ஏற்றுமதி தொழிலில் சாதிக்க வேண்டுமா? தமிழக அரசின் இலவச பயிற்சித் திட்டம் இதோ

 இந்தியாவில் தற்போது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மூலமாக தொழில்கள் விரிவடைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து கொண்டே உள்ளன. எனவே ஏற்றுமதி பற்றியும் அதன் வழிமுறைகளை பற்றியும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகிறது.

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளையும், சட்டதிட்டங்களையும் குறித்த இணையவழி கருத்தரங்கம் (1 நாள்) பயிற்சியினை வரும் 03:06:2023ம் தேதி (காலை 10.00 முதல் மாலை 5.00 மணி வரை) வழங்க உள்ளது.

Ads by 

இப்பயிற்சியில் ஏற்றுமதி சந்தையின் தேவை, கொள்முதலுக்கான வாய்ப்புக்கள், ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்கள். வங்கி நடைமுறைகள், அந்நிய செலாவணியின் மாற்று விகிதங்கள். காப்பீடு குறித்த தகவல்கள், ஏற்றுமதி-இறக்குமதி விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள், போன்றவை பயிற்றுவிக்கப்படும்.

மேலும், இப்பயிற்சியில் ஏற்றுமதியாளர்களுக்கான ஊக்க உதவிகள் பற்றியும் அவைகளை பெறும் முறைகளை பற்றியும் ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும்.

ஏற்றுமதி சார்ந்த தொழில் துவங்க விரும்பும் அல்லது தற்போது உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் 18 வயது நிரம்பிய 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் சேரலாம்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

முகவரி:  தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை -600 032.

மேலும் இந்த முகாம் குறித்த விவரங்களுக்குத் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் தொலைப்பேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். இந்த மையத்தின் மின்னஞ்சல் முகவரி : asstd@editn.in | admin@editn.in ஆகும்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.31,000/-ஊதியம்!

 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.31,000/-ஊதியம்!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆனது Senior Research Fellow, Junior Research Fellow பணிக்கு 08 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNAU காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Senior Research Fellow, Junior Research Fellow பணிகளுக்கென மொத்தம் 08 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNAU கல்வி தகுதி:

விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Agriculture/ Horticulture/ Sericulture பாடப்பிரிவில் B.sc / M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

TNAU ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.20,000/- முதல் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNAU தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பிக்கும் நபர்கள் 06.06.2023 அன்று நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNAU விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு 06.06.2023 அன்று நடைபெறும் நேர்காணல் சென்று கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


CONCOR மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.2,60,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

CONCOR மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.2,60,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (CONCOR) டெல்லி – புதுதில்லியில் உள்ள குரூப் ஜெனரல் மேனேஜர்/ சீனியர் ஜெனரல் மேனேஜர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு 08.06.2023 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

CONCOR காலிப்பணியிடங்கள்:

Group General Manager/ Senior General Manager பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Manager தகுதி விவரங்கள்:

SAG/NFSAG/SG அளவில் பணிபுரியும் IRSEE அதிகாரிகள் குறைந்தபட்சம் 17 வருட பணி அனுபவம் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 54 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

CONCOR தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.1,00,000 – 2,60,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

CONCOR விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுய-சான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 08.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

UPSC CISF AC(EXE) LDCE அறிவிப்பு 2023 – விண்ணப்பிக்கும் தகுதி விவரங்களுடன்..!

 

UPSC CISF AC(EXE) LDCE அறிவிப்பு 2023 – விண்ணப்பிக்கும் தகுதி விவரங்களுடன்..!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) ஆனது உதவி கமாண்டன்ட்கள் பணியிடங்கள் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் ( CISF AC LDCE ) காலியாக உள்ளதாக அறிவிப்பு ஒன்றினை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 13.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

UPSC காலிப்பணியிடங்கள்:

போட்டித் தேர்வின் அடிப்படையில் 30 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

CISF AC(EXE) LDCE வயது வரம்பு:

விண்ணப்பதாரர் ஆகஸ்ட் 01, 2023 அன்று 35 வயதை எட்டியிருக்கக்கூடாது, அதாவது விண்ணப்பதாரர்கள் 02 ஆகஸ்ட் 1988க்கு முன்னதாக பிறந்திருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்ததேர்வை எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:
  • எழுத்துத் தேர்வு
  • உடல் திறன் சோதனை
  • நேர்காணல் ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி ஆன்லைன் இணைப்பின் மூலம் இப்பணிக்கு வரும் 13.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு உதவித்தொகையுடன் வேலை – சூப்பர் வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க!

 

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு உதவித்தொகையுடன் வேலை – சூப்பர் வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க!

South East Central Railway ஆனது NAPS-ன் கீழ் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Electrician பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 105 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.South East Central Railway காலிப்பணியிடங்கள்:

Electrician பணிக்கென காலியாக உள்ள 105 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Electrician கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

South East Central Railway வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Electrician ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.7,000/- முதல் ரூ.7,700/- வரை ஊதியமாக(உதவித்தொகை) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

South East Central Railway தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Reserve Bank of India-வில் புதிய வேலைவாய்ப்பு – ஒரு மணி நேரத்திற்கு ரூ.400/- சம்பளம்!

 

Reserve Bank of India-வில் புதிய வேலைவாய்ப்பு – ஒரு மணி நேரத்திற்கு ரூ.400/- சம்பளம்!

Part-time Pharmacist பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Reserve Bank of India ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.400/- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Part-time Pharmacist கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Diploma in Pharmacy / B. Pharm தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RBI வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Part-time Pharmacist ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.400/- ஊதியமாக வழங்கப்படும்.


RBI தேர்வு செய்யப்படும் முறை:

screening / shortlisting செய்யப்படும் தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு 13.06.2023ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news


Axis Finance Limited நிறுவனத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – முழு விவரங்களுடன்!

 

Axis Finance Limited நிறுவனத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – முழு விவரங்களுடன்!

Axis Finance Limited ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Axis Finance Limited காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Assistant பணிக்கென மொத்தம் 62 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Assistant கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Axis Finance Limited வயது வரம்பு:

24.05.2023ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Assistant முன் அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 0 முதல் 2 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Axis Finance Limited ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Axis Finance Limited-ன் நிபந்தனைகளின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

Assistant தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.06.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

SAIL நிறுவனத்தில் Diploma முடித்தவர்களுக்கான வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டும்!

 

SAIL நிறுவனத்தில் Diploma முடித்தவர்களுக்கான வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டும்!

Proficiency Training of Nurse, Pharmacists பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Steel Authority of India Limited (SAIL) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.10,000/- மாத ஊதியம்(Stipend) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

SAIL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Proficiency Training of Nurse, Pharmacists பணிக்கென காலியாக உள்ள 73 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pharmacists கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc. (Nursing) / Degree / Diploma தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

SAIL வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Pharmacists ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.10,000/- மாத ஊதியமாக(Stipend) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SAIL தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 13.06.2023 முதல் 15.06.2023, 20.06.2023,21.06.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் நேரில் சென்று கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – மாதம் ரூ.16000 சம்பளம்! முழு விவரம்!

 

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – மாதம் ரூ.16000 சம்பளம்! முழு விவரம்!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த பணிக்கான முழு விவரங்களை பற்றி பார்க்கலாம்

வேலைவாய்ப்பு அறிவிப்பு

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் project assistant பணியில் ஒரு இடம் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த பணியில் சேர கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம் குறித்த முழு விவரம் வெளியாகி இருக்கிறது

கல்வித்தகுதி

இந்த பணிக்கு கல்வித்தகுதியாக M.Sc. உயிர்வேதியியல்/ வாழ்வியல் அதனுடைய தொடர்புடைய பாடங்களை படித்து பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் NET/ GATE தேர்வு எழுதி இருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

MKU வயது வரம்பு

MKUவில் இந்த பணியில் சேர வயது வரம்பு அதிகபட்சம் 30க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

MKU சம்பளம்

இந்த பணியில் தேர்வு செய்யப்படுவோருக்கு சம்பளமாக ரூ. 16000 மாதம் வழங்கப்படும் என வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இந்த பணியில் விண்ணப்பிப்பவர்களில் தேர்வு செய்யப்படுபவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

project assistant பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் அவர்களின் சுய விவரம் பட்டியலுடன், புகைப்படம் மற்றும் கல்வி சான்றிதழ்களுடன் subbiah@nrcbsmku.org என்பதில் ஜூன் 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

இளைஞர்களுக்கு ஒரு நற்செய்தி… 2.75 லட்சம் பேருக்கு IT துறையில் வேலை வாய்ப்பு!!

 

மேக் இன் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கில் அரசு கொண்டு வந்துள்ள 'உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை' (Production Linked Incentives) வெற்றியை அளித்து வருகிறது. இதன் நோக்கம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை உற்பத்தி செய்வது தான்.

அந்தவகையில், டெல், ஹெச்பி போன்ற உலகளாவிய நிறுவனங்களை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்ட PLI திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அத்துடன் ஐடி ஹார்டுவேர் துறைக்கு ரூ.17,000 கோடி மதிப்பிலான உற்பத்தி இணைப்புச் சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், அதன் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் அல்ல, பிரபல தொலைபேசி நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் சாம்சங் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளது.

மடிக்கணினிகள், டேப்லெட்டுகள், all-in-one PCs, servers, ultra-small form factor devices ஆகியவற்றின் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம் ஆறு ஆண்டுகளில் ரூ.3.35 லட்சம் கோடி மதிப்பிலான உற்பத்தியை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து உற்பத்தி நிறுவனங்களும் PLI 2.0 இன் கீழ் இந்த சலுகைகளுக்கு தகுதியுடையவை. இந்தச் சலுகைகள் மூலம் ரூ.3.35 லட்சம் கோடி மதிப்பிலான கூடுதல் உற்பத்தி நடைபெறும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

இந்த திட்டத்தினால், 75,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இத்துறையில் நேரடி-மறைமுக வேலைவாய்ப்பு விகிதம் 1:3 ஆக உயரும். எனவே, மேலும் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

பிப்ரவரி 2021 இல், இந்தத் துறைக்கு ரூ.7,350 கோடி மதிப்பிலான PLI திட்டத்தையும் அரசாங்கம் அறிவித்தது. இந்தத் தொகையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று தொழில்துறையினர் மத்திய அரசிடம் முறையிட்டுள்ளனர்.

மத்திய அரசு 2020 ஏப்ரலில் முதன் முறையாக PLI திட்டத்தை அறிமுகப்படுத்தியது. மொபைல் போன் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இது எலக்ட்ரானிக்ஸ் துறைக்கு நல்ல ஊக்கத்தை அளித்தது.

உலகின் இரண்டாவது பெரிய மொபைல் உற்பத்தி நாடாக இந்தியா மாறியுள்ளது. இந்த மார்ச் மாத நிலவரப்படி, இந்தியா 11 பில்லியன் டாலர் மதிப்புள்ள மொபைல் போன்களை ஏற்றுமதி செய்துள்ளது. இந்த வெற்றியின் அடிப்படையில், IT வன்பொருளுக்கான இரண்டாவது சுற்று PLI ஊக்கத்தொகையை மையம் சமீபத்தில் அறிவித்தது.

மொபைல் போன் ஏற்றுமதியில் கடந்த ஆண்டு 10 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் இந்தியா 105 பில்லியன் டாலர் என்ற மைல்கல்லை கடந்துள்ளது.

இது தற்போது மடிக்கணினிகள் மற்றும் பிற மேம்பட்ட கணினிகள் போன்ற சாதனங்களின் உற்பத்தியில் ஸ்மார்ட்போன் மற்றும் தொலைத்தொடர்பு உபகரணங்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் வெற்றியை பிரதிபலிக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது. PLI திட்டத்தின் புதிய பதிப்பு, நாட்டில் மொத்த மின்னணுவியல் உற்பத்தியை ஆண்டுதோறும் $300 பில்லியன்களாக உயர்த்தும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் – ஜூன் 10 கடைசி நாள்!

 

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் – ஜூன் 10 கடைசி நாள்!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற பொது மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

உதவித்தொகை விண்ணப்பம்:

தமிழக அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் நலனிற்காக ஒவ்வொரு மாதமும் உதவித்தொகை வழங்கி வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற பொது மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்கள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் ஆன மனுதாரர்களுக்கும், மாற்று திறனாளி பிரிவில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ள இளைஞர்களுக்கும் உதவி தொகை வழங்கப்படுகிறது.

இந்த உதவித்தொகை 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத பொது பிரிவினருக்கு ரூ.200, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 300, 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வி தகுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400, பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கு ரூ. 600 வழங்கப்படுகிறது. மேலும் இதற்கான வயது வரம்பு பொது பிரிவினர் 40 வயதுக்கு உட்பட்டவராகவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயது க்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேலும் இந்த உதவித்தொகை பெற குடும்ப வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இந்த உதவித்தொகை பெறும் காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டும். திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்றோ அல்லது இணையதளத்தில் இருந்தோ படிவத்தை பதிவேற்றம் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த உதவித்தொகை பெற 2023-24 ஆம் ஆண்டுக்கான சுய உறுதிமொழி ஆவணங்களை ஜூன் 10 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

பஞ்சாப் நேஷனல் வங்கியில் SO வேலைவாய்ப்பு 2023 – 240 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.63840/-

  

பஞ்சாப் நேஷனல் வங்கியில் SO வேலைவாய்ப்பு 2023 – 240 காலிப்பணியிடங்கள்  || சம்பளம்: ரூ.63840/-

பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து  Specialist Officers (SO)  பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த வங்கி பணிக்கு என 240 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளார்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 24.05.2023 முதல் 11.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கி காலிப்பணியிடங்கள்:
  • Officer-Credit (JMGS I) – 200 பணியிடங்கள்
  • Officer-Industry (JMGS I) – 08 பணியிடங்கள்
  • Officer-Civil Engineer (JMGS I) – 05 பணியிடங்கள்
  • Officer-Electrical Engineer (JMGS I) – 04 பணியிடங்கள்
  • Officer-Architect (JMGS I) – 01 பணியிடம்
  • Officer-Economics (JMGS I) – 06 பணியிடங்கள்
  • Manager-Economics (MMGS II) – 04 பணியிடங்கள்
  • Manager-Data Scientist (MMGS II) – 03 பணியிடங்கள்
  • Senior Manager-Data Scientist (MMGS III) – 02 பணியிடங்கள்
  • Manager-Cyber Security (MMGS II) – 04 பணியிடங்கள்
  • Senior Manager- Cyber Security (MMGS III) – 03 பணியிடங்கள்
PNB Specialist Officers (SO) கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து B.E./ B. Tech. in streams of Electrical/ Chemical/ Mechanical/ Civil/ Textile/ Mining/ Metallurgy/ Chartered Accountant (CA) /  B.Arch/ Graduation Degree/ M.E./ M. Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

01.01.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 38 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

1. Officer-Credit – Rs.36000-1490/7-46430-1740/2-49910-1990/7-63840/-

2. Officer-Industry – Rs.36000-1490/7-46430-1740/2-49910-1990/7-63840/-

3. Officer-Civil Engineer – Rs.36000-1490/7-46430-1740/2-49910-1990/7-63840/-

4. Officer-Electrical Engineer – Rs.36000-1490/7-46430-1740/2-49910-1990/7-63840/-

5. Officer-Architect – Rs.36000-1490/7-46430-1740/2-49910-1990/7-63840/-

6. Officer-Economics – Rs.36000-1490/7-46430-1740/2-49910-1990/7-63840/-

7. Manager-Economics – Rs.48170-1740/1-49910-1990/10-69810/-

8. Manager-Data Scientist – Rs.48170-1740/1-49910-1990/10-69810/-

9. Senior Manager-Data Scientist – Rs.63840-1990/5-73790-2220/2-78230/-

10. Manager-Cyber Security – Rs.48170-1740/1-49910-1990/10-69810/-

11. Senior Manager- Cyber Security – Rs.63840-1990/5-73790-2220/2-78230/-

SO தேர்வு செயல் முறை:

1. Written/ Online Test

2. Personal Interview

சென்னை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் மட்டுமே தமிழகத்தில் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்:
  • SC/ST/PwBD விண்ணப்பதாரர்கள்  – ரூ.50/- + GST@18% per candidate (only postage charges) = Rs 59/-
  • மற்ற விண்ணப்பதாரர்கள்  – ரூ.1000/- + GST@18% per candidate = Rs 1180/-
PNB Specialist Officers (SO) பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி ஆன்லைன் இணைய முகவரி மூலம் 11.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Apply Online


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news