காமராஜரை பற்றி 10 கட்டுரை வரிகள் – Kamarajar History in Tamil 10 Points:-

  Education News (கல்விச் செய்திகள்)

10 Points About Kamarajar in Tamil | Kamarajar Speech in Tamil 10 points

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.. படிக்காத மேதை, கர்ம வீரர், தென்னாட்டின் காந்தி, பெருந்தலைவர் இவ்வாறு உலக மக்களால் அழைக்கப்படுபவர் தான் காமராஜர். இவருடைய ஆட்சி காலம் தான் தமிழகத்தின் பொற்காலம் என்று பாராட்டப்படிருக்கு. இப்போது இருக்கின்ற அரசியல்வாதிகள் இருந்து, அப்போது இருந்த அரசியல் வாதிகள் வரை அனைவரும் சொல்வது என்னவென்றால் காமராஜர் மாதிரி நாங்களும் நல்ல ஆட்சியை தருவோம் என்று தான். ஏராளமான தொழிற்சாலைகள், நீர்த்தேக்க அணைகள், மக்களுக்கு உண்மையிலேயே பயன்படும் நலத்திட்டங்கள், கல்வியில் மிக பெரிய வளர்ச்சி இப்படி தமிழ்நாட்டிற்காகவே உழைத்த உன்னத தலைவர் தான் காமராஜர். இவரது வாழ்க்கை பற்றிய சில தகவல்களை இங்கு நாம் பார்க்கலாம்.


காமராஜரை பற்றி 10 கட்டுரை வரிகள் – Kamarajar History in Tamil 10 Points:-

குமார ஸ்வாமி காமராஜ் காம ராஜா என்று பிரபலமாக அறியப்படுகிறார். அவர் ஒரு இந்திய சுதந்திர ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.காமராஜர் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி தமிழ்நாட்டில் பிறந்தார். ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். அவரது குடும்பம் வறுமை மற்றும் பாகுபாடுகளுடன் போராடியது.1920-யில், அவருக்கு 18 வயதாக இருந்தபோது, அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டார், மேலும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1954 முதல் 1963 வரை தமிழக முதல்வராகப் பணியாற்றினார்.காமராஜர் தமிழக முதல்வராக இருந்த கால கட்டத்தில் தமிழ் நாட்டில் Sugar Factory ஒன்றுகூட இல்லாமல் இருந்ததாம். இதன் காரணமாக உடனடியாக காமராஜர் தமிழ் நாட்டில் 10 Sugar Factory-ஐ திறக்க வேண்டும் முடிவெடுத்தார்.


காமராஜர் ஆட்சி காலத்தில் தான் இலவச கல்வி மற்றும் சீருடை மற்றும் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். நாட்டில் மூடப்பட்டிருந்த பள்ளிகளை திறந்தார். 17,000 பள்ளிகளையும் புதிதாகவும் திறந்தார். இதனால் தான் இவர் கல்வி கண் என்றழைத்தார்கள். குழந்தைகள் வறுமையினால் சிறுவயதிலையே வேலைக்கு போனார்கள். இதனை பார்த்து வருத்தப்பட்டார். அதனால் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரித்தார். முதல் முறையாக ஆயிரம் விளக்கு என்ற பகுதியில் தான் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். ஒரு வேளை உணவு கிடைக்கும் என்ற எண்ணத்துடன் குழந்தைகள் பள்ளிக்கு வர ஆரம்பித்தார்கள். அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஆனது 37% உயர்ந்தது.


விவசாயம், கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பு மகத்தானது. ஒரு சமையம் திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் போது போற வழியில் சில கிராம மக்கள் ஒன்று சேர்த்து அவர் வந்துகொண்டிருந்த காரை வழிமறித்துள்ளனர். அப்பொழுது காமராஜர் அவரது வண்டியை நிருத்த சொல்லி காரில் இருந்து இறங்கி கிராம மக்களிடம் என்ன பிரச்சனை என்று கேட்டாராம். அதற்கு அந்த கிராம மக்கள் அவர்கள் ஊரில் மின்சாரம் இல்லை என்று கூறியுள்ளார். உடனே காமராசர் இன்ஜினியர்களை வர சொல்லி என்ன பிரச்சனை என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் சிமிண்ட் கம்பம் இப்பொழுது இங்கு இல்லை அது வெஸ்ட்பெங்காலில் இருந்து வர வேண்டும் என்று கூறியுள்ளனர்.


உடனே இரண்டு நிமிடம் தான் காமராசர் யோசித்தார் அந்த கிராம மக்களிடம் வீட்டுக்கு ஒரு பணம் மரம் குடிப்பிங்களானு கேட்டுருக்காரு. அந்த மக்களும் தரோம்னு சொல்லிருக்காங்க. அந்த பணம் மரத்தை வைத்து கரண்ட் கனெக்சன் கொடுக்க முடியுமா என்று காமராசர் இன்ஜினியரிடம் இன்ஜினியர்கள் கொடுக்கமுடியும் என்று கூறியுள்ளனர். அதன் பிறகு அந்த கிராமத்திற்கு வெளிச்சம் கிடைத்தது.


இந்தியா சீனா போர் முடிந்த காலத்தின் போது அந்த யுத்தத்தில் இந்திய இராணுவத்திற்கு பெரும் சேதம். அந்த சாமியாயத்தில் காமராஜர் நேரு அவர்களை பார்க்க சென்றுருக்கிறார். அப்பொழுது நேரு ஒரே குழப்பத்தில் இருந்துள்ளார். அப்பொழுது காமராஜர் நேருவிடம் ஏன் இவ்வளவு குழப்பத்தில் இருக்கீங்கன்னு கேட்டுருக்காங்க அதற்கு நேரு நமது இந்திய ராணுவத்தை பலப்படுத்த அமெரிக்காவில் சில ஆயுதங்கள் வாங்க வேண்டி இருக்கு.


அதுவும் அங்கு உள்ள பொருட்கள் இந்தியாவிற்கு வர வேண்டும் என்றால் அங்குல ஏதாவது ஒரு வங்கி கேரண்டி தர வேண்டும். ஆனால் எந்த வங்கியும் இந்தியாவிற்கு கேரண்டி தர மறுக்கின்றனர் என்று நேரு காமராஜரிடம் கூறியுள்ளார். அதற்கு காமராஜர் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் இந்தியாவில் ஏதாவது அவர்கள் நடத்தும் நிறுவனம் இருக்கிறதா என்று கேட்டார். அப்படி இருந்தால் அந்த நிறுவனகளை உடனடியாக இந்தியாவில் மூட சொல்லுங்கள் என்றார்.


நேருவும் அதன்படி செய்ய அமெரிக்கா நடுங்கிப்போய் நின்றதாம். அதன் பிறகு நமது இந்தியாவிற்கு கேரண்டி கிடைத்ததாம். காமராஜருக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயத்தில் ஒன்று தான் பத்திரிகையாளர்களை சந்திப்பது. ஆகவே பத்திரிகையாளர்களை அடிக்கடி சந்தித்து ஒரு நண்பரை போல் பழகுவாராம். தனக்கு தெரிந்த அனைத்து விஷயங்களையும் காமராஜர் பத்திரிகையாளர்களிடம் வெளிப்படையாக சொல்லிவிடுவாராம்.


காமராஜர் காரில் செல்லும் போது மேடையில் ஒரு பையன் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து, எதிர்க்கட்சியை கடுமையாக விமரிசித்து பேசியுள்ளான். உடனே அவர் சென்றுகொண்டிருந்த கரை நிறுத்தி அந்த பையன் பேசி முடித்த பின் அவனை கூப்பிட சொல்லிருக்காரு காமராஜர்.


அந்த பையன் வந்ததற்கு பிறகு ஓங்கு ஒரு அரைவிட்டுருக்காரு, உனக்கு அரிசியால் பத்தி என்ன தெரியும், படிக்கும் வயதில் உனக்கு அரசியல் தேவையா.. ஒழுங்காக படி, உங்க அப்பாவை அழைத்துக்கொண்டு நேரில் என்னை வந்து பாருன்னு சொல்லிருக்காரு. இந்த பாயிண்ட் எதுக்கு சொல்றேன் அப்படினா காசு கொடுத்து நிறைய ஆட்களை சேர்க்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் இப்படி ஒரு அரசியல் தலைவரை பார்ப்பது அதிசயம் தான்.


ஒரு மனிதனுக்கு கல்வி, நிறம், செல்வம் இந்த மூன்றுமே மிகவும் முக்கியம் என்று சொல்வார்கள் ஆனால் இந்த மூன்றுமே பெரிதாக இல்லாத ஒருவர் இந்த உலகத்தையே தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்தார் அப்படினா அது நமது பெரும் தலைவர் காமராசராக மட்டும் தான் இருக்க முIடியும். 1976-ல் இந்தியாவின் உயரிய குடிமகன் விருதான பாரத ரத்னா விருது அவருக்கு வழங்கப்பட்டது.



Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

காமராஜர் பற்றிய 2 நிமிட பேச்சு | 2 Minute Speech About Kamarajar in Tamil..!

  Education News (கல்விச் செய்திகள்)


காமராஜரின் 2 நிமிட பேச்சு | 2 Minute Speech About Kamarajar in Tamil | தமிழில் காமராஜர் பற்றி 2 நிமிட பேச்சு


நாம் நிறைய தலைவர்களை பற்றி கேள்வி பட்டிருப்போம். அவர்கள் செய்த சாதனை மற்றும் தொன்றுகளை பற்றி அதிகமாக படித்து இருப்போம். இத்தகைய வகையில் எண்ணற்ற தலைவர்கள் இடம் பெற்றிருந்தாலும் கூட ஒரு சில தலைவர்கள் இதில் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தினை பிடித்து உள்ளார்கள். இவ்வாறு பார்க்கும் போதும் ஒரு தலைவருக்கும் சிறப்பு பெயர்கள் என்று இருக்கும். அவருடைய சொந்த பெயரை விட இத்தகைய சிறப்பு பெயர் தான் அனைவர் மனத்திலும் படிந்த ஒன்றாக இருக்கும். அந்த வகையில் கரமவீரர் என்றாலும், பெருந்தலைவர் என்றாலும் நாம் அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது காமராஜர் தான். அதுமட்டும் இல்லாமல் வரும் ஜூலை 15-ஆம் தேதி அன்று காமராஜர் பிறந்தநாள் வரவிருக்கிறது. ஆகவே அதனை சிறப்புக்கும் வகையில் இன்றைய பதிவில் காமராஜர் பற்றிய பேச்சினை வெறும் 2 நிமிடத்தில் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!


2 Minute Speech About Kamarajar in Tamil |தமிழில் காமராஜர் பற்றி 2 நிமிட பேச்சு:


தமிழ்நாட்டில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் குமாரசாமி மற்றும் சிவகாமி அம்மையாருக்கு மகனாக 1903-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15-ஆம் தேதி அன்று அனைவராலும் புகழந்து பேசப்படும் காமராஜர் பிறந்தார்.


இவரது பெற்றோர் இவருக்கு வைத்த காமாட்சி என்ற பெயரை பின்பு காலத்தினாலும் இவர் செய்த பல சாதனைகளும் காலப்போக்கில் காமராஜர் என்று மாற்றி வைத்து கொண்டார்.


காமராஜர் தந்தை இறந்து போன காரணத்தினால் ஏழ்மையான குடும்பத்தின் சூழ்நிலையினை கருதி பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார். ஆனால் இவர் செய்த சாதனைகளும், பணிகளும் இவருக்கு படிக்காத மேதை என்ற படத்தினை அளித்தது.


இதனை தொடர்ந்து 1954-ஆம் ஆண்டு முதல் 1963-ஆம் ஆண்டு வரை கர்ம வீரர் காமராஜர் தமிழகத்தின் முதல் அமைச்சராக இருந்தார். இத்தகைய முதலமைச்சர் பணியில் இருக்கும் போது கிராமங்கள் தோறும் பள்ளிக்கூடம் மற்றும் ஏழை எளிய குழந்தைகளின் நலன் கருதி மதிய உணவு திட்டத்தினையும் அறிமுகம் செய்தார்.


அதுமட்டும் இல்லாமல் தமிழகத்தில் பெரிய தொழிற்சாலைகள் மற்றும் அணைகளையும் மக்களின் நலன் கருதி நடைமுறைக்கு கொண்டு வந்தார்.


பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி செய்த அத்தகைய காலம் ஆனது மக்களுக்கு எண்ணற்ற சாதகமான பலன்கள் கிடைத்ததால் அவை அனைத்தும் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்ததோடு மட்டுமில்லாமல் காமராஜர் ஆட்சி செய்த காலம் தமிழகத்தின் பொற்காலம் என்று மக்கள் அனைவராலும் புகழப்பட்டது.


இவர் தான் முழுவதையும் மக்களுக்காக மட்டுமே அர்ப்பணிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கடைசி வரை திருமணம் என்ற ஒன்றை செய்து கொள்ளாமலே வாழ்ந்தார். மேலும் இவர் கர்மவீரர், தென்னாட்டு காந்தி, பெருந்தலைவர் மற்றும் படிக்காத மேதை என்று அழைக்கப்பட்டார்.


1953-ஆம் ஆண்டு, ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தால், எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால் ராஜாஜி அவர்கள் பதவியிலிருந்து விலகி, தன் இடத்திற்கு சி.சுப்பிரமணியத்தை முன்னிறுத்தினார். கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் காமராஜர் பெருவாரியான வாக்குகளைப் பெற்றதால், 1953 ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார்.


காமராஜர், தன்னுடைய அமைச்சரவையில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.சுப்பிரமணியத்தையும், அவரை முன்மொழிந்த எம்.பக்தவத்சலத்தையும் அமைச்சராக்கினார். தன்னுடைய முதல் பணியாக குலக்கல்வித் திட்டத்தினை கைவிட்டு, மூடப்பட்ட 6000 பள்ளிகளைத் திறந்தார்.


17000-த்திற்கும் மேற்பட்ட புதிய பள்ளிகளைத் திறந்தோடு மட்டுமல்லாமல், பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏறுபடுத்தினார்.


இதனால், ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் 7 சதவீதமாக இருந்த கல்விக் கற்போரின் எண்ணிக்கை, காமராஜர் ஆட்சியில் 37 சதவீதமாக உயர்ந்தது.


1975-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி அன்று அவரது 72-வது வயதில் மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார்.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

காமராஜர் கல்வி வளர்ச்சி நாள் கட்டுரை | Kamarajar Kalvi Valarchi Naal

 Education News (கல்விச் செய்திகள்)

காமராஜர் கல்வி வளர்ச்சி நாள் கட்டுரை | Kamarajar Kalvi Valarchi Naal


வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் காமராஜர் கல்வி வளர்ச்சி நாள் கட்டுரை (Kamarajar Kalvi Valarchi Naal) பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். ஜூலை 15 கர்ம வீரர் காமராஜரின் பிறந்த தினம் ஆகும். இந்த நாளை தான் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டப்படுகிறது. இந்த நாள் ஆனது 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. இன்றைய பதிவில் காமராஜர் கல்வி வளர்ச்சி நாள் கட்டுரை பற்றி பார்க்கலாம் வாங்க.


முன்னுரை:

தமிழ்நாட்டை ஆட்சி செய்த முதலமைச்சர்களுள் ஒருவராக கருதப்படுபவர், ‘பெருந்தலைவர் காமராஜர்’ ஆவர். குறிப்பாக தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வரலாற்றில் “பொற்காலமாக” கருதப்படுகிறது. பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார். தன்னுடைய உழைப்பால், தொண்டால், படிப்படியாக உயர்ந்த இவர், ‘பெரும் தலைவர்’, ‘தென்னாட்டு காந்தி’, ‘படிக்காத மேதை’, ‘கர்ம வீரர்’, ‘கல்விக்கண் திறந்த காமராஜர்’ என பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுபவர். சமுதாயத்தில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் ஏழைகளுக்கு நல்லது செய்யும் அவரின் தன்னலமற்ற தொண்டிற்காக, இந்திய அரசு, அவரின் மறைவிற்கு பின்னர் 1976 ஆம் ஆண்டு “பாரத ரத்னா” விருதினை வழங்கியது. சரி இக்கட்டுரையில் கர்மவீரர் காமராஜர் ஐயா அவர்கள் கல்விப்பணிகளை பற்றி பார்க்கலாம் வாங்க.


காமராஜரின் கல்வி பணிகள் – கல்வி வளர்ச்சி நாள் கட்டுரை:

அவருடைய ஆட்சி காலத்தில் கல்விக்கே முதல் இடத்தை வகுத்தவர். குறிப்பாக இவருடைய ஆட்சிக்காலத்தில் 1957-யில் 15,800 ஆக இருந்த தொடக்கப் பள்ளிகள் 1962-யில் 29,000 ஆக உயர்ந்தது. உயர்நிலை பள்ளிகள் மூன்று மடங்காயின.


“கல்வி சிறந்த தமிழ்நாடு” என்ற பாரதியின் வரியை உண்மையாக்க இரவும் பகலும் பாடுபட்டார் காமராஜர். தொடக்கப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 16 லட்சத்திலிருந்து 48 லட்சமாக உயர்ந்தது. அதில் 16 லட்சம் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. 3 லட்சம் உயர்நிலை பள்ளிகள் 13 லட்சமாக உயர்ந்தது. தொழிற் கல்வி தொடங்கப்பட்டது. சென்னை ஐஐடி தொடங்கப்பட்டது காமராஜர் ஆட்சியில் தான்.


காமராஜர் தமிழ்நாடு முதல்வராக இருந்த போது கிராமப்புற சாலை ஒன்றில் காரில் செல்லும்போது. சில சிறுவர்கள் மாடு மேய்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அதனை கண்ட காமராஜர் காரை நிறுத்த சிறுவர்கள் அருகில் சென்ற காமராஜர் “நீங்களெல்லாம் பள்ளிக்கூடத்துக்கு செல்லவில்லையா?” என்று கேட்கிறார். “எங்கள் ஊரில் பள்ளிக்கூடமே இல்லையே” என்கிறார்கள் சிறுவர்கள்.


“பள்ளிக்கூடம் கட்டிக் கொடுத்தால் நீங்கள் பள்ளிக்கு சென்று படிப்பீர்களா?” என்று கேட்கிறார் காமராஜர். அதற்கு சிறுவர்கள் “நாங்கள் மாடு மேய்த்தால், எங்களை மாடு மேய்க்க சொன்னவர்கள் மதியம் உணவு கொடுப்பார்கள். நாங்கள் பள்ளிக்கு வந்துவிட்டால் எங்களுக்கு யார் சோறு போடுவார்கள்” என்று அந்த குழந்தைகள் கேட்கிறார்கள். பதில் சொல்ல முடியவில்லை முதல்வரால். அவர்களது கேள்வி நெஞ்சில் முள்ளாக தைத்தது.


சென்னை சென்றதும் கல்வித்துறை செயலாளர் கல்வியாளர் நெ.து.சுந்தரவடிவேலுடன் ஆலோசிக்கிறார். அவரும் உணவு அளிப்பதற்கு ஆதரவாக கருத்து சொல்கிறார்.


“ஏழைப்பிள்ளைகள் பள்ளிக்கூடம் வர, மதிய உணவு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். உங்கள் கருத்து என்ன?” என்று நிதித்துறை செயலக அதிகாரிகளை கேட்கிறார். இப்போதைய நிதி நிலையில் இதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.


“நிதி இல்லை என்றால் வீதியில் நின்று பிச்சை எடுத்து தருகிறேன். திட்டத்தை தொடங்குங்கள்” என்கிறார். முதல்வரின் உறுதியைக் கண்ட அதிகாரிகள் பதினாறு லட்சம் குழந்தைகள் சாப்பிடும் மதிய உணவு திட்டத்தை, முப்பதாயிரம் பள்ளிகளில் தொடங்குகிறார்கள். இப்படித்தான் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார் காமராஜர்.


தமிழக முதல்வராக காமராஜர்:

1947-ம் ஆண்டு பிரிட்டிசுமிடமிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு காமராஜர் அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். சுதந்திர போராட்டத்தில் அவரது தியாகம் மற்றும்ம் பணியின் காரணமாக அவர் 1952– ஆம் ஆண்டு பாரளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1954-ம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக நியமிக்கப்பட்டார்.


மதிய உணவு திட்டம்:

காமராஜர் ஆட்சி காலத்தில் தான் இலவச கல்வி மற்றும் சீருடை மற்றும் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். நாட்டில் மூடப்பட்டிருந்த பள்ளிகளை திறந்தார். 17,000 பள்ளிகளையும் புதிதாகவும் திறந்தார். இதனால் தான் இவர் கல்வி கண் என்றழைத்தார்கள். குழந்தைகள் வறுமையினால் சிறுவயதிலையே வேலைக்கு போனார்கள். இதனை பார்த்து வருத்தப்பட்டார். அதனால் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரித்தார். முதல் முறையாக ஆயிரம் விளக்கு என்ற பகுதியில் தான் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். ஒரு வேளை உணவு கிடைக்கும் என்ற எண்ணத்துடன் குழந்தைகள் பள்ளிக்கு வர ஆரம்பித்தார்கள். அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஆனது 37% உயர்ந்தது.


முடிவுரை:

அவர் ஆட்சி செய்த காலம் முழுவது சமுதாயத்தில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் ஏழைகளுக்கு நல்லது செய்த அவரின் தன்னலமற்ற தொண்டிற்காக, இந்திய அரசு, அவரின் மறைவிற்கு பின்னர் 1976 ஆம் ஆண்டு “பாரத ரத்னா” விருதினை வழங்கியது.



Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

மகிழ் முற்றம் - குழுக்கள் மேற்பார்வை கையேடு - பள்ளிக் கல்வித் துறை வெளியீடு

  Education News (கல்விச் செய்திகள்)

Untitled1_001

மகிழ் முற்றம் - கையேடு - தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை வெளியீடு - தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மகிழ் முற்றம் சார்ந்து அமைக்கப்படும் குழுக்களை மேற்பார்வை செய்து, ஒழுங்கமைத்து வழிகாட்ட இந்தக் கையேடு உதவும்


Click Here to Download - DSE - Magizh Mutram - Joy Yard - Handbook Manual - Published by School Education Department - Pdf




Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

மகிழ் முற்றம் - House System Score Board ( Pdf)

  Education News (கல்விச் செய்திகள்)

1001

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மகிழ் முற்றம் மாணவா் குழு அமைப்பை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மாணவா்கள் குழுவாக இணைந்து செயல்படுதல், சமூக மனப்பான்மை, வேற்றுமைகள் இல்லாத பரஸ்பர ஆதரவு ஆகியவற்றை முதன்மை நோக்கங்களாகக் கொண்டுள்ளது.

மாற்றங்களை ஏற்படுத்தும்: பள்ளி அளவில் இரு தனிச் செயல்பாடுகளை ஆசிரியா்கள் தோ்வு செய்து மதிப்பீடு செய்யலாம். எடுத்துகாட்டாக நேரம் தவறாமை, காலை வழிபாட்டு கூட்டத்தில் பங்கேற்றல், வீட்டுப்பாடம் முடித்தல், தன்சுத்தம் பேணுதல் போன்ற செயல்பாடுகளைத் தோ்வு செய்யலாம். இதன்மூலம் இந்தக் குழு அமைப்பு மாணவா்களிடையே விரும்பத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான தளமாக அமையும்.


Click Here to Download - மகிழ் முற்றம் - House System Score Board - Pdf




Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

மகிழ் முற்றம் - மாணவர் குழு உறுதிமொழி

  Education News (கல்விச் செய்திகள்)

மகிழ் முற்றம் உறுதிமொழி - School Oath


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Magizh Mutram - Formats & Annexures

  Education News (கல்விச் செய்திகள்)

தமிழகத்தில் மாணவ, மாணவிகளிடம் தலைமைப் பண்பை ஊக்குவிக்கும் வகையில் 37,592 அரசுப் பள்ளிகளில் மகிழ் முற்றம் திட்டம் செயல்படுத்தப்படும்

Click Here to Download - Magizh Mutram - Formats & Annexures - Pdf


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )