பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கை 1 கோடி - அரசு தகவல்

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

ஒன்றிய கல்வி அமைச்சகம் வௌியிட்டுள்ள 2024-25ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறை அறிக்கையில், “ எந்தவொரு கல்வியாண்டிலும் இல்லாத அளவுக்கு 2024-25ம் ஆண்டில் நாடு முழுவதுமுள்ள மொத்த பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கை 1 கோடியை கடந்துள்ளது. 

இது கடந்த 2022-23ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 6.7 சதவீதம் அதிகரித்துள்ளது. 2023-24ல் கணினி வசதி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 57.2 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 2024-25ல் 64.7 சதவீதம் அதிகரித்துள்ளது. 


இதேபோல், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் 2023-24ல் 48.1 சதவீதமாக இருந்தது. தற்போது 2024-25ம் ஆண்டில் 48.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2024-25ல் தொடக்க பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 2.3 சதவீதமாக குறைந்துள்ளது. 


2023-24ல் நடுநிலை பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றல் விகிதம் 5.2 சதவீதம் இருந்த நிலையில், 2024-25ம் ஆண்டில் நடுநிலை பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றல் 3.5 சதவீதமாக குறைந்துள்ளது. உயர்நிலை பள்ளிகளில் 2023-24ல் 10.9 சதவீதமாக இருந்த மாணவர்கள் இடைநிற்றல் 2024-25ல் 8.2 சதவீதமாக குறைந்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TET Paper 2 - Tamil New Question Bank With Keys

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)


TNTET - Study Materials - New Collections

What's New

TET Paper 2 - Tamil New Question Bank With Keys - The Way To Success - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

செப்.10 முதல் காலாண்டுத் தேர்வு: பள்ளிக் கல்வித் துறை அட்டவணை வெளியீடு

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

1374619

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.


இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட் டுள்ள அறிவிப்பு வருமாறு: தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து விதமான பள்ளிகளிலும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 10 முதல் 26-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.


இதில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.10-ல் தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெறும். மேலும், 6 முதல் 10-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் செப்டம்பர் 15-ல் தொடங்கி 26-ம் தேதி வரை நடத்தப்படும். இதற்குரிய கால அட்டவணை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 10, 12-ம் வகுப்புக்கு காலையிலும், 11-ம் வகுப்புக்கு மதியமும் தேர்வுகள் நடைபெறும்.


6, 8-ம் வகுப்புக்கு காலையிலும், 7, 9-ம் வகுப்புக்கு மதியமும் தேர்வு நடத்தப்படும். இதைத் தொடர்ந்து 6 முதல் 12-ம் வகுப்புக்கு செப். 27 முதல் அக்.5 வரை விடுமுறை வழங்கப்படும். இந்த விடுப்பு முடிந்து பள்ளிகள் மீண்டும் அக்டோபர் 6-ம் தேதி திறக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

செப்.3 முதல் 10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

பத்தாம் வகுப்பு மாணவர் களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் செப்டம்பர் 3-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.


தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் கடந்த கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு மே 16-ம் தேதி வெளி யிடப்பட்டது. தொடர்ந்து மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் மே 19-ம் தேதி முதல் வழங் கப்பட்டன. எனினும், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டது.


இந்நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் செப்டம்பர் 3-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதையடுத்து பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும், தனித்தேர்வர்கள் தங்கள் தேர்வு மையங்களிலும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தேர்வுத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பொறியியல் படிப்புகளில் புதிய தொழில்நுட்ப பாடங்கள்: ஜப்பான், ஜெர்மன், கொரிய மொழிகள் கற்கவும் வாய்ப்பு

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

பொறி​யியல் பட்​டப் படிப்​பில் புதிய தொழில்​நுட்ப பாடங்​கள் அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்​ள​தாக​வும், மாணவர்​கள் ஜப்​பான், ஜெர்​மன், கொரிய மொழிகள் கற்​க​வும் வாய்ப்பு ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ள​தாக​வும் அண்ணா பல்​கலைக்​கழகம் அறி​வித்​துள்ளது.


இது தொடர்​பாக அண்ணா பல்​கலைக்​கழக பதி​வாளர் ஜெ.பிர​காஷ் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: அண்ணா பல்​கலைக்​கழகம், தனது இணைப்​புக் கல்​லூரி​களில் பொறி​யியல் பட்​டப்​படிப்​பில் (பிஇ, பிடெக்) புதிய தொழில்​நுட்ப பாடங்​களை அறி​முகப்​படுத்​தி​யுள்​ளது. இந்த பாடங்​கள், வளர்ந்து வரும் தேவை​கள் மற்​றும் உலகளா​விய கல்வி மாற்​றங்​களுக்கு ஏற்ப வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளன. இது, மாணவர்​களின் கல்வி மற்​றும் தொழில்​முறை வளர்ச்​சியை மேம்​படுத்​தும்.


புதிய பாடத் திட்​டத்​தின் முக்​கிய அம்​ச​மாக பொருள் மேம்​பாடு (Product development) என்​பதை குறிக்​கோளாகக் கொண்டு 5-வது செமஸ்​டரில் இருந்து டிசைன் புராஜெக்ட் என்ற பாடம் அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இதன்​மூலம் பெறப்​படும் மதிப்​பெண்​களை​யும் சேர்த்து 8.5 மற்​றும் அதற்கு மேல்சிஜிபிஏ பெற்​றவர்​களுக்கு பொறி​யியல் பட்​டத்​துடன் கூடு​தலாக சிறப்பு பட்​டம் (ஆனர்ஸ் டிகிரி) மற்​றும் பாராட்​டுச் சான்​றிதழ் வழங்​கப்​படும். இது, உலகளா​விய சவால்​களை எதிர்​கொள்ள உதவும்.


உலகளாவிய வேலைவாய்ப்பு: மேலும், மாணவர்​களின் ஆங்​கில மொழித்​திறனை மேம்​படுத்​துவதுடன், வெளி​நாட்டு மொழிப் பாட​மும் அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இதன்​படி, மாணவர்​கள் ஜப்​பான், ஜெர்​மனி, கொரிய மொழிகளில் ஏதேனும் ஒன்றை தேர்​வுசெய்து கற்​கலாம். உலகளா​விய வேலை​வாய்ப்​பு​களை மேம்​படுத்த இது துணைபுரி​யும்.


புதிய பாடத் திட்​டத்​தின்​கீழ் மாணவர்​கள் நடை​முறை பயன்​பாடு​கள் மற்​றும் தொழில்​துறை நடை​முறை​களை நன்கு அறிந்​து​கொள்​ளும் வகை​யில் இரண்டு செமஸ்​டர்​களில் தொழில்​துறை சார்ந்த பாடங்​கள் இடம்​பெறும். தற்​போது மாறி வரும் தொழில்​துறை தேவை​களுக்கு ஏற்ப, வளர்ந்து வரும் தொழில்​நுட்​பங்​கள் குறித்த பாடங்​கள் புதிய பாடத்​திட்​டத்​தில் இடம்​பெறுகின்​றன. இதன்​மூலம், மாணவர்​கள் ஏஐ எனப்​படும் செயற்கை நுண்​ணறி​வு, மெஷின் லேர்​னிங், டேட்டா சயின்ஸ்போன்ற முன்​னணி தொழில்​நுட்​பங்​களில் அறி​வு​பெறு​வர். மேலும்,உலகளா​விய சவால்​களை எதிர்​கொள்​ளும் வகை​யில் காலநிலை மாற்​றம் மற்​றும் நிலைத்​தன்மை குறித்த பாட​மும் அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது.


தொழில்​நுட்ப அறிவு மற்​றும் தொழில்​முறை நிபுணத்​து​வத்​துடன், மாணவர்​கள் வேக​மாக மாறிவரும் உலகச் சூழலுக்கு ஏற்ப தங்​களை தகவ​மைத்​துக்​கொள்​ளும் நோக்​கில் முதல் 2 செமஸ்​டர்​களில்வாழ்​வியல் திறன்​கள் குறித்த பாடங்​கள் அறி​முகப்​படுத்​தப்​படு​கின்​றன. இதன்​மூலம் மாணவர்​கள்உணர்ச்சி நுண்​ணறிவு , நேர்​மறைஎண்​ணங்​கள் போன்​றவற்​றின் முக்​கி​யத்​து​வத்தை புரிந்​து​கொள்ளமுடி​யும். மேலும், முதல்​முறை​யாக விளை​யாட்​டுத்​திறனை வளர்க்​க​ உடற்​கல்வி படிப்​பு​களும் பாடத்​திட்​டத்​தில் சேர்க்​கப்​பட்​டுள்​ளன.


மேற்​குறிப்​பிட்ட புதிய பாடங்​கள் பொறி​யியல் பட்​ட​தா​ரி​களின் வேலை​வாய்ப்பு மற்​றும் மேற்​படிப்பு வாய்ப்​பு​களை அதி​கரிப்​பதுடன் மட்​டுமின்​றி, அவர்​கள் எதிர்​கால சவால்​களை ஆற்​றலோடு எதிர்​கொள்​ள​வும்​ பெரிதும்​ உதவும்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் இன்று எஸ்எம்சி குழுக் கூட்டம்

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.


தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) கடந்த 2024-ம் ஆண்டு மறுகட்டமைப்பு செய்யப்பட்டன. இதையடுத்து, 2024-26-ம் ஆண்டுகளுக்கான புதிய தலைவர், உறுப்பினர்கள் கொண்ட எஸ்எம்சி குழுக்களின் கூட்டம் கடந்த ஆண்டு முதல் மாதம்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த கல்வி ஆண்டின் முதல் எஸ்எம்சி குழுக் கூட்டம் கடந்த ஜூலை 25-ம் தேதி நடைபெற்றது.


அதை தொடர்ந்து, இந்த மாதத்துக்கான கூட்டம் இன்று மாலை 3 முதல் 4.30 மணி வரை நடைபெற உள்ளது. இதில், பள்ளி மற்றும் மாணவர்களின் வளர்ச்சிக்கு தேவையான அம்சங்களை தீர்மானங்களாக நிறைவேற்றிக் கொள்ளலாம். திறன் இயக்கம், போக்குவரத்து வசதி, போதைப் பொருள் விழிப்புணர்வு, பள்ளி தூதுவர்கள், மணற்கேணி செயலி, இல்லம் தேடி கல்வி, கலைத் திருவிழா, இடைநிற்றல் கணக்கெடுப்பு, உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.


அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதை பின்பற்றி கூட்டத்தை சிறந்த முறையில் நடத்த வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

ஓய்வு பெறும் நாளில் அரசுப் பணியாளர்கள் தற்காலிகப் பணிநீக்க விதிகளில் திருத்தங்கள் மேற்கொண்டு அரசாணை வெளியீடு!!!

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250830_072406

ஓய்வு பெறும் நாளில் அரசுப் பணியாளர்கள் தற்காலிகப் பணிநீக்கத்தில் வைக்கும் நடைமுறையை தவிர்த்தல் - அடிப்படை விதிகள் மற்றும் தமிழ்நாடு விடுப்பு விதிகளில் திருத்தங்கள் மேற்கொண்டு அரசாணை வெளியீடு!!!


G.O.Ms.No.47 - Avoiding Suspension on Retirement Date - Download here




Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

அரசுப் பள்ளியில் பயின்று உங்கள் துறையில் சிறந்து விளங்கும் முன்னாள் மாணவரா நீங்கள்? உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு .. !!

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG-20250829-WA0013

பள்ளிக் கல்வித்துறையின் வணக்கங்கள்💐


📌 ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப் பேரவைக் கூட்டத்தில் அறிவித்த அறிவிப்பு எண். 11 படி,  அரசுப்பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைக்கவும், பள்ளியின் வளர்ச்சிக்காக ஒருங்கிணைந்து செயல்படவும் பள்ளித்தூதுவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 🤝


📌அரசுப் பள்ளியில் பயின்று தாங்கள் சார்ந்த துறையில் சிறந்து விளங்குபவராகவும், சமூகத்தின் மாற்றத்திற்காக செயல்படும் நபராக இருப்பின் அரசுப் பள்ளித் தூதுவர்களாக நீங்கள் விண்ணப்பிக்கலாம். 😊


📌விருப்பமுள்ள முன்னாள் மாணவர்கள் மற்றும் பரிந்துரைகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள Link யை பயன்படுத்தி ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


 விண்ணப்பிக்க‌🔗: https://nammaschool.tnschools.gov.in/#/alumni-nomination


மேலும் விவரங்களுக்கு : https://drive.google.com/file/d/1zK9mlE9TApVdXu87maD9woQ__w8YBLor/view?usp=sharing


 நம் பள்ளி! நம் பெருமை! நம் பொறுப்பு!


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

THIRAN - கூடுதல் காலமும் தொடர் முயற்சிகளும் செயல்பாடுகளும் தேவை!

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG-20250829-WA0038

6 - 9 வகுப்புகளில் அடிப்படைக் கற்றல் அடைவு பெறாத மாணவர்களுக்கு திறன் என்ற பெயரிலான தனிக்கவனப் பயிற்சி வரவேற்கத்தக்கது. ஆனால், பள்ளிகளில் இருக்கின்ற நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக கண்டறியப்பட்ட அனைத்துப் பிள்ளைகளையும் அடிப்படைக் கற்றல் அடைவு பெற வைத்தல் என்ற இலக்கை ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அனைத்துப் பள்ளிகளிலும் அடைந்திருக்கிறோம் என்று சொல்ல முடியவில்லை.


காரணங்களை ஆய்வு செய்ய வேண்டியது அவசியமானது.


1. அனைத்துப் பள்ளிகளிலும் (குறிப்பாக நடுநிலைப் பள்ளிகளில்) அடிப்படைக் கற்றல் அடைவு பெறாத பிள்ளைகளுக்குத் தனி வகுப்புக் கற்பித்தலை முறையாக செயல்படுத்துவதற்கு போதுமான ஆசிரியர்கள் இல்லாத நிலை, வகுப்பறை இல்லாத நிலை உள்ளன.


2. பல நடுநிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லாத நிலையும் தற்காலிக ஆசிரியர்கள் கற்பிக்கும் நிலையும் உள்ளன. 


3. பெரும்பாலான நடுநிலைப் பள்ளிகளில் 6 - 8 வகுப்புகளுக்கு தலைமை ஆசிரியர் மற்றும் இரண்டு பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுவதால்  அடிப்பட்டைக் கற்றலுக்கென்று தனி வகுப்புகளை நடத்துவதில் தடைகள் உள்ளன. 


4. அடிப்படைக் கற்றல் அடைவு பெறாத மாணவர்கள் பலர் பள்ளி வருகை என்பதும் முழுமையாக இருப்பதில்லை. இந்த மாதமும் விதிவிலக்கல்ல. அடிக்கடி பள்ளிக்கு வராத பிள்ளைகளே  கற்றல் அடைவு பெறாதவர்களாக உள்ளனர். 


5. சிறப்பு கவனத்திற்குரிய குழந்தைகளுக்கு (CWSN) அடிப்படைக் கற்றல் அடைவுக்கென்று தனியான கற்பித்தல் செயல்பாடுகளை மேற்கொள்வது அவசியமானது.


6. ஆகஸ்ட் மாதத்தில் கலைத் திருவிழா மற்றும் இன்ன பிற கல்வி சாரா செயல்பாடுகளையும் வழக்கம் போல நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆசிரியர்கள் எப்போதும் போல பயிற்சிக்கும் அழைக்கப்பட்டார்கள். சீருடைகள் எடுத்து வருதல்,  வங்கிக்குச் செல்லுதல் போன்ற பணிகளுக்கு ஆசிரியர்கள்  செல்ல வேண்டியதையும் தவிர்க்க முடியவில்லை


7. மற்ற பிள்ளைகளுக்கான வழக்கமான கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளையும் இருக்கின்ற ஆசிரியர்களே கவனித்துக் கொண்டு ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளில் சவாரி செய்ய வேண்டியது போன்ற கட்டாயம் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. 


8. வழக்கமான கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் முழுமையாக நடைபெறாததால் பெற்றோர்கள் 


கேள்வி கேட்பதையும் ஆசிரியர்கள் சந்திக்க வேண்டியுள்ளது.


பல தடைகளையும் கடந்து குழந்தைகளுக்கு அடிப்படைக் கற்றல் அடைவை எப்படியாவது சாத்தியமாக வேண்டும் என்ற நோக்கத்தில் ஆசிரியர்களின் கற்பித்தல் செயல்பாடுகள் மூன்று வாரங்களாக பள்ளிகளில் நடந்துள்ளன. ஒரு சில குழந்தைகள் கற்றல் அடைவில் முன்னேற்றம் பெற்றுள்ளனர். ஆனால் ஆகஸ்ட் மாதத்திற்குள் திறன் செயல்பாட்டின் இலக்கை முழுமையாக எல்லாப் பிள்ளைகளையும் அடையச் செய்துவிட்டோம் என்று சொல்வது நம்மை மட்டுமல்ல குழந்தைகளையும் ஏமாற்றுவதாக அமைந்துவிடும்.


அடிப்படைக் கற்றல் அடைவுப் பயிற்சி கூடுதல் காலம் தேவைப்படும் தொடர் பயிற்சியாக அமைய வேண்டும் என்றே தோன்றுகிறது. பிற பிள்ளைகளுக்கான வழக்கமான கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளும் பாதிக்கப்படாத வகையில் அடிப்படைக் கற்றல் அடைவுக்கான சிறப்பு பயிற்சி அமைய வேண்டும். 


மேலும், தொடக்கக் கல்வியில் சரிபாதிக் குழந்தைகள் கற்றல் பின்னடைவுக்கு ஆளாவது இனிமேலும் தொடராமல் தடுப்பதற்கு உரிய முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். தொடக்கக் கல்வியே ஒரு குழந்தையின் அறிவாற்றல் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைகிறது. எனவே 


அனைத்துத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும்  தலைமை ஆசிரியர் மற்றும் நிரந்தர ஆசிரியர்கள் என்ற நிலையை விரைவில் உருவாக்குவதும்  அவசியமானது. 


கல்வி உரிமைச் சட்டம் 2009, அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச பள்ளி முன் பருவக் கல்வியை உறுதி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளது. ஆனால் 15 ஆண்டுகள் கடந்த பிறகும் சட்டத்தின் முதன்மையான விதிமுறை செயல்படுத்தப்படவில்லை.


பள்ளி முன் பருவக் கல்வி வழங்கப்படாத ஏழைக் குழந்தைகளே தொடக்கக் கல்வியில் கற்றல் அடைவில் பின்னடைவுக்கு ஆளாகின்றனர். வசதியான குழந்தைகளுக்கும் ஏழைக் குழந்தைகளுக்கும் இடையிலான கல்வி வாய்ப்பை பெறுவதில் சமமான வாய்ப்பு இல்லாத நிலை தொடக்கக் கல்வி நிலையிலேயே உருவாகியுள்ளது.


1997 வரை நடைமுறையில் இருந்த 20 குழந்தைகளுக்கு ஓர் ஆசிரியர் நியமனம் என்பதை மீண்டும் பின்பற்ற வேண்டும். 


100 குழந்தைகள் மேல் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் முழு நேரத் தலைமை ஆசிரியர் நியமிக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் இல்லாமல் தொடக்க கல்வியில் ஏற்பட்டு வரும் பின்னடைவை சரி செய்ய முடியாது.


- சு.மூர்த்தி 

கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )