வெள்ளரி-எலுமிச்சை-இஞ்சி டீடாக்ஸ் வாட்டர் கேள்விப்பட்டிருக்கீங்களா..? பல நன்மைகள் இருக்கு.. மிஸ் பண்ணிடாதீங்க..!

 ஃபிரெஷ்ஷான பழங்கள், காய்கறிகள் அல்லது மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படும் டீடாக்ஸ் வாட்டர் (Detox Water), நம் உடலில் இருக்கும் நச்சுகளை அகற்றி வெளியேற்ற உதவுகிறது.

பொதுவாக டீடாக்ஸ் வாட்டர் என்பது அடிப்படையில் ஒருவரது சுவை மற்றும் விருப்பங்களை பொறுத்து பல பழங்கள், காய்கறிகள் மற்றும் மூலிகைகளின் நற்குணங்கள் அடங்கிய நீர் ஆகும். டீடாக்ஸ் வாட்டர் உடலை ஆரோக்கியமாக வைக்கிறது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது மற்றும் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுகிறது என நம்பப்பட்டு வருகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நினைப்போர் மத்தியில் டீடாக்ஸ் வாட்டர் பிரபலமாக உள்ளது.

சமீபத்தில் பிரபலமாகி வரும் டீடாக்ஸ் வாட்டர் ரெசிபியாக இருக்கிறது Cucumber-Lemon-Ginger (வெள்ளரி-எலுமிச்சை-இஞ்சி) வாட்டர். கூடுதல் கலோரிகளின்றி டீடாக்ஸ் நன்மைகளுடன் வருகிறது இந்த ரெசிபி. பிரபல ஊட்டச்சத்து நிபுணரான நிதி குப்தா தனது சமீபத்திய இன்ஸ்டா போஸ்ட்டில், டீடாக்ஸ் வாட்டரானது செரிமானத்தோடு நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. பொதுவாக வெள்ளரி, எலுமிச்சை, புதினா, இஞ்சி மற்றும் பெர்ரி போன்ற பொருட்களை தண்ணீரில் மிக்ஸ் செய்வதன் மூலம் டீடாக்ஸ் வாட்டர் தயாரிக்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

இவரின் கூற்றுப்படி எலுமிச்சை, இஞ்சியுடன் சேர்த்து வெள்ளரியையும் பயன்படுத்தி தயார் செய்யப்படும் Cucumber-Lemon-Ginger டீடாக்ஸ் வாட்டர் நம்மை புத்துணர்ச்சியாக வைக்க உதவுவதோடு ஆரோக்கியமான பானமாக அமைகிறது. இந்த டீடாக்ஸ் வாட்டரின் சில நன்மைகளை பற்றியும் அவர் பகிர்ந்துள்ளார்.

இதன்படி.. வெள்ளரி டீடாக்ஸ் வாட்டரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளன மற்றும் இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் பொட்டாசியம் போன்ற வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ்களின் சிறந்த ஆதாரமாகவும் வெள்ளரி உள்ளது.

வெள்ளரி டீடாக்ஸ் வாட்டரை பருகுவது செரிமானம் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த மற்றும் ஆரோக்கியமான சருமத்தை பெறவும் உதவும்.

எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் மற்றும் இதில் நேச்சுரல் டீடாக்ஸிஃபையிங் பண்புகள் உள்ளன.

சரி, இந்த ஆரோக்கியமான Cucumber-Lemon-Ginger டீடாக்ஸ் வாட்டர் தயாரிக்க தேவையான பொருட்கள் என்னவென்பதை கீழே பார்க்கலாம்.

மீடியம் சைஸ் வெள்ளரி - 1, விதை நீக்கப்பட்ட லெமன் - 1, இஞ்சி - 1 பீஸ், புதினா இலைகள் - 10, சியா விதைகள் - 1 டீஸ்பூன், தண்ணீர் - 1 லிட்டர், ஐஸ் க்யூப்ஸ் - தேவையான அளவு

டீடாக்ஸ் பானங்கள் உண்மையில் ஆரோக்கியமானதா என்ற கேள்விக்கு பதிலளித்த இயற்கை மருத்துவர் டாக்டர் சந்தோஷ் பாண்டே, நம் உடலில் தேங்கும் நச்சுகளை வெளியேற்ற போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். வெறும் தண்ணீரை குடிப்பதற்கு பதில் ஒருவர் அதில் தனக்கு பிடித்த சுவையான பொருட்களை சேர்ப்பதன் மூலம் ஒரு நாளைக்கு இவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற பரிந்துரைக்கப்பட்ட அளவை எளிதாக பருக முடியும். எனவே டீடாக்ஸ் வாட்டர் என குறிப்பிடப்படும் இன்ஃப்யூஸ்ட் வாட்டர் (Infused water), கூடுதல் கலோரிகள் இன்றி உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் சுவையை சேர்க்க சிறந்த வழி என்கிறார் சந்தோஷ் பாண்டே. வெள்ளரி-எலுமிச்சை-இஞ்சி சேர்க்கப்பட்ட தண்ணீர் தாகத்தை தணிப்பதோடு சிறந்த டீடாக்ஸ் வாட்டராகவும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த டீடாக்ஸ் வாட்டரில் சேர்க்கப்படும் பொருட்கள் பற்றி கூறுகையில், வெள்ளரிகள் அவற்றின் ஹைட்ரேட்டிங் பண்புகளுக்காக பெயர் பெற்றவை, அதே நேரம் எலுமிச்சை சாறு நச்சுத்தன்மையை நீக்குவதற்கு சிறந்தது. ஏனெனில் இது கல்லீரலை simulates செய்கிறது மற்றும் பசியைக் குறைக்கும் ஒரு வகை நார்ச்சத்தான Pectin-ஐ கொண்டுள்ளது. இஞ்சி ஒரு சிறந்த அழற்சி எதிர்ப்பு பொருளாகும். எனவே தினசரி எலுமிச்சை, இஞ்சி மற்றும் வெள்ளரி கலந்த தண்ணீரை குடிப்பது ஆரோக்கியமானது. இந்த அற்புத ஆர்கானிக் உணவுகளை தினமும் எடுப்பது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுவது மட்டுமல்லாமல் முழு உடல் அமைப்பையும் சுத்தப்படுத்த உதவுகிறது என்றார்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

உங்க இதயம் வேகமாக துடித்து சட்டென குறைகிறதா..? உடனே செக் பண்ணுங்க..!

 ஒழுங்கற்ற இதயதுடிப்பு, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றாகிவிட்டது. ஆம் சில நேரங்களில் எதிர்பாராதவிதமாக ஏற்படும் பிரச்சனைகள் அல்லது சில சம்பவங்களினால் இதய துடிப்பு மிக வேகமாக இருக்கும். அதே சமயம் சில நேரங்களில் மிக மெதுவாக இயங்கும். இப்படி மாறி மாறி ஒழுங்கற்ற இதயத்துடிப்பை மருத்துவ உலகில் அரித்மியா (arrhythmia) என்று அழைக்கின்றனர்.

இது குறித்து பிரபல மருத்துவர் ப்ரீதம் கிருஷ்ணமூர்த்தி தெரிவிக்கையில், சாதாரணமாகவே வயது வந்தோருக்கான இதய துடிப்பு வீதம் நிமிடத்திற்கு 60 முதல் 100 துடிக்கிறது. ஆனால் இதய துடிப்பு சற்று மாறும் போது, மயக்கம், மூச்சுத்திணறல் மற்றும் அதிக வியர்வை போன்ற உணர்வுகளுக்கு வழிவகுக்கும். எனவே இதுப்போன்ற பிரச்சனை உங்களுக்கு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்றவற்றை நிச்சயம் விட்டு விட வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்

இருந்தப்போதும், சீரற்ற இதயத்துடிப்பு ஏற்பட்டாலே, இதயத்தில் பிரச்சனை இருப்பதாக அர்த்தமல்ல. உடலின் வெவ்வேறு செயல்பாடுகளின் போது, இதயத் துடிப்பு வேகமடைவது இயல்பானது. இதேபோல், ஒருவர் ஓய்வெடுக்கும்போது அல்லது தூங்கும்போது, மெதுவாக இதயத் துடிப்பு ஏற்படுவது இயல்பானது.

ஒழுங்கற்ற இதய துடிப்பு உயிருக்கு ஆபத்தானதா? மருத்துவ ரீதியாக சில வகையான அரித்மியாக்கள் அதாவது ஒழுங்கற்ற இதய துடிப்பு பாதிப்பில்லாதவை. இவற்றிற்கு உடனடி சிகிச்சை தேவையில்லை. இருந்தப்போதும் மருத்துவ சோதனை மேற்கொண்ட பின்னர் என்ன வகையான பிரச்சனை உள்ளது என்பதை அறிந்து அதற்கேற்ப நீங்கள் சிகிச்சை செய்துக்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

அரித்மியாவின் வகைகள்: டாக்டர். கிருஷ்ணமூர்த்தியின் கூற்றுப்படி, பல்வேறு வகையான அரித்மியாக்கள் உள்ளன. இவை ஈசிஜி அல்லது ஹோல்டர் கண்காணிப்பு போன்ற எளிய நோயறிதல் சோதனைகள் மூலம் அடையாளம் காண முடியும். இந்த அரித்மியாக்கள் அப்நார்மல் ரிதம் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. சில அசாதாரண தாளங்கள் இதயத்தின் மேல் அறைகளில் உருவாகின்றன, இவை சுப்ரா வென்ட்ரிகுலர் அரித்மியாஸ் என்றும், இதயத்தின் கீழ் அறைகளில் தோன்றுபவை வென்ட்ரிகுலர் அரித்மியா என்றும் அழைக்கப்படுகின்றன.

ஒழுங்கற்ற இதயத் துடிப்பு உடல் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கும்? அரித்மியாவை மருந்துகள் அல்லது அறுவை சிகிச்சை முறைகள் மூலம் குணப்படுத்தலாம். சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அவை இதயம், மூளை மற்றும் பிற உறுப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும். இது ஒரு அபாயகரமான பக்கவாதம், இதய செயலிழப்பு அல்லது இதயத் தடுப்பு ஆகியவற்றை ஏற்படுத்தலாம். “இதயத் துடிப்பை சரிசெய்வதற்காக இதயத்திற்கு மின் சமிக்ஞைகளை அனுப்புவதன் மூலம் இதயத் துடிப்பைச் சரிசெய்ய பொருத்தப்பட்ட சிறிய சாதனமாக அமையும் என்கின்றனர் மருத்துவர்கள்.

ஏன் ஏற்படுகிறது? தூக்கம், உடல் செயல்பாடுகள் மற்றும் மன அழுத்தத்தின் காரணமாக இதயத் துடிப்பு மற்றும் இதயத்தில் சில மாற்றங்கள் ஏற்படுவது இயல்பானவை. ஆனால் மற்ற நேரங்களில், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, அல்லது அரித்மியா, ஒரு தீவிர பிரச்சனையாக மாறக்கூடும். எனவே நீங்கள் முறையான வாழ்க்கை முறையைப் பின்பற்றினாலே பல நோய்களின் பாதிப்பை நாம் தவிர்க்க முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்..

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

பலவீனமாகும் எலும்புகள்... இனி நீங்கள் இதில் கவனம் செலுத்துங்க...

 வேலை, வீடு, குடும்பம் என வேகமாக நகரும் இந்த உலகில் எலும்புகளின் ஆரோக்கியம் அனைவருக்கும் மிகவும் இன்றியமையாததாக உள்ளது. எலும்புகளின் ஆரோக்கியம் என்பது நடைப்பயிற்சி அல்லது விளையாடுவது போன்ற உடற்பயிற்சிகளுடன் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளுடன் தொடர்புடையது. இந்த இடத்தில், எலும்புகளுக்கான ஆரோக்கியமான உணவு தேவைகள் வயதுக்கு ஏற்ப வேறுபடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இளம் வயதினர் சந்திக்கும் தற்போதைய பிரச்சனைகள் - சூரிய ஒளியின் பற்றாக்குறை, வைட்டமின்-டி குறைபாடு காரணமாக மோசமான கால்சியம் அப்சார்ப்ஷன்; நடுத்தர வயது மற்றும் உழைக்கும் இளைஞர்களுக்கு - மீண்டும் வைட்டமின் டி குறைபாடு மற்றும் உடற்பயிற்சிகள் இல்லாமை போன்றவைகளால் எலும்புகள் பலவீனம் அடைகிறது. வயதானவர்களை பொறுத்தவரை, இது ஆஸ்டியோபோரோசிஸ் ஆகும், அதாவது ரேப்பிட் போன் டையிங் (rapid bone dying) ஆகும்.

மேற்கண்ட நிலைமைகளில், எலும்புகளின் ஆரோக்கியம் சார்ந்த சிக்கல்களை நாம் எவ்வாறு கையாள்வது? முதலாவதாக, கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுகள் பற்றிய ஞானம் மற்றும் விழிப்புணர்வு நமக்கு தேவை: கால்சியம் ஆனது பால், தயிர், கீரை, பாதாம், மீன் (மத்தி மற்றும் சால்மன்) ஆரஞ்சு, ப்ரோக்கோலி, காளான்கள் போன்றவைகளில் அதிகமாக உளள்து. வைட்டமின் டி ஆனது மீன் (மத்தி, சால்மன், சூரை போன்றவை), மீன் எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, காளான்கள் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக சூரிய ஒளியில் அதிகமாக உள்ளது.

இரண்டாவதாக போன் கால்சியம் மினரலைசேஷன் மற்றும் டிமினரலைசேஷன் (Bone calcium mineralization and demineralization) பயிற்சிகளின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள வேண்டும். வைட்டமின் டி மற்றும் வைட்டமின் கே ஆகியவற்றுடன் மேற்கூறிய செயல்முறை எலும்புகளை வலுப்படுத்துகிறது. பொதுவாகவே 'போன் லாஸ்' மற்றும் அதை தொடர்ந்து 'நியூ போன் ஃபார்மேஷன்' என நமது உடலின் எலும்புகளின் மாற்றங்களுக்கு உள்ளாகிறது. இது தரமான மற்றும் நல்ல எலும்பின் செயல்பாட்டிற்கு உதவும் ஒரு நிலையான செயல்முறையாகும். இதற்கு உடற்பயிற்சிகளும் அவசியம். அதாவது நடைபயிற்சி, ரன்னிங், ஜிம் அல்லது நடனம் போன்ற வடிவங்களில் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

மூன்றாவதாக, முதியோர்கள், ஆஸ்டியோபோரோசிஸ் நோயால் பாதிக்கப்படுவதால், அவர்கள் முற்றிலும் வேறுபட்ட சிக்கலை எதிர்கொள்கின்றனர். ஆஸ்டியோபோரோசிஸை முற்றிலுமாகத் தடுக்க முடியாது, ஆனால் அது சார்ந்த அறிவு, போதுமான மருத்துவ பரிசோதனை மற்றும் சரியான சிகிச்சையின் மூலம் இந்த நிலையை கணிசமாகக் குறைக்க முடியும். ஆஸ்டியோபோரோசிஸ் என்பது, பொதுவாக ஹார்மோன் சமநிலையின்மையால் ஏற்படும் மாதவிடாய் காரணமாக பெண்களுக்கும், முதியவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும் ஏற்படும் ஒரு நிலை ஆகும். இதை மிக விரைவில் கண்டறிந்து சிகிச்சை பெறுவது முக்கியம்.

மாதவிடாய் காலத்தில் பிஸ் பாஸ்போனேட் போன்ற மருந்துகளுடன் ஹார்மோன் சிகிச்சை பெறுவதன் மூலம் இதை தடுக்கலாம். உடன் தைராய்டு மற்றும் பிற ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் போன்ற சில நிலைமைகளை கண்டறிந்தும் கூட எலும்புகள் பலவீனமாவதை தடுக்கலாம்.

மேற்கண்ட தகவல்களை வழங்கியது பெங்களூரு ஃபோர்டிஸ் மருத்துவமனையின் எலும்பியல் துறை, எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை துறை நிபுணரான டாக்டர் சாய் கிருஷ்ண பி நாயுடு ஆவார்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

நீரிழிவு நோய் முதல் புற்றுநோய் வரை.. உடல் பருமனால் வரும் பிரச்சனைகளை தெரிஞ்சுக்கோங்க..!

 

இன்றைய காலத்தில் உடல் பருமன் என்பது உலக அளவில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி உடல் பருமனின் காரணமாக வருடம் தோறும் 2.8 மில்லியனுக்கும் அதிகமான உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. முக்கியமாக உடல் பருமனுடன் சம்பந்தப்பட்ட மற்ற ஆரோக்கிய குறைபாடுகளினாலும் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அதில் இதய கோளாறுகள், டைப் 2 நீரிழிவு நோய், புற்று நோய், சுவாசப் பாதையில் ஏற்படும் பிரச்சனைகள் போன்றவை உள்ளடக்கம்.

எனவே முடிந்த அளவு உடல் பருமன் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகிறது. சரியான சிகிச்சையின் மூலமும், வாழ்க்கை முறையில் மாற்றங்கள் ஏற்படுத்துவதன் மூலமும் உடல் பருமனை சரி செய்வது மட்டுமல்லாமல் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் நம்மால் தவிர்க்க முடியும். உடல் பருமன் மூலம் என்னென்ன வழிகளில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்பதை பற்றி இப்போது பார்ப்போம்.

இதயம் சம்பந்தப்பட்ட நோய் : உடல் பருமன் ஒருவருக்கு அதிகரிக்கும் பட்சத்தில் அவருக்கு இதயம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. மாரடைப்பு, இதய தமனிகளில் ஏற்படும் பிரச்சனைகள் போன்றவற்றினால் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும். குறிப்பாக அதிக உடல் எடையின் காரணமாக இதயம் மற்றும் ரத்த நாளங்களில் அதிக ரத்த அழுத்தம் உண்டாகிறது. மேலும் அதிக அளவு கொழுப்பும் இருப்பதால் இவை இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாக காரணமாகின்றன.

டைப் 2 நீரிழிவு நோய் : உடல் பருமன் ஒருவருக்கு அதிகரிக்கும் போது டைப் 2 நீரிழிவு நோய் தாக்குவதற்கான அபாயமும் அதிகரிக்கிறது. உடலில் சேரும் அதிக அளவு கொழுப்பானது உடலில் இன்சுலின் எதிர்ப்பை குறைத்து, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்க வைத்து விடுகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில் அவை இதய கோளாறுகள், சிறுநீரக கோளாறுகள், நரம்பியல் பிரச்சனைகள் போன்றவற்றை ஏற்படுத்தும்.

சுவாச கோளாறுகள்: உடல் பருமனானது நமது சுவாசப் பாதையில் பாதிப்புகளை ஏற்படுத்தி உறக்கமின்மை, ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். மேலும் இவற்றினால் மூச்சு விடுவதில் கூட சிரமம் ஏற்பட்டு உறங்குவதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். இதனால் உடலுக்கு தேவையான ஆக்சிஜன் கடத்தப்படுவது தடை செய்யப்படுகிறது.

புற்றுநோய் : மார்பகப் புற்றுநோய், சிறுநீரகப் புற்றுநோய், கணைய புற்றுநோய் ஆகியவைகள் உடல் பருமன் உள்ளோருக்கு அதிகம் ஏற்படுகின்றன. ஆனால் உடல் பருமனுக்கும் புற்று நோய்க்கும் உள்ள தொடர்பை பற்றி இன்னமும் கூட சரியாக நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அழற்சி, ஹார்மோன் சமநிலையில் குறைபாடு, இன்சுலின் எதிர்ப்பு போன்றவை புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன.

கல்லீரல் கோளாறுகள்: அதிக உடல் பருமனின் காரணமாக கல்லீரலில் கொழுப்புக்களின் அளவு அதிகரிக்கிறது. இந்த நோயினால் பல்வேறு வித உடல் நலக் கோளாறுகள் ஏற்படக்கூடும். ஸ்டீட்டோஹெபடைடிஸ், சிர்றோசிஸ் போன்ற உயிருக்கே ஆபத்தான நோய்கள் தாக்குவதற்கான அபாயம் உண்டு.

தொற்றுகள் தாக்குவதற்கான அபாயம்: உடல் பருமமானது ஒருவரின் நோய் எதிர்ப்பு திறனை வெகுவாக குறைத்து விடுகிறது இதனால் அவர் பல்வேறு நோய்த்தொற்றுக் கிருமிகளால் பாதிக்கக்கூடும் குறிப்பாக சிறுநீரக பாதையில் ஏற்படும் தொற்றுகள், காயங்களின் போது ஏற்படும் தொற்றுகள், அறுவை சிகிச்சையின் போதும் தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

மூட்டு இணைப்புகளில் பிரச்சினை: உடல் பருமன் காரணமாக மூட்டு இணைப்புகள் மற்றும் இடுப்பு பகுதியில் உள்ள இணைப்புகளில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும். ஆஸ்டியோஆர்த்தரடீஸ், மூட்டு இணைப்புகளில் வலி, மூட்டுகளின் இயக்கத்தில் குறைபாடு போன்றவற்றை ஏற்படுத்தி வாழ்நாள் முழுவதும் பிரச்சினைகளை உண்டாக்க கூடும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

உதவி சுற்றுலா அலுவலர் பதவிக்கு விரைவில் தேர்வு: இனிமேல் பொறியியல் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்

 சென்னை: அடிப்படை கல்வித் தகுதியில் புதிய திருத்தத்துடன் உதவி சுற்றுலா அலுவலர் பதவிக்கான போட்டித் தேர்வு விரைவில் நடத்தப்பட இருக்கிறது. இதன்படி, இனிமேல் சுற்றுலா அலுவலர் தேர்வுக்கு பொறியியல் பட்டதாரிகளும் விண்ணப்பிக்க முடியும்.

தமிழக அரசின் சுற்றுலாத் துறையில் உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2), சுற்றுலா அலுவலர் ஆகிய பதவிகளி்ல் குறிப்பிட்ட விகிதாச்சார பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நேரடியாகவும் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளில் சுற்றுலா அலுவலர், உதவி சுற்றுலா அலுவலர் தேர்வுகள் நடத்தப்பட்டு காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மாவட்ட சுற்றுலா அலுவலர் பதவியில் 3 காலியிடங்களுக்கான தேர்வுஜுன் மாதம் நடத்தப்பட இருக்கிறது.

இதற்கிடையே, உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2) பதவியில் 23 காலியிடங்கள் நிரப்பப்படும் எனடிஎன்பிஎஸ்சி-யின் 2023-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட காலஅட்டவணையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு ஜூலை மாதம் போட்டித்தேர்வு நடத்தப்படும் என்றும்தேர்வு முடிவுகள் செப்டம்பரில் வெளியிடப்பட்டு தொடர்ந்து அக்டோபரில் கலந்தாய்வு நடைபெறும் என்றும் காலஅட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உதவி சுற்றுலா அலுவலர் பதவிக்கு சுற்றுலா தொடர்பான பட்டப் படிப்பு அல்லது ஏதேனும் ஒரு பட்டப் படிப்புடன் சுற்றுலா மேலாண்மையில் டிப்ளமா படிப்பும் அதோடு அரசு கணினி சான்றிதழ் தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சியும் அடிப்படை கல்வித்தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரியாக இருந்தால் அவர்களுக்கு அரசு கணினிசான்றிதழ் தேர்வு தேர்ச்சியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சியின் திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வு காலஅட்டவணையின்படி, உதவி சுற்றுலா அலுவலர் பதவிக்கான அறிவிக்கை ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். மே மாதம் ஆகியும் இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் பி.உமா மகேஸ்வரியிடம் கேட்டபோது, "உதவி சுற்றுலா அலுவலர் தேர்வுக்கான கல்வித் தகுதியில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதுதொடர்பாக சுற்றுலாத் துறையிடமிருந்து ஒப்புதல் வரப்பெற்றதும் தேர்வுக்கான அறிவிப்பு உடனடியாக வெளியிடப்படும்" என்றார்.

உதவி சுற்றுலா அலுவலர் தேர்வுக்கான கல்வித்தகுதி திருத்தம் குறித்து சுற்றுலாத் துறையினரிடம் விசாரித்தபோது, இந்த தேர்வுக்கு பட்டப் படிப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும் என்றுதற்போதைய கல்வித் தகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் பட்டப் படிப்பில் தமிழ் ஒரு பாடமாக இல்லை.

நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை கல்வித் தகுதியை பெற்றிருந்தாலும் இந்த விதிமுறை காரணமாக பொறியியல் பட்டதாரிகள் சுற்றுலா அலுவலர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலாத சூழல் தற்போது உள்ளது. இதை கருத்தில்கொண்டு எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2-வில் தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்து படித்திருந்தால் போதும். பட்டப் படிப்பில் தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று அடிப்படை கல்வித் தகுதியில் திருத்தம் செய்யப்பட உள்ளது" என்று தெரிவித்தனர்.

கல்வித்தகுதி திருத்தம் தொடர்பாக சுற்றுலாத் துறையிடமிருந்து டிஎன்பிஎஸ்சி-க்கு இன்னும் ஒப்புதல் அனுப்பப்படவில்லை. ஒப்புதல் கிடைத்ததும் உதவி சுற்றுலா அலுவலர் தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி உடனடியாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

இண்ட்கோ சர்வ் ஊக்கத்தொகையுடன் தேயிலை துறை சார்ந்த தொழில் பழகுநர் பயிற்சி: மே 31-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

 உதகை: குன்னூர் இண்ட்கோ சர்வ் மூலமாக ஊக்கத்தொகையுடன் தேயிலை துறை சார்ந்த இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் வரும் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகம் மற்றும் உலக வங்கி இணைந்து செயல்படுத்தும் ‘ஸ்ட்ரைவ்’ திட்டத்தை, தமிழகத்தில் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் தேயிலை துறை சார்ந்து பயிற்சி அளிக்க,இண்ட்கோ சர்வ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இண்ட்கோசர்வ் மூலமாக தேயிலை தயாரிப்பாளர் (20 இடங்கள்), தேயிலை தொழிற்சாலை உதவியாளர் (20 இடங்கள்) பயிற்சிகளை ஊக்கத்தொகையுடன் கூடிய இலவசப் பயிற்சியாக அளிக்க உள்ளது.

ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பட்டியல் வகுப்பினருக்கு, விதிமுறைகளின் படி ஒதுக்கீடு உண்டு. அடிப்படைத் தகுதி குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு அல்லது பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சிக்கான காலம் ஒரு வருடம். தொழிற்பழகுநர் பயிற்சிவிதிகள்படி, பயிற்சி காலத்தில்கல்வித் தகுதிக்கேற்ப மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கப்படும். தொழிற்பழகுநர்களுக்கு காப்பீட்டு வசதியும் உண்டு.

தேயிலைத் தோட்டம், ரகங்கள்,உரங்கள், இயந்திரங்கள், தயாரிக்கும் முறை, ஏல மையங்கள் உள்ளிட்ட அனைத்தும், தொடர்புடைய நிபுணர்களால் கற்றுத்தரப்பட உள்ளன. பயிற்சி நிறைவில், மத்திய அரசின் அக்ரிகல்சர்ஸ் ஸ்கில் கவுன்சில் ஆஃப் இந்தியா மூலமாக சான்றிதழ் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பத்தை இண்ட்கோ சர்வின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இயங்கும் 16 இண்ட்கோ தொழிற்சாலைகளிலும், இண்ட்கோ சர்விலும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், இண்ட்கோ சர்வின் இணையதளத்தில் இருந்துபதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 31-ம் தேதிக்குள்சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு குன்னூரில் உள்ள இண்ட்கோ சர்வ் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

10ம் வகுப்புத் தேர்ச்சி போதும்: அஞ்சல் துறையில் நேரடி முகவர்கள் வேலைவாய்ப்பு

 அஞ்சல் ஆயுள் காப்பீட்டு/ கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக(Postal Life Insurance / Rural Postal Life Insurance products) புதிய நேரடி முகவர்களை (Direct Agents) ஈடுபடுத்த இருப்பதாக சென்னை மத்திய கோட்டத்தின் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ( Chennai City Central Division)  தெரிவித்துள்ளார்.

கல்வி தகுதி: குறைந்தது பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18-லிருந்து 50 வரை

பிரிவுகள்: சுய தொழில் செய்யும் / வேலையில்லா இளைஞர்கள், ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணி புரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள்/ முகவர்கள், அங்கன்வாடி மற்றும் மஹிளா மண்டல் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதிகள்: ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன் அனுபவம் உள்ளவர்கள், கணினிப் பயிற்சி உள்ளவர்கள் / சொந்தப் பகுதி பற்றி நன்கு அறிந்தவர்கள் மற்றும் சென்னை மாநகராட்சியை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். அதே சமயம், இதர ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில் முகவர்களாக இருப்பவர்கள், அஞ்சல் அயுள் காப்பீட்டு முகவர்களாக விண்ணப்பிக்க தகுதியில்லை.

விருப்பமுள்ளவர்கள் எண் 2, சிவஞானம் சாலை, தியாகராய நகர், சென்னை 600017 இல் (பாண்டி பஜார் அருகில்) உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில் 26.05.2023 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம். மூன்று புகைப்படம் (பாஸ்போர்ட் அளவு), அசல் மற்றும் இரண்டு நகல் -வயதுச்சான்று, முகவரிச்சான்று மற்றும் கல்விச்சான்றுடன் அணுகவும்.

நேர்காணலுக்கு பின் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஐந்தாயிரம் ரூபாய்க்கு தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திரத்தை (National Savings Certificate (NSC)/KisanVikasPatra (KVP) பணப் பாதுகாப்பு பத்திரமாக வழங்க வேண்டும்.

இந்த நேர்காணல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை முகவர்கள் மூலம் விற்பனை செய்வதற்காக மட்டுமே நடத்தப்படுகிறது. இது, ஆள் சேர்க்கை அறிவிப்பு கிடையாது.

முகவர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பிடிக்கும் பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை/கமிஷன் மட்டுமே வழங்கப்படும் என்று சென்னை மத்திய கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

எடை இழப்புக்கு உதவும் ’கலோரி பற்றாக்குறை’ பற்றி தெரியுமா..? இதை பின்பற்றும் வழிகள்..!

 கூடுதல் எடையை குறைக்கும் முயற்சியில் நீங்கள் இருந்தால் Calorie deficit அதாவது கலோரி பற்றாக்குறை என்ற வார்த்தையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இதன் சரியான அர்த்தம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா.?

எளிமையாக சொன்னால், நீங்கள் உணவு மற்றும் பானங்கள் மூலம் எடுத்து கொள்ளும் கலோரிகளை விட அதிக கலோரிகளை எரிக்கும் போது Calorie deficit ஏற்படுகிறது. கலோரி பற்றாக்குறை உங்கள் உடல் ஆற்றலுக்காக சேமிக்கப்பட்ட Fat Reserves-களை டேப் செய்ய வேண்டிய சூழலை உருவாக்குகிறது. இது காலப்போக்கில் எடை குறைய வழிவகுக்கிறது. அதாவது உடல் எடையை குறைக்க நீங்கள் Calorie deficit-ஐ உருவாக்க வேண்டும். அதாவது உங்கள் உடல் பயன்படுத்துவதை விட குறைவான கலோரிகளை உட்கொள்வது.

இங்கே நாம் எடை இழப்பில் Calorie deficit-ன் முக்கியத்துவம் பற்றியும், வெற்றிகரமாக மற்றும் பாதுகாப்பாக இதை அடைவதற்கான வழிகளை பற்றியும் பார்க்கலாம்.

கலோரி பற்றாக்குறை (Calorie deficit) என்றால் என்ன.?

ஒருவர் தற்போதிருக்கும் தனது எடையை பராமரிக்க தேவையானதை விட, குறைவான கலோரிகளை உட்கொள்ளும் போது Calorie deficit ஏற்படுகிறது. இதனால் உடல் எடையை குறைக்கிறது, ஏனெனில் தேவையான ஆற்றலுக்காக சேமிக்கப்பட்ட கொழுப்பாக (Stored fat) உடல் மாறுகிறது. டயட்டில் மாற்றங்கள் செய்வது மற்றும் உடல் செயல்பாடுகளை அதிகரிப்பதன் மூலம் கலோரி பற்றாக்குறையை அடையலாம்.

இருப்பினும் கலோரி பற்றாக்குறையை உருவாக்கும் முயற்சியில் உடல்நலனில் ஏதேனும் எதிர்மறை விளைவுகள் ஏற்படுவதை தவிர்க்க, உடலுக்கு பாதுகாப்பான மற்றும் நீடித்த கலோரி பற்றாக்குறையை உருவாக்குவதில் ஒருவர் கவனம் செலுத்துவது முக்கியம். ஆரோக்கியமான எடை இழப்பு விகிதம் என்று பார்த்தால் பொதுவாக வாரத்திற்கு 1 முதல் 2 பவுண்டுகள் வரை இருக்கலாம். இது ஒரு நாளைக்கு சுமார் 500 முதல் 1000 கலோரிகள் வரை Calorie deficit ஏற்படுவதற்கு சமமானது.

ஏன் கலோரி பற்றாக்குறை முக்கியம்.!

குறிப்பிட்ட அளவு கலோரி பற்றாக்குறையை அடைந்து பராமரிப்பது எனர்ஜி லெவலை அதிகரிக்க மற்றும் பிஸிக்கல் ஃபிட்னஸை மேம்படுத்த வழிவகுக்கும். பெரும்பாலும் Calorie deficit-ஐ அடைவதில் ஒரு அங்கமாக இருக்கிறது தினசரி உடற்பயிற்சி வழக்கம். இந்த ரெகுலர் ஒர்கவுட் வழக்கம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு தசைகள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்துகிறது. தவிர மனநிலை மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தனக்கான Calorie deficit-ஐ உருவாக்கி ஆரோக்கியமான எடையை பராமரிப்பதன் மூலம் ஒருவர் தனது ஒட்டுமொத்த வாழ்க்கை தரத்தை சிறப்பாக அனுபவிக்க முடியும்.

Calorie deficit-ஐ அடைவதற்கான வழிகள் இங்கே:

சரியான ஒரு App-ஐ பயன்படுத்தி தினசரி நீங்கள் உட்கொள்ளும் கலோரிகளின் எண்ணிக்கையை கண்காணிக்கலாம். இந்த பழக்கம் நீங்கள் உட்கொள்ளும் கலோரிகளின் எண்ணிக்கையை எப்படி குறைக்கலாம் என்பதை அறிந்து கொள்ள உங்களுக்கு உதவும்.
புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நீண்ட நேரம் பசிக்காமலும் இருக்கும், திருப்தியாகவும் உணர உதவும். இதனால் தேவையற்ற அல்லது அதிகப்படியான உணவு சாப்பிடுவதை தவிர்க்கலாம். லீன் மீட்ஸ், பீன்ஸ், காய்கறிகள் மற்றும் பழங்கள் உள்ளிட்டவற்றை டயட்டில் சேர்க்கலாம்.
உட்கொள்ளும் கலோரிகளின் அளவை குறைக்க உதவும் சிறந்த வழி, குறைவாக சாப்பிடுவது தான். இதற்காக நீங்கள் குறைவாக சாப்பிட உதவும் சிறிய தட்டுக்கள், பவுல்ஸ் மற்றும் கப்ஸ்களை பயன்படுத்தலாம்.
சுத்திகரிக்கப்பட்ட தானியங்களுக்குப் பதிலாக முழு தானியங்கள் சேர்ப்பது, முழு கொழுப்புள்ள பாலுக்குப் பதிலாக குறைந்த கொழுப்புள்ள பால் குடிப்பது மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள் குடிப்பதற்கு பதிலாக தண்ணீர் குடிப்பது போன்ற பழக்கங்கள் மூலம் குறைந்த கலோரியை உட்கொள்ளலாம்.
அதிக கலோரிகளை எரிக்க மற்றும் கலோரி பற்றாக்குறையை உருவாக்க உடற்பயிற்சி உதவுகிறது. எனவே வாரத்திற்கு குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் Moderate-intensity உடற்பயிற்சி அல்லது 75 நிமிட vigorous-intensity உடற்பயிற்சியில் ஈடுபட முயற்சி செய்யுங்கள்.
நல்ல Calorie deficit-ஐ அடைவதற்கான சிறந்த வழி ஆரோக்கியமான டயட் மற்றும் வழக்கமான உடற்பயிற்சி இரண்டையும் சேர்த்தே பின்பற்றுவது. இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் உடற்தகுதியையும் மேம்படுத்தும் அதே நேரம் அதிக கலோரி பற்றாக்குறையை உருவாக்கவும் உதவும். தேவைக்கு அதிகமாக Calorie deficit-ஐ உருவாக்குவது Muscle loss மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் போன்ற எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளவும்.

ஸ்வீட்டை உணவுக்கு முன்பு அல்லது பின்பு.. எப்போது சாப்பிட வேண்டும்..?

 

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் எல்லோருக்கும் பிடித்தமானது இனிப்புகள். அதை நினைக்கும்போதே நமக்கு நாவில் எச்சில் சுரக்க ஆரம்பித்து விடும். உணவின் இறுதியில் தங்களுக்குப் பிடித்தமான ஸ்வீட் ஒன்றை சாப்பிடுவதை பலர் வழக்கமாக வைத்திருக்கின்றனர். ஆனால், உணவுக்குப் பிறகு ஸ்வீட் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

குறிப்பாக, குழந்தைகள் உணவை சாப்பிட மாட்டேன் என அடம்பிடிக்கும் சமயங்களில், அவர்களிடம் ஸ்வீட் ஒன்றை காட்டி, எல்லா உணவையும் சமத்தாக சாப்பிட்டு முடித்தால் இந்த ஸ்வீட் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறும் வழக்கம் கூட உண்டு. ஆனால், இது தவறானது.

பெரும்பாலான ரெஸ்ட்ராண்ட்களில் கூட உணவின் இறுதியில் ஸ்வீட் பரிமாறுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். பெரும்பாலும் உணவை சாப்பிட்டுவிட்டு ஒரு ஐஸ்கிரீம் சுவைப்பதை நாம் வாடிக்கையாக வைத்திருக்கிறோம். ஆனால், இது தரும் நன்மைகளைக் காட்டிலும் தீமைகளே அதிகம்.

அதே சமயம், உணவுக்கு முன்பாக ஸ்வீட் எடுத்துக் கொள்ளலாம் என்று ஆயுர்வேதம் பரிந்துரை செய்கிறது. இது நம் உடலில் ஜீரண சக்தியை மேம்படுத்தவும், ஊட்டச்சத்தை உறிஞ்சிக் கொள்ளவும் உதவிகரமாக இருக்கும். ஆயுர்வேத நிபுணர், மருத்துவர் நிதிகா கோலி, இதுகுறித்த ஆலோசனைகளை இன்ஸ்டாகிராம் மூலமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவுக்கு, “பின்வரும் ஆலோசனைகள் என்பது பண்டைய கால ஆயுர்வேத பலன்களை உள்வாங்கிக் கொள்ள உதவிகரமாக இருக்கும். இந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி ஸ்வீட்கள் மூலமாக உடல் நலன், ஆற்றல் போன்றவற்றை அதிகரிக்க முடியும்’’ என்று விளக்கம் அளித்துள்ளார்.


உணவுக்கு முன்பாக ஸ்வீட்கள் சாப்பிடுவது ஏன்?

பொதுவாக இனிப்புகள் செரிமானம் அடைய நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். ஆகவே, இனிப்புகளை முதலில் எடுத்துக் கொள்ளும்போது செரிமானத்திற்கு தேவையான என்ஜைம்களின் சுரப்பு அதிகமாக இருக்கும். அதுவே உணவுக்குப் பிறகு இனிப்புகளை எடுத்துக் கொள்ளும்போது செரிமானத்தை அது மட்டுப்படுத்துகிறது.

உணவுக்கு முன்னால் இனிப்புகளை எடுத்துக் கொள்ளும்போது நம் நாவில் உள்ள சுவை மண்டலத்தை அது தூண்டிவிடும். உணவுக்குப் பிறகு இனிப்புகளை எடுத்துக் கொண்டால் உணவு செரிமானம் ஆகாமல், ஆசிட் சுரப்பு அதிகமாவதற்கு வழிவகுக்கும். இது மட்டுமல்லாமல் உணவுக்குப் பின்னர் இனிப்புகளை எடுத்துக் கொண்டால் வாயு உருவாகும் என்று ஆயுர்வேத நிபுணர் நிதிகா கோலி தெரிவித்துள்ளார்.

காலை உணவில் இனிப்பு முக்கியம்:

மற்ற வேளை உணவுகளைக் காட்டிலும் காலை வேளை உணவுக்கு முன்பாக ஸ்வீட் எடுத்துக் கொள்வது நல்ல பலனைக் கொடுக்கும். குறிப்பாக, நாள் முழுவதும் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும். அதனால், தமிழர் பண்பாட்டில் பெரும்பாலும் காலை டிபன் உணவுக்கு முன்பாக கேசரி, அல்வா, போன்றவற்றை பரிமாறுகின்றனர். நீரிழிவு நோய் அபாயத்தை தடுக்க வேண்டும் என விரும்புபவர்கள் லோ-கிளைசமிக் இண்டெக்ஸ் கொண்ட இனிப்புகளை எடுத்துக் கொள்ளலாம்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

வித விதமான மனித மூளைகள்.. மூளை அருங்காட்சியகம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

 இந்த உலகத்தில் கல், மண், சிலைகள், படங்கள், ஓவியங்கள், எலும்புக்கூடுகள், ஏன் முடியை வைத்து கூட அருங்காட்சியகம் இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் மூளை அருங்காட்சியகம் என்று ஒன்று உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதுவும் பிளாஸ்டிக் அல்லது பிளாஸ்டர் வைத்து செய்தது அல்ல... உண்மையான மனித மூளை...

உண்மையில் மனித மூளையைக் கொண்ட ஒரு அருங்காட்சியகம் இந்தியாவில் உள்ளது. அதுவும் எங்கோ வடஇந்தியாவில் இல்லை. நமக்கு மிக அருகில் தான் இருக்கிறது. கர்நாடகாவில் உள்ள பெங்களூரு நகரத்தில் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் (நிம்ஹான்ஸ்) தான் இந்த மூளை அருங்காட்சியகத்தை நிறுவியுள்ளது.

வெவ்வேறு நரம்பியல் நோய்கள் கொண்ட மனிதர்கள் மற்றும் விலங்குகள் உட்பட 600 க்கும் மேற்பட்ட வெவ்வேறு மூளை மாதிரிகள் அருங்காட்சியகத்தின்  சேகரிப்பில் வைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் மூளைக் கட்டிகள், பார்கின்சன் நோய், கால்-கை வலிப்பு, அல்சைமர் நோய் மற்றும் பிற மூளை தொடர்பான கோளாறுகள் உள்ள மூளைகளை இங்கே பார்க்கலாம்.

மனித மூளை மட்டும் அல்லாமல், முள்ளந்தண்டு வடம் மற்றும் பிற பாரன்கிமல் உறுப்புகள் அனைத்தும் அருங்காட்சியகத்தின்  சேகரிப்பின் ஒரு பகுதியாக உள்ளது. இந்த உறுப்புகளை  பார்வையாளர்கள் தொடுவதற்கும் உணருவதற்கும் கூட வாய்ப்பு  கிடைக்கின்றன. இது நிச்சயம் ஒரு புதிய அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்கும்.

நியூரோபயாலஜி துறையில் ஆர்வம் உள்ளவர்களும் மூளை சார்ந்த விஷயங்கள் பற்றித் தெரிந்து கொள்ள ஆரவமாக இருப்பவர்களின் நிச்சயமாக பார்க்க வேண்டிய அருங்காட்சியகம் தான் இது. இந்த தனித்துவமான நிம்ஹான்ஸ் மூளை அருங்காட்சியகம், பெங்களூரில்  ஓசூர் மெயின் ரோடு, வில்சன் கார்டன் அருகில், அமைந்துள்ளது.

அருங்காட்சியத்தை சுற்றி  பார்ப்பதைத் தாண்டி இறந்தபின் சடலங்கள் மூலம் உடல் உறுப்புகள் மற்றும் மூளை தானம் செய்வது குறித்து பொதுமக்களுக்கு தகவல் அளித்து, விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

இந்த அருங்காட்சியகத்தை காண கட்டணங்கள் ஏதும் இல்லை. புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை மட்டும், மதியம் 2:30 முதல் 4:30 மணி வரை செயல்படுகிறது. மற்ற நாட்களில், காலை 10:30 முதல் 12:30 மணி வரை, மதியம் 2:30 முதல் மாலை 4:30 மணி வரை பார்வையாளர்களை அனுமதிக்கிறது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

எழும்பூர் அரசு மருத்துவமனையில் வேலை: உடனே அப்ளை பண்ணுங்க

 சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மகளிர் நோயியல் நிலையம் மற்றும் தாய்சேய் நல மருத்துவமனையில் 2 வார்டு மேலாளர் காலிப் பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவுப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் மே மாதம் எதிர்வரும் 26ம் தேதிக்குள் விண்ணப்பக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்: வார்டு மேலாளர் (Ward Manager)

காலியிடங்கள் எண்ணிக்கை: 2

மாதச் சம்பளம்: ரூ. 10 ஆயிரம்

கல்வித் தகுதி:  கணினி இயக்கம் அறிவுடன் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

நிபந்தனைகள்: இப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது மற்றும் ஒப்பந்த அடிப்படையில் 11  மாதங்களுக்கு மட்டும் நிரப்பப்பட உள்ளன.

மேலும், தகுதியுள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அனைத்து கல்வித் தகுதியின் சான்றிதழ்களின் நகல்களுடன் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை (Resume) இவ்வலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்புமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறார்கள்.

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

இயக்குதர் மற்றும் பேராசிரியர்.

மகப்பேறு மகளிர் நோயியல் நிலையம் மற்றும்

அரசு தாய் சேய் நல மருத்துவமனை

எழும்பூர் சென்னை -600008.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.05.2023

நிர்ணயிக்கப்பட்ட (26.05.2023) தேதிக்கு பிறகு கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

விருதுநகரில் 108 ஆம்புலன்ஸ்ஸில் வேலைவாய்ப்பு..! முழு விவரம் இதோ..!

 விருதுநகர் மாவட்ட ஆம்புலன்ஸ் சேவையில் EMT மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு வந்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “EMT மற்றும் ஆம்புலன்ஸ் பணியிடங்களுக்கான காலி பணியிடங்கள் நிரப்பபடுகிறது. இதற்கான தேர்வு நாளை (மே19ம் தேதி) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

வேலைக்கான தகுதிகள் :

இ.எம்.டி என்று சொல்லப்படும் எமர்ஜென்சி மெடிக்கல் லேப் டெக்னீசியன் வேலைக்கு பி.எஸ்சி நர்சிங், ஏ.என்.எம். ஜி.என்.எம், டிப்ளமா இன் மெடிக்கல் லேப் டெக்னீசியன், டிப்ளமா இன் பார்மசி மற்றும் லைஃப் சையின்ஸ் பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை எழுத்துத் தேர்வு, செயல்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என 3 பிரிவுகளாக நடக்கும். மேலும் கண் பரிசோதனை உட்பட உடல் பரிசோதனைகளும் இருக்கும்.

இந்த 2 பணியிடங்களுக்கான தேர்வு வரும் மே 19ம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் அங்கு நேரில் அசல் சான்றிதழ்களோடு சென்று கலந்துகொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.வயது வரம்பு : 18 முதல் 30 வரை இருக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, அடிப்படை மருத்துவ அறிவு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று பிரிவுகளாக நடக்கும்.

சம்பளம் : மாதம் ரூ.15,000

இதேபோல் ஆம்புலன்ஸ் டிரைவர் வேலைக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், கையில் கனரக வாகனத்திற்கான ஓட்டுநர் உரிமம் கையில் இருக்க வேண்டும். உயரம் 163 செ.மீ க்கு மிகாமல் இருக்க வேண்டும்.



 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்தால் போதும்... ரூ. 39,000 சம்பளத்தில் இந்து சமய அறநிலையத்துறையில் வேலை

 சென்னை வில்லிவாக்கத்தில் அமைந்துள்ள அகத்தீஸ்வர சுவாமி கோயிலில் ஓதுவார் பணிக்கு காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியின் விவரங்கள்:

பணியின் பெயர்பணியிடம்ஊதியம்
ஓதுவார்1ரூ.12,600 - 39,900

கல்வித்தகுதி:

தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்கவேண்டும். சமய, அரசு நிறுவனங்களால் நடத்தப்படும் தேவாரப் பாட சாலையில் 3 ஆண்டுகள் பயின்றமைக்காக வழங்கப்பட்ட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும். நேர்காணல் மூலம் பணிக்குத் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உடையவர்கள், கோயில் நிர்வாகத்திடம் இருந்து விண்ணப்பங்களை ரூ.50 செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும். விண்ணப்பத்துடன் இணைத்து கல்வி சான்றிதழ், சாதிச்சான்றிதழ், குடும்ப அடையாள அட்டை, முன்னுரிமைக்கான சான்றிதழ், ஆதார் அட்டை, வேலைவாய்ப்பு பதிவு அட்டை ஆகியவற்றின் நகல்கள் இணைத்து அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 06.06.2023 மாலை 5.45 மணிக்குள் நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் அலுவலகத்திற்கு வந்துசேர வேண்டும்.

மேலும் விவரங்கள் இங்கே கிளிக்செய்யவும்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

காஞ்சிபுரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.. ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

 காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 2023-ம் ஆண்டு மே மாதத்தில் 19.05.2023 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது.

இந்த முகாமில் தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்கு நேர்முக தேர்வினை நடத்த உள்ளனர்.

அதுசமயம் பட்டதாரிகள், டிப்ளமோ, ஐ.டி.ஐ,12-வது மற்றும் 10-ஆம் வகுப்பு படித்தவர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.


எனவே, 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் 19.05.2023 அன்று காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறும் மேலும் விவரங்களுக்கு 044-27237124 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

வேலைதேடும் இளைஞர்கள் கவனத்திற்கு... சென்னையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்... மிஸ் பண்ணிடாதீங்க..!

 தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வீரராகவராவ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தவுள்ளன.

சென்னை கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த முகாம் நடைபெறவுள்ளது. முகாமில் 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள், கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் பெற்றவர்கள் கலந்துகொள்ளலாம்.

20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். இந்த முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. முகாமில் கலந்து கொள்ள எந்த வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

சர்க்கரை நோய் முதல் சிறுநீரக பிரச்சனை வரை.. கோவக்காயில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்கா..?

 சில, பல ஆண்டுகளுக்கு முன்னால் வயலோர வேலிகளிலும், புதர்களிலும் தாமாக பரவிக் கொடி வகையாக மட்டுமே கோவக்காய் அறியப்பட்டது. அதை யாரும் சீண்டிக்கூட பார்க்க மாட்டார்கள். கிராமத்து மக்கள் சிலர் அந்த கோவக்காய் கொடிகளை அறுத்து வந்து ஆடுகளுக்கு போடுவது உண்டு. அதேபோல பள்ளிக் குழந்தைகள் கோவக்காய் கொடி இலைகளை பறித்து, அடுப்புக் கரியுடன் அரைத்து அதை வகுப்பறையின் கரும்பலகையில் தடவுவார்கள்.

அதே சமயம், கோவக்காயில் மருத்துவ பலன்கள் இருக்கின்றது என விழிப்புணர்வு பெற தொடங்கிய நிலையில், மக்களிடம் அதற்கான தேவை அதிகரித்தது. இந்த நிலையில், அதை தோட்டப்பயிராக சாகுபடி செய்ய தொடங்கினர். கோவாக்காயை நீள வாக்கில் அல்லது வட்ட வடிவில் வெட்டி பொரியல் செய்து சாப்பிடுகின்றனர். சிலர் சாம்பாரிலும் சேர்த்துக் கொள்கின்றனர்.

ஊட்டச்சத்து விகிதம் : பல நோய்கள் மற்றும் தொற்றுகளுக்கு தேவையான மருந்து கோவப்பழங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. காய்ச்சல், மஞ்சள் காமாலை போன்ற நோய்களுக்கு இதிலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. கோவக்காயில் உள்ள பீடா கரோடின் என்னும் சத்தானது இதயம் தொடர்பான நோய்களை தடுக்கிறது. கோவக்காஇல் இரும்புச்சத்து, கால்சியம், விட்டமின் பி1 மற்றும் பி2, நார்ச்சத்து போன்றவை உள்ளன.


ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் : ஆயுர்வேதத்தில் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதற்கு கோவக்காயை பயன்படுத்துகின்றனர். இந்தக் கொடியின் தண்டுகள் மற்றும் இலைகளை பறித்து சூப் வைத்து அருந்தலாம். கோவக்காய் இலைகளை பச்சையாக சாப்பிட்டால் குளுக்கோஸ் சகிப்புணர்வு அதிகரிக்குமாம். வாரம் ஓரிரு நாட்கள் இதை உங்கள் உணவில் சேர்த்து வர சர்க்கரை கட்டுக்குள் வரும்.

உடல் பருமனை தடுக்கும் : உடல் பருமனை தடுப்பதற்கான பண்புகள் கோவக்காயில் உள்ளன. உடலில் கொழுப்பு செல்கள் உருவாகுவதை இது தடுக்கும். அதேபோல மெடபாலிச நடவடிக்கைகளை ஊக்குவிக்கும். நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் மலக்கட்டு மற்றும் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும்.

சோர்வை போக்குகிறது : நம் உடல் இயக்கத்திற்கு இரும்புச்சத்து மிகவும் அவசியமாகும். இரும்புச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் ரத்தச்சோகை மற்றும் உடல் சோர்வு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். நம் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கி, ஆரோக்கியத்தை தக்க வைக்க கோவக்காய் உதவுகிறது.

இதர நன்மைகள் : கோவக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது. அல்சர் உள்ளவர்களுக்கு இது நல்ல பலனை கொடுக்கும். கால்சியம் மற்றும் இதர மினரல்களால் உருவாகும் சிறுநீரக கற்கள் சிறுநீரக பாதையில் தங்கிவிடும். கோவக்காயில் உள்ள ஆரோக்கியமான கால்சியம் சத்து இந்த சிறுநீரக கற்களை தடுக்கக் கூடியது. கோவக்காய் இலைகள் மற்றும் தண்டுகளை பேஸ்ட் போல அரைத்து சருமத்தில் தடவினால் அலர்ஜிகள் குணமாகும். கோவக்காயில் உள்ள ஆண்டிஆக்சிடண்ட் சத்துக்கள் மற்றும் பீடா கரோடின் ஆகியவை புற்றுநோய் உண்டாகுவதை தடுக்கும். கோவக்காயில் உள்ள பொட்டாசியம் சத்து இதய செயல்பாடுகளை ஊக்குவிக்கும்.

காசு பணம் செலவழிக்க வேண்டாம்... இதை மட்டும் பண்ணுங்க... என்றுமே நீங்க இளமைதான்..!

 

என்றுமே இளமையாக இருக்க யாருக்குத் தான் பிடிக்காது? நம் அனைவருக்குமே அழகாக இருக்கணும், எப்போதுமே இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. ஆசை இருந்தால் மட்டும் போதுமா? அதனை நிறைவேற்றிக் கொள்ள ஒரு சில முயற்சிகளையும் நாம் எடுக்க வேண்டும். நல்ல விஷயங்களை நாம் பட்டு தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது இல்லை. பிறரின் அனுபவங்கள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.

அந்த வகையில், இளமையாக இருப்பவர்கள் அவர்களின் இளமையை கட்டிக் காக்க என்னென்ன ரகசியங்களை பின்பற்றினார்கள் என்பதை தெரிந்து கொண்டு நாமும் அதனை பின்பற்றினாலே போதுமானது. என்றும் இளமையாக இருக்க உதவும் ஒரு சில குறிப்புகளை இந்த பதிவில் காணலாம்:-

ஆழ்ந்த உறக்கம் : வயதானாலும் இளமையாக காட்சியளிக்கும் நபர்கள் சீரான தூக்க சுழற்சியை கொண்டிருப்பதாக கூறுகின்றனர். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஏழு முதல் எட்டு மணி நேரம் உறக்கம் அவசியம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

உணவு : நீண்ட ஆயுள் மற்றும் வயதான அறிகுறிகளை தவிர்ப்பதற்கான முக்கிய ரகசியம் உணவுதான். கெமிக்கல்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் அல்லாத ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொண்டாலே அழகும் ஆரோக்கியமும் பெற்று நீண்ட காலம் வாழலாம்.

ஆரோக்கியமான உணவுகள்: நீண்ட காலம் இளமையாக இருப்பதற்கான மற்றொரு ரகசியம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகப்படியாக சாப்பிடுவது. பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற வண்ணமயமான உணவுகளை தினந்தோறும் சாப்பிடுவது உங்கள் இளமையை தக்க வைத்துக் கொள்ள உதவும்.

உடற்பயிற்சி : உடற்பயிற்சி செய்வது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும். தினமும் உடற்பயிற்சியை வழக்கமாக செய்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். இது உங்கள் தசைகளை இறுக்கி வயதான தோற்றத்தை தடுக்கும்.

மன ஆரோக்கியம் : நமது உடல் ஆரோக்கியமானது மன ஆரோக்கியத்தை சார்ந்துள்ளது என்பதை பலர் அறிந்திருக்கவில்லை. இளமையாக தோன்றும் பல நபர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது போலவே மன ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சரும பராமரிப்பு : சருமம் என்பது நமது வயதின் கண்ணாடி என்றே கூறலாம். ஆகவே நமது சருமத்தை கவனித்துக் கொண்டாலே, இளமையான தோற்றத்தை எளிதில் அடைந்து விடலாம்.

சூரிய ஒளி : சூரிய ஒளியில் காணப்படும் வைட்டமின் டி சத்தானது நமது சருமம், எலும்புகள் மற்றும் மன ஆரோக்கியம் ஆகிய மூன்றுக்கும் முக்கியம். ஆகவே தினமும் 10 நிமிடமாவது சூரிய ஒளியில் நேரத்தை செலவிடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் : புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற கெட்ட பழக்கங்கள் மோசமான நோய்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஆகவே இது போன்ற பழக்கங்களிலிருந்து விலகி இருப்பது ஒருவரது ஆயுளை நீட்டிக்க உதவும்.

குறைவான சோம்பல் நேரம் : நீண்ட நேரம் ஒரே இடத்திலேயே உட்கார்ந்து இருப்பது பல நோய்களுக்கு வழிவகுக்கும். ஒருவேளை நீங்கள் கம்ப்யூட்டர் போற்றவற்றின் முன்பு அமர்ந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தால் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை இடைவெளி எடுத்து ஏதேனும் செயல்பாடுகளில் ஈடுபடுவதை உறுதி செய்யுங்கள்.

ஆரோக்கியத்தை பராமரித்தல் : உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொண்டாலே உங்களின் ஆயுள் அதிகரிக்கும். ஆகவே ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்க கூடிய எந்த ஒரு விஷயங்களையும் செய்ய வேண்டாம்.

 Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

வெயிலில் இருந்து தப்பிக்க என்ன வழி...? மருத்துவர் சொல்லும் டிப்ஸ் இதோ...!

 தமிழ்நாடு முழுவதும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றும் பட்சத்தில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று மருத்துவர் சரவணன் பாரதி தெரிவித்துள்ளார். 

1. வெயில் காலத்தில் பருத்தி உடைகளை உடுத்த வேண்டும்.

2. உடலை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிய கூடாது.

3. வெயில் நேரத்தில் வெளியே சென்றால் குடை எடுத்து செல்லலாம்.

4. வெயிலில் வேலை பார்க்கும் நேரத்தை குறைக்க வேண்டும்.

5. நாள்தோறும் ஆண்கள் 4 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.

6. பெண்கள் 3 லிட்டர் வரை தண்ணீர் பருக வேண்டும்.

7. பெண்கள் ஜீன்ஸ் போன்ற ஆடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.

8. ஏசி அறையில் இருப்பவர்கள் நீர் பருகாவிட்டால் உடல் சோர்வு ஏற்படும்.

9. நீச்சல் குளங்களுக்கு செல்லும் போதும் தண்ணீர் பருக வேண்டும்.

10. குளிர் பானங்களில் சர்க்கரை அதிகமாக இருக்கும்.

11. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட குளிர் பானங்களை தவிர்க்கலாம்.

12. குழந்தைகளை மதியம் 12 முதல் 4 மணி வரை வெளியே அனுமதிக்க கூடாது.

13. குழந்தைகள் வீடு திரும்பியதும் கை, கால்களை கழுவி விட வேண்டும்.

14. பெரியவர்களுக்கு நீர் ஆதாரங்களை அதிகளவில் தர வேண்டும்.

15. நீர் சத்து உள்ள பழங்கள், இளநீர், நுங்கு சாப்பிடுவது அவசியம்.


 Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip