Search

இந்த இரத்த பரிசோதனைகளை அடிக்கடி செய்துகொள்வது நல்லது.. ஏன் தெரியுமா..?

 உடற்பருமன், நீரழிவு நோய் அல்லது ஏற்கனவே ஹைப்பர் டென்ஷன் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள குடும்ப வரலாற்றை சேர்ந்த தனி நபர்கள் வழக்கமான முறையில் ரத்த பரிசோதனைகளை செய்வது பல்வேறு காரணங்களுக்காக அவசியமாக கருதப்படுகிறது. அவ்வாறான ஒரு சில காரணங்கள் என்ன என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

ஆரம்பகால நோய் கண்டறிதல் : ரத்த அழுத்த அளவுகளில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பதை வழக்கமான ரத்த அழுத்த பரிசோதனைகள் மூலமாக ஆரம்ப கட்டத்திலேயே நாம் கண்டறிந்து விடலாம். அதிக ரத்த அழுத்தத்தை நீங்கள் ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால் அது இதய நோய், பக்கவாதம் அல்லது சிறுநீரக சேதம் போன்ற மோசமான பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க உதவும்.


கண்காணிப்பு : அபாய காரணிகள் கொண்ட தனி நபர்கள் வழக்கமான முறையில் தங்களது ரத்த அழுத்தத்தை கண்காணிப்பதன் மூலமாக பெறப்படும் முக்கியமான தகவல்களைக் கொண்டு ரத்த அழுத்த அளவுகளை பராமரிப்பதற்கு தேவையான வாழ்க்கைமுறை மாற்றங்கள் அல்லது மருந்துகளை எடுப்பதற்கு உதவும்.


அபாய மதிப்பீடு : வழக்கமான ரத்த அழுத்த பரிசோதனைகள் ஒரு நபரின் ஒட்டுமொத்த இதயம் சம்பந்தப்பட்ட அபாயங்களை மதிப்பீடு செய்வதற்கு மருத்துவருக்கு உதவுகிறது. இதனால் அந்த நபருக்கு ஏற்ற மருந்துகள் மற்றும் சிகிச்சைகளை தருவதன் மூலமாக நிலைமை மோசமாவதை தவிர்க்கலாம்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் : ஒருவரது ரத்த அழுத்த நிலையை தெரிந்து கொள்வதன் மூலமாக இதய ஆரோகியத்தை மேம்படுத்துவதற்கான ஒரு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருவர் எடுக்க முடியும். ஆரோக்கியமான உணவு, வழக்கமான உடற்பயிற்சி, மன அழுத்த கட்டுப்பாடு, புகையிலையை தவிர்ப்பது, அதிகப்படியாக மது அருந்துவதை நிறுத்துவது போன்றவை இதில் அடங்கும்.

சிகிச்சை : ஏற்கனவே ஹைப்பர் டென்ஷன் பிரச்சனை இருப்பதாக கண்டறியப்பட்ட நபர்கள் வழக்கமான முறையில் ரத்த பரிசோதனைகளை செய்து அவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் சரியாக வேலை செய்கிறதா? என்பதை தெரிந்து கொள்ளலாம். மேலும் மருந்துகளின் அளவுகள் அல்லது வகைகளில் ஏதேனும் மாற்றங்கள் தேவைப்படுகிறதா என்பதை இதன் மூலமாக நாம் அறியலாம்.


வாழ்க்கை முறை மாற்றங்கள் : வழக்கமான ரத்த அழுத்த பரிசோதனைகளை செய்வது ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களை நாம் பின்பற்ற வேண்டும் என்பதற்கான ஒரு நினைவூட்டுதலாக நமக்கு அமைகிறது. தொடர்ச்சியாக அதிக ரத்த அழுத்த அளவுகள் இருப்பதன் மூலமாக உணவு உடற்பயிற்சி மற்றும் மன அழுத்தம் மேலாண்மை பயிற்சிகள் போன்றவற்றில் தேவையான மாற்றங்களை செய்யலாம்.


உளவியல் தாக்கம் : அபாய காரணிகள் கொண்ட நபர்கள் வழக்கமான முறையில் ரத்த அழுத்த பரிசோதனைகளை செய்யும் பொழுது அவர்களுக்கு ஏற்படக்கூடிய பதட்டம் குறைந்து அவர்கள் இதய ஆரோக்கியம் நன்றாக இருக்கிறது என்ற ஒரு திருப்தி கிடைக்கும். மாறாக ரத்த அழுத்த பரிசோதனைகளை தவிர்ப்பது பதட்டத்தை அதிகரிக்கும். மேலும் ஒருவரது ஆரோக்கியம் பற்றிய எந்த ஒரு தெளிவான புரிதலும் இல்லாமல் இருக்கும்.


ஒட்டுமொத்தமாக நோய் தடுப்பு, ஆரம்பகால நோய் கண்டறிதல் மற்றும் உயர் ரத்த அழுத்தம் மேலாண்மை போன்றவற்றில் வழக்கமான ரத்த பரிசோதனைகள் முக்கிய பங்கு வகிக்கிறது.


🔻 🔻 🔻 

0 Comments:

Post a Comment