இயற்கையின் கொடையான மழைநீரை முறையாக சேமித்து வைக்காமல், ‘விண்ணின் மழைநீர் மண்ணின் உயிர் நீர்’ என விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். போதாக்குறைக்கு உலகம் முழுவதும் மாறிவரும் காலநிலை மாற்றத்தால், உயர்ந்து வரும் வெப்பம் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு அதிகரிக்ககூடும் என்ற எச்சரிக்கையும் எழுந்துள்ளது. பனிப்பாறைகள் உருகுவது, கடல் சீற்றம், அதிகரிக்கும் வெப்பநிலை, காற்றில் பசுமை வாயுக்கள் கலப்பு உயருவது, புற ஊதாக்கதிர்...
சமீப ஆண்டுகளாக குழந்தைகளிடையே அதிகரித்து வரும் நீரிழிவு நோய் - அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள்.!
நீரிழிவு நோய் என்பது வயதானவர்களுக்கு மட்டுமே வரும் என்ற எண்ணத்தில் நீங்கள் இருந்தால் அதை மாற்றி கொள்ளுங்கள். ஏனென்றால் நீரிழிவு நோய் அதிலும் குறிப்பாக டைப் 2 நீரிழிவிற்கு கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவு குழந்தைகள் இரையாகி வருகின்றனர்.கடந்த 20 ஆண்டுகளில் குழந்தைகளில் டைப் 2 நீரிழிவு உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டில் பாதிக்கப்பட்டு வரும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையால், இந்தியா நீரிழிவு நோயின் தலைநகராக ஏற்கனவே கருதப்பட்டுவரும்...
ஹார்ட் அட்டாக் வருவதற்கான முக்கிய காரணங்கள் - ஆய்வில் வெளியான தகவல்..!

ஸ்டிரோக் அல்லது ஹார்ட் அட்டாக் என்பது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய பிரச்சனையாகும். உலக அளவில் மிக அதிகப்படியான மரணங்கள் ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். ஸ்டிரோக் ஏற்படும்போது தோள்கள் பலவீனம் அடைவது, முகம் இழுப்பது மற்றும் பேச்சு குளறுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஹார்ட் அட்டாக் ஏற்படும்போது நெஞ்சுப் பகுதியில் வலி, உடலின் மேல் பகுதியில் வலி, மூச்சுத்திணறல் மற்றும் குளிர்ச்சியான வியர்வை, குமட்டல், தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள்...
நக ஆரோக்கியம் குறித்து பரவும் 10 கட்டுக்கதைகளும் உண்மைக்ளும்...
வலுவான, ஆரோக்கியமான நகங்கள் உடலின் ஆரோக்கியத்தை வெளிப்படுத்துகின்றன் என்று கூறப்படுகிறது. நகங்கள் நம் உடலின் ஒரு சிறிய பகுதி என்பதை கருத்தில் கொண்டு அவற்றை பற்றி உலா வரும் கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகள் என்ன என்பது பற்றி பார்ப்போம்.1. டயட்டில் ஜெலட்டின் (gelatin) சேர்ப்பது பலவீனமான நகங்களை வலுப்படுத்தும்ஜெலட்டின் ஒரு புரதம் என்பதை நாம் அனைவரும் அறிவோம், மேலும் நகங்களும் கெரட்டின் (புரதம்) மூலம் உருவாக்குகின்றன. இந்நிலையில் ஜெலட்டின் நகங்களை...
உடலில் இந்த பிரச்சனை இருந்தால் நகத்தில்தான் முதலில் காட்டும்.. எச்சரிக்கும் ஊட்டச்சத்து நிபுணர்கள்...
நமக்கு போதுமான ஊட்டச்சத்துகள் கிடைக்காத போது தான் நகங்கள் உடைந்து விரிசல் ஏற்படுகிறது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். எனவே உடல் ஆரோக்கியத்தைப் போன்று நகங்களைப் பாதுகாக்க நாம் முயல வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.நம்முடைய உடலில் முகம், சருமம், தோல், முடி போன்றவற்றைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள கவனம் செலுத்தும் அதே வேளையில் நகங்களைப் பெரும்பாலும் நாம் கவனிப்பதில்லை. ஆனால் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கும் நகங்களும் தொடர்புள்ளது என்கின்றனர்...
செரிமான பிரச்சனை ஏற்படுத்தும் உணவுகள்! உணவுப் பட்டியலில் இருந்து நீக்குங்கள்
நாம் உணவில் தவறுகள் செய்யும் போது, செரிமான மண்டலம் அதை ஜீரணிக்க கடினமாக உள்ளது. அதனால் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற செரிமான அமைப்பு தொடர்பான பிரச்சினைகள் உருவாகும்.எனவே, உங்கள் உணவில், ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். உங்கள் செரிமானத்தை மேம்படுத்தும் உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் செரிமானத்தை பாதிக்கக்கூடிய உணவுகளை கண்டறிந்து நீக்குவது நல்லது.செரிமானத்தை மோசமாக பாதிக்கும் உணவுகள்வறுத்த உணவுகள்உங்கள் செரிமான அமைப்பை நீங்கள் கவனித்துக் கொள்ள விரும்பினால், வறுத்த உணவுகளை உணவில் இருந்து விலக்கி வைக்க வேண்டும்....
முகக்கவசத்தால் சுவாசப் பிரச்னைகள் ஏற்படுமா? ~ மருத்துவர் தரும் விளக்கம்
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.இந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராமமூர்த்தி தாக்கல் செய்த பொதுநல வழக்கில் "முகக்கவசம் அணிவதால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது. மாறாக முகக்கவசம் சுவாச பிரச்னைகளை ஏற்படுத்தும்" என்றும் தெரிவித்திருந்தார். முகக்கவசம் அணியாதவர்களுக்கான அபராதமும் தவறு என்று குறிப்பிட்ட அவர், இந்த அரசாணையை ரத்து செய்யக் கூறியிருந்தார்.இந்த...
ஆர்த்ரைடிஸ் நோயாளிகளின் அவதியை குறைக்கும் அற்புத சமையல் எண்ணெய்.!
மூட்டழற்சி (Arthritis - ஆர்த்ரைடிஸ்) என்பது மூட்டு பகுதிகளில் வீக்கம் ஏற்படும் ஒரு நிலை ஆகும். ஆர்த்ரைடிஸ் நிலை மூட்டுப் பகுதிகளை சுற்றி தீவிர வலி மற்றும் வீக்கம் ஏற்படுவதை குறிக்கிறது. இந்த ஆர்த்ரைடிஸ் கண்டிஷன் என்பதை முற்றிலும் குணப்படுத்துவது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.ஏனென்றால் பெரும்பாலும் இந்த நிலை வயது மூப்புடன் தொடர்புடையது. வயது காரணிகளில் ஏற்பட கூடியது என்றாலும் மூட்டுகளுக்கு ஏற்படுகின்ற பெரிய அதிர்ச்சி அதாவது மோசமான காயங்கள், நோய் தொற்று, அதிக எடை, உடற்பயிற்சியின்மை உள்ளிட்டவையும் ஆர்த்ரைடிஸ் கண்டிஷன் ஏற்பட காரணங்களாக அமைகின்றன....
இந்த உணவுகளை தெரியாம கூட இரவு 7 மணிக்கு மேல சாப்பிட்ராதீங்க... இல்லனா ஆபத்து உங்களுக்குத்தான்...!
இரவு உணவு என்பது அன்றைய மிக முக்கியமான உணவுகளில் ஒன்றாகும், குறிப்பாக இந்தியர்களுக்கு மிகவும் பிடித்தது இரவு உணவுதான். சிக்கன் கறி முதல் மட்டன் பிரியாணி வரை மற்றும் காரமான உணவுகள், இந்திய உணவுகள் அனைத்தும் சுவையான உணவைப் பற்றியது. இருப்பினும், நிபுணர்களின் கூற்றுப்படி, இரவில் தாமதமாக உணவை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும்.இரவு உணவை தாமதமாக சாப்பிட்டால், அதாவது இரவு 7 மணிக்கு பிறகு சாப்பிடும்போது, செரிமான பிரச்சனைகள், வயிற்றில் எரிச்சல், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றை உண்டாக்கும். ஆயுர்வேதத்தின் படி, இரவு உணவை சீக்கிரமாக சாப்பிட்டால்...
வயிற்றை வளமாக்கும் சீரக தண்ணீர் அற்புதங்கள்!
சமையலறையில் இருக்கும் சீரகம், உணவுக்கு அற்புதமான சுவையைத் தருவது மட்டுமல்லாமல், ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. ஒரு மசாலாப் பொருளாக மட்டும் இதனை பார்க்கக் கூடாது. சீரக நீரை குடிப்பதால் ஏராளமான நன்மைகள் ஒருவருக்கு கிடைக்கும். சீரக நீர் வீக்கம் மற்றும் அஜீரணத்தை போக்க உதவுகிறது. குறிப்பாக, வயிற்று வலியை குணப்படுத்தும்.கர்ப்ப காலத்தில் சீரகம்கர்ப்ப காலத்தில் வயிற்று பிரச்சனைகள், வயிற்று வலி, மலச்சிக்கல், சளி போன்ற சில பிரச்சனைகளை சீரகம் போக்குகிறது. மேலும், சீரகம் இரும்புச்சத்துக்கான நல்ல மூலமாகும். எனவே கர்ப்ப காலத்தில் சீரகம் அல்லது சீரகம்...
இதையெல்லாம் மட்டும் சாப்புடுங்க! எப்போதும் இளமையாக இருக்கலாம்!
இன்றைய நாகரிக உலகில் பலரும் உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை காரணமாக சிறுவயதிலேயே முதுமையான தோற்றத்தை பெறுகின்றனர். சருமத்தை அக்கறை எடுத்து பாதுகாக்க தற்போது பலருக்கும் நேரம் இல்லாமல் போய்விட்டது. முதுமை தோற்றம் என்பது தடுக்கமுடியாத ஒன்றுதான், ஆனால் அந்த முதுமை தோற்றத்தை தள்ளிப்போடக்கூடிய சக்தி நாம் சாப்பிடும் இயற்கையான பொருட்களில் இருந்து நமக்கு கிடைக்கிறது. அத்தகைய உணவுப்பொருட்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள், ஆன்டி ஆக்சிடண்டுகள் மற்றும் புரோட்டீன்கள் போன்றவை நமது தசைகளை சுறுசுறுப்பாகி முதுமை தோற்றத்தை தடுக்க...
கண்களில் இந்த பிரச்சனைலாம் இருக்கா? கொலஸ்ட்ராலாக இருக்கலாம்!
நமது உடல் சரியாக செயல்பட கொலஸ்ட்ரால் எனும் ஒரு வகை கொழுப்பு தேவைப்படுகிறது, அதேசமயம் அந்த கொலஸ்ட்ரால் ஆனது நமது ரத்தத்தில் அதிகரித்தால் அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இவை ஆரம்பத்தில் எவ்வித அறிகுறிகளையும் வெளிப்படுத்தாமல் ஸ்லோ பாய்ஸனாக செயல்பட்டு நமக்கு மரணத்தை அளிக்கிறது. அதிக கொலஸ்ட்ரால் இதயத்தை மட்டும் பாதிக்காது, கண்களுக்கும் தீங்கு விளைவிக்கும். அதிக கொலஸ்ட்ராலின் சில பொதுவான அறிகுறிகள் நம் கண்களின்...
ஊறவைத்த வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இத்தனை பலன்களா..?
பெரும்பாலான வீடுகளில் வெந்தயம் ஒரு முக்கியமான சமையல் பொருளாக உள்ளது. இதன் விதைகள் மட்டுமல்ல கீரையும் மருத்துவ குணம் நிறைந்தது. இதனை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன. வெந்தயத்தில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்றவை அடங்கியுள்ளது. இது செரிமானம் மற்றும் எடை இழப்புக்கு உதவுகிறது. இரவில் ஊறவைத்த வெந்தயத்தை காலையில் வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து உட்கொள்வதால், பலவிதமான நோய்களுக்கு பயனுள்ள இயற்கை தீர்வாக மாற்றுகிறது.இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்த வெந்தயத்தை...
மூளை ஆரோக்கியமும் சமச்சீர் உணவும் - மருத்துவர் டிப்ஸ்
மனித மூளையின் செயல்பாட்டிற்குச் சரியான உணவும் ஊட்டச்சத்தும் அவசியம். இன்றைய நவீன வாழ்க்கை முறை, அதிக வேலை நேரம் போன்ற காரணங்களால் மக்கள் ஆரோக்கியமான உணவைப் பெரும்பாலும் புறக்கணிக்கிறார்கள்.நாள் முழுவதும் ஒருவரது கவனக் குவிப்பை சீராகப் பராமரிக்க, உடலில் இருக்கும் கலோரிகளை மூளை பயன்படுத்திக்கொள்கிறது. அதற்கு நாள் முழுவதும் போதுமான எரிபொருள் மூளைக்கு கிடைக்க வேண்டும்.மீன் எண்ணெய்: இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை மூளைக்கு நல்ல...
சாப்பிடும் போது இடையில் தண்ணீர் குடிப்பது தவறு : ஏன் தெரியுமா..?
நம்மில் பெரும்பாலானோர் சாப்பிட உட்காரும் போது ஒரு கிளாஸ் தண்ணீர் இல்லாமல் இருக்க மாட்டோம். சாப்பிடும் போது காரம் எடுப்பது உள்ளிட்ட சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக ஒரு சில வாய் தண்ணீர் குடிப்பது பரவாயில்லை..ஆனால் உணவின் போது அதிக தண்ணீர் குடிப்பது நல்ல பழக்கமல்ல என்று நம்பப்படுகிறது. சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் சாப்பிட்ட 30 நிமிடங்களுக்கு பின் ஒரு கிளாஸ் அல்லது சற்று கூடுதல் தண்ணீர் அருந்துவது நல்லது என்கின்றன ஆய்வுகள். ஆனால் உணவின் போது தண்ணீர் குடிப்பது சரியா..?உடலை ஹைட்ரேட்டாக வைத்து கொள்ள வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை....