முகக்கவசத்தால் சுவாசப் பிரச்னைகள் ஏற்படுமா? ~ மருத்துவர் தரும் விளக்கம்

 தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராமமூர்த்தி தாக்கல் செய்த பொதுநல வழக்கில் "முகக்கவசம் அணிவதால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது. மாறாக முகக்கவசம் சுவாச பிரச்னைகளை ஏற்படுத்தும்" என்றும் தெரிவித்திருந்தார். முகக்கவசம் அணியாதவர்களுக்கான அபராதமும் தவறு என்று குறிப்பிட்ட அவர், இந்த அரசாணையை ரத்து செய்யக் கூறியிருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாமல் வழக்கை தாக்கல் செய்துள்ளதாகக் கூறி மனுதாரருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.


முகக்கவசம் சுவாசப் பிரச்னைகளை ஏற்படுத்துமா என சென்னையைச் சேர்ந்த நுரையீரல் மற்றும் சுவாசநோய் மருத்துவர் சிந்துராவிடம் கேட்டோம்...

"முகக்கவசம் அணிவதால் சுவாசப் பிரச்னை ஏற்படாது. மாறாக சுவாசப் பிரச்னைகள் உள்ளவர்களுக்கு முகக்கவசம் அணிவது பெரும் பாதுகாப்பானது. N 95 முகக்கவசம் மிகவும் பாதுகாப்பானது. 95 சதவிகிதம் காற்றை வடிகட்டி அனுப்புவதால்தான் அது N 95 என்று சொல்லப்படுகிறது. சர்ஜிக்கல் முகக்கவசத்திலேயே 3 அடுக்குகள், 1 அடுக்கு என இருவகை உள்ளது. அதுவும் சரி, துணியால் ஆன முகக்கவசமும் சரி, இரண்டும் காற்றை வடிகட்டாது. நேராகப் பேசுகையில் எச்சில் தெறிப்பு மூலம் கிருமிகள் பரவாமல் தடுக்கும்.

நுரையீரல் பிரச்னை உள்ளவர்களுக்கு, ILD (Interstitial lung disease), COPD (Chronic obstructive pulmonary disease) போன்ற நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் இருக்கும். புகைப்பழக்கம், காற்று மாசு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இப்பிரச்னைக்கு ஆளாக நேரிடுகிறது. அவர்கள் முகக்கவசம் அணியும்போது ஆக்ஸிஜன் வரத்து குறைவதைப் போன்று உணர்ந்து சிரமத்துக்கு ஆளாவார்கள்.

நுரையீரல் பிரச்னை உடையவர்களுக்குதான் கொரோனாவின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என்பதால் அவர்கள் முகக்கவசம் அணிந்தே தீர வேண்டும். வீட்டுக்குள் போட வேண்டிய தேவை இல்லை. பொது இடங்களுக்குச் செல்லும்போது மட்டும் அணிந்து கொள்ளலாம். வீட்டில் யாருக்கேனும் கொரோனா அறிகுறிகள் இருந்தாலும் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணிந்து சுவாசிக்க மூச்சடைப்பது போல் இருக்கும். அதில் ஒன்றும் பிரச்னை இல்லை. ஓட்டம், உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது உடலுக்கு அதிக அளவிலான ஆக்ஸிஜன் தேவைப்படும் என்பதால் அப்போது முகக்கவசம் அணியக்கூடாது" என்றவர் கொரோனா மட்டுமன்றி காற்று மாசிலிருந்து காத்துக் கொள்ளவும் முகக்கவசம் அணிந்து கொள்ளலாம் என்கிறார்.

"முகக்கவசம் அணிவதன் மூலம் நோய்த்தொற்று பரவாமல் தடுக்க முடியும் என்பதைத் தாண்டியும் பல பயன்கள் இருக்கின்றன. தூசி ஒவ்வாமை இருக்கிறவர்கள் முகக்கவசம் அணிந்து கொள்வது நல்லது, இன்றைக்கு வாகனப் புகை மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளால் காற்று அதிகளவில் மாசுபட்டிருக்கிறது. மாசுபாடான காற்றை நேரடியாக சுவாசிப்பதால் வரும் விளைவுகளைத் தடுக்கவும் முகக்கவசம் அணியலாம். மார்பிள் கட்டிங், மர வேலைகள் செய்கிறவர்களும், நுண் பொருள்கள் சுவாசம் வழியே உட்புக வாய்ப்பிருக்கும் சூழலில் பணிபுரிகிற அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளில் இவை குறிப்பிடப்பட்டிருந்தாலும் நிறைய இடங்களில் இதனைப் பின்பற்றுவதில்லை. அதனை அரசு கண்காணிக்க வேண்டும். மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கட்டாயம் N 95 கவசம் அணிய வேண்டும்" என்றவரிடம் ஒரு முறைக்கு மேல் முகக்கவசத்தைப் பயன்படுத்துவது நல்லதா என்று கேட்டதற்கு...

"முகக்கவசம் ஒரு முறை பயன்படுத்துவதற்குத்தான். N 95 முகக்கவசம் இப்போது விலை குறைந்து 25 ரூபாய்க்குக் கிடைக்கிறது. உடல் நலத்துக்காக நாளொன்றுக்கு 25 ரூபாய் செலவிடுவதற்கு ஏன் யோசிக்க வேண்டும். துணியாலான முக்ககவசத்தைத் துவைத்துப் பயன்படுத்தலாம். சர்ஜிக்கல் மாஸ்கை ஒரு நாள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். N 95 முகக்கவசத்தை துவைக்க முடியாது என்பதால் கொஞ்ச நேரம் வெயிலில் வைத்து நான்கு நாள்கள் வரை பயன்படுத்தலாம். எதுவாகினும் முகக்கவசம் மிகவும் நல்லது. பெருந்தொற்று அல்லாத நாள்களிலும் சூழலுக்கேற்ப பயன்படுத்தினால் நுரையீரல் தொடர்பான பிரச்னைகளிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம்." என்கிறார் சிந்துரா.


 Click here to join whatsapp group for daily health tip

ஆர்த்ரைடிஸ் நோயாளிகளின் அவதியை குறைக்கும் அற்புத சமையல் எண்ணெய்.!

 மூட்டழற்சி (Arthritis - ஆர்த்ரைடிஸ்) என்பது மூட்டு பகுதிகளில் வீக்கம் ஏற்படும் ஒரு நிலை ஆகும். ஆர்த்ரைடிஸ் நிலை மூட்டுப் பகுதிகளை சுற்றி தீவிர வலி மற்றும் வீக்கம் ஏற்படுவதை குறிக்கிறது. இந்த ஆர்த்ரைடிஸ் கண்டிஷன் என்பதை முற்றிலும் குணப்படுத்துவது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.

ஏனென்றால் பெரும்பாலும் இந்த நிலை வயது மூப்புடன் தொடர்புடையது. வயது காரணிகளில் ஏற்பட கூடியது என்றாலும் மூட்டுகளுக்கு ஏற்படுகின்ற பெரிய அதிர்ச்சி அதாவது மோசமான காயங்கள், நோய் தொற்று, அதிக எடை, உடற்பயிற்சியின்மை உள்ளிட்டவையும் ஆர்த்ரைடிஸ் கண்டிஷன் ஏற்பட காரணங்களாக அமைகின்றன. எனவே ஆர்த்ரைடிஸ் நிலையை நிர்வகிப்பது ஒன்றே நோயாளிகளுக்கு நிவாரணம் தர கூடிய வழி. இந்த நிலையால் பாதிக்கப்படுவோருக்கு வலி மற்றும் வீக்கத்தை குறைக்க உதவும் பல உணவுகள், மருந்துகள் உள்ளன.

இதில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் ஒரு எண்ணெய்யும் உள்ளது. அந்த சமையல் எண்ணெய் மூட்டு பகுதிகளை சுற்றியுள்ள வலி மற்றும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.


ஆர்த்ரைடிஸ் கண்டிஷனை நிர்வகிக்க உதவும் அந்த அதிசய ஆயிலின் பெயர் ஆலிவ் எண்ணெய். ஆலிவ் எண்ணெய்யில் மொத்தம் 3 முக்கிய வகைகள் உள்ளன. ரீஃபைன்ட் ஆயில், வெர்ஜின் ஆலிவ் ஆயில் மற்றும் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயில். இதில் குறிப்பாக எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் ஆர்த்ரைடிஸ் பாதிப்புக்கு ஏற்றதாகும். சாதரண ஆலிவ் எண்ணெய்க்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் சால்வென்ட்ஸ் அல்லது சுத்திகரிப்பு முறைகளை பயன்படுத்தாமல் கோல்ட் மெக்கானிக்கல் எக்ஸ்ட்ராக்ஷன் மூலம் பிரித்தெடுக்கப்பட்ட வெர்ஜின் ஆலிவ் எண்ணெயின் மிக உயர்ந்த தர எண்ணெய் தான் இது. சுருக்கமாக சொன்னால் இது ஆலிவ் எண்ணெயின் குறைந்த பதப்படுத்தப்பட்ட வெர்ஷன் ஆகும். மேற்கண்ட 3 வகைகளில் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் மிகவும் ஆரோக்கியமாதாக கருதப்படுகிறது.

அழற்சி எதிர்ப்பு பண்புகள்..

எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயிலில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அடங்கி உள்ளன. தவிர இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.இதில் காணப்படும் முக்கிய ஆன்டி ஆக்ஸிடன்ட்களில் ஒன்று oleocanthal ஆகும். ஆய்வின் படி, கூட்டு-சிதைவு நோய், நரம்பியல் சிதைவு நோய் மற்றும் குறிப்பிட்ட புற்றுநோய்கள் உட்பட அழற்சி தொடர்பான நோயை குறைப்பதில் oleocanthal பயனுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஆய்வுகள் என்ன சொல்கின்றன?

ஈரானில் மேற்கொள்ளப்பட்ட சீரற்ற மருத்துவ பரிசோதனையை அடிப்படையாக கொண்ட ஆராய்ச்சி ஒன்று ஆய்வில், எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயிலை ஆர்த்ரைடிஸ் நிலை இருக்கும் பகுதியில் பயன்படுத்தும் போது முடக்கு வாதத்தின் வெளிப்பாடுகளை கட்டுப்படுத்துவது கண்டறியப்பட்டது. மற்றொரு ஆய்வு, ஆலிவ் ஆயிலில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு வலி நிவாரணியான இப்யூபுரூஃபன் மருந்தைப் போலவே செயல்படுவதாகக் கூறுகிறது.

அதிகம் கூடாது..

எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயில் நமக்கு நல்லது என்றாலும், அதை அதிகமாக பயன்படுத்தினால் பிரச்சனைகள் ஏற்படலாம். ஒரு நாளைக்கு 1-4 டேபிள்ஸ்பூன் வரை ஆலிவ் ஆயில் டயட்டில் சேர்த்து கொள்வது நல்லது. ஒருவர் உட்கொள்ளும் எண்ணெயின் அளவு உணவின் வகை மற்றும் உணவின் தன்மையைப் பொறுத்து மாறும் என்றாலும், அளவோடு எண்ணெய்யை எடுக்கவே நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

ஏற்ற நேரம்?

நிபுணர்களின் கூற்றுப்படிஎக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெயை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உட்கொள்ளும் போது அதிசயங்களை செய்யும். அழற்சி எதிர்ப்பு நன்மைகளை பெற ஒரு நாளின் காலை நேரத்தில் முதலில் இதை எடுத்து கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. காலையில் ஆலிவ் எண்ணெயை எடுத்து கொள்வது சருமத்தை மேம்படுத்த, கூடுதல் எடையை இழக்க, பெருங்குடல் புற்றுநோயை தடுக்க என பல வகைகளில் உதவுகிறது.

ஆர்த்ரைடிஸ் நோயாளிகள் தங்கள் எடையை கட்டுக்குள் வைத்திருக்க முயற்சிக்க வேண்டும். புகைப்பிடித்தல் போன்ற ஆரோக்கியமற்ற பழக்கங்களை கைவிட வேண்டும். நல்ல தோரணை மற்றும் மூட்டுகளை நகர்த்துவது அவசியம். அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் உடற்பயிற்சிகளை தவிர்க்க வேண்டும். ஓவர்-தி-கவுன்டர் வலி நிவாரணிகளை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும்.

இந்த உணவுகளை தெரியாம கூட இரவு 7 மணிக்கு மேல சாப்பிட்ராதீங்க... இல்லனா ஆபத்து உங்களுக்குத்தான்...!

 இரவு உணவு என்பது அன்றைய மிக முக்கியமான உணவுகளில் ஒன்றாகும், குறிப்பாக இந்தியர்களுக்கு மிகவும் பிடித்தது இரவு உணவுதான். சிக்கன் கறி முதல் மட்டன் பிரியாணி வரை மற்றும் காரமான உணவுகள், இந்திய உணவுகள் அனைத்தும் சுவையான உணவைப் பற்றியது. இருப்பினும், நிபுணர்களின் கூற்றுப்படி, இரவில் தாமதமாக உணவை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும்.


இரவு உணவை தாமதமாக சாப்பிட்டால், அதாவது இரவு 7 மணிக்கு பிறகு சாப்பிடும்போது, செரிமான பிரச்சனைகள், வயிற்றில் எரிச்சல், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றை உண்டாக்கும். ஆயுர்வேதத்தின் படி, இரவு உணவை சீக்கிரமாக சாப்பிட்டால் நல்ல தூக்கம் கிடைக்கும், இது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இரவு 7 மணிக்குப் பிறகு யாராவது பசி எடுத்தால், இட்லி போன்ற சில லேசான உணவுகளை உட்கொள்ளலாம் அல்லது இரண்டு பேரீச்சம்பழங்கள் அல்லது சில பாதாம் பருப்புகளுடன் ஒரு கிளாஸ் பால் சாப்பிடலாம். ஆனால், இரவு 7 மணிக்கு மேல் சில உணவுகளை உட்கொள்ளக் கூடாது. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.


மட்டன் பிரியாணி 

பிரியாணி என்பது ஒருவர் எப்போதும் சாப்பிடக்கூடிய மிக அற்புதமான உணவு என்று அறியப்படுகிறது, ஆனால் இந்த மட்டன் பிரியாணி கலோரிகள் மற்றும் கொழுப்பு உள்ளடக்கம் நிறைந்த உணவு என்பது உங்களுக்குத் தெரியுமா? பிரியாணி சாப்பிடும் போது, கலோரிகள் மற்றும் கொழுப்பு உள்ளடக்கம் பற்றி யாரும் அதிகம் கவலைப்படுவதில்லை, மேலும் நாம் அளவை மீறுகிறோம். மட்டன் பிரியாணி போன்ற அதிக கொழுப்பு மற்றும் கலோரிகள் நிறைந்த உணவை உட்கொள்வது, இந்தியாவில் அதிகரித்து வரும் நோய்களில் ஒன்றாக மாறிவரும் ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயை (NAFLD) ஊக்குவிக்கும் என்று நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். மட்டன் பிரியாணியின் ஒரு சிறிய அளவு 500-700 கலோரிகளுக்குச் சமம் மற்றும் அறியாமலேயே உங்கள் கலோரி உட்கொள்ளலில் அதிகமான உயர்வைக் கொடுக்கும்.


காரமான உணவுகள் 

இந்தியா மசாலாப் பொருட்களின் பிறப்பிடமாக உள்ளது, இதனால் பெரும்பாலான உணவுகள் அவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன, அவற்றை யார்தான் விரும்ப மாட்டார்கள்? இந்தியாவில் பல காரமான உணவுகளை நாம் காணலாம், நம்பினாலும் நம்பாவிட்டாலும், நாம் அனைவரும் இரவு உணவில் இதுபோன்ற உணவுகளைத்தான் விரும்புகிறோம். ஆனால், இரவில் இதுபோன்ற காரமான உணவுகளை உட்கொள்வது கடுமையான நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதுமட்டுமின்றி, இத்தகைய உணவுகள் நிறைய எண்ணெய் மற்றும் நெய்யில் தயாரிக்கப்படுகின்றன, இது இதயம் தொடர்பான பிரச்சனைகளை மேலும் ஏற்படுத்தும். மேலும், மசாலாப் பொருட்கள் வளர்சிதை மாற்ற ஊக்கியாக செயல்படுவதால், இத்தகைய உணவுகள் உடலுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகின்றன.

இனிப்புகள் 

இரவு 7 மணிக்குப் பிறகு இனிப்புகளை உட்கொள்வது முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும், ஏனெனில் அது உங்கள் உடல் உறக்கத்தைத் தடுக்கும். இந்திய கலாசாரத்தில், ருசியான உணவுக்குப் பிறகு இனிப்பு சாப்பிடுவது சிறந்த நடைமுறையாகக் கருதப்படுகிறது, ஆனால் அவ்வாறு செய்வது உடலின் தூக்க முறையை சீர்குலைத்து, அதிக உணவுக்காக நீங்கள் ஏங்க வைக்கும். மேலும், இரவு உணவிற்குப் பிறகு இனிப்புகளை உட்கொள்வது உணவை ஜீரணிக்க உதவும் என்று பலர் நம்புகிறார்கள். மாறாக, அவை இரவு முழுவதும் உங்களை எழுப்பக்கூடிய ஒரு தூண்டுதலாக செயல்படுகின்றன.


பக்கோடா 

இந்த சுவையான சிற்றுண்டியை இரவு 7 மணிக்குப் பிறகு உட்கொள்வது வயிற்றில் எரிச்சலை உண்டாக்கும் மற்றும் உங்கள் தூக்கப் பழக்கத்தை சீர்குலைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏனென்றால், பக்கோடாஆழமாக வறுக்கப்பட்டவை என்பதால் இயற்கையில் அதிக அமிலத்தன்மை கொண்டவை. இரவில் அதிக அமிலத்தன்மை கொண்ட உணவுகளை உண்ணும்போது, ஜீரணிக்க எளிதானது அல்ல, இது உங்கள் தூக்கத்தில் மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும்.


காஃபைன் பானங்கள் 

காஃபின் ஒரு நல்ல தூண்டுதலாகும், இது ஒரு நல்ல இரவு தூக்கத்திற்குப் பிறகு நீங்கள் எழுந்திருக்க உதவுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், டீ, காபி அல்லது க்ரீன் டீ போன்ற காஃபினேட்டட் பானங்களை நீங்கள் உட்கொள்ளும்போது, அது இரவில் ஒருவர் எடுக்கும் ஆழ்ந்த உறக்கத்தை பாதிக்கிறது மற்றும் இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு இடையூறு விளைவிக்கும். மாலை 6 மணிக்குப் பிறகு இதுபோன்ற பானங்களைத் தவிர்க்க வேண்டும், அதற்குப் பதிலாக ஜூஸ் அல்லது ஒரு சிறிய சாக்லேட் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

வயிற்றை வளமாக்கும் சீரக தண்ணீர் அற்புதங்கள்!

சமையலறையில் இருக்கும் சீரகம், உணவுக்கு அற்புதமான சுவையைத் தருவது மட்டுமல்லாமல், ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. ஒரு மசாலாப் பொருளாக மட்டும் இதனை பார்க்கக் கூடாது. சீரக நீரை குடிப்பதால் ஏராளமான நன்மைகள் ஒருவருக்கு கிடைக்கும். சீரக நீர் வீக்கம் மற்றும் அஜீரணத்தை போக்க உதவுகிறது. குறிப்பாக, வயிற்று வலியை குணப்படுத்தும்.

கர்ப்ப காலத்தில் சீரகம்

கர்ப்ப காலத்தில் வயிற்று பிரச்சனைகள், வயிற்று வலி, மலச்சிக்கல், சளி போன்ற சில பிரச்சனைகளை சீரகம் போக்குகிறது. மேலும், சீரகம் இரும்புச்சத்துக்கான நல்ல மூலமாகும். எனவே கர்ப்ப காலத்தில் சீரகம் அல்லது சீரகம் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் குமட்டலை போக்க சீரகத்தை உட்கொள்ளலாம். மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு உட்கொள்ள வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு 

சீரக நீர் பாலூட்டி சுரப்பிகளுக்கு நல்லது. எனவே இது கர்ப்பிணிப் பெண்களுக்கு பாலூட்டுவதை ஊக்குவிக்கிறது. சீரக விதைகள் இரும்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்த பொக்கிஷம். நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதன் மூலம் பல நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. சீரகத்தை உட்கொள்வதால் நோய்வாய்ப்படும் வாய்ப்புகளை குறைக்கிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு சீரக நீர் நல்லது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க வெறும் வயிற்றில் குடிக்கலாம். சீரகம் உடலில் இன்சுலின் உற்பத்தியைத் தூண்டுகிறது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

சீரக தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் மற்ற நன்மைகள்

- சீரகத் தண்ணீரைக் குடிப்பதால், கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்து, ரத்த ஓட்டம் சீராகும்

- காய்ச்சல் வந்தால் சீரகத் தண்ணீரைக் குடித்துவர, உடலில் சளியை உற்பத்தி செய்து நிவாரணம் தரும்

- தினமும் காலையில் சீரகம் தண்ணீர் குடிப்பதால் அசிடிட்டி பிரச்சனை வராது

- சீரக நீர் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி சரும பிரச்சனைகளை ஏற்படுத்தாது

- எடை இழப்புக்கு சீரகத் தண்ணீரைக் குடிக்க அறிவுறுத்தப்படுகிறது

- சீரகத் தண்ணீரைக் குடிப்பதால், உடலில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும், இதனால் நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.



  Click here to join whatsapp group for daily health tip

இதையெல்லாம் மட்டும் சாப்புடுங்க! எப்போதும் இளமையாக இருக்கலாம்!

 
இன்றைய நாகரிக உலகில் பலரும் உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை காரணமாக சிறுவயதிலேயே முதுமையான தோற்றத்தை பெறுகின்றனர்.  சருமத்தை அக்கறை எடுத்து பாதுகாக்க தற்போது பலருக்கும் நேரம் இல்லாமல் போய்விட்டது. 
 முதுமை தோற்றம் என்பது தடுக்கமுடியாத ஒன்றுதான், ஆனால் அந்த முதுமை தோற்றத்தை தள்ளிப்போடக்கூடிய சக்தி நாம் சாப்பிடும் இயற்கையான பொருட்களில் இருந்து நமக்கு கிடைக்கிறது.  அத்தகைய உணவுப்பொருட்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள், ஆன்டி ஆக்சிடண்டுகள் மற்றும் புரோட்டீன்கள் போன்றவை நமது தசைகளை சுறுசுறுப்பாகி முதுமை தோற்றத்தை தடுக்க உதவுகிறது.  
இப்போது முதுமை தோற்றத்தை தடுத்து நம்மை இளமையாகவும், அழகாகவும் வைக்க உதவும் இயற்கையான உணவுப்பொருட்களை பற்றி இங்கே காண்போம்.
பாதாம் பருப்பு, முந்திரி, வால்நட் மற்றும் கடலை போன்ற நட்ஸ் வகைகள் முதுமையை விரட்ட உதவுகிறது.  
இதிலுள்ள நல்ல கொழுப்புகள், நார்சத்து மற்றும் புரோட்டீன் போன்றவை இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.  தண்ணீர் என்பது வாழ்க்கையின் அமிர்தமாக கருதப்படுகிறது, உடலின் உறுதிக்கு தண்ணீர் அத்தியாவசியமான ஒன்றாகும்.  அதேசமயம் உங்களுக்கு தாகம் ஏற்படாமல் இருக்கும்பொழுது தண்ணீர் குடித்தால் உங்களுக்கு விரைவில் முதுமை தோற்றம் ஏற்பட்டுவிடும்.  
அதேபோல உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைக்கபெறாவிட்டாலும் அது உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.  அதனால் உடலுக்கு தேவையான அளவு தண்ணீரை தினமும் தவறாமல் குடிக்க வேண்டும்.  
கால்சியம் நிறைந்த தயிர் உங்கள் உடலுள்ள எலும்புகளை உறுதியாக்குகிறது, தயிர் சாப்பிடுவது உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

ப்ரக்கோலி உங்கள் சருமத்தை நன்கு பராமரிக்கிறது.  இதில் அதிக ஊட்டச்சத்துக்கள், அதிக வைட்டமின்கள், ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ், நார்சத்து, கால்சியம் வைட்டமின்-சி போன்றவை அதிகம் நிரம்பியுள்ளன.  
ரெட் வைன் உங்கள் உடலிலுள்ள கெட்ட கொழுப்புகளை கரைப்பதோடு, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுகிறது மற்றும் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகளை சரிசெய்கிறது என்று கூறப்படுகிறது.  
ரெட் வைன் குடிப்பதன் மூலம் நமது சருமம் பளபளப்பாக இருக்கும் என்பது நெடுங்காலமாக கூறப்பட்டு வருகிறது.  சுருக்கங்களற்ற சருமத்தை பெற விரும்புபவர்கள் பப்பாளி பழத்தை சாப்பிடவேண்டும், தினமும் உங்கள் உணவில் பப்பாளி பழம் சேர்த்துக்கொள்வதன் உங்கள் சருமம் அழகாகவும், இளமையுடனும் இருக்கும்.  இதுதவிர நீங்கள் தினமும் உங்கள் உணவில் மாதுளம்பழம், ப்ளூபெர்ரி, சர்க்கரைவள்ளி கிழங்கு, அவோகேடோ, டார்க் சாக்லேட், கீரை வகைகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.


 Click here to join whatsapp group for daily health tip

கண்களில் இந்த பிரச்சனைலாம் இருக்கா? கொலஸ்ட்ராலாக இருக்கலாம்!

 நமது உடல் சரியாக செயல்பட கொலஸ்ட்ரால் எனும் ஒரு வகை கொழுப்பு தேவைப்படுகிறது, அதேசமயம் அந்த கொலஸ்ட்ரால் ஆனது நமது ரத்தத்தில் அதிகரித்தால் அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.  இவை ஆரம்பத்தில் எவ்வித அறிகுறிகளையும் வெளிப்படுத்தாமல் ஸ்லோ பாய்ஸனாக செயல்பட்டு நமக்கு மரணத்தை அளிக்கிறது.  அதிக கொலஸ்ட்ரால் இதயத்தை மட்டும் பாதிக்காது, கண்களுக்கும் தீங்கு விளைவிக்கும்.  


அதிக கொலஸ்ட்ராலின் சில பொதுவான அறிகுறிகள் நம் கண்களின் தோற்றத்தை அல்லது கண்களைச் சுற்றியுள்ள பகுதியை மாற்றி பார்வை திறனை பாதிக்கலாம்.  அதிக கொலஸ்ட்ராலால் கண்கள் பகுதியில் ஏற்படும் மூன்று வகையான பாதிப்புகளை பற்றி இங்கே பார்க்கலாம்.
1) சாந்தெலஸ்மா:
 
கண்களைச் சுற்றி அல்லது மூக்கிற்கு அருகில் ஒரு தட்டையான அல்லது சற்று உயர்ந்த மஞ்சள் நிறப் பகுதி தோன்றும். இது அதிக கொழுப்புடன் தொடர்புடைய மிகவும் பொதுவான கண் அறிகுறியாகும்.  சாந்தெலஸ்மாஸ் பார்வையில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது, இந்த அறிகுறி இருந்தால் உங்கள் உடலில் அதிக கொழுப்பு உள்ளது என்று அர்த்தம்.  அதிக எடையுள்ளவர்கள், புகைப்பிடிப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்களிடத்தில் இந்த சாந்தெலஸ்மா காணப்படுகிறது.


2) கார்னியா ஆர்கஸ்: 
கார்னியாவின் சுற்றளவைச் சுற்றி ஒரு வெள்ளை வளையத்தை தோன்றுவதை கார்னியல் ஆர்கஸ் என்று அழைக்கிறோம்.  இந்த வெள்ளை வளையம் இயற்கையாகவே வயதானவர்களிடத்தில் காணப்படுகிறது என்றாலும் இது அதிக கொலஸ்ட்ரால் அளவுகளின் விளைவாக எந்த வயதிலும் ஏற்படலாம்.  கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளவர்களுக்கு இது உருவாகிறது, அதேசமயம் கார்னியல் ஆர்கஸ் பார்வையை பாதிக்காது, இதற்கு சிகிச்சை கொழுப்பைக் குறைப்பது தான்.

3) விழித்திரை நரம்பு அடைப்பு: 
கண்ணின் பின்புறத்தில் ஒளியை உணரக்கூடிய விழித்திரை எனும் திசு உள்ளது, விழித்திரைக்கு தமனி மற்றும் நரம்பு வழியாக இரத்தம் அனுப்பப்படுகிறது.  நரம்புகளில் பிளாக் ஏற்படும்போது விழித்திரை நரம்பு அடைப்பு ஏற்படுகிறது, விழித்திரை தமனி அடைப்பு பக்கவாதம் என்றும் அழைக்கப்படுகிறது, இது தமனி பிளாக் ஆவதால் ஏற்படுகிறது.  நரம்பு பிளாக் ஆகும்போது ​​இரத்தமும் திரவமும் கலந்து விழித்திரையில் கசியும், அப்போது ​​வீக்கம் காரணமாக உங்கள் மையப் பார்வை பலவீனமடையும்.  மங்கலான பார்வை, பார்வையில் கரும்புள்ளிகள் அல்லது கோடுகள், கண்ணில் வலி மற்றும் பார்வையில் மாற்றம் போன்றவை இவற்றிற்கான அறிகுறியாகும்.  இதற்கு சிகிச்சை கொழுப்பைக் குறைப்பது தான்.


ஊறவைத்த வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இத்தனை பலன்களா..?

 பெரும்பாலான வீடுகளில் வெந்தயம் ஒரு முக்கியமான சமையல் பொருளாக உள்ளது. இதன் விதைகள் மட்டுமல்ல கீரையும் மருத்துவ குணம் நிறைந்தது. இதனை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன. வெந்தயத்தில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்றவை அடங்கியுள்ளது. இது செரிமானம் மற்றும் எடை இழப்புக்கு உதவுகிறது. இரவில் ஊறவைத்த வெந்தயத்தை காலையில் வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து உட்கொள்வதால், பலவிதமான நோய்களுக்கு பயனுள்ள இயற்கை தீர்வாக மாற்றுகிறது.


இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்த வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வதால் ஏற்படக்கூடிய முக்கியமான 5 நன்மைகள் பற்றி விரிவாக பார்க்கலாம்...

 1.செரிமானத்தை மேம்படுத்தும்: வெந்தயத்தில் இயற்கையாகவே ஆன்டாக்சிட் உள்ளது. இது செரிமானத்திற்கு உதவுவதோடு, அமிலத்தன்மை, வயிறு வீக்கம் மற்றும் வாயு தொந்தரவு போன்ற பிரச்சனைகளையும் தீர்க்க உதவுகிறது. இதற்கு ஊறவைக்கப்பட்ட வெந்தயத்தின் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பது சிறந்த தீர்வாக அமையும்.

2. கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு: வெந்தயம் ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் மற்றொரு நம்பமுடியாத விஷயம் கொலஸ்ட்ரால் அளவை எளிதாக கட்டுக்குள் வைப்பது தான். வெந்தயத்தில் உள்ள ஃபிளாவனாய்டுகள், நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் (எல்டிஎல்) அளவைக் குறைக்க உதவுகின்றன. அதிக கொலஸ்ட்ரால் மற்றும் உடல் எடையால் அவதிப்படுபவர்கள் ஊறவைத்த வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் இளம் சூடான தண்ணீருடன் பருகுவது நல்ல பலன் கொடுக்கும்.

3. மாதவிடாய் வலிகளில் இருந்து விடுதலை: வெந்தயத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய வயிற்று வலி, பிடிப்புகள் போன்ற தொந்தரவுகளை சரி செய்ய உதவுகிறது. குறிப்பாக வெந்தயம் ஊறவைத்த தண்ணீரில் உள்ள ஆல்காலய்டுகள் மாதவிடாய் வலியை குறைக்கும் என்பது பல ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

4. எடை இழப்பு: வெந்தயம் உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு நல்ல பலன் தரக்கூடியது. வெந்தயத்தில் உள்ள காலக்டோமன் என்ற பொருள் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து தேவையற்ற கொழுப்புகள் மற்றும் சர்க்கரையை கரைக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நிரப்பி, எளிதில் பசி எடுக்கவிடாமலும், அதிக உணவு உட்கொள்வதையும் தடுக்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புவோர், இரவில் ஊறவைக்கப்பட்ட வெந்தயத்தின் தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வது எடை இழப்பில் நல்ல மாற்றத்தைக் கொண்டு வர உதவும். இருப்பினும், தினசரி அதனை எடுத்துக் கொள்வதற்கு முன்பாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது

5. முடி மற்றும் சரும ஆரோக்கியம்: வெந்தயத்தில் உள்ள டியோஸ்ஜெனின், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும், சேதமடையாமல் வைத்திருக்கவும் உதவுகிறது.



 Click here to join whatsapp group for daily health tip

மூளை ஆரோக்கியமும் சமச்சீர் உணவும் - மருத்துவர் டிப்ஸ்

 மனித மூளையின் செயல்பாட்டிற்குச் சரியான உணவும் ஊட்டச்சத்தும் அவசியம். இன்றைய நவீன வாழ்க்கை முறை, அதிக வேலை நேரம் போன்ற காரணங்களால் மக்கள் ஆரோக்கியமான உணவைப் பெரும்பாலும் புறக்கணிக்கிறார்கள்.



நாள் முழுவதும் ஒருவரது கவனக் குவிப்பை சீராகப் பராமரிக்க, உடலில் இருக்கும் கலோரிகளை மூளை பயன்படுத்திக்கொள்கிறது. அதற்கு நாள் முழுவதும் போதுமான எரிபொருள் மூளைக்கு கிடைக்க வேண்டும்.

மீன் எண்ணெய்: இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை மூளைக்கு நல்ல ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் செல்களைச் சுற்றியுள்ள மென்சவ்வுகளை உருவாக்க உதவுகின்றன. மூளை செல்கள் எனப்படும் நியூரான்கள் உருவாகவும் இவை உதவுகின்றன.

முழுத் தானியங்கள்: உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் செயல்பட ஆற்றல் தேவை. இதேபோல், மனித மூளைக்கு ரத்தத்தில் குளுக்கோஸ் வடிவில் ஆற்றல் தேவைப்படுகிறது, இது கவனக்குவிப்பையும் அறிதல் உணர்வையும் மேம்படுத்துகிறது. அந்த வகையில் முழுத் தானியங்கள் சிறந்த உணவுப் பொருட்கள்.

மூளையின் ஆரோக்கியம் முக்கியம்: மூளை என்பது மனித உடலின் ஒரு முக்கிய உறுப்பு. மற்ற உறுப்புகளைப் போல அதற்கும் அதன் செயல்பாடுகளுக்கும் எரிபொருள் தேவை. மூளையைக் கூர்மையாக்கவும், அறிதல் உணர்வைச் சரியான வகையிலும் வைத்திருக்கவும் ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வது அவசியம். வைட்டமின்-கே, துத்தநாகம், வைட்டமின்-சி உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் மூளைக்கு ஊட்டமளிக்கத் தேவைப்படும்.

ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களான மீன் எண்ணெய், புரோக்கோலி, கொட்டைப் பருப்புகள், பரங்கி விதைகள், காலிஃபிளவர், பழுப்பு அரிசி, முழுத் தானியங்கள், வெண்ணெய், முட்டை, முட்டைக் கோஸ், சோயா பொருட்கள் உள்ளிட்டவை மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கப் பயன்படும்.

வயதாகும்போது மூளை சுறுசுறுப்பான செயல்பாட்டை இழக்கத் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து நினைவாற்றல் இழப்பும் அறிதல் உணர்வும் குறையும். எனவே, மூளையை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கச் சமச்சீர், ஆரோக்கியமான உணவைப் பராமரிப்பது அவசியம்!


 Click here to join whatsapp group for daily health tip

சாப்பிடும் போது இடையில் தண்ணீர் குடிப்பது தவறு : ஏன் தெரியுமா..?

நம்மில் பெரும்பாலானோர் சாப்பிட உட்காரும் போது ஒரு கிளாஸ் தண்ணீர் இல்லாமல் இருக்க மாட்டோம். சாப்பிடும் போது காரம் எடுப்பது உள்ளிட்ட சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக ஒரு சில வாய் தண்ணீர் குடிப்பது பரவாயில்லை..

ஆனால் உணவின் போது அதிக தண்ணீர் குடிப்பது நல்ல பழக்கமல்ல என்று நம்பப்படுகிறது. சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் சாப்பிட்ட 30 நிமிடங்களுக்கு பின் ஒரு கிளாஸ் அல்லது சற்று கூடுதல் தண்ணீர் அருந்துவது நல்லது என்கின்றன ஆய்வுகள். ஆனால் உணவின் போது தண்ணீர் குடிப்பது சரியா..?

உடலை ஹைட்ரேட்டாக வைத்து கொள்ள வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது நல்லதா இல்லையா என்பது குறித்து பல முரண்பட்ட கருத்துக்கள் இருக்கின்றன. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் தண்ணீர் மற்றும் பிற திரவங்கள் அருந்தும் போது செரிமான சக்தியை சிறிது நேரம் குறைக்கின்றன அதாவது செரிமானத்தை கடினமாக்குகின்றன. உணவின் போது தண்ணீர் குடிப்பது வாயில் உமிழ்நீரின் அளவைக் குறைப்பதில் இருந்து செரிமானத்தை பாதிக்க தொடங்குகிறது. குறைவான உமிழ்நீர் வயிற்றுக்கு பலவீனமான சிக்கனல்களை அனுப்புகிறது. மேலும் செரிமானத்திற்கு உதவும் இரைப்பை சாறுகள் (gastric juices) மற்றும் என்சைம்களின் வெளியீட்டை பாதிக்கிறது.

தவிர சாப்பிடும் போது தண்ணீர் அல்லது பிற திரவங்களை குடிப்பதால் மென்று சாப்பிடும் பழக்கத்தில் எதிர்மறை மாற்றம் ஏற்படுகிறது. சாப்பிடும் போது ஒரு கிளாஸ் தண்ணீரைர் பருகுவது உங்களை மெதுவாக்குவதுடன் உணவை மென்று திங்காமல் முழுவதுமாக விழுங்குவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. திடப்பொருட்களுடன் எந்த திரவத்தையும் கலக்க கூடாது என்பது ஒரு பொது விதி. ஏனென்றால் திரவமானது நேரடியாக குடலுக்குள் சென்று, அனைத்து செரிமான நொதிகளையும் (digestive enzymes) நீக்கி, செரிமான சக்தியை பாதிக்க செய்கிறது.

சாப்பிடும் போது இடையில் ஏன் எதையும் குடிக்க கூடாது?

எடை அதிகரிக்கும்..

சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் முக்கிய பக்க விளைவுகளில் ஒன்றாக கூறப்படுவது உடல் எடை அதிகரிப்பு. உணவின் போது பருகும் தண்ணீர் அல்லது திரவத்தால் இன்சுலின் அளவு அதிகரித்து, உணவு உடைக்கப்பட்டு கொழுப்பு உருவாகி, பின் அது உடலில் சேமிக்கப்படுகிறது. உடலால் உணவு நன்றாக ஜீரணிக்க முடியாமல் போனால் அது கொழுப்பாக மாறி உடலில் சேமித்து வைக்கப்படுவதால் உடல் எடை அதிகரிக்கும், இதற்கு உணவின் போது குடிக்கப்படும் தண்ணீர் காரணமாக அமையும் என கூறப்படுகிறது.

இரைப்பை பிரச்சனைகள் ஏற்படும்..

சாப்பிடும் போது அதிக தண்ணீர் குடிப்பது அசிடிட்டியை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அதிக தண்ணீர் அல்லது திரவம் gastric juices-களை நீர்த்து போக செய்து, செரிமான செயல்முறையை மெதுவாக்கும். நமது உடலில் செரிமானமாகாத உணவுகள் இருக்கும் போது ஆசிட் ரிஃப்லெக்ஸ் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற சிக்கல்கள் ஏற்படும்.


இன்சுலின் அளவு கூடுகிறது..

ரத்த சர்க்கரை அளவையும், உடலில் கொழுப்பு சேமிப்பையும் கட்டுப்படுத்தும் இன்சுலின் என்பது ஒரு ஹார்மோன் ஆகும். எனவே உணவுடன் திரவங்களை குடிப்பது இன்சுலின் அளவை அதிகரிக்கலாம், இதனால் உடல் எடை அதிகரிக்கும். இது தண்ணீருக்கு மட்டுமல்ல, உணவோடு ஜூஸ் அல்லது சோடா குடிப்பதும் இன்சுலின் உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

உமிழ்நீர் அளவில் மாற்றம்..

செரிமானத்தின் இன்றியமையாத அங்கம் உமிழ்நீர். இது உணவாயு உடைத்து மென்மையாக்க உதவுகிறது. இருப்பினும், உணவின் போது ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது உமிழ்நீர் உற்பத்தியைக் குறைப்பதோடு அதன் செயல்திறனையும் குறைக்கிறது. 




 Click here to join whatsapp group for daily health tip

உணவு சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்தால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துமா..?

 ‘இனி நீங்க கட்டாயம் தினமும் வாக்கிங் போய் ஆகணும்’ என சர்க்கரை நோயாளிகளைப் பார்த்து மருத்துவர்கள் அறிவுறுத்துவது உண்டு. ஏனெனில் சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது. முன்பெல்லாம் எங்கு செல்ல வேண்டும் என்றாலும் நடந்து தான் சென்று வந்தோம், 60, 70 வயது பாட்டிகள் கூட வயல் வேலைக்கு பல கிலோமீட்டர்கள் நடந்து சென்று வந்தனர்.

அதனால் தான் அப்போது நோய்கள் குறைவாக இருந்தன. ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லை பக்கத்து கடைக்குச் செல்ல வேண்டும் என்றாலே ‘ஓடிப்போய் பைக்கை தான் எடுக்கிறோம்’. இதனால் தான் 30 வயதை தொடுவதற்கு முன்பே பலருக்கும் சர்க்கரை நோய் வருகிறது.

மாறி வரும் வாழ்க்கை முறையால் சர்க்கரை நோயில் இருந்து மட்டுமல்ல உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது. குறிப்பாக சாப்பாட்டுக்கு பிறகு சிறிது நேரம் நடப்பது சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவும் என ஆய்வு ஒன்றின் மூலமாக கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்போர்ட்ஸ் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட மெட்டா பகுப்பாய்வில், நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை பார்ப்பவர்கள் மற்றும் நடப்பவர்களுக்கும் இடையிலான இதய ஆரோக்கியம், இன்சுலின் மற்றும் இரத்த சர்க்கரை அளவு ஆகியவை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதில் உணவுக்கு பிறகு உடனடியாக உட்கார்ந்து கொண்டு வேலை செய்பவர்களை விட, சிறிது நேரம் நடப்பவர்களின் ரத்த சர்க்கரை அளவு மற்றும் உடல் உள் உறுப்புகளின் செயல்பாடு சீராக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


உட்கார்ந்து கொண்டு வேலை செய்பவர்கள் பின்பற்ற வேண்டியது:

தற்போதைய காலக்கட்டத்தில் உட்கார்ந்து கொண்டே நீண்ட நேரம் வேலை பார்ப்பது என்பது கட்டாயமாகும். அப்படிப்பட்ட வேலையில் இருப்பவர்கள் நீண்ட நேரம் அமர்ந்த நிலையிலேயே இல்லாமல், அவ்வப்போது சின்ன பிரேக் எடுத்துக்கொள்ளலாம். காபி மெஷின் வரை எழுந்து சென்று காபி பிடித்து வரலாம், தண்ணீர் பாட்டிலை நிரப்பலாம், சில படிக்கட்டுக்கள் ஏறி இறங்கலாம். இதுபோன்ற செயல்முறைகள் 2-h பிளாஸ்மா குளுக்கோஸ், ட்ரைகிளிசரைடுகள் மற்றும் கொழுப்பு அளவுகள் போன்றவற்றில் ஆரோக்கியமான தாக்கங்களை உருவாக்குவது ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.

சேரில் இருந்து எழுந்திருக்காமல் தொடர்ந்து பணியாற்றுவதை விட, அடிக்கடி சிறிது நடைப்பயிற்சி செய்வது சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் (SBP), HDL கொழுப்பு, இன்சுலின், குளுக்கோஸ், ட்ரைகிளிசரைடுகள் மற்றும் இடுப்பு சுற்றளவு ஆகியவற்றை குறைப்பதிலும் பெரும் பங்காற்றுகிறது.

ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?

நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை பார்ப்பதற்கு பதிலாக, மதிய உணவுக்குப் பிறகு சிறிது நேரம் எழுந்து நிற்பது குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்த உதவும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதுவே மதிய உணவுக்குப் பிந்தைய வாக்கிங் குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவை குறைக்க உதவும் என்பது தெரியவந்துள்ளது.

ஆய்வு முடிவு மூலம் கிடைக்கும் பலன்கள் என்ன?

இந்த ஆய்வின் மூலமாக பிசியாக பல மணி நேரம் வேலை பார்க்கும் நபர்கள், மதிய உணவுக்குப் பிறகு ஒரு சின்ன வாக்கிங் சென்று வருவது அவர்களது உடலில் என்ன மாதிரியான எதிர்வினைகளை உருவாக்கும் என்பதை அறிய உதவியுள்ளது. ‘நேரம் இல்லை’, ‘வேலை நேரத்தில் நடக்க முடியாது’, ‘வாக்கிங் எல்லாம் காலையில் தான் போக வேண்டும்” என காரணங்களை வைத்துக் கொண்டு நடப்பதையே குறைத்துக்கொண்ட நபர்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அயர்லாந்தில் உள்ள லிமெரிக் பல்கலைக்கழகத்தில் பட்டதாரி மாணவரும் கட்டுரையின் ஆசிரியருமான ஐடன் பஃபே, கூறுகையில் "வேலை செய்து கொண்டிருக்கும் இடத்தை விட்டு எழுந்து டிரெட்மில்லில் ஓடவோ, அலுவலகத்தை சுற்றி வாக்கிங் செல்லவோ நாங்கள் பரிந்துரைக்கவில்லை. அதற்கு பதிலாக எழுந்து போய் காபி சாப்பிடுவது, அலுவலகத்திற்குள்ளேயே ஒரு சின்ன வாக்கிங் போவது போன்ற சிறிய விஷயங்களைத் தான் பரிந்துரைக்கிறோம். இதுவே உங்களுடைய ரத்தத்தில் உள்ள உணவுக்குப் பிந்தைய சர்க்கரை அளவை குறைக்க உதவும்” என தெரிவித்துள்ளார்.


கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 5 உணவுகள்..

 மிக அதிகமாக மது அருந்துவது, துரித உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது, தவிர்க்க முடியாத மன அழுத்தம் மற்றும் பல்முனை வேலைப்பளு உள்பட நமது உடல் மற்றும் மனதின் அதிகப்படியான சுமையை ஏற்றுக் கொண்டு மிகவும் அமைதியாக வேலை செய்யக்கூடிய ஒரு உறுப்பு கல்லீரல் ஆகும். நமது உடல் ஆரோக்கியத்தை பேணி காத்து தொடர்ந்து நிலையாக இயங்க வைப்பதற்கும், செல்களை மீட்டுருவாக்கம் செய்வதற்கும் கல்லீரல் அயராது பாடுபடுகிறது.


உடலின் மிகச் சிறிய உறுப்பாக கல்லீரல் அறியப்பட்டாலும், அதன் செயல்பாடுகள் மற்றும் தேவை என்பது மிக, மிக பெரியதாகும். பைல் திரவத்தை உற்பத்தி செய்வது, புரதம் மற்றும் கொழுப்புகளை உற்பத்தி செய்து அதன் மூலமாக மாவுச்சத்து, விட்டமின்கள் மற்றும் மினரல்கள் ஆகியவற்றை சேமிப்பது, உணவில் உள்ள நச்சுக்களை உடைப்பது, மது, மருந்துகள் போன்றவற்றில் உள்ள நச்சுக்களை உடைத்து வெளியேற்றுவது என இன்றியமையாத பணிகளை செய்து வரும் கல்லீரல், நமது மூளையின் நலனுக்கும் அளப்பரிய பங்களிப்பை வழங்குகிறது. இத்தகைய கல்லீரலின் நலனை காக்கும் வகையிலான உணவுகளை நாம் எடுத்துக் கொள்வது அவசியமாகும். அவை என்னென்ன உணவுகள் என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.


தேநீர் : ஆம், டீ அருந்துவது கல்லீரல் செயல்பாட்டை ஊக்குவிக்கும் மற்றும் செல்களை மீட்டுருவாக்கம் செய்யும். குறிப்பாக பிளாக் டீ அல்லது கிரீன் டீ ஆகியவற்றை தினசரி அருந்தி வந்தால் கல்லீரலில் சுரக்கும் நொதிகளின் சுரப்பு ஊக்குவிக்கப்படும். இதனால் கல்லீரலில் கொழுப்பின் அளவு குறையும். டீயில் உள்ள ஆண்டிஆக்சிடண்ட் நமது உடலில் தேவையற்ற ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் அளவை குறைக்கவும், பல்வேறு விதமான புற்றுநோய்களை தடுக்கவும் உதவும்.

திராட்சை பழம் : இயற்கையாகவே ஆண்டிஆக்சிடண்ட் நிறைந்த திராட்சை பழங்கள் நமது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். கல்லீரலில் பாதிப்படைந்த செல்களை சீரமைக்கவும், புதிய செல்களை உருவாக்கவும் இது உதவுகிறது. திராட்சைப்பழம் சாப்பிடுவதன் மூலமாக கல்லீரலில் ஏற்படும் நீண்ட கால அழற்சி மற்றும் வலி போன்றவை கட்டுப்படுத்தப்படுவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


கொழுப்பு நிறைந்த மீன் : ஒமேகா 3 பேட்டி ஆசிட் வகை கொழுப்பு நிறைந்த மீன்களை உட்கொள்வதன் மூலமாக கல்லீரலில் படிந்துள்ள கொழுப்புகளை நீக்குவதுடன், கல்லீரலில் உள்ள அலற்சியை போக்கவும் முடியும். தினசரி கொழுப்பு உள்ள மீன்களை எடுத்துக் கொள்வதன் மூலமாக உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகை கொழுப்புகளை கரைக்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


பீட்ரூட் ஜூஸ் : நமது கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான மற்றொரு வழி தினசரி உணவில் பீட்ரூட் ஜூஸ் சேர்த்துக் கொள்வதாகும். இதில் நைட்ரேட்ஸ் மற்றும் ஆண்டிஆக்சிடண்ட் போன்றவை நிறைந்துள்ளன. இவை கல்லீரல் மற்றும் இதய நலனுக்கு உகந்ததாகும். உடலில் உள்ள ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் அளவை குறைக்கவும் செல்களை உருவாக்கவும் பீட்ரூட் ஜூஸ் பயனுள்ளதாக இருக்கிறது.


பெர்ரி பழங்கள் : புதிய பெர்ரி பழங்கள் அல்லது உலர வைக்கப்பட்ட பெர்ரி பழங்களை எடுத்துக் கொண்டால் கல்லீரல் நலன் மேம்படும். இதில் உள்ள ஆந்தோசயனின்ஸ் என்ற ஆண்டிஆக்சிடண்ட் நமது நோய் எதிர்ப்பு செல்களை ஊக்குவிக்கிறது. இதனால் ஸ்ட்ரெஸ் காரணமாக கல்லீரல் பாதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. மேலும் பெர்ரி பழங்களை எடுத்துக் கொள்வதன் மூலமாக உடலில் கட்டிகள் உருவாகுவது தடுக்கப்படுகிறது.





 Click here to join whatsapp group for daily health tip

இந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கவே கூடாதாம்... மீறினால் என்ன ஆகும் தெரியுமா..?

 தோராயமாக ஒரு 10, 15 ஆண்டுகளுக்கு முன்பாக வசதி படைத்தவர்கள் மற்றும் நகர்ப்புற மக்களின் வீடுகளில் மட்டுமே இடம் பிடித்திருந்த ஃபிரிட்ஜ் என்னும் குளிர்சாதனப் பெட்டி தற்போது அனேகமாக அனைத்து வீடுகளிலும் இடம்பெற்றுள்ளது. நம் எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான். ஃபிரிட்ஜ் என்றால் உணவுப் பொருட்கள் கெட்டுப் போகாமல் பாதுகாத்து வைப்பதற்கான இடம் ஆகும். அதில் வைக்கும் பொருட்களின் தரம் குறையாமல் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.


ஆனால், ஃபிரிட்ஜ் என்றால் அனைத்தையும் தூக்கி உள்ளே அடைத்து வைத்துக் கொள்ளலாம் என்ற சிந்தனையும் பரவலாக நிறைந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், சில வகை உணவுப் பொருட்களை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஃபிரிட்ஜில் வைக்கப்படும் சில உணவுப் பொருளின் நிறம், சுவை, மனம் ஆகியவை மாறி விடுகிறது. குறிப்பாக ஊட்டச்சத்து அளவு குறைந்துவிடுகிறது. சில உணவுப் பொருட்களை மாத கணக்கில் ஃபிரிட்ஜில் வைத்திருந்தால் அது கெட்டுப் போகும் என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆகவே, ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாத உணவுப் பொருட்களின் பட்டியல் இதோ…

மாங்காய் : பழுக்காத மாங்காய்களை ஒருபோதும் ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. அதன் பழுக்கும் தன்மையை இது குறைத்துவிடுகிறது. பழுத்த மாம்பலங்களை மட்டுமே ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும். அது திடமாகவும், ஃப்ரெஷ்ஷாகவும் இருக்கும்.

ஃபிரெட் : நாம் எல்லோருமே ஃபிரெட்களை ஃபிரிட்ஜில் வைத்து, தேவையான போது எடுத்துப் பயன்படுத்தும் பழக்கம் இருக்கும். ஆனால், ஓரிரு நாட்கள் தாண்டி ஃபிரெட்களை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது.

எண்ணெய் : எண்ணெயை ஃபிரிட்ஜில் வைத்தால் அதன் இயற்கை தன்மை மற்றும் நிறம் ஆகியவை மாறிவிடும். மேலும் எண்ணெய்யின் மனம் மாறிவிடும்.

சமைக்கப்பட்ட இறைச்சி : சமைத்த கோழி அல்லது ஆட்டிறைச்சி போன்றவற்றை ஃபிரிட்ஜில் வைப்பதால் அதன் சுவை மாறி விடும். ஒன்றிரண்டு நாட்களை தாண்டி வைத்திருக்கும் பட்சத்தில் உணவு கெட்டுப்போய் விஷமாக மாறக் கூடும். இது செரிமானக் கோளாறுகள் மற்றும் இதர உடல்நல பிரச்சனைகளை கொண்டு வரும்.

தேன் : சாதாரணமாக அறையின் வெப்ப அளவிலேயே வெகு காலத்திற்கு கெட்டுப் போகாமல் இருக்கக் கூடிய பொருள் தேன் ஆகும். ஆனால், இதனை ஃபிரிட்ஜில் வைக்கும்போது அது கிறிஸ்டலாக மாறி விடுகிறது. மீண்டும் பயன்படுத்துவதற்கு கடினமானதாக மாறிவிடும்.

மசாலா பொருட்கள் : புதினா, கொத்தமல்லி போன்றவற்றை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. ஃபிரிட்ஜில் இருக்கும்போது அதில் உள்ள ஈரப்பதம் வெளியாகி, வாடி வதங்கிவிடும். புதினா மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றை சாதாரணமாக காகிதப் பையில் போட்டு வைப்பதன் மூலமாக பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.


 Click here to join whatsapp group for daily health tip

உங்கள் கண்கள் அடிக்கடி வறண்டு போகிறதா.? இந்த உணவுகளை முயற்சித்து பாருங்கள்.!

 


சிலருக்கு கண்கள் வறண்டு போவது என்பது மிகவும் பொதுவான மற்றும் சங்கடமான நிலை. சிலருக்கு மற்றவர்களை விட கண் வறட்சி அதிகமாக இருக்கும். டிஜிட்டல் ஐ ஸ்ட்ரெயின், அலர்ஜி, முந்தைய கண் அறுவை சிகிச்சை, நீண்ட நேரம் கண் சிமிட்டாமல் இருப்பது, சில மருந்துகள் அல்லது வயது உள்ளிட்ட காரணிகளால் கண்கள் வறட்சி ஏற்படுகின்றன.
 அடிக்கடி கண்கள் சிவந்து போதல், கண்கள் அரிப்பு, கண்கள் வீக்கம், கண் எரிச்சல், ஒளி உணர்திறன், நீண்ட நேரம் ஸ்கிரீனை பார்ப்பதில் சிரமம் உள்ளிட்டவை வறண்ட கண் பிரச்சனையின் சில பொதுவான அறிகுறிகளாகும். வயது போன்ற சில காரணிகள் தவிர ஹார்மோன் மாற்றங்கள் கண் வறட்சியை தூண்டும். எனினும் கடுமையான உலர் கண் அறிகுறிகளை தடுக்க மற்றும் சிகிச்சையளிக்க சில வழிகள் உள்ளன.

கண்களை உயவூட்டுவதற்கு போதுமான கண்ணீரை உடல் உற்பத்தி செய்யாத போது இந்த நாள்பட்ட நிலை ஏற்படுகிறது. கண் மருத்துவர்களின் கூற்றுப்படி, சத்தான உணவைப் பின்பற்றுவது கண்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க உதவுகிறது. கண் வறட்சியுடன் நீங்கள் போராடி வந்தால் உங்களுக்காக நிபுணர்கள் பரிந்துரைக்கும் உணவுகள்...
மீன்: கண்கள் வறட்சியடையும் சிக்கல் உள்ளவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகளில் ஒன்று மீன். ஏனெனில் பெரும்பாலான மீனில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது கண்ணில், குறிப்பாக கண்ணீர் நாளங்களில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது. கண்ணீரின் அளவு மற்றும் தரத்திற்கு உதவுகிறது. சால்மன், ஹாலிபுட், ஹெர்ரிங், டுனா போன்றவை அதிக சத்துக்களை கொண்ட மீன்கள்.

பச்சை இலை கீரைகள்: சில கீரைகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது கண் ஆரோக்கியத்திற்கு பங்களிக்கும் மற்றொரு முக்கிய ஊட்டச்சத்து ஆகும். வைட்டமின் சி ஒரு ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகும். இது வயதாவதால் ஏற்படும் கண் பாதிப்பை எதிர்த்துப் போராட உதவுகிறது. சிறந்த வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் நிறைந்த கீரைகள் முட்டைக்கோஸ், காலார்ட்ஸ் மற்றும் பசலை கீரை உள்ளிட்டவை.

சீட்ஸ்: நாள்பட்ட கண்கள் வறட்சி பிரச்சனை உள்ளவர்களுக்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நன்மை பயக்கும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சியா மற்றும் ஆளி விதைகள் போன்றவை ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் மற்றொரு சிறந்த மூலமாக இருக்கின்றன. மீன்களை திங்க முடியாத சைவ உணவு உண்பவர்களுக்கு உண்மையில், ஆளிவிதை எண்ணெய் ஒமேகா-3 சப்ளிமெண்ட்களுக்கு மாற்றாக பரிந்துரைக்கப்படுகிறது.

நட்ஸ்: வைட்டமின் ஈ என்பது வைட்டமின் சி போன்றே ஒரு சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகும். இது கண்ணீர் உற்பத்தியில் ஏற்படும் சேதம் உட்பட வயது தொடர்பான காரணத்தால் ஏற்படும் சேதத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. நட்ஸ்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ ஆகிய முக்கிய இரண்டும் நிறைந்துள்ளன. வால்நட்ஸ், பீனட்ஸ், முந்திரிகள். பிரேசில் நட்ஸ் போன்றவை ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்த நட்ஸ்கள்.

பீன்ஸ்: பீன்ஸில் ஃபோலேட் மற்றும் ஜிங்க் உள்ளது. மெலனின் உற்பத்திக்கு உடலில் போதுமான ஜிங்க் இருப்பது முக்கியம். ஏனெனில் இது உங்கள் கண்களை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. வறண்ட கண்களைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் இது மிகவும் முக்கியமானது, குறிப்பாக சூரியனால் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.

தண்ணீர்: நம் கண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் தண்ணீருக்கு முக்கிய பங்கு உண்டு. உடலில் போதுமான நீர்சத்து இல்லாவிட்டால் கண்கள் வறண்டு போகும். குறிப்பாக நீங்கள் வெப்பமான, வறண்ட சூழலில் வாழ்ந்தால் சீரான இடைவெளியில் அடிக்கடி தண்ணீர் குடிப்பது கண்கள் வறட்சி ஏற்படாமல் தடுக்கிறது.
 Click here to join whatsapp group for daily health tip

டாய்லெட் பயன்படுத்தும் முறையினாலும் குடல் புற்று நோய் வர வாய்ப்பு? அதிர்ச்சி தகவல்.!



குடல் புற்றுநோய் என்பது பெருங்குடல் மற்றும் மலக்குடல் உள்ளிட்டவற்றில் ஏற்படும் புற்றுநோயையும் குறிக்கிறது. இந்த நோய் பொதுவாக குடலின் உட்புறத்தில் தோன்றி பெருங்குடல் முழுவதும் பரவி மலக்குடல் வரை பாதிப்பை ஏற்படுத்தும். பொதுவாக இந்த நோய் 60 வயதுக்கும் மேற்பட்ட நபர்களிடையே அதிக அளவில் காணப்படுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கு பல்வேறு வகையான காரணங்கள் இருந்தாலும், நாள்பட்ட மலச்சிக்கல் குடல் புற்றுநோய்கான முக்கிய காரணியாக கருதப்படுகிறது. மோசமான அல்லது பொருத்தமற்ற கழிப்பறை பழக்கங்களும் இந்த புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்பதற்கான சான்றுகளும் உள்ளன. மலம் கழிக்க நாம் உட்காரும் முறைகள் கூட மலச்சிக்கல் மற்றும் குடல் புற்றுநோயை உருவாக்கலாம் என கூறப்படுகிறது.

எப்படி உட்காருவது சிறந்தது.? இயற்கையான முறையில் மலம் கழிக்காமல், வெஸ்டர்ன் டாய்லெட்டுகளை பயன்படுத்தி காலை கடன்களை கழிப்பது மலச்சிக்கல் மற்றும் குடல் புற்றுநோயை உருவாக்கும் என சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்தியன் மாடல் கழிப்பறையில் இரண்டு கால்களையும் அழுத்தி வைத்து உட்காரும் போது, இயற்கையாகவே அழுத்தம் உருவாகி கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. ஆனால் மேற்கத்திய கழிப்பறைகளில் அமரும் போது, நாற்காலி போல் அமர்வதால் குடல் பகுதிகளில் ஏற்படும் முடிச்சுக்கள் செரிமான பாதையை சேதப்படுத்துகின்றன. மேலும் குந்துதல் முறையில் சிறு குடலுக்கும் பெரிய குடலுக்கும் இடையே உள்ள இலியோகேகல் வால்வு தானாகவே அடைத்துக் கொள்ள அனுமதிக்கிறது. மேலும் இந்த முறையில் புபோரெக்டலிஸ், அந்தரங்க எலும்புடன் இணைக்கப்பட்ட தசை, ஆகிய அனைத்தும் அதிக முயற்சி இல்லாமல், எளிதாக குடல் இயக்கத்தை மேற்கொள்ள அனுமதிக்கின்றன.


வெஸ்டர்ன் டாய்லெட்டை பயன்படுத்தினால் என்ன நடக்கும்.? மேற்கத்திய கழிப்பறைகளில் அமர்ந்த நிலையில் மலம் கழிக்கும் போது, அது இலியோகேகல் வால்வு இயற்கையாக மூடுவதை தடை செய்கிறது. இதனால் குடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதற்கான சரியான அழுத்தம் கிடைக்காமல், புபோரெக்டலிஸ் தசையும் இறுக்கமடைவதால் கழிவை வெளியேற்ற நீங்கள் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறீர்கள்.

குடல் புற்றுநோய்க்கான பிற காரணங்கள்: டாய்லெட்டை பயன்படுத்தும் முறையைத் தவிர உணவு முறையும் குடல் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணமாக அமைகிறது. ரெட் மீட் அல்லது பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை அதிக அளவில் உட்கொள்வதும், நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகளை சாப்பிடுவதும் குடல் புற்றுநோய்க்கான ஆபத்தை அதிகரிக்கிறது. அதிக உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது, அதிக எடை, மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் ஆகியவையும் குடல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும். குடும்பத்தில் யாருக்காவது ஏற்கனவே குடல் புற்றுநோய் இருந்தால் உங்களுக்கும் அந்த நோய் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

குடல் புற்றுநோய்க்கான அறிகுறிகள்: குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 90 சதவீதத்திற்கும் அதிகமான நோயாளிகள் தங்கள் குடல் இயக்கங்களில் மாற்றங்களை அனுபவிக்கின்றனர். அடிக்கடி மலம் கழிப்பது, ரத்தம் கலந்த மலம், அடிவயிற்று வலி, வீக்கம் , சாப்பிட்ட பிறகு அசெளகரியமான உணர்வு, பசியின்மை , திடீர் எடை இழப்பு ஆகியவை பொதுவான அறிகுறிகளாகும்.

குடல் புற்றுநோயை தடுக்கும் முறைகள்: குடல் புற்றுநோய் உருவாக மலச்சிக்கல் தான் பிரதான காரணம் என்பதால், தினமும் அதிகளவிலான தண்ணீர் குடிக்கும் வேண்டும். கொழுப்பு நிறைந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து, வீட்டில் சமைத்த ஆரோக்கியமான உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளவும். குடல் இயக்கத்தை எளிதாக்க உதவும் கிவி போன்ற பழங்களை எடுத்துக்கொள்ளவும். தினந்தோறும் ஜாக்கிங் உள்ளிட்ட வழக்கமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.



 Click here to join whatsapp group for daily health tip

அதிகாலை நடைப்பயிற்சி ஏன் அவசியம்?

 காலையில் எழுந்ததும் முதல் வேலையாக நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வழக்கத்தை பலரும் பின்பற்று கிறார்கள். இதனை உடற்பயிற்சியாகத்தான் கருத வேண்டும் என்றில்லை. காலை பொழுதில் சிறிது தூரம் நடந்து சென்று வரும் வழக்கத்தை தினமும் பின்பற்றி வந்தால் உடல் ரீதியாக மட்டுமின்றி மன ரீதியாக ஏராளமான நன்மைகளை பெறலாம். பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளில் இருந்தும் விலகி இருக்கலாம். 



அதிகாலை வேளையில் ஏன் நடைப்பயிற்சி அவசியம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான காரணங்கள் குறித்து பார்ப்போம். சீக்கிரம் சோர்வடைய செய்யாத உடற்பயிற்சிகளுள் நடைப் பயிற்சி முக்கியமானதாகும். உடலின் ஆற்றல் அளவை அதிகப் படுத்தவும் உதவும். நடைப்பயிற்சியின்போது உடல் தொடர்ச்சியான இயக்கத்தில் இருப்பதால் செல்கள் வழக்கத்தை விட அதிக ஆற்றலை உற்பத்தி செய்யும். 

அதன் மூலம் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் அதிகரிக்கும். வீட்டிற்குள் அங்கும் இங்கும் 10 நிமிடங்கள் நடப்பது, நடைப்பயிற்சியில் சேராது. சரியான நடைப்பயிற்சி என்பது பூங்காவிலோ, தெருவிலோ குறைந்தபட்சம் 20 முதல் 30 நிமிடங்கள் நடப்பதாகும். தூக்கம் வராமல் தவிப்பவர்கள் 10 நிமிடங்கள் படிக்கட்டுகளில் நடப்பது அதிக ஆற்றலை தரும் என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து வேலை செய்வதும், அதே வழக்கத்தை ஒவ்வொரு நாளும் பின்பற்றுவதும் மனச்சோர்வடையச் செய்யலாம். 

காலையில் நடப்பது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதோடு மனநிலையையும் மேம்படுத்தக்கூடியது. ஏனென்றால், நடைப்பயிற்சி ஒவ்வொரு உடல் உறுப்புகளுக்கும் வேலை கொடுக்கிறது. அதிக ஹார்மோன்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. நேர்மறையான மன நிலையை உண்டாக்குகிறது.

 சுய மரியாதையை மேம்படுத்துதல், பதற்றத்தை குறைத்தல், மனச்சோர்வை குறைத்தல், நேர்மறை எண்ணத்தை உருவாக்குதல், மனநலப் பிரச்சினைகளை குறைத்தல் போன்ற சிறப்பம்சங்களும் நடைப்பயிற்சிக்கு உண்டு. தினமும் காலையில் குறைந்தபட்சம் 20 நிமிடங்களாவது நடக்க வேண்டும்.


காலையில் நடைப்பயிற்சி செய்வது உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகளில் பெரும் பகுதியை ஈடு செய்துவிடும். காலை வேளையில் 30 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் நோய்கள் வராமல் தடுக்கலாம். இதய பிரச்சினைகள் ஏற்படும் அபாயமும் குறையும். 

ஒரு நாளைக்கு குறைந்தது 150 முதல் 300 நிமிடங்கள் நடக்க வேண்டும் என்றும், வாரத்தில் 7 நாட்களில் குறைந்தது 5 நாட்களாவது காலையில் நடக்க முயற்சிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. 

காலையில் நடைப்பயிற்சி செய்வது கலோரிகளை எரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவும். காலை பொழுதில் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்தால், சுமார் 400 கலோரிகளை எரிக்கலாம். இது நடையின் வேகத்தைப் பொறுத்ததும், ஒவ்வொரு நபரின் ஆரோக்கியத்தை பொறுத்தும் மாறுபடும். காலையில் வயிறு காலியாக இருப்பதாலும், அந்த சமயத்தில் ஆற்றலை உற்பத்தி செய்வதற்காக உடலில் உள்ள கொழுப்புகள் கரைக்கப்படுவதாலும் நடைப்பயிற்சி செய்வது மிகவும் நன்மை பயக்கும்.

காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் பல உடல்நலப் பிரச்சினைகளை குறைக்கலாம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அதிகாலை நடைப்பயிற்சி சிறந்தது. 

இது பல்வேறு வைரஸ், பாக்டீரியா தொற்றுகளில் இருந்து உடலை பாதுகாக்க உதவும். சுவாச திறனை மேம்படுத்தவும் வழிவகுக்கும். நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் நடத்திய ஆய்வின்படி, தினமும் 30 நிமிடங்கள் நடக்க ஆரம்பித்தால், சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் அபாயத்தை 19 சதவீதம் குறைக்கலாம். உடலில் ரத்த சர்க்கரை அளவை நிர்வகித்து, நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும் நடைப்பயிற்சி உதவும். நீண்ட நேரம் காலை நேர நடைப்பயிற்சி மேற்கொள்வது சில வகையான புற்றுநோய் களின் அபாயத்தில் இருந்தும் காக்கும்.


நடைப்பயிற்சி உடலின் அனைத்து முக்கிய தசைகளையும் வேலை செய்ய தூண்டும் ஆற்றலும் கொண்டது. இதன் மூலம் தசை ஆரோக்கியம் பலப்படும். கால் தசைகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேகமாக நடக்கலாம். படிக்கட்டுகளில் ஏறலாம். அல்லது சாய் தள பரப்பில் நடந்து பயிற்சி செய்யலாம். காலையில் நடைப்பயிற்சி செய்பவர்களின் தூக்க திறன் மேம்படு வதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தேசிய உடலியல் நிறுவனம் நடத்திய ஆய்வில், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் காலை நேர உடற்பயிற்சியின் காரணமாக இரவில் நன்றாக தூங்கி எழுவது தெரியவந்துள்ளது. 

தூக்கமின்மை பிரச் சினையை எதிர்கொண்டவர்கள் காலை நேர உடற்பயிற்சிக்கு பிறகு நன்றாக தூங்கி எழுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாலை நேர பயிற்சிகளை விட காலை நேர பயிற்சியே சிறந்தது. மாலையில் உடற்பயிற்சி செய்யும்போது உடல் சோர்வு மற்றும் தசைகள் பலவீனம் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.


Click here to join whatsapp group for daily health tip

சைனஸ் பிரச்சனை இருப்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்...

 அனைத்து வயதினருக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ள பொதுவான பிரச்னைகளில் ஒன்று சைனசைடிஸ். பொதுவாக சைனஸ் பிரச்சனை என்று இது குறிப்பிடப்பட்டாலும் புரையழற்சி (Sinusitis) அல்லது சைனஸ் தொற்றுநோய் அல்லது நாசிப்புரையழற்சி என்றும் இந்த சிக்கல் குறிப்பிடப்படுகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் சைனஸ் பிரச்சனை வரலாம். குளிர் மற்றும் பனிக்காலம் வந்தாலே சிலர் தொடர் தலைவலி மற்றும் தும்மலால் கடுமையாக அவதிப்படுவார்கள். அதே போல தூசுக்கள் இருக்கும் ஏரியாவிற்கு சென்றால் விடாமல் தும்மி கொண்டே இருப்பார்கள். இதற்கெல்லாம் காரணம் சைனஸ் பிரச்னையாக தான் இருக்கும்.

சைனஸ்கள் (Sinuses) என்பது மூக்கின் பின்புறம், கன்னத்து எலும்புகள், கண்கள் மற்றும் நெற்றிக்கு இடையில் இருக்கும் ஏர் பாக்கெட்ஸ்கள் (air pockets) ஆகும். நமது மூக்கை சுற்றி மொத்தம் 4 காற்று பைகள் இருக்கிறது. இந்த காற்றுப் பைகள், நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனை குறிப்பிட்ட வெப்பநிலையில் நுரையீரலுக்கு எடுத்து செல்ல உதவுகின்றன. இந்த ஏர் பாக்கெட்ஸ்களே சைனஸ் பகுதி என அழைக்கப்படுகின்றன. மேலும் இந்த சைனஸின் புறணி (lining) சளியை உற்பத்தி செய்ய காரணமாக இருக்கின்றன. இந்த மெல்லிய திரவம் நாசி குழி வழியாக நம் உடலுக்குள் நுழையும் வெளி துகள்கள் மற்றும் கிருமிகளுக்கு எதிராக பாதுகாக்கிறது.

இந்த புறணியில் ஏற்படும் அழற்சியானது நாசிப் பாதைகளில் அதிகப்படியான சளியை உருவாக்கலாம், இது பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுக்கு வழிவகுக்கும். இந்த நிலை சைனசிடிஸ் என்று அழைக்கப்படுகிறது. ஜலதோஷத்தின் மற்றொரு ஆபத்தான பக்கம் தான் இந்த சைனஸ் பிரச்சனை. ஜலதோஷம் ஏற்பட்டால் குறைந்தபட்சம் 3 நாட்கள் முதல் 2 வாரங்களுக்குள் சரியாகி விட வேண்டும். ஆனால் 2 வாரங்கள் கடந்தும் ஜலதோஷம் சரியாகவில்லை என்றால் ஒருவேளை அது சைனஸ் கோளாறாக இருக்க கூடும்.

சைனஸ்கள் பிரச்சனை அல்ல. நம் குரலின் ஆழம் மற்றும் தொனிக்கு சைனஸ்களும் பொறுப்பு ஆகும். அவை நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல் 4 ஏர் பாக்கெட்ஸ்கள் ஆகும். இவற்றில் உருவாகும் சளி அல்லது மெல்லிய திரவம் நம் மூக்கின் உட்புறத்தை ஈரமாக வைத்திருக்கும். மேலும் இது தூசி, அலர்ஜி மற்றும் மாசுபாட்டிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. ஆனால் நம்மை பாதுகாக்கும் சைனஸில் திரவம் தேங்குவதால் கிருமிகள் வளர்ச்சியடைந்து, சைனஸ் தொற்று ஏற்பட வழிவகுக்கும்.

ஏன் திரவம் தேங்கும்..?

நம்முடைய சைனஸால் உற்பத்தி செய்யப்படும் சளி பொதுவாக சிறிய சேனல்கள் (small channels) மூலம் நம் மூக்கில் ட்ரெயின் ஆகிறது. ஆனால் சைனசிடிஸில், சைனஸ் லைனிங் வீக்கமடைவதால் இந்த சேனல்கள் தடுக்கப்படுகின்றன. சைனசிடிஸ் என்பது பொதுவாக சளி அல்லது காய்ச்சல் வைரஸ் மேல் சுவாசக் குழாயிலிருந்து சைனஸ்களுக்கு பரவுவதன் விளைவாகும். ஒரு சில நிகழ்வுகளில் மட்டுமே சைனஸில் பாக்டீரியா தொற்று ஏற்படுகின்றன.

சில நேரங்களில் பாதிக்கப்பட்ட அல்லது சொத்தை பல் அல்லது பூஞ்சை தொற்று சில நேரங்களில் சைனஸ் வீக்கத்தை ஏற்படுத்தலாம். சிலருக்கு மூக்கு துவார தடுப்பு தண்டு, பிறந்ததில் இருந்து வளைந்தே இருக்கும். இதனால் ஒரு துவாரம் பெரிதாகவும், மற்றொரு துவாரம் சிறிதாக இருக்கும். இதனால் சைனஸ் தாக்கும் போது இவர்களுக்கு அதிக பாதிப்பு இருக்கும். ஒவ்வாமை, சளி அல்லது சுற்றுச்சூழல் மாசு காரணமாக மூக்கில் உள்ள திசுக்களில் ஏதாவது வீக்கம் ஏற்பட்டால், அது சைனஸின் பாதைகளை தடுக்கலாம். இதனால் சைனஸ்கள் வெளியேற முடியாது போவதால் ஒருவர் வலியை உணரலாம்.

சைனஸின் அறிகுறிகள்:

பெரும்பாலும் ஜலதோஷத்திலிருந்து பிரித்தறிய முடியாதவையாக இருக்கின்றன சைனஸின் அறிகுறிகள். 1-2 வாரங்களில் ஜலதோஷ அறிகுறிகள் சரியாகவில்லை என்றால், தொற்று மோசமடையாமல் இருக்க உடனடியாக மருத்துவரிடம் செல்வது அவசியம். சளி போன்ற மேல் சுவாசக் குழாய் தொற்றுக்கு பிறகு பொதுவாக சைனஸ் ஏற்படும்.ஒருவருக்கு தொடர்ந்து சளி இருந்தால் மற்றும் கீழே உள்ள அறிகுறிகளை வெளிப்படுத்தினால் அவருக்கு சைனஸ் இருக்கலாம். இதன் அறிகுறிகள் பெரும்பாலும் சளி அறிகுறிகளை ஒத்திருக்கும் என்றாலும் முக்கிய அறிகுறிகள் பின்வருமாறு: முகத்தில் ஏற்படும் வலி அல்லது உணரப்படும் அழுத்தம், மூக்கடைப்பு, கடும் தலைவலி, அதிக காய்ச்சல், தொடர் இருமல் அல்லது தும்மல், வாசனை உணர்வு குறைவது உள்ளிட்டவை.

கன்னம், நெற்றி பகுதியில் கடுமையான வலி ஏற்படும். தலையை கீழ் நோக்கி கவிழ்த்தால், தாங்க முடியாத தலைவலி உண்டாகும். அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் சளி வெளியேறும், சிலர் சளியை சிந்தி வெளியேற்றும் போது கூடவே ரத்தமும் சேர்ந்து வரும். சில நேரங்களில் வெளிவரும் சளி கடும் துர்நாற்றத்துடன் இருக்கும். தீவிர சைனஸ் பிரச்னை இருந்தால் மூக்கை தொட்டாலே கடுமையாக வலிக்கும். சிலருக்கு இரவு நேரத்தில் இருமலும், காலையில் எழுந்தவுடன் தொடர்ச்சியாக தும்மலும் வரும். மேல் தாடை மற்றும் பற்களில் வலி, பல் வலியோடு சேர்ந்து காதுகளிலும் வலி உருவாகும். இங்கே அறிகுறிகள் பற்றி விரிவாக பார்க்கலாம்..

தொண்டை எரிச்சல் மற்றும் இருமல்

சைனஸில் இருந்து வெளியேறும் திரவம் தொண்டையின் பின்பகுதியில் வெளியேறுவதால், அது எரிச்சலை ஏற்படுத்தும், குறிப்பாக நீண்ட காலத்திற்கு. இது ஒரு தொடர்ச்சியான மற்றும் எரிச்சலூட்டும் இருமலுக்கு வழிவகுக்கும். தூங்கும் போது இது இன்னும் மோசமாக இருக்கும் அல்லது படுக்கையில் இருந்து எழுந்த பிறகு காலையில் இதனால் அவதி ஏற்படும். நிமிர்ந்து தூங்குவது அல்லது உங்கள் தலையை உயர்த்தி படுப்பது இருமலின் தீவிரத்தை குறைக்க உதவும்.

தொண்டை வலி..

சைனஸின் விளைவாக தீவிர தொண்டை வலி ஏற்படலாம் மற்றும் குரல் கரகரப்பானதாக மாறலாம். அடிக்கடி இருமல் மற்றும் தொண்டையை செருமி சளியை துப்புவது கரகரப்பான குரலை மோசமாக்கும்.

வாய் துர்நாற்றம்..

பாதிக்கப்பட்ட சைனஸால் ஒருவர் உடலில் உற்பத்தி செய்யப்படும் சளி துர்நாற்றம் வீசும் மற்றும் தொண்டை வழியே வாய்க்குள் செல்லும். இதனால் வாய் துர்நாற்றமடிக்கும். அடிக்கடி வாயை கொப்பளிப்பது, நாக்கை க்ளீன் செய்வது, நிறைய தண்ணீர் குடிப்பது இந்த அறிகுறியைக் குறைக்க உதவும்.

காது அடைப்பு..

சைனஸ் பிரச்சனை உள்ளவர்களு காது பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. காது மடல்களில் இருந்து ஆரம்பிக்கும் வலி பின் காதுகளுக்குள் தீவிர வலியாக உருவெடுக்கும் திடீரென காதுகளில் அடைப்பு ஏற்படலாம்.

அழுத்தம்..

முகத்தில் மென்மை அல்லது அழுத்தம் இருக்கலாம். நோய் தொற்று முன்பக்க சைனஸில் இருந்தால் தவிர, பாதிக்கப்பட்டவர்கள் பொதுவாக முக வலியை அனுபவிப்பதில்லை..