B Sc., Agriculture படிக்க விரும்பும் அனைவரும் அவசியம் முழுவதுமாக படிக்க வேண்டிய பதிவு

    Education News (கல்விச் செய்திகள்) 


இந்திய அளவிலும், உலகளாவிய நிலையிலும் வேளாண்மைக் கல்வியில் முதன்மைக் கல்வி நிறுவனமான கோயம்புத்தூரில் உள்ள ‘‘தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்’’ 




படிப்புகள் :


1. இளம் அறிவியல் (வேளாண்மை) - B.Sc. (Agriculture)


2. இளம் அறிவியல் (தோட்டக்கலை) - B.Sc. (Horticulture)


3. இளம் அறிவியல் (வனவியல்) - B.Sc. (Forestry)


4. இளம் அறிவியல் (உணவு, ஊட்டச்சத்தியல், உணவு முறையியல்) - B.Sc. (Food, Nutrition, Food Systems)


5. இளம் அறிவியல் (பட்டு வளர்ப்பு) - B.Sc. (Sericulture)


6. இளம் தொழில்நுட்பம் (வேளாண்மை பொறியியல்) - B.Tech. (Agricultural Engineering)


7. இளம் தொழில்நுட்பம் (தோட்டக்கலை) - B.Tech. (Horticulture)


8. இளம் தொழில்நுட்பம் (உயிர் தொழில்நுட்பவியல்) - B.Tech. (Bio Industrial Technology)


9. இளம் தொழில்நுட்பம் (ஆற்றல் மற்றும் சுற்றுப்புறச் சூழலியல்) - B.Tech. (Energy and Environment)


10. இளம் தொழில்நுட்பம் (உணவு பதன் செய் பொறியியல்) - B.Tech. (Food Processing Engineering)


11. இளம் அறிவியல் (வேளாண் வணிக மேலாண்மை) - B.Sc. (Agriculture Business Management)


12. இளம் தொழில்நுட்பம் (வேளாண்மை தொழில்நுட்பம்) - B.Tech. (Agricultural Industrial Technology)


யார் விண்ணப்பிக்கலாம்?

இளம் அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் பிளஸ்டூவில் தேர்ச்சி தேவை. தொழில்நுட்பப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, அறிவியல் பிரிவுகளில் கணிதம் ஒரு பாடமாக இருக்க வேண்டும்.


இப்படிப்புகளுக்குத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு, பன்னி ரெண்டாம் வகுப்பு. வேறு மாநிலங்களில் பயின்றவர்களாக இருப்பின், இவர்கள் நிரந்தர இருப்பிடச் சான்றிதழை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பவர்கள் 1/7/2021அன்றைய நிலவரப்படி 21 வயதுக்குள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர்களுக்கு வயது வரம்பில்லை. 


எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?

இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, பொதுப்பிரிவினர், பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ரூ. 600, ஆதிதிராவிடர், ஆதிதிராவிட அருந்ததியர்,பழங்குடியினர் ரூ. 300 செலுத்த வேண்டும்.


<www.tnau.ac.in> / admission.html. என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


எங்குக் கல்லூரிகள் உள்ளன?


கோயம்புத்தூர் வளாகம்:

1. வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.

2. தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.

3. வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.


மதுரை வளாகம்:

1. வேளாண்மைப் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.

2. ஹோம் சயின்ஸ் கல்லூரி அண்ட் ரிசர்ச் இன்ஸ்ட்டியூட்.


திருச்சி வளாகம்:

1. வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுனவம் குமுலூர், திருச்சி.

2. அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.

3. பெண்களுக்கான தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.


கிள்ளிக்குளம் வளாகம்:

வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் கிள்ளிக்குளம், திருநெல்வேலி.


பெரியகுளம் வளாகம்:

தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம், பெரியக் குளம், தேனி.


மேட்டுப்பாளையம் வளாகம்:

வனவியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் மேட்டுப்பாளையம்.


ஈச்சங்கோட்டை வளாகம்:

வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் ஈச்சங்கோட்டை, தஞ்சாவூர்.


குடுமியான்மலை வளாகம்:

வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் குடுமியான்மலை, புதுக்கோட்டை.


வாழவச்சனூர் வளாகம்:

வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் வாழவச்சனூர், திருவண்ணாமலை.


மொத்த இடங்கள்:

B.Sc. Agriculture - 600

B.Sc. Horticulture - 125

B.Sc. Forestry - 45

B.Sc. Food & Nutrition - 45

B.Tech. (Agri. Engg) - 70

B.Sc. (Sericulture) - 30

B.Tech. (Horticulture) - 30

B.Tech. (Food Process Engineering) - 55

B.Tech. (Energy & Environment Engg.) - 55

B.Tech. (Bio Technology) - 55

B.Tech. (Bio Informatics) - 35

B.Sc. (Agri Business Management) - 45

B.Tech. (Agri Information Tech) - 30


வேளாண் பல்கலைக்கழகம் அங்கீகாரம் உள்ள தனியார் கல்லூரிகள் :

கலவை (வேலூர்), பெரம்பலூர், பொள்ளாச்சி, கண்ணனூர் (திருச்சி), நாமக்கல், தஞ்சை, குள்ளபுரம் (தேனீ), சக்தி நகர் (ஈரோடு), டி.என்.பாளையம் (ஈரோடு), தக்கோலம் (அரக்கோணம்), செம்பட்டி (திண்டுக்கல்), மா.பொடையூர் (கடலூர்), வேடச்சந்தூர் (திண்டுக்கல்), வாசுதேவ நல்லூர் (திருநெல்வேலி), சன்னாவனம் (காரைக்குடி), பேரையூர் (கமுதி), ஓசூர், உசிலம்பட்டி, ராதாபுரம் (திருநெல்வேலி), நெடுஞ்கூர் (திருச்சி) என்ற இடங்களில் உள்ள *கல்லூரிகளின் 65% இடங்கள் பல்கலைக்கழகத்தின் கலந்தாய்வு வழியாக நிரப்பப்படும்*.


*எவ்வாறு மாணவர் சேர்க்கை நடைபெறும்?*

XII மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்


Aggregate Mark = Sum of [(Marks got in each subject / Maximum marks of that subject) ? 50]


ஒருவருக்கு மேல் ஒரே மதிப்பெண் இருப்பின்,

1. 50 மதிப்பெண்ணிற்குக் கணிதம் மதிப்பெண். கணிதம் இல்லாவிடில் உயிரியல் அல்லது (தாவரவியல் + விலங்கியல்)

2. 50 மதிப்பெண்ணிற்கு இயற்பியல்

3. 50 மதிப்பெண்ணிற்கு வேதியியல்

4. வயதில் மூத்தவர் என்ற வரிசையில் முன்னுரிமை தரப்படும்.


விண்ணப்பத்திற்கு​--- குறைந்ததகுதி பொதுப்பிரிவினர்க்கு 55%, பிற்படுத்தப்பட்டவர், முஸ்லீம் பிற்படுத்தப்பட்டவர் 50%, பிற மிகவும் பிற்படுத்தப்பட்டவர் 45% என்றும், ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர்  அருந்ததியர், பழங்குடியினர்க்கு குறைந்தபட்ச தேர்ச்சி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 கோவை வேளாண் பல்கலைக்கழகம் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு

மாணவர்கள் விண்ணப்பங்களை அனுப்ப விரைவில் அறிவிப்பு வெளியாகும்.  

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

12th Supplementary Exam June 2025 - Time Table & Instructions - DGE Letter

    Education News (கல்விச் செய்திகள்) 

மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வு - விண்ணப்ப விவரம் மற்றும் தேர்வுக் கால அட்டவணை வெளியீடு!


Click Here to Download - 12th Supplementary Exam June 2025 - Time Table & Instructions - DGE Letter - Pdf

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

வேலை வாய்ப்புகளை வழங்கும் ஊட்டச்சத்து - உணவியல் துறை படிப்புகள்!

 Education News (கல்விச் செய்திகள்) 


மக்களிடம் மாறிவரும் உணவு பழக்க வழக்கங்களின் விளைவாக அதிகரித்து வரும் உடல் பருமன் மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிப்பு ஏற்படும் போது அவற்றை சீரமைத்துக் கொள்ள, எந்த உணவை சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும், எந்தந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் மற்றும் ஊட்டச்சத்து மிகுந்த உணவு, உடலுக்கு ஏற்ற உணவினை அறிந்துக் கொள்ள உணவியல் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் உதவியை மக்கள் நாடுகின்றனர்.

கர்ப்பிணிகள், விளையாட்டு வீரர்கள், குழந்தைகள் உணவிலுள்ள ஊட்டச்சத்துக்களை முழுமையாகப் பெறுவதற்கும் உடலில் ஏற்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறையை சரி செய்யவும் ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனைகள் அவசியமாகிறது என்பதால் ஊட்டச்சத்து மற்றும் திட்ட உணவியல் துறை படிப்புகளுக்கு மாணவர்களிடம் வரவேற்பு அதிகரித்து உள்ளது.




எப்படி சாப்பிட வேண்டும், எதை சாப்பிட வேண்டும், எப்பொழுது சாப்பிட வேண்டும் என்பதுடன் எத்தகைய உணவுகளை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது ஆலோசனைகளை வழங்குபவர் ஊட்டச்சத்து மற்றும் திட்ட உணவியல் நிபுணர்கள். அவர்களை உருவாக்குகின்ற படிப்புகள் குறித்து அறியலாம். இந்த துறையில் பட்டயப்படிப்புகளாக 1. உணவு மற்றும் சத்துணவியல், 2. பொதுசுகாதாரம் ஊட்டச்சத்துவியல் 3. குழந்தைகள் பருவ பராமரிப்பு ஆகியவை உள்ளது.




ஊட்டச்சத்து மற்றும் உணவியல் துறை மருத்துவம் சார்ந்த துறை என்றாலும் இந்த படிப்புக்கு எந்த நுழைவுத்தேர்வும் கிடையாது. ஆனால் ப்ளஸ் 2-வில் பயாலஜி, கெமிஸ்ட்ரி படித்தவர்களாக இருக்க வேண்டும். இளங்கலை படிப்பில் பிஎஸ்சி. ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை., மருத்துவ சத்துணவியல் மற்றும் உணவு முறை., உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்துவியல்., மனை அறிவியல் ஆகிய படிப்புகள் வழங்கப்படுகிறது.





முதுகலையில் உணவு மற்றும் சத்துணவியல், உணவு சேவை மேலாண்மை மற்றும் உணவு முறை., உணவு அறிவியல் மற்றும் சத்துணவியல்., உடற்பயிற்சி உடலியல் மற்றும் சத்துணவியல் ஆகிய படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த படிப்புகளை முடித்தவர்களுக்கு, உணவியல் நிபுணர், ஊட்டச்சத்து நிபுணர், உணவு தொழில்நுட்பவியலாளர், உணவு விஞ்ஞானி, ஊட்டச்சத்து ஆலோசகர், உடல்நலம் மற்றும் ஆரோக்கிய ஆய்வாளர், உணவுப் பொருள் மேம்பாட்டு மேலாளர் வேலை வாய்ப்பு பெறலாம்.




உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டில் நிபுணர், ஆய்வகங்களில் உணவுப் பொருள்களை பரிசோதிக்கும் பணியில், உணவுத் தொழில்களில் தரக் கட்டுப்பாட்டில், சுகாதாரத் துறைகளில், ஆய்வு மற்றும் மேம்பாட்டுத் துறைகளில், சுகாதாரத்துறையில், உணவுப் பதப்படுத்துதலில், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டில், உணவுப் பொருள்களின் பாதுகாப்பு, சுகாதாரத்துறையில் ஊட்டச்சத்து, உணவுப் பதார்த்தங்களின் ஊட்டச்சத்து மதிப்பு, உணவுப் பொருள் மேம்பாடு, உணவுப் பொருட்கள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி போன்ற துறைகளிலும் வேலை வாய்ப்புகள் உள்ளன.


சமூக நலன் மற்றும் மேம்பாட்டு துறை, பொது சுகாதாரம், மருந்து நிறுவனங்கள், இந்திய சுகாதார அமைச்சகம், உணவு பதப்படுத்துதல் துறை அரசு மற்றும் தனியார் ஆய்வு அமைப்புகள், உணவு தொழிற்சாலைகள், தனியார் மருத்துவமனைகள், சுற்றுலா நிறுவனங்கள், உணவு உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றில் விளையாட்டு ஊட்டச்சத்து நிபுணர், உணவியல் நிபுணர், மருத்துவ உணவியல் நிபுணர், சமூக உணவியல் நிபுணர், குழந்தை மருத்துவ நிபுணர் மற்றும் உணவியல் ஆலோசகர் என வேலைவாய்ப்புகள் உள்ளன.


தமிழகத்தில் பெரும்பாலான பல்கலைக் கழகங்களின் கீழ் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இந்த படிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வில் சாதிக்க துணைபுரியும் பி.ஏ. அரசியல் அறிவியல் படிப்பு!

 
  Education News (கல்விச் செய்திகள்) 

1361139

பி.ஏ. அரசியல் அறிவியல் படிப்பவர்கள் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறலாம் என இலவச ஐஏஎஸ் பயிற்சியாளரும், கோவை அரசு கலைக் கல்லூரி அரசியல் அறிவியல் துறை தலைவருமான பி.கனகராஜ் கூறுகிறார்.


இதுகுறித்து அவர் மேலும் கூறியது: “பி.ஏ. அரசியல் அறிவியல் படிப்பைப் பொறுத்தவரையில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற முக்கிய பாடமாக உள்ளது. யுபிஎஸ்சி போட்டி தேர்வுக்கான முதல்நிலைத் தேர்வில் அரசியல் அறிவியல் பாடத்தில் 25 மதிப்பெண்கள் உள்ளது. முதன்மைத் தேர்வில் பொது அறிவு இரண்டாம் தாளில் 250 மதிப்பெண்கள் வருகிறது. பொது கட்டுரை தாளில் 250 மதிப்பெண் வருகிறது.


சிவில் சர்வீஸ் போட்டி தேர்வு நேர்காணலில் அரசியல் மற்றும் சர்வதேச அரசியல் தொடர்பான கேள்விகள் தான் அதிகம் கேட்கப்படும். சிவில் சர்வீஸ் போட்டி தேர்வில் விருப்ப பாடமாக அரசியல் அறிவியலை தேர்ந்தெடுத்தால் 500 மதிப்பெண்கள் வரும். சிவில் சர்வீஸ் போட்டி தேர்வில் மொத்த மதிப்பெண்களில் 40 சதவீத அளவுக்கு அரசியல் அறிவியல் பாடத்தில் இருந்து கேட்கப்படுகிறது. அதேபோல டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளில் 20 சதவீத மதிப்பெண்கள் அரசியல் அறிவியல் பாடத்தில் இருந்து வருகிறது. இந்தியாவில் போட்டித் தேர்வு மூலம் வேலைவாய்ப்பு பெற விரும்புவோர் அரசியல் அறிவியல் பாடத்தைத் தேர்ந்தெடுத்து படிக்கலாம்.


அச்சு மற்றும் காட்சி ஊடகத்தில் பணிக்கு சேர விரும்புவோர் அரசியல் அறிவியல் பாடத்தை எடுத்து படிக்கலாம். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு செல்வோரும் அரசியல் அறிவியல் பாடத்தைத் தேர்ந்தெடுக்கலாம். ஆங்கில வழியில் அரசியல் அறிவியல் பாடத்தை படித்தால் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பணிக்கு செல்லலாம். அரசியல் மற்றும் அமைப்புகள் சார்பில் சிந்தனை கூடத்தில் (திங்க் டேங்கர்ஸ்) சமூக அக்கறை உள்ளவர்கள் நடத்துவதில் பங்கேற்று மக்களுக்கு சிந்தனை, கருத்துகளை ஊடகங்களில் எழுதலாம்.


நாட்டில் 700 எம்.பி., முதல் சுமார் 10,000 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். எனவே அரசியல் அறிவியலை படித்த மாணவர்கள், எதிர்காலத்தில் அரசியலை எதிர்காலமாக தேர்ந்தெடுக்க சரியான படிப்பு அரசியல் அறிவியல் பாடம் என்பதை உணர வேண்டும். பன்னாட்டு அமைப்புகளான ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வங்கியில் பணியாற்றவும் அரசியல் அறிவியல் பாடம் முக்கியமானதாகும். பொது வாழ்க்கையில் ஆர்வம் உள்ளவர்கள் அரசியல் அறிவியல் பாடத்தை தேர்ந்தெடுக்கலாம்.


தேர்தல் காலங்களில் தேர்தலுக்கு முந்தைய, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிடும் பணியில் ஈடுபடுவோர் அரசியல் அறிவியல் படித்தவர்களாக இருப்பர். அரசியல் கட்சிகளில் தரவுகளை தொகுத்து வழங்கும் பணியிலும் கூட அரசியல் அறிவியல் பாடம் படித்தவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு” என்றார்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

MEDICAL , ALLIED HEALTH SCIENCE AND SCIENCE SUBJECT COURSES ( Revised )

   Education News (கல்விச் செய்திகள்) 

IMG_20250511_084618

மருத்துவம் , மருத்துவம் சார்ந்த படிப்புகள் மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகள் 

MEDICAL , ALLIED HEALTH SCIENCE AND SCIENCE SUBJECT COURSES ( MEDICAL COURSES ) ( MBBS )

Revised-After-12th-Medical-Courses.pdf 👇👇👇👇

Download here


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TN-NHIS App Login Method & NHIS E-Card Download Procedure...

   Education News (கல்விச் செய்திகள்) 

IMG_20250511_102016

TN-NHIS APP மூலமாக NEW NHIS ID CARD 2021 DOWNLOAD செய்வது எவ்வாறு?

TN-NHIS Appல் Login செய்யும் முறை & NHIS E-Card தரவிறக்கம் செய்வதற்கான வழிமுறை - PDF...

TN-NHIS App Login Method & NHIS E-Card Download Procedure.pdf

👇👇👇👇

Click here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

3, 5, 8-ம் வகுப்பு மாணவர்கள் கற்றல் நிலை தேசிய சராசரியைவிட சிறப்பு: மாநில திட்டக் குழு தகவல்

   Education News (கல்விச் செய்திகள்) 

தேசிய சராசரியைவிட தமிழகத்தில் 3, 5, 8-ம் வகுப்பு மாணவர்களின் கல்வித் தரம் சிறப்பாக உள்ளதாக மாநில திட்டக் குழு மற்றும் பள்ளிக்கல்வித் துறை இணைந்து நடத்திய கற்றல் அடைவு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக அவ்வப்போது ‘ஸ்லாஸ்’ எனும் மாநில கற்றல் அடைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு மாணவர்களின் கற்றல் விளைவுகளை அறிந்து மேம்படுத்தவும், பாடத்திட்டம், கற்பித்தல் மற்றும் ஆசிரியர் பயிற்சி ஆகியவற்றில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. இதற்கிடையே மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் சில தனியார் அமைப்புகள் நடத்திய ஆய்வில் தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கற்றல் நிலை சற்று பின்தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின.


இதை முன்வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவியும் கருத்து தெரிவித்ததால் இந்த விவகாரம் சர்ச்சையானது. இதையடுத்து பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை முழுமையாக ஆராய்வதற்காக பிரத்யேக ஆய்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டது. இதற்காக ஏற்கெனவே நடத்திவரும் ‘ஸ்லாஸ்’ தேர்வை மாநிலத் திட்டக்குழுவுடன் இணைந்து விரிவாக மாநிலம் முழுவதும் உள்ள 45,924 அரசு, அரசு உதவி பள்ளிகளிலும் நடத்த முடிவானது.


அதன்படி நடப்பாண்டு 3, 5, 8-ம் வகுப்பு பயிலும் 15.78 லட்சம் மாணவர்களில் 9 லட்சத்து 80,341 (66%) பேர்களிடம் ஸ்லாஸ் தேர்வு பிப்ரவரி 4 முதல் 6-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த ஆய்வுத் தரவுகளின்படி தயாரிக்கப்பட்ட மாநில அளவிலான கற்றல் அடைவுத்தேர்வு-2025 எனும் தொகுப்பறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், மாநிலத் திட்டக்குழுவின் செயல் துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று (மே 10) சமர்பித்தார். இந்நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.


அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து ஜெயரஞ்சன் நிருபர்களிடம் கூறியதாவது: இத்தகைய ஆய்வு முதல் முறையாக தமிழகத்தில் நடத்தப்படுகிறது. இந்த ‘ஸ்லாஸ்’ தேர்வு கொள்குறி வினாத்தாள் அடிப்படையில் நடத்தப்பட்டது. இதற்கான வினாத்தாளில் 3-ம் வகுப்புக்கு 35 கேள்விகள், 5-ம் வகுப்புக்கு 45 வினாக்கள், 8-ம் வகுப்புக்கு 50 கேள்விகள் இடம்பெற்றன. தேர்வறை கண்காணிப்பாளர்களாக கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் 38,760 பேர் செயல்பட்டனர்.


இந்த ஆய்வின் சிறப்பம்சம் அதிகளவிலான நபர்களிடம் மேற்கொள்ளப்பட்டதாகும். அதிலும் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு நடத்தப்பட்டது. அதாவது, 3, 5-ம் வகுப்புகளுக்கு தலா 20 மாணவர்கள் மற்றும் 8-ம் வகுப்புக்கு 30 பேர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகளின்படி 3-ம் வகுப்பு மாணவர்கள் தமிழ் பாடத்தில் 67%, ஆங்கிலத்தில் 69%, கணிதத்தில் 54%, சூழ்நிலையியல் 76% அடைவை பெற்றுள்ளனர். 5-ம் வகுப்பு மாணவர்கள் தமிழ் பாடத்தில் 76%, ஆங்கிலத்தில் 51%, சூழ்நிலையியல் மற்றும் கணிதத்தில் 57% அடைவை பெற்றுள்ளனர்.


இதேபோல், 8-ம் வகுப்பு மாணவர்களை பொருத்தவரை தமிழ் பாடத்தில் 52%, ஆங்கிலத்தில் 39%, கணிதத்தில் 38%, அறிவியல் 37%, சமூக அறிவியல் பாடத்தில் 54% அடைவு பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக 2021-ம் ஆண்டு மத்திய அரசின் நாஸ் ஆய்வுடன் ஒப்பிடுகையில்தமிழகத்தின் கற்றல் நிலை தேசிய சராசரியைவிட உயர்ந்துள்ளது. குறிப்பாக ‘எண்ணும் எழுத்தும்’ உட்பட சில திட்டங்களால் 3, 5-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் அடைவு நிலை சிறப்பாக நிலையில் உள்ளது. அதேநேரம் 8-ம் வகுப்பு கணிதத்தில் மட்டும் மாணவர்கள் சற்று பின்தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.


இதற்கு கரோனா பரவலால் 2 ஆண்டுகள் ஏற்பட்ட கற்றல் இடைவெளி முக்கிய காரணமாக உள்ளது. ‘இல்லம் தேடிக் கல்வி’ உள்ளிட்ட சில திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் அந்த இடைவெளியை முழுமையாக சரியாகவில்லை. மாவட்டவாரியான தரநிலையில் அனைத்து வகுப்பு மற்றும் பாடங்களிலும் கன்னியாகுமரி முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து கடலூர், மதுரை, தென்காசி, சிவகங்கை அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.


அதேபோல், கோவை, சென்னை, செங்கல்பட்டு, ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் தரவரிசையில் கடைசி இடங்களில் உள்ளன. தற்போதைய ஆய்வு முடிவுகள் அடிப்படையில் மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் செயல்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை முன்னெடுக்கும், என்று அவர் கூறினார். இந்நிகழ்வில் பள்ளிக் கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி உள்ளிடோர் கலந்துகொண்டனர்.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் இசைப் படிப்புகள்!

   Education News (கல்விச் செய்திகள்) 

1361144

மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் என பல்வேறு பட்டப்படிப்புகளில் மாணவர்களின் ஆர்வம், சேர்க்கை அதிகளவில் இருந்தாலும், இசை சார்ந்த படிப்புகளை விரும்பிப் படிக்கும் மாணவ, மாணவிகள் இன்னும் உள்ளனர். இன்னும் சொல்லப் போனால், தமிழகத்தில் இசைப் படிப்புகளுக்கு என கல்லூரிகள் குறைவாக இருந்தாலும், இசைப் படிப்புகளை படிக்க ஆண்டுதோறும் மாணவ, மாணவிகளிடம் ஆர்வம் அதிகரித்து வருகிறது.


இசை நம் கலாச்சாரத்தோடு ஒன்றியது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஆகிய நான்கு இடங்களில் அரசு இசைக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகள் தமிழக அரசின் சுற்றுலா மற்றும் கலைப் பண்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

கோவையில் செட்டிபாளையம் பிரிவு சாலை, மலுமிச்சம்பட்டியில் இசைக்கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமையில் இயங்கி வருகிறது. கோவை இசைக்கல்லூரி கடந்த 1993-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக நூற்றுக்கணக்கானோர் சேர்ந்து படிக்கின்றனர்.


இசைக் கல்லூரியில் உள்ள பாடப் பிரிவுகள்: கோவை அரசு இசைக் கல்லூரி முதல்வர் சிவக்குமார் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியது: கோவை ஆர்.எஸ்.புரத்தில் இசைக் கல்லூரி முன்பு இயங்கி வந்தது. அதன் பின்னர், சில ஆண்டுகளுக்கு முன்னர் மலுமிச்சம்பட்டிக்கு இசைக்கல்லூரி இடமாற்றம் செய்யப்பட்டது. இக்கல்லூரியில் மூன்று வருட பி.ஏ. மியூசிக் பட்டப்படிப்பு, மூன்று வருட டிப்ளமோ இன் மியூசிக் என்ற பட்டயப்படிப்பு ஆகியவை உள்ளன.


மூன்று வருட இளங்கலை பட்டப்படிப்பில் குரலிசை, வீணை, வயலின், பரதநாட்டியம் ஆகிய 4 பாடங்கள் உள்ளன. 17 வயது முதல் 22 வயதுடையவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இப்படிப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்விக் கட்டணமாக ரூ.1,480 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


மூன்று வருட பட்டயப்படிப்பில் குரலிசை, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் ஆகிய 6 பாடங்கள் உள்ளன. 16 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்படிப்புக்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்படிப்புகளுக்கு கல்விக் கட்டணமாக ரூ.750 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


மேலும், ஓராண்டு இசை ஆசிரியர் பயிற்சி பட்டயப்படிப்பும் உள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இசைக் கல்வித் தகுதியாக இசையில் இளங்கலை அல்லது பட்டயப்படிப்பு (இசைக்கலைமணி) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கட்டணமாக ரூ.750 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகுப்புகளும் காலை 9.50 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கும்.


தவிர, மாலை நேர இசைக்கல்லூரி - இலவச சான்றிதழ் வகுப்புகள் உள்ளன. குரலிசை, வீணை, வயலின் ஆகியவை மாலை நேரக் கல்லூரியில் கற்பிக்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இது இரண்டாண்டு படிப்புகளாகும். மாலை நேரக் கல்லூரிக்கு வகுப்பு நேரம் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை ஆகும். அனைத்து இசைப்படிப்புகளுக்கும் வெளிநாட்டு மாணவர்களின் கல்விக் கட்டணம் ரூ.5,150 மட்டுமே ஆகும். மேற்கண்ட இசைப் படிப்புகளுக்கு www.artandculture.tn.gov.in என்ற இணையதள முகவரியின் மூலம் விண்ணப்பிக்கலாம்.


மேலும், விவரங்களுக்கு நேரில் கல்லூரியை தொடர்பு கொள்ளலாம். இக்கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வருகைப் பதிவின் அடிப்படையில் கல்வி உதவித் தொகையாக மாதந்தோறும் ரூ.500 வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. கல்லூரி வந்து செல்வதற்கு நடைமுறையிலுள்ள அரசு விதிமுறைகளின் படி இலவச பேருந்து பயண சலுகை அட்டையும் வழங்கப்படுகிறது.


இசைப் படிப்புகள் படித்தால் எதிர்காலத்தில் வேலை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இசை ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் அதிக வரவேற்பு உள்ளது. நிறைவான மாத ஊதியம் கிடைக்கிறது. அதேபோல், பரத நாட்டியம் படிப்பை முடித்துவிட்டால், மேற்படிப்பாக நட்டுவாங்க படிப்பை சென்னை இசைக் கல்லூரியில் படிக்கலாம். இப்படிப்பை படித்தால், நடனத்தில் அனைத்து தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்வதுடன், வேலையும் எளிதில் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )