தமிழில் எழுத படிக்கத் தெரிந்தால் போதும்: இந்து அறநிலையத் துறையில் 281 பணியிடங்கள்!

 

தமிழ்நாட்டில் மிக முக்கிய திருக்கோயில்களில் ஒன்றாக விளங்கும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள 281 பணியிடங்களுக்கு  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே, அரசு வேலைவாய்ப்பு தேடி இளைஞர்கள் இந்த சிறப்பு வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலியிடங்கள் விவரங்கள்: 

வெளித்துறையின் கீழ் காலியாக உள்ள பணியிடங்கள்

தட்டச்சர்6
நூலகர்1
கூர்க்கா2
அலுவலக உதவியாளர்65
உபகோவில் பல வேலை26
சமையல் உதவியாளர்2
ஆயா பணி3
பூஜை காவல்10
காவல்9
பாத்திர சுத்தி50

மேற்காணும் பணியிடங்களில், பெரும்பாலான பதவிகளுக்கு 8ம் வகுப்பு தேர்ச்சியும், தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்தால் போதுமானது.

அதேபோன்று, கணினி பொறியாளர், இளநிலை பொறியாளர் போன்ற தொழில்நுட்ப பிரிவின் கீழ் 82 காலிப்பணியிடங்களும்;  ஆசிரியை, ஆய்வக உதவியாளர் போன்ற ஆசிரியர் பிரிவின் கீழ் 19 காலியிடங்களும்; நாதல்ஸ்வரம், தவில் போன்ற உள்துறை பிரிவின் கீழ் 14 காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை இந்து அறநிலைத் துறை வெளியிட்ட தேர்வு அறிவிப்பில் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள், அதனை பதிவிறக்கம் செய்து வாசிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 07.04.2023 பிற்பகல் 5.45 மணிக்குள்.

பொது நிபந்தனைகள்:

தமிழ் நன்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

இறை நம்பிக்கை உடையவராகவும் இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும் இருத்தல் வேண்டும்.

01.07.2022 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதிற்கு உட்பட்டவராகவும் விண்ணப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்

தேர்வு முறையானது அடிப்படை கல்வித் தகுதி, அனுபவம், செயல்முறை தேர்வுகள் கூடுதல் தகுதி மற்றும் நேர்முக தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும்.

விண்ணப்ப படிவத்தினை www.hrce.tn.gov.in மற்றும் www.palanimurugan.hrce.tn.gov.inஎன்ற திருக்கோயில் இணையதளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது திருக்கோயில் அலுவலகத்தில் ரூ.50/- விண்ணப்பத்தினை அலுவலக நாட்களில் பெற்றுக்கொள்ளலாம். செலுத்தி அலுவலக நேரத்தில் நேரில்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, "இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி, திண்டுக்கல் மாவட்டம் -624 601" என்ற முகவரிக்கு நேரிலோ/ அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். மேலும் ரூ.25/- மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுயவிலாசமிட்ட ஒப்புகை அட்டையுடனும் அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

சுய தொழில் தொடங்க விருப்பமா? இந்த வாய்பை மிஸ் பண்ணிடாதீங்க!

 இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்க எண்ணற்ற திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. அதில், Unemployed Youth Employment Generation Programme (UYEGP) என்ற திட்டம் இளைஞர்கள் சுய வேலைவாய்ப்பில் ஈடுபடுவதற்கும்,  புதிய வேலைவாய்ப்புகளை உருவாகுவதற்கம் உதவக்கூடிய திட்டமாக திகழ்கிறது.

இந்த திட்டத்தின் கீழ்,  இந்த நிதியாண்டில் மட்டும் 2,500க்கு மேற்பட்டோருக்கு கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. ஒப்புதல் அளிக்கப்பட்டவர்களில், சுமார் 20 கோடி ரூபாய் மானிய நிதியாக விடுவிக்கப்படித்திருக்கிறது. எனவே, வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள், ஏதேனும் சுய தொழில் தொடங்க விரும்பினால் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும்.

யார் விண்ணப்பிக்க முடியும்: 

திட்டம்வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (Unemployed Youth Employment Generation Programme)
யார் விண்ணப்பிக்கலாம்குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்
வயது வரம்புபொது பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் 18 -35 வயதுக்குள் இருக்க வேண்டும்; ஏனையோர் - 45 வயதுக்குள் இருக்க வேண்டும்
குடும்ப ஆண்டு வருமானம்சமூகப் பொருளாதார நிலைகளில் பின்தங்கிய மக்களுக்காக இந்த திட்டம்  செயல்படுத்தப்படுகிறது. எனவே, குடும்ப  ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சம் மிகாமல் இருக்கும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே இதற்கு தகுதி பெறுவர்
 என்ன திட்டம் இது?இளைஞர்கள் சுயமாக தொழில் தொகை கடனுதவி வழங்கப்படுகிறது.உற்பத்தித் துறையின் (Manufacturing) கீழ் ரூ. 15 லட்சமும், சேவைகள் (Service) மற்றும் வணிகப் பிரிவில் (Trading) ரூ. 5 லட்சமும்   கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.
கடன் வழங்குவது யார்?வங்கி மற்றும்  நிதி நிறுவனங்கள்
என்ன சலுகை?திட்ட மதிப்பீட்டில் 25% (அதிக பட்சம் ரூ 2.5 லட்சம்) அரசு  மானியமாக வழங்குகிறது.
சொத்து ஜாமீன் தேவையாஆர்பிஐ வங்கியின் வழிகாட்டுதல் படி, ரூ.10 லட்சம் வரையிலான கடன் திட்டத்திற்கு சொத்து அடமான வைக்கத் தேவையில்லை.


இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவம், தமிழ்நாடு அரசின் குறு, சிறு நிறுவனங்கள் துறை அமைச்சக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  கோரப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்து இணைய வழியில் அனுப்பி வைக்க வேண்டும். வரப்பெறும் விண்ணப்பங்களை  UYEGP திட்ட நேர்காணல் குழு தேர்வு செய்யும். அந்தந்த மாவட்ட தொழில் மைய மண்டல இயக்குனர் இந்த குழுவின் தலைவராக இருப்பார்.  இந்த தேர்வு குழு மூலம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்கள், வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். வங்கியால் லோன் ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பித்தார்களுக்கு, அரசு மானியம் ரூ. 2.5 லட்சம்  (அதிகபட்சம்மாக) விடுவிக்கப்படும். இந்த திட்டம் குறித்து மேலும் தெரிந்து கொள்ள, உங்கள் அருகில் உள்ள மாவட்ட தொழில் மையங்களை அணுகலாம்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

10ம் வகுப்பு தேர்ச்சி போதும்... தமிழ்நாடு அஞ்சல் துறை அலுவலகங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

 தமிழ்நாடு அஞ்சல் துறை வட்டத்தில் உள்ள அலுவலங்கங்களில் காலியாக உள்ள கார் ஓட்டுநர் (Staff Car Driver -General Central Service, Group-C, Non- Gazetted, Non - Ministerial) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வரும் மார்ச் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலிப்பணியிட விவரம்:

சென்னை நகர மண்டலம் (Chennai City Region)6
மத்திய மண்டலம்9
அஞ்சல் ஊர்தி சேவை, சென்னை (MMS, Chennai)25
தெற்கு மண்டலம் (Southern Region)3
மேற்கு மண்டலம் (Western Region)15
மொத்தம்58

அடிப்படை தகுதிகள்: இந்த  ஓட்டுநர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். லேசான மற்றும் கனரக வாகனம் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம்  இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின்  வயதுவரம்பு  31.03.2023 அன்று 18 -27க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல்  சாதிகள்/ பட்டியல்  பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.

சம்பள நிலை: 19,900 முதல் 63,200 வரை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட படிகள்

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி? விண்ணப்பப் படிவத்தை, தமிழ்நாடு அஞ்சல் துறை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.03.2023 ஆகும். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி, ' The Senior Manager (JAG), Mail Motor Service, No.37, Greams Road, chennai - 600 006 ஆகும். விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய இந்தஇணைப்பைக் கிளிக் செய்யவும்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news


வீடுகளில் மூலிகை வளர்த்து சம்பாத்திக்கலாம்... தமிழக அரசின் சூப்பர் திட்டம் இதோ

 வீடுகளில் மூலிகை வளர்க்கும் திட்டத்தை தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், ரூ. 1500க்கு மதிப்புள்ள மூலிகை தோட்டங்களில் இடம்பெறும்  பொருட்கள் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.

பண்டைய காலத் தமிழர்கள் உணவே மருந்து, மருந்தே உணவு என்ற வாழ்வினைக் கொண்டிருந்தனர். இந்த வாழ்வியலை மீள் உருவாக்கம் செய்யவும், தமிழ் மருத்துவத்தை பொது சன மக்களிடம் கொண்டு செல்லவும் தமிழ்நாடு அரசு கடந்த 2022-23 நிதியாண்டில், வீடுகளில் மூலிகை வளர்க்கும் திட்டத்தை அறிவித்தது.

இந்த திட்டத்தின் கீழ் துளசி, கற்பூரவள்ளி, வல்லாரை உள்ளிட்ட 10 வகையான மூலிகைச் செடிகள் தோட்டக்கலை பண்ணைகளில் கொள்முதல் செய்யப்பட்டு பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. அதுதவிர, செடி வளர்ப்புப் பைகள், 2 கிலோ தேங்காய் நார் கட்டிகள், மண்புழு உரம், தொழில் நுட்ப கையேடு, போக்குவரத்து மற்றும் ஆவணப்படுத்துதல் என மொத்தம் ரூ. 1500 மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்த மொத்த தொகையில், அரசு மானியமாக ரூ. 750 வழங்கும். விண்ணப்பதாரர் தனது பங்களிப்புத் தொகையாக ரூ. 750 செலுத்த வேண்டும்.

இந்த திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். வீட்டு மூலிகைத் தோட்டத்தளைகளை பெறுவதற்கான விண்ணப்ப படிவம் / Application Form பக்கத்தில் தேவைப்படும் விவரங்கள் அளித்து, வீட்டு முகவரி சான்று/ஆதார் அட்டை (அல்லது ஏதாவது ஒரு அடையாள ஆவணம்) மற்றும் பயனாளியின் புகைப்படம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து  விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களைத் தெரிந்து கொள்ள அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்: தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு வெளியீடு!

 சமுதாயத்தில் ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், பொருளாதாரத்தில் நலிவுற்ற ஏழைப் பெண்கள் ஆகியோர் சுயதொழில் செய்து தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு ' இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தை' செயல்படுத்தி வருகிறது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான பெண்கள்  பயனடைந்துள்ளனர். 2021-22 நிதியாண்டில் மட்டும் ரூபாய். 1.35 கோடி செலவில், 2,250 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

இந்நிலையில்,சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தின் வாயிலாக, தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அமிர்த ஜோதி  தெரிவித்துள்ளார்.

20 முதல் 40 வயது வரை உள்ள பெண்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பதாரர்கள், பதிவு பெற்ற தையல் நிறுவனத்திடம் இருந்து தையல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானச் சான்று ரூ.72,000க்குள் கீழ் இருக்க வேண்டும். 

இதற்கான விண்ணப்பப் படிவத்தை தென் சென்னை மாவட்ட சமூகநலம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சிங்காரவேலர் மாளிகை, 8வது தளம், இராஜாஜிசாலை, சென்னை- 01 அலுவலத்தில் இருந்து வாங்கி கொள்ளலாம்.  விண்ணப்பப் படிவத்தை பூரித்தி செய்து  இருப்பிடச் சான்று, ஆதார அட்டை, 2 புகைப்படம், வருமானச் சான்று, சாதிச் சான்று, வயதுச் சான்று ஆகிய சான்றுகள் இணைக்கப்பட்டு வரும் 6ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ஆபீஸ் டென்ஷனை குறைப்பது எப்படி?

 சோர்வின்றி உற்சாகமாக வேலை செய்வது எப்படி? என்பதை இந்த கட்டுரையில் விளக்கியிருக்கிறோம். 


1.சைக்கிள் பயணம் மேற்கொள்ளுங்கள் தினமும் காலையில் உங்களுக்கு பிடித்த இடத்தில் சைக்கிள் பயணம் மேற்கொள்ளுங்கள். அது உங்கள் உடல் மற்றும் மனநிலையை மாற்றுவதாக அமையும். இதனை ஒரு வேலையாக பார்க்காதீர்கள். எந்த தொந்தரவும் இல்லாமல் குறிப்பாக அலைபேசி தொந்தரவுகள் இன்றி இதனை செய்ய பழகுங்கள்.

 2. 10 ஆயிரம் 'ஸ்டெப்ஸ்' ஒரு நாளைக்கு நீங்கள் நடந்து செல்லும் தூரம் 10 ஆயிரம் 'ஸ்டெப்ஸ்' என்ற அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் என்பது 7.5 கிலோமீட்டர். உங்கள் வீட்டு மாடிப்படி ஏறுவது துவங்கி, உங்கள் அலுவலகத்தில் காபி அருந்த கேன்டீனுக்கு செல்வது வரை அனைத்தையும் சேர்த்து இந்த அளவு நடந்தால் போதுமானதாக இருக்கும்.

3. தினசரி ஒரு புகைப்படம் எடுங்கள் தினசரி உங்களுக்கு பிடித்த ஒரு விஷயத்தை அல்லது உங்களுக்கு பார்க்க அழகாக தோன்றும் ஒரு விஷயத்தை புகைப்படமாக பதிவு செய்யுங்கள். இதே போல் 30 நாட்களும் புகைப்படம் எடுங்கள். அது மிகப்பெரிய போட்டோகிராபியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. செல்போன் புகைப்படமே போதுமானது.

4. ஒரு நாவல் எழுதுங்கள் ஒரு நாளில் உங்கள் வாழ்வில் நடக்கும் சுவாரசியமான விஷயங்களை 1500 வார்த்தைகளில் எழுத துவங்குங்கள். 30-வது நாள் 50 ஆயிரம் வார்த்தைகள் கொண்ட ஒரு நாவல் உங்கள் பெயரில் இடம் பெற்றிருக்கும். அத்துடன் புதுமையான விஷயங்களுக்கு நீங்கள் மாறிய விதம் புரியும். 

5. காதலிக்க பழகுங்கள் உங்களை சுற்றியுள்ள சிறு சிறு விஷயங்களை கவனியுங்கள். வேலை செய்யும் நேரம் தவிர மற்ற‌ நேரங்களில் வேலையை பற்றிய‌ நினைவு இல்லாத உற்சாகமான வேலைகளில் நாட்டம் செலுத்துங்கள். நண்பர்களுடன் சமூக வலைத்தளங்களில் உரையாடாமல் நேரில் உரையாட பழகுங்கள். மனதிற்கு நெருக்கமான நபருடன் அதிகமான நேரத்தை செலவிடுங்கள்.

Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip

வீட்டுக்கடன் வாங்க எந்த வட்டிவிகிதம் சிறந்தது

 ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதால் பல ஆண்டுகள் வீட்டுக் கடன்களைக் கட்டும் போது நிலையான வட்டி விகிதத்தால் அதிக வட்டியுடன் நாம் பணம் கட்ட நேரிடும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். 

இன்றைக்கு வீடு கட்ட வேண்டும் என்று யோசித்தால் எந்த இடத்தில் என்று பெரும்பாலும் யோசிப்பதை விட நமக்கு எந்த வங்கியில் அல்லது தனியார் நிதி நிறுவனங்களில் குறைந்த வட்டியுடன் கடன் கிடைக்கும் என்று தான் நினைப்போம். சிறிய வீடாக இருந்தாலும், அடுக்குமாடிக் குடியிருப்பாக இருந்தாலும் அதன் உரிமையாளர்கள் வங்கிகளில் வீட்டுக்கடன்களைப் பெற்றுத் தான் வேலையை ஆரம்பிக்கிறார்கள். 

இவர்களுக்காகவே நிலையான வட்டி விகிதம் மற்றும் மாறுபட்ட விகிதம் என்ற இரு பிரிவுகளின் கீழ் கடன்கள் வழங்கப்படுகிறது. நீங்கள் புதிதாகக் கடன் வாங்குபவராக இருந்தால் நிலையான விகிதத்தில் கடன் வாங்குவது, எதிர்காலத்தில் வட்டி விகிதங்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். கார் அல்லது தனிநபர் கடன்களைப் பெறுவதற்கு நிலையான விகிதத்தில் கடன் வாங்குவது நல்லது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். எது சிறந்தது? நம்முடைய அவசர தேவைகளுக்காக வங்கிகளிலோ அல்லது நிதி நிறுவனங்களிலோ கடன்களை வாங்கினால் போதும் என்று நினைப்போம். ஆனால் எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சினைகளைக் குறித்து யோசிக்க மாட்டோம். எனவே முதலில் நீங்கள் வட்டி விகிதம் என்ன? என அறிந்து கொள்வது அவசியமான ஒன்று.

 ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யும் போது, மாறும் வட்டி விகித கடனில் கடன் வாங்கியவர்களுக்கு தவணைக்காலம் (இ.எம்.ஐ.) குறையக்கூடும். ஆனால் நிலையான வட்டி விகிதங்களில் இந்த வசதிகள் இருக்காது. ஒருவேளை சில வங்கிகள் உங்களுக்கு ஆரம்பத்திலேயே வட்டி விகிதங்களைக் குறைத்து கடன் வழங்கும் பட்சத்தில், எவ்வித தயக்கமும் இன்றி நிலையான வட்டிக்கடனை வாங்கலாம். இல்லையென்றால் சற்று யோசித்து வாங்குவது நல்லது.

 கடன் வழங்குபவர்கள் நிலையான வட்டி விகிதத்தில் வீட்டுக்கடன்களை வழங்கக்கூடும். ஆனால் நிலையான விகிதக் கடன் வாங்கும் போது நம்மிடம் முன்கூட்டியே செலுத்தும் கட்டணத்தை வசூலிப்பார்கள். ஆனால் மாறும் வட்டி விகித கடனில் இந்த நடைமுறை இல்லை. ஒருவேளை நீங்கள் ஏற்கனவே கடன் வாங்கியவர்களாக இருந்தால், கூடுதல் கட்டணங்கள் ஏதுவுமின்றி குறைந்த வட்டியுடன் உங்களுக்குக் கிடைத்தால் மட்டுமே நிலையான வட்டி விகித கடனை மாற்றுவதைக் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே உங்களுடைய மாதாந்திர வருமானம், உங்களது பொருளாதார நிலை குறித்து யோசித்து எந்த வழியில் வீட்டுக்கடன் வாங்கலாம் என்பதை முடிவு செய்யுங்கள்.


வரிச்சலுகைக்காக வீட்டுக்கடன் வாங்கலாமா?

 நடுத்தர மக்களின் வாழ்நாள் சாதனையே சொந்த வீடு வாங்குவதுதான். ஆனால் அது ஒன்றும் அவ்வளவு எளிமையான காரியம் கிடையாது. மேலும், யாரும் மொத்த பணத்தையும் கையில் வைத்துக்கொண்டு வீடு வாங்க முடியாது. பெரும்பாலானவர்கள் கடன் வாங்கித்தான் வீடு வாங்குகிறார்கள். ஆனாலும், அந்த கடன் வாங்குவதற்கும் நம்மிடம் ஒரு அடிப்படைத் தொகை இருக்க வேண்டும். உதாரணத்துக்கு வீட்டின் மதிப்பில் சுமார் 20 சதவீதத்தொகை நம்மிடம் இருக்க வேண்டும். 

இதை டவுன்பேமென்ட் என்று சொல்லுவார்கள். உதாரணத்துக்கு 50 லட்ச ரூபாய்க்கு வீடு வாங்குகிறீர்கள் என்றால், சுமார் 10 லட்ச ரூபாயாவது நீங்கள் செலுத்தும் முன்பணமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் வங்கிகள் கடன் தரும். வீடு வாங்கும்போதே இத்தனை வருடத்துக்குள் வாங்கப் போகிறேன் என்று முடிவெடுத்துக்கொண்டால், அதற்கு ஏற்ப முதலீட்டை செய்துகொள்ளலாம். மூன்று வருடங்களுக்கு பிறகு எனும்பட்சத்தில் கொஞ்சம் மிதமான ரிஸ்க் எடுத்து முதலீடு செய்யலாம்.

வங்கி மற்றும் தபால்நிலைய சேமிப்புகளில் கிடைக்கும் தொகையைவிட பேலன்ஸ்டு மியூச்சுவல் பண்ட்களில் (இதில் நாம் முதலீடு செய்யும் தொகையை பங்குச்சந்தை மற்றும் கடன்சந்தையில் முதலீடு செய்வார்கள்) முதலீடு செய்து, இந்தத் தொகையைத் திரட்டலாம். இதிலும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
 உதாரணத்துக்கு மாதம் 10,000 ரூபாய் சேமிக்கிறீர்கள் என்றால் 5,000 ரூபாய்க்கு மேல் இதுபோன்ற பேலன்ஸ்டு மியுச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்ய வேண்டாம் என்று பொருளாதாரா நிபுணர்கள் கூறுகிறார்கள். ஒரு வேளை மூன்று வருடத்துக்கும் குறைவாகவே வாங்கத் திட்டமிட்டு இருக்கிறீர்கள் என்றால், பேலன்ஸ்டு மியூச்சுவல் பண்ட்களை தவிர்த்துவிட்டு வங்கி, தபால்நிலைய சேமிப்பு அல்லது கடன் சார்ந்த பங்குச்சந்தை முதலீடு மட்டுமே போதும்.

குறுகிய காலத்தில் பேலன்ஸ்டு மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வது கொஞ்சம் ரிஸ்க்கானது. இந்த தொகையை சேமிப்பதற்கு முன்பாக உங்களுக்கு வேறு எதாவது கடன் இருந்தால், அந்த கடனை அடைத்தபிறகு வீடு வாங்குவதற்கு சேமிக்கலாம். டவுன்பேமென்ட் தொகையைத் திரட்ட கிரெடிட் கார்டு, தனிநபர் கடன் உள்ளிட்ட வகைகளில் பணத்தைத் திரட்ட வேண்டாம். 
இந்த வகைகளில் வட்டி அதிகம். மேலும் இந்த வகையில் பணத்தை திரட்டி பணம் கடன் வாங்கும்போது, உங்களது மாதாந்திர வருமானத்தில் பெருமளவு கடனை திருப்பி அடைப்பதற்குப் போய்விடும். 

பொதுவாக ஒருவரது மாத வருமானத்தில் 40 சதவீதத்துக்கு மேல் கடனுக்கு செல்வது ஆரோக்கியமானது கிடையாது. திடீரென வருமானம் பாதிக்கப்பட்டால் மிகுந்த நிதி நெருக்கடிக்கு ஆளாக வேண்டி இருக்கும். ஆனால், அதேநேரம் பெற்றோர் மற்றும் நண்பர்களிடமிருந்து வட்டி இல்லாமல் கடனைத் திரட்ட முடிந்தால், அதை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் ஏற்கனவே வைத்திருக்கும் பிக்சட் டெபாசிட், பி.எப். தொகையில் இருந்து பணத்தை எடுக்க முடிந்தால், அதையும் பயன்படுத்திகொள்ளலாம். 

வீட்டுக்கடன் வாங்கும் போது வரிச்சலுகை கிடைக்கும். ஆனால் வரிச்சலுகை வேண்டும் என்பதற்காக வீட்டுக்கடனை வாங்கவேண்டாம் என்பதே நிதி ஆலோசகர்களின் கருத்தாகும்.

சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் முன் நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை..!

 உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும், தசைகளை வலுப்படுத்தவும் இப்போதெல்லாம் சத்து மாத்திரைகள் மற்றும் ஊக்க மருந்துகளை உட்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. அதிலும் தடகள வீரர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள் இதுபோன்ற பழக்கங்களை கடைப்பிடிக்கின்றனர். உடலுக்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் உணவு மூலமாக கிடைப்பதில்லை என்ற மனக்குறையின் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

சத்து மாத்திரைகளால் நம் உடலுக்கு நல்லது தான் என்றாலும், அதை எடுத்துக் கொள்ளும் முன்பாக பின்வரும் விஷயங்களை நாம் பரிசீலனை செய்ய வேண்டும். இல்லை என்றால் பக்க விளைவுகள் ஏற்படலாம்.

தேவைகளை புரிந்து கொள்ளுங்கள் : என்னுடைய நண்பன் எடுத்துக் கொள்கிறான், விளம்பரத்தில் சொல்கிறார்கள் என்ற காரணங்களுக்காக சத்து மாத்திரை எடுத்துக் கொள்வது தவறு. உங்கள் உடலில் எது பற்றாக்குறையாக இருக்கிறது, எவ்வளவு தேவை உள்ளது என்பதை பரிசீலனை செய்து, அதற்கு தகுந்தவாறு எடுத்துக் கொள்ள வேண்டும். மிகுதியாக எடுத்துக் கொண்டால் உடல்நல கோளாறுகள் உண்டாகக் கூடும்.

தரம் மற்றும் அளவு : அனைத்து சத்து மாத்திரைகளிலும் மூல பொருள் ஒரே மாதிரியாக சேர்க்கப்படுவதில்லை. ஒவ்வொன்றிலும் கிடைக்கக் கூடிய ஊட்டச்சத்து வெவ்வேறாக இருக்கிறது. ஆக தரமான மருந்து நிறுவனத்தை தேர்வு செய்து வாங்குவது முக்கியம். அதிலும் உங்கள் உடலுக்கு எவ்வளவு டோஸ் எடுத்துக் கொள்ளலாம் என்பதை தெரிந்து சாப்பிட வேண்டும்.

இயற்கையானது என்பதை நம்ப வேண்டாம் : ஊக்க மருந்துகள் மற்றும் சத்துணவுகள் மீது இயற்கையானது என்று அச்சிடப்பட்ட லேபிள்களை பார்த்து ஏமாற வேண்டாம். அதே சமயம், ஊக்க மருந்துகள் இயற்கையானதாகவே இருந்தாலும் கூட, அதன் மூலமாக எதிர்மறை விளைவுகள் உண்டாகக் கூடும். ஊக்கமருந்துகளை வாங்கும்போது அதில் என்னென்ன பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பதை கவனமாக படித்துப் பார்த்து வாங்கவும்.

ஆரோக்கியமான உணவுக்கு ஈடானது அல்ல : உங்கள் உடலுக்கு அனைத்து விதமான சத்துக்களும் போதுமான அளவில் கிடைக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் வெவ்வேறு வகையான கீரைகள், வண்ணமயமான காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை சுழற்சி அடிப்படையில் சீராக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருபோதும் மருந்துகள் இதற்கு மாற்றாக அமையாது. சத்துமாத்திரைகள், ஊக்க மருந்துகளை எடுத்துக் கொண்டால் சத்தான உணவு தேவையில்லை என்று அர்த்தம் ஆகிவிடாது.

எல்லோருக்கும் உகந்தது அல்ல : நாம் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல நண்பர்களை பார்த்து ஊக்க மருந்துகளை உபயோகிக்க தொடங்க வேண்டாம். உங்களின் மரபணு, வாழ்வியல், உணவுப் பழக்கம் போன்றவற்றை பார்க்கும்போது உங்களுக்கான தேவைகள் வேறு மாதிரியாக இருக்கலாம். சத்து மாத்திரைகள் மற்றும் ஊக்க மருந்துகளை எடுத்துக்கொள்ளும் முன்பாக ஊட்டச்சத்து நிபுணர் அல்லது மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை மேற்கொள்ளவும்.

Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip

ஆண்களை விட பெண்களுக்கு அதிக உறக்கம் தேவை : ஏன் தெரியுமா..?

 மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்குமே ஆரோக்கியமான உறக்கம் என்பது அவசியமான ஒன்று. தினசரி இரவில் போதுமான அளவு உறங்கினால் தான் அடுத்த நாள் வேலைகளை செய்வதற்கு உடல் தன்னை புதுப்பித்துக் கொள்ள முடியும். மேலும் போதுமான அளவு உறங்கினால் மட்டுமே உடல் மற்றும் மனம் இரண்டுமே ஆரோக்கியமானதாக இருக்கும். சில சமயங்களில் தவிர்க்க முடியாத சில காரணங்களினால் உறங்குவதில் பிரச்சனை ஏற்படும் போது அவை உடலளவிலும் மனதளவிலும் பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்க கூடும்.

வளர்ந்த ஆரோக்கியமான ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 7 – 9 மணி நேரம் வரையிலான உறக்கம் அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் வயது, பாலினம், வாழ்க்கைமுறை போன்ற பல்வேறு காரணிகளை பொறுத்து இந்த நேரம் மாறுபடலாம். பெண்களைப் பொறுத்தவரையில் மாதவிலக்கு காலம், பருவமடைதல், கர்ப்பம் தரித்தல் போன்ற பல்வேறு காரணிகளை பொருத்து அவர்கள் உறங்கும் நேரத்தில் மாற்றங்கள் இருக்கலாம்.

இதில் முக்கியமாக ஆண் பெண் என இரு பாலினத்தவருக்குமே அவரவர் உறங்கும் நேரத்தில் மாற்றங்கள் இருக்கின்றன. முக்கியமாக இன்சோம்னியா எனப்படும் உறக்கமின்மை பிரச்சனையானது ஆண்களை விட பெண்களை அதிக அளவு பாதிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதைத்தவிர ரெஸ்ட்லஸ் லெக்ஸ் சிண்ட்ரோம் மற்றும் அப்ஸ்ட்ராக்டிவ் ஸ்லீப் அப்னியா போன்ற நோய்களும் பெண்களை அதிக அளவு பாதிக்கிறது.

பருவமடைந்த பின் தான் ஆண் மற்றும் பெண்களுக்கு உறங்கும் கால அட்டவணையில் அதிக அளவு மாறுதல்கள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கிடைத்துள்ள தரவுகளின் படி கர்ப்பமாக இருக்கும் பெண்களில் 30 சதவீதம் பேர் இரவில் சரிவர தூங்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்கள். இதுவே பிரசவத்திற்கு பின் 45 சதவீத பெண்கள் சரிவர தூங்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்கள். இதைத் தவிர மெனோபாஸ் காலத்தை கடந்த பெண்களில் 40 சதவீதம் பேர் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர். மெனோபாஸ் காலத்தை நெருங்கிக் கொண்டிருப்பவர்களின் 45 சதவீதம் பேரும், பருவமடைந்த பெண்களில் 41% பேரும் உறக்கமின்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவே ஆண்களைப் பொறுத்தவரை உறங்கும் போது ஏற்படும் பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும், மேலும் கிளெயின்-லெவின் சிண்ட்ரோம் ஆகிய நோய்களால் ஆண்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு இரவில் சரியாக தூங்காமல் இருக்கும் பெண்களில் பலரும், அதனை ஈடு செய்ய பகல் நேரங்களில் அதிக அளவு தூங்குவதாக தெரிவித்துள்ளனர். இதனால் உடல் சோர்வு, வாகனம் ஓட்டுவதில் பிரச்சனை மற்றும் அதிக அளவு காபி உட்கொள்ள விரும்புவது போன்ற பிரச்சனைகளை அவர்கள் சந்திப்பதாக தெரிவித்துள்ளார்கள். இப்படிப்பட்ட பெண்கள் அனைவருமே இன்சோமனியா நோய் அல்லது வேறுபல உறக்கம் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip

இந்த சம்மருக்கு 'ஏர் கூலர்' வாங்க போறீங்களா..? மொதல்ல இந்த 10 விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க..!

 நாட்டில் கோடைகாலம் ஆரம்பமானதும் கூலர்ஸ் மற்றும் ஏ.சிகளின் பயன்பாடு அதிகரித்து விட்டது. இதனால், கடைகள் பல ஆபர்களை அறிவித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக கூலர்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இருப்பினும், சரியான கூலரை எப்படி பார்த்து வாங்குவது என்பது பலருக்கு இன்னும் குழப்பமாக இருக்கிறது. அந்த வகையில் நீங்கள் கூலர்களை வாங்குவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்களை காண்போம்.

1. வாங்கவேண்டிய கூலர்களின் வகையைத் தீர்மானியுங்கள் :

ஒரு பயனுள்ள கூலிங் அம்சத்திற்கு சரியான வகை கூலர்களை தேர்ந்தெடுப்பது முக்கியம். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அறைகளுக்கு, பெர்சனல் கூலர்களை தேர்வு செய்யவேண்டும். பெரிய அறைகளுக்கு, டெசர்ட் கூலர்கள் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். அதாவது.

* 150 சதுர அடி முதல் 300 சதுர அடி வரை உள்ள அறையில் பெர்சனல் கூலர்களை வைக்கலாம்.

* அதுவே 300 சதுர அடிக்கு மேல் உள்ள அறையில் டெசர்ட் கூலர்களை வைக்கலாம்.

2. தண்ணீர் தொட்டியின் திறன்

ஏர் கூலர்களில் தண்ணீர் தொட்டி திறன் ஒரு முக்கிய காரணியாகும். கூலர்களின் அளவு எந்த அளவுக்கு பெரியதாக இருக்கிறதோ, அதே அளவு தொட்டியின் திறனும் இருக்க வேண்டும். பயனுள்ள கூலிங்கிற்கு அறை அளவை விட அதிக திறன் கொண்ட ஏர் கூலரை எப்போதும் தேர்வு செய்ய வேண்டும். அதாவது,

சிறிய அறைகள்: 15 லிட்டர் தொட்டியின் திறன்

நடுத்தர அளவிலான அறைகள்: 25 லிட்டர் தொட்டியின் திறன்

பெரிய அறைகள்: 40 லிட்டர் மற்றும் அதற்கு மேல் திறன் கொண்ட ஏர் கூலரை தேர்வு செய்ய வேண்டும்.

3. கூலரை வைக்க வேண்டிய இடம்

உங்கள் அறைக்கு வெளியே அல்லது உங்கள் கொல்லைப்புறத்தில் அல்லது மொட்டை மாடியில் குளிரூட்டியை வைக்க விரும்பினால் டெசர்ட் கூலரை வாங்கலாம். உட்புற பயன்பாடுகளுக்கு, பெர்சனல் அல்லது டவர் கூலர்ஸ் மிகவும் பொருத்தமானவையாக இருக்கும்.

4. இடத்தின் காலநிலையை கருத்தில் கொள்ளுங்கள்

வறண்ட கால நிலைகளில் டெசர்ட் கூலர்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஈரப்பதமான பகுதிகளுக்கு, பெர்சனல் / டவர் கூலர்ஸ் பொதுவாக மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

5. இரைச்சல் அளவை சரிபார்க்கவும்

சில கூலர்ஸ் மிகவும் சத்தமாக இருக்கும். எனவே, நீங்கள் கடையில் கூலர்களை வாங்குவதற்கு முன் அதன் இரைச்சல் அளவை சரிபார்க்க வேண்டியது அவசியம். மேலும் அதன் அளவை அதிகபட்ச விசிறி வேகத்தில் சரிபார்க்கவும்.

6. தானாக நிரப்பு செயல்பாட்டைப் பாருங்கள்

கூலர்சில் மீண்டும் மீண்டும் தண்ணீர் நிரப்புவது ஒரு சிக்கலான பணியாகும். எனவே ஆட்டோஃபில் செயல்பாட்டை வழங்கும் கூலர்ஸை தேர்வு செய்ய வேண்டும். அவை நிர்வகிக்க எளிதானவை மட்டுமல்ல, சிறந்த மற்றும் திறமையான குளிரூட்டலை வழங்குவதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஆட்டோ ஃபில் அம்சம் தொட்டியை முழுமையாக உலரவிடாமல் தடுக்கும். எனவே மோட்டார் சேதமடைவதைத் தடுக்க முடியும்.

7. கூலிங் பேட்களின் தரத்தை பார்க்க வேண்டும்

குளிரூட்டும் பேட்கள் கூலரின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றாகும். கூலர்களுக்கு பல்வேறு வகையான கூலிங் பேட்கள் உள்ளன. கம்பளி மரம், ஆஸ்பென் பட்டைகள் மற்றும் தேன்கூடு பட்டைகள் ஆகியவை மிகவும் பொதுவானவை. இதில் தேன்கூடு கூலிங் பேட்கள் மற்ற இரண்டையும் விட சிறந்தவை. ஏனெனில் அவை நீண்ட கால குளிரூட்டலை வழங்குகின்றன. மேலும் அவை பராமரிப்பிலும் எளிதாக இருக்கும்.

8. கூடுதல் ஐஸ் சேம்பர்

வேகமான கூலிங்கிற்கு, சில உற்பத்தியாளர்கள் கூலர்ஸ்களுக்கு ஒரு பிரத்யேக ஐஸ் சேம்பரை சேர்த்துள்ளனர். தொட்டியில் உள்ள தண்ணீரை விரைவாக குளிர்விக்க நீங்கள் அவற்றில் ஐஸ் க்யூப்ஸ் சேர்க்கலாம்.

9. மின் நுகர்வு

வழக்கமாக, நவீன கூலர்ஸ் இன்வெர்ட்டர் தொழில்நுட்பத்துடன் வருகின்றன. அவை மின்வெட்டு ஏற்பட்டால் இன்வெர்ட்டர்களில் கூட இயக்க முடியும்.

10. ரிமோட் கண்ட்ரோல், ஆன்டி கொசு வடிகட்டி போன்ற கூடுதல் அம்சங்கள்:

இப்போதெல்லாம் கூலர்ஸ் ரிமோட் கண்ட்ரோல், ஆன்டி கொசு, டஸ்ட் ஃபில்ட்ர் போன்ற கூடுதல் அம்சங்களை வழங்குகின்றன.

Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip

ஆட்டோ இம்யூன் கல்லீரல் நோயின் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள்...!

 நமது உடலின் முக்கிய உள் உறுப்பான கல்லீரல் செரிமான பாதையிலிருந்து வரும் ரத்தத்தை உடலின் மற்ற பகுதிகளுக்கு அனுப்பும் முன்னர் இரத்தத்தை வடிகட்டும் வேலையை செய்கிறது. இது இரசாயன பொருட்களின் நச்சுதன்மையை நீக்கி மருந்துகளை வளர்சிதைமாற்றத்திற்கு உட்படுத்துகிறது. மேலும் தசைகள் கட்டமைத்தல், தொற்று நோய்களை எதிர்த்து போராடும் மற்றும் இரத்தம் உறைதலுக்கு தேவையான புரதங்களை உற்பத்தி செய்யும் பணிகள் கல்லீரலில் நடைபெறுகின்றன.

ஆட்டோ இம்யூன் ஹெபடைடிஸ் என்பது மனித உடலின் கல்லீரல் திசுக்களுக்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்கும் போது ஏற்படும் ஒரு நோயாகும். இது உடலின் ஆரோக்கியமான செல்களைத் தாக்கி, தொடர்ச்சியான பிரச்சனைகளை உண்டாக்குகிறது. இந்த நோய்க்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது உறுப்பு நிரந்தரமாக சேதமடைந்து கல்லீரல் புற்றுநோய் அல்லது செயலிழப்புக்கு வழிவகுக்கும். ஆட்டோ இம்யூன் கல்லீரல் நோய்களுக்குத் தேவையான எச்சரிக்கை அறிகுறிகள், வகைகள் மற்றும் சிகிச்சையைப் பற்றி இந்த பதிவில் விரிவாக காண்போம்...

ஆட்டோ இம்யூன் கல்லீரல் நோய்களின் வகைகள்:

”ஆட்டோ இம்யூன் ஹெபடைடிஸ்” இந்த நோய் சிரோசிஸ் என்றும் அழைக்கப்படும். இரண்டு வகையான ஆட்டோ இம்யூன் ஹெபடைடிஸ் உள்ளன. இதில் வகை 1 பெண்களை அதிகமாக பாதிக்கும் நோய்களாகும். 2ம் வகை குழந்தைகளுக்கு அதிகமாக ஏற்படுகிறது. அவை முதன்மை பிலியரி கோலாங்கிடிஸ் (பிபிசி) மற்றும் முதன்மை ஸ்க்லரோசிங் கோலாங்கிடிஸ் (PSC) ஆகியன.

முதன்மை பிலியரி கோலாங்கிடிஸ் (பிபிசி) கல்லீரலின் செயல்பாட்டைத் தடுக்கிறது. கல்லீரலில் உள்ள பித்த நாளம் தொடர்பான பிரச்சனையாகும். இது ஒரு நாள்பட்ட அழற்சியாகும். இந்த வகை காலப்போக்கில் வடுக்கள் மற்றும் உறுப்பு செயலிழப்புக்கு வழிவகுக்கும். இந்த நோய் கல்லீரலின் பித்த நாளத்தில் சேதத்தை ஏற்படுத்துகிறது, உணவு செரிமானத்திற்கு தேவையான பித்த சாற்றை எடுத்துச் செல்லும் சிறிய குழாய்கள் விரைவில் வீக்கமடைந்து இறுதியில் நிரந்தரமாக சேதமடைகின்றன.

அறிகுறிகள்:

  • உடல் சோர்வு
  • வயிற்று அசௌகரியம்
  • மஞ்சள் காமாலை
  • கல்லீரல் வீக்கம்
  • தோல் தடிப்புகள்
  • மூட்டு வலிகள்
  • கால்கள், கணுக்கால் வீக்கம் (எடிமா)
  • அதிக கொழுப்புச்ச்த்து
  • எடை இழப்பு

ஆட்டோ இம்யூன் கல்லீரலுக்கான சிகிச்சை ஒவ்வொரு நோயாளிகளுக்கும் வேறுபடலாம். எனவே நோய் அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நோய்த்தடுப்பு மருந்துகள் அல்லது கார்டிகோஸ்டிராய்டு மருந்துகள் கல்லீரல் அதிக பாதிக்கப்படாமல் பாதுகாக்கும். ஆனால் நோய் தாக்கம் முற்றி உறுப்பின் செயல்பாட்டை சீர்குலைக்கும் போது, ​​மருத்துவர்களின் அறிவுரையின்படி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.


Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip

நல்ல கொலஸ்ட்ரால் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்..? அதிகமானால் குறைக்கும் வழிகள் என்ன..?

 நல்ல இதய ஆரோக்கியத்தை பேணுவது என்பது தற்காலத்தில் மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் வாழ்க்கை முறை மாற்றங்கள், ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள் உள்ளிட்ட பல காரணிகள் இதய ஆரோக்கியத்தை ஆபத்தில் ஆழத்துகினற்ன. ஆரோக்கியமான செல்களை உருவாக்க நம் உடலுக்கு கொலஸ்ட்ரால் தேவை. ஆனால் உடலில் அதிக அளவு கொலஸ்ட்ரால் இருந்தால் அது இதய நோய்க்கான அபாயத்தை அதிகரிக்க செய்கிறது.

அதிக கொலஸ்ட்ரால் மூலம் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவுகள் உருவாக்கலாம். இறுதியில் கொழுப்பு அதாவது கொலஸ்ட்ரால் டெப்பாசிட்கள் வளர்ந்து, தமனிகள் வழியே போதுமான ரத்தம் பாயும் செலயல்முறைக்கு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் கொலஸ்ட்ரால் டெப்பாசிட்கள் திடீரென உடைந்து மாரடைப்பு அல்லது பக்கவாதத்தை ஏற்படுத்தும் ஒரு க்ளாட்டை உருவாக்கலாம்.

கொலஸ்ட்ரால் என்பது நம் ரத்தத்தில் காணப்படும் ஒரு மெழுகுப் பொருளாகும். இது உடலில் பல முக்கிய பாத்திரங்களை வகிக்கிறது. இவற்றில் ஹார்மோன்கள் மற்றும் வைட்டமின் D ஆகியவை அடங்கும். நாம் உண்ணும் இறைச்சி மற்றும் பால் பொருட்கள் உள்ளிட்ட பல உணவுகளில் கொலஸ்ட்ரால் காணப்பட்டாலும் இது நம் கல்லீரலாலும் உருவாக்கப்படுகிறது. நம் உடல் சரியாக வேலை செய்ய போதுமான அளவு கொலஸ்ட்ரால் தேவை தான். ஆனால் நம் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் கொஞ்சமாக இல்லாமல் அல்லது போதுமானதை விட அதிகமாக இருந்தால் கரோனரி தமனி நோய் ஏற்படும் அபாயம் மிக அதிகம்.

அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை என்பது பரம்பரையாக கூட வரலாம் என்றாலும் இது பெரும்பாலும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தேர்வுகளின் விளைவாக இருப்பதை நிபுணர்கள் சுட்டி காட்டுகின்றனர். ஆரோக்கியமான உணவு, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் சில நேரங்களில் மருந்துகள் அதிக கொழுப்பைக் குறைக்க உதவும். நம் உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பதை உணர்த்தும் வெளிப்படையான அறிகுறிகள் என்று எதுவும் இல்லை. பெரும்பாலும் ரத்தப் பரிசோதனை மூலமே அதிக கொலஸ்ட்ரால் இருக்கிறதா என்பதை கண்டறிய முடிகிறது.

கொலஸ்ட்ரால் அளவுகளால் ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய 9 -11 வயதிற்குள் முதல் முறை கொலஸ்ட்ரால் ஸ்கிரீனிங் செய்வது என்பது நேஷ்னல் ஹார்ட், லங் மற்றும் பிளட் இன்ஸ்ட்டிடீயூட்டின் (NHLBI) பரிந்துரை. அதன் பிறகு ஒவ்வொரு 3 - 5 வருடங்களுக்கு ஒருமுறை உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவுகளை டெஸ்ட் செய்து கொள்வது நல்லது என்று கூறப்படுகிறது. அதே போல 45 - 65 வயதுடைய ஆண்களும், 55 - 65 வயது வரையிலான பெண்களும் ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொலஸ்ட்ரால் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டு தோறும் கொலஸ்ட்ரால் பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும் என NHLBI பரிந்துரைக்கிறது.

வகை:

பொதுவாக கொலஸ்ட்ரால் ரத்தத்தின் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. புரதங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. புரதங்கள் மற்றும் கொலஸ்ட்ராலின் இந்த கலவை லிப்போபுரோட்டீன் (lipoprotein) என்று அழைக்கப்படுகிறது. லிப்போபுரோட்டீன் எதை கொண்டு செல்கிறது என்பதைப் பொறுத்து 2 வகையான கொலஸ்ட்ரால்கள் உள்ளன. அவை:

குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (LDL -Low-density lipoprotein):

இந்த LDL "கெட்ட" கொலஸ்ட்ரால் ஆகும். இது நம் உடல் முழுவதும் கொலஸ்ட்ரால் துகள்களை கடத்துகிறது. எல்டிஎல் கொலஸ்ட்ரால் தமனிகளில் சுவர்களை கட்டமைத்து, அவற்றை கடினமாகவும் குறுகலாகவும் ஆக்குகிறது. அதிக அளவு LDLகொலஸ்ட்ரால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.

உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம் (HDL - High-density lipoprotein):

இந்த HDL, "நல்ல" கொலஸ்ட்ரால் ஆகும். உடலில் இருக்கும் அதிகப்படியான கொலஸ்ட்ராலை உங்கள் கல்லீரலுக்கு எடுத்து செல்கிறது. அதாவது HDL கொலஸ்ட்ராலை உறிஞ்சி கல்லீரலுக்கு மீண்டும் கொண்டு செல்கிறது. கல்லீரல் அதை உடலில் இருந்து வெளியேற்றுகிறது. உடலில் அதிக அளவு HDL கொலஸ்ட்ரால் இருப்பது இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. ஒட்டுமொத்தமாக குறைந்த HDL கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு அதிக HDL அளவு உள்ளவர்களை விட இதய நோய் வருவதற்கான ஆபத்து அதிகம்.

பொதுவாக ஒரு ஆணின் கொலஸ்ட்ரால் அளவு வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது, மேலும் பெண்ணின் கொலஸ்ட்ரால் அளவு மாதவிடாய் நின்ற பிறகு அதிகரிக்கிறது. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் கூற்றின்படி, கீழே இருக்கும் அளவீடுகளின் படி வயதுக்கு ஏற்ப ஆரோக்கியமான கொழுப்பின் அளவைக் காட்டுகிறது. ஒரு டெசிலிட்டருக்கு (mg/dl) மில்லிகிராமில் கொலஸ்ட்ராலை மருத்துவர்கள் அளவிடுகின்றனர்.

71,420 Chubby Man Stock Photos, Pictures & Royalty-Free Images - iStock | Older chubby man, Young chubby man, Chubby man cut out

HDL மற்றும் LDL-க்கான இயல்பான ரேஞ்ச் என்ன?

ஒரு சிறந்த LDL கொலஸ்ட்ரால் அளவு 70 mg/dl-க்கும் குறைவாக இருக்க வேண்டும். மேலும் ஒரு பெண்ணின் HDL கொலஸ்ட்ரால் அளவு 50 mg/dl க்கு அருகில் இருக்க வேண்டும். ட்ரைகிளிசரைடுகள் 150 mg/dl-க்கும் குறைவாக இருக்க வேண்டும். மொத்த கொலஸ்ட்ரால் அளவு 200 mg/dl-க்கும் குறைவாக இருக்க வேண்டும்.

குறிப்பாக HDL கொலஸ்ட்ராலின் உகந்த அளவுகள் என்ன?

60 mg/dl- இருப்பது சிறந்தது. ஆண்களுக்கு HDL கொலஸ்ட்ராலின் அளவு 40 mg/dl- அல்லது அதற்கும் அதிகம் இருப்பது மற்றும் பெண்களுக்கு 50 mg/dl- அல்லது அதற்கு மேற்பட்டடு இருப்பது ஏற்று கொள்ளத்தக்கது. ஆண்களுக்கு 40 mg/dl-க்கும் கீழ் இருப்பதும், பெண்களுக்கு HDL கொலஸ்ட்ராலின் அளவு 50-க்கும் கீழ் இருப்பதும் குறைவான HDL கொலஸ்ட்ரால் அளவாக நிபுணர்களால் குறிப்பிடப்படுகிறது. பொதுவாக 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருக்க வேண்டிய கொலஸ்ட்ராலின் அளவு வழிகாட்டுதல்கள் ஒரே மாதிரியாக இருக்கும், இருப்பினும் மேலே பார்த்தபடி, HDL கொலஸ்ட்ரால் என்று வரும் போது அவை வேறுபடுகின்றன. ஆண்களை விட பெண்கள் அதிக அளவு HDL கொலஸ்ட்ராலை உடலில் தக்க வைப்பதை இலக்காக கொள்ள வேண்டும்.

குழந்தைகளில் கொலஸ்ட்ரால் அளவு..

நீரிழிவு, உடல் பருமன் அல்லது அதிக கொலஸ்ட்ரால் இருக்கும் குடும்ப வரலாறு போன்ற அதிக ஆபத்து காரணிகளை கொண்ட குழந்தைகள் 2 - 8 வயது வரையிலும், மீண்டும் 12 -16 வயது வரையிலும் கொலஸ்ட்ரால் டெஸ்ட்களுக்கு உட்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு இருக்க வேண்டிய பரிந்துரைக்கப்பட்ட HDL கொலஸ்ட்ரால் அளவு என்பது 45 mg/dl-க்கும் மேல் ஆகும். குழந்தைகளில் 40 mg/dl - 45 mg/dl அளவு HDL கொலஸ்ட்ரால் இருப்பது பார்டர் லைன் ஆகும். 40 mg/dl-க்கும் குறைந்த HDL கொலஸ்ட்ரால் அளவை கொண்டிருப்பது குழந்தைகளுக்கு மிகவும் குறைவான HDL கொலஸ்ட்ரால் இருப்பதை குறிக்கிறது.

Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ’வைட்டமின் சி ’ : எந்தெந்த உணவுகளில் நிறைவாக உள்ளது..?

 வைட்டமின் சி நமது உடலுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். இந்த வைட்டமின் எளிதில் நீரில் கரையக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் ஆன்டி ஆக்ஸிடண்ட்களாகவும் செயல்படுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி குறைப்பாடு, சரும பிரச்சனைகள், கண் சார்ந்த நோய்களுக்கு வைட்டமின் சி குறைபாடு காரணமாக அமைகிறது.

வைட்டமின் டி போலல்லாமல், மனித உடலால் வைட்டமின் சி உற்பத்தி செய்யவோ அல்லது சேமிக்கவோ முடியாது, அதனால்தான் அதை நல்ல அளவில் உட்கொள்வது அவசியம். இந்த ஊட்டச்சத்து சிறிய இரத்த நாளங்கள், எலும்புகள், பற்கள் மற்றும் கொலாஜன் திசுக்களுக்கும் அவசியம். உடலின் இயல்பான செயல்பாட்டிற்காகவும், குறைபாட்டின் அபாயத்தைத் தவிர்க்கவும், குறைந்தபட்சம் 90mg வைட்டமின் சியை எடுத்துக்கொள்ள வேண்டுமென ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம். 100 கிராம் ஆரஞ்சு அல்லது எலுமிச்சை எடுத்துக்கொண்டால் அதன் மூலமாக உடலுக்கு 53.2 மில்லி கிராம் முதல் 53 மில்லி கிராம் வரையிலான வைட்டமின் சி சத்து கிடைக்கிறது. அதேசமயம் இந்த இரண்டு பழங்களைத் தவிர வைட்டமின் சி சத்து நிறைந்த பிற பழங்கள் மற்றும் காய்கறிகள் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். வைட்டமின் சி பற்றாக்குறைய தடுத்து, உடலுக்கு அதிக அளவிலான வைட்டமின் சியை தரக்கூடிய பழங்கள் பற்றி தற்போது பார்க்கலாம்..

1. அன்னாச்சி பழம் : அன்னாச்சி பழத்தை பொறுத்தவரை சிலர் ஜூஸ் ஆக குடிப்பார்கள், சிலர் அதனை துண்டாக்கி சாப்பிடுவார்கள், சில உணவு பிரியர்களோ பீட்சாவில் கூட சேர்த்து சாப்பிடுகிறார்கள். இதனை நீங்கள் எப்படி சாப்பிடுகிறீர்கள் என்ற கவலையை ஒதுக்கிவைத்துவிட்டு, அன்னாச்சியை உணவில் சேர்த்துக்கொள்ளவது கட்டாயம். ஏனென்றால் வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்களில் அன்னாச்சியும் ஒன்று, இதில் 79 மில்லி கிராம் அளவுக்கும் அதிகமாக வைட்டமின் சி சத்து உள்ளது. கூடுதலாக இது ரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிப்பதோடு, எலும்புகளுக்கும் வலிமை அளிக்கிறது.

2. பப்பாளி : மாதவிடாய் பிரச்சனை உள்ள பெண்களுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் பழம். பப்பாளி, நார்ச்சத்து நிறைந்த ஆதாரமாக இருந்தாலும், ஒரு கப் பப்பாளி 88 மில்லி கிராம் வைட்டமின் சி உள்ளது. எனவே இதை உணவில் சேர்த்துக்கொள்வது அதிக அளவிலான வைட்டமின் சி கிடைக்க உதவியாக இருக்கும்.

3. கொய்யா : கொய்யாவில் ஆரஞ்சு பழத்தில் இருப்பதை விட 4 மடங்கு அதிகமான வைட்டமின் சி உள்ளது. ஒரு கொய்யா பழத்தில் 126 மில்லி கிராம் அளவிற்கு வைட்டமின் சி சத்து உள்ளது. இதை சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான வைட்டமின் சி சத்து கிடைப்பதோடு, நீரழிவு நோய் தடுப்பு, இதய ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி, கண்பார்வை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கிறது. கொய்யாவில் மாங்கனீசும் நிறைந்துள்ளது, இது நாம் உண்ணும் உணவில் இருந்து மற்ற முக்கிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உடலுக்கு உதவுகிறது. கொய்யா ஒரு குறைந்த கலோரி கொண்ட பழம் என்பதால் அனைத்து வயதினரும் எடுத்துக்கொள்ள உகந்தது. மேலும் நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட், ஃபோலிக் ஆசிட், வைட்டபின் பி-9 உள்ளிட்ட சத்துக்களும் இதில் நிறைந்துள்ளன.

4. கிவி : அடர்-பச்சை நிறத்தில் புளிப்பும், இனிப்பும் கலந்த சுவையுள்ள கிவி பழத்தில் நீங்கள் எதிர்பாராத அளவுக்கு வைட்டமின் சி சத்து நிறைத்துள்ளது. ஒரு துண்டு கிவி பழத்தில் 273 மில்லி கிராம் வைட்டமின் சி அடங்கியுள்ளது. கிவி பழத்தின் வைட்டமின் சி சத்து மட்டுமின்றி வைட்டமின் ஏ, நார்ச்சத்து, கால்சியம் உள்ளது. மேலும் இந்த பழம் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளதால் சர்க்கரை நோயாளிகள் மற்றும் டயட் இருப்பவர்கள் உணவு பட்டியலியல் இடம் பிடிக்கின்றன.

5. குடைமிளகாய் : சிகப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிற குடைமிளகாயில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. நடுத்தர அளவிலான சிவப்பு நிற குடைமிளாகயில் 152 மில்லி கிராமும், பச்சை நிற குடைமிளகாயில் 96 மில்லி கிராமும் மற்றும் மஞ்சள் நிற குடைமிளகாயில் 218 மில்லிகிராமும் வைட்டமின் சி உள்ளது. உங்களது கண்கள் மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இது உதவுகிறது. உங்கள் உடலில் வைட்டமின் சி ஊட்டச்சத்தின் அளவை அதிகரித்து நுரையீரல் புற்றுநோய் ஏற்படாமல் ஏற்படாமல் தடுத்திட குடைமிளகாய் உதவுகிறது.

Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip

உஷார்.! செல்ஃபோனை எந்த பாக்கெட்டில் வைப்பது நல்லது? இதயப்பிரச்னை, ஆண்மைக்குறைவு சிக்கலை உண்டாக்கும் மொபைல்!!

 இன்றைக்கு ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தாத நபர்களை உங்கள் கண் எதிரில் நீங்கள் கண்டுவிட்டால் அது ஆச்சரியம் தான். அதுவும் கொரோனா ஊரடங்கு முடக்க காலத்தில் ஆன்லைனில் வகுப்புகள் எடுக்க தொடங்கியதால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் கூட பிரத்யேக ஸ்மார்ட்ஃபோன் வாங்கி கொடுக்கப்பட்டன.

இளையவர்கள் வெறுமனே கேம் விளையாடுவதாக பெரியவர்கள் சாட்டுவது ஒரு பக்கம் இருந்தாலும், ஆன்லைன் கல்வி, வேலைக்கான தகவல் தொடர்பு, இண்டர்நெட் இணைப்பு, வீடியோ காலிங் வசதி, பேங்கிங் சேவைகள் நம் வாழ்வில் இருந்து பிரிக்க முடியாத ஒரு அங்கமாக ஸ்மார்ட்ஃபோன் மாறி விட்டது. இந்த தேவைகள் எதுவுமே இல்லை என்றாலும், அடிப்படை கல்வியறிவு கொண்ட எல்லோரிடமும் சாதாரண ஃபோன் ஒன்றாவது இருக்கிறது.

இதய பாதிப்பு ஏற்படுமா?
எல்லாம் சரி தான், ஃபோனை நாம் எங்கே வைத்துக் கொள்கிறோம். சட்டைப் பையில் அல்லது ஃபேண்ட் பையில். அதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. ஆனால், சட்டப்பையில் வைத்தால் இதய நலன் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் நமக்கு உண்டு. அதுபோல ஃபேண்ட் பாக்கெட்டில் வைத்தால் கருத்தரிக்கும் திறன் பாதிக்கலாம் என்ற அச்சம் உண்டு.
சொல்லப்போனால் இரண்டுமே சரி தான். அப்படியென்றால் ஃபோனை எங்கே வைத்துக் கொள்வது, இதன் விளைவுகள் என்ன என்பதை இப்போது விரிவாகப் பார்க்கலாம்.

வீட்டிலும் ஃபோனும், கையுமாக
ஃபோனில் அலுவலகம் மற்றும் தனிப்பட்ட வேலை நிமித்தமான தேவைகள் முடிந்து விட்டாலும் கூட, அதை எப்போதும் கையில் பிடித்துக் கொண்டு எதையாவது ஸ்க்ரோல் செய்வது தவிர்க்க இயலாத பழக்கமாக மாறி விட்டது. முடிந்த வரை சமூக வலைதளங்களை லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் பயன்படுத்துவது நல்லது. வெளியிடங்களுக்கு செல்லும்போது மட்டும் செல்ஃபோனில் உபயோகிக்கலாம்.

கழிவறை வரை வந்து செல்ஃபோன் பயன்பாடு
இப்போதெல்லாம் கழிவறைக்கு செல்பவர்கள் கையில் ஃபோன் இல்லாமல் செல்வதில்லை. அங்கே அமர்ந்து கொண்டு ஸ்டேட்டஸ் பார்ப்பது அல்லது வயர்லெஸ் ஹெட்ஃபோனுடன் இணைத்துவிட்டு பேசிக் கொண்டிருப்பது போன்றவை தொடர்கிறது. ஆனால், இவ்வாறு வயர்லெஸ் கருவியுடன் இணைப்பதால் கதிர்வீச்சு 2 முதல் 7 மடங்கு கூடுதலாக இருக்குமாம். அதுவே புற்றுநோயை வரவைக்கும் என்று எச்சரிக்கின்றனர்.

ஃபேண்ட் பாக்கெட்டில் வைப்பதால்....
செல்ஃபோனை ஃபேண்ட் பாக்கெட்டில் வைப்பதால் உயிரணு உற்பத்தி பாதிக்கப்படும் என்பது மட்டுமல்லாமல், கதிர்வீச்சானது எலும்புகளை வலுவிழக்கச் செய்யுமாம். அதிலும் இடுப்பு எலும்புகள் வலுவிழப்பதை தவிர்க்க முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

எங்குதான் வைப்பது?
செல்ஃபோன் பயன்பாட்டை தவிர்க்கவும் முடியாது, அதை பாக்கெட்டுகளிலும் வைக்க கூடாது என்றால், பிறகு அதை எங்குதான் வைத்துக் கொள்வது என்று சலிப்பு தட்டுகிறதா? உங்கள் பின் பாக்கெட்டில் இதை வைத்துக் கொள்ளலாம். ஆனால், மறந்தும்கூட அப்படியே உட்கார்ந்து விட வேண்டாம்.
கார்களில் பயணிக்கும்போது முன்பக்க டிராயரில் வைத்து விடலாம். அலுவலகத்திற்கு பயணிக்கும்போது நம் கையில் உள்ள பைகளில் வைத்துக் கொள்ளலாம்.