PGTRB - முதுகலை ஆசிரியர் தேர்வு 2025 - சம்பள விவரம், கல்வித்தகுதி என்ன? என்னென்ன பாடங்களில் நிரப்பப்படுகிறது? - முழு விவரம்

   Education News (கல்விச் செய்திகள்)

தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறை உட்பட பல்வேறு துறைகளில் கீழ் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் மற்றும் கணினி பயிற்றுநர் ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 1,996 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அரசு பள்ளியில் ஆசிரியர் ஆக வேண்டும் என காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் மற்றும் கணினி பயிற்றுநர் ஆகிய பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பை ஒரு மாதத்திற்கு முன்பே வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்வில் மொத்தம் 1,996 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.



முதுகலை ஆசிரியர் தேர்வு 2025

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிக் கல்வித்துறை மட்டுமின்றி ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை, சென்னை மாநகராட்சி உட்பட பல்வேறு துறைகளில் கீழ் உள்ள 1996 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் முதுகலை ஆசிரியர் பதவிக்கு மட்டும் 1,837 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் கடந்த ஆண்டுகளில் உள்ள Backlog காலிப்பணியிடங்கள் 78 மற்றும் தற்போது உள்ள 1,759 காலிப்பணியிடங்கள் என நிரப்பப்படுகிறது.



என்னென்ன துறைகளில் எவ்வளவு காலிப்பணியிடங்கள்?

  • பள்ளிக் கல்வி இயக்குநரகம் 1,777
  • மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு நலத்துறை 23
  • ஆதிதிராவிடர் நலத்துறை 83
  • பழங்குடியினர் நலத்துறை 31
  • சென்னை மாநகராட்சி 43
  • கோயம்புத்தூர் மாநகராட்சி 16
  • மதுரை மாநகராட்சி 4
  • மாற்றுத்திறனாளிகள் நலத்துறை 12
  • தமிழ்நாடு வனத்துறை 7
மொத்தம் 1,996


என்னென்ன பாடங்களில் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது?

மொத்தம் 12 பாடங்களுக்கு முதுகலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். குறிப்பாக இயற்பியல், கணிதம், வேதியியல் தமிழ் ஆகிய பாடங்களில் அதிகப்படியான பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

  • இயற்பியல் - 233
  • கணிதம் - 232
  • வேதியியல் - 217
  • தமிழ் - 216
  • வணிகவியல் - 198
  • ஆங்கிலம் - 197
  • பொருளியல் - 169
  • தாவரவியல் - 147
  • விலங்கியல் - 131
  • வரலாறு - 68
  • புவியியல் - 15
  • அரசியல் அறிவியல் - 14


இவையில்லாமல் கணினி பயிற்றுநர் பதவிக்கு 57 பணியிடங்கள், உடற்கல்வி இயக்குநர் பதவிக்கு 102 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.



முதுகலை ஆசிரியர் கல்வித்தகுதி

மொழி பாடங்கள் உட்பட முதுகலை ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் அந்தந்த பாடங்களுக்கான முதுகலை பட்டப்படிப்பை 50% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும் அல்லது அதற்கு நிகரான கல்வித்தகுதியை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் மூலம் அங்கீகரிக்கப்பட்ட கல்வியியல் நிறுவனத்தில் B.Ed பட்டம் பெற்றிருக்க வேண்டும். (அல்லது)


முதுகலை பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 45% மதிப்பெண்களுடன், தேசிய ஆசிரியர் கவுன்சில் விதிமுறைகள் 2002 கீழ் உட்பட்டு B.Ed படிப்பை முடித்திருக்க வேண்டும். (அல்லது)


அதே போன்று, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் B.A.Ed.,/ B.Sc.Ed உள்ளிட்ட ஒங்கிணைந்த பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும், 50% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.


இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள் ஒரே பாடத்தை கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட நிகரான கல்வித்தகுதி குறித்த விவரங்களை https://tnsche.tn.gov.in/en/equivalence/ என்ற இணைப்பில் அறிந்துகொள்ளலாம்.


கணினி பயிற்றுநர் பதவிக்கு என்ன கல்வித்தகுதி?

கணினி பயிற்றுநர் பதவிக்கும் விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் அதற்கான முதன்மை பாடத்தில் முதுகலை பட்டப்படிப்புடன், B.Ed முடித்திருக்க வேண்டும். ஒருங்கிணைந்த இளங்கலை மற்றும் B.Ed பெற்று, முதுகலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.


உடற்கல்வி இயக்குநர் பதவிக்கான கல்வித்தகுதி

உடற்கல்வி இயக்குநர் நிலை -1 பதவிக்கு B.P.Ed/ BPE/ உடற்கல்வி மற்றும் விளையாட்டில் B.Sc ஆகியவை படித்திருக்க வேண்டும். அதே போன்று, 4 வருட ஒங்கிணைந்த பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். M.P.Ed படித்தவர்களும் தகுதியானவர்கள் ஆவார்கள்.


மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதிகள்?

முதுகலை பட்டப்படிப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி மற்றும் சிறப்பு கல்விக்கான B.Ed முடித்திருக்க வேண்டும் (அல்லது) B.Ed முடித்து பார்வைக் குறைபாடுள்ள / கேட்கும் குறைபாடுள்ளவர்களுக்கு கற்பித்தல் பாடத்தில் சீனியர் டிப்ளமோ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.


முதுகலை ஆசிரியர் சம்பள விவரம்

முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் ஆகிய பதவிகளுக்கு ரூ.36,900 முதல் ரூ.1,16,600 வரை சம்பளம் வழங்கப்படும்.




செப்டம்பரில் தேர்வு

1,996 காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வழியாக https://trb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் இன்று (ஜூலை 10) முதல் விண்ணப்பிக்க தொடங்கலாம். ஆகஸ்ட் 12- வரை விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. தொடர்ந்து, விண்ணப்பதார்களுக்கு செப்டம்பர் 28-ம் தேதி தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


SGT - List of selected candidates District Wise


பணி நியமனத்துக்கு மாவட்ட வாரியாக தேர்வாகியுள்ள இடைநிலை ஆசிரியர்கள் விவரம் :


  • Ariyalur - 24
  • Chengalpattu - 37
  • Chennai - 22
  • Coimbatore - 63
  • Cuddalore - 86


  • Dharmapuri - 113
  • Dindigul - 91
  • Erode - 107
  • Kallakurichi - 82
  • Kancheepuram - 34


  • Kanniyakumari - 24
  • Karur - 61
  • Krishnagiri - 64
  • Madurai - 122
  • Nagapattinam - 53
  • Namakkal - 50
  • Perambalur - 23
  • Pudukottai - 60
  • Ramanathapuram - 67

    • Ranipet - 37
    • Salem - 134
    • Sivagangai - 59
    • Tenkasi - 66
    • Thanjavur - 78


    • The Nilgiris - 11
    • Theni - 67
    • Tuticorin - 64
    • Tiruchirappalli - 87
    • Tirunelveli - 35


    • Tirupathur - 35
    • Tiruppur - 65
    • Tiruvallur - 66
    • Tiruvannamalai - 93
    • Tiruvarur - 56


    • Vellore - 33
    • Villupuram - 60
    • Virudhunagar - 97


      Total = 2342


      இடைநிலை ஆசிரியர்கள் & ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கான ஒதுக்கீடு விவரம்


      * இடைநிலை ஆசிரியர்கள் & ஆசிரியர்களுக்கு 8% ஒதுக்கீட்டின் படி 106 பணியிடங்களும்,  ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு 2% ஒதுக்கீடாக 12 பணியிடங்களும் உள்ளது.



      G TRB - தேர்வர்கள் விண்ணப்பித்தலுக்கான நேரடி இணைய இணைப்பு...


      Click Here - PG TRB - Exam Candidates Apply Now - Direct Link


  • Mayiladuthurai - 16


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பு.

 Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250711_074543

ஆன் - லைன் ( Online ) மூலம் விண்ணப்பங்களை வரவேற்றல் ஆகஸ்ட் 2025 - ல் நடைபெறவுள்ள தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 01.08.2025 அன்று 12 1/2 வயது பூர்த்தி அடைந்த தனித் தேர்வர்கள் 10.07.2025 ( வியாழக்கிழமை ) முதல் 17.07.2025 ( வியாழக்கிழமை ) வரை ( ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக ) இவ்வலுவலக இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு ( Service Centres ) சென்று ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் . மேற்காண் தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் 18.07.2025 மற்றும் 19.07.2025 ஆகிய இரு நாட்களில் தட்கல் முறையில் தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ .500 / - செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம் .

8th Private Candidates Public Exam    Time Table & Instructions - Download here


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Kamarajar Song in Tamil | காமராஜர் பாடல் வரிகள்

  Education News (கல்விச் செய்திகள்)

Kamarajar Song in Tamil | காமராஜர் பாடல் வரிகள்

நாட்டு மக்களின் நலனுக்காக பாடுபட்டவர்களில் காமராஜரும் ஒருவர். நாளை ஜூலை 15-ம் தேதி காமராஜரின் பிறந்த நாள். இவரது பிறந்த நாளை தான் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுகிறோம். இவர் தனது நாட்டிற்காக செயல்களை சொல்ல வேண்டுமென்றால் சொல்லி கொண்டே போகலாம். இந்த பதிவில் காமராஜரை பற்றிய பாடல் வரிகளை பற்றி காண்போம்.


உன்னை போல் தலைவர் உண்டோ பாடல் வரிகள்:

உன்னை போல் தலைவர் உண்டோ?

உழைப்பாலே உயர்ந்தவரே!!

அன்னை சிவகாமி பெற்ற

ஆசியாவின் திருவிளக்கே!!!

அன்பிலே ஆழ்ந்த நிலை

ஆற்றலிலே இமயமலை!!

ஆதரவும் நிலைபெறவே ஆலமரம் போன்றவரே

எத்தனையோ தலைவர் உண்டு


இருந்தாலும் உமக்கு இணையோ

ஏழைக்கு என பிறந்தவரே

“எங்கள் குல நாயகரே”

நீரின்றி உலகு இல்லை

நீரின்றி நம் குலம் இல்லை

ஏழைக்கு என பிறந்தவரே

உத்தமரே “காமராஜா”

மக்கள் சுகம் வேண்டியால்லோ


மனம் முடிக்க மறந்தவரே

உன் புகழை பார்த்தாலே உனக்கு நிகர்

ஒரு புலவன் இல்லை

எழுத்தாலே வடித்து எடுக்க ஏழைகளும் போதவில்லை

சொத்து சுகம் உமக்கு இல்லை

சொந்த வீடும் உமக்கு இல்லை மக்கள் மனசே வீடு என்று குடி புகுந்த எம் தலைவா…

இன்று நாடார்களின் குலதெய்வமாய் ஆனாய்

எங்கள் ஐயா


வாழ்க நாடார் குலம்!!!!!!!!

வளர்க நாடார் குலம் !!!!


குழந்தை பாட்டு:

அன்பு உள்ளம் கொண்டவர்


அருமை காமராஜராம்


எல்லாரும் படிக்கவே


ஏற்ற வழி செய்தவர்.


பள்ளி செல்லும் பிள்ளைகள்


கால் வலிக்க நடக்காமல்


பக்கத்திலே படித்திட


பள்ளிகளைத் திறந்தவர்.


படிக்கும் நல்ல பிள்ளைக்கு


மதிய உணவு தந்தவர்


ஒரே நிறத்தில் சீருடை


ஒன்றாய் அணியச் சொன்னவர்.


காந்தி வழி நின்றவர்


உத்தமராம் காமராஜர்


நினைவை என்றும் போற்றுவோம்


பிள்ளைகளே வாருங்கள்!


காமராஜர் பாடல் வரிகள்:

நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா


நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா


தன் வீடு பார்க்காமல் வாழ்வு பார்க்காமல்


இந்த நாடு முன்னேற நாளும் உழைத்தவனை


நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா


நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா


பள்ளி அறியாத பிள்ளை பல பேரின் முகத்தை பார்த்தானம்மா


அது ஊரு சுற்றாமல் சோறு தான் போட்டு படிக்க வைத்தானம்மா


மாடு பிடித்த கையில் ஏடு கொடுத்த மகராஜன் இவன் தானம்மா


இந்த ஊரு உலகெங்கும் தேடிப் பார்த்தலும் ஈடு எவன் தானம்மா


வலிமை இருந்த போதும் மிக எளிமையோடு இருந்தார்


பிள்ளை உள்ளம் கொண்ட எங்கள் கருப்பு காந்தி இவரே


நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா


பதவி இருந்தாலும் பதவி போனாலும் உதவி புரிவானம்மா


தன்னைப் பெற்ற தாயை விட பிறந்த நாடுதான் பெரிது என்பானம்மா


ஆற்று நீரையே அணைகள் கட்டியே தேங்க வைத்தானம்மா


அங்கு தேங்கும் நீரில் மின்சாரம் எடுத்து விளக்கேற்றி வைத்தானம்மா


வலிமை இருந்த போதும் மிக எளிமையோடு இருந்தார்


பிள்ளை உள்ளம் கொண்ட எங்கள் கருப்பு காந்தி இவரே


நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா


தன் வீடு பார்க்காமல் வாழ்வு பார்க்காமல்


இந்த நாடு முன்னேற நாளும் உழைத்தவனை


நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா



Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

காமராஜரை பற்றி 10 கட்டுரை வரிகள் – Kamarajar History in Tamil 10 Points:-

  Education News (கல்விச் செய்திகள்)

10 Points About Kamarajar in Tamil | Kamarajar Speech in Tamil 10 points

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.. படிக்காத மேதை, கர்ம வீரர், தென்னாட்டின் காந்தி, பெருந்தலைவர் இவ்வாறு உலக மக்களால் அழைக்கப்படுபவர் தான் காமராஜர். இவருடைய ஆட்சி காலம் தான் தமிழகத்தின் பொற்காலம் என்று பாராட்டப்படிருக்கு. இப்போது இருக்கின்ற அரசியல்வாதிகள் இருந்து, அப்போது இருந்த அரசியல் வாதிகள் வரை அனைவரும் சொல்வது என்னவென்றால் காமராஜர் மாதிரி நாங்களும் நல்ல ஆட்சியை தருவோம் என்று தான். ஏராளமான தொழிற்சாலைகள், நீர்த்தேக்க அணைகள், மக்களுக்கு உண்மையிலேயே பயன்படும் நலத்திட்டங்கள், கல்வியில் மிக பெரிய வளர்ச்சி இப்படி தமிழ்நாட்டிற்காகவே உழைத்த உன்னத தலைவர் தான் காமராஜர். இவரது வாழ்க்கை பற்றிய சில தகவல்களை இங்கு நாம் பார்க்கலாம்.


காமராஜரை பற்றி 10 கட்டுரை வரிகள் – Kamarajar History in Tamil 10 Points:-

குமார ஸ்வாமி காமராஜ் காம ராஜா என்று பிரபலமாக அறியப்படுகிறார். அவர் ஒரு இந்திய சுதந்திர ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.காமராஜர் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி தமிழ்நாட்டில் பிறந்தார். ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். அவரது குடும்பம் வறுமை மற்றும் பாகுபாடுகளுடன் போராடியது.1920-யில், அவருக்கு 18 வயதாக இருந்தபோது, அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டார், மேலும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1954 முதல் 1963 வரை தமிழக முதல்வராகப் பணியாற்றினார்.காமராஜர் தமிழக முதல்வராக இருந்த கால கட்டத்தில் தமிழ் நாட்டில் Sugar Factory ஒன்றுகூட இல்லாமல் இருந்ததாம். இதன் காரணமாக உடனடியாக காமராஜர் தமிழ் நாட்டில் 10 Sugar Factory-ஐ திறக்க வேண்டும் முடிவெடுத்தார்.


காமராஜர் ஆட்சி காலத்தில் தான் இலவச கல்வி மற்றும் சீருடை மற்றும் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். நாட்டில் மூடப்பட்டிருந்த பள்ளிகளை திறந்தார். 17,000 பள்ளிகளையும் புதிதாகவும் திறந்தார். இதனால் தான் இவர் கல்வி கண் என்றழைத்தார்கள். குழந்தைகள் வறுமையினால் சிறுவயதிலையே வேலைக்கு போனார்கள். இதனை பார்த்து வருத்தப்பட்டார். அதனால் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரித்தார். முதல் முறையாக ஆயிரம் விளக்கு என்ற பகுதியில் தான் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். ஒரு வேளை உணவு கிடைக்கும் என்ற எண்ணத்துடன் குழந்தைகள் பள்ளிக்கு வர ஆரம்பித்தார்கள். அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஆனது 37% உயர்ந்தது.


விவசாயம், கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பு மகத்தானது. ஒரு சமையம் திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் போது போற வழியில் சில கிராம மக்கள் ஒன்று சேர்த்து அவர் வந்துகொண்டிருந்த காரை வழிமறித்துள்ளனர். அப்பொழுது காமராஜர் அவரது வண்டியை நிருத்த சொல்லி காரில் இருந்து இறங்கி கிராம மக்களிடம் என்ன பிரச்சனை என்று கேட்டாராம். அதற்கு அந்த கிராம மக்கள் அவர்கள் ஊரில் மின்சாரம் இல்லை என்று கூறியுள்ளார். உடனே காமராசர் இன்ஜினியர்களை வர சொல்லி என்ன பிரச்சனை என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் சிமிண்ட் கம்பம் இப்பொழுது இங்கு இல்லை அது வெஸ்ட்பெங்காலில் இருந்து வர வேண்டும் என்று கூறியுள்ளனர்.


உடனே இரண்டு நிமிடம் தான் காமராசர் யோசித்தார் அந்த கிராம மக்களிடம் வீட்டுக்கு ஒரு பணம் மரம் குடிப்பிங்களானு கேட்டுருக்காரு. அந்த மக்களும் தரோம்னு சொல்லிருக்காங்க. அந்த பணம் மரத்தை வைத்து கரண்ட் கனெக்சன் கொடுக்க முடியுமா என்று காமராசர் இன்ஜினியரிடம் இன்ஜினியர்கள் கொடுக்கமுடியும் என்று கூறியுள்ளனர். அதன் பிறகு அந்த கிராமத்திற்கு வெளிச்சம் கிடைத்தது.


இந்தியா சீனா போர் முடிந்த காலத்தின் போது அந்த யுத்தத்தில் இந்திய இராணுவத்திற்கு பெரும் சேதம். அந்த சாமியாயத்தில் காமராஜர் நேரு அவர்களை பார்க்க சென்றுருக்கிறார். அப்பொழுது நேரு ஒரே குழப்பத்தில் இருந்துள்ளார். அப்பொழுது காமராஜர் நேருவிடம் ஏன் இவ்வளவு குழப்பத்தில் இருக்கீங்கன்னு கேட்டுருக்காங்க அதற்கு நேரு நமது இந்திய ராணுவத்தை பலப்படுத்த அமெரிக்காவில் சில ஆயுதங்கள் வாங்க வேண்டி இருக்கு.


அதுவும் அங்கு உள்ள பொருட்கள் இந்தியாவிற்கு வர வேண்டும் என்றால் அங்குல ஏதாவது ஒரு வங்கி கேரண்டி தர வேண்டும். ஆனால் எந்த வங்கியும் இந்தியாவிற்கு கேரண்டி தர மறுக்கின்றனர் என்று நேரு காமராஜரிடம் கூறியுள்ளார். அதற்கு காமராஜர் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் இந்தியாவில் ஏதாவது அவர்கள் நடத்தும் நிறுவனம் இருக்கிறதா என்று கேட்டார். அப்படி இருந்தால் அந்த நிறுவனகளை உடனடியாக இந்தியாவில் மூட சொல்லுங்கள் என்றார்.


நேருவும் அதன்படி செய்ய அமெரிக்கா நடுங்கிப்போய் நின்றதாம். அதன் பிறகு நமது இந்தியாவிற்கு கேரண்டி கிடைத்ததாம். காமராஜருக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயத்தில் ஒன்று தான் பத்திரிகையாளர்களை சந்திப்பது. ஆகவே பத்திரிகையாளர்களை அடிக்கடி சந்தித்து ஒரு நண்பரை போல் பழகுவாராம். தனக்கு தெரிந்த அனைத்து விஷயங்களையும் காமராஜர் பத்திரிகையாளர்களிடம் வெளிப்படையாக சொல்லிவிடுவாராம்.


காமராஜர் காரில் செல்லும் போது மேடையில் ஒரு பையன் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து, எதிர்க்கட்சியை கடுமையாக விமரிசித்து பேசியுள்ளான். உடனே அவர் சென்றுகொண்டிருந்த கரை நிறுத்தி அந்த பையன் பேசி முடித்த பின் அவனை கூப்பிட சொல்லிருக்காரு காமராஜர்.


அந்த பையன் வந்ததற்கு பிறகு ஓங்கு ஒரு அரைவிட்டுருக்காரு, உனக்கு அரிசியால் பத்தி என்ன தெரியும், படிக்கும் வயதில் உனக்கு அரசியல் தேவையா.. ஒழுங்காக படி, உங்க அப்பாவை அழைத்துக்கொண்டு நேரில் என்னை வந்து பாருன்னு சொல்லிருக்காரு. இந்த பாயிண்ட் எதுக்கு சொல்றேன் அப்படினா காசு கொடுத்து நிறைய ஆட்களை சேர்க்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் இப்படி ஒரு அரசியல் தலைவரை பார்ப்பது அதிசயம் தான்.


ஒரு மனிதனுக்கு கல்வி, நிறம், செல்வம் இந்த மூன்றுமே மிகவும் முக்கியம் என்று சொல்வார்கள் ஆனால் இந்த மூன்றுமே பெரிதாக இல்லாத ஒருவர் இந்த உலகத்தையே தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்தார் அப்படினா அது நமது பெரும் தலைவர் காமராசராக மட்டும் தான் இருக்க முIடியும். 1976-ல் இந்தியாவின் உயரிய குடிமகன் விருதான பாரத ரத்னா விருது அவருக்கு வழங்கப்பட்டது.



Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )