மாற்றுத்திறனாளி மாணவர் பற்றிய கட்டுரைப் போட்டி - `எனது தோழன் / எனது தோழி` என்ற தலைப்பில் 6-8 வகுப்பு மாணவர்களுக்கு நடத்துதல் சார்ந்து DSE செயல்முறைகள்!
மாற்றுத்திறனாளி மாணவர் பற்றிய கட்டுரைப் போட்டி - `எனது தோழன் / எனது தோழி` என்ற தலைப்பில் 6-8 வகுப்பு மாணவர்களுக்கு நடத்துதல் சார்ந்து DSE செயல்முறைகள்!
👇👇👇👇
DSE - Essay Competition Proceedings - Download here
2025 ஆம் ஆண்டில் மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்பு நாள்கள்
Tamil Nadu RL List 2025 - RH leave List 2025 - வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் 2025 - Restricted Leave Days 2025 (RL / RH List 2025)...
2025 ஆம் ஆண்டில் மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்பு நாள்கள் (RL / RH)
ஆகஸ்ட்
26.08.2025 செவ்வாய் சாம உபகர்மா
செப்டம்பர்
05-09-2025 - வெள்ளி - ஓணம் ( அன்று மிலாடி நபி அரசு விடுமுறை.. RL எடுக்க முடியாது )
அக்டோபர்
03-10-2025 - வியாழன் - கர்வீன் ஆப் மொய்தீன் அப்துல் கதர்
டிசம்பர்
04-12-2025 - வியாழன் - கார்த்திகை தீபம்
GATE - நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
ஐ.ஐ.டி. உள்பட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.எஸ்., எம்.ஏ. ஆகிய முதுநிலை படிப்புகளில் சேருவதற்கு தேசிய அளவிலான ‘கேட்' நுழைவுத்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இது நுழைவுத்தேர்வாக மட்டுமன்றி இஸ்ரோ உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பணிக்கு சேருவதற்கும் இதில் மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளப்படுவதால் இந்த தேர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த முறை கேட் தேர்வை கவுகாத்தி ஐஐடி கல்வி நிறுவனம் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கேட் நுழைவுத் தேர்வில் என்ஜினீயரிங், தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் உட்பட 30 பாடப்பிரிவுகளின் கீழ் கணினி வழியில் தேர்வு நடத்தப்படும். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் வரை நடைபெறும் இந்த தேர்வை ஒரு தேர்வர் ஒன்று அல்லது இரண்டு தாள்களை மட்டும் தேர்வு செய்து எழுதலாம்.
2026ம் ஆண்டுக்கான கேட் தேர்வு அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதம் 7, 8 மற்றும் 14, 15ம் தேதிகளில் பாடப்பிரிவு வாரியாக காலை, மதியம் என இருவேளைகளிலும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி இந்த தேர்வை என்ஜினீயரிங் இளநிலை பட்டப்படிப்பு, கலை மற்றும் அறிவியலில் இளங்கலை பட்டப்படிப்பு மூன்றாம் ஆண்டு அல்லது இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் மற்றும் பட்டப்படிப்பை முடித்தவர்களும் இந்த தேர்வை எழுத தகுதியானவர்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பம் உள்ளவர்களுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று (ஆகஸ்ட் 25-ம்தேதி) முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
தேர்வு எழுத விருப்பம் உள்ளர்கள் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 25-ந் தேதி எனவும் கூறப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கூடுதல் விவரங்களுக்கு www.gate 2026.iitg.ac.in என்ற இணையதளத்தில் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி இந்த இணையதளம் மூலமே விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (ஆகஸ்ட் 25-ம்தேதி) முதல் செப்டம்பர் 25-ந் தேதி வரை விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், தாமதக் கட்டணத்தை செலுத்தி அக்டோபர் 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. ‘கேட் 2026’ தேர்வு முடிவுகள் அடுத்தாண்டு மார்ச் 19-ம்தேதி வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மிலாடி நபி - 2025 (விடுமுறை) எப்போது? ஷரியத் அறிவிப்பு
ஹிஜ்ரி 1447 சஃபர் மாதம் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆங்கில மாதம் 24-08-2025 தேதி அன்று மாலை ரபிஉல் அவ்வல் மாத பிறை திருநெல்வேலி மேலப்பாளையத்தில் காணப்பட்டது.
ஆகையால் திங்கட்கிழமை ஆங்கில மாதம் 25-08-2025 தேதி அன்று ரபிஉல் அவ்வல் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.
ஆகையால் மீலாதுன் நபி 05-09-2025 தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும்.
திறனறி தேர்வுகளை எதிர்கொள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம்தோறும் பயிற்சி: பள்ளிக்கல்வித் துறையின் புதிய முன்னெடுப்பு
அரசுப் பள்ளி மாணவர்கள் திறனறி தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் விதமாக ‘ப்யூச்சர் ரெடி’ வினாக்கள் மூலம் மாதம்தோறும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி) அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: அரசுப் பள்ளி மாணவர்கள் உயர் சிந்தனை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தவும், கற்றல் அடைவுத் தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் எழுதவும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ‘எதிர்காலத்துக்கு தயாராகு’ (Future Ready) எனும் முயற்சி தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாதம்தோறும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை ஆங்கிலம், கணிதம், அறிவியல், பொது அறிவு சார்ந்த பாடங்களில் மாணவர்கள் கடந்த கல்வி ஆண்டில் படித்த பாடப் பொருட்களை ஒட்டி உயர் சிந்தனை வினாக்களை வடிவமைக்கும் பணி எஸ்சிஇஆர்டிக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், ஆங்கிலப் பாடத்தில் பத்திகள் வாசித்தல் மற்றும் இலக்கணம், கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களில் சிந்தனை திறனை மேம்படுத்தும் வினாக்கள் ஒவ்வொரு மாதமும் தயாரிக்கப்பட்டு, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலமாக பள்ளிகளுக்கு அனுப்பப்படும். அதை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து, கணிதம், ஆங்கிலம், அறிவியல் பாட ஆசிரியர்களுக்கும், பொது அறிவு வினாக்களை வகுப்பு ஆசிரியருக்கும் தரவேண்டும். இந்த வினாக்களைக் கொண்டு மாதம்தோறும் மாணவர்களிடம் மதிப்பீடு நடத்த வேண்டும். இதை தலைமை ஆசிரியர்கள் முறையாக கண்காணிக்க வேண்டும்.
இதன்மூலம் திறன் அடிப்படையிலான கேள்விகளில் மாணவர்கள் நிபுணத்துவம் பெறுவதுடன், பல்வேறு அடைவுத் தேர்வுகளையும் எளிதில் எதிர்கொள்ள முடியும். பாடங்களை மாணவர்கள் நன்கு புரிந்து படிக்கவும் வழிசெய்யும். ஆசிரியர் பயிற்றுநர்கள், வட்டார, மாவட்ட, முதன்மைக் கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட பொறுப்பு அலுவலர்கள் தங்கள் பள்ளி ஆய்வின்போது இந்த செயல்பாடுகளின் நிலை குறித்து ஆசிரியர்களுடன் கலந்துரையாட வேண்டும். கலந்தாய்வுக் கூட்டங்களின் போதும் இதுபற்றி விவாதிக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்கள் எதிர்காலங்களில் உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகள் மற்றும் வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எழுத இது உதவிகரமாக இருக்கும் என்று ஆசிரியர்கள், கல்வியாளர்கள் தெரிவித்தனர்.
அகல் விளக்கு' முதல் 'வானவில்' வரை திட்டங்கள்; பாடவேளையை பறிப்பதாக ஆசிரியர்கள் குமுறல்
பள்ளிக்கல்வி வெளியிடும் அறிவிப்புகளை செயல்படுத்துவதற்கே அதிக நேரம் செலவாகி வருவதால், ஆசிரியர்கள் தங்களுக்கான பாட வகுப்புகளை சரியாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் வானவில் மன்றம், மகிழ் முற்றம், தமிழ் மற்றும் ஆங்கில இலக்கிய மன்றங்கள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மேலும், 'லெவல் அப்', 'திறன்', 'ஸ்லாஸ்' போன்ற கற்றல் அடைவு சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. அதோடு, வினாடி-வினா, சிறார் திரைப்படம், இணையதளப் பயன்பாடு விழிப்புணர்வுக்கான 'அகல்விளக்கு' ஆகியவற்றையும் செயல்படுத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர்கள் தலைமையில் 5 முதல் 6 மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மன்ற செயல்பாடுகளுக்காக வாரத்திற்கு இரண்டு பாடவேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த நேரத்தில் அனைத்து செயல்பாடுகளையும் முழுமையாக நிறைவு செய்ய முடிவதில்லை.
மேலும், மாணவர்களின் கற்றல் அடைவு மற்றும் மன்ற செயல்பாடுகள் உள்ளிட்ட அனைத்தையும் 'எமிஸ்' தளத்தில் பதிவேற்றும் பணியிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் விளைவாக, வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் பாட வகுப்புகளை நடத்த முடியாத சூழல் உருவாகி வருவதாக தெரிவிக்கின்றனர்.
ஆசிரியர்கள் கூறுகையில், 'வெளியிடப்படும் அறிவிப்புகளை செயல்படுத்துவதற்கே அதிக நேரம் செல்கிறது. இதனால் பாடங்களை முழுமையாக எடுக்க முடியவில்லை. மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால், அறிவிப்புகளை செயல்படுத்தவும், பாடங்களை நடத்தவும் முடியும். இல்லையெனில் செயல்பாட்டில் தொய்வு ஏற்படும். மாணவர்களின் நலனுக்காக புதிய அறிவிப்புகளை வெளியிடும் அதேசமயம், போதியளவில் ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும்' என தெரிவித்தனர்.
அலகு விட்டு அலகு மாறுதல் மூலம் சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிய, பிற துறை முதுகலை ஆசிரியர்களுக்கு வாய்ப்பு!
National Teachers ' Awards 2025 - Selected Teachers List ( State Wise)
தமிழகத்தில் இருந்து சென்னை மயிலாப்பூர் தனியார் பள்ளி ஆசிரியை ரேவதி , திருப்பூர் அரசு பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோர் தேசிய ஆசிரியர் விருதுக்காக தேர்வு...
National Teachers ' Awards 2025 - Selected Teachers List ( State Wise).)
👇👇👇👇
இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் 1 கோடி மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர்: தமிழ்நாடு அரசு
Education News (கல்விச் செய்திகள்)
Employment News (Productivity செய்திகள்)
* ரூ .660 கோடியில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் 1 கோடி மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர் : தமிழ்நாடு அரசு
* எண்ணும் எழுத்தும் திட்டத்தில் 25.08 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர்.
* வாசிப்பு இயக்கம் திட்டத்தில் 1 முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் 44.50 லட்சம் மாணவர்கள் பயன்.
* ரூ .352.42 கோடியில் 38 மாதிரிப் பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )
திறனறி தேர்வுகளை எதிர்கொள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம்தோறும் பயிற்சி: பள்ளிக்கல்வித் துறையின் புதிய முன்னெடுப்பு
Education News (கல்விச் செய்திகள்)
Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
திறன் - ஆகஸ்ட் 2025 - மாதாந்திர மதிப்பீடுகள் - தேர்வு அட்டவணை
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )
எண்ணும் எழுத்தும்" - வகுப்பறை களங்கள் 2025 - 2026 (Ennum Ezhuthum - Classroom Corners & Zones)
எண்ணும் எழுத்தும் வகுப்பறை களங்கள் (Ennum Ezhuthum - Classroom Corners)...
✍🏻✍🏻✍🏻 எண்ணும் எழுத்தும் வகுப்பறை
🏵️களங்கள்🏵️
☀️ தமிழ்
1. பாடல் களம்
2. கதைக் களம்
3. படித்தல் களம்
4. படைத்தல் களம்
5. செயல்பாட்டுக் களம்
🌟 English
1. Song corner
2. Story corner
3. Reading corner
4. Activity corner
5. Craft corner
💫 கணக்கு
1. பாட்டுக் களம்
2. கலையும் கைவண்ணம்
3. பொம்மலாட்டக் களம்
4. செயல்பாட்டுக் களம்
5. வினாடி வினா
6. பேச்சும் தனி நடிப்பும் ..
✅ வகுப்பறையில் ஒருங்கிணைக்கும் போது சில களங்கள் பொதுவானதாக உள்ளது..
🏵️ வகுப்பறை களங்கள்🏵️
1. பாடல் களம் / Song corner
2. கதைக் களம்/ Story Corner
3. படித்தல் களம் / Reading Corner
4. படைத்தல் களம் / Creativity Corner
5. செயல்பாட்டுக் களம் / Activity Corner
6. கலையும் கைவண்ணமும் / Art and Craft Corner
7. பொம்மலாட்டக் களம் / Puppet Corner
8. வினாடி வினா களம் / Quiz Corner
9. பேச்சும் தனி நடிப்பும் / Speech and Mono Acting Corner
Ennum Ezhuthum Kalangal Pdf 👇
4 & 5 ஆம் வகுப்புக்கான எண்ணும் எழுத்தும் வகுப்பறை களங்கள்👇
Ennum Ezhuthum - 1 To 5th Std - Term 1 - ( Set - 13 ) Lesson Plan - T/M & E/M
Ennum Ezhuthum Lesson Plan | 2025 - 2026
TNTET - Paper 2 - Maths 6th std To 10th Std - Book Back Question With Answer
Education News (கல்விச் செய்திகள்)
Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
What's New
TNTET - Paper 2 - Maths 6th std To 10th Std - Book Back Question With Answer - Download here
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )
"கலைப்பட்டறை" பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்.
Education News (கல்விச் செய்திகள்)
Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
"கலைப்பட்டறை" பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்.
மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகம், கூட்ட அரங்கில் இன்று (20.08.2025) புதன்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களிடையே வாழ்வியல் திறன்களோடு அவர்களின் பன்முகத்திறன் வளர்ச்சியினை ஊக்குவிக்கும் பொருட்டு கலைத்திறன்கள் வாயிலாக மாணவர்களின் சிந்தனைகளை செம்மையாகவும், சிறப்பாகவும் வெளிப்படுத்துவதற்கு பயிற்சிப் பட்டறை முன்னோடி திட்டமாக "கலைப்பட்டறை" தொடங்கி வைக்கிறார்.
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )