Indian Institute of Spices Research Receives ‘Sardar Patel Outstanding ICAR Institution Award’

 ICAR-Indian Institute of Spices Research in Kozhikode has been awarded the ‘Sardar Patel Outstanding ICAR Institution Award’ for the year 2021. The award was presented to C. K. Thankamani, Director of the Institute, by Narendra Singh Tomar, Union Minister of Agriculture and Farmers Welfare in New Delhi.



This award was given based on the institute's performance over the last five years. It consists of a Rs10 lakh cash award, a citation, and a plaque.

This award is given to institutes based on several criteria, including significant output/outcome from research activities, the number, and quality of research publications, technologies licensed/commercialized, infrastructure developed, and capacity-building efforts. This is the third time that the IISR has received this honour.

"The award is a timely recognition for the institute's hard work and dedicated efforts in developing several cutting-edge technologies for advancing spice farming and addressing the real challenges faced by the spice farming community," Thankamani said.

Bindu Joseph, a young Kozhikode farmer, was awarded the Pandit Deendayal Upadhyay Antyodaya Krishi Puruskar. The award honours the contributions of marginal, small, and landless farmers to the development of integrated and sustainable agricultural farming models.

About ICAR- Indian Institute of Spices Research

The Indian Institute of Spices Research (IISR), Kozhikode (Calicut), is a major Institute devoted to spice research and is a constituent body of the Indian Council of Agricultural Research (ICAR). It began as a Regional Station of the Central Plantation Crops Research Institute (CPCRI), Kasaragod, engaged in spice research in 1976.

In 1986, the former Regional Station of CPCRI in Kozhikode and the Cardamom Research Centre in Appangala, Karnataka merged to form the National Research Centre for Spices, with headquarters in Kozhikode, Kerala. Recognizing the significance of spice research in India, the Research Centre was renamed Indian Institute of Spices Research on July 1, 1995.

கழுத்து வலி பாடாய்ப்படுத்தும் போது..

 நன்றாக தூங்கி, அடுத்த நாளை தொடங்க ஆவலுடன் படுக்கையில் இருந்து எழும்போது வில்லன் போன்று தோன்றி பாடாய்ப்படுத்துகிறது கழுத்து வலி. அது அன்றைய முழுபொழுதையும் அவஸ்தையாக்கிவிடும். கழுத்து வலி வரும், போகும் என்றாலும் அதை சாதாரண விஷயமாக நினைத்து தள்ளிவிடவும் முடியாது.



 செய்யும் வேலையின் பாதிப்பு, காயங்கள், தசை-எலும்பின் ஆரோக்கிய குறைபாடு, முதுகெலும்பு டிஸ்க் பிரச்சினைகள், எலும்பு தேய்மானம் போன்ற பல்வேறு காரணங்களால் கழுத்து வலி ஏற்படுகிறது. வாழ்வியல் முறை மற்றும் சிலவிதமான உடற்பயிற்சிகளால் ஓரளவு வரை கழுத்து வலியை கட்டுப்படுத்தலாம்.


உட்கார்ந்த நிலையிலே அதிக நேரம் செய்யக்கூடிய வேலையாக இருந்தால் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு ஒருமுறையும் இருக்கையில் இருந்து எழுந்து சிறிது தூரம் நடந்து செல்லுங்கள்.

 கழுத்தை லேசாக அசைத்து கழுத்து தசைகளை இலகுவாக்குங்கள். எப்போதும் நிமிர்ந்த நிலையில் இருக்க பழகிக்கொள்ளுங்கள். நிமிர்ந்த நிலையில் இருக்க துணைபுரியும் குஷன் அல்லது தலையணையை அதற்காக பயன்படுத்துங்கள். 

கம்ப்யூட்டரில் வேலைபார்க்கும்போது கண்களுக்கு நேராக ஸ்கிரீன் வரும்விதத்தில் மானிட்டரை அமைத்திருங்கள். கம்ப்யூட்டரை அதிக நேரம் பயன்படுத்தினால், இடை இடையே கண்களுக்கும், கழுத்திற்கும் லேசான பயிற்சி கொடுங்கள்.



தூங்கும்போது உயரம் குறைந்த தலையணையை பயன்படுத்துங்கள். அதிக நேரம் செல்போனில் பேசிக்கொண்டிருந்தால், தலையை ஒருபுறமாக சாய்த்துவைக்கும் நிலையை தவிர்த்திடுங்கள். படுத்துக்கொண்டு டெலிவிஷன் நிகழ்ச்சிகளை பார்க்காதீர்கள். 

பஸ்சிலோ இதர வாகனங்களிலோ நீண்ட நேரம் பயணிக்கும்போது `நெக் காலர்' பயன்படுத்துங்கள். வேலை பார்க்கும் நேரங்களில் ஒவ்வொரு மணி நேரத்தை கடக்கும்போதும் கழுத்தை நான்கு முறை வட்டமாக சுற்றுங்கள். 

தலையை குனிந்து தாடை நெஞ்சில்படும் விதத்தில் பத்து வினாடிகள் வையுங்கள். இடது பக்க காதை இடது தோளில் சாயுங்கள். 10 வினாடிகள் அப்படியே வைத்திருந்துவிட்டு, அதுபோல் வலது பக்க காதை வலது தோளில் சாய்த்து செய்யுங்கள்.


செல்போனில் பேசி முடித்ததும் தலையை வலது, இடது புறமாக சில தடவை திருப்புங்கள். தலையை மெதுவாக வட்டத்தில் சுற்றுங்கள்.

 வலியை கட்டுப்படுத்தும் வழிகள்: 

* கழுத்து வலிக்கும்போது அந்த இடத்தில் சுடுநீர் நிரப்பிய பேக்கைவைத்து ஒத்தடம் கொடுங்கள். வலி கட்டுப்படும்.

 * காட்டன் துணியை சுடுநீரில் முக்கிப் பிழிந்து கழுத்தை சுற்றி இலகுவாக கட்டிவைத்தாலும் வலி குறையும். 

* நேராக பார்த்தபடி தலையை மட்டும் முடிந்த அளவு பின்னோக்கி கொண்டு வாருங்கள். 

* தலையின் பின்னால் இரு கைகளையும் கட்டியபடி தாடை நெஞ்சில் படும் அளவுக்கு குனியுங்கள்.

 * முடிந்த அளவு தலையை உயர்த்தியும், பின்பு தாழ்த்தியும் பத்து முறை செய்யுங்கள். சில நேரங்களில் வேறு நோய்களின் அறிகுறியாகவும் கழுத்து வலி தோன்றும். அதனால் எலும்பு சிகிச்சை நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறுவதும் நல்லது.


Click here to join whatsapp group for daily health tip


நாக்கின் நிறமும்... நோய் அறிகுறியும்..

 அறுசுவைகயான இனிப்பு, உப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு போன்ற சுவைகளை நாம் உணர்வதற்கும் நாக்கு பயன்படுகிறது. உண்ணும் உணவில் தன்மைக்கேற்ப நாக்கில் பாக்டீரியா, வைரஸ் ம்ற்றும் பூஞ்சை போன்ற தொற்று கிருமிகள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன. இவற்றை தடுக்க நாக்கை எப்போதும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். 

ஆரோக்கியத்தை காட்டும் கண்ணாடியாக விளங்கும் நாக்கை வைத்தே உடல் பிரச்சனைகளை கண்டு பிடித்து விடலாம். நாக்கின் நிறமும்... நோய் அறிகுறியும்... 



* நாக்கு இளம் சிவப்பு நிறத்தில் இருந்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்று அர்த்தமாகும்.



* அடர் சிவப்பு நிறத்தில் இருந்தால் தொற்று நோய் மற்றும் அலர்ஜி ஏற்பட்டுள்ளதை குறிக்கும். 

* சிவப்பு நிறத்தில் நாக்கு இருந்தால் இதயம் மற்றும் ரத்தம் சம்பந்தமான நோய்க்கான அறிகுறியாகும். இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி 12 குறைபாட்டின் காரணமாகவும் இவ்வாறு ஏற்படலாம். 

* நாக்கு நீல நிறத்தில் இருந்தால் சிறுநீரகத்தில் பாதிப்பு இருப்பதை உணர்த்தும். 

* மஞ்சள் நிற நாக்கு வயிறு அல்லது கல்லீரலில் பிரச்சனை, மஞ்சள் காமாலை நோய்க்கான அறிகுறிகளை உணர்த்துகிறது. 

* நாக்கு வெள்ளை நிறத்தில் காட்சியளித்தால் நோய்த்தொற்று இருப்பதை குறிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதையும் சுட்டிக்காட்டும்.

* சாம்பல் நிறத்தில் இருந்தால் செரிமானம் மற்றும் மூலநோய் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

 * நாக்கில் காப்பி நிறத்தில் பதிவு இருந்தால் நுரையீரல் பாதிப்பை குறிக்கும். 

* நாக்கில் ஆங்காங்கே வெள்ளை புள்ளிகள் இருந்தால் நாக்கின் உராய்வுத்தன்னை குறைவதையும், எரிச்சல் தன்மை இருந்தால பயன்படுத்தும் பற்பசை நாக்கில் அலர்ஜியை ஏற்படுத்துவதையும் உணர்த்தும். நாக்கி சுத்தமாக பராமரிக்க.. 

* காலை மாலை இருவேளையும் பற்களை சுத்தம் செய்வது போல் நாக்கையும் சுத்தம் செய்ய வேண்டும். 

* வாரம் ஒருமுறை வேப்பங்குச்சியை பயன்படுத்தி பல் துலக்க வேண்டும். இது வாயில் உள்ள நுண்கிருமிகள், பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் உருவாகுவதை தடுக்கும் குணம் கொண்டது. 

* அதிக சூடான மற்றும் குளிர்ச்சியான உணவு சாப்பிடுவதை தவிர்க்கலாம். 

* சாப்பிட்டு முடித்தவுடன தண்ணீர் ஊற்றி, நன்றாக வாய் கொப்பளிக்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். 

* தினமும் நல்லெண்ணெய்யில் ஆயில் புல்லிங் செய்வது நல்ல பலனை தரும். 

* அவ்வப்போது இளம் சூடான நீரில் கல் உப்பு சேர்த்து வாயை கொப்பளிக்கலாம். 

* இவ்வழிமுறைகளை பின்பற்றினால் நாக்கின் ஆரோக்கியத்துடன் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.

தினமும் 30 நிமிடம் சைக்கிள் ஓட்டுவது உடலுக்கும் உலகுக்கும் நன்மை... எப்படி?

 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் குறைந்து ஒரு சைக்கிள் ஆவது இருக்கும். காலப்போக்கில் இரண்டு சக்கர மேட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்லச் செல்ல வீட்டுக்கு இரண்டு மேட்டார் வாகனங்கள் என்ற நிலை உருவானது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் சைக்கிளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சென்னையில் அதிகாலையில் பலர் சைக்கிள் ஓட்டிச் செல்லும் காட்சியை காண முடிகிறது. வார இறுதி நாட்களில் குழுக்களாக இணைந்து இசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலையில் சைக்கிள் ஓட்டிச் செல்கின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரம் கிடைக்கும்போது எல்லாம் இசிஆர் சாலைகளில் சைக்கிள் ரைடு செல்கிறார். இவ்வாறு நாடு முழுவதும் சைக்கிள் பயன்பாடு தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இவ்வாறு சைக்கிள் ஓட்டும் பழக்கம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த ஜூன் 3 உலக சைக்கிள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

பசுமை இல்ல வாயு: காலநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கையில் மிக முக்கியமானது பசுமை இல்ல வாயுக்களை குறைப்பது ஆகும். வரும் 2030-ஆம் ஆண்டுக்குள், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை பாதியாகக் குறைக்க வேண்டும் என்றும் ஐபிசிசி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலகத்தில் வெளியாகும் கார்பனில் 24 சதவீத கார்பன், மேட்டார் வாகனங்களில் இயக்கத்தில் இருந்து வெளியிடப்படுகிறது. எனவே, இதற்கு மாற்றான போக்குவரத்து முறையை பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்திர வாகனம் இல்லாத போக்குவரத்து: கார்பன் அளவை குறைக்க இயந்திர வாகனம் இல்லாத போக்குவரத்து திட்டங்களை அனைத்து நாடுகளும் செயல்படுத்தி வருகிறது. இதன்படி நகரங்களில் சைக்கிள் ஓட்டுவதற்கான வசதிகளை ஏற்படுத்துதல், நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதைத் தவிர்த்து மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது, பொது போக்குவரத்து பயன்பாட்டை ஊக்குவிப்பது உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுளளது.

உலக சைக்கிள் தினம்: ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 3-ம் தேதி உலக சைக்கிள் தினம் கொண்டாப்படுகிறது. உடல் நலம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட அனைத்திற்கும் ஏற்ற போக்குவரத்து முறை சைக்கிள் என்பதால் சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்க ஆண்டுதோறும் சைக்கிள் தினம் கொண்டாடப்படும் என்று 2018-ம் ஆண்டு ஐ.நா பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன்று முதல் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

150 கிராம் கார்பன்: சைக்கிளில் இருந்து எந்த வாயுவும் வெளியாவது இல்லை. ஒருவர் தனது காரை விட்டு விட்டு சைக்கிளை பயன்படுத்துகிறார் என்றால், அவர் ஓரு கிலோ மீட்டருக்கு 150 கிராம் கார்பன் வெளியாவதை தடுத்துள்ளார். 7 கி.மீ சைக்கிள் ஓட்டினால் 1 கிலோ கார்பன் வெளியாதை தடுக்கிறார். எனவே, கார்பன் வெளியாதை தடுப்பதில் சைக்கிள் பயன்பாடு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

தொற்றா நோய்கள்: வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை மாற்றம் காரணமாக மனிதர்கள் உடற்பயிற்சி செய்வது குறைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக இதய நோய்கள், சர்க்கரை நோய்களின் பாதிப்பு அதிகரித்து கொண்டே உள்ளது. எனவே, உலகம் முழுவதும் உடற்பயிற்சி அவசியத்தை உணர்த்த உலக சுகாதார நிறுவனம் பல்வேறு பணிகளை செய்து வருகிறது. 2030-ம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் சைக்கிளிங் உள்ளிட்ட உடல்பயிற்சிகளை அதிகரிப்பதற்கான செயல் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, நீங்கள் தினசரி 30 நிமிடம் சைக்கிள் ஓட்டினால் வாரத்திற்கு 1,000 கலோரிகளை எரித்து உடல் நலத்துடனும், 1 கிலோ கார்பனை குறைத்து சுற்றுச்சூழல் நலமாக இருக்க உதவுவோம்.


மூட்டு வலியை கட்டுக்குள் வைக்கும் உடல் எடை! - சில முக்கியக் குறிப்புகள்

 மூட்டழற்சி (ஆஸ்டியோ - ஆர்த்ரைட்டிஸ்) என்பது இடுப்பு, முழங்கால், தோள்பட்டை, கைவிரல் மூட்டுகளைப் பாதிக்கும் நாள்பட்ட நோய். 2020 கணக்குப்படி, உலகம் முழுவதும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களில், ஏறக் குறைய 65 கோடிப் பேர் மூட்டழற்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். முழங்கால் மூட்டின் ஜவ்வு, சுற்றியுள்ள அமைப்புகளில் தேய்மானம் ஏற்பட்டு மூட்டழற்சி உண்டாகும்.

யாரை அதிகம் பாதிக்கும்? - முதியவர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட மாதவிலக்கு நிற்கும் நிலையில் உள்ள பெண்கள்.

அறிகுறிகள்: மூட்டழற்சி படிப்படியாக ஆரம்பித்து வருடக்கணக்கில் தொடரக்கூடும். ஒவ்வொருவருக்கும் வலி, சிரமங்களின் அளவு மாறுபடும்.

> நீட்டி மடக்குவது போன்ற மூட்டு அசைவுகள் குறைய ஆரம்பிக்கும்

> நடக்கும்போது, படி ஏறி/இறங்கும்போது வலி உண்டாகும்

> காலை எழுந்தவுடன், 30 நிமிடங்கள் வரை மூட்டு இறுகிப்போயிருக்கும்

> மூட்டுக்குள் உராய்கிற சத்தம் கேட்கும்

> மூட்டில் வீக்கம் ஏற்படக்கூடும்

பயிற்சிகள்

மூட்டுப் பயிற்சிகளோடு, நடைப்பயிற்சி, யோகா, சைக்கிள் ஓட்டுவது போன்ற முழு உடலுக்கான மிதமான பயிற்சிகளையும் செய்ய வேண்டும். இவற்றில், உங்களுக்கு வசதியாக உள்ள ஏதேனும் ஒன்றை, வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள், படிப்படியாக அரை மணி நேரம் வரை செய்யலாம். வாரத்திற்கு மொத்தம் இரண்டரைமணி நேரம்.

நடைப்பயிற்சி, யோகா செய்ய முடியாத பட்சத்தில், துணி மடிப்பது, ஒட்டடை அடிப்பது போன்ற மிதமான வீட்டு வேலைகளை முயன்றுபாருங்கள். அதிக நேரம் ஒரே இடத்தில் உட்காராமல், 15-30 நிமிடங்களுக்கு ஒரு முறை எழுந்து நடந்து சின்ன சின்ன வேலைகளைச் செய்தபடி இருக்கலாம்.

பயம் வேண்டாம்

பயிற்சிகளைச் செய்வதால் மூட்டழற்சி மோசமடையும் என்கிற பயம் வேண்டாம். வலியுடன் பயிற்சிகள் செய்வது ஆரம்பத்தில் கஷ்டமாகத் தெரிந்தாலும், சில நாள்களிலேயே எளிதாகச் செய்ய முடிவதைக் காண்பீர்கள். பயிற்சிக்குப் பிறகு வலி அதிகமானால், வலி குறையும்வரை பயிற்சிகளை/ நடப்பதைக் குறைத்துக்கொள்ளுங்கள். பின் படிப்படியாகத் தொடர்ந்து செய்ய ஆரம்பியுங்கள்.

எடையைக் குறைப்பது

அதிக உடல் எடை, முழங்கால் மூட்டிற்குள் அழுத்தத்தை ஏற்படுத்தி, மூட்டழற்சி ஏற்படுவதற்குக் காரணமாகும். அல்லது இருக்கிற வலியை அதிகப்படுத்தி, உடலியக்கத்தைக் குறைக்கும். எனவே, உடல் எடையைக் குறைப்பது மூட்டழற்சியை தடுக்கவும், கட்டுக்குள் வைக்கவும் உதவும்.

அன்றாட வேலைகளால், மூட்டுக்குள் அழுத்தம் ஏற்பட்டு வலி அதிகமாவதைத் தடுக்க சில எளிய வழிகள்:

> மாடிப்படி ஏறும்போது, பக்கவாட்டுப் பிடியைப் பிடித்துக்கொண்டு ஏறலாம்; பாதிக்கப்படாத, குறைவாக வலியுள்ள காலை முதலில் வைத்து ஏறலாம்.

> அதிக நேரம் நிற்பது, மண்டியிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

> ஓடுவது, ஜாகிங், டென்னிஸ் போன்ற தீவிர பயிற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

Click here to join whatsapp group for daily health tip


வெற்றி மந்திரம் | இந்த ‘ஆறு’ உங்களிடம் இருக்கிறதா?

 து வெற்றி என்பதில் பலருக்கும் பலவிதமான கருத்துகள் இருக்கின்றன. ஆசைப்பட்டதை அடைவது, கனவுகளை நனவாக்குது, போட்டிகளில் ஜெயிப்பது, எதிலும் முன்னணியில் நிற்பது,

தேர்வில் வெற்றிபெறுவது, நல்ல வேலையில் சேருவது, பதக்கங்களை வெல்வது, பிசினஸ், அன்பான குடும்பம், நிறைய பணம், சொந்த வீடு, கார், பங்களா என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

இப்படி வெற்றியின் நிறைவு, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக இருக்கிறது. உண்மையான வெற்றி எது என்பதை வேறு ஒருவர் நிர்ணயிக்க முடியாது. அதை அவரவரே நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். நீங்கள் திறமையானவரா இல்லையா என்பதை நீங்கள் அடையும் வெற்றியைப் பொறுத்துத்தான் இந்த உலகம் உணர்ந்துகொள்கிறது.

உயர்ந்த நோக்கம், சாதிக்க வேண்டும் என்கிற உத்வேகம், கடினமான உழைப்பு, நிர்ணயிக்கப்பட்ட இலக்கு, சரியான திட்டமிடல், நம்மால் முடியும் என்ற நம்பிக்கை. இந்த ஆறு விஷயங்களை நாம் கடைபிடித்தாலேயே போதும். வெற்றியைத் தேடி நாம் போக வேண்டியதில்லை. வெற்றி நம்மைத் தேடி வரும்.

இலக்கு

நம்முடைய இலக்கு எது என்று நாம் முதலில் நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். நம் வெற்றிக்கான இலக்குதான், நாம் என்ன செய்யப் போகிறோம், எதில் நாம் வெற்றிபெறப் போகிறோம், எதில் நாம் சாதிக்கப் போகிறோம் என்பதை நிர்ணயிக்கும். அந்த இலக்கை அடைய நாம் மேற்கொள்ளும் வழிமுறைகள்தாம் நமக்கு வெற்றியைத் தரும்.

உயர்ந்த நோக்கம்

நாம் வெற்றிபெற நமது நோக்கம் முக்கியப் பங்காற்றுகிறது. நமது நோக்கம், எண்ணம், ஆசை உயர்ந்ததாக இருக்க வேண்டும். இவை நம்மை வெற்றியின் பாதையை நோக்கி இழுத்துச் செல்லும்.
பணக்கார இளைஞன் ஒருவன் விலையுயர்ந்த தன் காரின் அருகே நின்றுகொண்டிருந்தான். ஏழைச் சிறுவன் ஒருவன் அந்த காரையே ஆசையுடன் பார்த்துக்கொண்டிருந்தான். பணக்கார இளைஞன் சிரித்துக்கொண்டே, “இது என் அண்ணன் எனக்குப் பரிசளித்தது” என்றான். சிறுவன் முகம் ஆச்சரியத்தில் விரிந்தது. “உனக்கு அப்படி ஓர் அண்ணன் இருந்திருக்கலாம் என்று ஆசைப்படுகிறாயா?” அந்த இளைஞன் கேட்டான். ஏழைச் சிறுவன் சொன்னான், “இல்லை! அப்படியோர் அண்ணனாக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்”.
அந்தச் சிறுவனைப் போன்ற உயர்ந்த நோக்கம்தான் நமக்குத் தேவை.
வாங்கும் இடத்தில் இல்லாமல் வழங்கும் இடத்தில் இருப்பதே சிறந்தது என்பதை அந்தச் சிறுவன் உணர்ந்திருக்கிறான். அந்தச் சிறுவனைப் போல நாம் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும்.

உத்வேகம்

நம் ஒவ்வொருவருக்கும் சாதிக்க வேண்டும் என்கிற உத்வேகம் வேண்டும். அந்த உத்தேகம்தான், பின்னர் நாம் அடையப்போகும் வெற்றிக்குத் தூண்டுகோலாக இருக்கிறது.

சரியான திட்டமிடல்

வெற்றி பெற முக்கியத் தேவை, சரியான திட்டமிடல். வெற்றியை நோக்கி நாம் முதல் அடியை எடுத்துவைப்பதற்கு முன்பே, வெற்றியின் இலக்கை அடையும் பாதையைச் சரியாகத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். திட்டமிடல் இல்லாத எந்த ஒரு பயணமும் சரியான இலக்குக்கு நம்மைக் கொண்டுபோய் சேர்க்காது! சரியாகத் திட்டமிடுங்கள். திட்டமிடுவதற்கு முன் பலமுறை யோசனை செய்யுங்கள்.

கடின உழைப்பு

சரியான இலக்கை நிர்ணயித்தல், உயர்ந்த நோக்கம், சரியான திட்டமிடல், கடின உழைப்பு ஆகியவை இருக்க வேண்டும்.
உழைப்பு இல்லாத இலக்கு, நோக்கம், திட்டமிடல் எல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போன்று பயனற்றது. இப்போது நாம் கடுமையாக உழைத்தால்தான் அதன் பலன் நிச்சயம் கிடைக்கும்.
நம்பிக்கை
நம்பிக்கை, எரிபொருள் போன்றது. அது இருக்கும்வரை நம்மை இயக்கிக்கொண்டே இருக்கும். வெற்றியை நோக்கிய நமது பயணம் சுலபமாக இருக்கும். தன்னம்பிக்கை இல்லாத முயற்சி, எரிபொருள் இல்லாத வாகனம் போன்றது. ஒரே இடத்தில் தேக்கிவிடும். நம் மீது நாம் நம்பிக்கைவைக்காமல் வேறு யார் வைக்க முடியும்?
ஒரு மனிதனை ஒரே ஒருவரால் மட்டுமே உள்ளும் புறமும் அறிந்திருக்க முடியும். அந்த மனிதனின் பலம், பலவீனங்களை அறிந்திருக்க முடியும். அந்த நபர், அவரேதான்! பலவீனத்தை உதறுவோம். பலத்தை அதிகப்படுத்துவோம். வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்!

Click here to join whatsapp group for daily health tip


வார இறுதி நாட்களில் மட்டும் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமானதா?

 நம் உடலை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்துக் கொள்ள தினசரி உடற்பயிற்சி செய்வது அவசியமானது. தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலமாக வயோதிகம் சார்ந்த நோய்கள் மற்றும் தொற்றா நோய்கள் போன்றவற்றை கட்டுப்படுத்தி நமது ஆயுட்காலத்தை நீட்டித்துக் கொள்ளலாம்.



ஆனால், எல்லோருக்கும் தினசரி உடற்பயிற்சி செய்வதற்கான கால அவகாசம் கிடைக்கிறதா என்ன? பெரும்பாலான மக்கள் நாளொன்றுக்கு 12 மணி நேரம் அலுவலகம் சென்று பணிபுரிந்து வீடு திரும்புவதற்கு எடுத்துக் கொள்கின்றனர். மீதமுள்ள நேரத்தில் 8 மணி நேர தூக்கம் அவசியமாகும். எஞ்சியுள்ள 4 மணி நேரத்தில் தான் குளிப்பது, சாப்பிடுவது உள்பட அன்றாட கடமைகளையும், தனிப்பட்ட வேலைகளையும் செய்து கொள்ள வேண்டியுள்ளது.

ஆக, வார நாட்களில் ஓய்வே இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் உடற்பயிற்சி செய்வதற்கான வாய்ப்பு குறைந்து விடுகிறது. இதனால், பெரும்பாலான மக்கள் வார இறுதியில் வரும் விடுமுறை நாட்களில் மட்டும் உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதில் நல்ல விஷயம் என்னவென்றால் வாரத்தில் 2 நாட்கள் முறையாக உடற்பயிற்சி செய்தாலும் கூட நமக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எந்தெந்த வயதினருக்கு எவ்வளவு நேரம் பயிற்சி தேவை? : ஒவ்வொரு வயதினரும் எவ்வளவு நேரத்திற்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை உலக சுகாதார மையம் வரையறை செய்துள்ளது. அதன்படி 18 முதல் 64 வயது வரை உள்ளவர்கள் வாரத்தில் 150 மணி நேரம் முதல் 300 மணி நேரம் வரை மிதமான அல்லது தீவிரமான உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கால அளவை இரண்டா
க பிரித்து கொள்ளலாம். அதாவது 75 மணி நேரம் முதல் 150 மணி நேர அளவுக்கு ஓட்டம், நீச்சல் போன்ற கடினமான பயிற்சிகளையும், எஞ்சியுள்ள நேரத்தில் நடைபயிற்சி, ஜாக்கிங் போன்ற எளிமையான பயிற்சிகளையும் செய்யலாம்.

தசைகளை வலுப்படுத்த வேண்டும் : நம் தசைகளை வலுப்படுத்தும் வகையில் மிதமான அல்லது தீவிரமான பயிற்சிகளை நாம் செய்ய வேண்டும். குறைந்தப்பட்சம் வாரத்திற்கு இரண்டு முறையாவது எடை தூக்குதல் பயிற்சி செய்வது அவசியம். டிரைசெப், பைசெப் போன்றவற்றையும் மேற்கொள்ளலாம்.

வார இறுதி நாட்களில் : உடற்பயிற்சிக்காக நீங்கள் ஒதுக்கும் வார இறுதி நாட்களில் 1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் பயிற்சி செய்யலாம். தொடர்ச்சியான உடற்பயிற்சி, சத்தான உணவு மற்றும் போதுமான ஓய்வு போன்றவை இருந்தால் நம் உடலுக்கு அபாரமான பலன்கள் கிடைக்கும்.

ஒரே இடத்தில் அமரக் கூடாது : நாம் இன்றைக்கு அலுவலகத்தில் நீண்ட நேரம் அமர்ந்து பணி செய்யும் வழக்கத்தை கொண்டிருக்கிறோம். இதை தவிர்க்க முடியாது என்றாலும் அவ்வபோது எழுந்து, நடந்து சென்று வருவது முக்கியம். ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது நல்லதல்ல என்று உலக சுகாதார மையம் தெரிவிக்கிறது. இறுதியாக ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். எந்த பயிற்சியுமே செய்யாமல் இருப்பதைக் காட்டிலும் ஏதோ சில பயிற்சிகளை செய்வது நல்லது.

மழைக்காலங்களில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா?

 தமிழர்களின் முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் பிடிக்காத நபர் யாரேனும் இருக்க முடியுமா? சுவையானது, சத்தானது என்பதோடு மட்டுமல்லாமல் வெகுஜன மக்களும் வாங்கி உண்ணும் வகையில் விலை குறைவானது என்பதும் வாழைப்பழத்தின் சிறப்பம்சம் ஆகும். சாதாரணமாக சாலையோர கடைகளில் கூட வாழைப்பழங்களை நாம் வாங்கிவிட முடியும். சிலருக்கு தினசரி உணவு சாப்பிட்ட பிறகு, செரிமானத்திற்காக வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் இருக்கும். அந்த அளவுக்கு நம்முடைய வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட வாழைப்பழங்களை கண்டதும் க்காலத்தில் நாம் சற்று ஒதுக்க தொடங்கி விடுகிறோம். ஏனெனில் மழைக் காலங்களில் வாழைப்பழம் சாப்பிட்டால் சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம் என்றும், பிற நோய்கள் தாக்கக் கூடும் என்ற பொதுவான எச்சரிக்கை உணர்வு எல்லோர் மனதிலும் உள்ளது. ஆனால், உண்மையில் மழைக்காலங்களில் வாழைப்பழம் சாப்பிடலாமா கூடாதா, என்பது குறித்து நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள் என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.



வாழைப்பழமும், மழைக்காலமும் :

 பொதுவாக மழைக்காலங்களில் நீர் சார்ந்த மற்றும் சுவாசம் சார்ந்த நோய்கள் நம்மை தாக்கக் கூடும் என்ற சூழலில், நாம் என்ன உணவு உண்ணப் போகிறோம் என்பது குறித்து மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். நீங்கள் தினசரி வாழைப்பழம் சாப்பிடுபவர் என்றால் நீங்களும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் வாழைப்பழம் சாப்பிடுவது முற்றிலும் பாதுகாப்பானது. அது பல வகைகளில் நம் உடலுக்கு நன்மை தரக் கூடியது. ஆனால், எப்போது சாப்பிட வேண்டும், எப்படி சாப்பிட வேண்டும் என்பதே முக்கியமானது.

ஏன் எச்சரிக்கை தேவை? 

அமினோ அமிலங்கள், விட்டமின் பி6, சி மற்றும் நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், மேங்கனீஸ் போன்ற சத்துக்கள் நிறைந்த வாழைப்பழம் நம் ஆரோக்கியத்திற்கு நல்லது. நமது மூளையின் செயல்பாடுகளை ஊக்குவிக்க இது உதவும். இதய நோய் பாதிப்புகள் மற்றும் ஸ்டிரோக் போன்றவற்றை தடுக்கிறது. அதே சமயம், வாழைப்பழத்தை தவறான சமயத்தில் சாப்பிடக் கூடாது மற்றும் சில வகை உணவுகளோடு சேர்த்து சாப்பிடக் கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


எப்போது தவிர்க்க வேண்டும்? 

செரிமானக் கோளாறு, இருமல் அல்லது ஆஸ்துமா போன்ற பாதிப்பு கொண்டிருக்கும் நபர்கள் இரவில் இதை சாப்பிடக் கூடாது. இது உடம்பில் கபம் உண்டாக காரணமாகிவிடும். இதைத் தொடர்ந்து சளி பிடிக்கும். ஆகவே பகல் நேரத்தில் சாப்பிடவும். வெறும் வயிற்றில் சாப்பிடலாமா? காலை உடற்பயிற்சி செய்யும் முன்பாக வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் பலருக்கு இருக்கும். ஆனால், இது ஆசிட் ரிஃப்ளெக்ஸ் என்னும் எதுக்களித்தல் பிரச்சனையை உண்டாக்கும். பொட்டாசியம் இருப்பதால் இதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது.



எந்த உணவுகளோடு சேர்த்து சாப்பிடக் கூடாது? :

 பொதுவாகவே வாழைப்பழத்தை பால் அல்லது பால் சார்ந்த பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது. இது உடலின் அக்னியை பாதித்து, செரிமானப் பிரச்சனையை உண்டாக்கும்.

பாதுகாப்பு அவசியம் : மழைக்காலங்களில் காய்ச்சல், சளி, இருமல், செரிமானக் கோளாறுகளை சந்திக்கும் போது வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்த்து விடுவது நல்லது..


Click here to join whatsapp group for daily health tip



WALK-IN-INTERVIEW for Young Professional-I & II at ICAR-NAARM, Rajendranagar, Hyderabad

 WALK-IN-INTERVIEW 

Candidates are invited to attend Walk-in-interview for engagement / hiring as Young Professional-I (one position) & Young Professional-II (six positions) on contract/short term basis (purely temporary) to work under various Projects / Divisions / Service Units at ICAR-NAARM, Rajendranagar, Hyderabad-500 030, Telangana. 


For Young Professional-I 

Name of the Position:  Young Professional – I 

Emoluments: Rs. 25,000/- (Fixed) per month 

Duration: Young Professional-I will be engaged initially for 01 year and extendable for further one more year based on performance to be assessed by the Unit In-Charge and continuation of the schemes. 

Age Limit:  The minimum age under Young Professional category will be 21 years and maximum 45 years as on date of walk-in-Interview with relaxation as per rules. 

Mode of Engagement: Purely on Contract (Temporary) basis

 For Young Professional-II (S.No.02 to 7) 

Name of the Position: Young Professional – II 

Emoluments: Rs. 35,000/- (Fixed) per month 

Duration: Young Professional-II will be engaged initially for 01 year and extendable for further one more year based on performance to be assessed by the Unit In-Charge and continuation of the schemes.

 Age Limit: The minimum age under Young Professional category will be 21 years and maximum 45 years as on date of walk-in-Interview with relaxation as per rules. Mode of Engagement Purely on Contract (Temporary) basis 

Interview date & time to be held on : 02/08/22,03/08/22, 04/08/22

The eligibility criteria and other terms and conditions for the positions - Click here to download pdf file 

வாய்ப்புண் வரக் காரணங்களும், பின்பற்ற வேண்டிய உணவு முறையும்

 குழந்தை முதல் முதியோர் வரை வாய்ப்புண் எல்லோருக்கும் வரலாம். பொதுவாக, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு இது வரும் சாத்தியம் அதிகம். அடுத்து, நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருப்பவர்களுக்கும், இரைப்பையில் புண் உள்ளவர்களுக்கும் இதன் தாக்கம் அதிகம்.

வெற்றிலை, புகையிலை, பான்மசாலா போடுபவர்கள், புகை பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், நீரிழிவு நோயாளிகள் ஆகியோருக்கு அடிக்கடி வாய்ப்புண் வரலாம். எந்த நேரமும் வேலை, வேலை என்று பரபரப்பாக இருக்கிறவர்களுக்கும், மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் வாய்ப்புண் மீண்டும் மீண்டும் வந்து தொல்லை கொடுக்கும்.

வாய்ப்புண் வருவது மிகவும் சாதாரண விஷயம்தான். ஆனால், அதைக் கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்சினை பெரிதாகிவிடும். தொடக்கத்தில் உதடு, கன்னம், நாக்கு, அண்ணம் ஆகிய பகுதிகளில் கடுகளவு தோன்றும் கொப்புளங்கள், சில நாட்களில் உடைந்து, உளுந்து அளவுக்குக் குழிப்புண்களாக மாறி வலியை ஏற்படுத்தும்; சாப்பிடும்போதும் பேசும்போதும் வலி அதிகமாகும். கழுத்தில் நெறிகட்டும்; காய்ச்சல் வரும்; உடல்வலி, தலைவலி எனத் தொல்லைகள் தொடரும்.

காரணங்கள்

> நீண்ட நாட்களுக்குச் சரிவிகித உணவைச் சாப்பிடாதவர்களுக்கு இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி6 மற்றும் பி12 குறைபாடு ஏற்படும். இதனால் ரத்த வெள்ளை அணுக்கள் குறைந்துவிடும். இதன் விளைவாக உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து வாய்ப்புண் வரும்.

> வைட்டமின் பி2 குறைபாடு இருந்தால், வாயின் இரண்டு ஓரங்களிலும் வெள்ளை நிறத்தில் வெடிப்புகள் தோன்றும்.

> இரைப்பையில் புண் உள்ளோருக்கு, அங்கே சுரக்கிற அதீத அமிலம் தூக்கத்தில் உணவுக்குழாயைக் கடந்து வாய்க்கு வந்துவிடும். அப்போது தொண்டையிலும் வாயிலும் புண் ஏற்படும்.

> கூர்மையான பற்கள் இருந்தால், அவை உள் கன்னத்தைக் குத்தி, புண்ணை உண்டாக்கும். மிகச் சூடாகக் காபி/டீ குடித்தால்கூட வாய்ப்புண் வருவதுண்டு. சிலர் வாயின் ஒரு பக்கத்தில் மட்டுமே உணவை மெல்லுவார்கள். இது நாளடைவில் வாய்ப்புண்ணுக்கு வழியமைக்கும்.

சரியான உணவு

  • மருத்துவரின் ஆலோசனைப்படி ஆன்ட்டிசெப்டிக் திரவத்தைப் பயன்படுத்தி வாய் கொப்பளித்தல்,
  • ஸ்டீராய்டு, வலி மரத்துப் போகச் செய்யும் களிம்பு இவற்றோடு வலி நிவாரணி மாத்திரைகளையும் ஒரு வாரம் சாப்பிட வேண்டும்.
  • லாக்டோபேசில்லஸ் (Lactobacillus) மருந்து கலந்த மல்ட்டி வைட்டமின் மாத்திரை மற்றும் இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் மாத்திரைகளை ஒரு மாதம் சாப்பிட வேண்டும்.
  • பூஞ்சையால் வரும் வாய்ப்புண்ணுக்குக் காளான் கொல்லி மருந்தைத் தடவினால் நல்ல பலன் கிட்டும்.

எப்படித் தடுக்கலாம்?

வாய்ச்சுத்தம் காப்பது, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ‘ஸ்கேலிங்’ முறையில் பற்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். நீரிழிவு நோயாளிகள் நோயைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.

என்ன சாப்பிட வேண்டும்?

ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக வாய்ப்புண் ஏற்படுவதைத் தடுப்பதற்குச் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளான பால், தயிர், முட்டை, இறைச்சி, ஈரல், மீன், நண்டு, கீரை, பச்சையிலைக் காய்கள், வெல்லம், தேன், பேரீச்சை, முளைக் கட்டிய பயறுகள், கொண்டைக் கடலை, பச்சைப் பட்டாணி, கோதுமை, கேழ்வரகு, சோயாபீன்ஸ், தக்காளி, முருங்கைக்காய், சுண்டைக்காய் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.

Click here to join whatsapp group for daily health tip

கண்பயிற்சி Vs கண்ணாடி: நிஜமும் நம்பிக்கையும் - ஒரு விளக்கம்

 கதை சொன்ன காணொளி: சில நாட்களாக கண்பயிற்சி குறித்த ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதைப் பார்த்திருக்கலாம். மேலும் கீழும் பக்கவாட்டிலும் செல்லும் சிறிய பந்து அளவிலான உருண்டை வடிவ உருவங்களைப் பார்க்கச் சொல்லுகிறது அந்த காணொளி. அதில் ஒரு அடிக்குறிப்பு வேறு. இதைச் செய்தால் கண்ணில் பார்வை அதிகரிக்கும் என்று.

பலரும் அதைப் பார்த்துவிட்டு அந்த காணொளி என்ன சொல்கிறது என்றும், அப்படிப் பார்த்தால் கண்ணாடி போடுவதைத் தவிர்க்க முடியுமா என்றும் கேட்கிறார்கள். ஜப்பான் கண் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றின் மிகச் சிறந்த தயாரிப்பு என்ற குறிப்பினையும் சிலர் சேர்த்து அனுப்பி வருவதால் பலரையும் அது கவர்ந்ததில் வியப்பில்லை.

கண்ணாடி ஏன்: இது போன்ற கண்பயிற்சிகள் கண்ணின் தசைகளுக்கு நல்லதுதான். ஆனால் பார்வையை மேம்படுத்துமா என்பதுதான் இங்கே கேள்வியே? கண்களுக்குப் பயிற்சி கொடுத்து கண்ணாடியைக் கழற்றலாம் என்றும் விடுமுறை நாட்களில் உங்கள் பிள்ளைகளை அழைத்து வந்து தங்கி பயிற்சி பெற்று கண்ணாடிக்கு நிரந்தர ‘பை பை’ சொல்லுங்கள் என்றும் சொல்வது போன்ற காணொளிகள் இதற்கு முன்னரும் பகிரப்பட்டிருக்கின்றன.

எனவே தற்போதைய காணொளியினையும் பார்த்துவிட்டு கண்ணாடியைக் கழற்ற முடியுமா என்று கேட்கிறார்கள். பார்வை குறைபாட்டுக்கு ( Defective Vision ) கண்ணாடி அணிகிறோம். வசதியானவர்கள் காண்டாக்ட் லென்சு அல்லது லேசர் சிகிச்சை செய்து கொள்ளலாம். மருந்து, மாத்திரை, சொட்டு மருந்து வேறு பயிற்சிகள் எதுவும் பயன் தராது. அது புரிய வேண்டுமென்றால் கண்ணின் அமைப்பைத் தெரிந்து கொள்வது நல்லது.


பார்வைக் குறைபாடு: பார்வைக் குறைபாடு (Defective vision) என்பது கண்ணின் உருவ அமைப்பில் ஏற்படக்கூடிய பிரச்சினையால் ஏற்படக்கூடியது. ஒரு பொருளிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் கண்ணின் கருவிழி, விழிலென்சு வழியாக ஊடுருவி விழித்திரையில் பிம்பம் விழுகிறது. இதற்கு இவை அனைத்தும் இயல்பாக இருக்க வேண்டியது அவசியம். கண்ணின் கருவிழிக்கும் விழித்திரைக்கும் உள்ள தொலைவு குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ பார்வை குறைபாடு ஏற்படலாம்.

இதனால் பிம்பம் விழித்திரையில் விழாமல் விழித்திரைக்கு முன்னாலோ அல்லது பின்னாலோ விழுகிறது. மைனஸ் லென்சு (-) அல்லது பிளஸ் லென்சு ( + ) கொண்டு விழித்திரையில் பிம்பத்தை விழச்செய்து பார்வை குறைபாடு சரி செய்யப்படுகிறது. காய்கறி, கீரை சாப்பிடுவதன் மூலமோ, கண்பயிற்சி செய்வதன்மூலமோ, மருந்து மாத்திரையின் மூலமோ இதனைச் சரி செய்ய முடியாது.


Click here to join whatsapp group for daily health tip

“குழந்தைகளின் உடல் பருமன் பிரச்சினைக்கு சிறுதானியங்களே சிறந்த தீர்வு” - மருத்துவர் கு.கணேசன்

 பேக்கிங் செய்யப்பட்ட சிப்ஸ், பர்கர், பீஸா என்று முற்றிலும் மண்ணுக்கும் மரபுக்கும் தொடர்பில்லாத உணவுகளுக்கு அடிமையாகிக் கிடக்கிறது நம் இளைய சமுதாயம்.

பொறித்த, வறுத்த எண்ணெய் உணவுகளுக்கே வேலையில்லாத நம் மரபில் இன்றைக்கு அவைதாம் முழுமையாய் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. இதனால் பாதிக்கும் மக்களுக்கு சிறுதானியங்களே சிறந்த தீர்வு.

தற்போது குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என பெரும்பாலானோருக்கு உள்ள பெரும் பிரச்சினை உடல் பருமன். ‘‘இந்தப் பிரச்சினைக்கு சிறுதானியங்கள் சிறந்த தீர்வாகவே இருக்கும்’’ என்கிறார் டாக்டர் கு.கணேசன்.

இதுகுறித்து டாக்டர் மேலும் கூறியது: “வெள்ளை அரிசியைவிட சிறுதானியங்களில் மாவுச்சத்து 20 சதவீதம் குறைவாக உள்ளது. பாலிஸ் செய்யப்பட்ட அரிசி ருசியாக இருக்கிறது என்று சொல்லி குழந்தைகள் அதிகமாக சாப்பிடுவதே உடல் பருமனுக்கு காரணம்.

அதேநேரத்தில் புரதச்சத்தும், நார்ச்சத்தும் அதிகம் என்பதால் உடல் பருமனாகாது. உடலுக்கு பலத்தைக் கொடுக்கும். சர்க்கரை நோய், மலச்சிக்கல் வராது. செரிமானம் நன்றாக இருக்கும்.

அரிசியோடு ஒப்பிடும்போது சிறுதானியங்களில் நுண்சத்துக்களான கால்சியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், இரும்பு போன்ற சத்துக்கள் அதிகம். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். செரிமானத்தைத் தாமதப்படுத்தும் என்பதால் உடல் பருமனாகாது.”

Click here to join whatsapp group for daily health tip

மன அழுத்தம் முதல் உடல் பருமன் வரை : உங்களுக்கு மாரடைப்பு வருவதற்கான காரணங்கள்..!

 நம் உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றான இதயம் இயல்பான முறையில் செயல்படாமல் ஆபத்தை எதிர்கொள்வதற்கு பல்வேறு விதமான காரணங்கள் உள்ளன. நம் இதயம் எந்தெந்த வகையில் பாதிக்கப்படும் என்பதை தெரிந்து கொள்வது மிக முக்கியமானதாகும். இதயம் சார்ந்த நோய்கள் திடீரென்று நிகழ்ந்துவிடுவதில்லை, பல ஆண்டுகளின் தொடர் விளைவுகள் எதிரொலியாகவும், நாம் கடைப்பிடிக்கும் மோசமான பழக்க, வழக்கங்கள் காரணமாகவும் இத்தகைய நோய்கள் ஏற்படுகின்றன.

உலகெங்கிலும் இதயநோய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் 18 மில்லியன் மக்கள் உயிரிழக்கின்றனர். இதய நோயால் உயிரிழக்கும் மொத்த மக்களில் 3ல் ஒரு பங்கு சதவீதத்தினர் 70 வயதுக்கு முன்பாக இளம் வயதிலேயே உயிரிழக்கின்றனர் என்று உலக சுகாதார நிலையம் தெரிவிக்கிறது.

இளம் வயதினரின் உயிரை பறிக்கும் இதய நோய்கள் :

பிரபல இந்திய பாடகர் கேகே அண்மையில் இதய பாதிப்பால் உயிரிழந்த நிலையில், இந்த நோய் இளம் வயதினரை எந்த அளவுக்கு பாதிக்கிறது என்ற விழிப்புணர்வு அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக 40 வயதை ஒட்டிய இளம் வயதினருக்கான ஆபத்துகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

மன அழுத்தம் :

அளவுக்கு அதிகமான மன அழுத்தம் காரணமாக இதயத்திற்கு செல்லும் குழாய்களில் அழற்சி ஏற்படும் என்றும், இது நல்லதல்ல என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மன அழுத்தம் காரணமாக நம் உடலின் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதுவும் கூட இதய நோய் ஆபத்து அதிகரிக்க காரணமாக அமையும். உடல் இயக்கமின்மை, தூக்கமின்மை, உடல் பருமன் போன்ற காரணங்களும் இதய நோய் ஆபத்தை அதிகரிக்கும்.

போதுமான தூக்கமின்மை

போதிய தூக்கம் இல்லை என்றால் உடலில் பல்வேறு விதமான நோய்கள் அதிகரிக்கக் கூடும். அதில் ஒன்று இதய நோய் பாதிப்பு ஆகும். தூக்கமின்மை பிரச்சனையால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 8 மணி நேர தூக்கம் அவசியமாகும்.

அதிகப்படியாக மது அருந்துவது

நீங்கள் அளவுக்கு அதிகமாக மது அருந்துவதன் காரணமாக உங்கள் ரத்த அழுத்தம் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் இதய செயலிழப்பு ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இது மட்டுமல்லாமல் உடல் பருமனுக்கும் மதுப்பழக்கம் வழிவகை செய்யும்.

உடல் பருமன்

கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் கண்ட உணவுகளையும் சாப்பிடுவது, மோசமான வாழ்வியல் பழக்க, வழக்கங்கள் ஆகியவை உடல் பருமன் அதிகரிக்க காரணமாகும். இதனால் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் கொழுப்பு நோய், இதய நோய் போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.

புகைப்பிடிப்பது

புகைப்பிடிப்பதால் நமது ரத்த தட்டுக்களில் படிமங்கள் உண்டாகின்றன. நம் இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் குழாய்கள் சுருங்கி விடுகின்றன. இது மட்டுமல்லாமல் ரத்த அடர்த்தி அதிகரித்து அடைப்புகள் ஏற்படவும் காரணமாக அமைகின்றன.

பிற ஆபத்துகள்

நமது வீட்டில் யாருக்கேனும் இதய நோய் பிரச்சனைகள் இருந்தால், அதுகுறித்து நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மோசமான உணவுப் பழக்கத்தை கைவிட வேண்டும். உயர் ரத்த அழுத்தம் வரமால் கட்டுப்படுத்துவது நல்லது.

அறிகுறிகளும், எச்சரிக்கைகளும்...

* மூச்சுத்திணறல்

* நெஞ்சு வலி

* நெஞ்சுப் பகுதியில் இறுக்கம்

* கைகள், கழுத்து, தாடை, மேல் வயிறு போன்ற இடங்களில் வலி

* உடல்சோர்வு

* சீரற்ற இதய துடிப்பு

Click here to join whatsapp group for daily health tip

இரவில் வாக்கிங் போவது உடலில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்....

 சாப்பிட்ட பிறகு செய்யும் வாக்கிங் இதய பாதிப்புகளை குறைக்கும் என்றும் ஆய்வு ஒன்று கூறுகிறது. 10 நிமிட நடைப்பயிற்சியில் வளர்ச்சிதை மாற்றத்திலும் முன்னேற்றம் இருக்கும்.கலோரிகளும் குறையும். சர்க்கரை நோய் வருவதையும் தடுக்க முடியும். 



சாப்பிட்ட பிறகு நிச்சயம் பலருக்கும் உடலில் அணுவும் அசையாது என்பதுபோல தான் இருக்கும். அப்படியே கொஞ்சம் படுக்கலாமா என சோம்பேறித்தனமும் ஒட்டிக்கொள்ளும். ஆனால் அவ்வாறு படுத்தால் நெஞ்சு எரிச்சல், வாயு பிரச்சனை ஆகியவை வரும்.

 இவற்றையெல்லாம் தவிர்க்க சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் வாக்கிங் செல்வது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள். அதோடு சாப்பிட்ட பிறகு செய்யும் வாக்கிங் இதய பாதிப்புகளை குறைக்கும் என்றும் ஆய்வு ஒன்று கூறுகிறது.


பொதுவாக இரவு உணவுக்குப் பிறகு நடை பயிற்சி செல்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல பயனை தரும். குறிப்பாக, உடல் நலன் மட்டுமல்லாமல் மனநலனை மேம்படுத்தவும் இது உதவிகரமாக இருக்கும். அந்த வகையில் இரவு உணவு சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செல்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். இரவு நேரத்தில் நடந்து செல்வதால் சாப்பிட்ட உணவு எளிமையாக ஜீரணம் அடையும். 
இது வயிறு உப்புசம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியும். சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்வதால் நமது மெட்டபாலிசம் மேம்பாடு அடைகிறது.

நடைப்பயிற்சியை தொடர்ந்து உணவுகள் வேகமாக செரிமானம் அடைவதால் நமது உடலில் உள்ள நச்சுக் கழிவுகள் வெளியேறுகின்றன. இதனால், உடல் உள் உறுப்புகளின் நலன் மேம்பாடு அடையும். அதுமட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும் தினசரி நடைப்பயிற்சி செய்வதன் மூலமாக இதை கட்டுப்படுத்த முடியும். 

15 நிமிடங்கள் அதிவேகமாக நடந்தீர்கள் என்றால் பசி உணர்வை கட்டுப்படுத்த முடியும். இரவில் நீங்கள் தூக்கமின்மை பிரச்சினையால் அவதிப்படுபவர் என்றால், உணவு சாப்பிட்ட பிறகு நடந்து செல்வது நல்ல பலனை தரும். உங்கள் ஸ்ட்ரெஸ் அளவை குறைத்து நன்றாக தூக்கம் வரும். மன அழுத்தம் அல்லது ஸ்ட்ரெஸ் போன்ற பாதிப்புகளை எதிர்கொண்டு வருபவர் என்றால், இரவு நேரத்தில் நடப்பது உங்கள் மனதிற்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். உங்கள் உடலுக்கு ரிலாக்ஸ் உணர்வு கிடைக்கும்.

வருகிறது மழைக்காலம்… காய்ச்சல், சளியில் இருந்து தப்பிக்க சில வழிகள்!

பருவ மழைக்காலங்களில் காய்ச்சல் மற்றும் சளியால் பாதிப்பு உருவாகும் என்பதால், ஒவ்வொருவரும் மிகவும் கவனமாகவும், சுத்தமாக இருப்பது அவசியம். வெயிலில் இருந்து நிவாரணம் கொடுக்கும் மழைக்காலத்தில், பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகள் உற்பத்தியாகி மக்களை பாதிக்கின்றன. சமைலையறை முதல் சாலை வரை என தொற்று இல்லாத இடமே இருக்காது. வீடுகளிலும், வெளியே செல்லும்போது சுகாதாரத்தை கடைபிடித்தால் மட்டுமே இந்த தொற்றுகளின் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும். அதற்கு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் சில உள்ளன.

மழைநீரில் ஒதுங்கியிருத்தல்:

மழைக்காலங்களில், மழையில் நனைவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த நேரங்களில் முடிந்தளவுக்கு மழையில் நனைவதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் உடலில் அரிப்பு, சொறி உள்ளிட்ட தோல் பாதிப்புகள் உருவாகும். இதனால் கூடுமான அளவிற்கு மழையில் நனைய வேண்டாம். எதிர்பாராதவிதமாக மழையில் நனைய நேரிட்டால், உடனடியாக வீட்டிற்கு வந்தவுடன் சுடுதண்ணீரில் குளிப்பது நல்லது. நனைந்த துணிகளை துவைத்துவிட வேண்டும். இதன்மூலம் தொற்று பாதிப்புகள் உங்களுக்கு ஏற்படுவதற்கு குறைவான வாய்ப்புகளே உள்ளன.

கைகளை சுத்தமாக வைத்திருத்தல்:

நம் உடலுக்குள் நுழையும் பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுகள் பெருமளவு முகம் மற்றும் வாய் வழியாக மட்டுமே உடலுக்குள் செல்கின்றன. இதன் மூலம் புதிய வியாதிகளால் பாதிக்க நேரிடுகிறது. வெளியில் எங்கு சென்று வந்தாலும், உடனடியாக கைகளை கழுவும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். ஹேண்ட் வாஷ் உள்ளிட்டவைகளை பயன்படுத்தியும் கைகளை சுத்தமாக கழுவிக்கொள்ளலாம்.

ஆரோக்கியமான உணவு:

மழைக்காலங்களில் கடைகளில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. உடலுக்கு தேவையான ஆரோக்கியமான உணவுகளை வீட்டிலேயே நன்கு சமைத்து சாப்பிட வேண்டும். எளிதாக செரிமானமாகக்கூடிய உணவுகளை அதிகளவு எடுத்துக் கொள்ளுங்கள். இதுபோன்ற உணவுகளை சாப்பிடும்போது செரிமானப் பிரச்சனைகள் உங்களுக்கு ஏற்படாது. சூடான மற்றும் பிரெஷ் உணவுகளை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

சுடு தண்ணீர்:

சுடு தண்ணீரை குடிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஒருவேளை வெளியில் செல்ல வேண்டியிருந்தால் வீட்டிலேயே சூடான தண்ணீரை தயாரித்து கூடவே எடுத்துச் செல்லுங்கள். தண்ணீரை சுட வைக்காமல் குடிக்கும்போது, அதில் பாக்டீரியா உள்ளிட்ட தொற்றுகள் இருக்க வாய்ப்புள்ளது. அந்த நீர் வயிற்றுக்குள் போகும்போது வயிற்றுப்போக்கு ஏற்படுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

தண்ணீர் தேங்கக்கூடாது:

வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். சிறிய பாத்திரம், தேங்காய் மூடி, டயர் உள்ளிட்டவைகளில் தண்ணீர் தேங்கியிருந்தால், அதன் மூலம் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்களை உருவாக்கும் கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்புகள் உள்ளது. வீட்டின் சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

Click here to join whatsapp group for daily health tip

யோகா செய்வது உங்கள் இதயத்தை எப்படி மாரடைப்பிலிருந்து பாதுகாக்குமாம் தெரியுமா?

 யோகா என்பது உடல் மற்றும் மன நெகிழ்வுத்தன்மை, சகிப்புத்தன்மை, சமநிலை, ஒருங்கிணைப்பு மற்றும் கவனம் ஆகியவற்றை மேம்படுத்துவதாகும். பிரபல இதய நிபுணர்கள் யோகா இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல வழிகளைப் பட்டியலிட்டுள்ளார்கள். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மன அழுத்தத்தை குறைக்கிறது

மன அழுத்தம் உடலில் உள்ள கார்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற ஹார்மோன்களை உயர்த்தலாம், இது ஒருவரின் இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்த கடினமான நேரத்துக்கு வழிவகுக்கும். கரோனரி தமனி நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றின் வலுவான ஆபத்து காரணிகளுக்கு எதிராக வலுவிழக்கச் செய்யும் மன அழுத்தம் ஒருவரின் இதயத்தை ஆபத்தில் ஆழ்த்துகிறது. உங்கள் நல்வாழ்வில் மன அழுத்தத்தின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை எதிர்த்துப் போராட, நாள் முழுவதும் ஓய்வெடுக்க உதவும் தியான நடவடிக்கைகள் அல்லது ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகளைக் கவனியுங்கள். இந்த ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் உங்கள் இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும், இதனால் நீங்கள் எதிர்காலத்தில் இருதய பிரச்சனைகளால் பாதிக்கப்படுவது குறையும்.

இதய ஆரோக்கியம் தொடர்பான எண்களை மேம்படுத்துகிறது வழக்கமான யோகா, கொலஸ்ட்ரால் அளவுகள், இரத்த சர்க்கரை, உடல் கொழுப்பு மற்றும் எடை சுற்றளவு ஆகியவற்றைக் குறைப்பதன் மூலம் இரத்த அழுத்தம் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். வளர்சிதை மாற்ற நோய்க்குறி உள்ளவர்களில் (நடுத்தர வயதுடையவர்கள்) 3 மாதங்கள் யோகா பயிற்சி செய்தால், இரத்த அளவீடுகள் மற்றும் இடுப்பு சுற்றளவு (இதய நோயின் குறிப்பான்) ஆகியவற்றில் முன்னேற்றம் இருப்பதாக ஒரு ஆய்வு காட்டுகிறது.


உடற்பயிற்சி யோகா என்பது ஒரு சிறந்த உடற்பயிற்சி முறையாகும், இது கலோரிகளை எரிக்க உங்களை அனுமதிக்கிறது. கூடுதலாக, இது உடலில் உள்ள மூட்டுகளின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்த உதவுகிறது, இது உங்கள் ஒட்டுமொத்த மைய தசை வலிமையை மேம்படுத்துகிறது, இது ஓட்டம் மற்றும் நீச்சல் போன்ற ஏரோபிக் நடவடிக்கைகளில் அதிக சகிப்புத்தன்மையைப் பெற உதவுகிறது. இந்த ஏரோபிக் பயிற்சிகள் தனிநபர்கள் எடை பயிற்சியை மட்டும் செய்வதை விட கணிசமாக அதிக விகிதத்தில் கலோரிகளை எரிக்க உதவுகின்றன.


யோகா மற்றும் புகைப்பிடித்தல் தொடர்ந்து யோகா பயிற்சி செய்யும் புகைப்பிடிப்பவர்கள் புகைபிடிப்பதை நிறுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். யோகா பயிற்சி செய்வதன் பல நன்மைகளில் ஒன்று, இது மக்கள் மன அழுத்தத்தை உள்நாட்டில் நிர்வகிக்க உதவுகிறது, இதனால் அவர்கள் புகைபிடிக்கும் விருப்பத்தை குறைக்கிறார்கள். மன அழுத்த புகைப்பிடிப்பவர்களுக்கு இது குறிப்பாக உண்மை. புகைபிடிக்காதவர்களை விட புகைப்பிடிப்பவர்கள் கரோனரி தமனி நோய் மற்றும் மாரடைப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படுவதற்கான அதிக ஆபத்தில் உள்ளனர். புகைப்பிடிப்பவர்களுக்கு புகைபிடிப்பதை நிறுத்த உதவுவதன் மூலம் யோகா இந்த ஆபத்தை குறைக்கிறது.

Click here to join whatsapp group for daily health tip

மாரடைப்பு அபாயத்தை குறைக்கும் ‘இந்த’ காய்கறிகளை உணவில் அவசியம் சேர்க்கவும்

வயதானவர்களுக்கு தான் மாரடைப்பு ஏற்படும் என நினைத்துக்கொண்டிருந்த காலம் எப்போதோ மலையேறி விட்டது. தற்போதைய வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக இளம் வயதினர் கூட மாரைப்பால் இறந்து போகும் சமபவங்களை நாம் அன்றாடம் கேள்விப்படுகிறோம். 

தமனிகளில் ஏற்படும் அடைப்பு காரணமாக மாரடைப்பு ஏற்படுகிறது. மேலும், ஒழுங்கற்ற இதயத்துடிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளும் மாரடைப்பு ஏற்படக் காரணமாக இருக்கிறது. ஆரோக்கியமற்ற, சோம்பேறித்தனமான வாழ்க்கை முறையும் இதற்கு ஒரு முக்கிய காரணி என்பதை மறுத்து விட முடியாது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பு ஆகியவையும்  மாரடைப்பு மற்றும் இதய நோய்களுக்கான ஆபத்தை அதிகரிக்கின்றன.

மாரடைப்பு அபாயத்தைக் குறைக்க சில காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் முக்கியம். எனவே எந்தெந்த காய்கறிகளை உட்கொள்வதன் மூலம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்பதை அறிந்து கொள்ளலாம். 

மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கும் சில காய்கறிகள்

பச்சை காய்கறிகளில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதனை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதால்,  மாரடைப்பு அபாயத்தை குறைக்கலாம். சோயாபீன், தக்காளி, வெங்காயம், ப்ரோக்கோலி போன்ற பல காய்கறிகள் மாரடைப்பைத் தடுக்கவும் சிகிச்சை செய்யவும் மிகவும் உதவியாக இருக்கும். ஏனெனில் இதில் வைட்டமின்கள்,  நார்ச்சத்துக்கள் நிறைந்து உள்ளது. ப்ரோக்கோலியில் உள்ள கோலின் சத்தும் அதிக அளவிலாக வைட்டமின் கே சத்தும் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும். 

ப்ரோக்கோலி மட்டுமல்ல, லெட்யூஸ், முட்டைகோஸ் போன்ற இலை வடிவ காய்கறிகளும் இதயத்தை பலப்படுத்தி மாரடைப்பு அபாயத்தை குறைக்கும்.

மீன் உணவுகள்

மீன் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. ஏனெனில் மீன்கள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த மூலமாகும். அவை இதயத்தைப் பாதுகாப்பது உட்பட பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. இதன் மூலம், அமில கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தலாம். இது இதய நோய் அபாயத்தை வெகுவாகக் குறைக்கிறது. சால்மன், டுனா, கானாங்கெளுத்தி மற்றும் மத்தி ஆகியவை இதய ஆரோக்கியத்திற்கு சிறந்த மீன்கள்.

சைவ உணவு உண்பவர்களுக்கு காளான் சிறந்த தேர்வு

 வைட்டமின் சி, டி மற்றும் ஈ மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது. வைட்டமின் சி ஆன்டிஆக்ஸிடன்ட்களைக் கொண்டுள்ளது, இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்பைக் குறைத்து இதய நோய்களைத் தடுக்கிறது. வைட்டமின் டி மீன்களில் அதிக அளவில் உள்ளது. சைவ உணவு உண்பவர்கள் காளான்களை சாப்பிடலாம். பச்சை காய்கறிகள், பப்பாளி, கீரை, குடை மிளகாய் ஆகியவை வைட்டமின்-சி மற்றும் ஈ ஆகியவற்றை உங்களுக்கு அள்ளி வழங்குகின்றன. 


Click here to join whatsapp group for daily health tip