 23-ம் தேதி வரை நடை​பெறவுள்​ளது.


இதற்​கான வினாத்​தாள் தயாரிப்பு பணி​கள் தற்​போது நடை​பெற்று வரு​கின்​றன. இந்​நிலை​யில், 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்​களுக்​கான வினாத்​தாளை பதி​விறக்​கம் செய்​வதற்​கான வழி​காட்​டு​தல்​களை தொடக்​கக் கல்​வித் துறை வெளி​யிட்​டுள்​ளது.


அதன் விவரம் வருமாறு: 1 முதல் 5-ம் வகுப்பு வரை​யான வினாத்​தாள்​களை எமிஸ் தளத்​தில் டிச.3-ம் தேதி வரை மாவட்​டக் கல்வி அலு​வலர்​கள் பதி​விறக்​கம் செய்து கொள்​ளலாம். அதன்​பின்​னர் பள்ளிகளில் குழந்​தைகளின் எண்​ணிக்​கைக்கு ஏற்ப அவற்றை பிரதி எடுக்க வேண்​டும்.


தொடர்ந்து வினாத்தாள்களை வகுப்பு, பாடம், பயிற்று மொழி வாரியாக பிரித்து, உறையிட்ட கவரில் வைத்து தேர்வுக்கு 2 நாட்களுக்கு முன்பாக வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.




தலைமை ஆசிரியர்கள் அவற்றை பாதுகாப்பாக வைத்து, தேர்வு நடைபெறும் நாளில் வினாத்தாளை எடுத்து பயன்படுத்த வேண்டும். இதேபோல், 6 முதல் 8-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு https://exam.tnschools.gov.in என்ற இணையதளத்தில் வினாத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்படும்.



தேர்வு நடை பெறும் நாளுக்கு முந்தைய தினம் காலை 9 மணியில் இருந்து பள்ளிகள் நேரடியாக வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். வழிகாட்டுதல்களை பின்பற்றி தேர்வை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும். இவ்வாறு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி & ஊராட்சி துறையில் வேலை – மாவட்ட வாரியாக அறிவிப்பு! | 8ஆம் வகுப்பு போதும் | ₹15,700 முதல் சம்பளம்

 தமிழ்நாடு அரசு TNRD District Wise Recruitment 2025 – மாவட்ட வாரியாக வேலை அறிவிப்பு வெளியீடு!

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் (TNRD) 8ஆம் வகுப்பு தகுதி போதுமான அலுவலக உதவியாளர், ஈப்பு ஓட்டுநர், இரவு காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட மாவட்டத்தின் கடைசி தேதிக்கு முன் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

TNRD Recruitment 2025 – வேலை விவரங்கள்

  • வேலை வகை: தமிழ்நாடு அரசு வேலை
  • துறை: Tamilnadu Rural Development & Panchayat Raj Department
  • பணியிடங்கள்: அலுவலக உதவியாளர், ஈப்பு ஓட்டுநர், இரவு காவலர்
  • விண்ணப்பிக்கும் முறை: Offline (Post மூலம்)
  • பணியிடம்: தமிழ்நாடு மாவட்ட வாரியாக
  • அதிகாரப்பூர்வ தளம்: tnrd.tn.gov.in

🧑‍💼 காலிப்பணியிடங்கள் (Posts)

பதவிசம்பளம்
Office Assistant₹15,700 – 58,100
Jeep Driver₹19,500 – 62,000
Night Watchman₹15,700 – 58,100

🎓 கல்வித் தகுதி

பதவிதகுதி
Office Assistant8th Pass, Cycle ஓட்ட தெரிய வேண்டும், தமிழில் படிக்க/எழுதத் தெரிந்திருக்க வேண்டும்
Jeep Driver8th Pass + Valid License + 5 வருட அனுபவம்
Night Watchmanதமிழில் எழுத/படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்

🎯 வயது வரம்பு

  • Office Assistant: 18–37
  • Jeep Driver: 18–42
  • Night Watchman: 18–37

(அரசு விதிப்படி தளர்வு பொருந்தும்)

விண்ணப்பக் கட்டணம்

  • ₹50/- (ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும்)

தேர்வு செயல்முறை

எப்படி விண்ணப்பிப்பது? (Step-by-Step Guide)

1️⃣ அதிகாரப்பூர்வ லிங்கில் இருந்து மாவட்ட அறிவிப்பை download செய்யவும்
2️⃣ விண்ணப்பப் படிவத்தை print எடுத்து பூர்த்தி செய்யவும்
3️⃣ தேவையான ஆதார ஆவணங்களை இணைக்கவும்
4️⃣ அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்ட அலுவலக முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவும்
5️⃣ கடைசி தேதி வரையில் விண்ணப்பம் கிடைக்க வேண்டும்

⚠️ Incomplete Applications / Late Applications — நிராகரிக்கப்படும்



Chennai Metropolitan Police – ஊர்க்காவல் படை சேர்க்கை 2025 | மின்னஞ்சல் மூலம் நேரடி விண்ணப்பம் தொடக்கம்!

 

சென்னையில் ஊர்க்காவல் படை சேர்க்கை – மின்னஞ்சல் மூலமாகவே விண்ணப்பிக்கலாம்!

சென்னை பெருநகர காவல் துறை, ஊர்க்காவல் படைக்கான புதிய சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் இருவரும் இச்சேர்க்கையில் பங்கேற்கலாம். காவல் துறையின் பாதுகாப்பு சேவைக்குத் தங்களை அர்ப்பணிக்க விரும்புவோருக்கு இது சிறந்த வாய்ப்பு.


👮 தகுதி விவரங்கள்

  • வசிப்பு: சென்னை பெருநகர காவல் துறை எல்லைக்குள் வசிப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
  • நடத்தை: எந்தவித குற்றப்பின்னணியும் இல்லாத, நன்னடத்தை கொண்டவராக இருக்க வேண்டும்.
  • வயது:
    • குறைந்தபட்சம்: 18 வயது (01.10.2025 தேதியின்படி)
    • அதிகபட்சம்: 50 வயதுக்குள்
  • பாலினம்: ஆண்கள் & பெண்கள் இருவரும் விண்ணப்பிக்கலாம்.

🏋️ பயிற்சி விவரம்

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள்

45 நாள்கள்,

ஒவ்வொரு நாளும் 1 மணி நேரம்,

பயிற்சி பெறுவார்கள்.

பின்னர், விண்ணப்பதாரர் வசிக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் பணிக்கு அனுப்பப்படுவார்கள்.

💰 ஊதியம் (Special Pay)

ஊர்க்காவல் பணியில் சேருவோருக்கு தினசரி ரூ.560 சிறப்பு படி வழங்கப்படும்.

இது ரோந்து பணிக்கான தினசரி கூலியாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியானவர்கள் டிசம்பர் 15, 2025க்குள் கீழ்கண்ட வழிகளில் எதுவாகவும் விண்ணப்பிக்கலாம்

1️⃣ நேரில் அல்லது தபால் மூலம் அனுப்பலாம்:

சென்னை பெருநகர ஊர்க்காவல் படை அலுவலகம்,
சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம்,
சைதாப்பேட்டை,
சென்னை – 600015.

2️⃣ மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம்:

👉 (அதிகாரப்பூர்வ Email ID not provided — பொதுவாக விண்ணப்பம் இணைக்கப்பட வேண்டும்)
நீங்கள் தரும் விண்ணப்ப வடிவத்துடன் scan copy அனுப்பலாம்.

தொடர்பு எண்கள் (Helpline):

📞 91760 99249
📞 74186 81700



10ஆம் வகுப்பு போதும்! மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் வேலை – இளநிலை உதவியாளர் பணி | தேர்வு இல்லை | சம்பளம் ₹18,500/-

 

Mylapore Kapaleeswarar Temple Recruitment 2025 – 19 பணியிடங்களுக்கு வேலை அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE) சார்பில் மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் பல்வேறு பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 19 காலிப்பணியிடங்கள் உள்ளன.

இந்திய கோவில் நிர்வாகத் துறையில் பணியாற்ற விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. தேர்வு இல்லை – நேர்காணல் மூலம் மட்டும் தேர்வு!

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.12.2025

Kapaleeswarar Temple Job Details 2025

துறை: இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE)

கோவில்: அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில், மயிலாப்பூர்

மொத்த காலியிடங்கள்: 19

விண்ணப்பிக்கும் முறை: தபால் (Offline)

பணியிடம்: சென்னை – 04

அதிகாரப்பூர்வ தளம்: https://mylaikapaleeswarar.hrce.tn.gov.in/

📌 காலிப்பணியிடங்கள் – 2025

பதவி காலியிடங்கள்

உதவி பொறியாளர் (சிவில்) 01

இளநிலை உதவியாளர் 02

டிக்கெட் விற்பனையாளர் 03

தமிழ்ப் புலவர் 01

உதவி மின்பணியாளர் 02

பாரா 06

குருக்கள் / அர்ச்சகர் 01

காவலர் 01

உதவி பரிசாரகர் 02

மொத்தம் 19

🎓 கல்வித் தகுதி – TNHRCE Recruitment 2025

தேர்வு செயல்முறை

எழுத்துத் தேர்வு இல்லை

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் மட்டும் தேர்வு செய்யப்படுவார்கள்.

💳 விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பக் கட்டணம் கிடையாது

இலவசமாக தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்கும் முறை (Offline Application)

1️⃣ முதலில் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பப் படிவத்தை download செய்யவும்.
Link: https://mylaikapaleeswarar.hrce.tn.gov.in/

📅 முக்கிய தேதிகள்

Application Start: 27.11.2025

Application Last Date: 28.12.2025

படிவத்தை print எடுத்து முழுமையாக பூர்த்தி செய்யவும்.

3️⃣ தேவையான அனைத்து சான்றிதழ்களின் Xerox நகல்களை இணைக்கவும்.

4️⃣ அஞ்சல் உறையின் மீது:
👉 “பணியிட பெயர் & வரிசை எண்” குறிப்பிட வேண்டும்.

5️⃣ விண்ணப்பத்தை அஞ்சல் மூலமாக அல்லது நேரில் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்:

இணை ஆணையர் / செயல் அலுவலர்,
அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில்,
மயிலாப்பூர், சென்னை – 04.

6️⃣ விண்ணப்பத்துடன் சேர்க்க:

  • ரூ.75 மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய Acknowledgement Card
  • Self-addressed envelope



Indian Bank Jewel Appraiser Recruitment 2025 – அனுபவம் அவசியம்! | 8ஆம் வகுப்பு தகுதி | ஊதியம்: கமிஷன் அடிப்படையில்

 இந்தியன் வங்கியின் மதுரை மண்டல அலுவலகம் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள கிளைகளுக்கு Jewel Appraiser (நகை மதிப்பீட்டாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தப் பணிக்கு அனுபவம் மிக முக்கியமான தகுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தகுதி – யார் விண்ணப்பிக்கலாம்?

  • குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி
  • Jewel Appraiser Training Certificate கட்டாயம்
  • நகை மதிப்பீட்டுத் துறையில் குறைந்தது 5 ஆண்டு அனுபவம்
  • 10 ஆண்டு அனுபவம் உள்ளவர்களுக்கு வயது தளர்வு +2 வருடம்

🎯 வயது வரம்பு

  • 30 முதல் 50 வயது வரை
  • 10+ ஆண்டு அனுபவம் உள்ளவர்களுக்கு – கூடுதல் 2 ஆண்டு சலுகை

ஊதியம்

  • கமிஷன் அடிப்படையில் வழங்கப்படும்
  • நிரந்தர பணி அல்ல
  • வங்கிக்கு பணியாளர்களை தேர்வு/தள்ளுபடி செய்ய முழு அதிகாரம் உண்டு

📄 விண்ணப்பிக்கும் முறை – முக்கிய குறிப்புகள்

❌ Email மூலம் விண்ணப்பிக்க முடியாது
✔️ நேரில் அல்லது அஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்:

  • கல்விச்சான்று நகல்கள்
  • நகை மதிப்பீட்டு பயிற்சி சான்றிதழ்
  • ஆதார், PAN, வாக்காளர் அட்டை
  • குடும்ப அட்டை
  • காவல்துறை வழங்கிய NOC (தடையில்லா சான்றிதழ்)

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய இடம்:
மண்டல மேலாளர்,
இந்தியன் வங்கி,
மதுரை மண்டல அலுவகம்


📅 கடைசி தேதி

  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.12.2025

⭐ ஏன் இந்த வேலை முக்கியம்?

  • வங்கியில் பணியாற்றும் வாய்ப்பு
  • அனுபவம் உள்ளவர்களுக்கு நல்ல கமிஷன் வருமானம்
  • மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் வேலை வாய்ப்பு


TNTET BREAKING - TNTET தேர்ச்சி மதிப்பெண்களை குறைப்பது பற்றி 4 வாரங்களில் முடிவு எடுக்க அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 *🅱️🔥 TNTET BREAKING - TNTET தேர்ச்சி மதிப்பெண்களை குறைப்பது பற்றி 4 வாரங்களில் முடிவு எடுக்க அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு*

*⚡ நீதிமன்ற உத்தரவின் நகல் இணைப்பு - PDF*

👉 

Click here to download order copy pdf


*👇👇👇 join our whatsapp group*