TRB : டிச.27-ல் உதவி பேராசிரியர் தேர்வு

  Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் தேர்வு டிச. 27-ம் தேதி (காலை மற்றும் பிற்பகல்) நடைபெற உள்ளது. இதற்காக 38 மாவட்டங்களிலும் 195 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


ஹால்டிக்கெட் வெளியீடு: தேர்வுக்கான நுழைவுச்சீட்டு (ஹால்டிக்கெட்) தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களின் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி நுழைவுச்சீட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


நுழைவுச்​சீட்​டைப் பதி​விறக்​கம் செய்​யும்​போது ஏதேனும் இடர்​பாடு அல்​லது சந்​தேகம் எழுந்​தால் ஆசிரியர் தேர்வு வாரி​யத்​தின் குறைதீர்ப்பு மையத்தை தொடர்​பு​கொள்​ளலாம். தேர்வு மையம் மாற்​றம் தொடர்​பான கோரிக்​கைகள் எக்​காரணம் கொண்​டும ஏற்​றுக்​கொள்​ளப்பட மாட்​டாது. இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

ஆதார் பெயர் மாற்றத்திற்கான ஆவணமாக இனி பான் கார்டை கொடுக்க முடியாது - UIDAI அறிவிப்பு

  Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

ஆதார் அட்டையில் பெயர் மாற்றம் செய்ய தேவையான ஆவணங்களில் முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக 'யுதய்' என்று அழைக்கப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி இதுவரை பெயர் மாற்றத்துக்கான ஆதார ஆவணமாக ஏற்கப்பட்டு வந்த பான்கார்டு தற்போது பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.


ஆதார் அட்டையில் இதற்கு முன்பாக 5 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான பட்டியல் ஒன்றும், 5 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான பட்டியல் என 2 வகையான ஆவணப்பட்டியல் மட்டுமே இருந்தது. ஆனால் நேற்று முன்தினம் 4 வகையான புதிய ஆவணப்பட்டியலை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெளியிட்டு உள்ளது.


இதில் 5 வயதிற்கு உட்பட்டவர்கள், 5 வயதுக்கு மேல் 18 வயதிற்கு உட்பட்டவர்கள், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 4 வகையான ஆவணப்பட்டியல் குறிப்பிடப்பட்டு உள்ளது


இதில் குறிப்பாக ஆதார் அட்டையில் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு பெயர் திருத்தம் செய்ய, 'யுதய்' அனுமதித்த ஆவணப்பட்டியலில் பான் கார்டு முக்கிய ஆவணமாக இருந்து வந்தது.


அதாவது பெயர் திருத்தம் போன்ற மாற்றங்களுக்கு பான் கார்டு சமர்ப்பித்தாலும் அந்த விண்ணப்பம் ஏற்கப்பட்டு வந்தது. பான் கார்டில் பெயர், தந்தை பெயர் தெளிவாக குறிப்பிடப்பட்டிருப்பதால், அது ஒரு அடிப்படை அடையாள ஆவணமாக கருதப்பட்டது.

ஆதார் பெயர் மாற்றத்திற்கான ஆவணமாக இனி பான் கார்டை கொடுக்க முடியாது - UIDAI அறிவிப்பு

Byமாலை மலர்11 டிசம்பர் 2025 7:28 AM

ஆதார் அட்டையில் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு பெயர் திருத்தம் செய்ய, ‘யுதய்’ அனுமதித்த ஆவணப்பட்டியலில் பான் கார்டு முக்கிய ஆவணமாக இருந்து வந்தது.

பான்கார்டு என்பது முக்கியமாக வரிவிதிப்பு தொடர்பான ஆவணம், அடையாளம் அல்லது முகவரி நிரூபிக்கும் ஆவணம் அல்ல.



ஆதார் அட்டையில் பெயர் மாற்றம் செய்ய தேவையான ஆவணங்களில் முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக 'யுதய்' என்று அழைக்கப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி இதுவரை பெயர் மாற்றத்துக்கான ஆதார ஆவணமாக ஏற்கப்பட்டு வந்த பான்கார்டு தற்போது பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.


ஆதார் அட்டையில் இதற்கு முன்பாக 5 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான பட்டியல் ஒன்றும், 5 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான பட்டியல் என 2 வகையான ஆவணப்பட்டியல் மட்டுமே இருந்தது. ஆனால் நேற்று முன்தினம் 4 வகையான புதிய ஆவணப்பட்டியலை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெளியிட்டு உள்ளது.


இதையும் படியுங்கள்: உமர் காலித்துக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது டெல்லி நீதிமன்றம்!



இதில் 5 வயதிற்கு உட்பட்டவர்கள், 5 வயதுக்கு மேல் 18 வயதிற்கு உட்பட்டவர்கள், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 4 வகையான ஆவணப்பட்டியல் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதில் குறிப்பாக ஆதார் அட்டையில் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு பெயர் திருத்தம் செய்ய, 'யுதய்' அனுமதித்த ஆவணப்பட்டியலில் பான் கார்டு முக்கிய ஆவணமாக இருந்து வந்தது.


அதாவது பெயர் திருத்தம் போன்ற மாற்றங்களுக்கு பான் கார்டு சமர்ப்பித்தாலும் அந்த விண்ணப்பம் ஏற்கப்பட்டு வந்தது. பான் கார்டில் பெயர், தந்தை பெயர் தெளிவாக குறிப்பிடப்பட்டிருப்பதால், அது ஒரு அடிப்படை அடையாள ஆவணமாக கருதப்பட்டது.


இதையும் படியுங்கள்: நீதிபதிகள் நியமனத்தில் உயர் சாதியினரின் ஆதிக்கம் - ஓரங்கட்டப்படும் ஓபிசி பிரிவினர்

ஆனால் நேற்று முன்தினம் 'யுதய்' புதிதாக வெளியிட்டுள்ள ஆவணப்பட்டியலில் பான் கார்டு நீக்கப்பட்டுள்ளது. அதாவது இனி ஆதார் பெயர் மாற்றத்திற்காக பான் கார்டை சமர்ப்பிக்க முடியாது. பான் கார்டில் முகவரி குறிப்பிடப்படவில்லை. பெயர் தவிர மற்ற அடையாள உறுதிப்படுத்தும் விவரங்கள் குறைவாக உள்ளன.


பான்கார்டு என்பது முக்கியமாக வரிவிதிப்பு தொடர்பான ஆவணம், அடையாளம் அல்லது முகவரி நிரூபிக்கும் ஆவணம் அல்ல. பான் கார்டில் பெயர் மட்டுமே இருப்பதால், அது முறையான அடையாள சான்றாக போதுமானதாக கருதப்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.


இதையும் படியுங்கள்: ரூ.200-க்கு வாங்கிய லாட்டரியில் அடித்த ரூ.1.25 கோடி பரிசு.. வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவான தம்பதி!

மேலும், இந்திய பாஸ்போர்ட், ரேஷன்கார்டு (புகைப்படம் இருக்கும் குடும்ப தலைவர் மட்டும்), வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், மத்திய, மாநில அரசுகள் வழங்கும் அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய சாதி சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் போன்ற ஆவணங்களை இணைக்கலாம்.


இனி 18 வயதுக்கு மேற்பட்டோர் பெயர் திருத்தம் செய்ய ஆவணம் வழங்க முடியாமல் கடும் நெருக்கடியை சந்திக்கும் சூழல் நிலவ உள்ளது என்பதால் 'யுதய்' வெளியிட்டுள்ள இந்த புதிய அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.





Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் - உணவு உட்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

  Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)


IMG_20251211_175008

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் உள்ளாட்சி பகுதிகளிலுள்ள பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட செயலியில் ( App ) பதிவான மாணவர்களின் உணவு உட்கொள்ளும் பதிவுகள் சதவீதம் குறைவாக இருப்பது அறிவுறுத்துதல் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

CMBFS - APP updation dee Proceedings

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

இளநிலை உதவியாளர் பதவி உயர்வு - கூகுள் மீட் மூலம் நடைபெறும்...

  Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)


இளநிலை உதவியாளர் பதவியில் இருந்து உதவியாளர் ஆக பதவி உயர்வு முன்னுரிமை எண் 146 முதல் 399 முடிய உள்ளவர்களுக்கு கலந்தாய்வு 15-12-2025 திங்கள்கிழமை காலை 11-00 மணிக்கு கூகுள் மீட் மூலம் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெறும்!

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

01.12.2025 நிலவரப்படி தலைமை ஆசிரியர் காலி பணியிட விவரம் சேகரிப்பு....

  Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)


விவரம் சேகரிப்பு :


01.12.2025 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலி பணியிடம் விவரங்கள் பள்ளிக்கல்வி இயக்குநகரத்தால் கோரப்பட்டுள்ளது-இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் செய்திக் குறிப்பு அனுப்பப்பட்டுள்ளது*

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

தமிழக பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு

  Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)


hf%20holidays

தமிழக பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு விடுமுறை மற்றும் பள்ளி மீண்டும் திறக்கும் நாள் குறித்த முக்கியமான அறிவிப்பு


அனைத்து மாணவச் செல்வங்கள் மற்றும் ஆசிரியர்கள்/பெற்றோர்களுக்குத் தெரிவிக்கப்படுவது என்னவென்றால்:


1. அரையாண்டுத் தேர்வுகள் நிறைவு:

அனைத்து வகுப்புகளுக்குமான அரையாண்டுத் தேர்வுகள் அனைத்தும் டிசம்பர் 23, 2025 (செவ்வாய்க்கிழமை) அன்று வெற்றிகரமாக முடிவடைகின்றன.

தேர்வு முடிவுகள் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் பள்ளி மீண்டும் திறக்கும்போது அறிவிக்கப்படும்.

2. அரையாண்டுத் தேர்வு விடுமுறைக் காலம்:


தேர்வுகளின் நிறைவைத் தொடர்ந்து, மாணவர்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலும், பண்டிகைகளைக் கொண்டாடும் வகையிலும் அரையாண்டுத் தேர்வு விடுமுறை விடப்படுகிறது.

விடுமுறை தொடங்கும் நாள்: டிசம்பர் 24, 2025 (புதன்கிழமை)


விடுமுறை முடிவடையும் நாள்: ஜனவரி 4, 2026 (ஞாயிற்றுக்கிழமை)

மொத்த விடுமுறைக் காலம்: 12 நாட்கள்.

3. விடுமுறை நாட்களில் கவனிக்க வேண்டியவை:


மாணவர்கள் விடுமுறைக் காலத்தை வீணாக்காமல், கொடுக்கப்பட்டுள்ள விடுமுறைக் காலப் பயிற்சிகளை (Holiday Homework) தவறாமல் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் பாதுகாப்போடு பங்கேற்கவும், குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரத்தைச் செலவிடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

4. பள்ளி மீண்டும் திறக்கும் நாள்:


அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பிறகு, பள்ளி வழக்கம் போலச் செயல்படத் தொடங்கும் நாள்: ஜனவரி 5, 2026 (திங்கட்கிழமை).

அனைத்து மாணவச் செல்வங்களும் தவறாமல் உரிய நேரத்தில் பள்ளிக்கு வர வேண்டும் என்றும், மூன்றாம் பருவத் தேர்வுகளுக்குத் தங்களைத் தயார் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


இவ்விவரங்களை அனைவரும் கவனத்தில் கொண்டு செயல்படவும்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TRB - உதவிப்பேராசிரியர் தேர்வு - நுழைவுச் சீட்டு வெளியீடு.

  Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண் .04 / 2025 , நாள் 16.10.2025 இன்படி 2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப்பேராசிரியர் தேர்வு எதிர்வரும் 27.12.2025 அன்று ( காலை மற்றும் மாலை ) நடத்தப்பட உள்ளது . இத்தேர்வு 38 மாவட்டங்களிலும் 195 மையங்களில் நடைபெற உள்ளது . தேர்வர்கள் தேர்வு நடைபெறும் மையம் சார்ந்த விவரங்கள் தேர்வர்களின் நுழைவுச் சீட்டில் உள்ளது . இத்தேர்விற்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு ( Hall Ticket ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் https://www.trb.tn.gov.in/ ) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


எனவே , தேர்வர்கள் 11.12.2025 முதல் அவர்களது User id மற்றும் கடவுச் சொல் ( Password ) ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் இடர்ப்பாடு மற்றும் அதன் தொடர்பான ஐயங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறை தீர்க்கும் மையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . தேர்வு மையங்கள் மாற்றம் சார்ந்த கோரிக்கைகள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது .


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

CSIR நெட் தேர்வு: மையங்கள் ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு வெளியீடு

 Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)


தேசிய தேர்வு முகமை (NTA) ஆனது, வரும் டிசம்பர் 18, 2025 அன்று நடைபெற உள்ள சிஎஸ்ஐஆர் (CSIR) நெட் (NET) தேர்வுக்கான மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நகரங்களின் விவரங்களை தற்போது வெளியிட்டுள்ளது.


முக்கியத் தகவல்கள்:

தேர்வு நாள்: சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு நாடு முழுவதும் டிசம்பர் 18, 2025 அன்று நடைபெறும்.

பயன்பாடு: இத்தேர்வு, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் மற்றும் இளநிலை ஆராய்ச்சிப் படிப்புகளில் (JRF) சேர விரும்புவோருக்கு அவசியமானது.

விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கை: இந்த ஆண்டு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

தேர்வு மைய விவரங்களை அறிவது எப்படி?


தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மைய நகரம் குறித்த விவரங்களை https://csirnet.nta.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தேர்வுக்கான அனுமதிச் சீட்டு (Hall Ticket/Admit Card) விரைவில் வெளியிடப்படும் என NTA தெரிவித்துள்ளது.

தொடர்புக்கு:


அதிகாரப்பூர்வ இணையதளம்: NTA.ac.in

தொடர்பு எண்கள்: 011-4075 9000 / 69227700

மின்னஞ்சல்: csirnet@nta.ac.in


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் விவரங்களை TNSED App-ல் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

  Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் விவரங்களை TNSED App-ல் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

IMG_20251210_191058

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

THIRAN - Half Yearly Exam - QP and Anwer key Download Schedule :

  Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)


THIRAN - Half Yearly Exam - QP and Anwer key Download Schedule :



Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

CPS Teachers Retirement - Re - Employment Clarification - Secretary Letter

     Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Click here to join WhatsApp group for Daily employment news

மறுநியமன அடிப்படையில் பணிபுரியும் CPS ஆசிரியர்களுக்கு மறுநியமன காலத்தில் கடைசியாகப் பெற்ற முழு ஊதியம் வழங்க வேண்டும் - CPS (Employee Contribution & Employer Contribution) பிடித்தம் செய்யத் தேவையில்லை - நிதித்துறை முதன்மைச் செயலாளர் உத்தரவு!




Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

தமிழ் நாடு ஓய்வூதியத் திட்டம் : புதிய பெயரில் ஓய்வூதியம் அறிவிக்கப்பட வாய்ப்பு

     Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

தமிழ் நாடு ஓய்வூதியத் திட்டம் : புதிய பெயரில் ஓய்வூதியம் அறிவிக்கப்பட வாய்ப்பு. Tamil Nadu Pension Scheme: Possibility of pension being announced under a new name.


தமிழ் நாடு ஓய்வூதியத் திட்டம் (TN PENSION SCHEME):


தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுக்கும் வகையில், 'தமிழக ஓய்வூதியத் திட்டம் (TN PENSION SCHEME)' என்ற புதிய பெயரில் ஓய்வூதியம் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டம் குறித்த முக்கிய அம்சங்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் சலுகைகள் பின்வருமாறு:


முக்கிய அம்சங்கள் (எதிர்பார்க்கப்படுபவை):


அதிகபட்ச ஓய்வூதியம்: ஓய்வுபெறும் ஊழியர்/ஆசிரியர் தனது கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் 40% வரை ஓய்வூதியமாகப் பெற வாய்ப்புள்ளது.


இது, ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பின்னரும் நிலையான வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும்.


பணிக்கொடை (Gratuity) சலுகைகள்:


20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தோர்க்கு: இவர்களுக்கு ரூபாய் 15 இலட்சம் வரை பணிக்கொடையாக வழங்கப்பட வாய்ப்புள்ளது.


10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தோர்க்கு: இவர்கள் கடைசி ஊதியத்தில் 35% ஓய்வூதியமாகவும், ரூபாய் 10 இலட்சம் பணிக்கொடையாகவும் பெறலாம்.


10 ஆண்டுகளுக்குக் குறைவாகப் பணிபுரிந்தோர்க்கு: இவர்கள் கடைசி ஊதியத்தில் 20% ஓய்வூதியமாகவும், ரூபாய் 5 இலட்சம் பணிக்கொடையாகவும் பெற வாய்ப்புள்ளது.


CPS (பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்) தொகை:


இதுவரை CPS திட்டத்தில் ஊழியர்களால் செலுத்தப்பட்ட சொந்தப் பங்களிப்புத் தொகையானது, அதற்கான வட்டியுடன் சேர்த்து ஓய்வுபெறும் போது முழுமையாகத் திரும்ப வழங்கப்படும்.


குடும்ப ஓய்வூதியம் (Family Pension):


ஊழியரின் மறைவுக்குப் பிறகு, குடும்ப ஓய்வூதியமானது ஊழியர் பெற்ற ஓய்வூதியத்தில் பாதி சதவிகிதமாக (50%) கிடைக்க வாய்ப்புள்ளது. இது குடும்பத்தின் எதிர்காலப் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும்.

பொதுவான மனநிலை:


இந்த அறிவிப்பானது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல வருடங்களாக ஒன்றுபட்டுப் போராடியதன் விளைவாகக் கிடைக்கப்பெற்றுள்ளது என்ற நம்பிக்கை பரவி வருகிறது. இந்தச் செய்தியானது தற்போது வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகக் குழுக்களில் தீவிரமாகப் பரவி வருகிறது.


எதிர்பார்ப்பு:


இந்தச் சலுகைகள் மற்றும் புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்கும் பட்சத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறும் என்பதில் அவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். நன்மை நடந்தால் அது மிகவும் வரவேற்கத்தக்க ஒரு மாற்றமாக இருக்கும்




Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் விவரங்களை TNSED App-ல் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

     Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் விவரங்களை TNSED App-ல் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!





Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

டிசம்பர் 10 - சர்வதேச மனித உரிமைகள் தினம் - உறுதிமொழி

     Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

டிசம்பர் 10 - சர்வதேச மனித உரிமைகள் தினம் - உறுதிமொழி

IMG_20251210_063908_wm


மனித உரிமைகள் உறுதி மொழி 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும் , இந்தியாவில் செயல்படுத்தக்தக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப்பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும் , பற்றுறுதியுடனும் நடந்து கொள்வேன் என்று நான் உளமார உறுதி மொழிகிறேன் . எவ்வித வேறுபாடுமின்றி , அனைவரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன் , மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் , நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன் . என்னுடைய எண்ணம் , சொல் அல்லது செயல் மூலம் , பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்தவொரு செயலையும் , நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்ய மாட்டேன் . மனித உரிமைகள் மேம்படுத்துவதற்கு , நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன் என்று உளமார உறுதி கூறுகிறேன் . 


( அணைவரும் மகிழ்ச்சி பொங்க வாழ்வோம் )


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )